குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 14, 2012

உண்மை வேண்டுமா மரணத்தைக் கொடு


உண்மை தன்னை நிலை நாட்டிக் கொள்ள மாபெரும் விலையைக் கொடுத்து வரும் பலப்பல நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். பதவிப் பித்துப் பிடித்த கொ(த)லைவர்களால் புதைக்கப்படும் உண்மைகள் வெளிவர பலர் தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள். இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

2010 வரையிலும் 12க்கும் மேற்பட்ட ஆர்டிஐ ஆர்வலர்கள் தகவல் கேட்டதற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு வெட்கக் கேடான விஷயத்தைப் படியுங்கள். சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் ரேஷன் கார்டு தொடர்பாக கேட்டிருந்த ஒரு கேள்விக்கு PIO எம் மணிமேகலை என்பவர் தகவல்  கொடுக்க ஆள் பற்றாக்குறை இருப்பதினாலே, நாள் ஒன்றுக்கு 1950 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி வந்தால் அவர்களுக்கு எப்போது தகவல் கிடைக்கிறதோ அப்போது கொடுப்பதாகவும், அதுவரைக்கும் ஆகும் செலவை திருமணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். என்ன ஒரு அயோக்கியத்தனமான பதில் இது என்று பாருங்கள். தகவல் கேட்டால் கொல்கின்றார்கள். இல்லையென்றால் இப்படி ஒரு அக்கிரமத்தைச் செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செய் நன்றி அற்ற மானிடர்கள் அரசு அலுவலர்களாய் இருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது பெயருக்குத்தான் இருக்கிறது என்கிற மாயையை தமிழக அரசு அலுவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதாவது பரவாயில்லை, தகவல் கேட்டதற்காக உயிரையே வாங்கிக் கொள்கின்றனர் சிலர். இப்படியும் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

நேற்று ஜெயா டிவியில் வெளியான இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய வீடியோவைப் பார்த்து, இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஆற்றாமையால் புழுங்கிக் கொண்டிருந்தேன். மனிதர்களில் இத்தனை அரக்கத்தனம் உடையவர்களும் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்ற போது எத்தனை மதங்களும், கடவுள்களும் வந்தாலும் மனிதர்கள் திருந்தவே போவதில்லை என்ற உண்மை சுட்டது. எதற்கும் ஒரு விலை உண்டு. சுவற்றில் வீசப்படும் பந்து திரும்பவும் எறிந்தவர் மீது விழும் என்பது உண்மையானால் இலங்கையில் ஒரு சிங்களவர் கூட உயிரோடு இருக்க அந்த உண்மை அனுமதிக்காது. அது நடக்கத்தான் போகின்றது. பாராட்டி, சீராட்டி, பொத்திப் பொத்தி வளர்த்த பெண்களை நிர்வாணப்படுத்தி, சேதப்படுத்தி, கற்பழித்து, கை கால்களை வெட்டி, உதைத்து, இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடூரங்களின் உச்சகட்டத்திற்குச் சென்ற இலங்கை சிங்கள ராணுவமும், அதை நடத்திக் காட்டிய கொலைஞர்களுக்கும் “உண்மை” என்ன விலை கொடுத்தும் தண்டனை பெற்றுக் கொடுக்கத்தான் போகின்றது. உலகின் சக்கரவர்த்தி என்று கொக்கரித்த ஹிட்லர் போன இடம் புல் முளைத்துப் போய் விட்டது. இவர்களெல்லாம் இயற்கைக்கு முன்னால் தூசியை விட கேவலமான பிறவிகள். 

இன்று ராஜ்ய சபாவைவிலும், நாடாளுமன்றத்திலும் கூக்குரலிட்டு சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும் எம்பிக்கள் கொத்துக் கொத்தாய் இலங்கையில் இலங்கை ராணுவம் மக்களைக் கொன்றுகொண்டிருக்கும்போது மொத்தமாய் பதவியைத் தூக்கி எறிந்து இந்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து எல்லாம் முடிந்த பிறகு இன்றைக்கு கூச்சல் இடுவது என்பது அரசியல் சுயநலம் என்று எவருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பதவி ஐந்து வருடம். ஆனால் உண்மையின் பதவியோ காலம் முடிவுக்கும் இருக்கும். அதுநேரம் பார்த்து அடிக்கும். அரசியல் என்றால் சுய நலத்திலும் கீழானது என்பதை நம் தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டே வருகின்றார்கள். உலகம் எத்தனையோ அரசியல்வாதிகளைக் கண்டு வருகிறது. அரசியல்வாதிகளின் வாழ்க்கையையும் பார்த்து வருகிறது. அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்து வந்த அரசியல்வாதிகளின் கதியையும் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம். அது சுய நலமே தன் நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வகை அரசியல்வாதிகளுக்கு எளிதானதாய் அமைந்து விடாது என்பது மட்டுமே உண்மை. 

கடவுள் நின்று கொல்வதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் அப்போதே தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கடவுள். அதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருகின்றோம். அவனவன் வினையின் பலனை விதைத்தவன் தான் அறுக்க வேண்டும். அறுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

இந்தியாவில் சர்க்கரை மாஃபியா கும்பலுக்கு துணை போகின்ற மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு, பல சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் இவருக்கு,  சர்க்கரை குறைவால் மயக்கம் ஏற்பட்டது என்ற செய்தியை இவ்விடத்தில் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது. சான்று இல்லாத எந்தச் செய்தியும் உண்மையாக இருக்க முடியாது என்று அல்லவா அறிவியல் சொல்கின்றது.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


Tuesday, March 13, 2012

இது பேச்சுலர்ஸ் மேட்டர்


தினத்தந்தியில் ஒரு பத்தியைப் படித்தேன். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் மாப்பிள்ளையின் அக்கா, அப்பா, அம்மா மூவரும் சர்க்கரை இல்லாமல் காஃபி கேட்டதற்காக தன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்றுச் சொல்லி இருக்கிறார் ஒரு தகப்பன். இவ்வளவுக்கும் என் பையனுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றுச் சொல்லியும் பெண் வீட்டார் மறுத்து விட்டாராம். எய்ட்ஸ் செக்கிங் ரிப்போர்ட் கேட்டுத்தான் திருமணம் செய்வோம் என்கிறார்கள் இக்காலப் பெண்கள். இனி ஃபுல் பாடி செக்கப் ரிப்போர்ட் அதுவும் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் செய்து தர வேண்டும் என்று கண்டிஷன் விரைவில் போடுவார்கள். 

ஆண்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தெருக்கள் தோறும் “டாஸ்மாக்” வைத்துக் கொண்டு, சினிமா தோறும் குடும்பத்தோடு குடிப்பதை நியாப்படுத்தும் காட்சிகளை வைத்துக் கொண்டும் சமுதாயத்தை நோயுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வரும் காலங்களில் ஆரோக்கியமானவர்களைப் பார்ப்பதே அரிதாகி விடும் போலத் தெரிகின்றது. எவருக்கும் தன் ஆரோக்கியத்தின் மீதான அக்கரை எள்ளளவும் இல்லை. அதே போல உணவுப் பொருட்களை விற்போரிடமும் வாடிக்கையாளர் நலன்களைப் பற்றிய அக்கரை சுத்தமாக இல்லை. அரசு சுகாதார அலுவலர்களுக்கு கடமை உணர்ச்சியும் துளிக்கூட இல்லை என்றே சொல்லலாம்.

ஆரோக்கியமற்றவர்களுக்கு இனி பெரும்பான்மை சமுதாயத்தில் பெண் கூட கொடுக்கமாட்டார்கள். பல பேர் “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்” போல சயிண்டிஸ்ட்டாக அலைய வேண்டியதுதான் பாக்கி.

திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது முக்கியமான ஒன்றாகும். 

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 9, 2012

மனச்சாட்சி எங்கே போனது? கிட்னி விற்கும் கிராமம்

தர்மம், நீதி, நியாயம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நிரூபிக்கும் அனேக சம்பவங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் வருகின்றன. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியைக் கொள்ளை அடிக்கிறது ஒரு கட்சி. பட்டினி தாங்காமல் வெறும் 30,000 ஆயிரத்திற்கு கிட்னியை விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு இந்தியக் கிராமம். 

பசி தாங்காமல், உழைக்கவும் வழி இல்லாமல் தன் கிட்னியை விற்று விட்டு, கிடைத்த பணம் தீர்ந்த உடன் நோயில் கிடந்து 60 வயதில் போக வேண்டியவர்கள் ஆபரேசன் செய்ததால் இரண்டு வருடங்களில் இறந்து போகும் அவலம் மேற்கு வங்காளத்தில் பிந்தோல் என்ற கிராமத்தில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

தனக்குப் புற்று நோய் என்றவுடன் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவி சோனியா இருக்கும் இந்தியாவில் தான் இந்த மேற்படி அவலமும் நடக்கிறது. மக்கள் தொண்டாற்ற வந்தவர்களுக்கு உச்சபட்ச கவனிப்பு, ஆனால் மக்களுக்கோ வாழவும் வழியில்லாமல், விற்க பொருள் இல்லாமல் தன் உடல் உறுப்பையே விற்க வேண்டிய நிலமை. இதைத்தான் ஜன நாயகம் என்றுச் சொல்லி வருகின்றார்கள்.

எத்தனை திட்டங்கள் இருக்கின்றன, எத்தனை சட்டங்கள் இருக்கின்றன, எத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? பட்டினியால் கிட்னியை விற்றுப் பின் அற்பாயுசில் செத்துப் போகின்றார்களே இந்தியர்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? ஜன நாயகம் அல்லவா காரணம்.

காசை வைத்துக் கொண்டு தின்று கொழுத்து தன் உடம்பைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டு, பசியால் வாடுபவனின் கிட்னியையையும் விலைக்கு வாங்கி உடம்பில் பொறுத்திக் கொண்டு, அவனை சாகவும் அடிக்கும் பணக்கார நாய்களையும், அதற்கு உறுதுணையாய் இருக்கும் மாஃபியா ஹாஸ்பிட்டல்களையும் யார் என்ன செய்ய முடியும்?

ஜன நாயக ஆட்சியில் ஏழைகள் சொல் அம்பலம் ஏறுமா? இல்லை ஏழைகள் வாழ இந்தியாவில் வழிதான் இருக்கின்றதா?

பிரதமர் மன்மோகன் சிங் வியாபாரிகளுக்கு என்று ஆட்சி நடத்துகிறார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, வியாபாரிகள் நலமாய் வாழ வேண்டுமென்று பருத்திப் பஞ்சை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க மீண்டும் அமைச்சரவை கூட்ட நடவடிக்கை எடுக்கிறார். விவசாயி வாயில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு, வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்க, அவர்களுக்கு வேண்டுவன செய்கிறார். இதைப் பற்றி அவர் எங்கே பேசப் போகின்றார். 

பக்கத்து நாட்டில் தமிழர்களைக் கொன்று குவித்த போது, தமிழகமே பொங்கிய போது, வாய் மூடி மவுனியாய் நின்று கொண்டிருந்த மனிதர் குல மாணிக்கம் அல்லவா நம் பாரதப் பிரதமர். 

இதோ அந்த கிட்னி வில்லேஜ் பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறது. படித்து விட்டு, நாமெல்லாம் மனிதர்கள் என்ற பெயரில் மிருகங்கள் வாழும்  உலகில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

People sell kidneys to beat starvation in West Bengal village
BINDOL (NORTH DIANJPUR): In these arid, impoverished parts, Bindol has another name - kidneyvillage. The wasted, skeletal men and women you would see slumped under the shade of trees are awaiting death with feeble breaths. This is the kidney sale capital of the state, perhaps of the country. Every second home here has someone who has sold his kidney to escape starvation. Many die within years. 

Now, the dying men have started forcing their wives to give up a kidney. 

Bindol's infamy has spread by word of mouth. Dusty tracks trail of the eastern highway to Bangladesh to take you to this village, barely 35km from the district headquarters of Raiganj. The greenery of Dinajpur changes into an arid landscape. Here and there in the dry, sandy waste there are patches of green maize plants. No trace of paddy or wheat. The villagers, mostly tribals, lie dozing off the effects of homemade liquor. 

But the name of Razzak perks them up. They lead you to his mansion in the Bajbindol area stands in sharp contrast to the hapless backdrop. Razzak is the 'dalal' (agent) you meet if you are desperate for a kidney. The price: Rs 3-4 lakh. Razzak has no problem finding donors. The villagers know they may be signing their death warrant if they accept Razzak's offer, but the payout - Rs 60,000 to Rs 1 lakh - is impossible to ignore. 

Lakshmiram Hansda sold his kidney - and his life - for Rs 80,000. On Wednesday, TOI saw him lying under a tree near his hut, gaunt, emaciated and hapless. He says he is 35 but looks 60. With no land of his own and a wife and daughter to feed, Lakshmiram had gone to Mumbai to work as labourer in 2000, like hundreds of local youths. But it brought him little money. When someone offered Rs 80,000 for a kidney, it seemed like a good deal. 

The money kept the family fed for only a few months. Soon after the surgery, Lakshmiram lost his strength to work. His starving wife and daughter deserted him. He now lives on an NGO's mercy, and is counting his days.

Not far from where Hansda lies, a group sits having drinks in a hut. Munshi Tudu, Jogen Hansda, Chhoto Murmu and Lapong Soren - all in thirties - are happy as only drunken men can be. They all survive on one kidney. Two years ago, Lapong had been to Kolkata where he had his kidney removed for Rs 1 lakh. What did he do with the money? "Bought a motorcycle, gave a part to my wife and... don't know what I did with the rest," he was not interested in recalling any more. They drink to forget that they don't have a future. 

The scourge has spread to nearby villages like Jalipara and Balia. Thirty-two-year-old Dulal Jali of Jalipara narrates his story, "It's next to impossible for a fisherman to make ends meet. So I accepted the offer of Kuddus (another agent) of Rs 1 lakh for a kidney. It was about four years ago. I got operated in Kolkata." Now with weakness a part of life, Dulal suffers along with his wife and daughter. "I cannot stay under the sun for long, I can hardly catch fish." 

There are those who complain that they were paid too little. Jatin Jali, who went with Razzak in 1998, still rues that he got only Rs 30,000. 

In the last couple of years, the tragedy has taken an ominous turn with the men forcing their wives to sell their kidneys. Astomi Malakar, who was married to Dilip Burman four years back when still in her teens, says: "My husband took me to Kolkata with another person two years ago. I already had a child by then. I was admitted to a hospital. I don't know what happened there but I have a surgery scar in my back." 

The Sripur Mahila O Khadi Unnayan Samity, an NGO, has been working with the victims but it's tough to create awareness when the villagers are willing to take the risk. "Every year these rural folk are forced to migrate to cities to feed their family. They often find themselves in the clutches of the beasts that run the racket." There have been cases when an unwilling victim was doped and operated upon and not paid a paisa. 

Bhattacharya said that they have repeatedly complained to police about agents like Razzak and Kuddus. "Razzak was arrested two years back but released in a few months. None dared to speak against him," said a local. 

The terrifying truth is that the hapless villagers see the Razzaks as messiahs. Thus, Anita Jali, a homemaker in Jalipara, finds nothing wrong in haggling for a better price. "We are three of us - me, my husband and father-in-law. They offered us Rs 6 lakh, but we demanded at least Rs 8 lakh," she said. 

Saturday, March 3, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - 2

அறம், பொருள், இன்பம் என்று வரிசைப்படுத்தி உலகப் பொதுமறையை எழுதினார் திருவள்ளுவர். முதலில் அறம், அதன் படி பொருள், பின்னர் காதலின்பம் என்று வாழ்வியலை வரிசைப்படுத்தினார். ஆனால் இன்றோ முதலில் காதல், பின்னர் கொடுஞ்செயல் செய்து பொருள் என்று வாழ்வியல் முறை தவறிக் கிடக்கிறது.

”ஒரு பெண்ணிடத்தில் நீக்க முடியாத காதல் கொண்டு, அவள் காதலைத் தான் பெறாது போய் விட்ட போது, அவன் பனையின் கருக்குமட்டைகளை எடுத்து அவற்றைக் கொண்டு குதிரை உருவம் ஒன்று செய்வான். அதில் மணிகளும் மயிலிறகுகளும் வைத்து ஒப்பனை செய்து, கடிவாளம் போல ஒரு கயிற்றை அதன் மீது மாட்டிக் கொண்டு, தெருவழியாக அதன் மீது ஊர்வான். ஊரும் போது தன் காதலி மீது காதற்பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்வான்.

இக்காட்சி கண்டு சில சமயம் காதலியே இரங்கி மனமாறுவதுண்டு. அல்லது அவள் உறவினர் அவனை மணம் செய்யும்படி அவளைத் தூண்டுவர். ஆனால் காதலை இந்த அளவு வெளிப்படுத்தியும் காதலி அவனிடம் கனிவு காட்டவில்லையானால், அவன் செங்குத்தான குன்றிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வான்.”

( நன்றி : ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு வி.கனகசபை (1962) )

பாரதி சொன்னான் “காதல் காதல் காதல், காதல் இல்லையென்றால் சாதல் சாதல் சாதல்”. இப்படியான கலாச்சாரத்தில் பிரேக் அப் என்கிற காதலைப் பற்றி சொல்கிறது. காதல் மணம் முறிந்து சென்றால் அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உயர்ந்த குன்றிலேறி தற்கொலை செய்து கொண்ட ஆணின் அறம் எங்கே, இப்படத்தில் அடுத்தவனைத் திருமணம் செய்து கொள்ள விழையும் பெண்ணின் அறம் எங்கே?

அடுத்து காதலைச் சொல்லும் வழி பற்றியது.

பார்வையிலே காதலை சொல்லுவது (காட்டுவது) பற்றி திருவள்ளுவர் காமத்துப்பாலில் விரிவாக எழுதி இருக்கிறார். மயிலாள் விழிகளை கொல்லும் கூற்றுவன் அம்புகளுக்கு இணையானது என்கிறார் அவர்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. - திருக்குறள் காமத்துப்பால் (1083)

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. - கலைஞர் உரை

முதற்பகுதியில் கன்னியொருத்தி காளையொறுவன் தன் மீது கொண்ட காதலை எப்படி நயத்தகு முறையில் உறுதிப் படுத்துகிறாள் என்பதைப் படித்தீர்கள். ஆனால் இன்றைய சினிமாவில் காதல் வயப்படுவது எப்படிக் காட்டப்படுகிறது?

ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தால் காதல் வந்து விடும் என்கிறார் ரஜினி. பெண்ணே தேடித் தேடித்தேடிப் போய் அலைந்து திரிய வேண்டுமென்கிறார்கள். போனால் போவுது உன்னைக் காதலிக்கிறேன் என்கிறார் அஜீத் குமார். பெரும்பான்மையான தமிழ் சினிமாக்காதல் காட்சிகளை ஒரு நிமிடம் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அபத்தங்கள் புரியும்.

கற்பு என்பது பெண்ணுறுப்பை சிதைப்பதால் சீரழிந்து விடுவது அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான அறத்தின் பெயர்தான் கற்பு. இயற்கை எப்படி ஒரு கட்டுக்குள் இயங்குகிறதோ மனிதனின் அக்கட்டுக்குள் இயங்கினால் அவன் வாழ்க்கை சீராக்கி அமைதியாய் வாழ்வான். அதில் சில கொடுமைகள் இருக்கின்றன. வாய் வழிச் சொல் எப்படி ஒரு மூலச் சொல்லை பாழ் படுத்தி விடுகிறதோ அது போல அந்தக் கொடுமைகள் தொடர்ந்து வந்து விடுகின்றன. அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல கேவலமான முறையில் காதல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் நடப்பதைத்தான் காட்டுகிறோம் என்பார்கள். அயோக்கியத்தனம் செய்வதற்கு தயரானவர்களுக்கு சமூகத்தின் மீதான பிடிப்பு இருப்பதில்லை. அமைதியான வாழ்க்கைத் தந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம் என்ற அக்கறையின்று இன்றைக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றார்கள்.

பெரும்பாலானோர் இப்படத்தை ஒரு நல்ல படம் என்கிறார்கள். கல்லூரிகள் காதற்களமாய் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றன. கோயிலாய் காட்ட வேண்டிய இடம் கேவலமானதாய், வாழ்க்கைச் சீரழிக்கும் இடமாய் காட்டப்படுகிறது. படிக்கின்ற வயதில் காதல் கொண்டால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை எல்லாம் சினிமா காட்டுவதில்லை. ஆரம்பத்தில் பதிவில் படித்த காதற் காட்சிகளையும் இப்படத்தினையும் ஒரு நிமிடம் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். உலகத்திற்கே உதாரணமாய் திகழ்ந்த நம் தமிழ்க் கலாச்சாரத்தை இப்படம் எந்தளவுக்கு தரம் தாழ்த்தி இருக்கிறது என்பது புரிய வரும். இதை ஒரு சிறந்த படம் என்று எப்படிக் கூற முடியும்?

மிட்டாய் கடையில் விற்கப்படும் பலப்பல பலப்பங்கள் போலத் தான் தற்போதையை திரைப்படங்கள் வெளியாகின்றன. அவைகளில் தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் உருவகப் படுத்துவது இல்லை. இப்பேர்ப்பட்ட கலாச்சார மேன்மையுடை சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லை.

யூதர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தங்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் காப்பாற்ற புலவர்களையும், கல்வியாளர்களையும் பெரும் துன்பத்திலும் கூட பிறர் அறியாவண்ணம் காப்பாற்றி தங்களின் வாழ்க்கையை, முறையை எழுத்தில் வடித்தும், ஆவணமாக்கியும் பாதுகாத்து வந்தார்களாம். அவர்கள் எங்கே, நாம் எங்கே?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 2, 2012

காதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1



( Art By Khalil Gibran )

ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னத கலாச்சாரமாய் மிளிர்ந்தது. இன்றைக்கு வெட்கம் என்றால் விலை என்ன என்று கேட்கும் பெண்களைப் பார்க்கிறோம். உடல் பிதுங்கி வெளித் தெரியும் உடைகள், சூழ் நிலைக்கு ஒவ்வாத உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றினால் நாங்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள் இன்றைய பெண்கள். தங்களின் பெண் குழந்தைகள் முலை தெரிய, குண்டிகள் பிதுங்கி வெளியில் தெரிய, பெண்ணுறுப்பு முட்டிக் கொண்டு தெரிய உடை அணிவதை பெற்றோர்கள் பெருமையாய் நினைக்கின்றார்கள். நேற்றையச் செய்திதாளில் வகுப்புத் தோழன் தன் தோழிக்கு லிக்கர் கொடுத்து மயக்கப்படுத்தி தானும் தன் நண்பர்களுமாய் சேர்ந்து காருக்குள் வைத்து உறவு கொண்டிருக்கின்றான் என்றும், அவனைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது என்றும் செய்தி வந்திருந்தது. ஏன் அப்பெண்ணுக்கு இந்த நிலை வந்தது? யோசிக்கணும்.

நாகரீக மோகத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழ்ச் சமூகம் பெண்கள் பலபேரோடு படுப்பதையும் இனி நாகரீகமாய் மாற்றி விடும். அல்லது மாதம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதும் நாகரீகம் என்றும் சொல்லக்கூடும். அது தான் சுதந்திரம் என்றும் பேசக்கூடும். கூடும் என்ன இப்போதே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுப்ரமண்யபுரம் என்ற படத்தில் கண்களால் பார்த்துக் கொண்டே நடைபயின்ற நடிகையைக் காட்டி இதைப் போன்றொதொரு பெண் எனக்கு திருமணம் செய்யக் கிடைப்பாளா என்று கேட்டவர்களும் உண்டு.

பண்டைய தமிழகத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் காதலைப் பற்றி பல நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில காட்சிகளை முதலில் காணலாம்.

இதோ ஒரு காதல் காட்சியை காதல் கொண்ட இளம் நங்கையாள் ஒருத்தி சொல்கிறாள். கேளுங்கள் !

“காயாம்பூ ஒத்த கருவிழி நங்காய், கேள் !”

“அழகிய மாலையணிந்து வில் ஏந்தியவனாய் ஏதோ வேட்டையைத் தொடர்ந்து வந்தவன் போல ஓர் இளைஞன் என் முன் வருவான். வந்து கனிவுடன் நீண்ட நேரம் என்னை நோக்குவான். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல் சென்று விடுவான். அவனைப் பற்றிய எண்ணம் என் உறக்கத்தையே கெடுத்தது. நான் உள்ளூரத் துயரடைந்தேன். அவன் தன் காதலைக் கண்ணினால் தெரிவித்தானே யன்றி, நாவால் உறைப்பதில்லை. நானும் பெண்ணாய் இருப்பதினால் நாணம் காரணமாக அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறமுடியவில்லை.”

“மறைவான என் காதலின் துன்பம் பொறுக்கமாட்டாமல் நான் செய்த ஒரு செயல் இப்போது நினைத்தால் கூட வெட்கப்படத் தக்கதாயிருக்கிறது. ஒரு நாள் நான் நம் பண்ணையருகில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். அவன் வழக்கம் போல என் முன்வந்து நின்றான். நான் அவனை அழைத்து, “ஐய என்னை ஊஞ்சலில் சிறிது ஆட்டி விடு” என்றேன். மகிழ்ச்சியுடன் “அப்படியே செய்கிறேன்” என்று கூறி அவன் ஊசலாட்டினான். அப்போது நான் ஊசலிலிருந்து நழுவி விழுபவள் போல நடித்து அவன் தோள்கள் மீது விழுந்தேன்.”

“அவன் என்னை உடனே தன் கைகளால் இறுகப் பிடித்தான். நானும் உணர்விழந்தவள் போல அவன் தோள் மீது கிடந்தேன். அவன் என்னை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். ஆனால் நான் கண் விழித்ததும் கனிவுடன் தடவிக் கொடுத்துப் போகும்படி விட்டு விட்டான். ஆனால் என்னை ஆர்வமாகத் தானும் காதலிப்பதை அவன் செயல் உறுதியாகக் காட்டி விட்டது”

அடுத்து இன்னும் ஒரு கொலைக்கார காதல் காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதை நாளை எழுதுகிறேன்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, March 1, 2012

தமிழகத்தில் வாழ முடியுமா?

எனது வாழ் நாளில் இப்படியான ஒரு பவர் கட்டை இதுவரை சந்தித்தது இல்லை. காலையில் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை, பனிரெண்டு மணியிலிருந்து மூன்று வரை, ஆறிலிருந்து ஏழு வரை, ஒன்பதிலிருந்து பத்து வரை, பனிரெண்டிலிருந்து ஒன்று வரை, மூன்றிலிருந்து நான்கு வரை திரும்பவும் ஆறிலிருந்து ஒன்பது வரை என்று ஆறு தடவை பவர் கட் செய்கின்றார்கள். வேலை பார்க்க முடியவில்லை என்பது போய், தூக்கமும் பறி போய்க் கொண்டிருக்கிறது. கொசுக்கடியில் சிக்கி நோயாளியாகவும் மாற வேண்டி இருக்கிறது. எப்படி வாழ்வது என்பது கேள்விக்குறியாய் கண்முன்னே பெரும் பூதமாய் நின்று கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்து மூன்றே மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்றார்கள் அதிமுகவினர். இன்று ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. தடையில்லா மின்சாரம் போய், தடையே இல்லாத மின்வெட்டினை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யூபிஎஸ் வாங்கிப் போடலாமென்றால் மின்சாரம் இருந்தால் அல்லவா பேட்டரிகள் சார்ஜ் ஆகும். பக்கத்து வீட்டுக்காரரின் யூபிஎஸ்ஸிலிருந்து கரண்டே வருவதில்லை. தேவையற்றுப் போய் 20,000 ரூபாய் செலவு செய்து விட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் மின் விசை கைத்தறி இரண்டு வைத்திருக்கிறார். ஒரு சேலை நெய்ய தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் தேவை. இரண்டு தறிகளும் காலை ஆறு மணியிலிருந்து ஓடினால் ஒரு நாளைக்கு நான்கு சேலைகள் கிடைக்கும். இரவில் தறி வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு சேலையும் 300 ரூபாய் விலைக்கு விற்கிறார். நூல் விலை போக, ஒரு சேலைக்கு 100 லிருந்து 150 வரை கிடைக்கும். ஆக ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு கல்லூரியில் படிக்கும் மகன் , மகள், சாப்பாடு, இன்னபிறவற்றிற்கும் செலவு செய்துகொண்டு பிழைத்து வந்தார். இன்றோ ஒரு சேலை கூட நெய்ய முடியாத நிலை. கடந்த நான்கு மாதமாய் சேலையும் நெய்ய முடியாமல், இரவிலும் வேலை பார்க்க முடியாமல் அக்குடும்பம் படும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. தினம் தோறும் வந்து புலம்பிச் செல்வார். அவரைப் பிழைக்க விடாமல் செய்கிறது மின்வெட்டு. சாப்பாட்டிற்கு என்ன செய்வார்? அவர் எப்படித்தான் குடும்பத்தை நடத்துவது? அதிமுக தலைமையின் கீழான தமிழக அரசு வழிகாட்டும் என்று ஓடி ஓடி கேம்பெயின் செய்தார். இன்றோ அழுது புலம்புகிறார். அரற்றுகிறார். வேதனையில் வெம்பிப் புழுங்குகின்றார். முதலமைச்சர் மீது அவருக்கு கோபம். முதலமைச்சர் கரண்டினை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றாச் சொல்கிறார்?இருந்தால் அல்லவா மின்சாரம் கொடுப்பதற்கு? இல்லாத மின்சாரத்தை எங்கிருந்து கொடுப்பது? என்று அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கிறது மனவேதனையுடன். ஆறுதல் சொன்னால் பசி ஆறும் என்று இருந்தால் எப்படி இருக்கும். அதற்கு வழி இல்லை.

அடுத்து பக்கத்து தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்த டூல்ஸ் தற்போது குறைந்து விட்டது. வேலைக்காரர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். தொழில் நடத்த வேண்டுமானால் டூல்ஸ் ப்ரடக்‌ஷன் குறையக்கூடாது. வருமானம் வரவே இல்லை என்றாலும் பரவாயில்லை தொழில் நடக்க வேண்டும் என்பதற்காக ஜென்செட் வாங்குவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு யூனிட் ஜென்செட் மின்சாரம் 15 ரூபாய் ஆகும். ஏற்கனவே கடன் வாங்கிப் போட்டு தொழில் செய்பவர்களுக்கு மேலும் கடன் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் அவரின் நிலை என்ன என்று நினைத்துப் பார்த்தால் மீண்டும் ஒரு கேள்விக் குறி எழும்புகிறது.

பெரும்பான்மையான திருப்பூர் சாயப்பட்டறைகள் குஜராத் போன்ற மா நிலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. பெரிய திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு தங்கள் கம்பெனியினை ஷிஃப்ட் செய்து விட்டார்கள். திருப்பூரில் வேலை இழப்பின் காரணமாய் பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றார்கள் தமிழக இளைஞர்கள்.

சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பணிபுரியும் பல நண்பர்களின் கண்ணீர்க் கதைகளை எழுதப் புகுந்தால் இதயம் வெடித்துப் போய் விடும். கடன் உடன்களை வாங்கிப் போட்ட வீடுகளுக்கான கடன் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவிலிருந்து வேலை செய்து வந்தவர்களுக்கு மின்வெட்டினால் ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. மின்சாரம் இல்லாமல் வேலை செய்ய முடியவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சாஃப்ட்வேர் வேலை முடிக்காமல் போனால் ஆர்டர் கை விட்டுப் போய் விடும். எத்தனை எத்தனையோ சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் வேதனையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் மின்வெட்டு.

ஷெட்யூலற்ற மின்வெட்டினால் வீடுகளில் இருக்கும் மின்சாதனங்கள் பழுதடைகின்றன. டிவி, மிக்சி, கிரைண்டர் என்று பெரும்பான்மையான மின்சாதனங்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. அதுமட்டுமா சுண்டு விரல் தடிமன் மெழுகுவர்த்தி ஆறு ரூபாய்க்கு விற்கின்றது. இதற்குள் கேஸ் லாரி டாங்கர் ஸ்ட்ரைக் பிரச்சினையால் கேஸ் கிடைப்பதும் தடைபடும் என்பதால் சமைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இல்லத்தரசிகள் வேதனையில் வெம்பிக் கொண்டிருக்கின்றனர்.

மின் உற்பத்தியை சரி வர நிர்வகிக்காமல் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றி விட்டனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து அங்கும் தமிழர்கள் வாழ முடியாமல் செய்தார்கள். அங்கிருந்து தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தனர். இன்றோ தமிழர்களுக்கென இருக்கும் தமிழகத்தில் தமிழர்கள் வாழ முடியாமல் செய்கின்றனர். தமிழர்கள் தமிழகத்திலிருந்து பிழைக்க வேறு மாநிலம் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தொழிற்சாலைகள் மின்சாரம் இன்றி மூடப்பட்டு விடுவதால் தொழிலாளர்கள் பசியில் கிடந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். சிறு தொழில், குறும் தொழில்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் கிடக்கின்றன. கோடை வெயில் தகிக்கும் காலங்களில் காற்றுக்கூட புக முடியாத நகரத்து மூடப்பட்ட சிறை வீடுகளில் மக்கள் கிடந்து வெந்து நொந்து நூலாகின்றனர். குழந்தைகள் கொசுக்கடியில் சிக்கி நோய் வாய்ப்படுகின்றனர். இரவுகளில் காற்றாடி இல்லாது அழுகின்றனர்.

இது பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி, தமிழகத்தினை இந்தியாவில் முதன்மை மாநிலமாக்குவோம் என்று சூளுரைக்கின்றனர் ஆட்சியர்கள். மனிதர்கள் பிழைக்கவும், வாழ முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் வேதனையில் வெம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடை வெயில் அவர்களை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கு வழிதான் என்ன? இதுவரையிலும் தென்படாத பாதையாய் கிடக்கிறது தமிழர்களின் வாழ்வு. இப்படியும் ஒரு நிலை வருமா என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். விடிவுகாலம் கிடைக்குமா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத மர்மமாய் மவுனமாய் கிடக்கிறது.



- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.