குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 14, 2022

நீட் அவசியமில்லை - முன்னாள் துணை வேந்தர் கே.சாதிக்

தினமணியும், தினமலரும் இன்னபிற மீடியாக்களும் ஏழை மாணவர்களை, சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கும் மாணாக்கர்களை மருத்துவம் படிக்க விடாமல் தடுக்கும் நீட் தேர்வுக்கு ஆதரவாக இல்லாத பொய் செய்திகளையும், பிரச்சாரங்களையும் தொடர்ந்து எழுதி வருகின்றன. 

ஒரே காரணம் தமிழ் நாட்டில் மருத்துவம் மிக உயர் நிலையில் இருக்க கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றும் இல்லை என்பது கண்கூடு. உலகெங்கிலும் இருந்து தமிழகத்துக்கு மருத்துவ சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். உயர் மருத்துவ சிகிக்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் ஊழல்வாதிகளுக்கு ஒரு கோடிக்கு இரண்டு ரூபாய் இட்லியும் விற்கப்படுகிறது என்பதையும் மறந்து விடக்கூடாது.

தமிழ் நாட்டினை முற்றிலுமாக அழித்து பீகார் போலவோ அல்லது உத்திரப்பிரதேசம் போலவோ மாற்றி விட வேண்டுமென்று மேற்படி பத்திரிக்கைகளும், அதன் நிறுவனர்களும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அதையும் மீறி தமிழகம் வீறு நடை போடுகிறது. 

துரோகிகள் மூலம் நினைத்ததை நான்காண்டு காலம் நடத்தினர். இப்போது முடியவில்லை என்கிற போது மீடியாக்கள் மூலம் போலிச் செய்திகளினால் அசுரத்தாக்குதல் நடத்துகின்றனர்.

உண்மையை செய்திகளை வெளியிட குறைந்த ஆட்களே உள்ளனர். உண்மையை உணர முடியா வண்ணம் அவர்கள் பொய்ச் செய்திகளை காலம் காலமாக மனித உலகத்தை அழிக்கும் துரோகிகள் வழியாக பயங்கர தீவிரமான தாக்குதல்களை நடத்துகின்றனர். மக்கள் பொய்களில் மனம் பிரண்டு விடக்கூடாது. தமிழ் நாட்டை முற்றிலுமாக சீரழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடம் இயங்கி வருபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

தினமணியில் ஈ.பாலகுருசாமி அவர்கள் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதி இருந்தேன். இதோ விடுதலைப் பத்திரிக்கையில் முன்னாள் துணைவேந்தர் கே.சாதிக் அவர்களின் அறிக்கை என் பதிலுக்கு வலுச் சேர்க்கிறது. நன்றி : விடுதலை தினசர்.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.