குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 24, 2020

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்

மத்திய அரசின் நேரடி ஸ்காலர்ஷிப் உதவித் தொகை பற்றிய விபரங்கள் கீழே இருக்கின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


இனிமை இதோ இதோ இதோ


காஞ்சி மரத்தின் காஞ்சிப் பூ


நீருக்குள் மீனுக்காகக் காத்திருந்து நீரினைக் கிழித்துக் கொண்டு பாயும் நீல நிற மீன் கொத்திப் பறவை

அரசியல் அக்கப்போர்களையும், பொடிக்கும் உதவாத சினிமா பற்றியும் எழுதியும் படித்தும் என்ன கண்டோம். ஒன்றுமில்லை. பொழுதினைப் போக்கவா நாட்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு நாளுமினி மீண்டும் வருமா? வராத நாட்களை இனி வரும் நாள்களில் அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஒன்றே இனிது.

விடிகாலையில் மயில்கள் அகவ, மார்கழிக் குளிரில் சொற்களை உதிர்க்கும் பற்கள் குளிரில் தந்தியென மாற, வாசலில் வெண்மையாக படரும் அழகிய கோலம் கண்டு உள்ளம் மலர இன்றைய நாளும் துவங்கியது அர்த்தத்துடன். கிழக்கே இளங்காலைச் சுடர் மெதுவாக வெளித்தெரிய சூரியன் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இனிமை என்றால் என்ன? அதனை நுகர்ந்திருக்கின்றோமா? அனுபவித்திருக்கின்றோமா என்று ஒரு நொடியேனும் சிந்தித்து இருக்கின்றோமா நாம்?

திடீரென எனக்குள் இந்த வார்த்தையின் அர்த்தம் தான் என்னவாக இருக்கும் எனத் தோன்றியது புலர் காலையில். இனிமை, இனிமை, இனிமை இதன் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை எனத் தோன்றிற்று.

இனிமை என்றால் இனிப்பு என்று கூட அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், இனிப்பு சுவை உணர்வு கொண்டது. இனிப்புச் சுவையும் இனிமையும் ஒன்றா? இருக்காது. இனிமை என்ற சொல்லின் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் என்னால் அதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. தேடலும் துவங்கியது.


நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது

கொங்கு கவர் நீல செம் கண் சேவல்

மதி சேர் அரவின் மான தோன்றும்

மருதம் சான்ற மருத தண் பணை –  சிறுபாணாற்றுபடை பாடல் 178 – 186

 

இந்தப் பாடலை எழுதியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் நாட்டில் வசித்து வந்த புலவர், நாட்டில் நீர் நிறைந்த வயல் வெளிகளைத் தன் பாடலிலே பாடி இருக்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தத்தைக் கீழே படியுங்கள்.


நறு மலர்களின் மாலை போல நாள் தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட

குட்டையான அடி மரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,

நிலையான நீர் இல்லாத குளத்தைக் கூர்ந்து பார்த்து, நெடும் பொழுதிருந்து

புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீல நிற மீன்கொத்தியின்

பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்

முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்

திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பு போலத் தோன்றும்,

மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்


இப்பாடல் மூலப் பாடலின் வரிக்கு வரி பெயர்த்தவை. பாடலையும் அப்பாடலின் வரியினையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்க்கவும்.

இப்பாடலின் எனக்குத் தெரிந்த விரிவாக்கம் கீழே.

குட்டையான அடி மரத்தினைக் கொண்ட காஞ்சி மரத்தின் பூக்கள் பூமாலை போல இருக்கும். தினமும் பூக்கும் காஞ்சி மரத்தின் கிளையில், எப்போதும் நிறைந்தே இருக்காத நீரினைக் கொண்ட குளத்தினை கூர்ந்து பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ஒரு நீல நிற மீன் கொத்திப் பறவையானது, மீனைக் கண்டதும் தண்ணீருக்குள் ஈட்டி போலப் பாய்ந்து மீனைக் கொத்திப் பிடிக்கிறது. அப்போது நீருக்குள் பாய்ந்த மீன் கொத்திப் பறவையின் கால் நகங்கள் விரிந்த பச்சை இலையுடன் விரிந்தும் விரியாமலிருக்கும் தாமரையின் இலைகளைக் கிழித்து விடுகின்றன. அப்போது அன்றலர்ந்த தாமரையின் மீது தேனைக் குடிக்க அமர்ந்திருந்த நீல நிற, சிவந்த கண்களை உடைய தேனிக்கள், சூரிய கிரகணத்தின் போது பூமி மீது படரும் சந்திரனின் பாம்பு போன்ற இருளைப் போல கூட்டமாய் பூவிலிருந்து வெளி வருகின்றன என்று மருத நிலத்தின் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் நீர் நிரம்பிக் கிடக்கும் காட்சியினைப் பாடலாய் எழுதி இருக்கிறார் அப்புலவர்.

இப்போது சிறுபாணாற்றுப்படைப் பாடலைப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அழகாக மனதுக்குள் விரியும்.

இனிமை என்றால் என்ன என இப்போது தெரிந்திருக்கும். இனிமை என்ற சொல்லின அர்த்தம் இப்பாடலைப் படிக்கும் போது நம் மனதுக்குள் கிளரச் செய்யும் உணர்வினை நீங்களும் உணர்ந்திருந்தால் அதுதான் இனிமை.

தமிழைப் போல ஒரு மொழியும் இவ்வுலகினில் உண்டோ?

தமிழைப் போல இனிமையும் வேறு உண்டோ?

ஒரு மலர் மலர்ந்து பின் உலர்வதினை கீழே படியுங்கள்.

அரும்பு என முகிழ்த்து, நனையென துளிர்த்து, முகையென வளர்ந்து, மொக்குள்ளாகி, முகிழ் என முகிழ்ந்து, மொட்டு என உருவாகி, போதுவென மலர்ந்து, மலர் என பூத்து, பூவாகி வீயாகியது அதுமட்டுமா பொதும்பராகி, பின்பு பொம்மலாகி இப்போது செம்மலாகிப் போனது – வாழ்க்கை.

மலரின் ஒவ்வொரு நிலைக்கும் தமிழ் வார்த்தைகளைப் படித்தீர்களா? இனிமை என்பது இதுதானே?

தமிழ் என்றால் இனிமை….!

இனிமை இதோ இதோ இதோ – தமிழ்

Wednesday, December 16, 2020

நிலம் (74) - உபரி நிலங்கள் - ஜாக்கிரதை

விரைவில் தமிழகத்தில் போர் தொடங்கப் போகிறது. 

முன்னெடுப்பாக பத்திரப்பதிவுத் துறையில் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. பொங்கலுக்குள் உச்சத்தைத் தொடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்கள் பதிவுத் துறையில் ஒன்றும் பதிவாகாது.

இந்தப் போர் அரசியல்வாதிகள் அனேகரின் வாழ்க்கையை முடித்து வைக்கும் என நினைக்கிறேன்.

வரவு செலவு கணக்கு வழக்குகள் இந்தப் போரில் சரி பார்க்கப்படும். விதியின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது யாரோ தெரியவில்லை. பள்ளம் மேடாவதும், மேடு காணாமல் போவதும் விதியின் கையில் உள்ளது.

தேர்தலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாரத்துக்கு வரப் போர் நடக்கிறது. இது மகாபாரதப் போரை விட கொடிதானதாக இருக்கும். துரியோதன சேனை மிகப் பெரிது. வலிமையானது. 

அதற்குத் தேர்தல் என்று பெயர். 

இந்தியாவில் சமீபத்தில் நடப்பது தேர்தல் இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும். எல்லாமும் விற்பனைக்கு மனச்சாட்சியும் கூடத்தான். சட்டம் எப்போதோ விற்பனைக்கு வந்து விட்டது.

சரி இந்த அக்கப் போர் எப்போதைக்கும் நடந்து கொண்டே தானிருக்கும். மக்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போலத்தான்.

சமீபத்தில் கோவையின் மேற்கு மலைச்சாரல் பக்கம் ஒரு பிசினஸ் விஷயமாகச் சென்றிருந்த போது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அதற்கு முன்பாக ஒரு இடைச்செருகல்.

டேன் இந்தியா என்றொரு கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒரு வித்தியாசமான வழக்கு நடந்தது. 

டேன் இந்தியாவிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும்படி கோர்ட் மூலம் சொத்து கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த நேரத்தில் டேன் இந்தியா வைத்திருந்த நிலங்கள், நில உச்சவரம்பு மற்றும் சீர்திருத்தச் சட்டத்தின்படி, அனுமதி பெறாமல் இருந்த நிலமானது அரசின் சொத்து என வாதிடப்பட்டது.

அதாவது டேன் இந்தியா வாங்கிய நிலங்கள், இன்ன காரணத்துக்காக வாங்கப்படுகிறது, ஆகவே அனுமதி தாருங்கள் என நில உச்சவரம்பு ஆணையத்திடம் அனுமதி பெறாத காரணத்தால், ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சீலிங் லிமிட் நிலத்தை விட, அதிகமாயுள்ள நிலமானது அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது.

இது சட்டப்படி சரியானதுதான். பின்னர் அரசுக்குச் சொந்தமான சொத்தினை எப்படி விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுக்க இயலும்? முடியாது. இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளானது அப்பிரச்சினை.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கம் இருக்கும் ஒரு சில கிராமங்களில் சுமார் 1800 ஏக்கர் நிலங்கள் உபரி நிலங்கள் என அறிவிக்கப்பட்டவை. அந்த நிலங்களைக் கிரையம் பெறுவது கூடாது. ஒரு சில பேராசை பிடித்தவர்களால் அந்த நிலங்களுக்குப் பட்டாக்கள் பெறப்பட்டு விற்பனை செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு சிலர் இன்னும் வியாக்கினமாக, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று விடுகின்றார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இப்படியான நிலங்களின் தரவுகள் இருப்பதில்லை. ஆகவே பதிவு அலுவலகங்கள் பத்திரங்களைப் பதிவு செய்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் போன்ற தாலுக்காக்களில் பெரும்பாலான நிலங்கள் உபரி நிலங்கள். அது பற்றிய நோட்டீஸ் நில உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பலரும் இதை மறைத்து விடுகின்றார்கள். 

இது பற்றிய விவரம் எவருக்கும் தெரிந்தபாடில்லை. 25 ஏக்கருக்கும் மேல் என்றாலோ, பிரித்து விற்பனை செய்கிறார்கள் என்றாலோ ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் மிக நல்ல விஷயம் தெரிந்த லீகல் ஒப்பீனியன் வழங்குபவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் பஞ்சமி பூமிகள் அதிகமுள்ளன. பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பஞ்சமி பூமிகளில் தான் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.

கடும் உழைப்பில் கிடைக்கும் பணத்தினை சரியான நிலத்தில் முதலீடு செய்வது முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

உபரி நிலங்கள் மற்றும் சீலிங்க் லிமிட் பற்றித் தெரிந்து கொள்ள என்னை அணுகலாம். நிச்சயம் கட்டணம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவற்றை கவனித்து வாங்குங்கள்.

வாழ்க வளமுடன்...!




2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி

ஐப்பசி மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். குளிர் எலும்பினை ஊடுறுவிச் செல்லும். தாத்தாவின் ஐ.என்.ஏ யூனிபார்ம் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்துப் போட்டுக் கொள்வேன். ஓட்டு வீடாகையால் குளிர் வீட்டுக்குள்ளே இறங்கும். விடிகாலைப் பொழுதில் தாதன் வாசலில் சிகண்டி அடித்து சங்கு ஊதிச் செல்வான். சிகண்டி கண்டு விழித்து விடுவேன். சரியாக பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பார்கள்.

கல் வேய்ந்த வாசல். கிராமத்திலேயே எங்கள் வீட்டில் தான் இருந்தது. வாசலைச் சுற்றி சிமெண்ட் பூசி, தண்ணீர் செல்ல வழி வைத்த சமமான கல்வாசல். நெல் காய வைப்பது, ஊறுகாய்கள், வத்தல், வடாம், உளுந்து இன்னும் என்னவெல்லாமோ வாசலில் தான் காய வைப்போம். மாலையில் சூடு கொப்பளிக்கும். நான்கைந்து வாளி தண்ணீர் தெளித்து சூட்டைக் குறைத்து, இரவில் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பாயைப் போட்டு தூங்குவதும் உண்டு. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். அதை எண்ணிக் கொண்டே இருக்குங்கால் தூக்க தேவதை அழகாய் தழுவி விடுவாள்.

வீட்டின் இடது புறம் நீண்ட ஆண் பனைமரம் இருக்கும். தென் கிழக்கு மூலையில் நாவல் மரம் பெரியது. வாசலை ஒட்டி வண்டி செல்லும் வண்டிப்பாதை. வீட்டு வாசலின் நேராக ஒரு பூவரசு மரம். அம்மாச்சி செத்துப் போனப்போது அதற்கு பயன்படுத்திய பூவரசம் குச்சியை அம்மா வாசலின் நேராக ஊன்றி வைத்தார்கள். அது பிழைத்துக் கொண்டது. அம்மாச்சியைப் பார்ப்பது போல தினமும் அந்தப் பூவரச மரத்தை அம்மா வாஞ்சையோடு பார்ப்பார்கள்.

பூவரசு மரம் அதன் இலைகளைத் தைத்து சோறு போட்டுச் சாப்பிடுவார்கள் திடீரெனெ வீட்டுக்கு வரும் வேலைக்காரர்கள்.

தீபாவளி சமயங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். ஒரு மழை நாளில், தீபாவளி அன்று என் தோழியை முத்தமிட்ட சம்பவம் என் ஊடே மின்னல் என வந்துச் சென்று விட்டது. ஹா…

எனக்கு நிறைய மாமா பெண்கள் இருந்தார்கள். எனக்குப் பிடித்த சில மாமா பெண்களும், தோழிகளும் உண்டு. அது உள்ளூர இருக்கும் அன்புணர்வு. தீபாவளி நாட்களில் பலகாரங்களைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவார்கள். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு நிரம்பவும் பிடித்த என்னை விட மூத்த வயது மாமா பெண் ஜெயம் மட்டுமே. மீதமுள்ளவர்களைக் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்.

சமீபத்தில் தான் எனது நெருங்கிய நண்பன் மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் அவன் வீடுதான் மிகவும் பெரியது. வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான வீடு. வீடு என்றுச் சொல்வதை விட குட்டி அரண்மனை என்றுச் சொல்லலாம். அவனின் தாத்தா ஊரில் பெரிய வீட்டுக்காரர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனுடன் நெருக்கம் அதிகமானது. வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அவனின் அக்காக்கள், அவனின் அண்ணன் எல்லோரும் பார்ப்பதற்கு ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல இருப்பார்கள். நானோ சொங்கிப் போய் இருப்பேன். படிப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமுண்டு என்னிடம். நானும் அவனும் கணக்குப் பாடங்களை எழுதுவது போன்ற படிப்புத் தொடர்பாக பழகினோம். அவன் வீட்டில் சாப்பிடுவதுண்டு.

பழைய நண்பனுடன் பேசும் போது மனக்கண்ணில் அந்தக் காலத்துக்கே சென்று விடுவோம் அல்லவா? அதைப் போல எனக்கும் நேர்ந்தது. கடந்த காலம் இனி வராது. என்னதான் செய்தாலும் அந்த நேரமும் பொழுதும் இனி கிடைக்காது. ஆனால் அதன் நினைவுகள் தரும் சுகமானது மகிழ்ச்சியை விட வேதனையைத் தந்து விடும் எல்லோருக்கும் அல்லவா? அன்றைக்கு டிவி இல்லை, மொபைல் இல்லை. தினசரிகள், மாதப் பத்திரிக்கைகள் தவிர வேறொன்றும் இல்லை. மனிதர்களைப் பார்ப்பதும், பேசுவதும், விளையாடுவதும் ஆன பொழுதுகள் இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

மார்கழி மாதம் என்பது சாதாரணமானது அல்ல. இறைவனை நினைத்து போற்றக்கூடிய காலம் இது. காலம் காலமாக ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணன் மட்டுமா துயில் களைய வேண்டும்?

தமிழர்களும் துயில் களைய வேண்டும். இன்னும் சினிமாக்கனவுகளில் மூழ்கி தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்து எழ வேண்டிய நாள் இது. விழித்துக் கொள்ளுங்கள்.

கிழட்டு நரிகள் அழகிய இளம் பெண்களுடன் ஆடிப் பாடிக் களித்து அதைக் காட்டி கிளர்ச்சியுறச் செய்து ஓட்டு வாங்கி அதிகாரம் செய்ய, நரித்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொள்வது பணிக்காக. ஆனால் மக்களுக்கு வேலை செய்ய கையூட்டுப் பெற்றால் மட்டுமே வேலை செய்யும் போக்கினை மாற்ற வேண்டும். அதற்குக் காரணமான ஆட்சியை மண்ணுக்குள் தள்ளி மூட வேண்டும்.

பசியாற்றும் விவசாயிகள் டெல்லிச் சாலையிலே பனி மூட்டத்தின் ஊடே போராடிக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசி தீர்த்தவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கார்ப்பொரேட் கூலியாக நின்று விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. விவசாயத்தைப் பிடுங்கி தன் அரசியல் நண்பர்களிடம் கொடுத்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

எழுந்திருங்கள் தமிழர்களே…! எழுந்திருங்கள்…!!

சொந்தம் உற்றார், உறவினர், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி என எதுவும் பார்க்க வேண்டாம். நம்மை வழி நடத்த, நாட்டை நல் வழியில் ஆள நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  

மார்கழித் திங்களில், இந்த நன்னாளில் நீராடும் போது, எண்ணங்களில் இருக்கும் இன, மத, மொழி, கட்சி விரோதங்களை அழுக்கோடு கழுவி விடுங்கள்.

உலகம் நம்மை வாழ வைத்தது. நாம் நம் சந்ததியினருக்கு அவ்வாறே விட்டுச் செல்ல வேண்டிய கடமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

கோவையில் குளிர் இல்லை. சில்லடிக்கும் குளிர் சுத்தமாக இல்லை. விடிகாலைப் பொழுதில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் விபூதியும், குங்குமமும் இட்டு வாசலில் வந்து அமர்ந்தேன். வாசல் தெளித்து, கூட்டிப் பெருக்கி விட்டு, கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மனையாள். தெருவில் எந்த வீட்டிலும் விளக்குப் போடவும் இல்லை, கோலம் போடவும் இல்லை. எங்கோ தூரமாக சாமிப் பாட்டு ஒலித்தது. மனையாளும் நானும் ஏதோ தனித்து விடப்பட்டவர்களாக தெரிந்தோம். மக்களின் மனோபாவம் மாறிப் போனது. ஒழுங்கும், நியதியும், சமூக வழக்கங்களும் மாறிப் போனதன் விளைவினை பூமி அனுபவிக்கிறது. பூமியை ஆதாரமாகக் கொண்ட மனிதனும் அதன் தொடர்ச்சியாக அனுபவிக்கிறான். 

ஊரில் இந்த நேரத்தில் மழையூர் சதாசிவம் சிவன் கோவிலில் திருவாசகத்தையும், அகவலையும் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். குழந்தைகள் கோவிலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.

காலம் வசதி வாய்ப்புகளை மட்டும் தான் தந்தது. மனிதர்கள் அதற்காக தங்கள் வாழ்வியலை மாற்றி விட்டார்கள். ஆனால் பசியும் கோபமும் தாபமும் காமமும் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.

இந்த மார்கழி அன்று நாம் தமிழகத்தில் இருவரை முடக்க வேண்டுமென சபதம் கொள்வோம். எந்தத் தகுதியும் இல்லாமல் நம்மை ஆளத்துடிக்கும் அற்ப எண்ணமுள்ள நரிகளான, தமிழினத்துக்கு ஒரு கேடாக இருக்கும் கமலஹாசனையும், ரஜினி காந்தையும் முடக்கி அவரவர் வேலையச் செய்ய வைக்க வேண்டும்.  

கொரானா, பொருளாதாரச் சீரழிவு, துரோகிகளின் தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் எல்லாவற்றையும் கடந்து இனி தெளிவடைவது மட்டுமே முக்கியம். கடந்து போனவை போனதுதான், இனி அது திரும்பப் போவதில்லை. ஆனால் வரும் காலம் நமக்கானது. அதை நமக்கேற்றபடி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

உங்கள் அனைவருக்கும் மார்கழி முதல் நாளன்று இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, December 14, 2020

நிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன?

இரண்டு நாட்களாக பத்திரப்பதிவுத் துறை அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

வேறு யார்? துணைப்பதிவாளரைத் தவிர. அங்கிருக்கும் காண்ட்ராக்ட் பணியாளர்களின் உதவியுடன் இந்த அக்மார்க் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் துணைப்பதிவாளர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை. எந்தெந்தப்பத்திரத்திற்கு போலி ரசீது காட்டி பதிவு செய்தார்களோ தெரியவில்லை. திருப்பூர் துணைப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அயோக்கியத்தனத்தை இத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்படுவது மக்கள். 

வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி, நல்லது கெட்டதுக்கும் போகாமல், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஒரு இடத்தை வாங்க படாத அவஸ்தைப் பட்டு, அதைக் கிரையம் செய்யச் செல்லும் இடத்திலும் இப்படியான ஊழல், அயோக்கியத்தனத்தைச் செய்தால் என்னதான் செய்ய முடியும் மக்களால்?

வங்கியில் பணம் போட்டால், அது எப்போது திவாலாகுமோ தெரியாமல் விழி பிதுங்கி, அதை நிலத்தில் போட்டாலாவது கிடக்குமே என்று அவரவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு இடத்தைப் பார்த்து விலை பேசி கிரையத்துக்கு வந்தால் பதிந்த பத்திரமும் போலியாகப் பதிந்திருக்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை உடனடியாக பதவி நீக்கமோ பணி விடுப்போ செய்யாமல், அங்கேயே வைத்திருக்கும் அரசின் லாவணிக்கு அளவே இல்லை.

மக்களிடம் ஜி.எஸ்.டி எனச் சுரண்டி சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒரு பக்கம். காணும் இடமெல்லாம் ஊழல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.

இதற்கிடையில் மக்கள் இரயில் தண்டவாளத்தின் இடையில் மாட்டிய கதையாக கதி கலங்கிப் போய் கிடக்கின்றார்கள்.

பத்திரத்திரத்தைப் பதிவு செய்யவே மோசடி வேலை செய்திருக்கும் அந்தப் பதிவாளர் என்ன விதமானவர் என்று யோசிக்க கூட முடியவில்லை. இப்படியுமா ஒரு அதிகாரி இருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. கணிணி அலுவலக நடைமுறையின் இன்னொரு கோர முகம் இது. 

பட்டா மாற்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு முறைகேடுகள் இன்னும் சரி செய்யவில்லை.  நத்தம் பட்டாவில் நடத்தப்பட்ட பெரும் முறைகேடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பத்திரப்பதிவு செய்யவே முறைகேடு. 

ஏன் இப்படி ஆகிப்போனது தமிழக அரசு? காரணம் மக்கள். மக்களைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை. 

இது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் எவரும் திருந்தப் போவதில்லை. 

ரஜினிக்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்லுபவர்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 

தமிழருவி மணியன் அவர் அருகில் நிற்கிறார் வெட்கமில்லாமல். கோவையைச் சேர்ந்த ஒருவர் வேறு. அதிகாரத்தின் போதையில் இப்படியும் கீழ் மன நிலையில் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் சொன்ன மாதிரி, ஸ்ரெயிட்டா கல்யாணத்தில் தாலி கட்டத்தான் ரஜினி வருவார். 

அரசியல் என்பது இன்றைக்கு இவ்வளவு கீழ் தரத்திற்கு தமிழகத்தில் போய் விட்டது. ஆனால் பாருங்கள் அவர்களை உலகம் தலைவர்கள் என்கிறது. இதுதான் வேதனையிலும் வேதனை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி போலி பத்திரப்பதிவினை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்த பிறகு, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம் இரண்டையும் நேரடியாக ஆன்லைனில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும். இதை தனிப்பட்ட முறையில், எவரிடமாவது கொடுத்தால் இப்படியான சிக்கலில்தான் சிக்க வேண்டி வரும்.

அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ரசீது காட்டி பதிவு செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்குப் பணம் போகவில்லை. அந்தப் பத்திரத்தின் நிலை இப்போது NULL AND VOID.

ஆகவே நண்பர்களே, கொஞ்சமாவது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உழைப்பு உங்களது. பணம் உங்களது. அது உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே கவனம் தேவை.

பதிவுத்துறை மோசடி இணைப்புச் செய்தி : https://www.dinamalar.com/news_detail.asp?id=2670493


மேலும் ஒரு குறிப்பு : கமல்ஹாசனுக்கோ, ரஜினிக்கோ ஓட்டுப் போட கிஞ்சித்தும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் இன்னும் தமிழ் நாட்டை கூறு போட முனைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அதிமுக, திமுக தவிர அவர்களால் பதவிக்கு வர இயலாது என. ஆனாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கம் ஒன்றுதான் செட்டில்மெண்ட். அல்லது அயோக்கியத்தனம். 

போதும் சினிமாப் பைத்தியமாகி அலைந்து திரிந்தது. சினிமாக்காரர்களுக்கு தமிழ் நாட்டை எழுதி வைத்த காலத்தை மலையேற்றுவோம். 

நல்லவர்கள் எவரோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம். 

தர்மம் ஜெயிக்க வேண்டும். அறம் ஜெயிக்க வேண்டும். அதுதான் நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். 

இவர்கள் இரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டையை விட கொடியவர்கள். அட்டை பசிக்கு உறிஞ்சும். ஆனால் இவர்களோ கொடூரர்கள்.

மேலும் சில செய்திகள் - செய்தி உதவி தினமலர் - நன்றி

சும்மா படிச்சு வையுங்க. என்னைக் கவர்ந்த செய்திகள் இவை.




Wednesday, December 9, 2020

சித்ராவுக்கு ஒரு கடிதம்


(சின்னத்திரை நடிகை சித்ரா)

அவ்வளவு அவசரம் ஏனோ சித்ரா? 

உணர்வுகளின் பிடியில் சிக்கி விட்டீரோ?

உணர்வுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என நிருபித்து விட்டாயே சித்ரா.

இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து சென்றிருக்கலாமே?

உன்னிடம் விளம்பரப் படத்திற்காகப் பேசி இருக்கிறேன். உன் குரலைக் கேட்டால், எனக்கு உன் மீது காதல் கொப்பளித்து அருவி போல கொட்ட ஆரம்பித்து விடும்.

அதைத் தவிர எனக்கும் உனக்குமான நேரங்கள் ஏதும் இல்லை. 

என்னிடம் உனக்கும், உன்னிடம் எனக்கும் எந்த வித பயனும் இருந்ததில்லை.

ஆனால்,

இரண்டொரு நாள் உன் குரலின் தாக்கத்தால் பெரும் மன வலி அடைவேன். 

இருப்பதே ஒரு மனசு. 

எனக்கு கடவுளின் மீது எல்லையில்லா கோபம் உண்டு இந்த விஷயத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் மனசைப் படைத்து இருக்கலாம்.

அதில் இன்னொரு விஷேசத்தையும் இணைத்திருக்கலாம். ஒவ்வொரு மனசுக்கும் தொடர்பில்லா வண்ணம் செய்திருக்கலாம்.

மனித உலகினை கடவுள் வஞ்சித்து விட்டார்.

அது கிடக்கட்டும் அழகு தேவதையே….. !

மனசு வலித்து வலித்து உதிரம் கொட்டுகிறதடி உன் பிரிவால்.

எல்லாமும் முடித்து வைத்து விட்டாய்.

உன் சின்னஞ்சிறு உதடுகளைச் சுழித்துச் சுழித்து நீ பேசுகையில் சின்னக் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்பது போல இருக்கும். குழந்தையாகத் தானே இருந்தாய். அதற்குள் என்ன அவசரமோ உனக்கு?

உன் உருவமும், அழகும் ஒரு கிராமத்து அத்தியாயத்தின் நடிகையாக வந்த மருத்துவரைப் போல உள்ளத்தை அள்ளிச் செல்லுமே? இனி எவரிடம் காண்பது அதை? உன்னோடு எல்லாமும் போனதடி.

அத்தனை அழகையும், உன் அறிவையும் இரக்கமே இல்லாத நெருப்பிடமா கொண்டு போய் சேர்த்தாய்? மிச்சம் சொச்சமில்லாமல் தின்று விடுமே உன்னை.

இதற்குத்தானா இத்தனை அழகாய் ஆடினாய், பாடினாய்?

ஏனடி உனக்கு இத்தனை கோபம் வாழ்க்கை மீது?

வாழ்க்கை சிக்கலானது இல்லை சித்ரா.

நாம் தான் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். நாமே பின்னிய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியவில்லையா உனக்கு?

மதியம் போல உன் செய்தி.

வேதனையில் கண்கள் குளமாயின.

இன்றைக்கு தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது.

உனக்காத்த்தான் மழையும் அழ ஆரம்பித்ததோ சித்ரா? இயற்கைக்கு எல்லாமும் தெரிந்திருக்குமோ?

என் பெரிய மாமன் மகள் பெயர் சித்ரா. என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அதனாலோ என்னவோ உன் மீது எனக்குப் பிரியம் அதிகம்.

எனக்கும் சித்ராவுக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது போல. அதைப் போல நீயும் விட்டுப் பிரிந்து போனாயோ?

சித்ரா உனக்காக உலகக் கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு சில வரிகளைக் கடன் வாங்கி இருக்கிறேன்.

இதோ....!


நான் எக்காலமும் இந்த கரைகளில் கடல் மணலுக்கும்

நுரைக்கும் நடுவே உலாவிக் கொண்டிருக்கிறேன்.

உயர் அலைகள் என் காலடிச்சுவடுகளை அழித்துவிடும்

அவ்வாறே காற்று நுரையினை ஊதித்தள்ளிவிடும்.

ஆனால் இந்த கடலும் அதன் கரையும் எக்காலமும் இருக்கும்.

 

ஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.

கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் மாறி இருந்தது.

மீண்டும் கைகளை மூடி திறந்தபோது அங்கே ஒரு பறவை இருந்தது

 

இன்னொருமுறை கைகளை மூடி திறந்தபோது

அதனிடுக்கில் கவலை தோய்ந்த முகத்துடன்

மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான்!!

 

நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது

அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.

ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு பாடலை நான் கேட்டேன்.


(கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் எனும் கவிதையிலிருந்து)

ஆம் சித்ரா உலகம் இருக்கும் வரை துன்பங்களும் துயரங்களும் உண்டு மனதுக்கு மட்டும். ஆனால் உனக்கு அல்ல சித்ரா.

மனதுதான் துன்பத்தினை அனுபவிக்கிறது உன் ஆன்மா அல்ல சித்ரா.

மனதை வெல்லத் தெரிந்து கொள்ள வேண்டும் சித்ரா.

ஆனால் நீ இருந்த துறை முற்றிலும் உணர்வுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சாக்கடை.

ஒரு பன்றிக்கு எப்படி சாக்கடை இன்பமோ அதைப் போல பல கோடி மனிதர்களுக்கு சாக்கடை மனதே இன்பம்.

சித்தாந்தமும் தத்துவமும் பேசுவதால் பயனில்லை சித்ரா.

உனது ஆன்மா அமைதியாகட்டும்.

க்

கு

ரு

நினைவூட்டல்

நான் வாழ்ந்து வரும் இக்காலத்தில் ‘இனிமையிலும் இனிமையான ஒரு பாடலைக் கேட்டேன்’

அப்பாடல்

சித்ரா…..!

* * *

உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை என்னிடம் பேசி விடுங்கள் நண்பர்களே. ஒரு சில மணித்துளிகள் நாம் பேசலாம். ஏனென்றால் நான் உங்களின் நண்பனாக, தோழனாக, தோழியாக, மகனாக, மகளாக இருக்க விரும்புகிறேன்.

உங்களின் உணர்வுகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்க முற்பட்டால், அந்த வாழ்க்கையை எனக்குத் தந்து விடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். சித்ராவைப் போல முடிவெடுக்கும் முன்பு ஒரு சில வார்த்தைகள் என்னிடம் எனக்குக் கடனாய் தந்து விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மொபைல் : 96005 77755 (இந்தியா)

* * *

என்றைக்குமே இனி கேட்காத ஒரு பாடலாக மாறிப் போன நடிகை சித்ராவிற்காக எழுதப்பட்டது.

Thursday, November 19, 2020

லட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்?

அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவக்கல்லூரியில் கோடிக் கணக்கில் சீட் வழங்க துட்டு வாங்கப்படுகிறது என்றுக் காரணம் சொல்லி, நீட் வந்தது.

அரசியல்வாதிகளுக்கு பணம் எப்படி வந்தது என்று கண்டுபிடித்தால் அவர்கள் எப்படி கல்லூரி திறப்பார்கள்? அதை எவரும் எந்த உத்தமரும் கேள்வி கேட்கமாட்டார்கள்.

ஆனால் மக்கள் பரிட்சை எழுதி பாஸ் செய்ய வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு எதுக்கு பரிட்சை வைக்கணும்? நேரடியாக நீட் எழுதலாமே? 

ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள். இதன் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம்போக்கு கிழட்டு மூதி டெல்லியில் லோக் ஆயுக்தா வேண்டுமென்று போராடியது. அது இப்போ எங்கே போனது என்று தெரியவில்லை. அப்பட்டமான அயோக்கியத்தனத்தைச் செய்து இந்திய மக்களை ஏமாற்றினான் அந்தக் கிழட்டு பச்சோந்தி. யோக்கிய உத்தமர் இவரே என்று சொல்லாமல் சொல்லிச் சென்றான் அவன். ஜி.டி.பி. மைனஸ் 23 சதவீதத்திற்கும் கீழ் சென்று விட்டது. 

ஏழை எளியவர்களுக்கு கிடைத்த படிக்கும் வாய்ப்பினை ஏன் பறிக்கிறது மத்திய அரசு? இதிலும் அரசியல் இருக்கிறது.

ஐடியில் கோலோச்சியவர்களுக்கு இனி அது சரிப்படாது என்று தெரிந்து விட்டது. ஆகவே இந்தக் குறுக்கு வழி. இனி ஆட்சிப்பணி, மருத்துவப் பணி எல்லாவற்றிலும் வேறொரு இனத்தினர் கோலோச்ச வழி வகைகள் செய்யப்பட்டு விட்டன.

அடுத்து எய்ம்ஸ் பிஜி கோர்ஸுக்கும் டெஸ்ட்.

டிமாண்டிசேஷன் போது சேகர் ரெட்டிக்கு கிடைத்த 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி இன்றைக்கு வாய் திறக்காதவர்கள் இன்று கணக்குக் காட்டப்பட்டு விட்டதாக சொல்லுகின்றார்கள்.

சட்டசபையில் பதினோறு எம்.எல்.ஏக்கள் கட்சி விரோதமாக ஓட்டளிக்கின்றார்கள். இன்றைக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. ஆனால் உலக பொய்யன் அர்னாப் கோஸ்வாமிக்கு உடனடியாக ஜாமின் விசாரணை நடத்தப்பட்டு ஜாமின் அளிக்கப்படுகிறது. நீதிமன்றத்தினை கேள்வி கேட்டால் வழக்குப் போடுகின்றார்கள்.

அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. பொய்யும் புரட்டும் செய்திகளாகி வெளியாகின்றன. 

டிமாண்டிசேசனில் ஏகப்பட்ட ஊழல் நடத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். அதற்கு கட்டியம் கூறுகிறதா இந்தச் செய்தியைப் படித்த போது கேள்வி எழுகிறது.

இந்திய நாட்டினருக்குச் சொந்தமான ஒரு வங்கியை எதற்கு அடிமாட்டு விலைக்கு இன்னொரு வெளி நாட்டு வங்கிக்கு விற்க ஆர்.பி.ஐ அனுமதிக்க வேண்டும்? ஏன் இப்படித்துடிக்கிறது ஆர்.பி.ஐ என்று கேட்கிறார்கள் செய்தியாளர்களும், முதலீட்டாளர்களும். மிகக் குறைந்த ஆஃபர் செய்யும் வெளி நாட்டு வங்கியுடன் ஏன் எல்.வி.பிஐ இணைக்கத் துடிக்கிறது ஆர்.பி.ஐ? காரணம் என்ன?

ஏனென்றால் வெளியேறிய கருப்பு பணம் இப்படி உள் நுழைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

பதில் சொல்வார் யாருமில்லை. இதோ அந்தச் செய்தி. 

இதில் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அரசு எப்படி இந்திய மக்களை ஏமாற்றுகிறது என்பது மட்டும் தான். மக்கள் நலன் என்கிற போர்வையில் பிடிக்காத பிரைவேட் நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார்கள். 

அதாவது ஒரு சமூகத்தால் உருவாக்கப்பட்ட வங்கியை அவர்கள் அழிக்கத் துடிக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அடுத்து கரூர் வைசியா வங்கி என்று பேசிக் கொள்கிறார்கள்.

ஏன் அவ்வாறு நடக்கிறது? பிறர் எவரும் தொழிலதிபராக வரக்கூடாது, பெரியவர்களாக வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் தவிர வேறு என்னவாக இருக்க இயலும்? 

இந்தியா மீண்டும் மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தப்படுகிறது என்பது கண்கூடு.

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. துரோகிகள் கூட்டம் மதம் பேசித் திரிபவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நாம் என்றைக்கும் ஒரு துரோகியை மன்னித்ததே இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். பெண்களிடம் வீரம் காட்டும் உலக மகா யோக்கிய சிகாமணிகள் உலவும் நாடு இது. வெட்கம் கெட்டவர்கள். பணத்தின் முன்னால் வெட்கமாவது ஒன்றாவது. 

நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதையும் வெளிக்காட்ட வேண்டியதில்லை. நேரம் வரும் போது நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டும்.

நன்றி செய்தி உதவி : பிசினஸ் ஸ்டாண்டர்ட்





Monday, November 9, 2020

குருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்

தேடிச் சோறுநிதந் தின்று — பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான்

வீழ்வே னன்றுநினைத் தாயோ?

என்று பாடிய பாரதியார் இன்றளவும் தமிழர்கள் மத்தியில் தன் கவிதையால் ஆளுமையாக இருந்து வருகிறார். மனிதர்கள் பிறக்கின்றார்கள் இறக்கின்றார்கள் என்பது இயற்கை. இதில் எத்தனை மனிதர்கள் தான் வாழ்ந்து சென்ற பூமிக்கும், தன்னுடன் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நன்மையும், எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால் விரல் நீட்டிச் சொல்லி விடும் அளவுக்கே இருக்கின்றார்கள்.

பாரதியாரின் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் கருவிற்கு உதாரணமாக பல்வேறு மகான்களும், புனிதர்களும், வீரர்களும், தேசத் தொண்டர்களும் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள் இந்தப் பாரதப் பூமியிலே.

அப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகத்தான் இப்பூமியில் பிறக்கின்றார்கள். என் வாழ்க்கைப் பாதையில் நான் பழகியவர்களில் அப்படியானவர்களில் ஒருவர் தான் இவர்.


மருத்துவர் அ.நாகராஜ் அய்யா

தோற்றம்:01.10.1944 ஜீவ ஐக்கியம்:08.11.2020


இக்கட்டுரையை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள யூடியூப் கிளிக் செய்யவும்



எம் குருவின் பிரதான சீடரும், கோவை இ.எஸ்.ஐயில் சிவில் சர்ஜனாகப் பணி செய்து ஓய்வு பெற்றவருமான மருத்துவர் நாகராஜ் அவர்கள் சமீபத்தில் குருவடி சேர்ந்தார். மருத்துவரின் ஜீவன் எம் குருவின் பாதக் கமலங்களில் ஐக்கியமானது. அவரைப் பற்றிய ஒரு சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது அவருக்கான அஞ்சலி என நினைக்கிறேன்.

2013ம் வருடம் முதற்கொண்டு குருவடிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 2014ம் வருடத்தில் மருத்துவரைச் சந்தித்தேன் முதன் முதலாக. குரு பூஜையின் போது அவருடன் நீண்ட நேரம் பேசக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றைக்கு ஜோதி சுவாமிகளைக் காட்டி, இனி என்னால் இந்த ஆசிரமத்தினை நிர்வகிக்க வயது இடம் கொடுக்கவில்லை, மனதும் இடம் கொடுக்கவில்லை, குருநாதரின் அருளாசியால் இவரை இங்கு நியமித்திருக்கிறேன். இனி அவருடன் உங்களின் ஆன்மீக வாழ்க்கையைத் தொடருங்கள் என்றுச் சொல்லி புன்னகைத்தார். அன்றைக்கு குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசரிதம் புத்தகம் வெளியிடப்பட்டது என் நினைவுக்கு வந்து செல்கிறது.

கருமையான, சற்றே குள்ள உருவம். முகத்தில் வாசியோகத்தின் ஆத்ம அமைதி தெரியும். ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். இடது கையில் ஒரு வாட்ச், மோதிரம், கழுத்தில் செயின். வெள்ளுடையில் ஜொலிப்பார். நடை, உடை பாவனைகள் அனைத்தும் ஆழ்ந்த அமைதி கொண்டவையாக இருக்கும்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதியின் நிர்வாகம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களின் மனமானது பல உள் சிக்கல்களைக் கொண்டது. பொருளாதாரமும், தன் முனைப்பு ஈகோவும் கொண்டவர்களால் தங்கள் வாழ்க்கையை தாங்களே சிக்கலாக்கிக் கொள்வது தெரியாமல் வாழ்வார்கள்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கருணை இல்லா மனதுடையோர் கடவுளின் கருணையைக் கருதி தொழுதிருப்பர். சக உயிரினத்தின் மீது கருணை வைக்காதவர்களுக்கு கடவுள் எங்கணம் தன் கருணையை அளிப்பார் என்று புரிந்து கொள்ளாதவர்களால் தான் இந்த உலகம் இன்றைக்கும் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. மானுடத்தின் வாழ்வியலும் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.

அப்படியான தருணங்களை மருத்துவர் தன் குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவேஸ்வர ஐக்கியமானது முதல் அனுபவித்து வந்திருக்கிறார். தம் குருவின் மீது கொண்ட அன்பினால், குரு பக்தியினால் இன்றைக்கு நொய்யல் ஆற்றங்கரையின் மீதோரம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் குருவின் ஜீவ சமாதிக்கு அடிக்கல் நாட்டி, கோவிலாக உருவாக்கி தினமும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளித்து வரும் படியான தொண்டு செய்ய வழிகாட்டி நடத்தி வந்திருக்கிறார்.

இன்றைக்கு குருவின் ஜீவசமாதி ஆலயத்துக்கு வாழ்வியல் துன்பம் அகல குருவின் பாத கமலங்களைத் தரிசிக்க லட்சோப லட்ச மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தினம் தோறும் பத்து இருபது என்று ஆரம்பித்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது நூற்றுக்கணக்கில் பக்தர்கள் தங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட குருவினைத் தேடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆரம்பகாலங்களில் ஐந்து ஆறு பேருக்கு அன்னமளித்து வந்த எம் குருவின் ஆலயத்தில், இன்றைக்கு தினம் தோறும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளிக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு காரணமாக இருப்பவர் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள் என்றால் அது மிகையல்ல. இக்காரியத்தை பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு இன்றைக்கும் திறம்பட நடத்தி வரும் ஜோதி சுவாமிகளைக் கண்டுபிடித்து, அவரை இக்காரியத்துக்கு ஆட்படுத்திய செயலைச் செய்து பல ஆயிரமாயிரம் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், துன்பங்கள் நேராமல் காத்து வரும் சீரிய பணியைத் திறம்பட செய்ய மருத்துவர் அய்யா அவர்களே காரணம் என்பது அங்கு வந்து செல்லும் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தன் குரு நாதரிடம் பெற்ற அனுபவங்கள் பல. அதில் ஒரு சில, குருவின் மீதான நம்பிக்கையினால் விளையக்கூடிய அற்புதங்கள் பற்றியவை.

மாந்தர்களின் வாழ்வு முழுமைக்குமான தேடல் பொருள். பொருள் தேடி ஓடி ஓடிச் செத்துப் போகும் அற்ப மானுட வாழ்வில் பொருள் என்பது எதையும் தந்து விடுவதில்லை என்பதை எவரும் அறிந்தபாடில்லை. மாட மாளிகையும், எண்ண இயலா பணமும் இருப்பின் அதை விட இன்பம் வேறில்லை என்று நினைக்கும் அற்பர்களுக்கு அதை அடைந்த பின்புதான் தெரியும் இதுவல்ல இன்பம் என்று. பணமுடையவருக்கு இன்பம் பணமல்ல என்று தெரிந்திருக்கும். அப்படியானவர்கள் படாடோப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடுவர்.

எண்ணற்றோர் அதிகார போதையும், பணத்தின் மீதான் ஆசையும் கொண்டு இந்த ஒரே எண்ணத்துக்காக மட்டுமே வாழ்ந்திருப்பர். எத்தனையோ எண்ணங்கள் இருப்பினும் ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்போரை பைத்தியம் என்று அல்லவா சொல்வோம்?. ஆனால் இங்கு பாருங்கள் அவர்களை நாம் தலைவர் என்கிறோம். தலைவர்கள் அதிகாரப் பைத்தியங்களாகவும், பணப்பைத்தியங்களாகவும் இருப்பதை ஆராதிப்பவர்களும் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இப்படி பணம் தேடி ஓடித் திரிபவர்களுக்கு இறைவனே முடிவான வழியாகத் தெரிவார். கோவில் கோவிலாய் ஏறி இறங்கி பணம் கொடு இறைவனே என்று இறைஞ்சித் திரியும் மானிடர்களின் இடையே குருவின் ஆசியால் சொர்ணரேகையைத் தரிசித்து, அதனால் கொஞ்சம் கூட பொருளாசை இல்லாத வாழ்க்கையை மருத்துவர் வாழ்ந்தார். குரு எவ்வழியோ அவ்வழி சீடனும் என்பதற்கு ஏற்ப தனது வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்.

ஒரு முறை வெள்ளிங்கிரி மலைக்கு குருவுடன் சென்றிருக்கிறார் மருத்துவர். வெள்ளிங்கிரி மலைவாசனைத் தரிசித்து திரும்ப வரும் போது அன்னை ஆதிபராசக்தியின் மூன்று பெண்களின் வடிவில் நின்றிருப்பதை மருத்துவருக்குக்காட்டி ஆசி பெறச் செய்திருக்கிறார். ஆசி வழங்கிய மூவரும் நொடியில் மறைந்து போயினர் என்பதை குருவின் நினைவாக அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

இந்த உலகம் சக்தி மயமானது. சக்தியே இயக்கி வருவது. ஆதிசங்கரரின் அன்னையான ஆதிபராசக்தி மூகாம்பிகை அன்னை குடி கொண்டிருக்கும் இடத்தில் தியானம் செய்வது சாலச் சிறந்தது என்று குருநாதர் மருத்துவரை அழைத்திருக்கிறார். அப்போது உடன் செல்ல இயலா காரணத்தால், வேறொரு தருணத்தில் மருத்துவர் ஆதிபராசக்தி அன்னை ஆதிமூகாம்பிகையத் தரிசிக்க குருவின் அனுமதி கேட்டிருக்கிறார். அனுமதி அளித்து, ஆங்கே ஒரு சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கு அமர்ந்து தியானம் செய் என்று சொல்லி அருளி இருக்கிறார்.

குரு சுட்டிய இடங்களில் அமர்ந்து தியானத்திலிருக்கும் போது, சொர்னரேகையை கண்டிருக்கிறார் மருத்துவர். தியானம் கலைந்து எழுந்திருக்கும் போது, அக்கோவிலில் பூஜை செய்து வரும் அடியவர் வந்து இந்த இடங்களில் எப்படி அமர்ந்திருக்கின்றீர்கள் என்று வினவி இருக்கிறார். குருவின் பெயரைச் சொல்ல, அவர் ஒரு மகான் என்றுச் சொல்லி விட்டு, மருத்துவரை அழைத்துச் சென்று வெள்ளிக் கவசத்தில் இருக்கும் சொர்ணரேகையைக் காட்டி இருக்கிறாஅர் அந்த அன்னைக்கு அடியவர். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றும் பொருளின் மீதும் எந்த வித ஆர்வமுமின்றி எளிய தவ வாழ்க்கையை வாழ்ந்து குருவின் திருவடியில் ஐக்கியமாகி இருக்கிறார் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள். சொர்ணரேகை சக்கரம் எழுதத் தெரிந்தவர். அதை அவர் என்றைக்கும் தனக்காக செய்து கொள்ளவில்லை.

இதைப் போல இன்னும் எண்ணற்ற ஆச்சரியமளிக்கும் அற்புதங்களை நிகழ்த்திய குருவுடன் பயணித்தவர் இவர். இவரின் தவ வாழ்க்கையின் பலனாக, ஒரு குருவிற்கு சீடன் செலுத்திய குருபக்தியாக மலர்ந்து நிற்கிறது ஆலயம்.

அந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் எம் குருவின் ஆசியால் லட்சணக்கானவர்களின் துயர் துடைக்கப்படும். ஜீவசமாதி ஆலயங்களைத் தரிசிக்க அனுமதி பெற்றவர்களே வர இயலும். தாங்கள் செய்த கர்ம வினைகள் தங்களை அழித்திடா வண்ணம் குருவானவரே பாதுகாப்பார். அவ்வாறே இதுகாறும் என்னையும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆன்மீக அன்பர்களையும் குரு பாதுகாத்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து தவ வாழ்வு வாழ்ந்து வரும் என் சகோதரியும், மருத்துவரின் மகளுமான ராஜேஸ்வரி அவர்களுக்கும், சுவாமி ஜோதி அவர்களுக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் இவ்வுலகிற்கு தன் குருவின் ஆசி கிடைத்திட விட்டுச் சென்ற தொண்டினை தொடர்ந்து நடத்தி வர தம் குருவுடன் இணைந்து ஆசி வழங்குவார்.

குருவின் எல்லையில்லா கருணை மழையில் நாமெல்லாம் ஆனந்தமாக வாழ்ந்திடவும், பாதுகாப்பாய் இருந்திடவும் மருத்துவர் அய்யா அவர்களின் ஜீவ ஐக்கியத்தினை நினைவு கூர்ந்து, அவரின் ஆசி பெற விழைவோம்.

அன்புடன்

கோவை தங்கவேல்

08/11/2020 அன்று மருத்துவரின் மறைவுக்காக எழுதிய அஞ்சலிக் கட்டுரை.

Thursday, October 22, 2020

சட்டம் சிக்கலானது - வருமானம் பிரதானமானது

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் இந்தியாவின் உயிர் நாடி. சட்டம் தான் ஒரு நாட்டை இயக்கும் அச்சாணி. ஆனால் இந்தியாவில் இப்போது உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டமும் இன்னொரு சட்டத்திற்கு விதி விலக்குகளைத் தருகிறது. 

தற்போதைய சட்ட உருவாக்கங்கள் இதே போல பல பிரிவுகளில் விதிவிலக்குகளையும், உட்பிரிவுகளையும் கவனிக்காமல் சட்டமாக்கப்படுகின்றன. அதன் காரணமாக சட்டத்தில் ஓட்டைகள் விழுகின்றன. தேச விரோதிகளும், தேசத் துரோகிகளும், விலை போகும் பராரி ஈனர்களும், அதிகார பிசாசுகளும் அவைகளைச் சரியாகப் பயன்படுத்தி பிழைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றங்கள் துணை போகும் அவலமும் ஏற்பட்டு விடுகின்றன. உதாரணம் ஜெ-சசி வழக்கில் முன்னாள் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பு. பிறகு அதை ரத்துச் செய்த உச்ச நீதிமன்றம். நீதிபதிக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? ஒன்றுமில்லை. சட்டம் தன் கடமையைச் சரிவர செய்யாத நாள் அது. எவரும் அதைப் பற்றிப் பேசவே இல்லை. அந்த நீதிபதியைப் பற்றி ஒரு வார்த்தை? இதுதான் ஜன நாயகமா?

இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டிய சட்டத்துறை அலுவலகமோ ஆட்டு ஆட்டு என தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் என்ன நடக்கின்றது என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கப்படுகிறது. இந்தியா எத்தனையோ கட்சிகளின் ஆட்சிகளையும், பிரதமர்களையும் கண்டு விட்டது. ஆனாலும் சட்டம் எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போதோ??? கேள்விக்குறியாய் நிற்கிறது.

இந்தியாவை ஒரு தாய் என்றால் அவள் உடுத்தி இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் எனும் சேலையில் ஆங்காங்கே ஓட்டையைப் போட்டு, அவளின் ஆடையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பாப்ரி மசூதியை வேண்டுமென்றே இடிக்கப்படவில்லை என்கிறது.




இதை வெகு எளிதாக சரி செய்து இருக்கலாம். பிற கட்சிகளை இணைக்க சிப்பிஜி ராஜ தந்திரம் பயன்படுத்துவதைப் போல எதிர்ப்பாளர்களை சரி செய்து, இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் உணர்ச்சியை தூண்டி விடுவதுதான் ஆகச் சிறந்த அரசியல் தர்மம் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை தேவையில்லை என்பது தெளிவு.

அடுத்து, முன்பே இருக்கும் சட்டத்தை எப்படி ஒன்றுமில்லாதவாறு ஆக்குவது என்பதைப் பற்றிய உதாரணம்.

பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி நியூஸ் ஆர் சாய் எனும் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையை கீழே படத்தினைக் கிளிக் செய்து படித்துப் பாருங்கள். 



செய்தி உதவி : NewsAurChai - Magazine (Thanks)

இதைத் தெளிவு பெற செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. அரசே அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது சரியல்ல. எதிர்வரும் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். அறமும் வேடிக்கை பார்க்காது என்பதும் உண்மை.

தமிழ் நாட்டில் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டங்கள் போன்றவை சட்ட விரோதமானது. ஆனால் ஆன்லைன் ரம்மி மட்டும் சட்டபூர்வமானது. அதற்கென தனி ஆர்டினன்ஸ் இருக்கிறது போலும். வரி வருமானம் மட்டுமே பிரதானம் என்கிறது அரசு. மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன? இது தான் நடக்கிறது இப்போது இங்கே. 

ஜூவியில் ஒரு கட்டுரை. ஆன் லைன் ரம்மியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது அது. நீங்கள் ஏன் விளையாடப் போகின்றீர்கள். அரசு ஒன்றும் அழைக்கவில்லையே என்பார்கள்.

பிள்ளைக்கறி விற்பனைக் கடைக்கு அனுமதி தருவது அரசு. பிள்ளைக்கறி தின்னாதே என்கிறது அரசு. நானா உங்களை அழைத்தேன் என்கிறது அரசு. கொடுமையிலும் கொடுமை. 

இதைத்தான் சொல்கிறேன் இந்தியத் தாயின் உடையில் ஆளும் அரசாலும், மத்திய அரசாலும் போடப்படும் ஓட்டைகள் இவைகள் என.

சட்டங்கள் தங்களுக்குள்ளேயே வேறுபாடுகளைக் கொண்டிருப்பது மிகப் பெரும் ஆபத்து. இந்திய ஜன நாயகம் கொஞ்சம் கொஞ்சமாக குழப்பத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

நீதிமன்றங்கள் தங்கள் வழங்கும் தீர்ப்புகள் பற்றிய சட்ட விளக்கங்கள் கொடுக்கின்றன. ஆனால் பெரும்பான்மையானவற்றில் அது பின்பற்றப் படுவதில்லை என்பது சரியாக இருக்காது. நீதிபதிகளின் வாழ்க்கையும் அறத்தின் முன்னால் விசாரணைக்கு உட்பட நேரிடும் என்பதை எவரும் மறந்து விடலாகாது.

நன்றி..!

வணக்கம்....!

Wednesday, October 21, 2020

உசிரை உனக்கே நேந்து விட்டேன்

இன்று என் நண்பருக்கு திருமண நாள். இருவரும் நீண்ட காலம், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல தேவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

எனக்குத் திருமணம் முடிந்து பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து இருபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். அன்புச் சிறை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும் திருமணம். ஏன் வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்பதற்கான காரணம் திருமணம்.

பொழுது புலர்ந்த காலையில் காற்றாடியின் வேகத்தில் முகத்தில் அலையென பரவிக் கிடக்கும் கூந்தலிடையே அவள் ஆனந்தமாக தூங்குவதைப் பார்ப்பதும், அருகில் வாயில் எச்சில் ஒழுக நிம்மதியுடன் தாமரை இதழ்கள் சூரியனுக்காக மூடிக் காத்திருப்பது போல இமை மூடி தூங்கும் அற்புதங்களின் உறக்கத்தைப் பார்ப்பதை விடவும் ஆனந்தம் வேறு உண்டா இவ்வுலகில்?

நானும் வாழ்கிறேன் என்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. வாழ்ந்து பாருங்க நண்பர்களே.. வாழ்க்கையின் சந்தோசம் எதுவென தெரியும். அவர்களைப் பார்த்து விட்டு, சும்மா வீட்டில் இருக்க முடியுமா?

ஓடிக் கொண்டிருப்போம். ஓடி ஓடிக் களைத்துப் போகும் போதெல்லாம் நமக்காக காத்திருக்கும் மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகங்களையும் நினைவில் கொண்டு வாருங்கள். களைப்பு போன இடம் தெரியாது. எவன் எதைச் செய்தால் தான் என்ன? இன்னும் வேகம் வேகம் என ஓடி ஓடிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? 

திருமணம் என்பது பிணைப்பு. மனைவியிடமோ கணவனிடமோ குறைகள் இருக்கலாம். விட்டுக் கொடுப்பதைப் போல இன்பம் இந்த உலகில் ஏதும் உண்டா? உடலின் அழகை வயது ஏற ஏற அதனிடம் விட்டுக் கொடுக்கிறோமே ஏதாவது கோபம் வருகிறதா?

முலைக் காம்பை இரத்தம் வர கடித்து பால் அருந்து குழந்தையிடம் கோபித்துக் கொள்கிறாளா தாய்?

யோனி கிழிய, உடம்பை அதிர வைக்கும் வலியுடன் குழந்தையைப் பெற்று எடுக்கின்றாளே அவள் தன் வலியை தன் குழந்தைக்காக விட்டுக் கொடுக்கின்றாளே அதை விட பெரிதாகவா நாம் விட்டுக்கொடுக்கிறோம்? இல்லையே?

விட்டுக் கொடுத்து விடுங்கள் எல்லாவற்றையும்.

பூமி நமக்கு தன் வளமெல்லாவற்றையும் நமக்காக விட்டுக் கொடுக்கிறது. பூமியிலிருந்து நாம் விதை போல வெளியில் வந்திருக்கிறோம்.

பெற்றது தாயாக இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்குமான உண்மையான தாய் பூமி. 

அது கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

காற்று, நீர், இடம், உணவு என்று எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாமும் பெற்றுக் கொண்டே இருக்கிறோம். நம்மை எல்லாம் வாழ வைத்து மகிழ்வுடன் பூமி பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கிறதை பார்க்கிறோம் அல்லவா?

அதைப் போலே எல்லாவற்றையும் கொடுத்து விடுவோமே. விட்டுக் கொடுத்து விடுவோமே? அதனால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? இழப்பது கொஞ்சமே ஆனால் பெறுவது பேரானந்தம்.

ஆகவே அன்பு நண்பர்களே...!

விட்டுக் கொடுத்து விடுங்கள். பெறப்போவது அதிகமோ அதிகம்.

திருமணத்தை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம் கையிலே.

இன்றைக்கு திருமண நாள் காணும் அன்பு நண்பர்களுக்கும், தோழிகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

நிற்க...!

கரூரில் இருக்கும் போது ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நானொருவரைப் பார்க்கச் செல்வதுண்டு.

காவிரிக் கரையோரம் நிம்மதியாக உட்கார்ந்து நூற்றாண்டு காலமாய் தவம் இருக்கும் அவரைப் பார்க்காமல் என் ஞாயிறு போகாது.

அழுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு, காவிரித்தாய் செல்லும் ஆற்றங்கரையில் அமர்ந்து அழுக்கை நீக்கி, சூரிய ஒளியில் காயப்போட்டு விடுவேன். பிறகு ஆனந்தமாய் காவிரி அன்னையின் அருளில் நனைந்து, உடல் குளிரக் குளிர நன்கு குளியல் போடுவேன். ஆற்று மணலை எடுத்து உடலில் தேய்க்கும் போது, எழும் உணர்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமோ பேரானந்தம்.

துணிகள் காய்ந்தவுடன், பைக்கிள் எடுத்து வைத்து விட்டு, அவரைப் பார்க்கச் செல்வேன்.

அவர் யார்? 


தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றி பெற்ற அவரின் குரு, ஊரார் வாயை அடக்குகிறாயே, உன் வாய்? என்று கேட்டதற்காக வாழ் நாள் முழுவதும் பேசாமலே இருந்தவர்.

சதா நேரமும் சிவமென இருந்தவர் அவர். நெரூரில் சமாதியில் இருக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் அவர். 

காவிரிக் கரையின் ஓரம் பள்ளம் தோண்டித் தரச் சொல்லி, அப்பள்ளத்துக்குள்ளே தன்னை ஐக்கியமாக்கி தவம் செய்தவர். அவர் பாதம் பட்ட மண்ணை எடுத்து உடம்பில் பூசிக் கொள்வதை விடவும், அவர் நடந்து சென்ற கரையினிலே, காவிரித் தாயின் கருணை அன்பினால் வழிந்தோடும் உயிர் நீருக்குள் மூழ்கிக் கிடப்பதை தவிர எனது இந்த ஜென்மத்தின் பேரு வகை எது?

பனிரெண்டு மணி பூஜையின் போது காசி விஸ்வ நாதரைத் தரிசித்து விட்டு, அவரின் ஜீவசமாதியில் அமர்ந்து தியானித்து விட்டு வெளி வருவேன். 

அவர் தான் எனக்கு அவளைக் காட்டினார். 

அவளுக்கு என் உசிரை நேந்து விட்டேன்....!

மிக்க நன்றி வணக்கம்.

Tuesday, October 20, 2020

ஐபோன் 12 விலை என்ன? அதிர வைக்கும் வரி

விலை உயர்ந்த பொருட்கள் தரம் நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள். உலகளவில் மொபைல் போன் மார்க்கெட்டின் ராஜா ஐபோன்கள். அதன் தரம், தனக்கென தனி ஆபரேட்டிங் சிஸ்டம், கிளவுட் ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள் என தனிக்காட்டு ராஜாவாக இன்றைக்கும் உலக மார்க்கெட்டில் வலம் வருகிறது. 

ஐபோன்களின் அடுத்த அடுத்த வர்சன்கள் வெளிவர ஒவ்வொருவரும் போட்டி போட்டு வாங்குவார்கள். உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மிகக் குறைவாக கிடைக்கும் இந்த ஐபோன்கள் இந்தியாவில் மட்டும் மிக அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் ஐபோன் 12 மினியின் விலை ரூ.74,900 ஆக உள்ளது. இந்த போன் இந்தியாவிற்குள் விற்பனை செய்ய வரும் போது, கிட்டத்தட்ட 27000 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி இருபது சதவீதம், செஸ் 2 சதவீதம், சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி - பதினெட்டு சதவீதம் என அரசு ஒரு போனுக்கு வரியாக வசூலிக்கிறது.

செய்தி பட உதவி : பிசினஸ் ஸ்டாண்டர்


இந்த ஐபோனின் அடக்கவிலை அதுவும் ஆப்பிளின் லாபம் சேர்த்து விற்பனை ரூ.47,900. இந்த போன் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் போது ரூ.27,000 வரி சேர்த்து இந்திய மக்களுக்கு விற்கப்படுகிறது.

பிஜேபி அரசின் இந்த வரி விதிப்பு பகல் கொள்ளை எனச் சொல்கிறார்கள். இவ்வளவு வரி வாங்கினாலும் இன்னும் இந்தியாவில் 40 கோடி பேர், இரவு உணவு இல்லாமல் பட்டினியாகத்தான் தூங்கச் செல்கிறார்கள் என்று சீமான் தன் உரைகளில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.

ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வரி. இவ்வளவு வரி வாங்கியும் அரசு நிதி போதாமல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்குகிறது.

தேசபக்தர்களாக இருந்தால் அரசு விதிக்கும் வரியினைக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. 

இருப்பினும் இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. ஆப்பிள் போன் இந்தியாவில் தயாரிப்பை ஆரம்பித்தால், விலை குறையும். அதற்காக இந்திய அரசு இம்மாதிரியான வரி விதிப்பினை விதிக்கிறது என்கிறார்கள். 

எதுவாக இருப்பினும் சரி, ஒரு போனுக்கு இவ்வளவு வரியா என்பது மலைக்க வைக்கத்தான் செய்கிறது.

#ios #iphone #oneplus #plus #smartphoneaccessories #iphonex #iphonecamera #iphoneaccessories #iphonecase #iphoneshot #smartphone #iphonedaily #iphonese #loveit #lisaandlena #iphoneology #pro #goals #lisaandlenalove #phonecases #phones #phone #likeit #apple #lele #promax #lovethis #iphoneographer #iphonepic #bhfyp

Monday, October 19, 2020

புத்தம் புதுக் காலை - ஊசி போட்டா மாதிரி

ஜீன் எனச் சொல்வார்கள். அப்பன் போலவே, அம்மா போலவே இருக்கான்(ள்),  பாரு என்றால். 

ஆந்தாலஜி மூவி - ஐந்து இயக்குனர்கள் இணைந்து ஆளுக்கொரு கதை. ஓடிடி அமேசான் பிரைமில் புத்தம் புது காலை திரைப்படம் (??) கதைத் தொகுப்பு பார்த்தேன்.

முதல் கதை...! இளமை இதோ இதோ...!

புள்ள, புருஷனை விட்டு விட்டு ஒரு பெண் பழைய காதலனைத் தேடி வந்து ஜோடி சேருவது வயதான காலத்தில். அம்புட்டுதான் கதை.

அப்பனாக ஜெயராமும், சிறுவயதாக இருக்கும் போது காளிதாஸும் நடித்திருக்கிறார்கள். 

இயக்குனி சுதா கொங்காராவின் கற்பனை வளமும், படமாக்கமும் வெளுக்குது. 

ஒழுக்கமாக சமூக கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படம் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். ஏன் நாமும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாமே, இருந்தால் தப்பில்லை போலும் என்ற எண்ணம் கூட உதிக்கும்.

இயக்குனருக்குள் வித்தியாசமான ஆசை போலும். சின்னஞ்சிறு வயதில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆகவே இளம் வயதிலும் காட்டி இருக்கிறார்.

இளமையில் பத்து நிமிஷம் செஞ்சிருப்பாங்க. வயதானால் வாய் சாரி வயாக்கரா போட்டு செஞ்சிருப்பாங்க. இதைத் தவிர வேறு என்ன செஞ்சிருக்க முடியும்? 

செக்ஸைத் தவிர உனக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கும் நபர்களுக்கு. நீர் எங்கிருந்து வந்தீர் என்று உம்மையே கேள்வி கேட்டுக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் அதான் மூலமே....@

எதார்த்தம் மீறிய கதை. சினிமாக்காரர்களுக்கு ஒழுக்கம் தவறிய வாழ்க்கை என்பது வாழ்வியல் நெறியாக இருக்கலாம். ஆனால் அதை மனசு, சந்தோஷம் என்கிற வகையில் படமாக எடுப்பது என்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. 

சுதா கொங்குராவுக்கு இக்கதை அனுபவமாக இருந்திருக்கலாம். நடக்காமலா எழுதி இயக்கி இருக்க முடியும்?

சுதா கொங்குராவின் கதை பெண்ணீய விடுதலையைப் பேசும் அதி அற்புதமான கள்ளக்காதலை வளர்க்கும் புதிய முயற்சி. கள்ளக்காதல்களுக்கும், கள்ளக்காதலர்களுக்கும் ஒரு நியாயம் உண்டு. தர்க்கம் உண்டு.

இன்னொருத்தன் பொண்டாட்டியை இன்னொருவன் ஆட்ட போடுவது, இல்லையெனில் இன்னொருத்தி புருஷனை வனி சாரி காதல் என்ற பெயரில், வசதியாக கல்யாணம் கட்டி பிஸ்டன் போல இயங்க வைப்பது தான் பெண்ணீய சுதந்திரம் போலும். இப்படியான புரட்சிகரமான கதைகள் இன்னும் எடுத்து தள்ளுங்க. யாருக்கு பிறந்தது இந்தப் பிள்ளை என்று இனிஷியல் கேட்கும் அமெரிக்கன் கலாச்சாரம் இந்தியாவில் வளரட்டும்.

அடுத்து

ஒரு பேத்தி தாத்தா கதை. அவரும் நானும், அவளும் நானும்.

மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு விட்டாள். அப்பா அவளுடன் பேசுவதே இல்லை. பேத்தி வருகிறார். தாத்தா தன் மகள் நன்றாகப் பாடுவாள், அதைக் காதல் என்ற பெயரில் உங்க அப்பா அழித்து விட்டார் என்ற கோபத்தால் அம்மாவுடன் உறவில் விரிசல் என்கிறார். 

தாத்தா வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார். அவரின் பேத்தி, அம்மாவின் குரலைப் பதிவு செய்து வந்து தாத்தாவிடம் போட்டுக் காட்டுகிறார். வெளிச்சம் வந்து விடுகிறது. வீட்டுக்குள் முடங்கிய தாத்தா வெளியில் வருகிறார்.

கதை முடிந்தது.

கவுதம் வாசுமேனன் இயக்கம். 

அடடா.. ரித்து மேனன் வெடக்கோழி அல்ல சும்மா உரிச்செடுத்த நாட்டுக்கோழி. அது ஒன்றுதான் இக்கதையில் கிடைத்தது. தாத்தா பேத்தி உறவென்பதை இவ்வளவு கேவலமான கதையாக எடுக்கலாம் என கவுதமுக்கு தெரிந்திருக்கிறது. அதுசரி த்ரிஷா அப்படியே சாப்பிட்ட சாரி சாரி, நடிக்க வைத்த திறமைக்காரர் அல்லவா அவர். இதுவெல்லாம் பெரிய இடத்து மேம்பட்ட ரசனை போலும். நமக்கு ரசிக்க வராது.

(ரித்து வர்மா)

அடியேனெல்லாம் ராமபக்தர். மசூதியை இடிக்கத்தான் லாயக்கு. 

அடுத்து,

காஃபி எனி ஒன்?

இயக்கம் சுகாசினி.மனிரட்னம்

காரில் வரும் போது அனுஹாசன் உள்ளே பிரா போட்டிருக்கலாம். வயதான காலத்தில் காத்தாட இருக்கட்டும் என விட்டு இருக்கலாம். இல்லை புரடெக்‌ஷனில் அதான் மெட்ராஸ் டாக்கீஸில் காசு இருந்திருக்காது. அவ்வளவு பெரிய காரையும், அதன் குலுக்கலையும் பார்த்தால், வெடுக்கென ரசனை வரவில்லை. சுருங்கி போனது ரசனை. ரசனையைச் சொல்கிறேன்.

சுகாசினியும், அப்பாவாக நடித்த காத்தாடி ராமமூர்த்தி, அப்புறம் உலக மகாப் பேரழிகி அனுஹாசன் நடிப்பை எழுத்தில் சொல்லி மாளாது. அம்மா கோமாவில் கிடக்கிறார். அப்பா அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார். மகள்களுக்கு அப்பா அம்மாவிற்கு கிடைக்க கூடிய நல் மருத்துவத்தைக் கெடுக்கிறாரே என்ற கோபத்தில் அப்பாவுடன் வாதம் செய்கிறார்கள். சின்னமகள் ஸ்ருதிஹாசன் மியூசிக் அதான் இசை டவுசர் கிழிக்கும் இசை பாடகி அம்மாவுடன் வீடியோ காலில் பேச, அம்மாவின் கோமாவிலிருந்து வெளி வந்து காஃபி கொடுக்கிறார்.

சுகாஷினிக்கும், அனுஹாசனுக்கும் ஸ்பானிஷ் மொழி தெரியும் என்பது இப்படத்தின் மூலம் தெரிய வந்தது. இருப்பினும் அனுஹாசன் பிரா போட்டிருக்கலாம். கார் ரொம்ப பெரிசு பாருங்க. டிரைவருக்கு சிரமாக இருக்கும் அல்லவா? அந்தக் கவலைதான் எனக்கு.

ரசனையற்ற வெற்று வறட்டுக் கவுரம் பேசித் திரியும் ஈகோ பிடித்தவர்கள் இவர்கள். இவரை இயக்குனர் என்றுச் சொல்லி, அமேசான் அங்கீகரிக்கிறது. மூளை கெட்டவர்கள் அமேசானில் அட்மினாக இருந்தால் இப்படித்தான் இருக்கும். 

அடுத்து, ரீயூனியன்.

கொக்கேய்ன் பயன்படுத்தும் ஆண்ட்ரியா. பள்ளித் தோழ மருத்துவ நண்பரின் வீட்டில் கொரானாவின் காரணமாய் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து மீண்டு விட முயற்சிக்கிறார். பள்ளித் தோழன் தன் காதலைச் சொல்கிறார். கதை முடிந்தது.

ஆண்ட்ரியாவின் ட்ரெசிங் சென்ஸ் அடிபட்ட பென்ஸ் கார் போல சகிக்கவில்லை. முகத்தில் கிழடு தட்டி சுர்ருன்னு ஆயிடுச்சு. இவரைப் போய் ஒரு படத்துக்கு, வித்தியாசமான கேரக்டருக்கு சிபாரிசு செய்து கொண்டிருந்தேன் இயக்குனர் நண்பரிடம். பிச்சினச்சு ஆகி விடும் சாரே என்று குதூகலத்தில் இருந்தார் அவர். 

இயக்கம் ராஜீவ் மேனன். இன்னொரு கொக்கேய்ன் கதைகள். அந்தப் பெண்ணுக்கு காதல். ஆண்டி ரியா வித்தியாசமான கதைகளில் நடிப்பவர் தான். அதற்காக இப்படியா? எடிட்டிங்காவது ஒழுங்காக இருந்திருக்கனும். சகிக்கலை.

இந்தப் படத்துல ராஜீவ் மேனன் ஒரு மேட்டர் சொல்லி இருப்பார் பாருங்க. கடவுளே ஆண்களுக்கு இனிமே அதை இரும்பில் படைத்து விடுங்கள். நன்றாக இருப்பீர்கள் ஆண்டவரே... உம்மை ஆண்கள் சார்பில் தோத்திரம் செய்கிறேன். 

ஆண்டி ரியா, தோழனின் அம்மாவிடம் கேட்பார். உங்க கணவரின் ரொமான்ஸ் எப்படின்னு. அதுக்கு அந்தக் கிழவி, ம்...”ஊசி போட்டா மாதிரி வந்துட்டுப் போவாரு”ன்னு சொல்லும். சாதாரணமா அரை அங்குலமாவது சைஸ் இருக்கும். அதையே அந்தக் கிழவி ஊசின்னு சொன்னா, பின்னே என்னா சைசுக்கு அது இருக்கணும் என யாராவது சொல்லுங்க... ராஜீவ் மேனனின் பெண்ணீய சிந்தனை சிலிர்க்க வைக்கிறது.

அடுத்து

மிராக்கிள் - இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்.

எளிதில் ஊகித்து விடக்கூடிய கதை. கொடுமையிலும் கொடுமை. இடையிடையே இசைக்கோர்வைகள் வேறு. பாபி சிம்ஹா படங்களில் படுத்தியது போதாது என இது வேறயா? 

மிராக்கிள் பற்றிப் பேசும் சாமியாரின் கள்ளப்பணம், ஒரு இயக்குனருக்கு கிடைக்கச் செய்வது கதை. திருடராய் பாபி. அய்யய்யோ.. அம்மா.... கார்த்திக் உங்க இயக்கம் அடி தூள். ஏதாவது வெடக்கோழியா போட்டிருந்தாலாவது ரசித்திருக்கலாம். அதுவும் இல்லை. இருட்டுக்குள் முரட்டு கொத்து போல ஒரு எழவும் தெரியவில்லை. இருட்டுக்குள் ஒரு மிராக்கிள் என்று பெயர் வைத்திருந்தால், ரசிகர் பட்டாளம் இந்த ஆந்தாலஜியை கொண்டாடி  இருக்கும். 

அடுத்து முக்கியமான கிளைமேக்ஸ்

மேலே சொன்ன நான்கு படங்களிலும் ஆங்கிலம் சும்மா தெரித்தது. ஐந்தாவது படத்தில் இல்லை. 

வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவர்களால் தான் இப்படி எல்லாம் பேச முடியும் என ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டிய ஒரு ஆளைப் பார்த்து என் நண்பர் சொன்னார். அடுத்து அவர் சொன்னார், ”ஏதாவது கிராஸா இருக்கும் போல. ஆளின் கலரு பாருங்க”.

இப்போ படியுங்க இந்தப் பதிவின் முதல் வாக்கியத்தை.

நன்றி வணக்கம்.

Sunday, September 20, 2020

நிலம் (72) - தேனி கம்பம் போடி நாயக்கனூர் தென்னை தோட்டங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

கோவிட் இந்தியாவில் பல்கி பெருகிக் கொண்டிருக்கிறது. குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. இனிமேல் தான் பாதிப்புகள் அதிகரிக்கும் ஆபத்து வரும். ஆகவே அனைவரும் முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்கவும். 

மத்திய அரசும், மாநில அரசும் இனி ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு பலப் பிரச்சினைகள். மக்களாகிய நாம் கையறு நிலையில் நிற்கிறோம். அது தான் உண்மை. 

இந்தியப் பொருளாதாரமா? மக்களின் உயிரா? என்று வருகையில் அரசு பொருளாதாரத்தை தான் முன்னெடுக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



கல்விக்கும் பல்வேறு தடைகளை உருவாக்கி இந்தியர்களில் குறிப்பாக தமிழர்களை படிக்க விடாமல் செய்வதில் மத்திய அரசு அதீத முனைப்புக் காட்டுகிறது. சுற்றிச் சுற்றி அடிக்கிறது மத்திய அரசு நீதிமன்றத்தின் துணை கொண்டு. 

இத்தனை தேர்வுகள் நடத்த காரணம் அரசியல்வாதிகள் கல்வி மூலம் கருப்பு பணம் சம்பாதிக்கின்றார்கள் என்றுப் பேசுகின்றார்கள். கல்வியை அரசுடைமை ஆக்கி விட்டால் கருப்பு பணம் ஒழிந்து போகும். பிரதமர் நரேந்தர் மோடி அவர்கள் நினைத்தால் முடியும். ஆனால் அவரால் செய்ய இயலுமா என்பது கேள்விக் குறி. ஒவ்வொரு மதத்தின் பெயராலும் கல்விச் சாலைகள் இயக்கப்படுகின்றன. சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை.

ஆனாலும் எது வரினும் தாங்கி நிற்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் நம்மிடம் உண்டு.

இதுவும் கடந்து போகும். 

தமிழகத்துக்கு மிக நல்ல தலைவர் வருவார் என்பதில் எனக்கு மிக்க நம்பிக்கை உண்டு.

* * * 

இனி தேனி கம்பம் போடி விஷயத்துக்கு வந்து விடலாம்.

கோல்ட் ஆன்லைன் மூலமாக தென்னந்தோப்பு நிலங்கள் விற்பனைக்கு பட்டியலிட்டு இருந்தேன் அல்லவா?

இந்த நிலங்கள் தண்ணீர் வசதி, மண்ணின் தரம், லீகல், வாஸ்து, எதிர்கால வளர்ச்சி, வருமானம் ஆகியவைகள் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.

பெரும்பாலும் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் தென்னந்தோப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் தேனி, கம்பம், போடி ஆகிய பகுதிகளுக்குச் சென்று வர நேரிட்டது. அங்கிருந்தும் ஒரு சில நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கோல்ட் ஆன்லைனில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.

நல்ல தண்ணீர் வசதி, மண் வளம், லீகல், வாஸ்து பார்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன. 

நான் பெரும்பாலும் தென்னைத் தோப்புகளைத் தேர்ந்தெடுக்க காரணம் முதலீடு செய்த 40வது நாளில் வருமானம் வந்து விடும். குறைவான பராமரிப்பு, நிரந்தர வருமானம். எதிர்காலத்தில் நல்ல முதலீடு பயன் கிடைக்கும் என்பதால் அடியேன் இவ்வகை நிலங்களையே தேர்ந்தெடுக்கிறேன்.

ஒரு ஐந்து ஏக்கர் வேண்டும், ஆனால் பணம் குறைவாக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும். நமது நிறுவனம் பல வங்கிகளில் DIRECT SELLING AGENT அனுமதி பெற்றிருக்கிறோம். ஆகவே லோன் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம்.

இனிமேலும் தேனி, கம்பம், போடியில் விரைவில் நிலங்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்தும் அற்புதமான பலனையும், நல்ல வருமானத்தையும் தரும் நிலங்கள். கொஞ்சம் காசு சேருங்கள். ஆளுக்கு இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் என வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள்.

தோட்ட பராமரிப்பு, வருமானம் பற்றி எல்லாம் கவலைப் படாதீர்கள். நமக்கு அங்கே அலுவலகம் உண்டு. அடியேன் கவனித்துக் கொள்கிறேன். கொஞ்சமே கொஞ்சம் கட்டணம் உண்டு. 





விரைவில் தென்னைத் தோட்டங்களுக்கு உரிமையாளராக வாழ்த்துகிறேன். எவரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. மாதா மாதம் வருமானம். அழகான வாழ்க்கை. நிரந்தரமான நிம்மதியான வருமானம். வேறு எந்த வேலையிலும் கிடைக்காத சந்தோஷம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

அழைக்கவும் பேசலாம்.

கோவை தங்கவேல் - 96005 77755