குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, July 24, 2009

தங்கத்தின் விலை குறையுமா ?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. என்ன காரணம் ?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பில் சரிவேற்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆபரணத்தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இன்று ரூபாய் 11400க்கு விற்கப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

தங்கம் வாங்க விரும்புவர்கள் அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை வாங்கும்படியும், உடனடித் தேவை இல்லாதவர்கள் சற்றே பொருத்து விலை குறையும் போதும் வாங்கலாம் என்று ஃபைனான்சியல் அட்வைஸ்ர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகளவில் குருடூ ஆயில் சற்றே விலை உயர்ந்து பீப்பாய்க்கு 65.25 டாலராக இருக்கிறது. மேலும் உயரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மார்கெட் நிலவரங்கள் சொல்கின்றன.

இனி சில கம்பெனிகளின் நிகர வருமானம், நஷ்டம் இவற்றைப் பார்க்கலாம்.

மாருதி சுசுகியின் காலாண்டு நிகர வருமானம் 584 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிருவனத்தின் வளர்ச்சி விகிதம் 25% ஆகவும் உயர்வு பெற்றிருக்கிறது.

கேஈசி இண்டர்னேஷனல் கம்பெனி மின் உற்பத்திக்கான சுமார் 477 கோடி ரூபாய் பணி ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவின் காலாண்டு நிகர வருமானம் 442 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஏசிசியின் காலாண்டு நிகர வருமானம் 15% வளர்ச்சியுடன் 471 கோடி ரூபாயாகும்.

இண்டோ ஜிஸ்க் நிறுவனத்தின் 9 லட்சம் பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது. மொத்த பங்குகளில் இது 20 சதவீதம் ஆகும். முன்பே ஐசிஎல் நிறுவனம் 39.84 சதவீதம் பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருக்கிறது.

மங்களூரி ரிபைனரி காலாண்டு லாபம் 50 சதவீதம் சரிவு பெற்றிருக்கிறது.

Friday, July 17, 2009

அப்பாவுடன் அம்முவின் போராட்டம்.......


படித்துக் கொண்டிருப்பேன். கையில் உருளை சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு என் தலையருகில் அமர்ந்து கொண்டு கையில் எடுத்த சிப்ஸை வாயில் வைத்து கடித்து விட்டு மீதியை ”அப்பா, ம்.. ”என்று சொல்லி என் வாயில் வைக்கும் அம்மு. நானும் சாப்பிடுவேன். அப்படியே ஒரு பாக்கெட்டையும் காலி பண்ணுவோம் அம்முவும் நானும். இது வழக்கமாக அம்முவுடன் நானும் சேர்ந்து கொண்டு செய்யும் வேலை.

இன்று, ஹோமியோபதி டாக்டரை பார்த்து விட்டு வரும் போது வாங்கி வந்த காராச்சேவைக் கொண்டு வந்து காட்டியது அம்மு. வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்புறம் சாப்பிடலாம் அம்மு என்று சொல்லி விட்டேன்.

மாலை நேரம். டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காராசேவு நினைவுக்கு வர ”அம்மு, காராச்சேவை எடுத்துக்கிட்டு வாரியா, சாப்பிடலாம்”என்றேன். ”அப்பா, அப்போதே சாப்பிட்டு விட்டேனே” என்றது அம்மு. ”அப்படியாம்மா” என்று சொல்லிபடி டிவியில் மூழ்கி விட்டேன்.

ரித்திக் பள்ளியில் இருந்து வந்ததும் சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”ஏதுடா இது?” என்றேன்.

”கிச்சனில் இருந்ததுப்பா” என்று ரித்திக் சொல்ல எனக்கு கோபம் வந்து விட்டது. ”அம்மு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று சொல்லி கோபத்துடன் மனைவியிடம் ”உன் மகளை என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லு” என்று கோபமாக கத்தினேன்.

அவ்வளவுதான். உடனே அம்மு அருகில் வந்து மூக்கை முகத்தில் வைத்து தேய்த்தது. நான் தள்ளி விட்டேன். முத்தம் கொடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். மேலே ஏறி உட்கார முனைந்தது. ”என்னிடம் வராதே” என்று கோபத்தில் இறைந்தேன். பயந்து விட்டது. அம்முவின் அம்மாவிடம் ”ஏய் அம்முவிடம் சொல்லி என்கிட்டே வரக்கூடாது என்று சொல்” என்று கத்தினேன்.

கையில் சாப்பாட்டைத் தட்டைக் கொண்டு வந்து அருகில் அமர்ந்து ”அப்பா ஊட்டி விடு” என்றது. நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது பார்த்து, நண்பரிடமிருந்து போன் வர, மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசக்கூடாது என்றும், நான் மட்டும் தான் அப்பாவிடம் பேசுவேன் என்றும், நீ அப்பாவுடன் பேசாதே என்றும் சண்டை போட அம்மாவுக்கும் அம்முவுக்கும் தகராறு வந்து விட்டது. என்ன சொல்லியும் நான் கேட்கவில்லை என்றவுடன் ”அப்பா, கால் வலிக்குது, வலிக்குது” என்று அழ ஆரம்பித்தது. நானொன்றும் சொல்லவில்லை என்பதால் எழுந்து போய் அம்மாவிடம் மீண்டும் சண்டை போட , மனைவி என்னிடம் வந்து ”ஏங்க இப்படிச் செய்றீங்க?” என்று கேட்க, நான் காராச்சேவு பிரச்சினையைச் சொல்ல சிரி சிரியென்று சிரித்தாள். அம்மு மறந்து விட்டது என்றும் அதனால்தான் முடிந்து விட்டது என்று சொல்லி இருக்கிறது என்றும் சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

உடனே இருவரும் ராசியாகி விட்டோம். ஒரு வழியாக அம்முவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் இவைதான். மனித குலம் இப்படிப் பட்ட சந்தோஷங்களினால் தான் இன்றும் ஏதோ நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

குழந்தைகள் வாழ்க்கையினை அர்த்தப் படுத்தும் அற்புதங்கள் என்பதை இந்த அற்புதமான தருணத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

Sunday, July 12, 2009

சபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



அன்பு சபா !
அழகிய, அறிவான, அன்பான உனது வாழ்வில் எல்லா வளமும், புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வீட்டுக்கு மூத்தவனான உன்னால் தான் உனது உறவுகளும், உற்றோர்களும், நண்பர்களும் சந்தோசம் பெற முடியும். உன்னால் சாதிக்க முடியாத என்று ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். நீ வெற்றியாளனாய் உலக மாந்தர்களின் உள்ளங்களை வெற்றி கொள்வாய் என்பது என் நம்பிக்கை. உனக்காக உன் தாய் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த தாய்க்கு நீ செய்யும் ஒரு உபகாரம் உண்டென்றால் அது ”உலகே உன்னைக் கொண்டாட வேண்டும்” என்பது தான்.

எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன் :
ரித்திக் நந்தா, நிவேதிதா, பூங்கோதை, தங்கவேல்