குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, March 27, 2022

காக்கை குருவி ஹிஜாப் முஸ்லிம்கள் இந்துக்கள் இந்தியா

கோவை பேரூரிலிருந்து சிறுவாணி வரை சாலையை இருபக்கமும் அகலப்படுத்திக் கொண்டிருகின்றார்கள். கனரக இயந்திரங்கள் சாலைகளின் இருமருங்கும் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து விட்டு ஜல்லி நிரப்பப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கூட்டம் கார்களிலும், பைக்குகளிலும் டான்ஸ் கிளப்பின் ஹெட் ஆஃபீசுக்கு வருகிறது. சாலையை அகலப்படுத்த வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கிறது. யானை வழித்தடத்தில் அனுமதி கிடைத்தது எப்படி என்பதெல்லாம் மர்மத்தின் கதை. இந்த அபார்ட்மெண்ட் பற்றிய தகவல்கள் ரெராவில் கிடைக்கவில்லை. அந்த அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஈஷா டான்ஸ் கிளப் ஓனரின் நட்புவட்ட மந்திரி பிரதானிகளின் அன்பினால் அபார்ட்மெண்ட்டுக்கு செல்லும் சாலைகளை செப்பனிட்டும், சாலையோரம் சிமெண்டால் தடுப்புகள் கட்டி அகலப்படுத்திக் கொடுத்தார்கள். கொடுப்பினை வேண்டும்.


(ஈஷா டான்ஸ் கிளப் கட்டிக் கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட் வட்டத்தில் இருப்பது)

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் காருண்யா போலீஸ் நிலையத்தின் கேட்டை கடந்த வாரம் யானை ஒன்று கோபத்தில் உடைத்து எறிந்து விட்டது. பார்க்க புகைப்படம். ஆதாரம் இருக்கிறது. சும்மாச்சுக்கும் எழுதவில்லை.


கடந்த வாரத்தில் யானையால் உடைக்கப்பட்ட காருண்யா நகர் காவல்துறை அலுவலகத்தின் பிரதான கேட்

இப்படியெல்லாம் தொண்டாமுத்தூர் ஈஷா டான்ஸ் கிளப்பால் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பது இயற்கையை அழித்தலில் தான் தொடங்குகிறது அல்லவா? அதை செவ்வனே செய்கிறார்கள் இந்தப் பகுதியில்.

கோடை காலத்தில் மலைகளில் தண்ணீர் இருக்காது. யானைகள் மலையிலிருந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் பல்லாண்டுகாலமாக இருக்கும் வழித்தடம் வழியாக கீழே வரும்.

அந்த வழித்தடத்தில் ஈஷா டான்ஸ் கிளப்பைக் கட்டி வைத்துக் கொண்டுள்ளது. சிவராத்ரி அன்றைக்கு மலைகளில் அமைதியாக இருக்கும் காக்கை குருவிகளில் இருந்து அனைத்து மிருகங்களையும் டான்ஸ் என்ற பெயரில் கடூர சத்தத்தினால் பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் புரிதலும் இன்றி அரிப்பு தாளாமல் கார்களில் குவியும் மனிதப் பிறவிகளை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஆன்மீகத்தின் முக்கியதன்மை அமைதியாக இருப்பது. ஆட்டம் பாட்டம் இல்லை. 

அது மட்டுமல்ல சாலையை அகலப்படுத்துகிறேன் பேர்வழி என ஆலந்துறை அரசுப் பள்ளியின் எதிரில் இருந்த பெரிய மரமொன்றை வெட்டி வீழ்த்தி விட்டார்கள். மிகப் பெரிய மரம் அது. அடுத்து காருண்யா நகரில் சிறுவாணி சூப்பர் மார்க்கெட் பகுதியில் இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள். 

காக்கைகளும், குருவிகளும் அடைந்திருந்த வாழ்விடமான அந்த மரங்களை மனிதப்பதர்களின் வசதிகளுக்காக வெட்டி விட்டார்கள். எத்தனை ஆண்டுகாலமாக அம்மரங்கள் அங்கிருந்தனவோ தெரியவில்லை. எத்தனையோ சின்னஞ் சிறு பறவைகளுக்கு அவைகள் புகலிடமாக இருந்தன. இனி அப்பறவைகள் வாழ்விடத்திற்கு  என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.

மரங்களை வெட்டா வண்ணம் சாலைகள் அமைத்தால் ஒன்றும் குறையப்போவதில்லை. நாம் பிறக்கும் முன்பே உருவான மரத்தை வெட்ட வேண்டுமா என்று காண்ட்ராக்டர் கூட நினைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கூட தடுக்கவில்லை. என்ன தான் ஜென்மமோ தெரியவில்லை.

ஏற்கனவே ஈஷா டான்ஸ் கிளப் நூறு ஏக்கரில் இருந்த மரங்களை வெட்டி, பெரும் பாறைகளை வைத்து கிளப்பை சுற்றிலும் மதில் கட்டி விட்டது. இந்த இடத்தில் யானை வழித்தடமில்லை என்று சான்றிதழ் கொடுத்த அரசு மகானுபாவர்கள் ஏன் பெரும் பாறைகளை வைத்து மதில் கட்டினீர்கள் என்று கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிளப்பின் கருணையில் வாழும் கிளப் டான்ஸ் சேவகர்கள் அவர்கள். சம்பளத்தை விட கிம்பளமும், அதிகாரமும் பெரிது அல்லவா? 

அறம், சட்டம், தர்மம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதுதான் பரிகாரம் இருக்கிறதே, நவீன குரு இருக்கின்றார்களே. அவர்கள் சிவபெருமானையே பூமிக்கு கொண்டு வந்து பதிய வைத்திருக்கிறார்கள். அவர் நம்மை கவனித்துக் கொள்ள மாட்டாரா? என்ற நிலையில் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

இப்படி மரங்களையும், வழித்தடங்களையும் அழித்து விட்டால் காக்கைகளும், குருவிகளும் வேறு எங்குதான் போகும்? யானைகளும், இதர விலங்குகளும் வேறு எங்குதான் செல்லும்?  அவைகள் எப்படித்தான் உயிர் வாழ்வது? எல்லாவற்றையும் ஆக்கிரமித்து அழித்து விட்டால், பறவைகள் குடியிருக்கும் பெரும் மரங்களை வெட்டி விட்டால் அவைகள் எப்படித்தான் வாழும்? ஏன் இவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கேட்பதற்கு நாதி எவர் இருக்கிறார் இங்கே? உழவு மாட்டைக் கூட வயதானால் அறுப்புக்கு அனுப்பும் மனிதர்கள் தானே இவர்கள்.

பிரிட்டிஷாரிடம் அடிமையாக கிடந்த ஜீனில் பிறந்தவர்களுக்கு கேள்வி கேட்க கூட தைரியமில்லை.

காக்கைகளும் குருவிகளும் விலங்குகளும் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? பசு மாட்டுக்கு மட்டும் தான் பேசுமா இந்த உலகம்? பசு மாடு பால் தரவில்லை என்றால் அதையும் அல்லவா அனாதை ஆக்கி இருக்கும் இந்த உலகம்? இத்தனை அக்கிரமங்களும் ஒரே ஒரு டான்ஸ் கிளப்புக்காக நடத்தப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இயற்கையை அழித்து அழித்து சுடுகாடாய் மாற்றித்தான் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டுமா? பிற உயிரை வதைத்துதான் ஆன்மீக வளர்ச்சி பெற வேண்டுமா? 

ஹிஜாப் போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது கர்நாடக ஆளும் பாஜக அரசு.

அடப் பதர்களே..!

இந்தியா என்ற நாடே இல்லாத நாளில் முஸ்லிம் மன்னர்கள் தான் இந்த நாட்டை ஆண்டார்கள். ஓளரங்க சீப் ஆங்கிலேயர்களைக் கட்டி வைத்து அடித்து துரத்தினார். பகதூர்ஷா காலத்தில் தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வாணிபம் செய்ய அனுமதி பெற்றார்கள். தென் பகுதியில் தமிழர்கள் ஆண்டார்கள். அன்றைக்கு பிரிட்டிஷ்காரனை எதிர்த்து நின்று போரிட்டுச் செத்துப் போனவர்கள் முஸ்லிம்கள். பல இனத்தவர்களும் போரிட்டு உயிரை விட்டார்கள். 

ஒருங்கிணைந்த அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வந்த உருவ வழிபாட்டினை கொண்டவர்களை பிரிட்டிஷ்காரன் தான் இந்து என்று அழைத்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட ஹிந்துஸ்தான் என்ற பகுதியை இந்தியா என்று கட்டமைத்தான். அதன் பின்னால் தான் இந்து மதம் உருவானது, இந்துக்கள் என்று உருவானது.

அதற்கு முன்னாலே இந்திய வடபகுதி முஸ்லிம் மன்னர்களால் ஆளப்பட்டது. இந்துக்கள் எவரும் இந்தியாவை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்தனர். அவரவர் பகுதிக்கு அவரவர் தலைமையில் ஆண்டு வந்தார்கள். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வெறுக்கும்படியும், அவர்களின் உடை கலாச்சாரத்தில் நுழைய பாஜகவிற்கு தகுதியே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மமதையில் ஆடும் பதர்களுக்கு, ஆன்மீக பூமியான இந்தியா அழிவைத்தான் பரிசளிக்கும்.

உலகிலேயே இந்தியா மக்கள் தான் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள். கொன்றவன் பிரிட்டிஷ்காரன். அவனைக் கேட்க இங்கு எவனுக்கும் தைரியமில்லை. ஹிஜாப் போட்டால் தடுக்கிறார்கள்.

அன்றைக்கு எங்கே போனார்கள் இன்று இந்து மதம் என்று பேசுபவர்கள்? மக்களை மதத்தின் பெயரால் பிரித்து தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் ஷூவை நக்கிக் குடித்த வந்தேறிகளின் சூழ்ச்சி இது.

இந்துக்களை விட தற்போதைய இந்தியாவின் வட பகுதி முழுமையும் நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள். நன்றி மறந்து விடக்கூடாது.

வந்தேறிகள் துபாஷி என்ற பெயரில் மொழி பெயர்ப்பாளராய் இருந்து கொண்டு காட்டிக் கொடுத்தவர்கள். இதர இன மக்களை பிரிட்டிஷ் அடிமைப்படுத்த துணை சென்றவர்கள். அவர்கள் பிரிட்டிஷாருடன் உட்கார்ந்து கொண்டு அனைவரையும் அழித்தவர்கள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த வந்தேறிகள்தான். கூடவே இருந்த இனத்துரோகிகள் அவர்கள். மன்னிக்கவே கூடாத சூழ்ச்சிக்காரர்கள்.

செட்டியாரும், முதலியாரும், பள்ளர்களும், பறையர்களும், முஸ்லிம்களும் நிறைந்த நாட்டில் பிரிட்டிஷ்காரனால் வலிந்து திணிக்கப்பட்டவர்கள் இன்றைய கிறிஸ்துவர்கள். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

இந்தியா ஆன்மீக பூமி. பல கோடிக்கணக்கான உயிர்களை பலியிட்டு உருவானது இந்தியா. மஹாத்மா காந்தியின் புதிய ஆயுதமான அஹிம்சையை பிரிட்டிஷ்காரனால் வெற்றி கொள்ள முடியவில்லை. அன்றைய காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் செய்து பனிரெண்டு வருடம் ஜெயிலில் கிடந்த நேருவைப் பற்றிப் பேச இங்கு எவருக்கும் தகுதி இல்லை.

எல்லோரும் எல்லாவற்றையும் பேசி விட முடியாது. 

கர்ப்பினி பெண் ஒருத்தியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து, அதன் தலையை வெட்டி வீழ்த்திய காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த மனிதர்களை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதை விட நல் வார்த்தை ஏதுமில்லை.

ஆன்மீக பூமியில் விரைவில் நல்லன நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பொய்க்கவில்லை. 

அசுரர்கள் அழிவது போல எல்லாமும் சுத்தப்படுத்தப்படும் காலமும் விரைவில் வரும். வந்தே தீரும். அறம் என்றும் உயிர்ப்போடு இருக்கும் பூமி நமது இந்தியா.

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


Monday, March 21, 2022

மாப்பு தரு சாமி - விதை

’மனமது செம்மையானால் மந்திரம்’ தேவையில்லை என்பதால் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினை படித்து அதன் வழி நடப்பவன். 

’நீயே கடவுள்’ என்ற திருமூலரின் வார்த்தையின் மீது பிடிப்புக் கொண்டவன். 

வள்ளலாரின் ‘ஜீவகாருண்யத்துக்கு’ மேலானது வேறில்லை என்று நினைப்பவன்.

’அன்பே கடவுள்’ என நம்புபவன். 

உருவ வழிபாடுகள், பூஜைகள், ஆரத்திகள், மந்திரங்கள் ஓதுவது போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இருக்காது. 

கோவிலுக்குச் செல்வேன், வணங்குவேன். அவ்விடங்களில் என் மனமானது சலனமற்று இருக்கும். அமைதியாக இருப்பேன். உள்ளத்தில் வேறேதும் சிந்தனைகள் கிளம்பாது. மனம் இறந்த நிலையில் அமைதியாக அமர்ந்திருப்பேன். கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் கூட இங்கணம் அமர்ந்திருப்பேன். எந்த இடம் மன அமைதியைத் தருகிறதோ, மனதில் சலனமற்ற தன்மையை உருவாக்குகிறதோ அந்த இடத்தில் இருப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.

சமீப காலமாக நானொரு செயலைச் செய்து வருகிறேன். எனக்கு அது நல்ல பலன்களைத் தருகிறது.

எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆலய வாசலில் ’பேச்சைக் குறைத்து மூச்சை கவனி” என்ற வாசகம் இருக்கும். 

அதன் அர்த்தம் எனக்கு தெரிந்தாலும் அதை நான் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. 

திடீரென்று ஒரு நாள் மூச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விடுவேன்.அதைக் கவனிப்பேன். அப்போது வேறு எந்தச் சிந்தனையும் இறாது. அங்கணம் செய்யும் போது மனம் அதன் சிந்தனை அல்லாது போகும். இதனை வாடிக்கையாக செய்து வந்தேன். எப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேனோ அப்போதெல்லாம் மூச்சைக் கவனிப்பது எனக்கு வழக்கமாகியது.

இரவுகளில் தூக்கம் வராத நாளில் இங்கனம் செய்யும் போது சட்டென்று தூக்கம் வந்து விடும். 

இப்படியான ஒரு நாளில் ஒரு மாலை நேரம், சிதார் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சைக் கவனிக்க ஆரம்பித்த போது விழிப்பு நிலையில் உடலில் இருந்து எதுவோ வெளியேறியது போல தோன்றியது. அடுத்த நொடியில் நான் என் உடம்பைப் பார்ப்பது போல தோன்றியது. சட்டென்று பயமேற்பட உதறி எழுந்தேன். 

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

ஜோதி சுவாமிகளிடம் இது பற்றிக் கேட்ட போது, ’தொடர்ந்து அப்படியே செய்து வாருங்கள், சரியான வழியில் தான் செல்கின்றீர்கள்” என்றார்.

சென்ற நாட்களுள் ஒரு நாள் மாலையில் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த கோதை படபடப்பாக அருகில் வந்து அறைக்கதவைச் சாத்தினார்.

முகம் பார்த்தேன்.

“ஏங்க, அன்னபூரணி அம்மாவைப் பார்த்தேன், போதுங்க, என் பிறப்பு முழுமையடைந்து விட்டது” என்று சொல்ல எனக்கு ‘ஞே’ என்று தோன்றியது. 

’என்ன சொல்றா?’ என்று குழம்பினேன்.

விபரம் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தாள்.

மாலை நேரம், மங்கிய பொழுதில், ஜோதி சுவாமி அறைக்குள் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது ’ஜல்,ஜல்’ என்ற ஒலியுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். அவரின் முகம் மஞ்சள் வண்ணமாக தேஜஸுடன் ஜொலித்திருக்கிறது. 

அறை வாசலில் நின்று கொண்டு “ஜோதி, சவுக்கியமா?“ என்று கேட்டவுடன்,  அவரைப் பார்த்த சுவாமி அப்படியே பேச்சு மூச்சன்றி மயங்கி விழுந்து விட பதட்டத்துடன் கோதையும் அருகில் இருந்த இன்னும் சிலரும் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையை தெளிவிக்க, சுவாமி ”அம்மா! அம்மா!” என்று கோதையிடம் சொல்ல விதிர்த்து நின்ற கோதை அந்த அம்மாவைப் பார்த்து வணக்கம் சொல்ல சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த அம்மா காணாமல் போய் விட்டார் எனச் சொன்னார்.

இச்சம்பவம் நடந்தது ஆசிரமத்தில்.

சொல்பவர் மனைவி. 

சுட்டிக் காட்டியவர் ஜோதி சுவாமி. 

நம்பித்தான் ஆக வேண்டும். 

எனக்குள் ஒரு கேள்வி முளைத்து விட்டது. 

”என்னால் புரிந்து கொள்ள முடியாத, உணர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது போலும். அது என்ன?”

மனமற்ற நிலைக்குச் செல்வதைத்தானே யோகிகள் சொல்லி இருக்கின்றார்கள். அந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் பிரபஞ்சத்துடன் இணைந்து விடலாம். ’நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்ற நிலையில் இயற்கையில் ஆழப் புதைந்து போய் விடலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் கோதை என்னிடம் சொல்லியது வேறொன்றாக இருக்கிறதே எனக் குழப்பமானது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் தெய்வமான காளியுடன் பேசுவார் என்று மகேந்திர நாத் குப்தா ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்” நூலில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்து விட்டது.

கேள்வி துளிர்த்து.

தளைந்தது.

செடியாகி நின்றது.

சுவாமி திடீரென்று அழைத்து, ”கேரளா போயிட்டு வர்றேன் ஆண்டவனே” என்றுச் சொல்லி விட்டு அக்கா ராஜேஸ்வரியுடன் சென்று விட்டார்.

மாலை நேரத்தில் அவரிடமிருந்து போன் வரவில்லை. 

எனக்குள் சிறு பதட்டம் வந்து விட்டது. 

ஏனென்றால் ரித்திக் முதன் நாள் காரில் சிட் லைட்டை அணைக்காமல் விட்டு விட்டான். காரின் பேட்டரி டவுன். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. விடிகாலையில் கார்கேர் மதன் வீட்டிற்கு வந்து வேறு பேட்டரியை வைத்து காரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டிருந்தார். 

பின்னர் மறுபடி கார் ஸ்டார்ட் ஆனது. பாட்டரியினால் சுவாமியின் பயணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டதோ என்று தோன்றியது.

மறுநாள் காலையில் அழைத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. அக்காவுக்கு அழைத்தேன் அக்காவும் எடுக்கவில்லை. 

சிறிது நேரம் சென்ற பின்னாலே, சுவாமி அழைத்தார்.

“ஆண்டவனே..! மாப்பு தரு சாமி” என்ற வார்த்தையினைச் சொன்னார்.

எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும் என்பதால் மாப்பு என்றால் மன்னிப்பு என்று தெரியும். 

அந்த வார்த்தையை ஏன் சுவாமி என்னிடம் சொன்னார்?

விரைவில்... 

Thursday, March 17, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல் தொடர்ச்சி

 16.,03.2022ம் தேதி எழுதிய பதிவினைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/2022/03/blog-post_16.html

இன்றைய 17.03.2022 பிசினஸ் ஸ்டாண்டர் செய்திதாளில் வெளியான தலைப்புச் செய்தி கீழே இருக்கிறது. படத்தின் மீது சொடுக்கி படித்துக் கொள்ளவும். சட்டத்தின் ஓட்டைகளை எவ்வாறு தன் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று பாருங்கள். ரிலையன்ஸ் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்ட செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

(17.03.2022 - பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி மேலே)

உச்ச நீதிமன்றம் ஃபியூச்சர் குரூப்பிடமும், அமேசானிடமும் என்ன சொல்லி இருக்கிறது என்று கட்டமிட்ட செய்தியில் படித்துக் கொள்ளுங்கள். வழக்குதாரர்களின் ஒப்பீனியன் கேட்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ‘ரிலையன்சும் ஃபியூச்சர் குரூப்பும்’ அமேசானை ஏமாற்றுகிறது என. ஆனால் பாருங்கள் எந்தப் பத்திரிக்கையும் அதைப் பற்றி எழுதவில்லை. நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

சும்மா கதை விடாதீர் என்று நினைத்தவர்களுக்கு மேலே இருக்கும் படமே என் பதிவுக்கு ஆதாரம்.

அடுத்து சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் வெளியான நியூஜெ நிறுவனம் பிஜேபிக்கும், ரிலையன்ஸ் மக்களை எப்படி முட்டாளாக்கி பிஜேபிக்கு நமோஸ்காரம் செய்து வருகிறது என்பதையும் படித்துக் கொள்ளுங்கள். மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகள் என கருதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தினை தர்மமும் அறமும் - பிஜேபியின் தலையெழுத்தினை அயோத்தி ராமரும் முடிவு செய்வார்கள் என நம்புகிறேன்.


மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறார்கள் சமீபகாலமாக. அதிலொன்று சித்ரா -சுப்ரமணியம் கள்ளக்காதல் - ஷேர்மார்கெட் விவகாரம். 

மைலாப்பூர் மாமி சித்ராவின் கள்ளக்காதல் மர்மச் சாமியார் சுப்ரமணியம் கதை சாட்சியங்கள் இல்லாத சுமார் ஐந்து லட்சம் கோடி மோசடி ஊழல். இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் எல்லாம் பெரிய ஊழலை மைலாப்பூர் நிகழ்த்தி இருப்பதை வரலாற்றில் பதிவு செய்வோம்.

மைலாப்பூர் மாமி சித்ராவின் ஐந்து லட்சம் கோடி ஊழல் மூடி மறைக்கப்பட்டும் விடும். அதை செவ்வனே செய்வார் பத்திரிக்கை குள்ளநரி.

Wednesday, March 16, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல்

இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் பத்தாயிரம் லட்சம் என்பதோடு கனவுகள் முடிந்து போகின்றன. அதற்கும் மேல் வருமானத்தினை உருவாக்குவது என்பது பற்றிய சிந்தனைகள் குடும்பச் சூழலாலும், செய்யும் தவறுகளாலும் வருவதில்லை. 

சிக்கலாக்கிய வாழ்க்கையில் கோடிகளில் வருமானம் வரும் தொழில் செய்வது என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

எனக்குத் தெரிந்த ஒருவரின் தொழில் கொரானாவில் முடங்கிப் போனது. வேறு வழி இன்றி உலக மனிதர்களின் ஒரே கைத்தொழிலான உணவுத்துறையில் இறங்கினார். 

குறைந்த முதலீடு, பெருத்த லாபம் என்ற கணக்கில் மசாலா பிசினஸ் ஆரம்பித்தார். இப்போதெல்லாம் பிரபல மசாலாக் கம்பெனிகளின் இடை விடாத விளம்பரத்தினால் சாம்பாரில் இருந்து அனைத்து உணவுகளும் ஒரே சுவையுடைவையாக இருக்கின்றன. எங்குச் சென்றாலும் சாப்பிட்டாலும் ஒரே சுவை. ஹோட்டல்களிலும் கூட அதே கதை. என்னைப் போன்ற உணவு விரும்பிகளுக்கு மசாலா கம்பெனிகளை கண்டாலே ஆகாது. உண்மை என்னவென்றால் தமிழக மசாலா மார்க்கெட்டின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள். அதில் நாமும் இணைந்து விடலாம் என்ற கற்பனையில் நண்பரும் திட்டமிட்டார். 

வெகு நேர்த்தியாக பாக்கெட் போடப்பட்டு தன் வீட்டினைச் சுற்றி இருந்த கடைகளுக்கு மசாலாக்களை சப்ளை செய்தார். அடுத்த வாரம் சென்றார் அனைத்துச் சரக்குகளும் விற்றுப் போயிருந்தன. ஆச்சரியம். கடைக்காரரும் மொத்த தொகையையும் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்சம் கூடுதல் சரக்கை இறக்கினார். சரக்குப் போட்ட கடைகள் அனைத்திலிருந்த சரக்குகள் விற்றுப் போயின. கனவுகளில் மிதக்க ஆரம்பித்தார்.

அடுத்த வாரமும் இதே கதை. அதற்கடுத்த வாரம் சரக்குகளை கடன் வாங்கி அதிகப்படுத்தினார். பாதி சரக்குகள் விற்கவே இல்லை. அதற்கடுத்த வாரம் எந்த சரக்கும் விற்கவில்லை. மூன்று மாதங்கள் இப்படியே போனது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

தேங்கி போன சரக்கு. வாடிக்கையாளர்கள் இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினார். சரக்குகள் திரும்பின. அதற்கடுத்த மாதம் பல கடைகளில் சரக்குகள் தீர்ந்து போயிருந்தன. அவருக்குள் ஏதோ உள்ளுணர்வில் தவறாகப் படவே ஆராய ஆரம்பித்தார்.

பிரபல மசாலாக் கம்பெனிகளின் உள்குத்து. கடைகளில் நல்ல தரமாக விலை குறைவாக வரக்கூடிய மசாலாக்களை மொத்தமாக வாங்கி வேறு வழியில் அவர்களின் பாக்கெட்டுகளில் இறக்கி விடுகின்றனர். மக்களுக்கு அப்படி ஒரு மசாலா இருப்பதே தெரியாது. இப்படியெல்லாமா செய்வார்கள் என்று அவருக்குத் திகில் பிடித்தது. அசுரத்தனமான பெரும் நிறுவனத்திடம் மோத முடியுமா? முடியாது. இன்றைக்கும் அதைத்தான் செய்கிறார். வருமானமோ ஆயிரங்களில் மட்டும். லட்சம் கோடி என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தமிழகத்தின் பிரபல மசாலா கம்பெனிகளின் வருமானம் வருடம் 1800 கோடிக்கும் மேல் என்கிறது டேட்டா. சாமானியன் தொழிலில் வெற்றி பெற முடியாத வியாபாரத்தினை ஆளும் பிஜேபி அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. 

சாமானியன் வாழலாம் அவனுக்கு அதற்கு மட்டுமே அனுமதி. லோன் கிடைக்கும் லட்சங்களில். வருமானமும் லட்சங்களில் தான். கோடிகள் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கெல்லாம் குஜராத்திகள் உள்ளனர்.

என்றைக்கு இந்தியாவின் சேல்ஸ் மார்க்கெட்டிங்க் தலைவர் பொறுப்புக்கு வந்தாரோ அன்றைக்கே சாமானியன் வாழ்வு திருடப்பட்டு விட்டது. கார்ப்பொரேட்டுக்கான வியாபார உத்திகள் தெளிவானவை. அவர்களுக்கு கிடைக்கும் அரசு நன்மைகள் சாமானியனுக்கு கிடைக்காது. 

வாழ்வதற்கு அனுமதி மட்டுமே கிடைக்கும். சாமானியன் வேலை செய்யலாம். பணம் சம்பாதிக்கலாம். அதுவும் லட்சங்களுக்குள் மட்டுமே. கோடிகள் குஜராத்திகளுக்கு மட்டுமே என்பது இந்தியாவின் விதியாக மாறி விட்டது.

இனிமேல் ஒரு அம்பானியோ அதானியோ உருவாகவே முடியாது. ஏனெனில் அவர்கள் உருவாகி விட்டார்கள். இனி எதற்கு இன்னொரு அம்பானி? இன்னொரு அதானி? வேலைக்கார்கள் மட்டும் தான் வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஃபியூச்சர் நிறுவனத்தின் பிக்பஜார் பிசினஸை அமேசான் சிங்கப்பூரில் விலை பேசி அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸாக 15,000 கோடியைக் கொடுத்தார்கள். அந்த அக்ரிமெண்டில் முதன்மையானது என்ன தெரியுமா? இந்த பிசினஸை எங்கள் நிறுவனம் மறுத்தால் ஒழிய வேறு எவரிடமும் விற்க கூடாது. அதுமட்டுமல்ல ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கவே கூடாது என்ற உப விதிகளும் இருந்தன.

பணம் வந்ததும் ஃபியூச்சர் நிறுவனம் அதை மொத்தமாக முழுங்கி விட்டு ரிலையன்ஸிடம் விலை பேசினர். ரிலையன்ஸ் முகேஷ் 22 ஆயிரம் கோடிக்கு ஆஃபர் கொடுத்தார். உடனே ஃபியூச்சர் நிறுவனம் ஒத்துக் கொண்டது.
 
அமேசான் தடுத்தது. நாங்களும் அதே விலைக்கு வாங்குகிறோம் என்றது. ஆனால் ஆசைப்பட்டது யார்? ரிலையன்ஸ் அல்லவா? இந்தியா யாருக்கு வேலை செய்யுமென்று உங்களுக்குத் தெரியுமே?

ரிலையன்ஸின் தலைமை மார்க்கெட்டிங்க் பணியாளரும், இந்தியாவின் தலைமை சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவிடம் தகவல் சென்றது. சில பல செட்டிங்குகள் நடந்த பின்னர் ஒரு துணைக் கட்டப்பஞ்சாயத்தில் சிங்கப்பூர் விதிகள் இந்தியாவிற்குப் பொருந்தாது என சொல்லி வழக்கினை தள்ளுபடி செய்தது.

உலக வர்த்தக ஒப்பந்தம் பற்றியெல்லாம் துணைக் கட்டப்பஞ்சாயத்துக்கு கவலை இல்லை. அதில் கையெழுத்துப் போட்டது யாராக இருந்தால் என்ன நம்ம எஜமான் ரிலையன்ஸ் என்ற செய்நன்றி மறவாத நிலை கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவரின் குறள் இங்குச் சட்டப்பட்டி நிலை நாட்டப்பட்டது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் ஒரு வேலை செய்தது. இதுதான் அக்மார்க் வேலை. அதான் ஒன்னாம் நம்பர் வேலை.

பிக்பஜார் இந்தியாவெங்கும் பல ஆயிரம் சதுரடிகளை வாடகைக்கு எடுத்து கடைகள் வைத்திருந்தன. இந்தப் பிரச்சினையில் வாடகை கொடுக்க முடியாமல் இருந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் சென்று வாடகை ஒப்பந்தத்தை எங்கள் பெயருக்கு மாற்றுங்கள் என்று கேட்டு மாற்றி விட்டார்கள். பிக்பஜார் இயங்கி வந்த வாடகை கடைகள் இப்போது ரிலையன்ஸ் வசம். வாடகை எவன் தருகின்றானோ அவனுக்கு நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்கிறார்கள் கடை உரிமையாளர்கள். 

எப்படி வேலை? 

அமேசான் கட்டபஞ்சாயத்து வழக்குப் போட்டது. சாமானியனுக்கும், முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே சட்டப்படி தீர்ப்பளிக்கும் கட்டப்பஞ்சாயத்து நிறுவனம் அமேசானிடமும், ஃபியூச்சர் நிறுவனத்திடமும் சமரசம் பேசச் சொல்லி இருக்கிறது. 

கட்டபஞ்சாயத்துச் செய்யும் ஆட்களுக்கு இதற்கெல்லாம் அனுமதி உண்டு.  ஆட்டக்காரி ஊழலே செய்யவில்லை என்று தீர்ப்பளித்த நீதிபதி நல்லவர் என்கிறது கட்டபஞ்சாயத்து நிறுவனம்.

உலகெல்லாம் வர்த்தகம் செய்யும் அமேசானின் ஒரு வருட பிசினஸ் ஒரு டிரில்லியன் டாலர்கள். ரிலையன்ஸின் மொத்த பிசினஸே 200 பில்லியன் டாலர்கள். எப்படி அமேசானுடன் மோதுகின்றார்கள்?

ஒருவருக்கு தைரியம் வருவது எப்படி எனில் ஒன்று பணம் அடுத்து கண்ணசைவில் வேலை செய்யும் வேலைக்காரர்கள். ரிலையன்ஸ் நல்ல வேலைக்காரர்களை வைத்திருக்கிறது. 

அமேசான் தட்ட வேண்டிய இடத்தில் தட்டும் என்றால், வெள்ளை மாளிகையிலிருந்து ஒரே ஒரு போன் வரட்டும் பாருங்கள். 

வடிவேல் பெண் பார்த்த கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் வர்த்தக உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. 

நாம் என்னவென்றால் நரலீலைகள் எழுதிக் கொண்டு, நடிகைகளின் தொப்பூள்களை உற்றுப் பார்த்துக் கொண்டு, சமந்தாவின் இடுப்பாட்டத்தின் மனதைச் சிக்க வைத்துக் கொண்டு அந்தக் கிளுகிளுப்பில் கிறங்கிப் போய் கிடக்கிறோம். 


கோடி குஜராத்திகளுக்கு, குட்டிகளின் கிளுகிளுப்பு தமிழர்களுக்கு என்று அல்லவா இருக்கிறது.

எடப்பாடி என்ற துரோகியை நாம் முதல்வராக வைத்திருந்தோம். மெய் வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்த கேடுகெட்ட சுய நலத்தின் பீடைகள் நாம். துரோகிகளால் தமிழ் நாடு எட்டு லட்சம் கோடி கடனாளி ஆகி கிடக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்றைக்கும். 

ஜாதி வந்து விடுகிறது, மதம் வந்து விடுகிறது, உறவுகள் வந்து விடுகிறது. பொறாமை வேறு.  இவற்றை எல்லாம் மீறி சாதிக்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கின்றி நிற்கிறது தமிழர்கள் இனம்.

Monday, March 14, 2022

நீட் அவசியமில்லை - முன்னாள் துணை வேந்தர் கே.சாதிக்

தினமணியும், தினமலரும் இன்னபிற மீடியாக்களும் ஏழை மாணவர்களை, சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கும் மாணாக்கர்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுக்கும் நீட் தேர்வுக்கு ஆதரவாக இல்லாத பொய் செய்திகளையும், பிரச்சாரங்களையும் தொடர்ந்து எழுதி வருகின்றன. 

ஒரே காரணம் தமிழ் நாட்டில் மருத்துவம் மிக உயர் நிலையில் இருக்க கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றும் இல்லை என்பது கண்கூடு. உலகெங்கிலும் இருந்து தமிழகத்துக்கு மருத்துவ சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். உயர் மருத்துவ சிகிக்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஊழல்வாதிகளுக்கு ஒரு கோடிக்கு இரண்டு ரூபாய் இட்லியும் விற்கப்படுகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.

தமிழ் நாட்டினை முற்றிலுமாக அழித்து பீகார் போலவோ அல்லது உத்திரப்பிரதேசம் போலவோ மாற்றி விட வேண்டுமென்று மேற்படி பத்திரிக்கைகளும், அதன் நிறுவனர்களும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அதையும் மீறி தமிழகம் வீறு நடை போடுகிறது. 

துரோகிகள் மூலம் நினைத்ததை நான்காண்டு காலம் நடத்தினர். இப்போது முடியவில்லை என்கிற போது மீடியாக்கள் மூலம் போலிச் செய்திகளினால் அசுரத்தாக்குதல் நடத்துகின்றனர்.

உண்மையை செய்திகளை வெளியிட குறைந்த ஆட்களே உள்ளனர். உண்மையை உணர முடியா வண்ணம் அவர்கள் பொய்ச் செய்திகளை காலம் காலமாக மனித உலகத்தை அழிக்கும் துரோகிகள் வழியாக பயங்கர தீவிரமான தாக்குதல்களை நடத்துகின்றனர். மக்கள் பொய்களில் மனம் பிரண்டு விடக்கூடாது. தமிழ் நாட்டை முற்றிலுமாக சீரழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடம் இயங்கி வருபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

தினமணியில் ஈ.பாலகுருசாமி அவர்கள் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதி இருந்தேன். இதோ விடுதலைப் பத்திரிக்கையில் முன்னாள் துணைவேந்தர் கே.சாதிக் அவர்களின் அறிக்கை என் பதிலுக்கு வலுச் சேர்க்கிறது. நன்றி : விடுதலை தினசர்.




நிலம் (93) - எஸ்சி-எஸ்டி நிலங்களை வாங்கியவர்கள் பட்டா பெறலாம்

தற்போதைய காலம் போல அன்றைக்கு கணிணி வசதி இருந்திருந்தால் பலப் பிரச்சினைகள் வந்திருக்காது. எவ்வளவோ பிரச்சினைகள் இல்லாது போயிருக்கும். கால தாமத தீர்ப்பு கூட குற்றம் தான் என்கிறார்கள். அதைப் போல காலதாமதமாகக் கிடைக்கும் விஷயங்கள் கூட பலனன்றிப் போய் விடுகின்றன.

ஓம் சரவணபவா யூடியூப் சானலில் நடிகர் ராஜேசுடன் குற்றபரம்பரைச் சட்டத்தின் மூலம் பற்றி உரையாடி வரும் பிரபல திரைப்பட இயக்குனரும், விரிவுரையாளருமான திரு.ரத்னகுமார் அவர்கள்,“வரலாறு ஜெயித்தவர்களால் எழுதப்பட்டது” என்றுச் சொன்னார்.

தோற்றவர்கள் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களால் வரலாறு எழுதப்படுவதில்லை. ஆகவே உண்மையை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்றார்.  நூறு சதவீதம் சரியானது. வரலாறு ஜெயித்தவர்களால் புனையப்பட்டிருக்கும் பொய்களின் கூடாரம் என்றே தோன்றுகிறது. 

ஏன் அவரின் கருத்தை இந்த இடத்தில் எழுதுகிறேன் எனில் காரணம் உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1890களில் கொண்டு வந்த பஞ்சமி பூமி சட்டத்தினால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலமற்ற பூர்வ குடி மக்களுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டது. 

ஏன் பஞ்சமி பூமி சட்டம் உருவாக்கப்பட்டது எனில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்க நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்ட நிலங்களை, பிரிட்டிஷ்ஷாருக்கு நெருங்கியவர்களாக இருந்த பலர் உரிமை பெற்றார்கள். ஒரு சொம்புத் தண்ணீர் நரலீலைகள் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் அதை விரித்துரைக்க உள்ளது. தொடர்ந்து படித்து வாருங்கள். 

அவ்வாறு நில உரிமை பெற்றவர்களிடம் அடிமையாக கிடந்து நிலங்களில் அடிமை வேலை செய்தும் சரியான கூலி கிடைக்காமல் பசியிலும் பஞ்சத்திலும் செத்துப் போன பூர்வ குடிமக்களின் வார்த்தைகளில் விவரிக்க இயலா கொடும் வாழ்க்கையை கண்ட ஒரு ஆங்கிலேயரின் முயற்சியால் பஞ்சமி நிலச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பு வேலையைச் செய்ய உடனடியாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிராமணர்களுக்கு அரசாங்கத்தில் எளிதில் வேலை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அன்று இந்தியா என்று பெயரிடாத நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த ஆங்கிலேய அரசில் மொழி பெயர்ப்புச் செய்ய வேலையில் இருந்தவர்கள் செய்த செயல்களை திரு.ரத்தினகுமார் சொல்லக் கேட்டுக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் யூடியூப் லிங்கினை கிளிக் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.


இதற்கிடையில் நம் ஆளுநர் திரு.ரவி அவர்கள் வரலாற்றில் இல்லாத செய்திகளைப் பேசியிருக்கிறார். இந்தியாவை ஒன்றியம் அல்ல என்கிறார். பின்னர் ஏன் குஜராத்தில் திரு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என்று அவர்தான் சொல்ல வேண்டும். 

இந்தியா என்ற பெயரும், இந்து என்ற மதப் பெயரையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிந்து கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் தன் சாமர்த்தியங்களால் ஒன்றாக இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். அதற்காகத்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. 

போகிற போக்கில் தன் பதவிக்கு அழகு சேர்க்காத வார்த்தைகளை பொது வெளியில் பேசி இருப்பது சரிதானா? என்பது அவருக்கே வெளிச்சம்.

பஞ்சமி நிலச்சட்டத்தின் வாயிலாக நிலமில்லா பூர்வ குடிமக்கள் நில உரிமை பெற்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலையின் காரணமாக,  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பூமியை விற்று விடும் சூழல் இருந்ததால் கண்டிஷன்கள் போடப்பட்டன. அந்த கண்டிஷன்களில் முக்கியமானது தன் இனத்துக்கு உள்ளேயே பூமியை உரிமை மாற்றம் செய்யலாம் என்பது. வேறு இனத்துக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது அடுத்த விதி.

எனக்குத் தெரிந்த பலர் இப்படியான பஞ்சமி பூமிகளை விபரம் தெரியாமல் வாங்கி இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலாமலும், விற்பனை செய்ய முடியாமலும் அவஸ்தை பட்டு வருகின்றனர். நானும் கூட என் நண்பருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்ற போது இதே பிரச்சினையில் சிக்கி நேரத்தையும், பொருளையும் இழக்க நேரிட்டது.

2019ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி கண்டிஷன் பூமிகளை வாங்கியவர்களுக்கு அதன் உரிமை அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது பலருக்கும்  நிம்மதியான செய்தி என்றாலும் அதிலும் ஒரு சில விஷயங்களை ஆய்வு செய்து பட்டாவுக்கு சரியான ஆவணங்களுடம் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரோ ஒருவரின் முயற்சியால் வழக்கில் பெற்ற வெற்றியானது பலருக்கும் உதவி செய்கிறது. வெற்றி என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். நீதிமன்ற வரலாற்றில் எழுதப்பட்டும் ஒவ்வொரு தீர்ப்புகளும் கூட ஆய்வுக்குரியவை என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.

இதோ சட்டம் இருக்கிறது, எனக்கு பட்டா மாற்றிக் கொடுங்கள் என்று விண்ணப்பம் செய்தால் கிடைக்காது. அதற்கென வழி முறைகள் உள்ளன. இது பற்றிய ஆலோசனைகள் மற்றும் ஆவணங்கள் விண்ணப்பம் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே என்னால் உதவி செய்ய இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தரப்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, March 12, 2022

நிலம் (92) - சத்தியமங்கலம் கோவை நான்கு வழிச்சாலை நிலமெடுப்பு

இந்திய அரசு சத்திய மங்கலத்திலிருந்து கோவை வரை நான்கு வழிச்சாலைக்கு நிலமெடுக்க அரசாணை வெளியிட்டிருக்கிறது.

சுமார் 96 கிலோ மீட்டர் தூரம் நிலமெடுப்பு நடக்க உள்ளது. ஆகவே அந்தச் சாலை எங்கிருந்து தொடங்குகிறது? நிலமெடுப்புக்கு உள்ளாகும் நிலங்கள் யாவை? போன்ற விபரங்களை சரியான அலுவலரிடம் சென்று விண்ணப்பம் கொடுத்து பெற்று வைத்துக் கொள்ளவும்.

மேலும் நான்கு வழிச்சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் அதாவது 600 அடி தூரம் வரை நிலம் வாங்காதீர்கள்.

இதைப் பற்றிய விபரங்களை நேரில் சென்று தொடர்புடைய அரசு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளுங்கள். 

எந்தெந்த கிராமங்களில் நிலமெடுப்பு நடக்கிறது என்ற விபரம் கீழே. சர்வே நம்பர்கள் மற்றும் பிளான்களை நேரடியாக அலுவலரைச் சந்தித்து பெற்றுக் கொள்ளவும். 

என்னிடம் தகவல் வேண்டுமெனில் கட்டணம் கட்ட வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தர இயலாது.

கிராமங்கள் வரிசை கீழே :

  • Guthiyalathur  
  • Hassanur  
  • Chikkarasampalayam  
  • Pattavarthi ayyampalayam  
  • Rajan Nagar  
  • Ikkarainegamam  
  • Konamoolai  
  • Shenbagapudur  
  • Vinnappalli  
  • Kurumbapalayam  
  • Pungampalli  
  • Thatchaperumapalayam  
  • Nallur  
  • Madampalayam  
  • Punjaipuliampatti  
  • Velamundi(R.F.)  
  • Kottuveerampalayam  
  • Sathyamangalam  
  • Ariappampalayam  
  • Ellappampalayam  
  • Shenbagapudur A  
  • Shenbagapudur B  
  • Reserve Forest  
  • Hassanur  
  • Sellapam palayam 
  • Karapadi  
  • Kanuvakkarai  
  • Vilankurichi  
  • KUNNATHUR  
  • Kattampatty  
  • Kuppepalayam  
  • Kariampalayam  
  • Karegoundenpalayam  
  • Odderpalayam  
  • Annur  
  • Annur Mettupalayam  
  • Pasur  
  • Ambodi  
  • Sarkar Samakulam  
  • Kondayampalayam  
  • Kalapatti  
  • Pogalur  
  • Keeranatham  
  • Vadakkalur  
  • Kalapatti West  
  • Saravanampatti  
  • Pongalur  
  • Alathur