குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, December 23, 2022

100 ரூ கடன் கடனாளி பிரச்சினை 100000 கடன் வங்கிப் பிரச்சினை - வங்கி ஊழல்கள்

நீங்கள் வங்கிக்கு $100 கடன்பட்டால் அது உங்கள் பிரச்சனை, நீங்கள் வங்கிக்கு $100 மில்லியன் கடன்பட்டிருந்தால், அது வங்கியின் பிரச்சனை என்கிற பழமொழி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கடனைக் கட்டாதவன் நிலை என்னவென்று நினைத்துப் பாருங்கள். இதே போல 10000 கோடி கடன் வாங்கியன் எவ்வளவு சொகுசாய் இருக்கிறான் என்பதையும் கவனியுங்கள்.

சில்லறைக் கடன் வாங்குபவர்கள் கார் அல்லது வாகனக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற வங்கிகள் கடனாளியின் கதவைத் தட்டும். மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்தி கடனை வசூலிக்க அவமானப்படுத்தும் தந்திரங்களைக் கூடச் செய்கிறார்கள். வங்கிகளின் இந்த செயல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை செய்கின்றன மற்றும் கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்துகிறார். கடன் வாங்கினால் கட்டு, இல்லையெனில் இப்படித்தான் செய்வோம் என்று மிரட்டுவார்கள்.

ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் என வரும்போது இது முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாகும். சக்தி வாய்ந்த கடன் பெற்றவர்களிடம் மேலே சொன்ன வழிகளை வங்கிகள் கையாளுவதில்லை. இந்தக் கடனாளிகளைக் காப்பாற்ற கோர்ட், கோர்ட் என வழக்குகள் போடும் வக்கீல்கள் திருட்டு வேலை செய்கிறார்கள். இவர்களிடம் வங்கிகள் அடங்கிப் போய், இறுதியில் பல ஆண்டுகால கடனுக்காக சிறிய அளவில் கடனை மீட்கின்றன. கோவையில் 420 கோடி கடன் கொடுத்த கனரா வங்கி, சுமார் 52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ஐந்து கோடிக்கு ஏலம் விட்டது. கனரா வங்கி ஏன் 51 கோடி ரூபாய் சொத்துக்களை ஐந்து கோடிக்கு ஏலம் விட்டது? யாருக்கேனும் தெரியுமா? ஊழல் ஊழல் ஊழல்.

கடன் வாங்கி விட்டு, திருப்பிக் கட்டாமல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியான மெஹுல் சோக்சியால் விளம்பரப்படுத்தப்பட்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் ரூ.7,848 கோடியுடன் முதலிடத்திலும், ரூ.5,879 கோடி அம்பலப்படுத்திய எரா இன்ஃப்ரா இரண்டாவது இடத்திலும், ரூ.4,803 கோடி மதிப்பிலான கடனைத் திருப்பிச் செலுத்தாத ரெய் அக்ரோ நிறுவனமும் உள்ளன.

இப்போது ஆன்டிகுவான் குடிமகனாகக் கூறப்படும் சோக்ஸி, இந்தியச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். அரசாங்கமும் அதன் பல சட்ட அமலாக்க அமைப்புகளும் இதுவரை, வங்கியில் கடன் செலுத்தாத முன்னாள் மதுபான வியாபாரி விஜய் மல்லையா, வின்சம் டயமண்ட்ஸ் & ஜூவல்லரி விளம்பரதாரர் ஜதின் மேத்தா மற்றும் சோக்சியின் மருமகன் நீரவ் மோடி உட்பட பலர் மீது பாராமுகவே இருக்கின்றன. 

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த ரூ.10 லட்சம் கோடி கடனில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானது.

மொத்தக் கடன் தள்ளுபடியில், வங்கிகளால் திரும்பப் பெற முடிந்தது - சுமார் ஒரு லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.9 லட்சம் கோடி போனது போலவே உள்ளது, இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக மீட்பு செயல்முறை எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

https://www.moneycontrol.com/news/business/new-rbi-data-shows-wilful-defaulters-are-laughing-all-the-way-away-from-banks-9731631.html


The numbers game

Ugly numbers are already popping up. The Reserve Bank of India data, shared with Parliament, on December 19 shows that the country’s top 50 "wilful defaulters" owed Rs 92,570 crore to Indian banks as of March 31, 2022.

It’s our money

Every rupee that a bank writes off has to be provided for—called provisioning in the bankspeak.

Banks' profitability thus takes a hit. Who are the real losers? Common shareholders and depositors. Banks are supposed to be the guardians of public money. They raise deposits from small and big depositors and use these to lend to businesses.

So whenever a loan is not repaid, it’s the shareholder of the banks (value erosion) and the depositors (as the bank turns weaker in terms of capital and profitability) who suffer.

The government has, time and again, reiterated its intent to clamp down on wilful defaulters.

Coordinated action by the government, RBI and other sector regulators is critical to tackling wilful defaulters as seen in the Kingfisher case.

Banks are sitting ducks for cronies and crooks. In most cases, banks haven’t made meaningful progress in the recovery from deep-pocketed and well-connected promoters. At the end of a long legal process, the value of underlying assets deteriorates and banks are left empty-handed.

The government’s intervention to speed up the recovery process is equally critical since each penny it feeds to state-run banks from the exchequer is public money.

A lot of ground needs to be covered and quickly, as the loan write-off and wilful defaulter numbers show. Do the government and the RBI have the will to clamp down on wilful defaulters?

Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Tuesday, December 13, 2022

நிலம் (103) - புதுச்சேரி மாமல்லபுரம் விரைவுசாலைக்காக 22 கிராமங்களின் நிலமெடுப்பு விபரம்

அன்பு நண்பர்களே,

சென்னை அருகில் புதுச்சேரி - மாமல்லபுரம் விரைவுச்சாலை அகலப்படுத்துதலுக்காக இருபத்திரண்டு கிராமங்களில் நிலமெடுக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கும், அப்பகுதியில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் செய்திதாளில் வந்த நிலமெடுப்பு விவரங்களைப் பதிவிட்டு இருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. அதுபற்றிய விபரங்களையும், சட்டங்களையும் நன்கு படித்து விட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டின் போது துல்லியமாக கணக்கிட்டு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்தக் கிராமங்களில் இருக்கும் சர்வே நம்பர்களில் உள்ள நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அரசு பழைய பட்டாக்களின் படி நிலமெடுப்பதற்கான அறிவிப்பாணையை அனுப்பும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்.





Monday, December 12, 2022

நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு

யாரோ ஒருவர் தன் நலத்துக்காகச் செய்யும் செயல், ஏதோ ஒரு குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு சரியில்லை எனில் ஒரு நபர் மட்டும் பாதிப்பதில்லை - குடும்பமே பாதிப்படைந்து சீரழிந்து விடும். கோர்ட்டை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு சாமானியன் ஒருவனின் சொத்தினை எளிதில் திருடி விடலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் - சொத்துரிமை சட்டங்கள் அவ்வளவு குழப்பமானவை. அதுமட்டுமின்றி நயவஞ்சக முறையில், நரித்தனமான வக்கீல் ஒருவரின் வாதத்தால் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்படும் பல்வேறு சம்பவங்களை நாமெல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அனுபோகப் பாத்தியம் என்றொரு விதி உள்ளது அல்லவா? இது சட்டம் எனில் அதுவே அறமாகும் அல்லவா? 

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, எனது இந்தக் கேள்விக்குப் பதிலை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். 

இன்றைக்கு உத்திரப்பிரதேசத்தில் ராமருக்கு கோவில் கட்டும் இடத்தின் 800 ஆண்டுகால உரிமை மசூதிக்கு இருக்கிறது அல்லவா? 800 ஆண்டுகால மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. இது சரியா? அவ்வளவுதான் என் கேள்வி. இந்தக் கேள்விக்கு சார்பற்ற நிலையில் இருந்து சட்டமே மேல் என்ற அறிவின் மூலம் பதிலைத் தேடிப்பாருங்கள்.

எனக்கு மதம், மொழி, இனம் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இல்லை. ஏனென்றால் என் பிறப்புக்கு முன்பே மனிதர்கள் இவைகளுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். அந்த வகையில் நானொரு அடிமை வம்சத்தில் பிறந்தவனே. மதமும், மொழியும், இனமும் மனிதர்களை அடிமைப்படுத்தும் மாய வலை என்பதை புரிதல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்போது திருட்டுக்கு வரலாம்.

சமீபத்தில் என்னிடம் சொத்துரிமை ஆய்வுக்கு வந்த ஆவணங்களில் இருந்த அட்ஜுடிகேசன் ஆவணத்தைப் பார்த்த போது - அதன் தன்மை எனக்கு சரியாகப்படவில்லை. வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தன் சொத்தினை விற்பதற்கு எழுதிக் கொடுக்கும் பொது அதிகார முகவர் பத்திரத்தினை, பதிவு அலுவலகத்தின் அட்ஜுடிகேசன் செய்து பதிவு செய்வர். 

சந்தேகம் வந்து விட்டால் எனக்குத் தூக்கம் வராது. இந்த நிலத்தை வாங்குபவரிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இடத்தின் லொகேசன் கேட்டேன். அனுப்பி வைத்தார். மறுநாள் சென்று விட்டேன்.  எனது வழியில் விசாரித்து அந்த நில உரிமையாளரைப் பிடித்தேன். 

நிலம் விற்பனை செய்வதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆரம்பித்த போது, அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்தேன். புரபைலில் அவரின் போட்டோ பார்த்து அதிர்ந்தேன். இந்தப் போட்டோவில் இருந்ததும், புரபைல் போட்டோவும் வேறு. 

முற்றிலும் போகசாக தயாரிக்கப்பட்ட அட்ஜுடிகேசன் பத்திரம் அது. அதுமட்டுமல்ல இரண்டு பத்திரங்கள் ஆனவுடன், அந்த இடத்தில் வெளி நாட்டு நபரின் பெயரும், போலிப்பத்திரங்கள் செய்தவர்களின் பெயரும் கூட்டாக இருக்கின்றன. ஆன்லைனில் பார்க்கும் போது நம் பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

சம்பவத்தை எழுதி விட்டேன். 

இந்தச் சொத்தினை வாங்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். ஏன் என்று கேட்டார் வாடிக்கையாளர் - மோசடிப்பத்திரங்கள் என்று மட்டும் சொல்லி விட்டேன். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

ஆகவே, வெளி நாடு வாழ் தமிழர்களே, உங்கள் சொத்துக்கள் மீது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

* * *

உங்கள் மனதில் சஞ்சலமா? துன்பத்தில் இருக்கின்றீர்களா? எதைச் செய்தாலும் முடிவு தவறாகவே இருக்கிறதா? 

எனது வாழ்க்கையில் நான் பெற்ற துன்பங்கள் - அதில் நான் பெற்ற வெற்றிகள் பற்றிய அனுபங்களைச் சுவாரசியமாக எழுதி அமேசான் கிண்டிலிலும், டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டும் தோழனாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.

. டிஜிட்டல் புத்தகம் விலை ரூ.120/- விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.



Sunday, December 11, 2022

நாசமாகிக் கொண்டிருக்கும் தமிழினப் பெண்கள்

சமூப் பிராணியான மனிதன், எல்லாமும் நிரந்தரமென்று நினைத்துக் கொண்டு இருக்கிறான். இந்தச் சிந்தனையை ஏற்கலாம். அபாயகரமான போக்கு ஒன்று இப்போது பெண்களிடம் திணிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

நாளைக்கு என்னவோ நடக்கட்டும், இன்றைக்கு நான் சந்தோஷமாக இருக்கணும் என நினைப்பது பேராபத்து.

அதுமட்டுமல்ல நவீன சாமியார்கள் தமிழர்களுக்கு வாழ் - அதை இன்றே என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். கொண்டாட்டமாய் வாழுங்கள் என்கிறார்கள். 

இதைப் போன்ற சாமியார்களுக்கு குடும்பமாய் இருப்பது பிடிக்காது. இது அவர்களின் உளப்பான்மை. ஆனால் வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பேச்சாற்றலால் குடும்ப அமைப்பை நிர்மூலமாக்குவார்கள். அவர்களை ஆசிரத்திற்கு அடிமையாக்குவார்கள். சம்பளமில்லா வேலைக்காரர் ஆக்குவார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் அபத்தம்.  உலகெங்கும் கிளைகளைத் துவக்குவார்கள். இவர்களை நம்பி ஆசிரம அடிமைகளாக மாறும் நபர்கள், தங்களின் வயதான காலத்தில், உதாசீனப்படுத்துவதை அறிவார்கள். உள்ளே வரும் வரை எல்லாம் கிடைக்கும், வந்த பிறகு எதுவும் கிடைக்காது. இந்த நயவஞ்சக வேலையைக் காலம் கடந்த பின்னர் தான் அறிவர். 

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எனக்கு அனுபவம் இருக்கிறது. அதைப் படிக்க எனது ”கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகத்தை அமேஷானில் வாங்கிப் படித்துப் பாருங்கள். அதிரும் ஆசிரம உண்மைகளை பகிர்ந்து உள்ளேன்.


(அமேசான் கிண்டிலில் படிக்கலாம் - இந்த புத்தகம் உங்களுக்கான வழிகாட்டி)

குடும்பம் சிதைந்தால் குதூகலம். பெண்ணுரிமைப் பேசித் திரியும் பல ஈத்தரைகள் - ஆணாதிக்கம் பற்றிப் பேசுவார்கள். ஆணாதிக்கம் என்பது கொடும் சிறை என்பது போல பேசி மதி மயக்குவார்கள். அவ்வாறு பேசும் ஆண்களின் குறி பெண்ணுடல். குடும்பத்தோடு இருந்தால் முடியாது, தனியால் இருந்தால் ஈசியா மடியும்.

பெண்களுக்கு இண்டிபெண்டன்ஸ் என்ற வாழ்வியல் முறை பல வழிகளில் புகுத்தப்படுகிறது. அவர்கள் அதை நம்புகிறார்கள். விளைவு இண்டிபெண்டட் மதர் என்றொரு கேட்டகரியில் நுழைகிறார்கள். இந்த இண்டிபெண்டட் முறையினால் பெண்கள் செய்யும் சேட்டைகள் பற்றிய ஒரு பதிவு வாட்சப்பில் பகிரப்பட்டது. அதை அப்படியே தருகிறேன். எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றிகள். அதிர வைக்கும் பெண்களின் மன நிலையினால் அவஸ்தைப் பட போவது அவர்களே என்பதை அறியாமல் தமிழினப் பெண்கள் தன் நிலையை மறந்து போயினர். பரிதாபத்துக்குரியவர்களாகப் பெண்கள் மாறிய கொடுமையைப் படியுங்கள் கீழே.

* * * 

பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவப் பதிவு. 

கோவையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி.

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார். 

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா.

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது.

போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.

ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா.

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம் என்றார்கள் அந்தப் பெற்றோர்.

அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்.

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. 

அதுக்கு அந்தப் பையன் குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்னு சொல்லி இருக்கான். 

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்கன்னு சொல்ல வேண்டியது தானே. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான். இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு பேசறான். சமைக்கணுமாம். காஃபி போடணுமாம்னா, பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்கறா. 

அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா படுது என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா.

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை.

என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். யார்கூட போனேன்னு கேட்டான். 

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே. ஐ வாண்ட் மை ஸ்பேஸ். 

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல. இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்". நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை என்றாள் ஒரு பெண். 

அவளும் 30 வயதை நெருங்குகிறாள். ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது. எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா என்றார்கள்.

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள். எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். 

அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது. இதைச் சொல்லிடுங்க முதல்ல என்றார்கள்.

எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது என்று சொல்லும் பெற்றோர்.

எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. 

அவங்க விளக்கு கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் மூட் அவுட் ஆயிடுவா என்று தகவல் தரும் பெற்றோர்.

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால் கூட, பையன் வீட்டினர் தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு, வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள். 

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா. சண்டேதான் பேசணும். சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா. அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். 

இன்னும் சிலர், நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது.

இவர்தான் இனி நம் வாழ்க்கை. என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான் என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன் என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன். அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு. என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும் என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக் கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க  கூடாது என்று நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண். அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது.

ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே. கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,

இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை. ஒரு சில பர்சன்டேஜ்தான்.
இன்றைய பெண்களிடம் இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும் என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார். நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால்

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா.

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60+ வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,

தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்.

* * *
குறிப்பு : தமிழினப் பெண்களின் இந்த மன நிலையால் - தமிழர்களின் குடும்ப அமைப்புச் சிதைக்கப்பட்டு விட்டால் முடிவில் தமிழர்களின் வாழ்வியலையும் மொத்தமாக அழித்து விடலாம் என்றொரு சிந்தனை செய்யும் சதிகாரர்கள் தான் இத்தகைய வாழ்வியலுக்குப் பெண்களை பல வழிகளில் பேசியும், எழுதியும் ஈர்க்கிறார்கள் என்றொரு பேச்சு உலா வருகிறது.

Wednesday, December 7, 2022

200 கோடி வரிபாக்கி - விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை இல்லை ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவும் ஆன புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஒருவரே சாட்சி. இதற்கு பத்திரிக்கைச் செய்திகளே சாட்சி.

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2011ம் வருடத்திலிருந்து 2019ம் வருடம் வரை அவரின் வருமானத்தைக் கணக்கிட்டு வருமான வரித்துரை 206 கோடி ரூபாய் வரி விதித்தது. கவனிக்க 206 கோடி வரி என்றால் வருமானம் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

03.12.2022ம் தேதியன்று தினத்தந்தியில் வெளியான செய்தியை அப்படியே தருகிறேன். படித்துப் பார்க்கவும்.

தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது. 

வங்கி கணக்குகள் முடக்கம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின்படி, 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை நிர்ணயம் செய்து, அவருக்கு ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தாததால், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கிற்கு வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல் செய்தது. 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- குவாரி வருமானம் மறைப்பு விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அவருடைய குவாரியில் 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. இந்த விவரங்களை விஜயபாஸ்கர் மறைத்துள்ளார். 

இதுதவிர சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்திடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 பெற்றுள்ளார். 

குட்கா பணம் இதே காலகட்டத்தில் பான் மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் பெற்றுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான வாடகை கட்டணமாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார். 

அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்ட தொகை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையுடன் சேர்த்து விஜயபாஸ்கரிடம் ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ரூ.339 கோடி விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இதன்காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42 கோடி வரிபாக்கிக்காகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

இணைப்பு:

சரி, குட்காவில் ஊழல், குவாரியில் ஊழல், ஓட்டுக்கு லஞ்சப் பணம் என பல்வேறு குற்றங்களைச் செய்த விஜயபாஸ்கரை கைதாவது செய்திருக்கிறார்களா? 

அவர் இன்றும் எம்.எல்.ஏ. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விஜயபாஸ்கரின் காலடியில் கிடக்கிறது. விசாரணை அமைப்புகளும், காவல்துறையும், சி.பி.ஐயும் விஜயபாஸ்கரிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன. இந்திய நீதித்துறையோ வாய்மூடி மவுனமாய் இருக்கிறது.

விஜயபாஸ்கர் இந்தியாவின் முன்மாதிரி அரசியல்வாதியாகத் திகழ்கிறார் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இணையத்தில் இருந்து எப்போதேனும் நீக்கி விட முடியும் என்பதால் ஸ்கீரீன் ஷாட் இத்துடன்.




Wednesday, October 26, 2022

யார் உங்களுக்கு ஓட்டுப் போட்டது? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிறப்பில் குஜராத்தி (கவனிக்க), பிரிட்டனில் செட்டில் ஆன ரிஷி சுனக் திடீரென்று பிரதமரானார். இந்திய சங்கிகள் கொண்டாடி தீர்க்கின்றனர். என்ன காரணம்?

பிராமணரான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகளை இந்த ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார்.

இனி பிரிட்டன் பார்ப்பனியத்தால் ஆக்கிரமிக்கப்படும் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை என்பதை பார்ப்பனிய வரலாறு சொல்கிறது. பொய் எதுவும் இல்லை. 

எகிப்திலிருந்து நாடோடியாக மாடுகள் மேய்க்க வந்தவர்கள் இந்தியாவின் உயர் பதவியில் உட்கார்ந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கு நோக்கினும் பசியும் பட்டினியும் ஏழையுமா பஞ்சைப் பராரியாக இந்தியர்கள் திரிகிறார்கள். 

இதே கதைதான் இனி பிரிட்டனிலும் நடக்கும். பாவம் பிரிட்டிஷ் மக்கள்.

டெய்லி மிரர் பத்திரிக்கை, ‘யார் உங்களுக்கு ஓட்டுப் போட்டது?’ என்று கேள்வி கேட்கிறது. இதோ ஸ்கீரின் ஷாட்.

பிரிட்டனில் திடீரென்று என்ன நடந்தது? இதற்குப் பின்னால் இருக்கும் சதிதான் என்ன? காலம் தான் பதில் சொல்லனும்.

யாரும் ஓட்டுப் போடாமலே பிரிட்டனில் ஒரு பிரதமர்.

 நன்றி : டெய்லி மிரர் பத்திரிக்கை

Sunday, October 23, 2022

அம்மா குட்டியம்மாள் - தீரா வலி - அஞ்சலி

விடிகாலை நான்கு மணி பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கு வரச்சொல்லி அறிவிப்பார்கள். வாசலில் ’வறட் வறட்’ சத்தம் கேட்கும். அரை ஏக்கரில் பரந்து விரிந்த மனை. கல் பாவிய வாசலின் முன்பிருந்து - வீட்டுக்குப் பின்னால் வைக்கோல் போர் இருக்கும் வரை கூட்டிப் பெருக்க வேண்டும். ஈக்கு குச்சி விளக்குமாறால் கூட்டிக் கொண்டிருப்பார்.

கட்டுத்தறியில் மாடுகளின் சாணத்தை அள்ளி குப்பைக் கிடங்கில் போட்டு விட்டு, அவைகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, குடத்தடிக்கு வந்து கைகால் அலம்பி, அடுப்பங்கரைக்குள் நுழைவார். அடுப்பில் சாம்பலை எடுத்து தட்டில் வைத்து விட்டு, சோற்றுப் பானையில் தண்ணீர் வைத்து அடுப்பை மூட்டுவார்.

குடத்தடிக்கு பாத்திரங்களைக் கொண்டு போய், தண்ணீர் தெளித்து விட்டு, அமர்ந்து சாம்பலால் பாத்திரங்களைக் கழுவி, பொக்கையில் நிரம்பி இருக்கும் நீரில் அலசி வீட்டுக்குள் வருவதற்குள், அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும்.

அரிசி களைந்து உலையில் போட்டு, அடுப்பைத் தூண்டி விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று பாலைக் கரந்து வருவார். பாலை இன்னொரு அடிப்பில் காய வைத்து விட்டு, தூரியில் தொங்கிக் கொண்டிருக்கும் மோர் பானையை இறக்கி மத்தை வைத்து கடைந்து வெண்ணெய் எடுப்பார். 

எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஒரு உருண்டை வெண்ணெய். கொஞ்சம் மோர்.

சோறு பதம் பார்த்து விட்டு, கஞ்சி வடிக்க சோற்றுப்பானையை கவிழ்த்து விட்டு,  மீந்த குழம்பினை பால் காய்ந்த அடுப்பில் சுட வைத்து, கஞ்சி வடிந்த பானையை இறக்கு துணியால் சுற்றிலும் துடைத்து, பானை வாயில் சோற்றுப் பருக்கைகளை வழித்து உள்ளே போட்டு, பிருமனை மீது வைப்பார். 

காய்ந்த பாலை உரியில் வைத்து விட்டு, இரவு மீந்த குழம்பினை சூடு செய்வார். காலையில் யாரும் காப்பித்தண்ணி, டீத்தண்ணி குடிப்பதில்லை. தாத்தா மாணிக்கதேவர் கடைத்தெருவுக்கு டீத்தண்ணி குடிக்கச் சென்று விடுவார். மாமா அருணாசலம் அரசு அலுவலராதலால், ஆவணத்தான் குளத்துக்கு குளிக்கச் சென்று விடுவார்.

பெரிய மாமா குழந்தைவேல் விடிகாலையில் வயற்காட்டு உழச் சென்று இருப்பார்.  அவருடன் போஸும், ஜெயராசும் சென்று இருப்பார்கள். 

தவளைப் பானையில் வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு கஞ்சி கலக்கி, பனை ஓலை எடுத்து, வெந்தய மாங்காய், வற்றல்கள், வடகங்கள் எடுத்துக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்குச் தலையில் சும்மாடு கட்டி அதன் மீது சோற்றுத் தவளைப் பானையை வைத்துக் கொண்டு, இடது கையில் கூடையில் கஞ்சிக்கு கடிப்பவைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

* * *


(தோற்றம் 01.04.1939 | மறைவு 04.10.2022)

மூன்று நாட்களுக்கு முன்பே சுவாமியிடமிருந்து தகவல் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் எனக்கு மனச்சோர்வுடன் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டது. பலப்பல எண்ணங்கள் மனதுக்குள். பல்வேறு சிந்தனை ஓட்டங்கள். அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. சின்னக்கா ஜானகியும், மகன் பிரவீனும் தான் ஊரில் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் அம்மா என்ன சாப்பிட்டார்கள் என்று விசாரிப்பது என நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று ஆயுத பூஜை, அக்டோபர் மாதம், நாலாம் தேதி விடிகாலை மூன்றரை மணி. ஊரில் இருந்து பிரவீன் அழைத்தான். 

அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.

கோவையில் ஆறரை மணிக்கு கிளம்பினேன். சரியாக பதினொன்றரை மணிக்கு ஊர் சென்றேன்.

சின்னக்கா சொன்னார்கள்,”நான் சாகப் போறேண்டி, அழாதே” என்றுச் சொல்லி தலையைத் தடவிக் கொடுத்தாராம். தலை சாய்ந்து விட்டது என்று காலைக் கட்டிப்பிடித்து அழுதார்.

அம்மாவின் காலடியில் அமர்ந்தேன். தொண்ணூறு வயது வரை ஓடி ஓடி, நடந்து நடந்து, தேய்ந்த கால்கள் தட்டையாய் கிடந்தன. பேசாமல், இயங்காமல் படுத்திருந்தார். எனக்குள் குருதி கொதித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

நெடுவாசல் கோவிலில் அன்று கொலுவின் இறுதி நாள் என்பதால், இரண்டு மணிக்கு அம்மா தகனம் செய்யப்பட்டார்.

பெற்றெடுத்த தாயின் தலைப்பக்கமாய் எதிரில் திரும்பி நின்று, பின்பக்கமாய் நெருப்பினை அவர் தலைமாட்டின் மீது வைத்தேன். 

’திரும்பிப் பார்க்காமல் போங்க’ என்று வெட்டியான் வேலை செய்து கொண்டிருந்தவர் சொன்னார்.

வீடு திரும்பினேன்.

என்னைப் பெற்றெடுப்பதற்காக, பாழாய் போன சொத்துக்காக, என் பாட்டி சின்னப்பிள்ளையால் அழிக்கப்பட்டவர் என் தாய் குட்டியம்மாள். அம்மாவுக்கு திருமணம் ஆன போது 20 வயது, அப்பாவுக்கு 50 வயது. அந்தக் கால வழக்கமாம்.

பலருக்கு அம்மாக்கள் சந்தோஷ நிகழ்வுகளாய் இருப்பர். 

என்னளவில் தீரா வலியாக அம்மாவின் நினைவுகள் என் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கிறார். 

* * *


அம்மாவின் இறப்புச் செய்தி 11.04.2022ம் தேதியன்று தினந்தந்தியில் வெளியானது

Thursday, September 29, 2022

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற குப்பை - விருது

செருப்புத் தைக்கும் தொழிலாளி - அறுந்து போன செருப்புகளின் பல நல்ல பகுதிகள் கிடைத்தால், அதை வைத்து மற்றொரு செருப்பினைத் தைப்பான். 

வாடிக்கையாளர்களிடம், “குவாலிட்டிங்க - இத போல வேறொன்ன பார்க்க முடியாது” என்பான்.

மர ஆசாரி வெட்டிக் கிடக்கும் மரத்துண்டுகளை வைத்து - ஸ்டூல் ஒன்றினைச் செய்து விடுவான் -”தேக்குங்க - பார்த்துப் பார்த்துச் செய்தேன் - எலும்பு மாதிரி கிடக்கும்” என்பான்.

அழுகிப் போன காய்கறி விற்பவன் கூட - அமேசான் தரம் பக்கத்துல வராதுங்க என்பான்.

மாட்டு மூத்திரம் விற்பவன் - ”இது கிர்ருங்க. சிவபெருமானின் வாகனம் பேஞ்சது. ஆயிரம் பாட்டில் ஆர்டர் இருக்கு. ஆனா பாருங்க, நீங்க வந்துட்டீங்க. எல்லாம் மேலே இருப்பவன் செய்றாங்க. யாருக்கு எது கிடைக்கனும்னு அவனுக்குத்தானே தெரியும். சிவாய நம”

வாங்குகிறவனுக்கு நமஹ - புளகாங்கிதத்தோடு பொண்டாட்டி வாயில ரெண்டு சொட்டு விடுவான் வாடி க் கை ஆளன்.

அவரவர் சரக்குக்கு அவரவர் வியாக்கியானம்.

கேட்கிறவன் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு வலை விரித்தால் ஆயிற்று. 

கேட்பவன் கேனப்பயலா இல்லாமல் விவரமா இருந்துட்டா - வியாபார வியாக்கியானம் - விழலுக்கு இறைத்த நீர்.

மகாபாரதம் ஒரு புராணம் - புராணம் கட்டுக்கதைகளின் தொகுப்பு - அதை எவர் வேண்டுமானாலும் அவரவர் மனக்குப்பைக்குள் கலந்து - பிசைந்து - உருட்டி - ஒட்டி வெளியிடலாம்.

அந்த வகையில் ஜெயமோகனின் மனக்குப்பைக்குள் பிறந்த குப்பை விஷ்ணுபுரம் என்ற மகாபாரதம்.

வெட்கம்-சூடு-சுரனைகளை கோபியர் கொஞ்சுபவனிடம் விட்டாச்சு. மூன்றையும் விடாது தொங்கிக் கொண்டிருந்தால் - நடிகையின் அழுக்குத் தோல் ஸ்பரிசம் கிடைக்குமா? காசு கிடைக்குமா?

இட்லி மாவுக் கடைக்காரன் விட்ட செவுள் கிழியும் அடியில் ஓடோடிப் போயிருக்கும் மூன்றும். 

பேஞ்ச மூத்திரத்தைக் கழுவவில்லை என்றால் நாற்றெமெடுக்கும் உறுப்புகளின் பெயர்களை வைத்து - bondage, discipline, dominance, submission, and sadism  எனப் பின்னால் விடும் நவீனத்துவ குப்பைக் கூடைக்காரனுக்கு - குப்பையின் பெயரில் ஒரு விருது. 

குப்பை தானே இன்னொரு குப்பையை மதிக்கணும். உலக நியதி.

அந்தக் குப்பை இந்தக் குப்பை சொரியறதும், நக்கிறதும், திட்றதும் - அது இதைத் செய்வதும் - இலக்கிய சொறி சிரங்கு சில்லாடிகளின் நெட்டிதங்கள் என படை வீட்டு அம்மன் கணக்காய் தூப தீபம் காட்டி - அருளைப் பெற துடிக்கும் குஞ்சாமணிகள் பராக்கிரமங்கள் ஏகதேசம்.

சொறிந்து விடுவதுதான் இலக்கியம். ஆகவே சொறியும் சொறியும் - தோல் கழண்டு இரத்தம் வரும் வரையில் சொறியும் குஞ்சாமணிகள் ரகளைகளை கண்டு ரசிக்கலாம்.

கிடைக்கவே கிடைக்காத நேரத்தை குப்பையைக் கிளறுவதில் இருக்கிறது இன்பம் என்று நம்புவது அவரவர் ரசனை.

பன்றிக்கு சாக்கடை சொர்க்கம். சோறு கொடுக்கும் வெஸ்ட் மின்ஸ்டர். இங்கே குப்பையைக் கிளறும் ஆட்களுக்கோ? 

ஈ வாய்க்குள் சென்று போடும் ஆய் மிச்சம். 

போங்கடா நீங்களும் உங்க வி ருது களும்.

நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கவனிக்கவும். வி - ருது என்று இளித்துக் கொண்டு ருது அடைந்த ஜில்லா முழுக்க நல்லா காட்டும்  V க்களைத் தேடி ஓடப்போவுது குப்பை. 

Tuesday, September 27, 2022

அதிரும் சென்னை உயர்நீதிமன்ற முறைகேடு - தீர்ப்புகள் திருத்தப்பட்டன - உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சவுக்கு சங்கர் நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்லியதற்காக தண்டிக்கப்பட்டு சிறைவாசம் - ஜனநாயகப் பரிசு. சட்டம் வழங்கிய மேல் முறையீடு வசதியைக் கூட அனுமதிக்கவில்லை நீதிபதிகள். அந்தளவுக்கு நீதிமன்றத்தின் மாண்பு மீது அக்கறை.

நல்லது.

சவுக்குக்கு தண்டனை கொடுத்து இன்றோடு பனிரெண்டு நாட்கள் ஆகி விட்டன. ஒரு சாமனியனுக்கு தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நீதி மறுக்கப்பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியில் கூட சட்டம் சாமனியனுக்கு கிடைக்கும்படி மதிக்கப்பட்டதாம்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்கிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

மதுரைக்கிளை நீதிமன்றம் - வழங்கிய தீர்ப்பினால் நீதிமன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட்டது. மக்கள் நம்பும் நீதிமன்றம் கேலிபடக்கூடாது.

ஒரு சாமானியனின் கருத்துரைக்கு எதிரான இந்த வழக்கின் அதிர வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள் ஒரு பிரச்சினை

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த முறைகேடு. குற்றச் செயல், திருட்டு, ஊழல் இப்படி எந்த வார்த்தைகளாலும் அழைக்கும் தரமுள்ள அக்மார்க் குற்றம்.

இந்தச் செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வெளி வந்ததா என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு எண்: CMP 13117/2002 - CMP :7981/2022. ஒரிஜினல் வழக்கு - O.S.A.No.101/2014. 

இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு 01.09.2022ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பு நீதிமன்றத்தில் 01.09.2022ம் தேதி படிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. தீர்ப்பின் நகல் உயர்நீதிமன்றத்தின் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு விட்டது. 

இதுவரைக்கும் பிரச்சினை இல்லை. 

ஒரு வாரம் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பினை டவுன்லோடு செய்து பார்த்தால் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது. படிக்கப்பட்ட தீர்ப்பும் - டவுன்லோடு செய்யப்பட்ட தீர்ப்பும் - ஒரு வாரத்தில் மாற்றப்பட்டு அப்லோடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்திற்குச் சென்று தீர்ப்பினைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. இந்த தீர்ப்பினை 01.09.2022ம் தேதி வழங்கிய நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகிய இருவர்.

ஜனநாயகத்தின் தூணில் ஒரு மெகா ஓட்டை. ஓட்டை அடைக்க சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றார்கள்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. யார் இதைச் செய்தது எனக் கண்டுபிடிக்க சென்னை நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

பலர் முன்னிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரே வாரத்தில் மாற்றப்பட்டிருப்பது குற்றச் செயல். தேசத்துரோகம். என்ன சொன்னால் என்ன? அது கோர்ட்டு சமாச்சாரம்.

நீதிமன்ற பதிவாளர் எப்படி விசாரிப்பார்? அவருக்கு குற்றச் செயல்களை விசாரிக்கும் படி சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியது யார்? யாருக்காக மாற்றப்பட்டது? யாரால் அப்டேட் செய்யப்பட்டது? இதன் பின்னால் இருக்கும் ஊழல் என்ன?  கேள்வி கேட்க முடியுமா சாமானியனால்.

என்ன காரணத்துக்காக தீர்ப்பு எடிட் செய்யப்பட்டது? எடிட் செய்யப்பட்ட தீர்ப்பினால் பலன் அடைந்தது யார்?  இப்படி எந்தெந்த தீர்ப்புகள் மாற்றப்பட்டனவோ? கேள்விகள் பல. பதில் கேட்க முடியாது. 

பரிசு கிடைக்கும்.  நீதிமன்ற அவமதிப்பு அதன் பெயர்.

டிஜிட்டல் மயமாக்கத்தின் பின் விளைவு - எப்போ வேண்டுமானாலும் டெலீட் செய்யலாம் - எடிட் செய்யலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தல்களை நிதியமைச்சகம் செய்வது போல. சட்டமா? சட்டசபையா? ஒப்புதலா? அதெல்லாம் என்ன? இது யார் ஆட்சி? என்ன கேள்வி?

அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆவணங்களை அழித்து விடலாம் என்கிற நிலை. எல்லாம் இந்திய தேச மக்களின் நன்மைக்காக - டெவலப்மெண்டுகளுக்காக.

அரசியல் எதிரிகளை அரசு என்னவெல்லாம் செய்யுமோ என்று நினைக்கவே கூடாது. தேசத்துரோகிகள் அவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நேரு இந்தியாவை நாசம் செய்து விட்டார். பெரும் கடமை முன்னால் இருக்கிறது. நாடு நாடாக சென்று திட்டமிடல் அவசியம். டிஜிட்டல் இந்தியா. இந்தியா வளர்கிறது. 

ஓப்பன் கோர்ட்டில் படிக்கப்பட்ட தீர்ப்பையே மாற்றி அப்லோடு செய்கிறார்கள் என்றால் நீதிதுறையில் என்ன நடக்கிறது என்பதை யார் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்?

அதே நீதித்துறையில் இருப்பவர்களே கண்டுபிடிப்பார்களா?

இந்த வழக்கை மக்கள் எவரும் மறந்து விடக்கூடாது. என்ன அவசியம். மறக்காமல் இருந்தால் பசியா தீரப்போவுது? என்கிறீர்களா? பசி தீர்ந்து விடும் நோயா என்ன?

இந்த வழக்கின் விசாரணை எப்படி நடக்கிறது? குற்றவாளி யார்? என்பது பற்றி மக்கள் கவனமுடன் கவனிக்க வேண்டும். சொல்லி வைக்கிறேன். கேட்பதும் கேட்காதது அவரவர் முடிவு.

சென்னை உயர் நீதித்துறையில் நடக்கும் மர்மங்கள், குற்றச்செயல்கள் பற்றி - மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நீதிபதிகள் வெளிப்படையாக மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு எந்த உயர் நீதிமன்றத்திலும் நடக்காத குற்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதை வழக்காக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஆணை பிறப்பிப்பது என்பது நீதிமன்றத்தின் மாண்பினை குலைக்காதா? நீதிமன்றத்தீர்ப்புகளை மாற்றினால் எப்படி ஆவணங்களை நம்புவது? இனி கோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் எப்ப்டி நம்புவார்கள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த குற்றம் பற்றி விசாரித்த, உச்ச நீதிமன்ற உத்தரவு கீழே இருக்கிறது. 

ஊழல் இல்லையென்று சொல்லு முடியுமா? இல்லை தவறுதலாக நடந்தது என்று சொல்ல் முடியுமா? 

சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக இருக்கிறதே? 

இந்த வழக்கைப் படிக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன. 

எனது நோக்கம் நீதிமன்றத்தினை குற்றம் சொல்வது அல்ல. கடவுளைப் போன்ற நீதிபதிகள் சட்டத்தின் படி செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கிறேன். நீதிபதிகளுக்கு மக்களும், இந்திய அரசியல் சாசனமுமே கடவுள்கள் ஆவர். ஒவ்வொரு சாமானியன் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் இருக்க வேண்டும். அரசு அலுவலர் என்பவர் மக்களின் பணியாளர்கள்.





விசாரணை உத்தரவைப் படித்து விட்டீர்களா? இனி செய்தி கீழே. இந்த வழக்கில் தொடர்புடைய மகாசேமம் டிரஸ்ட்டின் (mahasemam trust) வரலாற்றினை நெட்டில் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். 

நீதிமன்றம் - அதுவும் சென்னை உயர் நீதிமன்றம் - என்ன சொல்வது?




வெளிநாட்டு நன்கொடைகள் - மாற்றப்பட்ட விதிகள் - மறைக்கப்பட்ட விபரங்கள்

காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்குள் வரும் நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக மக்கள் காணும் வகையில் FCRA - இணையதளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

fcraonline.gov.in  என்ற இணையதளத்தில் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் எவை - அவை எவ்வளவு நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன என்ற தகவல்கள் எல்லாம் இருந்தன.

திடீரென்று 2022 - ஜூலை மாதம் 13ம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு செய்தி. FCRA ஆன்லைன் வெப்சைட்டில் இருந்த தொண்டு நிறுவனங்கள், அவைகள் பெறும் நன்கொடை விபரங்கள் - அனுமதி பெற்ற தொண்டு நிறுவனங்கள் எவையெவை? - அனுமதி இல்லாதவை எவையெவை? - அனைத்து விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி வெளிநாட்டு நன்கொடைச்சட்டத்தில் ஒரு உப பிரிவு டெலீட் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

என்ன காரணத்துக்காக அத்தகவல்கள் நீக்கப்பட்டன? வெளிப்படைத்தன்மை எங்கே போயிற்று? என்ன மர்மம்? யாருக்காவது தெரியுமா? 

இதே போலத்தான் பல இணைய விபரங்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. 

வெளிப்படையான நிர்வாகம் என்று பேசும் பிரதமர் மோடி - ஏன் இந்த  தகவல்கள் இணையதளத்தில் இருக்கு நீக்கப்பட்டு - மறைக்கப்பட்டது என்பதினை மங்கி பாத்தில் மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஒரு நல்ல ஆட்சியாளன் காதில் எல்லா சத்தங்களும் கேட்க வேண்டுமென்பார்கள். 

கீழே இருக்கிறது படித்துக் கொள்ளவும். 




வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகள் - தொண்டு நிறுவனங்கள் விபரம் மறைக்கப்பட்டதற்குப் பின்னால் ஏதோ பெரிய தில்லாலங்கடி வேலைகள் உள்ளன என்று யோசிக்கத் தோன்றுகிறது. காலம் அதற்குப் பதில் சொல்லும் என நம்பலாம்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, September 23, 2022

சிறுமிக்கு திருமணம் - குற்றச்செயல்களின் இருப்பிடமாக சிதம்பரம் நடராஜர் கோவில் - இந்துக்களிடம் கோவிலை ஒப்படைக்குமா தமிழக அரசு?

மானம் கெட்ட, ஈனப் பிழைப்பு பிழைத்துக் கொண்டு, பார்ப்பனியர்களின் காலை நக்கி குடித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள், சூடு-சுரணையற்றுப் போய், வெந்ததைத் தின்று விதி வந்த பின்னாலே செத்துப் போகும் ஒரு இனமாக மாறிப் போய் எத்தனையோ ஆண்டுகாலம் ஆகி விட்டது. சினிமாக்காரியின் தொடைகளுக்குள் கண்களைத் திருப்பியவர்கள், இன்னும் எடுக்கவே இல்லை. அதற்குள் தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள் போல.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. கோவிலில் பூசை செய்பவர்களுக்கே கோவில் நிர்வாகம் உரிமை என்பது போல இருக்கிறது.  கோவில் நாம் கட்டியது - ஆனால் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கிடையாது. கோவில் கருவறைகள் சாதி தீண்டாமையை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

தீண்டாமை குற்றம் என்கிறது சட்டம். ஆனால் கருவறைக்குள் மட்டும் தீண்டாமை? என்ன ஒரு சட்டம்? வெட்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கோவிலுக்குள் தமிழில் பூசை செய்ய அனுமதி மறுத்தவர்கள் தீட்சிதர்கள். ஆனால் கோவிலுக்குள் செல்லும் ஒவ்வொன்றும் தமிழர்களின் கொடுத்தது. இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழர்கள் பூனூலான் தட்டில் காசு போடுவதை எப்போது நிறுத்துகிறார்களோ, வருமானம் இல்லாத கோவிலின் பக்கம், பூனூல் போட்டவர்கள் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். 

தமிழர்களின் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை, எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டத்தினர் ஆக்கிரமிப்புச் செய்து, தின்று கொழுத்து வருவதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழர் இனம். ஆங்கிலேயன் சென்று விட்டான். இன்னும் நம் கோவில் நமக்கு கிடைக்கவில்லை. வெட்கமில்லா தமிழர்கள் நாம்.

எங்களை உங்களால் என்ன செய்து விட முடியும்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

24 வயது பசுபதி எனும் தீட்சிதருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியை சுமார் 13 வயது - திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அக்கிரமக்காரர்கள். இதற்கு பசுபதி என்பவனின் தந்தை கணபதியும், அச்சிறுமியின் தகப்பனும் உடந்தை. அந்தச் சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். இந்த கல்யாணம் 2021ம் ஆண்டு நடந்திருக்கிறது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006 - இரண்டாண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வகை செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல பெயில் வழங்கக் கூடாத சட்டம் இது. த கிரிமினல் லா அமெண்ட்மெண்ட் ஆக்ட் 2013 மூலம் பெயில் கொடுக்க கூடாத குற்றச் செயல்களை மூவர் மட்டுமல்ல கோவில் நிர்வாகமும் செய்திருக்கிறது.

ஆனால் பாருங்கள் - மூவருக்கும் பெயில் கிடைத்து விடும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு எல்லா துறைகளிலும் நூலிபான்கள் ஊடுறுவல் செய்திருக்கிறார்கள்.

என்ன ஒரு அக்கிரமம்? இதுவா ஆகமம்? இதுவா தர்மம்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் இவர்களை என்ன செய்வது? தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுவே அதிமுக அடிமைகள் ஆட்சி என்றால் தீட்சிதர்கள் ஜாலியாக இருந்திருப்பர்.

என்னவென்றே தெரியாத ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பிற்குள் 24 வயது தீட்சிதர் தன் ஆண் உறுப்பை நுழைத்து கற்பழித்து இருப்பான். சிதம்பரம் நடராஜர் இவர்களைத் தான், தான் அருள்பாலிக்கும் கருவறைக்குள் பூசை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு - சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். கோவிலில் பூசை செய்ய ஒவ்வொரு சாதிக்கும் முறை வைத்து அனுமதி வழங்க வேண்டும். 

இந்துக்களில் சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் கோவிலை மீட்க போராட்டம் செய்தல் அவசியம். சிவன் நம் தெய்வம். அவருக்கும் நாம் தான் பூசை செய்ய வேண்டும். சிவன் தீட்சிதர்கள் தெய்வம் அல்ல. சிவனை முதல்வனாகக் கொண்ட சைவதமிழர்கள் - நடராஜர் கோவிலை மீட்க வேண்டும்.  

இனியும் தீட்சிதர்கள் மனசாட்சியே இல்லாமல், குற்றச் செயல்களை நிகழ்த்தும் இடமாக நம் சிவபெருமானின் கோவில் இருக்க கூடாது. அவர்களை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

கோவிலில் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்களையும், அனுமதி கொடுத்த தீட்சிதர் நிர்வாகத்தினரையும் கைது செய்யாமல், மூவரை மற்றும் கைது செய்திருப்பது சரியல்ல. காவல்துறை நடவடிக்கை எடுத்தல் அவசியம்.


13 வயசுப் பெண்ணின் யோனியில் தான் தன் குஞ்சை விடுவாராம் இந்தத் தீட்சிதர் பசுபதி. இதுதான் தீட்சிதர்களின் விதியாம். ஆகமமாம்.



பட உதவி புதியதலைமுறைச் செய்தி. இணைப்பு கீழே.

https://www.puthiyathalaimurai.com/newsview/147750/3-Dikshitars-of-Chidambaram-Nataraja-temple-arrested-in-case-of-marrying-a-girl-

காவல்துறையினர் இவர்களுக்கு பாத்ரூம் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். இது அக்மார்க் கற்பழிப்பு. நிர்பய கற்பழிப்பு வழக்குக்கும் இதற்கும் வேறுபாடில்லை.  

தனக்கு மகளாகப் பிறந்ததினாலே பெண்களுக்கு சட்டம் வழங்கும் பாதுகாப்பைக் கூட கொடுக்காத சிறுமியின் தகப்பனாருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். திருமணம் செய்த தீட்சிதனையும், அவனின் தந்தையையும் மனிதர்களாகக் கருதக் கூடாது. இவர்கள் பெண் இனத்திற்கே கேடு செய்வார்கள் என்பதால் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

கோவையில் பெண் குழந்தையைக் கற்பழித்துக் கொன்ற ஒருவரை என்கவுண்டர் செய்தது போலச் செய்ய வேண்டுமென, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கோபம் அடைவார்கள்.

பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? தீட்சிதர்களை மன்னிக்கவே முடியாது. கூடவும் கூடாது. இவர்களைக் கைது செய்த காவல்துறையினருக்கும் பெண் குழந்தைகள் இருப்பர். அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.




நன்றி : தினமணி - புதிய தலைமுறைச் செய்திகள்

Thursday, September 22, 2022

நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஓர் பார்வை

ஜூனியர் விகடனில் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தி ஆகிய இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதினைந்து நாட்களுக்குள் விசாரணை செய்து, தண்டனை கொடுத்து, அப்பீலுக்கும் போகக்கூடாது என்று உத்தரவு இட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

தண்டனையை எதிர்த்து அப்பீல் போக விடாமல் செய்தது மாபெரும் சட்ட விதிமீறல் என்கிறது ஜூ.வி. 

இந்தச் சூழ்நிலையில்தான் சவுக்கு சங்கர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டிகளை வைத்துத்தான் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தியும் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரிவு 19-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சங்கருக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரம் தண்டனையளித்த நீதிபதிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. என்றைக்கு ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது அல்லவோ... அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதோ... அப்போது தண்டனையை நிறுத்திவைப்பதுதான் முறை. இல்லையென்றால், வாரக் கடைசியில் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்து, ‘உன்னை இரண்டு நாள்களாவது சிறையில் வைப்பேன்’ என்று வீம்பு செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. (ஜூவி கட்டுரையில் ஒரு பகுதி)

எந்த ஒரு குற்றச் செயலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டால், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அப்பீல் போக விடாமல் தண்டனை கொடுப்பது கொடுஞ்செயல்.

பேச்சுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறப்பட்டிருப்பதும், ஒரு கட்டுரையோ (அ) சொற்பொழிவோ நீதிமன்ற அவமதிப்பு வரையறைக்குள் வரும் என்பதும், அதனால் நீதிமன்ற மாண்பு குலைந்துவிட்டது என்று கூறி தனிப்பட்ட நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் எப்படி நியாயமாகும்?

அதேபோல் ஒருவரை தண்டிப்பதற்கு முன்னால் முறையான நடைமுறைகளைக் கையாள மறுத்து, ராணுவ நீதிமன்றங்கள்போல் சட்ட நியாயங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது.

மேலும் தண்டனை என்பது ஒருவரை அவரது குற்றத்தை உணரவைத்து, சீர்திருத்தி மறுபடியும் மைய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது தவறு செய்தவரையும் தண்டிக்காமல், மன்னிப்பதன் மூலம்தான் நீதிமன்றத்தின் மாட்சிமை பெருகுமேயொழிய பழிக்குப் பழி என்பது அதன் தீர்வாகாது. இதை நீதிபதிகள் உணர்வதோடு, ஒரு சிலர் தவறாகப் பேசிவருகிறார்கள் என்பதற்காக மாபெரும் அதிகார வரையறையை மேற்கொள்வது ஒரு கொசுவை நசுக்குவதற்கு உலக்கையைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மதுரை நீதிபதிகள் தாங்கள் அளித்த தண்டனையைச் சுயமாக திரும்பப் பெற்று, சவுக்கு சங்கரைச் சிறையிலிருந்து விடுவிப்பதுதான் உத்தமமான செயலாக இருக்கும்! (ஜூவியில் ஒரு பகுதி)

நன்றி:ஜூனியர் விகடன்

முழு கட்டுரை இணைப்பு கீழே உள்ள இணைப்பில் இருக்கிறது.

https://www.vikatan.com/news/general-news/journalist-savukku-sankar-arrest-issue

கட்டுரையின் இறுதிப் பகுதியில் இப்படி முடித்திருக்கிறது ஜூ.வி.

நீதிபதிகள் ஊழலே செய்யவில்லையா?  என்னிடம் இருக்கும் லிஸ்ட்டை கட்டுரையின் இறுதியில் தருகிறேன். அதற்கு முன்பு குற்றச் செயலில் ஒரு நீதிபதி ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எப்படி எடுக்கலாம் எனப் படியுங்கள். அதிர்ச்சி தான் உண்டாகும். நாம் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் மக்களின் பணியாளர்கள் நீதிபதிகள் என்பதை படிப்பவர்கள் கவனத்தில் கொள்க. 

ஊழல் செய்யும் நீதிபதிகள் மீது சாமானியன் ஒருவனால் எளிதில் நடவடிக்கை எடுக்க இயலுமா? இதோ கீழே படியுங்கள். நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை.

  • Judiciary is an independent organ of the State under the Constitution of India. Government of India does not interfere in the functioning of the Judiciary.
  • The administrative/ disciplinary control over the members of subordinate judiciary in the States vests with the concerned High Court and the respective State Government. The State Government frames Rules and Regulation in consultation with the respective High Courts.
  • Central Government neither maintains records related to any court proceedings/ decisions / judgments nor does it have and can have a mechanism to monitor the action taken on them.
  • No administrative action can be taken on a grievance; subject matter of which is subjudice.

  • Government cannot ask a Court of Law to expedite proceedings of any particular case. Therefore, no action can be taken by the Government where the petitioner is aggrieved of the fact that there has been inordinate delay in disposal of the case.
  • A judicial order can be challenged only before appropriate Court of Law as per prescribed legal procedure. Therefore, it is a futile exercise to file a grievance against a judicial order/judgement.
  • A grievance regarding a complaint against a Judge can be taken up for inquiry by the concerned High Court or Supreme Court as per in-house procedure adopted by them. There is no role of Government in disposal of such grievances.
  • Detailed guidelines on grievances received in the Department of Justice are available on this Department’s website doj.gov.in. As per guidelines issued by the Supreme Court of India, grievances against Judicial Officers are required to be sent on sworn affidavit with verifiable facts to the Registrar General of the concerned High Court.
  • Petitions, applications and other documents to be filed before a Court of Law should not be forwarded alongwith grievances as these are to be presented in person or by a duly authorised agent or by an advocate on record duly appointed for the purpose.
  • As Judiciary is independent and Government does not interfere in the functioning of the Judiciary, no further follow-up or correspondence is made by the Government after forwarding of grievance to the concerned High Court or Supreme Court, as the case may be.
  • As the citizens can lodge their grievances online on pgportal no action is being taken on the grievances received through e-mail. pgportal.gov.in has been specifically created for lodging of grievances by the citizens.
  • Once final reply is given on a grievance, it should not be repeated again.
  • Thanks to www.doj.gov.in

மேலே இருப்பவைகளை இந்த இணையதளத்தில் படிக்கலாம். 


ஒரு சாமானிய இந்தியன் தனக்கு அநீதி வழங்கப்பட்டதாகக் கருதினால் எங்கனம் நடவடிக்கை எடுக்க இயலும்? நீதிபதிகள் மேல் புகார் தெரிவித்தால், அதை நீதிபதிகளே விசாரணை செய்வது சரியாகுமா? மனசாட்சி இருப்பவர்கள் யோசித்துப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தானே.  அரசு நீதிபதிகளைக் கேள்வி கேட்க முடியாது. மக்களுக்கும் இத்தனை கட்டுப்பாடுகள். வக்கீல்களின் நிலையோ வாய்ப்பூட்டு. கேள்விகளுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு விதிவிலக்குக் கொடுத்திருக்கிறதா என்ன?

கீழே படியுங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டம் 1971 என்ன சொல்கிறது என. 


படித்துப் பாருங்கள். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட தண்டனை எப்படிப்பட்டது என்று புரியும்.

28 ஆண்டுகாலம் நடந்த ஊழல் வாதி ஜெயலலிதாவுக்கு நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை ரத்துச் செய்தாரா நீதிபதி குமாரசாமி, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நீதிபதி குன்கா வழங்கிய உத்தரவை உறுதி செய்ததே? 

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு? என்றால் வழங்கிய நீதிபதிக்கு என்ன தண்டனை? ஏன் அவர் தவறான தீர்ப்பினை வழங்கினார்? சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு தப்பித்து விடுவதை பலரும் செய்து வருகின்றனர்.

எந்த நீதிபதி ஊழல் செய்தார்? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்பவர்கள், மெயில் டுடேவில் வெளியான கட்டுரையினைக் கீழே படிக்கவும்.

படித்து விட்டீர்களா? நீதிபதிகள் என்றாலும் அவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. மக்கள் தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விமர்சிக்க வேண்டும். வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆராயப்பட வேண்டும். தீர்ப்புப் பழி வாங்குதலுக்காகவோ அல்லது இதர பலன்களுக்காக வழங்கப்பட்டிருந்தால், தண்டிக்கப்படல் அவசியம்.

இது ஒன்றும் ராஜா / மன்னர் காலம் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.