குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, April 30, 2009

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு

எனது நண்பர் செல்போனில் வந்தார்.பேசிக் கொண்டிருந்த போது உங்க பதிவு இளமை விகடன்.காமில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். நமக்கு ஒன்றும் புரியவில்லை.
தள முகவரியை பெற்று தளத்தினுள் சென்றேன். ஆச்சர்யம் தான்.

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு “ கையளவு இதயம்


நன்றி : இளமை விகடன்.காம்

Monday, April 27, 2009

குடி !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் என்றால், தஞ்சாவூர் சென்று படம், ஹோட்டல், தண்ணீர் என்று கொண்டாடுவார்கள். வழக்கம் போல புது துணி உடுத்தி கம கமவென மணக்கும்படி வாசனை திரவியங்கள் பூசி நண்பர்கள் புடை சூழ ஒரு சேஞ்சுக்காக தஞ்சாவூர் செல்லாமல் அம்மாப்பேட்டைக்கு சென்றார்கள். நான் அவர்களோடு செல்லவில்லை.

நன்கு குடித்து விட்டு, சாப்பிட்டு விட்டு போதையில் பஸ் ஏறி இருக்கிறார்கள். பஸ்ஸின் பின் புறப் படிக்கட்டில் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன். ஏதோ ஒரு வளைவில் பஸ் வேகமெடுக்க, தடுமாறி பஸ்ஸின் படி வழியாக கீழே விழுந்து விட்டான். நண்பர்கள் பதறியடித்துக் கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவனைத் தூக்கி வந்து சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
“எனக்கு ஒன்றுமில்லையடா” என்று சொல்லி சிரித்திருக்கிறான்.

சற்று நேரத்தில் அவனை அணைத்துப் பிடித்திருந்த மற்றொரு நண்பனின் தோளில் ஈரமாக உணர, என்னவென்று பார்த்திருக்கிறான். பின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்திருக்கிறது.

”ரத்தம்டா“ என்று மற்றொரு நண்பன் கூவ,

“ ஆ.. ரத்தமா” என்று பதறியபடி பின் தலையைத் தொட்டுப் பார்த்தபடி, ”அய்யோ” என்று அலறி இருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன்.

“டேய்... என்னை எப்படியாவது காப்பாற்றி விடுடா. வீட்டில என் அப்பாவும், அம்மாவும் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கடா, எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று சொல்லியபடியே இவனது கையை இறுக்க பிடித்தவாறு மயங்கி போனான்.பஸ்ஸை வேகமாகச் செலுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.

ரத்தத்தையும் நிறுத்த முடியவில்லையாம். ஆல்கஹால் அவனது ரத்தத்தில் கலந்து இருந்ததால் ரத்தம் ஏற்ற முடியவில்லையாம். மயக்கத்திலேயே பிறந்த நாள் அன்று தன் இன்னுயிரை இழந்தான் என் நண்பன்.

காரில் அவனை எடுத்துக் கொண்டு சென்று அவர்களது வீட்டை அடைந்த போது நடந்ததை எழுதினால் படிக்கும் நமக்கு உயிரே போகும் படியாக இருக்குமென்பதால் விட்டு விடுகிறேன்.

நண்பன் கேக் வாங்கி வருவான், சாக்லெட் கொண்டு வருவான் என்று நண்பர்களுக்காக காத்துக் கிடந்தபோது போன் வந்தது. நண்பன் இறந்ததைச் சொன்னார்கள். இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

தேவையா இந்தக் குடி !

குறிப்பு : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் மகன் (வெகு அழகானவர்) நான் படித்த கல்லூரியின் மாணவர். இன்று அவரின் நினைவாக பஸ் நிறுத்துமிடம் கட்டி இருக்கிறார்கள். காரணம் பைக் ஆக்சிடென்ட்.

Wednesday, April 22, 2009

சாதிக்க விரும்புகின்றீர்களா ?

கோபப்படாதவர்கள் புத்திசாலிகள் !

மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் ெபாருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான். உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோபமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவதே இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.

எதிராளியின் பிரதிபலிப்புத்தான் அந்தக் கோபத்தின் காலகட்டத்தை நீட்டிக்கச் செய்கிறது. ‘என்னடி! நெனச்சிக்கிட்டிருக்கே உன்மனசுல? பெரிய மகராணின்னு நினைப்பா?’ என்று ஒரு கணவர் ஆரம்பிக்கிறார் என்றால், பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்து அதை அடக்குகிற கதையாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. தயவு செஞ்சு கோபப்படாதீங்க’ என்று சூட்டைக் குறைக்கிற வார்த்தைகளைத் தெளித்தால், கணவன் அடங்கிய பாலாகிவிடுவான்.

எல்லா கணவன் மனைவிக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரே நேரத்தில் இருவரும் கோபப்படேவ கூடாது. அந்த நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘எவ்வளவு வேண்டுமானாலும் கத்து. நான் ஒன்றும் பேசப்போவதில்லை. நீ அடங்குவேல்ல! அப்ப வச்சுருக்கேன் உனக்கு’ என்று அந்த நிமிடம் ஒரு கணவன் அடங்குவானேயானால் அவன் புத்திசாலி.

இருவரும் ஒரே காலகட்டத்தில் கோபப்படும் போதுதான் வார்த்தைகள் தடிக்கன்றன. கைகள் நீளுகின்றன. ஏன் இன்னும்கூட விபரிதமாகெவல்லாம் ஏதேதோ நிகழ்ந்துவிடுகின்றன.

ஆத்திரக் கணத்தில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை. அவற்றை உண்மையான அகராதி கொண்டு மொழி பெயர்க்கக் கூடாது. அடங்கியபின் வரும் வார்த்தைகளே அர்த்தமுள்ளவை.


கோபம் எனும் மதுவைப் பெருமூளையில் ஏற்றிக்கொண்டவர்கள் பிதற்றத்தான் செய்வார்கள். ஒருவர் சூடேறுவதும் சூடு இறங்குவதும் ஒரு நிமிடத்தில்தான்.

‘கோபம் வரும்போது மனைத திசை திருப்பி ஒன்று, இரண்டு, மூன்று என்று முடிந்தவரை எண்ணுங்கள். உங்களுக்கே நம் கோபம் அடங்கிவிட்டது என்று தோன்றும்வைர எண்ணுங்கள்’ என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இப்படி எண்ணிப் பார்த்தால் 60க்கு மேல் உங்களால் எண்ண முடியாது. ஆமாம், உங்கள் கோப உணர்ச்சிெயல்லாம் ஒரு நிமிடம்தான்.

கோப உணர்ச்சியில் மனம் திளைளப்பதே இல்லை. அதிலிருந்து மனம் வெளிவரவே விரும்புகிறது. ஆனால் எதிராளியின் சில சொற்களும், செயல்களும் அந்தக் கோபத்தைப் புதுப்பிக்கின்றன. நம்மீது பாய்ந்து வருகிறவரின் கோபத்தைச் ‘சாரி’ என்கிற ஒரு வார்த்தை பாதியாக்குகிறது. பதிலாகச் சொல்லப்படும் எரிச்சலூட்டுகிற சில வார்த்தைகளோ அவரது கோபத்தைப் பன்மடங்காக்குகிறது.

கோப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்ைல. கோப உணர்ச்சியிலிருந்து வெளிளிக்கொணர்ந்த பிறகு எடுத்துச் சொன்னால்தான் தலைலக்குள் ஏறுகிறது.

உங்களுக்குக் கோபம் வந்தாலும் சரி, பிறர் கோபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் நிச்சயம் நினைத்ததைச் சாதிப்பீர்கள்.!.

நன்றி : லேனா தமிழ்வாணன்

Saturday, April 18, 2009

குயிக் சாம்பார் செய்வது எப்படி ?

அம்மணி குழந்தைகளுடன் கிராமத்துக்குச் சென்று விட்டதால் வீடு சுத்தம் செய்வது, சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம். அம்மு வேறு தினமும் போனில் அழைத்து அப்பா இன்னிக்கு மீன் சாப்பிட்டேன். இன்னிக்கு ரால் சாப்பிட்டேன், இன்னிக்கு கறி சாப்பிட்டேன் என்று சொல்லிச் சொல்லி சிரிக்கிறது. மீனு மேலே விழுந்துடுச்சுப்பா என்றும், அம்மாதான் மேலே போட்டார் என்றும் கம்ப்ளெயிண்ட் செய்கிறது. ரித்தி குளத்தைப் பார்த்து விட்டு அம்மணியிடம் எப்படிம்மா கடல் இங்கே வந்தது என்று கேட்டிருக்கிறான். ரித்தி இப்படி கேட்கிறான் என்று அம்மணி போனில் கதைக்கிறார். ஊரில் குழந்தைகள் சந்தோஷமாய் இருப்பது கண்டு மனது குளிர்ந்து விட்டது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குயிக் சாம்பார் : இன்றைக்குச் சாம்பார் வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டு முருங்கைக்காய், உருளைக்கிழங்கினை வெட்டி வைத்தேன். புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊறப்போட்டு விட்டு, நூறு கிராம் துவரம் பருப்பை கழுவி குக்கரில் சேர்த்து அத்துடன் ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு பெருங்காயக்கட்டி, பூண்டு பற்கள் நான்கு, ஒரு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஆறு விசில் வரும் வரை காத்திருந்தேன். பிறகு வெந்த பருப்புடன் இரண்டு டீஸ்புன் சாம்பார் தூள், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, புளித்தண்ணீர், பச்சை மிளகாய் இரண்டு, உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பிலேற்றி மூன்று விசில் வரும் வரை விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலையுடன் சாம்பாரில் சேர்க்க, மண மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

கொசுறு : வாழைக்காயை நறுக்கி எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தொடர்ந்து வாழைக்காயையும் சேர்த்து வதக்கினேன். லேசாக அடி பிடிக்கும். கிளறி விட வேண்டும். வெந்தபிறகு மிளகாய்த் தூள் சேர்த்தால் வாழைக்காய் எண்ணெய் வதக்கல் தயார்.

சாதம், சாம்பார், வாழைக்காய் வதக்கல் செய்ய கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. பேச்சிலர்ஸ், மனைவியுடன் சண்டை போட்ட கணவர்கள், சமைக்க சோம்பல் படும் உள்ளங்களுக்கு உதவும் பொருட்டு மேற்படி அனுபவச் சமையல் குறிப்பைத் தருகிறேன்.

இப்படி உடனுக்குடன் செய்யும் குழம்பு வகைகள், பொறியல் வகைகள் பல இருக்கின்றன. வாசகர்கள் விரும்பினால் எழுதுவேன்.

தலைவன் என்கிறவன் யார் ?

தினசரி பேப்பரை பிரிண்ட் செய்து தலையில் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். ஊறுகாய் போட்டு கைகள் கடுக்க தெருத் தெருவாய் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். டேபிள் துடைத்தவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹோட்டலில் தங்க உனக்கு அனுமதி கிடையாது என்று கேவலப்படுத்தியதால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இந்தியாவின் முகவரியானது. இப்படி கேலிக்கும், அவமானத்திற்கு உட்பட்ட எத்தனையோ உள்ளங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளாய் வலம் வருகிறார்கள்.

அவ்வாறு முன்னேறியவர்களின் வாழ்வில் சோர்வும், அசதியும் ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் என்ன செய்திருப்பார்கள் ? இதோ கீழே சில வரிகள். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இச்சில வரிகள் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராய் செல்லாமல் வயற்காடுகளில் கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிந்தாமல் சிதறாமல் எவ்வாறு பாத்திக்குள் சென்று சேர்கிறதோ அதைப் போல இருக்க வேண்டும். எதை நோக்கிய பயணம் என்ற முடிவு முதலில் எடுக்கப்படல் வேண்டும். பயணத்தில் ஆங்காங்கே தடங்கல்கள் ஏற்படும் போது மனம் துவண்டு சோர்வடையக்கூடாது. புறப்பட்டாகி விட்டது. இனி நிற்க முடியாது. இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது. எந்த இடத்தைச் சென்று சேர வேண்டுமோ அந்த இடம் இதோ இன்னும் சில அடிகளில் தான் இருக்கிறது. துவண்ட கால்களை உதறி எழ வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து உடம்பை உதறி உத்வேகம் கொள்ள வேண்டும். ரத்தம் சூடாக உடலெங்கும் பாயும். நெஞ்சுக்குள் குறிக்கோள் தகிக்க தகிக்க, கண்களில் தீப்பொறி பறக்க பறக்க, விடாது முன்னேற வேண்டும்.

தங்கச் சுரங்கத்தை தேடி தோண்டியவர் சோர்வுற்று வெறுப்பாக சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த வேறொருவர் இரண்டு அடி தோண்டினார். கண்ணெதிரே தங்கப்பாளங்கள் பளபளத்தன என்ற உண்மைக் கதை சோர்வுக்கு துணையாக வரட்டும். இன்னும் இரண்டடி தோண்டியிருந்தால் தங்கப்புதையல் கிடைத்திருக்கும். சோர்வும், அசதியும் வெற்றியின் நேர் பகைவர்கள். அவர்களை விரட்டி அடி. தூர தூர... விரட்டி அடி.. வந்து விட்டது அதோ பார்... வெற்றி உன்னைத் தேடி வந்து விட்டது. அதற்கு நீ இன்னும் சில அடிகள் எடுத்து வைக்க வேண்டும். விடாதே... விடாதே... வெற்றி நிச்சயம்.

அடுத்ததாக தலைவன் என்பவனின் இயல்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.

தலைவன் என்பவன் யார் தெரியுமா ? “ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” . குறிக்கோளை அடைந்து விட்ட பிறகு அதை மேலாண்மை செய்யப்பழகிக் கொண்டவர் நாளை உலகை ஆளப்போகும் தலைவன். மேலாண்மை என்ற சொல்லில் அனேக அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அது என்ன ? விரைவில்....

Thursday, April 9, 2009

கையளவு இதயம் !

தங்கியிருந்த அறையிலிருந்து படிக்கும் அறைக்குச் செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழியில் சிறு கற்கள் பாவிய சாலை. காலையில் எழுந்து குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு தூய ஆடை உடுத்தி மண் தரையில் தவழ்ந்து செல்வேன். உச்சி வெயிலில் சாலையில் கொட்டிக் கிடக்கும் கற்கள் எல்லாம் நெருப்புக் கங்குகளைப் போல சுடும். மண் தரையோ அமிலத்தை உள் வாங்கியதாக கொதிக்கும். கிளாஸ் முடிந்ததும் தவழ்ந்து வருவேன். முட்டியில் கொப்பளித்து விடும். கைகள் சூட்டில் வெந்து சிவந்து கிடக்கும். கண்களில் கண்ணீர் ததும்பும். உள்ளுக்குள் வேறு படிக்க வேண்டுமென எரிந்து கொண்டிருக்கும் ஆசை தகிக்கும். நெஞ்சுக்குள் சூடு கிளம்பும். வியர்த்து விறுவிறுத்துப் போகும் உடம்பு சோர்வடையும். பல்லைக் கடித்துக் கொண்டு இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ வந்து விட்டது என்று துவண்டு விழும் கைகளும், முட்டியும் கடு கடுக்க தவழ்ந்து செல்வேன். சூட்டில் வெந்து போன முட்டிக்குள் சிறு மணல்கள் புகுந்து கொண்டு தவழ முடியாமல் விண் விண்ணென்று வலிக்கும். சுளீர் சுளீரென்று வலி உடலெங்கும் பரவும். வலி... வலி...

மழை ! சேறும் சகதியும் சேர்ந்து சாலையில் கிடக்கும். சுத்தமாக குளித்து விட்டு கிளாசுக்குச் செல்லும் வழியில் கைகால்கள் எல்லாம் சேறும் சகதியும் ஒட்டிக் கொண்டு வெயிட் ஏறி தவழ இயலாமல் பாரமாய் இருக்கும். சாப்பிடும் கைகள் சேற்றுக்குள் கிடந்து உழலும். சகதிக்குள் கிடக்கும் கப்பிக்கல் முட்டியில் குத்தும். வலி.. வலி... கண்கள் வலி தாங்காமல் தன்னாலே கண்ணீரைத் துப்பும். தவழ்ந்து செல்லும் போது ஏற்படும் வியர்வையில் கண்ணீரும் சேர்ந்து காணாமல் போய் எனது வைராக்கியத்திற்கு வலுச் சேர்க்கும்.

ஒரு முறை கல்லூரியில் நடந்த வன்முறையின் காரணமாக உடனடியாக விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம். கல்லூரியும், ஹாஸ்டலும் காலியானது. யாரையோ பிடித்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று சேர்ந்தேன். அப்போது நேரம் காலை பத்து மணி. எண்ணற்ற பஸ்கள் கடந்து சென்றன. ஒன்றிலும் ஏற முடியவில்லை. கூட்டம். கூட்டம். என்னைப் பார்த்ததும் பஸ் டிரைவர்கள் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றார்கள். சூடு கொப்பளிக்கும் சாலையில் சென்று அடுத்த பஸ்ஸிற்காக காத்திருப்பேன். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடும். மாலை ஆறு மணிக்குத்தான் ஒரு பஸ் நின்றது. ஏறினேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து ஊரு வர விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. ஏழு மணிக்கு ஊரின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த என் உறவுக்காரர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். உடம்பு சோர அசதியில் படுத்தேன். உணவு உண்டு இரு நாட்களாகி இருந்தன. இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை பஸ்ஸில் பிரேக் அறுந்து விட அனைவரும் வெளியே குதித்தோடி தப்பி விட்டனர். நான் எப்படி இறங்குவது? டிரைவரும், கண்டக்டரும் திட்டினார்கள். என்னால் இறங்க முடியாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. டிரைவரும் ஒரு வழியாக இறங்கிவிட பஸ் தானாக சென்று புளிய மரத்தின் மீது மோதி நின்றது. அந்தச் சூழ் நிலையிலும் பஸ் கம்பியினை இறுகப் பற்றிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறினால் உட்கார இடம் கிடைக்கவே கிடைக்காது. எனது இரு கைகளையும் எத்தனையோ செருப்புக் கால்கள் மிதித்திருக்கின்றன. சேறும் சகதியும், எச்சிலும், கோழையும் துப்பிக் கிடக்கும் பஸ் ஸ்டாண்டுகளில் தவழ்ந்து சென்று பஸ் ஏறுவேன். கொஞ்சம் கூட அசூசையோ வெறுப்போ கொண்டதில்லை. ஏன் எனக்கு மட்டுமிப்படி என்றும் எண்ணியதில்லை. எவரைப் பற்றியும் கவலையும் பட மாட்டேன். எனக்குத் தேவை கணிணி அறிவியலில் முதல் வகுப்பில் தேர வேண்டும். குறிக்கோளினை அடைய என்ன துன்பம் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவும், தைரியமும் நெஞ்சுக்குள் கனலாய் தகித்துக் கொண்டிருந்தது. முடிவில் அடைந்தே விட்டேன்.

கையளவு இதயம் ! அது தான் சாதனைக்கு கருவி !

Friday, April 3, 2009

என்னைக் காப்பாற்றுங்கள் : ஆசைத்தம்பியின் வேண்டுகோள் !




சலூனுக்குச் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். அழகான பையன் ஒருவனும், முடி திருத்துபவர் ஒருவரும் இருந்தனர். அப்போது தான் அந்தப் பையன் பையன் பார்சலைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். யார் என்று கேட்டேன். அவர் சொன்னது. இரண்டாவதாகப் பிறந்தவன். பெயர் ஆசைத்தம்பியாம். பத்தாவது வரை படித்திருக்கிறான். முதல் பையன் திருமணம் முடிந்த பிறகு அவனது திருமணத்திற்கு வாங்கி வைத்த கடனையும் தந்தையின் தலையில் சுமத்தி விட்டு மாமியார் வீட்டுடன் சேர்ந்து விட்டான்.

கடன் கட்டவும், சாப்பாட்டுக்கும் தினமும் திண்டாடி வருகிறேன். கடை வாடகை, இவனுக்கு செலவு என்பதால் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.

ஆசைத்தம்பியை வேலைக்கு அனுப்பலாம் அல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர் இவன் காயம் பட்டால் ரத்தம் நிற்காமல் கொட்டும் நோயுடன் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறான். ஊசி போட 4000 ரூபாய் செலவாகிறது. அவ்வப்போது யாராவது உதவி செய்கிறார்கள் என்று சொல்லி வருந்தினார். என்ன நோய் என்று விசாரித்தேன். அதன் விபரம் கீழே..

MAJOR BLEED - USE FACTOR.
HEMOPHILIA A FACTOR DEFICIENCY 8% < 1%

இவனது பிளட் க்ரூப் : ஓ பாசிடிவ். அதாவது ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு. அதன் விளைவாக ஜாயிண்ட் எல்லாம் வீக்கமும் வலியும் ஏற்படுமாம்.

இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது ஆசைத்தம்பியின் நோய்க்கு நிரந்தர தீர்வை வழங்கும் மருத்துவ உதவியினையோ அல்லது அவனது நோய்க்கான மருந்துச் செலவையோ செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்னாலியன்ற உதவிகளை அந்தப் பையனுக்கு அவ்வப்போது செய்து வருகிறேன்.. இந்த நோய் நிரந்தரமாக அவனை விட்டு செல்ல ஏதாவது மருத்துவ சிகிச்சை இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்.

அவனது முகவரி :
ஆசைத்தம்பி. எஸ்
/பெ : சண்முகம். எஸ்
97/60, செல்வபுரம், பாப்பம்பட்டி பிரிவு, சிந்தாமணிப்புதூர் அஞ்சல்,
இருகூர் வழி, கோயம்புத்தூர் - 641103
தமிழ் நாடு, இந்தியா.
ஆசைத்தம்பியின் மொபைல் நம்பர் : +91 9788613690

HIS BANK DETAILS :
CORPORATION BANK, 1093, SINGANALLUR,
COIMBATORE
ACCOUNT NUMBER : SB01001449
(1093/SB/01/001449)
ACCOUNT NAME : S. AASAITHAMBI
RTGS IFSC CODE : CORP0001093

ஆசைத்தம்பியின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்களேன். ப்ளீஸ்.