குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts
Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts

Monday, July 24, 2023

சுவாமி ஆத்மானந்தர் - அஞ்சலி


1997ம் வருடம் கரூர் சுப்ரமணியம் அவர்கள் சுவாமி ஆத்மானந்தர் அவர்களிடம் என்னைச் சேர்ப்பித்தார். அன்றிலிருந்து 2001 வரை கரூர் ராமகிருஷ்ணர் ஆஸ்ரமத்தில் இருந்தேன். கணிணி ஆசிரியராகவும், இரண்டு கல்லூரிகளுக்கு கணிணி அசெம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேசன், நெட்வொர்க்கிங் வேலைகளை நானொருவனாகவே செய்து வந்தேன். சம்பளம் ஏதுமின்றி.

கல்லூரிகளுக்கு தேவையான கம்யூட்டர்கள் பாகங்களை சென்னை சென்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கி வந்து அசெம்பிள் செய்து, ஆபரேட்டிங்க் சிஸ்டம், இன்னபிற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து, அவைகளை நெட்வொர்க்கிங்கில் இணைப்பது, பிரிண்டர்கள் போன்றவைகள் வாங்க சுவாமியுடன் சென்னைக்குச் செல்வது என எப்போதும் வேலையாக இருப்பேன். மாலை வேலைகளில் சுமார் இரண்டு மணி நேரமாவது சுவாமிகளுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கை. தினமணிக்கு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அடியேன் தான் டைப் செய்து கொடுப்பேன். தினமணி ஆசிரியர் வைத்திய நாதனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.

அவர் பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்த புத்தகம் தாயுமானசுவாமிகள் பாடல்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு தாயுமான சுவாமிகள் பாடலைப் பற்றி விவரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் புரியாது. கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது அடியேன் தாயுமான சுவாமிகள் எழுதிய பராபரக் கண்ணிக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரு வரிகளுக்கான அர்த்தத்தை எழுதுவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.

பரநாட்டத்தைப் பற்றியே பெரிதும் பேசுவார். ஆஸ்ரமத்தில் இருந்த போது பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றினை எனக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது அது ஏதோ ஒரு கதை என்பது போலவே இருந்தது. இப்போது என்னால் தொடர்ந்து நான்கு பக்கங்கள் படிக்கமுடியவில்லை. மனது ஒன்றி விடுகிறது. தொடர்ந்து படிக்க இயலவில்லை. கண்ணீர் பெருகி விடுகிறது. பகவானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாபுருடர்களின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் காலத்தினால் மட்டுமே கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து சுவாமி ஆத்மானந்தர் அவர்கள், சுமார் 3000 பிள்ளைகளுக்கு மேல் இலவசமாக உடையும், உணவும் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகள் அனேகம். தாயைப் போல அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

எத்தனையோ பேர்கள் அவரிடம் பொருளுதவி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் அவரிடமிருந்து ஏமாற்றி பெரும் பொருளைத்திருடி இருக்கிறார்கள். நான் அங்கிருந்த காலத்தில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும அவரைப் பாதிப்பதே இல்லை. 

கரூர் ஆஸ்ரமத்தையும், சாரதா நிகேதன் கல்லூரியையும் திருப்பராய்த்துறை தபோவனம் அவரிடமிருந்து பிடிங்கிக் கொண்டது. அது அதர்மம் தான் என்னளவில். 

கரூர் சாரதா நிகேதன் கல்லூரியின் முன்பு இருக்கும் விவேகானந்தர் சிலை அமைக்கும் போது நான் அங்கிருந்தேன். அந்த மண்டபத்தில் இருக்கும் ஷாண்ட்லியர் ஒரு லட்ச ரூபாய். நான் தான் சென்னைக்குச் சென்று வாங்கி வந்தேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலையை உருவாக்கியவரே இந்தச் சிலையினையும் உருவாக்கினார். சுவாமிக்கு நிரம்பவும் பிடித்த இடம் அது. காலம் அவரை அங்கு இருக்கவிடவில்லை. 

காரைக்குடி அமராவதிபுதூரில் சாரதா சேவாஸ்ரமத்தின் அருகில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். கல்லூரி கட்டடம் வேலை செய்து கொண்டிருந்த போது, இஞ்சினியருக்கு பணம் கொடுக்கச் செல்லும் போது நானும் சுவாமியுடன் செல்வதுண்டு, அவருடன் அவரது அறையிலேயே தங்கிக் கொள்வேன். கல்லூரி கட்டி முடித்தவுடன் 50 கம்யூட்டர்கள் உருவாக்கி லேப் செட்டப் செய்து கொடுத்தேன்.  

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அவரை விட்டுச் சென்ற பிறகு சேலத்தில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். அங்கு சுவாமி நித்தியானந்தருடன் பிரச்சினை ஏற்பட்டு, கல்லூரி இன்னும் பெரிதாக வளரவில்லை.  தஞ்சாவூர் பால்சாமி மடம், கோவை குங்குமப்பாளையம் பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்னால் இருந்த ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகியவை என்ன ஆனதோ தெரியவில்லை. தஞ்சாவூர் பால்சாமி மடத்தின் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து, அங்கிருந்து தான் அரிசி வரும். 

கோவை பள்ளப்பாளையம் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு நானும் அவருடன் வருவதுண்டு. அவர் பிறந்த ஊர். பல ஊர்க்கதைகளை காரில் வரும் போது என்னுடன் பகிர்ந்து கொள்வார். காண்டசா கிளாசிக் கார் - பதிவெண் 1011 என்று நினைவு, அக்காரில் அவருடன் அதிக நேரம் பயணம் செய்திருக்கிறேன். 

அவருக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. ராம நாதபுரத்தில் சுவாமி விவேகாந்தர் மன்னருடன் சந்தித்ததன் காரணமாக, அங்கு ராமகிருஷ்ணர் மடத்தை உருவாக்கி, அதனை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் மீது பக்தி கொண்டிருந்தார். 




ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தை கட்டி பேலூர் மத்திடம் ஒப்படைத்த போது பேசியது மேலே இருக்கும் வீடியோ

ஆன்றோர்களின் வார்த்தைகள் வீண் போவதில்லை என்பதற்கு இந்த மடம் ஒரு உதாரணம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு எத்தனையோ ஆண்டுகாலம் சென்ற பிறகு வடிவம் பெற்றிருக்கிறது சுவாமி ஆத்மானந்தர் அவர்களால். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மடத்தின் இணைய தளத்தில் சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.  இந்த வீடியோ மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் வீட்டுக்கு வருகை தந்தார். என் படுக்கையில் தான் படுப்பேன் எனச் சொல்லி படுத்து உறங்கினார். என் பையன் கார் ஓட்டனும் எனக்கு என்று கேட்டுக் கொண்டார். அவரை அருகில் வைத்து கார் ஓட்டி வந்தான் ரித்திக் நந்தா. அவரின் நினைவாக மகனின் பெயருடன் நந்தா இணைந்தது. அவருக்குப் பிடித்த நிவேதிதை பெயர் தான் என் மகளுக்கு வைத்திருக்கிறேன்.

அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்த போது என்னைப் பற்றிப் பேசும் போது, என் மகள் நிவேதிதா பெயரைச் சொல்லி, அவளின் அப்பா என்று சொல்வாராம். அவரின் சீடர் கோவைப்புதூர் ரங்கநாதன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.  

சுவாமிகளின் சீடர் மருத்துவர் ஜெகன்நாதன் அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். இரண்டொரு மாதங்களாக சுவாமிகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார். நான் அவரைக் கடைசியாகச் சந்தித்த போது கூட என் கையை இருகப் பற்றிக் கொண்டு, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சாப்பிடுமாறு வேண்டினேன். கேட்கவே இல்லை. பர உலகை நாடிச் சென்று விட்டார்.

அவரால் வாழ்ந்தவர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் பயன் பெற்றவர் அனேகம். அவர் கடைசி வரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைகளுக்கு ஒப்பவே வாழ்ந்து வந்தார். 

https://www.amritapuri.org/5747/04karur.aum

மாதா அமிர்ந்தானந்த மயி அவர்கள் சாரதா கல்லூரிக்கு வருகை தந்த போது

ஒரு மாலை நேரம். கரூர் ஆஸ்ரமத்தில் இருந்த அவரது அறைக்குள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம் தனிமையில். படுக்கை அறைக்குள் சென்று காக்கி நிறத்தில் கிழிந்து போன அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். 

முருகானந்தம் என்ற அவரை சுவாமி ஆத்மானந்தர் ஆக மாற்றிய அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிரவு தூங்காமல் படித்து முடித்தேன். காலையில் அவரிடம் சென்று காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “வாழ்க்கையில் வெற்றி” - அப்துற் றஹீம் எழுதியது.

என்னைப் பொறுத்தவர் சுவாமி விவேகானந்தர் தான் சுவாமி ஆத்மானந்தர் உருவெடுத்து நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

* * *

சுவாமி ஆத்மானந்தர் தீட்சை வழங்கி, அவரது நேரடி சீடர்கள் அறுவர். இவர்களில் சொரூபானந்தர், பசுபதீஸ்வரானந்தர், பக்திரூபானந்தர் மற்றும் ஹரிசேசவானந்தர் ஆகியோர் காலமாகி விட்டனர். 

சுவாமி ஞானேஸ்வரானந்தர், சுவாமி யோகேஸ்வரானந்தர் மற்றும் மாதா சிவ ஞானப்பிரியம்பா பெண் துறவி ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என நம்புகிறேன்.  இந்த நிறுவனங்கள் லாப நோக்கமின்றி மக்களுக்கு தொடர் பணியைச் செய்யும் எனவும் நம்புகிறேன்.



Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!



Thursday, February 2, 2023

கவிஞர் முத்துலிங்கத்திற்கு கடுமையான கண்டனம் - தினமணி கட்டுரை

தமிழ் நாட்டு அரசின் அந்த நாள் அரசவைக் கவிஞர், இந்த நாளில் எவரும் அறியா கவிஞரான முத்துலிங்கம் 02.02.2023 தினமணியில் ’மொழிப்போர் தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.

கவிஞர்களுக்கு இப்போது புகழும் இல்லை, பெரிய கவிஞர்கள் என்ற பட்டமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் முன் காலத்தில் சமுதாய, அரசியல், வாழ்வியல் சீரழிவுகளை கூர்மையான வார்த்தைகளால் கவிதை நடையில் எழுதவென்றே ஒரு கூட்டம் இருந்தது. கவியரங்கங்கள் கூட நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரியாதையும், பொன்னாடையும், புகழாடையும் வழங்கப்பட்டன.

சினிமாக்களில் பாடல்கள் எழுதினார்கள். நல்ல சம்பாத்தியமும் கிடைத்தன. மக்களிடையே புகழும் கிடைத்தன. அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது வலிகளை, இன்பங்களை, துயரங்களை, சீர்கேடுகளை, அக்கிரமங்களை படித்த ஒவ்வொருவரும் எழுதி விடுகிறார்கள். அதாவது கவிஞர்களானார்கள் மக்கள். தனிப்பட்ட முறையில் இனி கவிஞர்கள் என்று சொல்ல முடியாது. 

அந்த வகையில் நாதியற்றுப் போன கவிஞர் முத்துலிங்கம், எதுக்காகவோ ஆசைப்பட்டு, அல்லது சொரிந்து விடுவதற்காகவும், தன் இருப்பை யாருக்கோ தெரிவிக்க வேண்டியும் பொய்களை அவிழ்த்து விட்டு, அதுவும் பார்ப்பனியர் சாதி வெறி பிடித்தலையும் தினமணியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் இல்லையாம். ஆங்கிலம் தான் இருக்கிறதாம். கவிஞர் கவிதைக்கு வேண்டுமானால் பொய் புனையலாம். இப்போது, அதுவும் தற்போதைய தமிழ் நாட்டு மக்களிடம் போகிற போக்கில் தமிழே தமிழ் நாட்டில் இல்லை என்பது போன்ற ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பரிதாபத்துக்குரியவரானார் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். ராஜாஜி மாணவர்களை ஹிந்தியில் படிக்க கட்டாயச் சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் மொழிப்போர் நடத்தப்பட்டது. 

மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது, அதன்படி ஆட்சி நடத்தப்படுகிற போது, எதற்காகத் தமிழர்களின் பிள்ளைகள் ஹிந்தியில் பாடம் படிக்க வேண்டும் என கவிஞர் சொல்லுவாரா? 

தமிழ் நாடு அரசு தமிழில் தான் சட்டங்கள் வெளியிடுகிறது. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க ஆங்கிலத்தில் சட்டங்கள் வெளியாகின்றன. ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மா நிலப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அரசு சட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால், ஒன்றிய அரசின் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் சட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வசதியாக மறந்து போனார் முத்துலிங்கம்.

நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழைக் கொண்டு வர முயற்சி செய்தபடியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு தமிழை வளரவே விடக்கூடாது என்பதற்காக அனுமதி தரவில்லை. இது ஏதும் தெரியாத தற்குறி இல்லை கவிஞர். ஆனாலும் பொய்யாக எழுதுகிறார்.

தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் உலகெங்கும் பணி செய்கிறார்கள். பல நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி படித்து விட்டு, தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரவில்லை.

சுமார் 80 வயதான நிலையில் செய்நன்றி மறந்து போய் இப்படியான பொய்களை பொது வெளியில் அவிழ்த்துக் கொட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழன் என்ற வகையில் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தக் கட்டுரையின் இறுதியில் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி வன்மம் கொண்டு தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும். 

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய - மொழிப்போர் தியாக வரலாறு கட்டுரை. இக்கட்டுரையின் இறுதி பத்தி கீழே. எவ்வளவு வன்மம் பாருங்கள் இவருக்கு?


நன்றி : தினமணி


Sunday, January 29, 2023

நெடுவாசல் வேலு வாத்தியார்

நெடுவாசல் சாந்தி அக்கா தீடீரென காலமாகி விட்டார். மறுநாள் துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த போது, வேலு வாத்தியாரின் மறைவு கேட்டு வீட்டுக்குச் சென்ற போது அவர் எழுதிய நெடுவாசல் கிராம வரலாறு புத்தகத்தை அவரின் மனையாள் என்னிடம் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிய போது எனக்குள் ஆச்சரியம்.

ஆசிரியர் வேலு

எத்தனையோ மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்து போகின்றனர். தான் வாழ்ந்த ஊரின் வரலாற்றை எழுதியவர்கள் மிகச் சிலரே. நெடுவாசல் கிராமத்தின் தோற்றத்திலிருந்து ஊரின் பழக்கங்கள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கும் அப்புத்தகம் வரலாறானது அவரைப் போலவே. 

1976ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1974ம் ஆண்டிலிருந்து அவர் திராவிட கழக உறுப்பினர். பகுதறிவாளர் கழக மாவட்ட புரவலராக இருந்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1991ம் ஆண்டிலிருந்து புலால் உணவை நீக்கி வடலூர் இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர்.

அதுமட்டுமல்ல தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.  மேதகு மொரார்ஜி தேசாய், மேதகு ராஜீவ் காந்தி, மாண்புமிகு புரந்தரேஸ்வரி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட ஆசிரியர் கூட்டணி மா நாடுகளில் முக்கியப் பங்கெடுத்தவர் வேலு ஆசிரியர். இத்தகைய பெருமை கொண்டவருக்கு இன்று பேராவூரனியில் நினைவேந்தல் விழா நடக்கிறது. 

பதினொரு நாட்டார் அகமுடையார் உறவின் முறை கிராமங்களில் இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பது அதிசயமே. 

ஆவணம் கிராமத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட கவி ஈஸ்வரர் வேலாயதனார் என்பவர் வாழ்ந்து காலமானார்.

திருவாசகத்துக்கு இணை சொல்லும் வகையில் ஆவணம் கிராமத்தில் கவியீஸ்வரர் வேலாயுதனார் என்ற வேலாயுத தேவர் திருச்சிற்றம்பலம் சிவபெருமான் மீதும், ஆவணத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மீதும் கொண்ட பக்தியினால் பல்வேறு பாடல்களை எழுதினார். அவரின் கையெழுத்து நீட்சியெழுத்தாக இருப்பதால் அச்சுக்கோர்ப்பவருக்குப் புரியாது. ஆகையால் அவரின் எழுத்தை அழகாக படியெடுத்து எழுதிக் கொடுப்பது என் வாடிக்கை.

ஆவணம் அரசு துவக்கப்பள்ளியின் பின்னாலே இருந்த புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டு, மாலை நேரங்களில் பிரதி எடுத்து எழுதிக் கொடுப்பேன். அவர் காலமாவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, என்னிடம் தன் இறப்பைத் தெரிவித்தார். அந்தளவுக்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர், இறைவனாகவே வாழ்ந்தவர்.  வேலு ஆசிரியர் அவர்களும், வேலாயுதனார் இருவரும் சுத்த சன்மார்கத்திலே ஈடுபாடு கொண்டவர்கள்.

பெரிய மனிதர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவார்கள். அதைப் போல நெடுவாசலில் வாத்தியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் மாறாமல் வாழ்ந்த வேலு ஆசிரியர் காலமாகி இருக்கிறார்.

இன்று அவரின் புகைப்படத் திறப்பு விழா பேராவூரணியில் நடக்க இருக்கிறது. எனது ஊருக்குப் பெருமை சேர்த்த வேலு ஆசிரியரின் புகழ் என்றென்றும் நிலைத்து நின்று, நெடுவாசலுக்குப் பெருமை சேர்க்கும். 

வேலு ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழ்மணி பதிப்பகம், நெடுவாசல் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சலக எண் : 622304, போன் : 86086 36044


அவரை வணங்கி மகிழ்கிறேன்.

இன்று 29.01.2023ம் தேதி பேராவூரணியில் நடக்க இருக்கும் புகைப்படத் திறப்பு விழா அழைப்பிதழ் கீழே.




Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Monday, December 12, 2022

நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு

யாரோ ஒருவர் தன் நலத்துக்காகச் செய்யும் செயல், ஏதோ ஒரு குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு சரியில்லை எனில் ஒரு நபர் மட்டும் பாதிப்பதில்லை - குடும்பமே பாதிப்படைந்து சீரழிந்து விடும். கோர்ட்டை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு சாமானியன் ஒருவனின் சொத்தினை எளிதில் திருடி விடலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் - சொத்துரிமை சட்டங்கள் அவ்வளவு குழப்பமானவை. அதுமட்டுமின்றி நயவஞ்சக முறையில், நரித்தனமான வக்கீல் ஒருவரின் வாதத்தால் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்படும் பல்வேறு சம்பவங்களை நாமெல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அனுபோகப் பாத்தியம் என்றொரு விதி உள்ளது அல்லவா? இது சட்டம் எனில் அதுவே அறமாகும் அல்லவா? 

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, எனது இந்தக் கேள்விக்குப் பதிலை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். 

இன்றைக்கு உத்திரப்பிரதேசத்தில் ராமருக்கு கோவில் கட்டும் இடத்தின் 800 ஆண்டுகால உரிமை மசூதிக்கு இருக்கிறது அல்லவா? 800 ஆண்டுகால மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. இது சரியா? அவ்வளவுதான் என் கேள்வி. இந்தக் கேள்விக்கு சார்பற்ற நிலையில் இருந்து சட்டமே மேல் என்ற அறிவின் மூலம் பதிலைத் தேடிப்பாருங்கள்.

எனக்கு மதம், மொழி, இனம் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இல்லை. ஏனென்றால் என் பிறப்புக்கு முன்பே மனிதர்கள் இவைகளுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். அந்த வகையில் நானொரு அடிமை வம்சத்தில் பிறந்தவனே. மதமும், மொழியும், இனமும் மனிதர்களை அடிமைப்படுத்தும் மாய வலை என்பதை புரிதல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்போது திருட்டுக்கு வரலாம்.

சமீபத்தில் என்னிடம் சொத்துரிமை ஆய்வுக்கு வந்த ஆவணங்களில் இருந்த அட்ஜுடிகேசன் ஆவணத்தைப் பார்த்த போது - அதன் தன்மை எனக்கு சரியாகப்படவில்லை. வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தன் சொத்தினை விற்பதற்கு எழுதிக் கொடுக்கும் பொது அதிகார முகவர் பத்திரத்தினை, பதிவு அலுவலகத்தின் அட்ஜுடிகேசன் செய்து பதிவு செய்வர். 

சந்தேகம் வந்து விட்டால் எனக்குத் தூக்கம் வராது. இந்த நிலத்தை வாங்குபவரிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இடத்தின் லொகேசன் கேட்டேன். அனுப்பி வைத்தார். மறுநாள் சென்று விட்டேன்.  எனது வழியில் விசாரித்து அந்த நில உரிமையாளரைப் பிடித்தேன். 

நிலம் விற்பனை செய்வதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆரம்பித்த போது, அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்தேன். புரபைலில் அவரின் போட்டோ பார்த்து அதிர்ந்தேன். இந்தப் போட்டோவில் இருந்ததும், புரபைல் போட்டோவும் வேறு. 

முற்றிலும் போகசாக தயாரிக்கப்பட்ட அட்ஜுடிகேசன் பத்திரம் அது. அதுமட்டுமல்ல இரண்டு பத்திரங்கள் ஆனவுடன், அந்த இடத்தில் வெளி நாட்டு நபரின் பெயரும், போலிப்பத்திரங்கள் செய்தவர்களின் பெயரும் கூட்டாக இருக்கின்றன. ஆன்லைனில் பார்க்கும் போது நம் பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

சம்பவத்தை எழுதி விட்டேன். 

இந்தச் சொத்தினை வாங்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். ஏன் என்று கேட்டார் வாடிக்கையாளர் - மோசடிப்பத்திரங்கள் என்று மட்டும் சொல்லி விட்டேன். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

ஆகவே, வெளி நாடு வாழ் தமிழர்களே, உங்கள் சொத்துக்கள் மீது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

* * *

உங்கள் மனதில் சஞ்சலமா? துன்பத்தில் இருக்கின்றீர்களா? எதைச் செய்தாலும் முடிவு தவறாகவே இருக்கிறதா? 

எனது வாழ்க்கையில் நான் பெற்ற துன்பங்கள் - அதில் நான் பெற்ற வெற்றிகள் பற்றிய அனுபங்களைச் சுவாரசியமாக எழுதி அமேசான் கிண்டிலிலும், டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டும் தோழனாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.

. டிஜிட்டல் புத்தகம் விலை ரூ.120/- விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.



Sunday, December 11, 2022

நாசமாகிக் கொண்டிருக்கும் தமிழினப் பெண்கள்

சமூப் பிராணியான மனிதன், எல்லாமும் நிரந்தரமென்று நினைத்துக் கொண்டு இருக்கிறான். இந்தச் சிந்தனையை ஏற்கலாம். அபாயகரமான போக்கு ஒன்று இப்போது பெண்களிடம் திணிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

நாளைக்கு என்னவோ நடக்கட்டும், இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கணும் என நினைப்பது பேராபத்து.

அதுமட்டுமல்ல நவீன சாமியார்கள் தமிழர்களுக்கு வாழ் - அதை இன்றே என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். கொண்டாட்டமாய் வாழுங்கள் என்கிறார்கள். 

இதைப் போன்ற சாமியார்களுக்கு குடும்பமாய் இருப்பது பிடிக்காது. இது அவர்களின் உளப்பான்மை. ஆனால் வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பேச்சாற்றலால் குடும்ப அமைப்பை நிர்மூலமாக்குவார்கள். அவர்களை ஆசிரத்திற்கு அடிமையாக்குவார்கள். சம்பளமில்லா வேலைக்காரர் ஆக்குவார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் அபத்தம்.  உலகெங்கும் கிளைகளைத் துவக்குவார்கள். இவர்களை நம்பி ஆசிரம அடிமைகளாக மாறும் நபர்கள், தங்களின் வயதான காலத்தில், உதாசீனப்படுத்துவதை அறிவார்கள். உள்ளே வரும் வரை எல்லாம் கிடைக்கும், வந்த பிறகு எதுவும் கிடைக்காது. இந்த நயவஞ்சக வேலையைக் காலம் கடந்த பின்னர் தான் அறிவர். 

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கு அனுபவம் இருக்கிறது. அதைப் படிக்க எனது ”கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகத்தை அமேஷானில் வாங்கிப் படித்துப் பாருங்கள். அதிரும் ஆசிரம உண்மைகளை பகிர்ந்து உள்ளேன்.


(அமேசான் கிண்டிலில் படிக்கலாம் - இந்த புத்தகம் உங்களுக்கான வழிகாட்டி)

குடும்பம் சிதைந்தால் குதூகலம். பெண்ணுரிமைப் பேசித் திரியும் பல ஈத்தரைகள் - ஆணாதிக்கம் பற்றிப் பேசுவார்கள். ஆணாதிக்கம் என்பது கொடும் சிறை என்பது போல பேசி மதி மயக்குவார்கள். அவ்வாறு பேசும் ஆண்களின் குறி பெண்ணுடல். குடும்பத்தோடு இருந்தால் முடியாது, தனியால் இருந்தால் ஈசியா மடியும்.

பெண்களுக்கு இண்டிபெண்டன்ஸ் என்ற வாழ்வியல் முறை பல வழிகளில் புகுத்தப்படுகிறது. அவர்கள் அதை நம்புகிறார்கள். விளைவு இண்டிபெண்டட் மதர் என்றொரு கேட்டகரியில் நுழைகிறார்கள். இந்த இண்டிபெண்டட் முறையினால் பெண்கள் செய்யும் சேட்டைகள் பற்றிய ஒரு பதிவு வாட்சப்பில் பகிரப்பட்டது. அதை அப்படியே தருகிறேன். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். அதிர வைக்கும் பெண்களின் மன நிலையினால் அவஸ்தைப் பட போவது அவர்களே என்பதை அறியாமல் தமிழினப் பெண்கள் தன் நிலையை மறந்து போயினர். பரிதாபத்துக்குரியவர்களாகப் பெண்கள் மாறிய கொடுமையைப் படியுங்கள் கீழே.

* * * 

பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவப் பதிவு. 

கோவையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி.

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார். 

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா.

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது.

போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.

ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா.

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம் என்றார்கள் அந்தப் பெற்றோர்.

அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்.

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. 

அதுக்கு அந்தப் பையன் குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்னு சொல்லி இருக்கான். 

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்கன்னு சொல்ல வேண்டியது தானே. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான். இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான். சமைக்கணுமாம். காஃபி போடணுமாம்னா, பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்கறா. 

அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா படுது என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா.

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை.

என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். யார்கூட போனேன்னு கேட்டான். 

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே. ஐ வாண்ட் மை ஸ்பேஸ். 

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல. இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்". நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை என்றாள் ஒரு பெண். 

அவளும் 30 வயதை நெருங்குகிறாள். ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது. எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா என்றார்கள்.

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள். எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். 

அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது. இதைச் சொல்லிடுங்க முதல்ல என்றார்கள்.

எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது என்று சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. 

அவங்க விளக்கு கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் மூட் அவுட் ஆயிடுவா என்று தகவல் தரும் பெற்றோர்.

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால் கூட, பையன் வீட்டினர் தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு, வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள். 

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா. சண்டேதான் பேசணும். சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா. அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். 

இன்னும் சிலர், நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது.

இவர்தான் இனி நம் வாழ்க்கை. என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான் என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன் என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன். அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு. என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும் என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக் கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க  கூடாது என்று நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண். அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது.

ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே. கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,

இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை. ஒரு சில பர்சன்டேஜ்தான்.
இன்றைய பெண்களிடம் இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும் என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார். நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால்

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா.

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,

தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்.

* * *
குறிப்பு : தமிழினப் பெண்களின் இந்த மன நிலையால் - தமிழர்களின் குடும்ப அமைப்புச் சிதைக்கப்பட்டு விட்டால் முடிவில் தமிழர்களின் வாழ்வியலையும் மொத்தமாக அழித்து விடலாம் என்றொரு சிந்தனை செய்யும் சதிகாரர்கள் தான் இத்தகைய வாழ்வியலுக்குப் பெண்களை பல வழிகளில் பேசியும், எழுதியும் ஈர்க்கிறார்கள் என்றொரு பேச்சு உலா வருகிறது.

Wednesday, December 7, 2022

200 கோடி வரிபாக்கி - விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை இல்லை ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவும் ஆன புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஒருவரே சாட்சி. இதற்கு பத்திரிக்கைச் செய்திகளே சாட்சி.

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2011ம் வருடத்திலிருந்து 2019ம் வருடம் வரை அவரின் வருமானத்தைக் கணக்கிட்டு வருமான வரித்துரை 206 கோடி ரூபாய் வரி விதித்தது. கவனிக்க 206 கோடி வரி என்றால் வருமானம் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

03.12.2022ம் தேதியன்று தினத்தந்தியில் வெளியான செய்தியை அப்படியே தருகிறேன். படித்துப் பார்க்கவும்.

தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது. 

வங்கி கணக்குகள் முடக்கம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின்படி, 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை நிர்ணயம் செய்து, அவருக்கு ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தாததால், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கிற்கு வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல் செய்தது. 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- குவாரி வருமானம் மறைப்பு விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அவருடைய குவாரியில் 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. இந்த விவரங்களை விஜயபாஸ்கர் மறைத்துள்ளார். 

இதுதவிர சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்திடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 பெற்றுள்ளார். 

குட்கா பணம் இதே காலகட்டத்தில் பான் மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் பெற்றுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான வாடகை கட்டணமாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார். 

அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்ட தொகை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையுடன் சேர்த்து விஜயபாஸ்கரிடம் ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ரூ.339 கோடி விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இதன்காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42 கோடி வரிபாக்கிக்காகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

இணைப்பு:

சரி, குட்காவில் ஊழல், குவாரியில் ஊழல், ஓட்டுக்கு லஞ்சப் பணம் என பல்வேறு குற்றங்களைச் செய்த விஜயபாஸ்கரை கைதாவது செய்திருக்கிறார்களா? 

அவர் இன்றும் எம்.எல்.ஏ. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விஜயபாஸ்கரின் காலடியில் கிடக்கிறது. விசாரணை அமைப்புகளும், காவல்துறையும், சி.பி.ஐயும் விஜயபாஸ்கரிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன. இந்திய நீதித்துறையோ வாய்மூடி மவுனமாய் இருக்கிறது.

விஜயபாஸ்கர் இந்தியாவின் முன்மாதிரி அரசியல்வாதியாகத் திகழ்கிறார் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இணையத்தில் இருந்து எப்போதேனும் நீக்கி விட முடியும் என்பதால் ஸ்கீரீன் ஷாட் இத்துடன்.




Sunday, August 14, 2022

சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக மாறாத ஒன்று

இந்தியா 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தென்னாஃப்ரிக்கா, பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பிரயாணத்தினால் இந்தியாவின் தலையெழுத்து மாற்றப்பட்டது. 

ஒரு சில சிறு சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த உலகின் இயக்கத்தையே மாற்றும். 

அதே போல 2021ம் ஆண்டில் ஒரு கிருமி உலகை முடக்கிப் போட்டது. கிருமியின் முன்னால் கடவுள்கள், ஆட்டிப்படைக்கும் நிறுவனங்கள், அரசியல் ராஜதந்திரிகள் எல்லாம் தோற்றோடினர். கடவுள்களுக்கு பூஜை இல்லை. நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசியல் ராஜதந்திரிகள் முடங்கினர். 

இந்திய தேசத்தின் விடுதலைக்காக சத்யாகிரகம் நடத்தி, ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்திய, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர்களை தேசபக்தர் என்று கொண்டாடும் மாயை வினோதங்களை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.

சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

மருது சகோதர்களும், பூலித்தேவனும், திருப்பூர் குமரனும் செத்துப் போனார்கள். வ.உ.சிதம்பரனார்,  சிவா சிறையில் கிடந்தனர். இந்தியாவின் சிற்பி நேரு ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் கிடந்தார். இன்னும் லட்சோப லட்ச மக்கள் தங்கள் உயிரை இழந்து பெற்றது இந்த சுதந்திரம்.

இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் எவராக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கும் கூட சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது. இன்றைக்கும் இந்தியர்கள் பசியாலும், பட்டினியாலும், வீடின்றியும் இருக்கின்றார்கள். எத்தனையோ ஆட்சிகள் நடந்து முடிந்து விட்டன. இன்னும் எதுவும் மாறவில்லை.

140 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளார்கள். சுமார் 40 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டார்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

விண்ணை முட்டும் விலைவாசி, காயும் வயிறுகள், பட்டினியில் மக்கள்.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

இருக்க வீடில்லை, வீடெங்கும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென்கிறது அரசு.

75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.

அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்.


* * *


சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒன்று தமிழர் பிரதமராவது.

தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது 

இந்தியாவில் மாறாத ஒன்று இந்திய ஆட்சி மொழிப் பிரச்சினை. 

இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. வீடெங்கும் தேசியக் கொடி ஏற்றி மகிழ வேண்டும் வயிற்றில் பசி இருப்பினும்.

இதோ ஒரு சாட்சி- இந்தியாவில் 75 ஆண்டுகாலமாக மாறாத ஒன்றின் சாட்சி.



நன்றி : காஞ்சி இதழ், தினமணி

Saturday, August 13, 2022

கொஞ்ச நேரம் பேசலாமா? - எனது முதல் புத்தகம் அமேசான் கிண்டிலில்

அன்பு நண்பர்களே, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். முதன் முதலாக அமேசான் கிண்டிலில் ‘கொஞ்ச நேரம் பேசலாமா?” என்ற எனது புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
கிண்டில் ஆப்பில் இப்புத்தகத்தைப் படிக்கலாம். 

புத்தகத்தைப் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தினை கிண்டிலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

#கொஞ்ச_நேரம்_பேசலாமா?
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_புத்தகம்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_கிண்டில்
#கொஞ்ச_நேரம்_பேசலாமா?_அமேசான்

Thursday, August 4, 2011

டிரேடிங் வெப்சைட்கள் - ஏமாற்றும் வித்தைக்காரர்கள்

டிரேடிங் பிசினஸ் ஆரம்பித்த புதிதில் இறக்குமதி, ஏற்றுமதிக்கான சில பிரத்யேக வெப்சைட்டுகளை அறிய நேர்ந்தது. அதில் உறுப்பினராய்ச் சேர்ந்தால் எளிதில் இறக்குமதியாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு, கொட்டேஷன் கொடுத்தால் ஆர்டர் கிடைக்கும் என்று அந்த வெப்சைட்டுகளில் சொல்லி இருந்தார்கள். அதன்படி நானும் ஒரு வெப்சைட்டிற்கு பணம் கட்டி மெம்பர் ஆனேன். இறக்குமதியாளர்களின் முகவரியுடன், அவர்களின் தேவைகளும் வரிசையாய் பட்டியலிட, நானும் அசராமல் கொட்டேஷன் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். எவரும் பதில் தரவே இல்லை. போன் பேசினால் சொத்தை விற்றுத்தான் போன் பில் கட்ட வேண்டி வரும் என்பதால் மெயில் மூலமே அனுப்பி வந்தேன். சரி நம்மைப் போல பலரும் மெம்பராகி இருப்பார்கள் அல்லவா? ஆகவே வேறு யாருக்கும் ஆர்டர் கிடைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

இந்தச் சூழலில் எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். எதேச்சையாக அவரின் தொடர்பு கிடைக்க, இருவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நண்பர் வசித்த இடத்திலிருந்து ஒரு இறக்குமதியாளரின் பையிங் லீட்ஸ் வர, நண்பரிடம் அந்த லீடைக் கொடுத்து, இறக்குமதியாளரை நேரில் சந்திக்கும் படியும், அவருக்குத் தேவையான பொருளை தயார் செய்து கொடுக்க நமது கம்பெனியைப் பற்றியும் எடுத்துச் சொல்லி ஆர்டர் கிடைக்க உதவி செய்யும் படி கேட்க, நண்பருக்கு ஆர்வம் பிறந்து சில சாம்பிள்களைப் பெற்றுக் கொண்டு, கம்பெனி புரபைலுடன் நேரில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுச் சென்றிருக்கிறார்.

சந்திப்பின் போது, அந்தக் கம்பெனியின் பையின் லீடை எடுத்துக் காட்டி இருக்கிறார். அது ஒரு வருடத்திற்கு முன்பு அந்தக் குறிப்பிட்ட வெப்சைட்டில் போடப்பட்டதாகவும், போட்ட ஒரு நாளுக்குள் ஏற்றுமதியாளரை அந்தக் கம்பெனியே ஏற்பாடு செய்து விட்டதாகவும்,  தற்போது அவர்களிடமிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வெப்சைட்டில் அந்தக் குறிப்பிட்ட கம்பெனி, இப்போதுதான் அவர்களின் தேவையை போஸ்ட்டிங் செய்திருந்தது. அதை அந்தக் கம்பெனி முதலாளியிடம் காட்டி விட்டு வந்திருக்கிறார் நண்பர்.

இது போன்ற டிரேடிங் வெப்சைட்டுகள் முதலிலேயே பிசினஸ்ஸை முடித்து விட்டு, முடிந்து போன ஒரு விஷயத்தை பதிவாக்கி, அதை வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன். அதன் பிறகு எங்களூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அந்தக் கம்பெனியின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் காட்டிய போது, அதிர்ந்தனர் மற்ற ஏற்றுமதியாளர்கள். இது ஒரு பக்கா திருட்டு.

அதுமட்டுமல்ல, கடந்த வருடத்தில் நிலக்கரி தேவை என்று ஒரு டிரேடிங் வெப்சைட்டில் போஸ்ட்டிங் போட்ட உடனே, அந்த டிரேடிங் வெப்சைட் கம்பெனியிலிருந்தே போனில் அழைத்து அவர்களே நிலக்கரியைச் சப்ளை செய்கிறோம் என்று கேட்டார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? இது போன்ற டிரேடிங் வெப்சைட்காரர்கள் செய்யும் அயோக்கியத்தனம் !

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் டிரேடிங் இணையதளங்கள் அனைத்தும் ஃப்ராடு வேலை செய்து வருகின்றன. அதுமட்டுமல்ல, உங்களுக்கென்று தனி வெப்சைட், கீ வேர்ட் என்று ஆரம்பிப்பார்கள். ஏமாந்தீர்கள் என்றால் அது அவர்களுக்கு லாபம். நமக்கு ஒரு பைசா லாபம் கிடைக்காது. ஏமாற்றும் இது போன்ற இணையதளங்களை நீங்கள் நம்பி காசை கரியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* * *

Wednesday, August 3, 2011

பவர் செல்லுமா செல்லாதா?

சொத்து வாங்கும் போது பத்திரம் என்பதைத் தாண்டி பவர் பத்திரம் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

கே என்பவர் தனது 10 ஏக்கர் சொத்தினை ஜே என்பவருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த ஜே என்பவர் பத்து ஏக்கரில் ஒரு ஏக்கரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மீதமுள்ள 9 ஏக்கரில் அரசாங்கம் 5 ஏக்கரை சாலைக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு எடுத்துக்கொண்ட விபரங்களை பவர் வைத்திருக்கும் ஜே என்பவரிடம் தான் தெரிவிக்கிறது. அதற்குண்டான பலன்களையும் ஜே என்பவர் தான் பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையில் ‘ஜே' என்பவர் 4 ஏக்கரை விற்கும் பொருட்டு, வேறொருவரிடம் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அக்ரீமெண்ட் போட்டு விடுகிறார். இதற்கிடையில் பவர் எழுதிக் கொடுத்த ‘கே' என்பவர் இறந்து விடுகிறார்.

எங்களது கம்பெனி சென்னை ஏஜெண்ட் மேற்படி விபரத்தைச் சொல்லி, மேற்படி எழுதப்பட்ட பவர் இப்போதைக்குச் செல்லுமா இல்லை காலாவதியாகி விட்டதா என்று கேட்டார்.

எங்களிடம் வரும் முன்பே அவர் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் தான் பவர் செல்லுபடியாகும். அவர் இறந்து விட்ட படியால் பவர் செல்லாது என்றும், இனி அந்தச் சொத்து பவர் எழுதிக் கொடுத்தவரின் வாரிசுகளுக்குச் சென்று விடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். சொத்தினைக் கிரயம் வாங்க வேண்டுமென்றால் வாரிசுகளிடம் என் ஓ சி வாங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மேற்படிப் பிரச்சினைக்கு மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் சொல்யூசனா என்றால் கிடையவே கிடையாது. மிக முக்கியமான ஒரு பாயிண்டை விட்டு விட்டார்கள். அது என்ன?

இது போன்ற சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வு கொடுக்கிறது. இவ்வசதியைப் பெற எங்கள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் காப்பிகளுடன், கட்டணத்தையும் செலுத்தினால் லீகல் ஒப்பீனியன் கொடுக்கப்படும். சொத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் லீகல் ஒப்பினியன் பெற்றுத்தரும்.

சரி மேலே இருக்கும் பிரச்சினையில் மறந்து போன பாயிண்ட் என்னவென்றால், சொத்து விற்கும் பொருட்டு அக்ரீமெண்ட் போடும் போது, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த அக்ரீமெண்ட் செல்லுபடியாகும் என்பதுதான் அது. ஆக இந்தச் சொத்தினை வாங்க அக்ரீமெண்ட் போட்டவருக்கு மேற்படிச் சொத்தினை வாங்க முழு உரிமையும் உண்டு.

* * *

Sunday, July 31, 2011

ஜிமெயில் ஹேக்கிங் தடுத்தது எப்படி?

மூன்று நாட்களுக்கு முன்பு, அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் மெயில் செக் செய்து கொண்டிருந்த போது, எனது மிக முக்கிய பெர்சனல் ஜிமெயில் ஐடி  ராலோ ஹேக்கிங் செய்யப்பட முயற்சிக்கப்பட்டதைக் கண்டு பிடித்தேன். ஏற்கனவே எனது மொபைல் எண்ணை ஜிமெயில் அக்கவுண்ட்டுடன் இணைத்திருப்பதால் வெரிபிகேஷன் கோடு எனக்கு வர, அலர்ட் ஆனேன். தொடர்ந்து ஸ்டெப் 2 வெரிபிகேஷன் ஆக்டிவேட் செய்து, ஒவ்வொரு தடவை ஜிமெயில் அக்கவுன்ட் உள்ளே செல்லும் போது, வெரிபிகேஷன் கோடு வந்த பிறகுதான் ஆக்சஸ் கிடைத்தது. கேள்விகள் அனைத்தையும் மாற்றி ஓரளவிற்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறேன்.

பெரும்பாலும் எனக்கு வரக்கூடிய மெயில்களை அவுட்லுக்கின் மூலம் கணிணிக்கு இறக்கி விடுவேன். அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா? ஜிமெயில் அக்கவுண்டுகளை நான் ஒரு கேட்வே ஆகத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதையும் ஹேக்கிங் செய்ய முயற்சிக்கின்றார்கள். ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது மொபைலை அக்கவுண்டுடன் இணைத்து விடுங்கள். 

ஸ்டெப் 2 வெரிபிகேசன் ஆப்சனை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே இருக்கும் இணைப்பில் கண்டுகொள்ளுங்கள்.


Friday, July 29, 2011

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 1


எல்லாத் தொழிலையும் எல்லோராலும் செய்து விட முடியாது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்ட சம்பவம்தான் கீழே நாம் பார்க்க இருப்பது. எவ்வளவுதான் புத்திசாலியாக, திறமைசாலியாக இருந்தாலும், இந்தியாவில் சிலரின் துணையில்லாமல் எந்த ஒரு பெரும் தொழிலையும் அவ்வளவு எளிதில் நடத்தி விட முடியவே முடியாது என்பதை கண் கூடாக கண்டு கொண்டேன்.  பிசினஸ்ஸில் மாரல் எதிக்ஸ் எதுவும் கிடையவே கிடையாது. உடனடி லாபம் என்ன? என்பதுதான் பிசினஸ்ஸின் தாரக மந்திரமாய் சிலர் வைத்திருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் எனக்கு கிட்டத்தட்ட 10,000க்கும் மேலான டிரேடிங் ஏஜெண்டுகள் தொடர்பில் இருந்தார்கள். தற்போதும் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்திய இரும்புத்தாது சரியான பீக்கில் விலை போனது. அப்போது சில டிரேடிங் ஏஜெண்டுகள் மூலம் சைனாவில் பெரிய கம்பெனியிடமிருந்து 1 லட்சம் டன் மாதம் சப்ளைக்கு ஆர்டர் எடுத்து, அதைப் பெரிய கம்பெனிக்கு விலை பேசி, கமிஷன் பேசி, அக்ரீமென்ட் போட்டு, வங்கி மூலம் எண்டார்ஸ்டு செய்து லெட்டர் ஆஃப் கிரடிட்டும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இரண்டு பர்செண்டேஜ்ஜுக்கு சப்ளையரிடமிருந்து கேரண்டியும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இது ஏன் என்றால் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரின் விலைக்கு வங்கியிலிருந்து பணவோலைக் கொடுத்து விட்டார். ஏற்றுமதியாளர் சொன்னபடி, சொன்ன தேதியில், சரியான பொருளை அனுப்பவில்லை என்றால் சரக்கின் மொத்த விலைக்கு இரண்டு பர்சண்டேஜ் பெனால்டியை ஏற்றுமதியாளர் வங்கி, இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைத்து விடும்.இது இருவருக்கும் தொழில் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு அக்ரீமெண்ட்.



மாதா மாதம் எனக்கு கமிஷனாக 45 லட்சம் வங்கியிலிருந்து எனது அக்கவுண்டிற்கு வரும்படியான ஒரு வருட அக்ரீமெண்டினையும் போட்டு ஒரிஜினலும் வந்து சேர்ந்து விட்டது. அதை எனது வங்கியில் கொண்டு போய் கொடுத்ததும் வங்கி மேனேஜர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் விட்டார். மாதம் 45 லட்சம் என்று ஒரு வருடத்திற்கு கமிஷன் தர இறக்குமதியாளரும், ஏற்றுமதியாளரும் ஒப்புக்கொண்டு, அதை அவர்களின் வங்கி மூலம் சான்றும் பெற்று என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். மேனேஜருக்கு இதயம் வெடிக்காமல் இருந்ததே பெரிய சம்பவம்.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. கப்பல்துறைமுகத்தில் இருக்கும் யார்டில் சரக்கு சேர்ந்து கொண்டிருந்தது. தினம் தோறும் எனக்கு ஃபாக்ஸ் வரும். அதை நான் சைனாவிற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். லேப்பில் இருந்து ரேண்டம் டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்து கொண்டிருந்தது. எல்லாம் மிகச் சரியாக போய்க் கொண்டிருந்தது. மொத்தச் சரக்கும் யார்ட்டில் சேர்ந்து விட கப்பல் பெர்த்திங் ஆகும் முன்னே இறக்குமதியாளரிடமிருந்து ஒரு ஃபேக்ஸ் வந்தது.

என்னவென்று பார்த்தால் ஏற்றுமதியாளர் ஆர்டரை கேன்சல் செய்து, இரண்டு பர்சண்டேஜ் பெர்மான்ஸ் பாண்டைக் கிளியர் செய்து விட வங்கிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இறக்குமதியாளர் என்ன நடந்தது என்று தெரியாமல் அலறினார்.

அடித்துப் பிடித்துக் கொண்டு, மும்பைக்குச் சென்றேன். சப்ளையரிடம் விசாரித்தேன். அவர் கூலாக என்னிடம் சொன்னது “ அக்ரீமென்ட் விலையோடு பதினைந்து டாலர் அதிகம் கொடுத்து வேறு ஒருவர் சரக்கினை அப்படியே வாங்கிக் கொண்டார். ஆகையால் 2% பிபிஐக் கிளியர் செய்து விட்டேன். சரக்கு அனுப்பமுடியாது. உங்களுக்கும் கமிஷன் தர இயலாது” என்று மறுத்து விட்டார். மேட்டர் ஓவர். இந்தச் சப்ளையர் மீது எங்கும் ஏதும் நடவடிக்கை கூட எடுக்க இயலாது. ஏனென்றால் அக்ரீமென்ட் படி சரக்கினை அனுப்பவில்லை என்றால் 2% பிபி கிளியர் ஆகி விடும். அதையும் சப்ளையர் செய்து விட்டார். கிட்டத்தட்ட 15 டாலரில் இரண்டு டாலரை பெனால்டியாக கட்டி விட்டு,  டன் ஒன்றிற்கு 13 டாலரை குவித்து விட்டார்.

மும்பையிலிருக்கும் இறக்குமதியாளரின் அலுவலகத்தில் தனியொருவனாக அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். ” தங்கம், இது பிசினஸ். காசுதான் இங்கே பேசும். மாரல் எதிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால் நான் பிழைக்க முடியாது. எவனோ ஒருவன் கோடி கோடியாய் சம்பாதிக்க, நான் ஏன் எனக்கு வரும் லாபத்தை இழக்க வேண்டும்? சைனாக்காரன் சம்பாதித்தால் எனக்கா கொடுத்து விடப்போகிறான். அக்ரிமெண்ட் படி நான் தான் 2% பெனால்டி கட்டி விட்டேனே? வேண்டுமென்றால் உங்களுக்கு  செலவு தொகையாக பத்தாயிரம் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னார்.

அவரிடம் நான் என்ன பேச முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். எனது வாழ்வில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியான சம்பவம் இது.

அன்றைக்கு நான் பிசினஸ் என்றால் என்ன என்பதை ஓரளவு கற்றுக் கொண்டேன். இந்தக் கம்பெனி மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சள் நோட்டீஸ் விட்டது. இன்றைக்கு காணாமலே போய் விட்டது அந்தக் கம்பெனி.

அடுத்ததாக ஒரு இரும்புத்தாது சுரங்கத்தையே மூட வேண்டி வந்த கதையைச் சொல்கிறேன்.அதற்கடுத்து தமிழகத்தில் மிகப் பெரிய நிறுவனத்திற்கு எதிராய் ஏலத்தில் ஜெயித்தும், உயிர் பயத்தால் ஏலத்திலிருந்து வாலண்டிரியாக வெளியேறிய சம்பவம் ஒன்றினையும் எழுத இருக்கிறேன்.

* * *

Tuesday, July 26, 2011

இன்ஸ்டண்ட் லெமன் ஊறுகாய் - பேச்சிலர் ஸ்பெஷல்

கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அவ்வப்போது பொருட்கள் வாங்குவதற்காக செல்வதுண்டு. மனைவியை கொண்டு போய் விட்டு விட்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அங்கே “ஙே” என்று அங்குமிங்குமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். (வேறு வழி!). வாங்குவது என்னவோ குறைவுதான். ஆனால் அதற்கான நேரம் தான் அதிகம். ஒரு பிரட் பாக்கெட் வாங்கி விட்டு கிட்டத்தட்ட 30 நிமிடம் பில்லிங் போட நின்று கொண்டிருந்தார் மனைவி.

அப்படி நின்று கொண்டிருக்கையில் பழக்கமானார் ஒரு ஸ்வீட் மாஸ்டர். ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எதேச்சையாக இன்ஸ்டண்ட் ஊறுகாய் போடுவது எப்படி என்பதைச் சொன்னார். அச்சரம் பிசகாமல் கேட்டுக் கொண்டு, அன்றைக்கே மனைவியிடம் சொல்லி செய்யச் சொன்னேன். படு ரகளையாய் வந்திருந்தது. அதுதான் இங்கே உங்களுக்காக.

  1. இரண்டு எலுமிச்சை பழம்
  2. ஒரு ஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள்
  3. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு ஸ்பூன் உப்பு
  5. இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. ஒரு ஸ்பூன் கடுகு
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை


எலுமிச்சையை நன்கு கழுவி, துடைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய துண்டுகளாய் நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி விடும். நன்றாக வெந்த பிறகு எடுத்து சூடு ஆறிய பிறகு மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கரண்டியால கிளறி வைத்துக் கொண்டு, மீண்டும் அடுப்பில் எண்ணெய்ச் சட்டி வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து அத்துடன் மேற்கண்ட கலவையைக் கொட்டி, கிளறி சூடு ஏறிய பிறகு எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து, மேற்படி கலவையைக் கொட்டி கிளறியவுடனே வரக்கூடிய வாசம் சும்மா ஜிகுஜிகுன்னு ஜொள்ளைக் கிளப்பும்.

இதே போல மாங்காய், மா இஞ்சி போன்றவற்றிலும் செய்யலாம். கை படாமல் எடுத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் தாங்கும். 

கோபமாய் இருக்கும் மனைவியை அசத்த முயல்பவர்கள் மேற்படி ஊறுகாய் சமாச்சாரத்தைப் பயன்படுத்துங்கள். காதலில் இருப்போர் இக்குறிப்பைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்திற்கு உதவும். பெண்களுக்கு இக்குறிப்பு தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்குத்தான் திருமணத்திற்குப் பிறகு ஒரு அடிமை கிடைத்து விடுவானே. பின் என்ன கவலை ?



Monday, July 25, 2011

ஸ்லோ பாஸ்சன் - பிராய்லர் கோழிக்கறி



செட்டி நாடு சிக்கன் 


செட்டிநாடு பெப்பர் சிக்கன்







நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகையினால் நானும் மகளும் சாந்தி கியர் குழந்தைகள் பார்க்கிற்கு சென்றோம். அம்மு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கு எனது நண்பர் வந்தார். கோழிக்கறி பிசினஸ் செய்து வருகிறார். பண்ணையில் இருந்து கோழிகளை வாங்கி, கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். 

”வீட்டுக்குப் போகும் போது கோழிக்கறி அரைகிலோ வாங்கனும்” என்றேன்.

”யாருக்கு? அம்முக்கா? “ என்றார்.

“ஆமாம்... !”

“வேண்டாம்.. வேண்டாம் “ என்று அலறினார்.

வாயைக் கிளறினேன். கொட்டினார். இதோ பதிவாய் உங்களுக்காக.

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறதாம். விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறதாம். வாக்சின் போடப்படுகிறதாம். நோய் வராமல் தடுக்க மருந்து அடிக்கப்படுகிறதாம். சில கெமிக்கல்ஸ் வேலை செய்யவில்லை என்றால் கோழியின் குடலுக்குள் புழுக்கள் உருவாகி விடுமாம். கிட்டத்தட்ட ஒரு கோழியில் 600 கிராம் கெமிக்கல்ஸ் இருக்குமாம். அதுமட்டுமல்ல பல ஹோட்டல்களில் செத்து போன கோழியைத்தான் வாங்குவார்களாம். பெரிய ஹோட்டலுக்கு மரபணு பிரச்சினை,ஊனமுற்ற கோழிகள் கறியாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறதாம். 

அதுமட்டுமா, முட்டைக்கோழிகளுக்கு முட்டை போட பலவித வளர்ச்சியை ஊக்குவிக்கும் கெமிக்கல்ஸ் கொடுக்கப்படுகிறதாம். நாட்டுக்கோழி என்ற போர்வையில் தற்போது அந்தக் கோழிகளுக்கு கெமிக்கல்ஸ் கலந்த உணவுப் பொருட்கள் கொடுத்து, கடைகளுக்கு கொண்டு வருகின்றார்களாம்.

எனக்கு கிர்ரடித்துப் போய் விட்டது. கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் எவரும் சிக்கனை முகர்ந்துகூட பார்க்கமாட்டார்கள் என்றார். 

ஆட்டுக்கறியில் என்னென்ன கலக்கின்றார்களோ தெரியவில்லை.

பார்க்கிலிருந்து வரும் போது, பாப்கார்ன் ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்தேன். வரும் போது ”அம்மா கோழிக்கறி வாங்கச் சொன்னாங்களே அப்பா” என்று கேட்டுக் கொண்டே வந்தது அம்மு.

பிள்ளைக்கு விஷத்தையா வாங்கிக் கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள். நான் செய்தது சரிதானே ?

* * *



பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கன்சல்டேஷன் பகுதி இரண்டு


டீலரிடமிருந்து வரக்கூடிய சரக்குகளைக் கையாளும் இடத்திற்கு விடிகாலையில் சென்று விட்டேன். அங்கு சேர்மனின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் மேற்பார்வையில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அந்தக் குறிப்பிட்ட டீலரிடமிருந்து சரக்குகள் வந்திருக்கின்றனவா என்று பார்வையிட்ட போது ஒன்றையும் காணவில்லை. பார்கோடிங் எப்படி அடிக்கப்படுகிறது, விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, எத்தனை பர்சண்டேஜ் (ரகசியம் !!!!) கிடைக்கும் என்றெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டு, நானும் அவரும் ஹோட்டலுக்குத் திரும்பி விட்டோம்.

அன்றைக்கு அதன்பிறகு வேலை இல்லை. சேர்மனிடம் சொல்லி விட்டு, பர்சனல் வேலையாக வெளியில் சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலையில் சேர்மனின் அறையில் அமர்ந்து கொண்டு, அன்று வந்த சரக்குகள் லிஸ்ட்டினை ஸ்டோர் திறக்கும் முன்பே எடுத்து பார்வையிட்டபோது, குறிப்பிட்ட டீலரிடமிருந்து பில் ஒன்று வந்திருந்தது. 100 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் அன்று ஸ்டோருக்கு அனுப்பி இருந்ததாக பில் சொல்லியது.உடனே ஸ்டாக் வைத்திருந்த இடத்திற்கு நானும் சேர்மனும் சென்றோம். அங்குக் குறிப்பிட்ட அந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களின் எண்ணிக்கையை செக்கிங் செய்த போது, 20 பாட்டில்கள் குறைந்திருந்தன. சேர்மனின் முகம் அஷ்டகோணலாகியது. 

நான் வந்த வேலை முடிந்து விட்டதாக சேர்மன் சொல்ல, ”10% முடிந்திருக்கிறது” என்றேன். இதயத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியாய் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். பிரஷர் அதிகமாகி விட்டது. அவரை அப்படியே வெளியில் கொண்டு வந்து, அவரின் தனிப்பட்ட ஹெஸ்ட் ஹவுசிற்குள் வந்து விட்டோம். வரும் வரையிலும் “அவனா இப்படி????” என்றுச் சொல்லிக் கொண்டே வந்தார். 

நாங்கள் செக்கிங் செய்த போது, அந்த உறவினர் வேறு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.

“தங்கம், மீதி 90% என்ன?”

“அவசரப்படாதீர்கள். இன்னும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் “

“சரி மெதுவாகச் செய்யுங்கள், யாரிடமும் சொல்லி விட வேண்டாம்”

“ நான் உங்களுக்காக வந்திருக்கிறேன்” என்றுச் சொல்லி சிரித்தேன். அன்று இருவரும் வெளியில் சென்று விட்டு, மாலையில் ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

மறு நாள் காலையில் சாஃப்ட்வேர் செக்‌ஷனுக்குள் நுழைந்தேன்.

ஸ்டாக் எவ்வளவு இருக்கிறது என்பதை பில்லிங்க் போடும்போதே தெரியும் படி ஏன் சாஃப்ட்வேர் உருவாக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்ட போது, சாஃப்ட்வேர் ஆள் நடு நடுங்க ஆரம்பித்தார். 

“அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சார், உடனடியாக மாடிஃபிகேஷன் செய்தால் போதுமானது, உங்களுக்கு தரக்கூடிய சாஃப்ட்வேரில் இணைத்து விடுகிறோம்” என்றார்.

“ஓகே, அப்படியே செய்து விடுங்கள்” என்றுச் சொல்லி மேலும் சாஃப்ட்வேரில் இருக்கும் குறைபாடுகளை பார்வையிட ஆரம்பித்தேன்.

மிகவும் திட்டமிட்டு, யாருக்கும் தெரியாத வண்ணம் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்தது. மேற்பார்வைக்கு எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு ஆஃப்சனை வைத்து, அட்ஜஸ்ட் செய்யும் படியான முறையில் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்ததை எளிதில் கண்டுபிடித்தேன்.

அதாவது டீலர்களிடமிருந்து வரக்கூடிய சரக்குகள் அக்கவுண்ட் செக்‌ஷனுக்குச் செல்லும் போது பில்லின் படியே சென்று சேரும். அதன்படியே டீலருக்கான பணம் செலுத்தப்பட்டு விடும். ஆனால் சரக்குகள் விற்ற பின்னர் அனைத்தும் மாற்றப்படும். எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.

அங்குமட்டுமல்லாமல் காய்கறியை மொத்தமாக வாங்கும் போது மிக அதிக சரக்குகள் வாங்கப்பட்டதாகச் சொல்லப்படும். ஆனால் உண்மையில் வந்தது கொஞ்சம் மட்டுமே. அதே போல முந்திரி வகையறாக்கள். இதே போல இன்னும் வெளியில் சொல்ல முடியாதவாறு திருட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்தத் திருட்டினை ஒரு சாதாரண ஆடிட்டர் கண்டிபிடிக்கலாம். ஆனால் ஏன் செய்யவில்லை? பெரிய லிங்க்ட் நெட்வொர்க் ஆடிட்டர் வரையிலும் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறது. ஆடிட்டர் முதற்கொண்டு அனைவரும் திருடிக் கொண்டிருந்தனர். கொஞ்ச நஞ்சமல்ல. கோடிகளில் கொள்ளை நடந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் இரண்டு சேர்மன்களின் போர்டு மீட்டிங்கில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளையும், களைய வேண்டிய வழிகளையும் தெளிவாக எடுத்துரைத்தேன். கண்கள் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். படிப்படியாக மாற்றப்பட வேண்டியதையும் சொல்லி விட்டு, ஹோட்டலுக்கு வந்து விட்டேன். அன்று இரவு ஏழு மணி அளவில் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது, சேர்மன் எனது ஃபீசைக் கொண்டு வந்து கொடுத்தார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்ந்தது பற்றிய பிளாஷ் நியூஸ் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.



* * *
இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். அன்றைக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு என்பது அதிகமாக இல்லை. காரணம் விலை. சாஃப்ட்வேர்கள் எல்லாம் மிக அதிக விலையாக இருந்தன. டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருந்த சமயம்.  அதனால் தான் இத்தகைய திருட்டுகளை நடத்த முடிந்தது. 

இன்றைக்கும் கூட, இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்டோர் ஒன்றில் என் கண் முன்னே ஸ்டோரின் மேனேஜர் ஒருவர் திருட்டுப் பிளானை செய்து கொண்டிருந்தார். 

படித்தவர்கள் தான் இன்றைக்கு பெரிய திருட்டுக்களைச் செய்து வருகிறார்கள்.படிக்காதவர்கள் ஐந்துக்கும் பத்துக்கும் திருட்டு வேலையைச் செய்து வருகிறார்கள்.ஏன் இந்த நிலைமை வந்தது? அதற்கும் இந்த கோடீஸ்வர முதலாளிகளே காரணம். மெட்டீரியலைஸ்டு வாழ்க்கையை மிகச் சிறந்த ஒன்றாக மக்களின் மூளைகளில் மீடியாக்கள் மூலம் பதிவு செய்கிறார்கள். அதனால் அதிகம் சம்பாதிக்க இயலாதவர்கள் திருட முற்படுகின்றார்கள்.

சும்மா இருப்பதற்காக கார்பொரேட் சாமியார்களிடம் சம்பாதிக்கும் சொத்துக்களை கொடுத்து பயிற்சி பெற வேண்டிய அவல நிலையில் மானிடம் இருக்கிறது. 

* * *