குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, September 20, 2020

நிலம் (72) - தேனி கம்பம் போடி நாயக்கனூர் தென்னை தோட்டங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

கோவிட் இந்தியாவில் பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. இனிமேல் தான் பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து வரும். ஆகவே அனைவரும் முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்கவும். 

மத்திய அரசும், மாநில அரசும் இனி ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு பலப் பிரச்சினைகள். மக்களாகிய நாம் கையறு நிலையில் நிற்கிறோம். அது தான் உண்மை. 

இந்தியப் பொருளாதாரமா? மக்களின் உயிரா? என்று வருகையில் அரசு பொருளாதாரத்தை தான் முன்னெடுக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



கல்விக்கும் பல்வேறு தடைகளை உருவாக்கி இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களை படிக்க விடாமல் செய்வதில் மத்திய அரசு அதீத முனைப்புக் காட்டுகிறது. சுற்றிச் சுற்றி அடிக்கிறது மத்திய அரசு நீதிமன்றத்தின் துணை கொண்டு. 

இத்தனை தேர்வுகள் நடத்த காரணம் அரசியல்வாதிகள் கல்வி மூலம் கருப்பு பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றுப் பேசுகின்றார்கள். கல்வியை அரசுடைமை ஆக்கி விட்டால் கருப்பு பணம் ஒழிந்து போகும். பிரதமர் நரேந்தர் மோடி அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால் அவரால் செய்ய இயலுமா என்பது கேள்விக் குறி. ஒவ்வொரு மதத்தின் பெயராலும் கல்விச் சாலைகள் இயக்கப்படுகின்றன. சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை.

ஆனாலும் எது வரினும் தாங்கி நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் நம்மிடம் உண்டு.

இதுவும் கடந்து போகும். 

தமிழகத்துக்கு மிக நல்ல தலைவர் வருவார் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.

* * * 

இனி தேனி கம்பம் போடி விஷயத்துக்கு வந்து விடலாம்.

கோல்ட் ஆன்லைன் மூலமாக தென்னந்தோப்பு நிலங்கள் விற்பனைக்கு பட்டியலிட்டு இருந்தேன் அல்லவா?

இந்த நிலங்கள் தண்ணீர் வசதி, மண்ணின் தரம், லீகல், வாஸ்து, எதிர்கால வளர்ச்சி, வருமானம் ஆகியவைகள் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.

பெரும்பாலும் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் தென்னந்தோப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் தேனி, கம்பம், போடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர நேரிட்டது. அங்கிருந்தும் ஒரு சில நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கோல்ட் ஆன்லைனில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.

நல்ல தண்ணீர் வசதி, மண் வளம், லீகல், வாஸ்து பார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன. 

நான் பெரும்பாலும் தென்னைத் தோப்புகளைத் தேர்ந்தெடுக்க காரணம் முதலீடு செய்த 40வது நாளில் வருமானம் வந்து விடும். குறைவான பராமரிப்பு, நிரந்தர வருமானம். எதிர்காலத்தில் நல்ல முதலீடு பயன் கிடைக்கும் என்பதால் அடியேன் இவ்வகை நிலங்களையே தேர்ந்தெடுக்கிறேன்.

ஒரு ஐந்து ஏக்கர் வேண்டும், ஆனால் பணம் குறைவாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். நமது நிறுவனம் பல வங்கிகளில் DIRECT SELLING AGENT அனுமதி பெற்றிருக்கிறோம். ஆகவே லோன் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

இனிமேலும் தேனி, கம்பம், போடியில் விரைவில் நிலங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்தும் அற்புதமான பலனையும், நல்ல வருமானத்தையும் தரும் நிலங்கள். கொஞ்சம் காசு சேருங்கள். ஆளுக்கு இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் என வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்.

தோட்ட பராமரிப்பு, வருமானம் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். நமக்கு அங்கே அலுவலகம் உண்டு. அடியேன் கவனித்துக் கொள்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் கட்டணம் உண்டு. 





விரைவில் தென்னைத் தோட்டங்களுக்கு உரிமையாளராக வாழ்த்துகிறேன். எவரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. மாதா மாதம் வருமானம். அழகான வாழ்க்கை. நிரந்தரமான நிம்மதியான வருமானம். வேறு எந்த வேலையிலும் கிடைக்காத சந்தோஷம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

அழைக்கவும் பேசலாம்.

கோவை தங்கவேல் - 96005 77755