குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, February 28, 2022

மாதுரி தீட்சித்தின் தி ஃபேம் கேம் - கன்னி வலை

கல்லூரியில் படிக்கும் போது சக மாணவர்கள் மூலமாக தெரிய வந்த ”ச்சோலி கீ பீச்சே கியா கை” பாடல் மூலம் மாதுரி தீட்சித்தின் அழகும், வசீகர முகமும், உடலும், அவரின் நடனமும் என்னையும் அவரின் ரசிகனாக மாற்றியது.

மாணவர்கள் மத்தியில் மாதுரி தீட்சித் பிரபலம். வார்ட் ரோப்புகளில் அவரவருக்கு கிடைத்த மாதுரியின் படங்களை ஒட்டியிருந்தார்கள். 

ஒரே பாடல் உச்சத்துக்குச் சென்றார். அது மட்டுமல்ல அவரின் ’தக் தக் கரினே லக்கா’ என்ற பாடல் ரசிகர்களை கிளர்ச்சியடைய வைத்தது. 

இடுப்பின் வளைவுகளும், கச்சிதமான கடைந்தெடுத்த மார்புகள் கச்சைக்குள்ளிலிருந்து வெளியே வரவா என்று அவஸ்தைப்படுதலையும் கண்டு மோகத்தில் முக்குளித்து அவரின் கண்களும், முகமும் ஒருங்கே சிரிக்கும் சிரிப்பும், அவரின் சிணுங்கல்களும், காமத்தோடு அனில் கபூரை தழுவும் காட்சிகளும் காமக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டு எழும் காம நெருப்பில் வொயிட் பெட்ரோலை ஊற்றும்.

மாதுரியின் தொப்பூள் குழியைக் கண்டதும், அடச்சே பேசாமல் புதை பொருள் ஆராய்ச்சி படிக்காமல் போனோமே என்று தோன்றும். 

காதலுங்க. காதல்.

பிராமணியக்கவிஞன் பாரதி கூட பாடினானே

காதல் காதல் காதல் – காதல் போயின் சாதல் சாதல் சாதல் என. 

நம்புங்கள் இந்து நாடு, கற்பு வழி பெண்கள் நிரம்பிய புனித நாடு நம் இந்தியாவென்று.

இந்திய அரசு மாதுரிக்கு அவார்டு கொடுத்திருக்கிறது. மிகச் சிறந்த நடிகை என்று பல்வேறு அவார்டுகளை உலகம் அள்ளிக் கொட்டியது. மாதுரி தீட்சித் அள்ளித் தெரித்த நடிப்புக் கலைகளை உலகமே ரசித்தது. சுமார் முப்பது ஆண்டுகாலம் இந்திய சினிமாவில் பலரை ரசிகர்களாய் நட்டுக்க வைத்தார். சாதாரணமான வேலையா இது? 

சோனாகச்சி நினைவுக்கு வரவே கூடாது. அது வேறு, இது கலை. இன்னும் உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் - சரோஜாதேவி செக்ஸ் புத்தகங்கள் - அரசு தடை - இலக்கிய நாவல் - கலை - அவார்டு. புரிஞ்சுக்கோங்க.

காமவறட்சி கொண்ட தமிழகத்தில் வயதுப் பருவ மாணவர்களின் காம கிளர்ச்சிகள் இப்படியான பாடல்களினால் தூண்டப்படுகின்றன. மனம் உணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறது. அறிவோ ’அங்கிட்டு போய்’ ஓரமாக உட்கார்ந்து விடுகிறது.

மனமெல்லாம் நெக்குருகிப் போய் நெளிவுகளும், சுளிவுகளும் மனதுக்குள் காய்ந்த சவுக்கு கட்டை எறிவது போல எரிய ஆரம்பிக்கும். என்னவென்று தெரியாத உணர முடியாத அதை, உடலும் மனசும் ஒன்றாக நேர்கோட்டில் அந்த அறியா சுகத்தின் மீதும் படிந்து விடுகிறது. தேடுதல் ஆரம்பிக்கிறது.

காமத்தின் வழியாக காதல் புனையப்படுகிறது. காதல் வாழ்க்கையின் உன்னதமான ஒன்று எனக் காவியங்கள் காட்சிகளை விரிக்கின்றன. 

காதல் கவிதைகளைத் தேடி மனம் ஓடும். கவிஞர்கள் கடவுள்களாய் தெரிவார்கள். சுரதா, வைரமுத்து வகையறாக்களின் கவிதைப் புத்தங்களின் பக்கங்கள் கிழியும்.

வாய் தானாகவே காதல் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பிக்கும்.

பவுடர் டப்பாக்கள் விரைவில் காலி ஆகும். கண்ணாடி முன் காதல் விரியும். காணும் பெண்களின் மீதோ ஆண்களின் மீதோ கவனம் திரும்பும். தேடித்தேடிக் காதல் படங்களாய் பார்க்க வைக்கும். காதலியைத் தேர்ந்தெடுக்க ஹீரோக்கள் பேசிய வசனங்கள் நினைவில் பதியும்.

காதலியைத் தேடி அலைய ஆரம்பிக்கும். படிப்பின் கவனம் சுக்கு நூறாய் சிதறும். மனம் சமாதானத்துக்கு தயாராகும். இப்படித்தான் ஆரம்பிக்கும் காதல்.

இதன் கிளைமேக்ஸ் என்னவாகும்?

இதற்கு இரண்டே இரண்டு முடிவுகள் தான்.

ஒன்று காதலிக்கிறேன் பேர்வழி என நாசமாய் போவது.

இன்னொன்று அது என்னவென்று கண்டு விட்ட பின்னாலே, ’அடச்சே இவ்ளோ தானா’ என தெரிந்ததும் விலகி விடுவது.

இந்த இரண்டாம் வாய்ப்பு 99 சதவீதத்தினருக்கு கிடைக்காது. 

ஆனால் எனக்கு இரண்டாம் வாய்ப்பு கிட்டியது. 

தஞ்சாவூரில் கிடைக்காத ஒன்றா? காதல் விளையாட்டினை ஆடி முடித்தேன். 

ஒழுக்கம் அது இதுவென்று ஆரம்பித்து விடாதீர்கள். 

இதுவெல்லாவற்றுக்கும் காரணம் மாதுரி தீட்சித் மட்டுமே. தூண்டி விட்டது அவர். செயலின் மூல காரணம் அவர். நானோ வேலைக்காரன்.

ஆனால் பாருங்கள், என் நண்பன் சிக்கிக் கொண்டான். நான் வெளியேறி விட்டேன். 

அவன் மொத்தமாக முடிந்து போனான்.

என்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்பது ஒரே ஒரு பெண்ணுடன் காதல் செய்து கலவி கொள்வது இல்லை. அதேதான் பெண்களுக்கும். ஒழுக்கம் என்பதின் விரிவாக்கம் பல காரணிகளைக் கொண்டது. அது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்களை எழுதும் போது படித்துக் கொள்ளுங்கள்.

ஒழுக்கம் என்பது என்னவென்றால் தான் கொண்ட கொள்கைக்கு விரோதம் இல்லாமல் இருப்பது.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில் நம் பாரதப் பிரதமர் எப்படி தான் கொண்ட பிராமணிய சேவை கொள்கையில் இருந்து வெளி வராமல், தேசப்பற்று பேசியே பிராமணர்களை நிதி நிர்வாகத்தில் உட்கார வைத்து சுமார் 3.50 லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் வெகு நாசூக்காக யாருக்குமே தெரியாமல் அள்ளிச் சென்ற சித்ரா ராமகிருஷ்ணன், அரவிந் சுப்ரமணியைக் கண்டும் காணாதது போல இருக்கின்றாரோ அதுதான் ஒழுக்கம்.

நாடே நாசமானாலும், தனக்குத் தெரிந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காப்பதை தான் ஒழுக்கம் என்று சொல்கிறேன். 

இந்தியா நாசமாகப் போனாலும் பிராமணர்கள் கொள்ளையும், கொலையும் (மஹாத்மாவைச் சொன்னேனுங்கோ) செய்தாலும் பிராமணியக் கொள்கையிலிருந்து வெளியே வராமல் இருப்பதுதான் ஒழுக்கம்.

நம்புங்கள் ஒரு பைசா கூட திரும்ப வராது.

இந்த ஊழலினால் பங்குச் சந்தையில் கொல்லப்பட்டவர்களின் டேட்டாவை ப.சிதம்பரம் பாஷையில் ‘நோ டேட்டா கவர்ன்மெண்ட்’ வைத்திருக்காது. 

அப்படியே வைத்திருந்தாலும் கொரானா மரணம் என்று கூட பதிவு செய்திருக்காது. 

மூன்றரைக் கோடியாம் கொராணாவில் பரலோக மன்னிக்கவும் சிவபெருமானைத் தரிசிக்கவும், சொர்க்கத்தில் வசிக்கும் காம கோடி காஞ்சி ஜெயேந்திரரைப் பார்க்கச் சென்றவர்கள். நெட்டில் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

மற்றுமொரு உதாரணம் எடப்பாடி எப்படி துரோகத்துக்கு எந்த வித கேடும் செய்யா வண்ணம் துரோகத்தின் அத்தனை விதிகளையும் கடைபிடித்து ஆட்சி செய்தாரோ அதைப் போல. துரோகம் செய்வதும் ஒரு செயல்தான். 

துரோகம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கொலை செய்ய வேண்டும். மினிமம் 13 அப்பாவிகளைச் சுட்டுக்கொன்றால் தான் துரோக மகுடத்தில் அது வைரமாய் ஜொலிக்கும். எடப்பாடியின் துரோகச் செயலின் மகுடத்தில் ஜொலிக்கும் வைரம் 13 பேரின் கொலை.

செய்யும் செயலைச் சரி வரச் செய்வதுதான் ஒழுக்கம்.

அது காதலாய் இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி. அதனதன் விதிகளுக்குள் உட்பட்டு ஒழுக்கமாய் இருப்பது எப்படி என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

விடாது கருப்பு போல மாதுரி தீட்சித் எனது இந்த வயசிலும் என்னைக் கீறி விட வந்து விட்டார்.

மாதுரி தீட்சித்தைக் கல்யாணம் செய்தது ஒரு அமெரிக்க மருத்துவர். மருத்துவர்கள் உடல்கள் மீதான பற்றில்லாது இருப்பார்கள். மாதுரிக்கு ஒரு மருத்துவர் கணவனாய் அமைந்ததுதான் சரியானது. மாதுரியின் துல்லியமான திட்டமிடல்.

எனக்குப் பிடித்த ஓப்பன் (#Open) (அந்த ஓப்பன் இல்லீங்கோ) பத்திரிக்கையில் தில்லாலங்கடி சித்ரா ராமகிருஷ்ணனின் இந்தியாவை நாசம் செய்த இமயலச் சாமியாரின் பெயரில் செய்த லீலா வினோதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பாக ”The Return of the Queen” என்ற தலைப்பில் சுண்ணாம்பு அடித்த ஒரு வெள்ளைத் தோல்காரியைப் பார்த்தேன். அது யார்ரா என்று பார்த்தால், அட! நம்ம மாதுரி தீட்சித்.


நெட்பிளிக்ஸில் வெளியான The Fame Game – மாதுரியின் வெப் சீரிஸ் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். என்ன இருக்கப் போகிறது அக்கட்டுரையில்?

அவர் என்னென்ன படங்கள் நடித்தார், என்னென்ன பாடல்கள் பிரபலமானவை, அதனால் கிடைத்த புகழ், ரசிகர்கள் என்று ஒரு பிச்சைக்காரன் தட்டில் (பிச்சைக்காரர்கள் என்ற வகுப்பினை மோடி அரசாங்கம் புதிதாக விரைவில் பிரிக்கும்) கிடப்பதைப் போல கலவையாக ஒரு கட்டுரை. 

நெட்பிளிக்ஸில் சீரியலைப் பார்த்தேன்.

நொய்யாலே! 

அந்த மாதுரி தீட்சித்தா இது? 

பார்த்தவுடன் ஓட்டுக்குள் சுருங்கி விடும் நத்தை போல (உடனே ஆராய்ச்சிக்குப் போகக் கூடாது. சுருங்கிய மேட்டருக்கு செம டெம்ப்ட் மருந்துகள் - #சாருநிவேதிதாவின் புத்தகங்கள் அல்ல - அதை விட வீரியமானவைகள் இருக்கின்றன) மனசு சுருங்கிப் போனது.

கதை என்ன தெரியுமா?

கிளைமேக்ஸில் மகளை ஃபேம் அதான் ஹீரோயினாக ஆக்கணும் என்ற ஒரு நாட், அதற்கு தடையாக இருக்கும் சோம்பேறிக் கணவனைக் கூட ஜெயிலுக்கு அனுப்பும் ஒரு திகில் (அப்படித்தான் சொல்றாங்க) நிறைந்த கடத்தல் நாடக வெப் சீரிஸ் இது. 

கடத்தலுக்கு காரணமேஏஏஏஏஏ...... மாதுரி தீட்சித்தான்.  மாதுரியை யாரோ கடத்தி விட்டார்கள் என போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. 2016லிருந்து சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்ததே அதைப் போல.


படங்கள் உதவி : Open Magazine (Thanks to Open)

கதையில் ஒரு லூசு ஓல்ட் ஹீரோ. 

அனில் கபூரின் மீது மாதுரிக்குப் ’படா படா ஹை’ கோபம் போல. 

சும்மா இருந்த அந்த ஓல்ட் ஹீரோவைத் தூண்டி விட்டு, தற்கொலை செய்ய வைத்து, அனில் கபூரின் மீதான தன் வன்மத்தை வேறு நாசூக்காக காட்டி உள்ளார்.  தேவையே இல்லாத ஒரு கிளைக்கதை. செக்ஸ் காட்சியெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் சவுக்கு சவுக்குன்னு வேகாத கறியை மெல்லுவது போல டென்சனாகும்)

மாதுரியின் நெட் பிளிக்ஸ் அவதாரம் ஏன்?

புகழ் என்பது போதை அல்ல அது ஒரு வலை. ரசிகன் மீது விரிக்கப்படும் மாய வலை. இன்றைக்கும் கட் அவுட்களில் பால் ஊற்றிக் கொண்டிருக்கும் மீன்களாய் ரசிகர்கள் மாறவே இல்லை. இவர்கள் மூலம் கிடைக்கும் பணம் பெரிது. அமெரிக்காவில் செட்டில் ஆன மாதுரிக்கு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் உறிஞ்சலை ஆரம்பிக்க வேண்டுமென்ற பிசினஸ் திட்டம். செயல்படுத்துகிறார்.

மாதுரி தீட்சித் தன் காம கிளர்ச்சியால் ரசிகர்களுக்கு உண்டாக்கிய கிளர்ச்சியை புகழாக மாற்றினார். அதை வலையாக விரித்தார். சிக்கியவர்கள் ரசிகர்கள்.

மாதுரி தீட்சித் கனவுக் கன்னி,  ரசிகர்களுக்கு விரிக்கப்பட்ட கன்னி வலை.

ரசிகர்களின் ஒவ்வொரு பைசாவும் வலைக்குள் சிக்க வைக்கப்படும். 

பிசினஸ், பணம் – மாதுரி தீட்சித். 

தி ஓப்பனில் ஏன் இப்படி ஒரு கட்டுரை?

ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் பத்திரிக்கைகள். நம்பிக் கொள்ளுங்கள். அது தான் நம் முன்பு இருக்கும் ஒரே சாய்ஸ். 

இந்தப் பதிவினைப் படித்ததும் பலருக்குள் பல்வேறு கேள்விகள் எழக்கூடும். யோசித்துப் பாருங்கள், வெளிச்சம் தெரியும்.

அடுத்த பதிவு என்ன தெரியுமா? 

பிளாக்கைப் பாருங்கள். சப்ஸ்கிரைப் செய்து வையுங்க.

* * *

Saturday, February 26, 2022

குரு – பக்தன் – குருசேவை



இடமிருந்து இரண்டாம் இடத்திலே நிற்பவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்

குருநாதரின் ஆலயத்துக்கு அதாவது சற்குருவடிக்குச் சென்று வருவதில் எனக்கு எப்போதும் பேரானந்தம் உண்டாகும். வீட்டிலிருந்து சற்குருவடிக்குச் செல்லும் வழியில் குருநாதருக்கு பலகாரங்கள் கொஞ்சம் வாங்கிக் கொள்வேன். முன்பு விளாங்குறிச்சியிலிருந்து செல்லும் போது, வடவள்ளி சந்தையில் காய்கறிகள், பலகாரங்கள் வாங்கிச் செல்வதுண்டு.

இப்போது சற்குருவடியின் நேர் தெற்கே வீடு இருப்பதால் காய்கறிகள் இன்னபிற சமாச்சாரங்கள் எல்லாம் பெரும்பாலும் வாங்குவதில்லை. பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் குரு நாதரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு உணவும், நீரும் கிடைத்திடவும் அவர்களுடன் பேசவும் ஜோதி சுவாமிக்கு நேரம் போதவில்லை. கடந்த வாரம் அவருக்கு தொண்டை கட்டி விட்டது. 

குருநாதரையும், ஜோதி சுவாமியையும் பார்க்க வருபவர்கள் எங்கெங்கிருந்தோ பயணப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பக்தர்களும் தன் வீட்டிற்குச் செல்லும் போது ஏதாவது வாங்கிச் செல்வதைப் போல சற்குருவடிக்கு வரும் போது அவர்களால் இயன்றதை வாங்கி வருகின்றார்கள். ஆலயத்தினுள்ளே குருநாதரின் பாதமலர்களில் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

கடந்த குருபூஜை விழாவிலே பெரும் பக்தர்கள் கூட்டம் வந்து விட்டது. வருடத்தில் இரண்டு நாட்கள் அதாவது கார்த்திகை மகா தீபம் மற்றும் குரு நாதரின் குருபூஜை விழாவிற்கு மட்டுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகும். பிற நாட்களில் தரிசனத்துக்கும், வியாழக்கிழமைகளில் வாசியோகப் பயிற்சிக்காக கொஞ்சம் அதிகமாக பக்தர்கள் சற்குருவடிக்கு வருகை தருவார்கள்.

காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே ஆலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

எதிர்பாரா வண்ணம் பக்தர்கள் அதிகரித்து விட்டதால் முள்ளங்காடு வரையிலும் கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிறைந்து விட்டன. பக்தர்கள் குருவின் ஆலயத்திலே பிரார்த்தனை செய்து விட்டு, உணவருந்தி விட்டு வருவதும் போவதுமாக இருந்தனர். 

சற்குரு ஆலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது கண்டு ஒரு சிலர் மனக்கிலேசம் கொண்டு பல்வேறு இன்னல்களை உருவாக்கி வருகின்றார்கள். லட்சக்கணக்கான பக்தர்களினால் பல்வேறு நன்மைகள் கிடைத்து சுகபோகத்தில் வாழ கனவு கண்டு அச்செயல்களை செய்யத் துவங்கி உள்ளார்கள். குருவானவர் தர்மமே உருவானவர். செய்த செயலின் பயனை அனுபவித்து தான் தீர வேண்டுமென்றும், வேண்டுமெனில் சிறிது துயரத்தை, துன்பத்தை ஆற்றுப்படுத்துகிறேன் எனவும் சொல்பவர். 

சற்குருவடி மிகுந்த ஆற்றல் மிக்கது. தர்மமற்ற எந்த ஒரு செயலும் இங்கு நடக்காது. அதர்மத்தை நிறைவேற்ற துணியும் நபர்களின் வாழ்வு முற்றிலுமாக சீரழிந்திருப்பதை கண்டிருக்கிறேன். 

சித்தர்கள் சற்குருவின் ஆலயத்தின் பின்னால் செல்லும் நொய்யல் ஆற்றில் நீராடி விட்டு, ஆலயத்தின் மேற்கு பகுதியிலே உலாவி விட்டு, பின்னர் ஆகாய மார்க்கமாக ஏழாம் மலைக்கு வெள்ளிங்கிரி நாதரை தரிசிக்கச் செல்லும் இடம் நம் குருவின் சற்குருவடி.

இந்த இடத்திலே அதர்மத்துக்கு எங்கே இடம்? அறம் செழித்திருக்கும் இடம் நம் குருவின் ஆலயம்.

பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் ஆலயத்தின்னுள்ளும் வெளியிலும் கூட்டி பெருக்கி சுத்தபடுத்துவதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் அக்காவும், தம்பியும் என்றும் வருவார்கள், தூய்மைப்படுத்துவார்கள், பிரார்த்தனை செய்வார்கள் சென்று விடுவார்கள் என்று ஜோதி சுவாமி சொன்னார்கள்.

எனக்கு மனம் எங்கோ சென்று விட்டது. 

ஆன்மீகத்தில் மூன்று வகை ஆனந்தங்கள் உள்ளன. அவைகள் பக்தி, பஜனை மற்றும் பிரம்மம் ஆகும். பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

கடவுள் எஜமான், பக்தன் பணியாளன் என்ற நிலையில் பக்தனொருவர் கடவுளின் மீது பக்தி கொள்வார். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்த்தோமென்றால் இறைவன் இன்பம் என்றால் பக்தன் இன்பத்தை அனுபவிப்பவனாக இருப்பான்.  அதாவது இறைவன் இனிப்பு என்றால் அதை சுவைப்பவன் பக்தன். பக்தர்கள் கொண்டிருக்கும் பக்தியானது இவ்வகையானது தான்.

இந்தப் பக்தியில் இறைவனுக்கான சேவை என்பதின் மூலம் பக்தன் பல்வேறு பலன்களை அடைகிறான். இறைச் சேவையின் போது மனம் ஒடுங்க ஆரம்பிக்கிறது. பக்தனின் நினைவில் சேவை மட்டுமே இருக்கும். இறைவனின் நினைப்பில் ஆழ்ந்து விடுகிறான்.

பக்தனின் ஒடுங்கிய மனத்தோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அப்பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. பக்தி யோகத்தின் சாரம் இதுதான். பக்தர்கள் இந்த நிலையில் இருப்பவர்கள். இவர்கள் இறைச் சேவைக்கும், இறைவனைக் கண்ணுற்று பிரார்த்தனை செய்வதின் மூலம் தங்களுக்கு வேண்டியவற்றை இறைவன் மூலம் அடைகிறார்கள்.

அந்த இரு உடன்பிறப்புகளும் சற்குருவடியில் செய்யும் சேவையின் மகத்துவத்தினை உணர்ந்தேன். சற்குருவடியிலே ஒரு சில பக்தர்கள் பிற பக்தர்களுக்கு உணவளிப்பார்கள். ஒரு சிலர் பாத்திரங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவார்கள். ஒரு சிலர் சற்குருவடி ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். பாட்டி ஒருவர் சற்குருவடியின் வெளியில் தூய்மைப் பணி செய்து கொண்டே இருப்பார். இப்படி சற்குருவடிக்கு வருகை தரும் பக்தர்கள் ஏதாவதொரு பணியைத் தங்களின் குருவின் மீது கொண்ட பக்தியாலே செய்து கொண்டே இருப்பார்கள்.

சற்குருவடியிலே ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சற்குரு எல்லோருக்குமானவர். பிற மதத்தினர் வாசியோகம் கற்றுக் கொள்ள வருவதைக் கண்டிருக்கிறேன். பிரார்த்தனைக்கு வந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.

சற்குருவடியிலே தர்மமும், பக்தியோகமும், பிரம்மயோகமும் ஆட்சி செய்கின்றன. நம் குருவானவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் தன் பக்தர்களை பாதுகாக்கிறார் என்பதை இங்கு பக்தர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே அறிந்து கொள்ள முடிகிறது.

என்னையும் அவர் தன் பக்தனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதிலே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

குருவின் துணை இருப்பின் இந்த உலகத்தையே வெற்றி கொள்ளலாம் அல்லவா?

Tuesday, February 15, 2022

குருபூஜை விழா - கைலாயத்தின் காட்சிகள்

2022 பிப்ரவரி 13 - நமது குருவின் 37வது ஆண்டு குரு பூஜை விழா துவங்க இருக்கிறது. விடிகாலையில் எழுந்து குளித்து விட்டு குருவருளைப் பெற சற்குருவின் ஆலயம் நோக்கி சில்லென்ற காற்றினூடே வாகனத்தில் சென்றேன்.

சற்குருவின் ஆலயத்தின் முகப்பில் அலங்கார தோரணங்கள், குருவின் சீடர்களை வரவேற்க வரவேற்பு என பக்தர்கள் நிறைந்து இருந்தனர். 

சுமார் 120 பேர் சமையல் செய்து பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக சென்னை யிலிருந்து முதன் நாளே வந்து தங்கி விட்டனர். தன் சொந்தப் பணத்தினைச் செலவு செய்து கொண்டு குருவடிக்கு வந்திருந்தனர் என்று கேள்விப்பட்டேன். வருடா வருடம் அவர்கள் குருசேவைக்கு வருகை தருகின்றனர்.

காலையில் கிச்சடியுடன் தேங்காய் சட்னி பக்தர்களுக்கு அமுது படைத்துக் கொண்டிருந்தனர். காஃபி தனியாக கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த விழாவுக்கு பத்திரிக்கை அடிக்கவில்லை. விளம்பரம் செய்யவில்லை. வாய் மொழியாகவும், மொபைல் மூலமாகவும் மட்டுமே குருபூஜை விழாவினை பக்தர்களுக்குத் தெரிவித்தோம்.

அடியேன் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கை தயார் செய்து யூடியூப்பில் போட்டிருந்தேன்.  பிளாக்கில் எழுதினேன் வழக்கம் போல. அவ்வளவுதான்.

எத்தனை பக்தர்கள் வருவார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது. சற்குருவிற்கே வெளிச்சம். எத்தனை பக்தர்கள் வருவார்கள், அவர்களுக்கான உணவு, வசதிகள் ஆகியவற்றை சற்குருவே கவனித்துக் கொள்வார் என்று ஜோதி சுவாமி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சன்னிதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சற்குருவின் திரு உருவத்தில் மாலைகளும் மலர்களும் குவிந்து கிடந்தன. சற்குருவடியின் சன்னிதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையாக வந்து கொண்டிருந்தனர். 

பக்தர்களை வரிசைபடுத்தி, பிரார்த்தனைக்கு ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த இதர பக்தர்கள், பக்தர்கள் கொண்டு வரும் பிரார்த்தனை மலர்களை நடக்கவிருக்கும் சற்குருவின் திருவுருவ அபிஷேகத்துக்கு சேகரம் செய்து கொண்டிருந்தனர்.

பக்தர்கள் பூக்கள், அரிசி, தின்பண்டங்கள், பலகாரங்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள், எண்ணெய், பூஜை பொருட்கள் என உறவினர் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிச் செல்லுவதைப் போல வாங்கிக் கொண்டு குருவின் முன்னாலே வைத்து வணங்கிச் சென்றபடி இருந்தனர். பல பக்தர்கள் அரிசி மூட்டையினை தோளில் சுமந்து வந்து குருவின் சன்னிதியில் வைத்து வணங்கிச் சென்றனர். ஒரு சிலர் காய்கறிகளை மூட்டை மூட்டையாக தூக்கி வந்து வைத்து வணங்கினர். 

ஒரு பக்தர் கங்கா தீர்த்தம் கொண்டு வந்து தெளித்துக் கொண்டிருந்தார். பலர் மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் பக்தர்களாக தெரிந்தனர். 

கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. மோன நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இசையினூடாகப் பரவி இருந்தனர். மிகவும் வித்தியாசமானதொரு குருபூஜை விழாவாக இருந்தது.

இந்த குருபூஜை விழாவை நடத்துவது சற்குருவின் பக்தர்கள் - சீடர்கள். 

சமையலுக்கு எனத் தனி பக்தர்கள் குழு, வரக்கூடிய பக்தர்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு குழுவினர், உணவு பரிமாற ஒரு குழுவினர், நீர் கொடுக்க ஒரு குழுவினர், பூஜைகளைக் கவனிக்க ஒரு குழுவினர், பக்தர்களை வரிசைப்படுத்தி வழிபாடும் பிரார்த்தனையும் செய்ய ஒரு குழுவினர் என தனித்தனியாப் பக்தர்கள் தாங்களாகவே பிரிந்து காலையில் இருந்து மாலை வரை ஓயாது சற்குருவின் விழாவை இனிதே நடத்திக் கொண்டிருந்தனர்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் தானாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒவ்வொருவரையும் விசாரித்து தெரிந்து கொண்டனர். 

சிறார்கள் அங்குமிங்கும் களிப்புடன் ஓடி ஆடிக் கொண்டிருந்தர். ஒரு சிறுவன் களிமண்ணால் சிவலிங்கம் செய்து கொண்டிருந்தான். இரு சிறார்கள் காவி உடையில் நெற்றி நிறைய விபூதி பூசிய வண்ணம் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

யாரையும் எவரும் ஒரு வார்த்தை கடிந்தோ, முகம் சுளித்தோ பார்க்க முடியவில்லை. 

சற்குருவிற்கு அபிஷேகம் ஆரம்பித்தது. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. சங்கு முழங்கியது. எக்காளமும், குறும்பரந்தூம்பும், தாளமும், திமிலையும் ஒருங்கே இசைக்கப்பட்டது. எங்கும் ஓம், ஓம் என்ற சத்தம். 

“என்னப்பன் அல்லவா? பொன்னப்பன் அல்லவா? “ என்ற பாடல் இசையூனூடே பாடப்பட்டது. 


14.02.2022ம் தேதியன்று சற்குருவின் அபிஷேகம் காட்சிகள் 
நன்றி கார்த்திக்

சிவபெருமான் வெள்ளிங்கிரி மலையிலே எழுந்தருளி இருக்கும் ஏழாவது மலையின் நேர் கீழே அமைந்து இருக்கும் நமது சற்குருவின் சன்னிதியானது அன்றைக்கு சிவ கைலாயம் போன்றே தென்பட்டது.

கோபம், கடுஞ்சொல் இல்லா அன்பு பக்தர்கள் தமது குருவின் குருபூஜையை ஒன்றாக இணைந்து நடத்திக் கொண்டிருந்த காட்சியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. 

அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்கறிகள், சமையல் பொருட்கள், எண்ணெய், மாலைகள், தட்டுகள் என இன்னும் என்னென்ன தேவையோ அத்தனையும் பக்தர்கள் குருவிற்காக கொண்டு வந்து சேர்த்தனர். அதுமட்டுமல்ல சற்குருவினைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முகம் கோணாவண்ணம் சேவைகளை கொஞ்சம் கூட புன்னகை மாறாமல் செய்து கொண்டே இருந்தனர்.

சற்குருவின் சன்னதியில் எல்லோரும் ஒன்றே. விதிகள் இல்லை, கட்டளைகள் இல்லை, சற்குரு எல்லோருக்குமானவர். அவரின் பக்தர்களும் அவ்வாறே இருக்கின்றனர். ஒரு குடும்பம் தங்களது வீட்டு விழாவினைச் செய்வது போல எங்கெங்கு இருந்தோ வந்த பக்தர்கள் ஒன்றாய் விழாவை நடத்தும் காட்சிகளை எங்கும் காணவியலாது.

கலந்து கொள்ள கட்டணம், உட்கார கட்டணம், வண்டி நிறுத்தக் கட்டணம், அங்கோ போகக்கூடாது, இங்கே போகக்கூடாது, இங்கே நிற்ககூடாது என்று சொல்ல இங்கு எவரும் இல்லை. 

சற்குருவின் சன்னிதியும், ஆலயமும் பக்தர்களுக்கானது. சற்குருவானவர் ஒவ்வொருவருக்கும் உரிமையானவர். அவர் உலக நன்மைக்காக மனிதர்களின் நலனுக்காக நொய்யல் ஆற்றங்கரையிலே தவமிருந்து கொண்டிருக்கிறார். பசிப்பிணியும், நோய்களையும் பக்தர்களிடம் அண்ட விடாது காத்தருளிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை எத்தனையோ பக்தர்களை நான் அங்கு கண்டிருக்கிறேன். தீரா நோயுடன் வந்தவர்களின் நோய் தீர்ந்ததைக் கண்டிருக்கிறேன். 

பராரியாக வந்தவர்கள் தற்போது செல்வ வளமும், பதவியும் கிடைத்து சமூகத்திலே உயர் நிலையில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

தீராப் பிரச்சினைகளுடன் வந்தவர்கள் இன்று நலமோடு வாழ்வதையும் கண்டிருக்கிறேன்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணமும், குழந்தைப் பாக்கியம் தேடி வந்தவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பெற்றதைக் கண்டிருக்கிறேன். 

கண் சிமிட்டுவது போல சற்குருவின் ஆசியாலே ஒவ்வொரு பக்தர்களின் பிரார்த்தனைகளும் நிறைவேறி இருக்கின்றன. சற்குருவிடம் பிரார்த்தனை என்பது தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதை விடவும் மேலானாது என்பார்கள் பெரியோர்கள். 

“என் பக்தன் வந்து நிற்கிறான் பார். அவனுக்கு உடனே தேவையானவற்றைச் செய்யுங்கள்” என்று இறைவனிடம் கோபித்துக் கொள்ளுபவர் குருவை விட வேறு எவராக இருக்க கூடும்?

”என்னைக் காப்பாற்றும்” என்று சரணாகதி அடையும் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்திடும் குருவின் அருள் கிடைப்பது பாக்கியம் அல்லவா?

சக மனிதனை நேசிப்பதை விட வேறென்ன உயர் தத்துவம் இந்த உலகில் இருக்கிறது. எந்த வித பிரதியுபகாரமும் இன்றி பிறருக்குச் சேவை செய்வதை விட உயர்ந்த பணி வேறில்லை.

கடவுள் தன்மையை மனிதர்கள் எளிதில் அடைய வேண்டுமெனில் அன்பு கொள்ளும் உள்ளவும், பலனறியா சேவையும் செய்து வந்தாலே போதும். 

அணையா  தீயான பசியை ஆற்றுப்படுத்துதலை விட உயர்வான இறைப்பணி வேறொன்றும் எங்கும் இல்லை.  

நமது சற்குருவின் ஆலயத்திலே காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு வரை அன்னமளிப்பு தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 100 பேருக்கு அன்னம் அளிக்கப்படுகிறது. 

விழாவில் மதியம் பஞ்சாமிர்தம், பொறியல், கூட்டு, சாதம், சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், கார போண்டா, பாயாசம் ஆகியவை பாக்கு தட்டுகளில் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து உணவருந்தினர்.

அபிஷேகம் முடிந்து சற்குரு மீண்டும் சன்னதிக்குள் எழுந்தருளி தீபம் காட்டி பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

சற்குருவின் ஆலயத்தில் இருந்து முட்டத்து வயல் வரை கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிரம்பியிருந்தன.  தரிசனம் முடிந்து உணவருந்திய பக்தர்கள் இல்லம் நோக்கிச் சென்று  கொண்டிருந்தனர்.

சற்குருவின் அருளைப் பெற - அவரின் பக்தர்களால் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த விழாவினைப் போல ஒரு விழாவினை எங்கும் காண இயலாது. 

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் சற்குருவின் அருளும் ஆசியும் பெற்று வளமும் நலமும் பெற்று மகிழ்வோடு வாழ குருவினைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

எந்த ஒரு தீயனவும் அண்டாது விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாய் அவரவர் வீடு திரும்பியதை நேற்று அறிந்து கொண்டேன். 






Friday, February 11, 2022

நரலீலைகள் - சொம்புத்தண்ணீர் தொடர்ச்சி (12)

நம்பூதிரி சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். ஆட்களின் நடமாட்டத்தால் வீடே பரபரப்பாய் இருந்தது. இன்றைக்கு கடைசி மகன் யூகேவிலிருந்து உயர்ந்த வக்கீல் பட்டம் பெற்ற பிறகு நேராக இங்கே தான் வருகிறான்.

பாகீரதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்னென்னவோ பதார்த்தங்களால் அடுக்களையில் கலவை மணம் வீசுகிறது. எல்லாவற்றிலும் நெய் தூக்கல் போல. நெய்வாசமும், பதார்த்த வாசமும் வாசல் புறத்தையும் தாண்டி தெருவில் செல்பவர்களின் நரம்புகளைத் தூண்டி விடுகிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் பாகீரதியின் வீட்டினை திரும்பிப் பார்க்காமல் போவதில்லை.

வாசலில் ஆங்கிலேயத்துரை நம்பூதிரிக்குக் கொடுத்த கார் பளபளப்பாய் நின்று கொண்டிருக்கிறது. 

“அவனுக்கென்ன, தொரையின் ஆசீர்வாதம், நம்பூதிரி சொன்ன வார்த்தைக்கு மறுபேச்சு இல்லையாம்” என்று ஊர் ஆட்கள் பேசிக் கொள்வார்கள்.

கார்கள் வாசலில் வந்து நின்றன. பாகீரதி வாசலுக்கு ஓடினாள். கடைசி மகன் பாரிஸ்டராகி வீட்டின் வாசலுக்கு வந்து நிற்கிறான் ஆனால் நம்பூதிரி வரவில்லை. பெற்ற மகனைப் பார்க்காமல் அப்படி என்ன நம்பூதிரிக்கு உடம்பில் நோவோ தெரியவில்லை.

உச்சி முகர்ந்து தன் மகனை வரவேற்று உள்ளே அழைத்து வந்தாள் பாகீரதி. பையன் வந்ததும் நம்பூதிரியின் அருகில் வந்து நின்று,”அப்பா” என்றழைத்தான்.

நம்பூதிரிக்கு திடுக்கென்று தூக்கிப் போட்டது. மலங்க மலங்க விழித்து விட்டு அவனைப் பார்த்தார். புன்னகைத்தார்.

“எப்போ வந்தாய்?”

”சத்தே மிந்திப்பா”

“உள்ளே போய் குளிச்சிட்டு சாப்பிடு” என்றுச் சொல்லி விட்டு திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். பாகீரதி அவரைச் சட்டை செய்யவே இல்லை. அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

* * *

திரை விலகியது.

ஐ  நாடக மேடையில் தோன்றினார். 

கை தட்டுகள் கொட்டகையை உசுப்பி விட்டது. விசில் சத்தமோ விண்ணைப் பிளந்தது. 

இந்தியர்களே! நாம் தேசப்பற்று மிக்கவர்கள். தேசமே உயர்ந்தது. எவரை விடவும் தேசத்தின் மீதான அன்பே மகத்துவமானது. முந்தைய ஆட்சியாளார்களால் தான் இந்தியா கல்வி கற்றது. கல்வி என்பது அறிவு. அறிவு என்பது கலகம். ஆகவே தான் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் கலகங்கள் நடந்து கொண்டே இருந்தன. இப்போதெல்லாம் ரவுடிகள் தானாகவே ஜெயிலுக்குள் சென்று விடுகிறார்கள். ஏனென்றால் நாங்களே ரவுடிகளாக மாறி விட்டோம். ஒரே ஊரில் இரண்டு ரவுடிகள் இருக்கலாமா? இருக்க கூடாது அல்லவா? ஆகவே தான் அவர்கள் ஜெயிலுக்குள் சென்று விடுகின்றார்கள்.

பெண்கள் வீட்டுக்குள் இருந்து விட்டால் கற்பழிப்புகள் நடக்காது அல்லவா? அதுவும் ஒரு சில பெண்கள் உடம்பை மூடி விடுவதால் கற்பழிப்புகள் குறைந்து விடுகின்றன. கற்பழிப்புகள் அதிகரித்தால் தானே பெண்களை வீட்டுக்குள்ளே பாதுகாப்பாய் இருங்கள் என்றுச் சொல்ல முடியும்? 

பெண்களுக்கு கல்வி எதற்கு? ஏன் அவர்கள் வீட்டினை விட்டு வெளியில் வர வேண்டும்? வீட்டுக்குள்ளே இருந்தால் தான் அவர்கள் சிவப்பு நிறமாகி அழகிகளாக ஜொலிக்க முடியும். அதை விடுத்து வெளியில் வந்தால் தமிழகத்தில் சுட்டு எரிக்கும் சூரியனை பெண்கள் மீது இரக்கம் கொள்வதில்லை. உடலைக் கருமையாக்கி விடும். 

இதன் காரணமாகத்தான் சூரியக் கட்சித் தலைவர் பெண்களுக்கு எதிரானவர் என்று சொல்கிறேன். 

அது மட்டுமா, நம் கட்சியின் தலைவரொருவர் பூஜை அறையில் பெண் சாமி  படத்தினைப் பார்த்து சுயமைதுனம் செய்து கொண்ட அவலத்தை நாமெல்லாம் வீடியோவில் பார்த்தோம் அல்லவா?

ஒரு ஆண் அதுவும் பூநூல் போட்ட ஒருவர் கைமைதுனம் அதுவும் படத்தினைப் பார்த்து செய்வது எவ்வளவு பெரிய தேச விரோதம்? 

பெண்கள் எல்லோரும் தேச விரோதிகளாய் போய் விட்டார்கள் என்று வரலாறு சொல்லி விடக்கூடாது அல்லவா? பெண்களுக்குப் படிப்பு எதற்கு? வீட்டுக்குள் இருந்து கொண்டு புருஷனை எப்போதும் புணருவதுதான் நம் பாரம்பரியம் அல்லவா? 

நாமெல்லாம் பாரம்பரியத்தை மீட்கப் போராட வேண்டும். பாரம்பரியத்தை சிதைத்த எதிர்கட்சிகளை எச்சரிக்க வேண்டும். 

இனி ஒரு பூநூல் உச்சிக்குடுமியன் கைமைதுனம் செய்தால் அது நம் தேசத்துக்கு தலைகுனிவு ஆகும். ஆகவே இந்தியர்கள் அனைவரும் சபதம் மேற்கொள்வோம். பெண்கள் அடுக்களைக்குள்ளே இருத்தல் தான் தேசப்பற்று ஆகும். 

சீதை வீட்டை விட்டு வெளியே வந்ததால் தானே இராமாயணம் வந்தது. இனிமேலும் இன்னொரு இராமாயணம் தேவையா? ஆகவே பெண்களுக்கு நாம் தேசப்பற்றினை பூஜை அறையில் ஊட்டி வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

ஜெய் ஹிந்த். ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்.

திரை மூடியது.

அரங்கமே கை தட்டினால் பெரும் புயலடிக்கும் சத்தம் போல ஒலியினால் நிரம்பியது.

தொடரும் விரைவில்....

மறைக்கப்படும் இந்தியாவின் வீழ்ச்சி பட்ஜெட் 2022 சொல்லும் சாட்சி

தொண்ணூற்று நான்கு சதவீத இந்தியர்களின் வாழ்க்கையை மீள முடியா சிக்கலுக்குள் தள்ளி விட்டு ஆளும் மோடி அரசு வாய் ஜாலங்களில் அரசை நடத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

கத்தரி முற்றினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும் என்பதைப் போல இப்போதெல்லாம் பிரதமர் மோடி பேசி வரும் பேச்சுக்கள் அவரின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டி வருகின்றன.

உதாரணத்துக்கு ஒன்று:

உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி ஆட்சியில் இல்லை என்றால் கோவிட் ஊசியை மறைத்து, மக்களிடம் கொள்ளை அடித்திருப்பார்கள் காங்கிரஸ்ஸார் என்கிறார். ஊசிக்கு காசு கொடுங்கன்னு ஆர்டர் போட்டதும், உச்சகாவிமன்றம் மன்னிக்கவும் உச்சநீதிமன்றம் இலவசமாய் ஊசி கொடுக்கணும் என்ற உத்தரவு போட்டதும், மெய் வாய் பொத்தி இலவசமாய் ஊசி வழங்கியதை வசதியாக மறந்து போனார். என்ன பேசுவது என்று தெரியாமல் பிரச்சாரத்தில் எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மக்களிடம் வெறும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்க முடியும்? இனி இயலாது என்று எல்லோருக்கும் தெரிந்து போனது கண்டு உச்சிக்குடுமி வகையறாக்கள் பல வித கலவர வேலைகளைச் செய்ய மக்களைத் தூண்டி விடுகின்றன. 

கோவிட்டால் மூடிக் கிடந்த பள்ளிகள் திறந்ததும் எங்கே சூத்திரர்கள் படித்து நமக்கு போட்டியாக வந்து விட்டால் என்ன செய்வது என்ற குரூர சிந்தனையில் மதக்கலவரங்களை உருவாக்கி கர் நாடகத்தில் மக்களின் மீதான வன்முறையைத் திணிக்கிறது பாஜகவின் ஆளும் அரசும், ஒன்றிய மோடி அரசும். 

சூத்திரன் படித்தே விடக்கூடாது என்று கங்கணம் கட்டி வேலை செய்கிறார்கள் உச்சிக் குடுமி வகையறாக்கள். சூத்திர முட்டாள்கள் தோளில் காவி போட்டுக் கொண்டு அலைகின்றார்கள்.  எத்தனை அம்பேத்கார், காந்திகள் வந்தாலும் சூத்திர முட்டாள்கள் உச்சிக்குடுமி ஆட்களுக்கு அடிமை வேலை செய்தே கிடப்பார்கள் போலும். தமிழகத்தில் மானமில்லா அதிமுக அடிமைகள்.

தலைப்புக்கு வந்து விடுவோம். 

சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துபவர் ரோசக்காரர்களாக இருந்தால், வெட்கம், மானம் சூடு சுரணை இருந்தால் பிஜேபிக்கு வக்காலத்தோ அல்லது ஓட்டோ போடமாட்டார்கள். ஏன்? கீழே இருக்கும் படத்தினைப் பாருங்கள். 

படத்தில் உள்ள கேள்வியை நிர்மலா சீத்தாராமனிடம் கேளுங்கள். கேட்ட உடனே பதில் வருமா? அதெப்படி வரும். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பலவித ஜால்சாப்புகளை அவிழ்த்து விடுவார். 

சம்பளம் வாங்குபவர்கள் வரி மட்டுமே கட்ட வேண்டும். வரி வாங்கும் மோடி அரசு ஒன்றையும் செய்யாது. செய்யவும் மாட்டார்கள். ஏழைகளை உருவாக்குவதை விட மோடி அரசுக்கு வேறு என்ன கொள்கை இருக்க முடியும்?

2022 பட்ஜெட் பற்றிப் பார்க்கலாம்.

2022ன் மொத்த பட்ஜெட் 39.44 லட்சம் கோடி

இதில் 135 லட்சம் கோடி கடன் - 31.03.2022 வரை

அடுத்த ஆண்டில் 152 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்குமாம்.

பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா? 16.61 லட்சம் கோடி. 

பற்றாக்குறை பட்ஜெட்டில் இராணுவத்துக்கு பட்ஜெட் தொகையில் 5.21 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார்கள் மோடி அரசு.

பட்ஜெட்டில் சுமார் 35 சதவீதம் கடன் வாங்கி சமாளிக்கிறார் நிர்மலா சீத்தாராமன். அதுமட்டுமல்ல வாங்கும் கடனுக்கு பட்ஜெட்டில் சுமார் 20 சதவீதம் வட்டி கட்ட செலவழிக்கின்றார்கள்.

ஆனால் பாருங்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய போன் நிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய சுமார் 3 லட்சம் கோடி வரியை 15 வருடங்களுக்குள் கட்டலாம் என்று அரசு அனுமதி அளிக்கிறது. கார்பொரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்திருக்கிறது. 

மாதச் சம்பளம் வாங்கி ஒழுங்காக வரி கட்டுபவர்களுக்கு தண்டனை தருகிறார்கள். ஆனால் வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு காலத்தில் சலுகை கொடுக்கிறார்கள். அந்த வரிப்பாக்கிக்கு வரி போடவும் இல்லை.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 ஆயிரம் கோடி குறைத்திருக்கின்றார்கள். 

மேற்கண்ட செய்திகள் பட்ஜெட் 2022 நிர்மலா அவர்கள் தந்தது. பொய் ஒன்றும் இல்லை. 

ஆனால் பாருங்கள் நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்கிறார் பிரதமர் மோடி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வாய்சவாடல் விட்ட பிரதமர் மோடி உரத்துறைக்கு 40 கோடி குறைத்து விட்டார்.

வ.நாகப்பன் என்ற பொருளாதார நிபுணர் விகடனில் சம்பளதாரர்களுக்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்கிறார். இவரையெல்லாம் பொருளாதார நிபுணர் என்கிறார்கள். 2014ம் 2022ம் ஒன்றா என்ற கேள்விக்கு என்ன பதில் தருவாரோ? 

வழக்கம் போல மோடி அரசை வார்த்தைகளால் நக்கி விடுவார் போல.

கவின்கேர் சி.கே. ரங்கநாதன் இது நீண்டகால அடிப்படையிலான பட்ஜெட் என்று சொரிகிறார். 

வருடம் தோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றாரே பிரதமர் மோடி அதைப் போலவா? 

பசிக்கும் போது சோறு கொடுக்கணுமா இல்லை அடுத்த ஆண்டு பசியாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லணுமா சி.கே.ரங்கநாதன் அவர்களே? உங்களை எல்லாம் புத்திசாலிகள் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருப்பது வேடிக்கை.

சாதாரண மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது ஒன்று தான் பொருளாதார மீட்சிக்கு வழி. வாங்கும் சக்தி அதிகரித்தால் ஜி.டி.பி உயரும் என்பது தெரியும். ஆனாலும் செய்யமாட்டார்கள். 

ஏனென்றால் ஏழைகளாக்கி அவர்களைப் பஞ்சைபராரி ஆக்கி விட்டால் கல்வி கற்பதில் இருந்து விலக்கி விரட்டி விடலாம். அதிகாரப் போட்டிக்கு சூத்திரர்கள் வரமாட்டார்கள் அல்லவா? பசியோடு வைத்திருந்தால் மக்கள் பசிக்கு வேலை செய்வார்கள் அல்லவா? 

இதுதான் சாநக்கிய திட்டம். குரூரத்தின் கொள்கை. அதைத்தான் மோடி அரசு இந்தியர்களுக்குச் செய்து வருகிறது.

இந்த பட்ஜெட் என்ன சொல்கிறது என்பதின் ஒரு சோற்றுப் பருக்கைப் பதத்தினை இங்கே எழுதி விட்டேன். 

புரிந்தவர்கள் புத்திசாலிகள். புரியாதவர்கள் என்றைக்கும் உச்சிக்குடுமிகளின் அடிமை என்பதில் மாற்றுக் கருத்தியல் இல்லை என்பது உண்மை.

Sunday, February 6, 2022

நரலீலைகள் - சொம்புத் தண்ணீர் (18+) (11)

ஊரே அடங்கி விட்டது. சில் வண்டுகளின் ரீங்காரமும் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் உல்லாசமாய் கிடக்கும் தவளைகளின் ‘கடங்குடான்’ சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. 

வாசலுக்கும் வீட்டுக்குள்ளுமாக அலைந்து கொண்டிருந்தாள் பாகீரதி மாமி. வேலைக்குப் போன ஆத்துக்காரர் இன்னும் வரவில்லையே என்ற பதட்டத்தில் குட்டி போட்ட பூனையாட்டம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள் மாமி.

நான்காவது குழந்தை. அச்சு அசல் ஆத்துக்கார நம்பூதிரியைப் போலவே உரித்துக் கொண்டு வந்திருந்தான். ஊரே கண்போட்டது. இன்னும் பாகீரதி ரதி போலவே இருந்தாள். அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. கட்டான உடலில் ஆங்காங்கே செதுக்கியது போல உடலமைப்பு அவளுக்கு. எல்லாம் குடுப்பினை என்று ஊரில் பிற உடம்பு வீங்கிப் போன மாமிக்கள் பேசிக் கொள்வார்கள்.

நம்பூதிரிக்கு சந்தோசம் பொங்கும். பாகீரதி அவருக்கு ஏற்ற ஆத்துக்காரி என்பதில் அவருக்குப் பெருமையும் கூட. 

பின்னே, எள் என்றால் எண்ணையாக அல்லவா நிற்கிறாள். அவளின் நெளிவு என்ன? சுழிவு என்ன? பந்துக்களை (பந்துக்கள் என்றால் உறவினர்கள் என்று அர்த்தம் வரும், புரிகிறதோண்ணா உங்களுக்கு) அவள் கையாளும் விதமென்ன? அவற்றையெல்லாம் சொல்லி முடிக்கத்தான் முடியுமா? அத்தனை நறுவிசு. அத்தனை சமத்து. 

பாகீரதியைப் பற்றி நம்பூதிரியின் அம்மா சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார். நான் பார்த்த சம்பந்தமாக்கும் என்று முடிவில் ஒரு சிரிப்பால் சொல்லி முடிப்பாள். 

பாகீரதியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் நம்பூதிரி. பாகீரதியும் பார்க்க கொழுந்து வெற்றிலை மாதிரி இருப்பாள். காதோரம் வளைந்து கிடக்கும் முடிக்கற்றை புரள, பூனை முடியுடன் மஞ்சள் தேய்த்துக் குளித்து விட்டு வந்தாளென்றால் சாட்சாத் ரதி தோற்றுப் போவாள். மடிசாரில் ஒயிலாக நின்றுக் கொண்டு நம்பூதிரியைப் பார்த்தாளென்றால் உலைக் களமாகும் அவருக்கு.

(எதுவென்று கேட்டு விடாதீரும். சொல்லக் கூடாது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலையாக்கும்)

நம்பூதிரிக்கு நெய்யும் பாலுமாய் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போடுவாள். கையொழுக வழித்து வழித்து இலையை நக்கிக் கொண்டே பாகீரதியை பார்த்துச் சிரிப்பார். பாகீரதிக்கு வெட்கம் வந்து விடும். 

(ஏன் வெட்கம் வருகிறது என்று சொல்லக் கூடாது. அது சரியாவும் படாது. புரிகிறதோண்ணா உங்களுக்கு?)

பாகீரதியிடம் இருக்கும் ஒரே ஒரு சின்ன பிரச்சினை மாராப்பை சரி செய்யமாட்டாள். அதில் மட்டும் அவள் கொஞ்சம் அஜமஞ்சம். நம்பூதிரியும் அவ்வப்போதும் சரி, பள்ளியறையிலும் அவளிடம் சொல்வதுண்டு. 

அதற்குப் பாகீரதி, “போங்கண்ணா, நீங்க இங்கே இருக்கறச்சே எனக்கு எல்லாமும் மறந்து போய்டுதுண்ணா? நான் உங்களைப் பாக்கிறதா? இல்லே மாராப்பை இழுத்து விடுகிறதான்னு குழம்பிட்றேண்ணா” என்பாள்.

கேட்டவுடன் நம்பூதிரிக்கு உள்ளமெல்லாம் பூரித்துப் போய் விடும். இருந்தாலும் நம்பூதிரிக்கு உள்ளுக்குள்ளே ஒரு சின்ன நெருடல் அவ்வப்போது வரும்.

பாகீரதிக்கு அது கொஞ்சம் எடுப்பாயிருக்கும். எடுப்பாயிருக்குமென்றால் பெரிசு என்று நினைத்து விடாதீரும். கோவில் சிலைகளைப் பார்த்திருப்பீர்களே. 

வடிவாக கைக்கு கொஞ்சம் மீறியும் மீறாமலும் இருக்குமே அதைப் போல. ஈட்டி கூர்மையெல்லாம் தோத்துப்போகுங்கானும். அப்படி ஒரு கூர்மைங்கானும். இருக்கிக் காட்டிய மார்ப்புக் கச்சைக்குள் மாரப்பு விலகிய அந்த தருணத்தில் வெளிப்படும் அழகுக்கு ஈடு இணையை எங்கும் காணமுடியாது. 

நம்பூதிரிக்கு ஒரு சில நாட்களில் அவரைப் பார்க்க வரும் பந்துக்களும், அலுலலக ஆட்களும் அவ்வப்போது அந்தக் கோலத்தில் பாகீரதியைப் பார்ப்பதில் அவ்வளவு சிலாக்கியமாய் படவில்லை.

ஆனால் அது அவளின் சுபாவமாய் போய் விட்டதால் அவருக்கு அதில் நெருடல் இருந்தாலும் கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் பாருங்கள்.

கடவுள் இருக்கின்றானே அவன் செய்யும் லீலா வினோதங்களில் ஒரு சில சம்பவங்கள் மிகப் பெரும் காரியங்களுக்கு விதை போட்டு விடுவது போல அமைந்து விடும்.

வாசலில் யாரோ வருவது போல அரவம் கேட்க, பாகீரதி அரக்கப்பரக்க வெளியே வந்து பார்த்தாள். தெரு நாயொன்று வாசலோரம் சென்றதினை மாட விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாள்.

ஒதுங்கி இருந்து இன்றோடு பன்னெண்டு நாளாயிடுத்து. குளித்து முடித்து புஷ்பம் சூடி சூரிய பகவான் மறைவான நேரத்திலிருந்து காத்திருந்தாள். அவ்வப்போது நம்பூதிரி கையொழுக இலையை வழித்து வழித்து சாப்பிடுவது கண் முன்னே வந்து நின்று அவளுக்குள் மோகத்தை உண்டாக்கியது.

நாயைக் கண்டு விட்ட பின்னாலே சோகமுடன் வீட்டுக்குள் வந்தாள். உடல் சோர்வுற அங்கிருந்த நாழியிலே அமர்ந்தாள்.

பாகீரதியின் அசட்டையான மாரப்பு விலகிக் கிடக்கும் அந்த வேளையில் அவளைப் பார்க்கும் நம்பூதிரிக்கு மட்டும் அது வந்திருந்தால் பரவாயில்லை. 

மன்மதனும் பார்த்து விட்டான் அக்கோலத்தில் அவளை.

மன்மதன் பாயக்கூடாத இடத்தில் தன் காம அம்பினை வீசி விட்டான்.

பிரச்சினையில் சிக்கி விட்டனர் பாகீரதியும் அவள் ஆத்துக்காரர் நம்பூதிரியும்.

தொடரும்....

====== >>>>>> பாகீரதி <<<<<< =====

”மாயா, மாயா...!” என்று அலறினான் சந்து.

மாயனுக்கு சந்து அலறிய சத்தமெல்லாம் கேட்கவில்லை. 

மேலே இருப்பதைப் படித்து விட்டு தேன் குடித்த நரி போல அடுத்த பாகம் எப்போது வருமென்று துடிப்புடன் காத்திருந்தான்.

”தங்கவேலுக்கு என்னவாயிற்று? செக்ஸ் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே?” என்று புலம்ப ஆரம்பித்தான் சந்து.

பாகீரதிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதிலும், நம்பூதிரிக்கு எப்போதும் வழக்கம் போல வாழை இலையில் விருந்து படைத்து அதை நம்பூதிரி ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் படிக்க வேண்டுமென்று மாயன் கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தான்.

* * *

படுதா நீக்கி மேடையின் நடுவில் வந்து நின்றார் ஐ. 

ராமானுஜ பாவத்தில் பட்டாடை உடுத்து, நெற்றில் திருமண் இட்டு தெய்வக் கோலத்தில் வந்து நின்றவரைப் பார்த்து சின்னக்குட்டி வகையறா ரசிகர்கள் அடித்த விசிலில் நாடகக் கொட்டகையில் தூசி பறந்தது. அவர் கையை உயர்த்தினார். கொட்டகையே நிசப்தமாகியது.

சமந்தனும், நரயானும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். ஐயின் விரிஞ்ச மார்பில் பட்டாடை அவ்வப்போது விலக, மேடையின் நடுவில் உட்கார்ந்திருந்த இட்லிக்கு இடுப்பின் நடுவில் வியர்த்தது. சும்மாவா பின்னே பதினெட்டு கோடி இல்லை இல்லை பதினெட்டுப் பட்டியிலும் இல்லாத அழகனன்றோ ஐ. வியர்வை பொங்கிப் பிரவாகம் எடுக்குமே எடுக்காதா பின்னே?

அனைவரையும் பார்த்தார். ரசிகர்கள் அவர் பேசுவதைக் கேட்க சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் காதினை விரைப்பாய் வைத்துக் கொண்டிருந்தனர்.

”நாடு ஒரு புதிய சித்தாந்தத்தில் நுழைய இருக்கிறது. நாமெல்லாம் மறந்து போன அந்த நாட்களை  நம் நாடு மீண்டும் கொண்டு வரப்போகிறது. மிகப் பெரிய புரட்சியை, இதுவரை இல்லாத ஒரு திட்டத்தினை உங்களின் சேவகனான நான் கொண்டு வர உள்ளேன். இன்றிலிருந்து பெண்கள் ஆண்கள் சுதந்திரக்காற்றினைச் சுவாசிக்கலாம். சுதந்திரப் போரில் வாரிசுக்கட்சி வாங்கிக் கொடுத்தது சுதந்திரம் இல்லை. அது விடுதலை. அதனால் என்ன பிரயோஜனம். பெண்களும் ஆண்களும் இன்னும் விடுதலை பெறவில்லையே? அந்த வருத்தம் உங்களுக்கெல்லாம் 60 ஆண்டுகளாக உண்டு என்று எங்களுக்குத் தெரியும். அதை நான் நீக்கப் போகிறேன்.”

”நாளையிலிருந்து இந்த நாட்டில் கணவன் மனைவி என்ற உறவு தடை செய்யப்படுகிறது நம் நாட்டிலே”

விரிஞ்ச மார்பழக ஐ ஹீரோவின் இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் இட்லி குஷியுடன் இரண்டு கைகளிலும் இரத்தம் தெறிக்கும்படி கைகொட்டி கண்ணில் நீர் வழிய குதித்தது.

சமந்தனும்,  நரயாணும், குப்பைவாந்தியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

* * *
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. நாவல் கதாபாத்திரங்கள் கற்பனையானவை. அங்கணம் எவருக்கேனும் வருத்தமெற்பட்டால் நாவலில் வோட்டிங்க் மெசின் போல எடிட்டிங்க் செய்யப்படும்.

37வது சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே!

இயற்கை அன்னையின் அருள் பாலிக்கும், சித்தர்கள் ஸ்தூல வடிவில் உலா வரும் வெள்ளிங்கிரியாம் தென்கயிலையிலே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஜீவமுக்தி அடைந்து குருவருள் கிடைக்க விதிப்பலன் கொண்ட ஜீவாத்மாக்களுக்கு அருள் வழங்கி வரும்,  நமது குரு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் 37வது குருபூஜை விழாவில் பங்கு கொண்டு சீரும் சிறப்பும் வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 


ஸ்ரீபிலவ வருடம் - தமிழ் மாசி மாதம் 1ம் தேதி - ஞாயிற்றுக் கிழமை

2022 ஆங்கில வருடம் - 13.02.2022ம் தேதி

இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி ஆலயம்

தொடர் தியானம்

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை


அன்னமளிப்பு காலையிலிருந்து வழங்கப்படும்


ஈஷா யோக மையம் செல்லும் வழியில் முள்ளங்காட்டில் இடதுபுறச்சாலையிலிருந்து ஆசிரமத்திற்கு வரலாம்.


தொடர்புக்கு : 98948 15954, 90802 22657

டிஜிட்டல் அழைப்பிதழ் கீழே இருக்கிறது. கிளிக் செய்து மேலதிக விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



நமது குருவின் வரலாற்றினையும் ஆசிரமத்தினையும் கீழே இருக்கும் வீடியோவில் காணுங்கள்



அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்



Friday, February 4, 2022

நரலீலைகள் - மோஸடி மன்னராட்சி - அரசியல் தத்துவம் (10)

(ஐ) - (I) உரை
 
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் கடுமையான ஏழ்மை நிலையில் தள்ளப்பட்டோர் 5.60 கோடி இந்தியர்கள்

2021ஆம் ஆண்டில் 13.40 கோடி இந்தியர்கள் இன்னும் மோசமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஒரே ஆண்டில் 7 கோடி பேர் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள்.

கொரானா காலத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் சுகாதார பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் மொத்த தொகையில் திடீரென்று 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்? 

மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் கல்விக்கான நிதியில் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்?

2020 -2021ம் ஆண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

மேற்கண்ட செய்திகள் ஆக்ஸ்ஃபேம் இந்தியா (Oxfam India) இணைய தளத்தில் கிடைக்கிறது கொல்லும் சமத்துவமின்மை என்ற தலைப்பில்.

இப்படி எல்லாம் பத்திரிக்கைகள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 

இந்திய மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

2020ஆம் ஆண்டில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியாக இருந்தது.

இந்தியாவே முடங்கிப் போயிருந்த கொரானா காலத்தில் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 53.16 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது.

இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 சதவீதம் எனில் இதில் 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்களிடம் இருக்கிறது. மீதி இருக்கும் 6 சதவீதம் சொத்துக்கள் மட்டுமே இதர இந்தியர்களிடம் உள்ளது.

ஒரு இந்திய பணக்காரரின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 8.9 அமெரிக்க பில்லியன் டாலர்கள். 2021ம் ஆண்டில் சொத்து மதிப்பு 82.2 அமெரிக்க பில்லியன் டாலர்கள்.

ஒரே ஆண்டில் 74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்வு. 

ஒரு பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில்  1,00,00,00,000 US Dollar =  74,68,30,00,000 Indian Rupee (ஏழாயிரத்து நானூற்றி அறுபத்தெட்டு கோடி ரூபாய்) என்றால் 74,000,000,000 US Dollar = 5,526,542,000,000 Indian Rupee (ஐந்து இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து அற நூற்றி ஐம்பத்து நான்கு கோடி ரூபாய்) 

ஒரே ஆண்டில் இவ்வளவு சொத்து மதிப்பு நம் இந்திய தேசத்தின் எனது நண்பரின் சொத்து உயர்ந்திருக்கிறது. 

சாதனை... சாதனை... சாதனை...

உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

பணம் அல்ல சாதனை.  

இந்தியர்கள் ஆன்மீக வாதிகள். அவர்களுக்கு பணம் பிரதானம் இல்லை.

உங்களுக்கு ஆன்ம அமைதிதான் வேண்டும். எவரோ பணக்காரர்ரானால் என்ன ஆகா விட்டால் என்ன? அந்தப் பணத்தினால் அமைதியைக் கொண்டு வந்திட முடியுமா?

கடவுளின் முன்னால் பணமெல்லாம் தூசு அல்லவா?  

நாம் பக்தி யோகத்தில் மூழ்கிட வேண்டும். 

நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள். 

இங்கு பணக்காரர்கள் பற்றி யோசிக்க கூடாது. பணம் மனதுக்குள் வந்து விட்டால் பக்தி போய் விடும். பணமிருக்கும் உள்ளத்தில் கடவுள் இருக்க மாட்டார்.

கடவுள் இன்றி இவ்வுலகமே இல்லை.

ராம நாமமே சிறந்த வாழ்க்கை தத்துவம். 

ஆகவே 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்கள் அனுபவிக்கின்றார்களே என்று பொறாமை படக்கூடாது.

உள்ளத்திலே பொறாமை வந்து விட்டால் கடவுள் உங்களிடமிருந்து விடை பெற்று விடுவார். பக்தி  அகன்றோடி விடும். பக்தி இல்லா மனிதம் சடத்துக்கு சமானம்.

உயர் படிப்பும், உயர் பதவியும் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்று விசனப்படக்கூடாது. இனி உங்களால் அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் படிக்கவே அனுமதிக்க கூடாது என்று அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அங்கனம் அனுமதித்தால் மட்டும் தானே நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள். சிந்தனை இருந்தால் மட்டுமே தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். குழப்பங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்.

உங்களுக்கு விதிக்கப்பட்டது இதுவே என்று உளச்சாந்தி கொள்ளல் தான் இராமபிரானின் பக்தர்களுக்கு உகந்தது.

இதோ இந்தியர்களுக்கு ராமர் கோவில் கிடைத்து விட்டது.

பிறகென்ன வேண்டும்? 

ராமரிடம் செல்லுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் ஏழ்மையை அவர் சரி செய்து விடுவார்.

இராமபிரானின் அன்பும் கருணையும் கிடைத்து விட்டாலே, அனுமன் உங்களுக்கு உதவ ஓடோடி வந்து விடுவார்.

எத்தனை கோடி பேர் வேலை இழந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏனென்றால் அனுமனின் ஆசியும், பகவான் இராமபிரானின் பக்தருக்கும் வேலை கிடைத்தே விடும். இராம பக்தர் ஸ்ரீ ஹனுமானுக்கு கோவில்களை பக்தர்கள் எழுப்பி வழிபாடு செய்து புகழ் பரப்புவது போல, நீங்களும் இராமபக்தர்கள் ஆனால் கிடைக்கும் என்று வரலாறு சொல்கிறது.

அன்புமிக்க இந்தியர்களே, உங்களின் சேவகனான ஐ (நான்) உங்களுக்காகவே வாழ்கிறேன். 

கடந்த 60 வருடமாக அரசியல் திருடர்கள் மக்களிடமிருந்து அவர்களின் சொத்துக்களை திருடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களிடமிருந்து உங்கள் சொத்துக்களை அரசியல் எதிரிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கில்தான் 94 சதவீத சொத்துக்களை நம் அரசாங்கத்திடம் அடிபணிந்து கிடக்கும் வெறும் 140 நபர்களிடம் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களிடம் நேரடியாக பணம் கேட்டுப் பார்த்தேன். எனது பெயரில் இருக்கும் கஜானாவில் லட்சம் கோடி கூட சேரவில்லை என்பது எவ்வளவு பெரிய தேசத்துரோகம்?

உங்களுக்காகவே வாழும் நான் கேட்கிறபோது பணம் தராமல் இருக்கின்றீர்கள். அது சரியா? தகுமா?

உங்கள் பணத்தினைக் கொள்ளை அடித்திட உள்ளூர் கட்சிக்காரர்கள் துடித்துக் கொண்டிருப்பது கண்டு எனக்குள் சொல்லொண்ணா வேதனை மண்டியது. 

உங்களுக்குள் அறியாமை எனும் இருள் மண்டிக்கிடப்பதால், உங்களால் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது.

மக்கள் சேவகனான நான் ஒரு புது வித யோஜனையாக வரி விதிப்பினை உருவாக்கினேன். விலைவாசி உயர்ந்தது. வரி வசூலும் உயர்ந்தது. உங்களுக்குத் தெரியாமலே உங்களிடமிருந்து எனது கஜானாவுக்கு பணம் இன்று லட்சம் கோடியில் வசூலாகிறது.

தேசப்பற்று மிக்க நீங்கள் வரி செலுத்துதல் அவசியம். தேசத்தை நீங்கள் நேசிக்க வேண்டும். நீங்கள் செலுத்து வரி பற்றி கவலைப்படாதீர்கள். அது  140 பணக்காரர்களிடம் பத்திரமாய் இருக்கும். எவராலும் திருட முடியாது. 

உங்கள் சம்பளம் குறைந்திருக்கிறது. விலை உயர்ந்திருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆகவே குறைவாக உணவு உட்கொள்ளுங்கள். அதிக உணவு ஆபத்து அல்லவா?

இராமபிரானுக்கு ஒரு நேரம் அல்ல அல்ல மாதம் பத்து நாட்கள் உபவாசம் இருங்கள். அவரின் ஆசியைப் பெறுவதை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

* * *

மேடையிலிருந்து வெளியேறிய ஐ, மீண்டும் ஒரு உடையை மாற்றிக் கொண்டார். மேக்கப் விமன் டச்சப் செய்தார்.

”அடுத்த சீன் எப்போது?” என்று கேட்டார் நடிகர் ஐ.

“பிறரும் நடிக்க வேண்டாமா? அவர்களின் சீன் முடிந்ததும் உங்க சீனைச் சொல்கிறேன்” என்றார் உச்சிக்குடுமி இயக்குனர்.

* * *

”காலம் எல்லாவற்றுக்குமான தீர்ப்புகளை பதிய வைக்கும். நானென்ற அகம்பாவம் அழிவில் முடியும் என்பதை மனிதர்கள் மறந்து போய் விடுகிறார்கள். உயர் ஜாதி வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில் கிடக்கும் இந்தியா விடுதலை அடைய இன்னுமோர் சுதந்திரப் போர் வெடித்தாலும் வெடிக்கும் அபாயம் உண்டாகி இருப்பதை உணர முடிகிறது” என்றான் ஜூனா.

”ஆம், மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டால் வயிற்றுப்பாட்ட்டினைச் சமாளிக்கவே நேரமிருக்கும். அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது அல்லவா? ஆகவே தான் மக்களை அரசாங்கங்கள் ஏழ்மையில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யோசிக்கவே முடியாது. பசித்திருக்கும் போது ஆக்கப்பூர்வ சிந்தனைகள் வராது அல்லவா? ஜூனா” என்றான் பீமா.

* * *

”என்னடா சந்து, ஐ என்ற புதிய ஆள் வந்திருக்கின்றானே நாவலில்”

“ஆமா மாயாண்ணே, எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கலாம், அடுத்து என்ன எழுதுகிறான் இந்த நாவலாசிரியன் என” என்றான் சந்து.

தொடரும் விரைவில்...