குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 29, 2021

யாருக்கு ஓட்டு போடலாம் - வரலாறு காட்டும் வழி

தேர்தல் களம். நெருப்பு போல தகிக்கும் வெப்பச் சூழல். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதிகாரத்துக்கு வர நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிகாரப் பசி எனும் கோர நெருப்பின் தாண்டவம். இந்த அதிகாரப்பசியில் எத்தனையோ பேரின் வாழ்க்கை நெருப்பில் இடப்படும். வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். பங்கு எடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள், ஒப்பீடுகள், திட்டங்கள், அவதானிப்புகள், ஈடுபாடுகள், கட்சி சார்புகள், நண்பர்கள், உறவினர்கள், நன்றி உணர்ச்சிகள் இப்படி பல்வேறு காரணிகளுக்குள் சிக்கி இருக்கும் மனதானது யாருக்கு ஓட்டுப் போடலாம் என முடிவு செய்திருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இப்போது இங்கு படிக்க இருக்கும் கருத்துக்களை கொஞ்சம் கவனத்தில் கொள்க.

இங்கு அறம் மட்டுமே பேசப்படும் அல்லது எழுதப்படும் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள். நான் எந்தக் கட்சியும் சாராதவன். ஆனால் அறத்தின் வழி நின்று வாழ்க்கையை நடத்திச் செல்பவன். ஆகவே எனக்கு எந்த முத்திரையும் இல்லை.

தமிழக அரசியல் வரலாற்றினைப் படித்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன். 

அன்றைக்கு நாமும், இன்றைக்கு நம் குழந்தைகளும் பாடப்புத்தகங்களில் படிக்கும் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் பாடல்கள் அந்தக் காலத்தில் படிக்கச் சொல்லித் தரப்படவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் காணக் கிடைக்கின்றன. 

கலைஞரைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசுவதைக் காணலாம். அதையெல்லாவற்றையும் விட அவரால் தமிழருக்கு விளைந்தது, எளிதில் கிடைத்தது கல்வி மட்டுமல்ல தமிழ் அதன் வளர்ச்சி. 

வள்ளுவர் கோட்டம், தென் குமரியில் வள்ளுவர் சிலை, பஸ்களில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு என தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழர் இனத்தின் நாகரீகமும், வரலாறும் படிக்கின்றோம் என்றால் அதற்கு அண்ணாவும், கலைஞரும் தான் காரணம் என்று சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாழ்ந்த வழி தெரிந்தால் தான் வாழும் வழி தெரியும். அதைத் திறம்படச் செய்தவர் கலைஞர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து படிக்கவே விடாமல், அதி தீவிர நுணுக்கமான முறையில் தடுக்கின்றார்கள். மேல் படிப்புகளுக்கும் அவ்வாறே திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தி படிக்கவே விடாமல் செய்கிறார்கள். அதற்கு இங்கு இருக்கும் தலைமைப் பண்பு அறவே அற்றவர்களும் துணை போகின்றார்கள். 

கல்வி என்பது செல்வம். அழிக்கவே முடியாத செல்வம். அதை நம் சந்ததியினருக்கு கிடைக்க கூடாது என்று நயவஞ்கமாக திட்டமிடுபவருடன் கூட்டுச் சேர்பவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இன்றையச் சூழலில் யார் தமிழ் நாட்டின் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது என உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஆகவே வரலாறு காட்டிய வழியில் வரக்கூடிய சந்ததியினருக்கு  எது நல்லது என்று யோசித்து முடிவெடுங்கள்.

அவர் இதைச் செய்தார், இதைச் செய்தார், அவங்க இப்படி, இவங்க இப்படி என்றெல்லாம் யோசிக்க நேரிடும். 

பொருளாதார ஏற்றங்கள் அவரவர் தர்மத்தின் படி நிகழ்பவை. நிகழ்த்தப்படுபவை. 

வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெவின் இறுதிக்காலத்தை நிர்ணயித்தது அரசியல் சட்டம். அறம் இப்படித்தான் செய்யும். அது துரோகத்துக்கும் பொருந்தும். துரோகம் செய்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. 

ஆகவே நண்பர்களே, யோசியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

என் தாத்தா மாணிக்க தேவர் கையில் துப்பாக்கி ஏந்தி வெள்ளைக்கார பறங்கிச் சிப்பாய்களுடன் சண்டையிட்டது, நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அது நடந்து விட்டது.

ஆகவே அந்த வழியில் வந்த அடியேன் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

வாழ்க்கை எப்போதும் மாற்றத்துக்கு உரியது.

தர்மம் மட்டுமே நிரந்தரம் அது மாறுவதில்லை எப்போதும். 

உண்மைக்கு எப்போது மாற்றுக் கருத்து இருந்ததில்லை அல்லவா?

சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, March 24, 2021

நிலம் (80) - செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்துச் செய்ய முடியுமா?

சமீபத்தில் ஒரு வாடிக்கையாளர் நண்பருக்காக லீகல் பார்க்கும் போது செட்டில்மெண்ட் பத்திரம் ஒன்றினை எழுதிக் கொடுத்தவர் ரத்துச் செய்திருந்தார். அதன் நகலைப் படித்தேன்.

கொடுமையான செய்திகளைப் பதிவு செய்து, அதற்கான தான் எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தினை ரத்துச் செய்கிறேன் என்று பதிவு செய்திருந்தார்கள். பதிவாளரும் பதிவு செய்து கொடுத்திருந்தார். 

உயிலை ரத்துச் செய்யலாம் என்றுதான் சிவில் சட்டத்தில் இருக்கிறது. ஆனால் இந்தப் பத்திரமோ செட்டில்மெண்டினை ரத்து செய்திருக்கிறதே என்று தோன்றியது.

செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்ய இயலாது. ரத்து செய்து பின்னர் வேறொருவருக்கு அச்சொத்தினை விற்றால் அது செல்லாது. 

செட்டில்மெண்ட் எழுதி வாங்கியவருக்கு மட்டுமே அச்சொத்து உரிமையானது.

ஆனால் தற்போது பெற்றோர் பாதுகாப்பு என்கிற வகையில் தமிழக அரசு சொத்தினை எழுதி வாங்கிக் கொண்டு பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனிக்கவில்லை என்றால் செட்டில்மெண்ட் பத்திரத்தினை டி.ஆர்.ஓ அல்லது கலெக்டர் மூலம் ரத்துச் செய்து கொடுத்திருக்கும் செய்திகளைப் படித்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை செட்டில்மெண்ட் ரத்து செய்ய டி.ஆர்.ஓவுக்கோ அல்லது கலெக்டருக்கோ உரிமை இல்லை. சொத்துக்கள் சிவில் தொடர்பானவை. அவை கோர்ட் மூலம் மட்டுமே நிவாரணம் பெறக்கூடியவை.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது ஒரு சில நிபந்தனைகளை விதித்து எழுதுவார்கள். அந்த நிபந்தனைகள் நிறைவேறாத பட்சத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தினை கோர்ட் மூலம் தான் ரத்து செய்ய முடியும்.

முக்கியமான இன்னொரு விஷயமும் உண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்தில் தனக்கு இருக்கும் பங்கினை மட்டும் செட்டில்மெண்ட் எழுதி வைப்பார்கள். அது குறித்து மிகக் கவனம் தேவை. பொதுவாக செட்டில்மெண்ட் எழுதி வைத்தால் அது செல்லாது.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் போது வாசகங்களை வெகு கவனமாக எழுத வேண்டும். எழுதிக் கொடுப்பவரின் முழு சம்மதம் மிக முக்கியமான ஒன்று.

ஆகவே லீகல் ஒப்பீனியன் பார்க்கும் போது செட்டில்மெண்ட் பத்திரங்களின் முழுத் தன்மையும் ஆராய வேண்டும். 

செட்டில்மெண்ட் பத்திரங்கள் எழுத அணுகலாம்.

வாழ்க வளமுடன்...!

* * *

மிக நல்ல வருமானம் தரக்கூடிய,  சொத்து உரிமைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலங்கள் விற்பனைக்கு உள்ளன. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து பார்க்கவும்.

Click Banner to see Properties for Sale

கல்வி : திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் - குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் கல்வி

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K 

மேலே இருக்கும் வாட்சப் இணைப்பில் இணைந்திருங்கள். நல்ல கல்வி, குறைந்த  கட்டணம்,   மத்திய அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை ஆகிய தகவல்கள் அப்டேட் செய்யப்படும். 

* * * 

திண்டுக்கல்லில் இயங்கி வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் கல்வி பற்றிய விபரம் கீழே. மிகக் குறைந்த கட்டணம், நல்ல கல்வி, தேர்ந்தெடுக்க பல படிப்புகள்.

  • Ph.D.
  • M Phil Programmes (Two Semester)
    • M.Phil. Tamil
    • M.Phil. English
    • M.Phil. Rural Development Studies
    • M.Phil. Research & Development
    • M.Phil. Development Sociology
    • M.Phil. Gandhian studies and Peace Science
    • M.Phil. Economics
    • M.Phil. Development Administration
    • M.Phil. Women's Studies
    • M.Phil. Chemistry
    • M.Phil. Computer Science
    • M.Phil. Education
    • M.Phil. Mathemaics
    • M.Phil. Physics
    • M.Phil. Botany/Zoology/Micro Biology
    • M.Phil. Home Science
    • M.Phil. Geology
    • M.Phil. Futurology
  • Post Graduate Programmes (Four Semesters)
    • M.A. Tamil & Indian Literature
    • M.A. English & Communicative Studies
    • M.A. Hindi
    • M.A. Gandhian studies and Peace Science
    • M.A. Rural Development Studies
    • M.A. Economics
    • M.Com. Cooperative Management
    • M.Sc. Home Science Extension and Communication
    • M.Sc. Mathematics
    • M.Sc. Physics
    • M.Sc. Chemistry
    • M.Sc. Botany
    • M.Sc. Zoology
    • M.Sc. Food Science and Nutrition
    • M.Sc. Textiles and Fashion Design
    • M.Sc. Microbiology
    • M.Sc. Geo-informatics
    • M.Sc. Applied Geology and Geomatics
  • PG Diploma Programmes (Two Semesters)
    • Sanitary Inspector's course
    • Spatial Technologies
    • Applied Gerontology
    • Yoga Education
    • Epigraphy
    • Sustainable Social Development
  • 5 Year Integrated Programme (Ten Semesters)
    • M.A. Development Administration (5 Year Integrated)
    • M.A. Sociology (5 Year Integrated)
  • Under Graduate Programmes (Six Semesters)
    • B.Sc. Mathematics
    • B.Sc. Physics
    • B.Sc. Chemistry
    • B.Sc. Computer Science
    • B.Sc. Home Science
    • B.Sc. Micro Biology
    • B.Sc. Textiles and Fashion Design
    • B.Sc. Geology
    • BBA
    • B.Com. Cooperation
    • B.A. Economics
  • Diploma Programmes (Four Semesters)
    • Agriculture
    • Textile Technology
    • Videography
    • Yoga Education
  • Professional Courses (AICTE/ICAR UGC NCTE Approved)
    • B.Tech. Civil Engineering (8 Semester)
    • B.Tech. Civil Engineering (Lateral Entry)(6 Semester)
    • M.Tech. Renewable Energy
    • B.Sc. Agriculture (Hons.) (8 Semester)
    • MCA (6 Semester)
    • MBA
    • B.Ed. (Two years)
    • B.Sc., B.Ed.
    • M.Ed. (Two years)
  • Skill Based Programmes
    • B.Voc – Farm Equipments Operation and Maintenance
    • B.Voc – Footwear and Accessories Design
    • B.Voc – Food Processing
    • B.Voc – Dairy Production and Technology
    • B.Voc - Organic Agriculture and Enterprises Development
    • B.Voc - Renewable Engery
    • B.Voc - Multimedia Production Technology
    • B.Voc - Food Testing and Quality Evaluation
    • D.Voc – Refrigerator and Air conditioner(2 Semesters)
    • D.Voc – Software Development(2 Semesters)
    • Diploma in Two Wheeler Mechanism and Maintenance
    • Certificate Course in Two Wheeler Technician(2 Semesters)

    இங்கு ஹாஸ்டல் வசதியும் மிகக் குறைந்த கல்வி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வசதியும் உண்டு.

    பிஎஸ்ஸி கல்விக்கு கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். வருடத்திற்கு 12000க்கு மட்டும் கல்வி கட்டணம். மத்திய அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் மூலம் எளிதில் இந்தக் கல்வி கட்டணத்தைக் கட்டலாம். பெற்றோருக்கு எந்த வித பொளாதார சிரமம் தராமல் எளிதில் படிக்கலாம். 

    தனியார் கல்வி நிலையங்களில் படிக்க முடியாத பொருளாதார பிரச்சினை இருக்கும் மாணவர்கள் இங்கு படிக்கலாம்.

    பி.டெக் சிவில் இஞ்சினியரிங்க் இங்கு படிக்கலாம்.

    இந்த பல்கலைக் கழகத்தின் இணையதளம் கீழே இணைப்பில் இருக்கிறது.  

    ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். வரும் வருடம் படிப்புக்கு செய்தி வரும். அப்போது அவசியம் பதிவு செய்யுங்கள்.

    https://www.ruraluniv.ac.in/home

    https://www.portal.ruraluniv.ac.in

Monday, March 22, 2021

நிலம் (79) - மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் அவசியம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019ம் ஆண்டு ஒரு வழக்கின் காரணமாக, உயர் நீதிமன்ற உத்தரவின் படி மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவுச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவு போட்டிருந்தது.

பெரும்பாலான கட்டிடம் கட்டுபவர்கள் அனுமதி பெற்ற கட்டிடத்தினை விட அதிகளவு பரப்பளவில் கட்டிடங்களை கட்டி விடுகிறார்கள் என்ற பிரச்சினை எழுந்த போதுதான் மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டது. 

ஆனால் பாருங்கள், நம் தமிழக மின்சாரத்துறை இருக்கிறது அல்லவா? அது நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம். மின்சாரத்துறை இயக்குனர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, மின் இணைப்பு கொடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் கோவை கன்ஸ்யூமர் கேஸ் வழக்கு போட்டு, அந்த சுற்றறிக்கைக்கு தடை விதித்து மீண்டும் 2019 சட்டத்தை உறுதிப்படுத்தி கோர்ட் தீர்ப்பு பெற்று இருக்கிறது. செய்தி கீழே.

இனிமேல் வீடு கட்டுவோர் மேஸ்திரி சொல்கிறார், இஞ்சினியர் சொல்கிறார் என வம்புகளில் போய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

செய்தி உதவி : 21.03.2021- தமிழ் திசை தினசரி


கல்வி : சென்னை ஐஐடி - ஐந்து வருடம் எம்.ஏ படிப்பு - பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் படிக்க நுழைவுத் தேர்வு எழுதி பாஸானால் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி படிக்கலாம். மத்திய அரசின் பணிகளுக்கு படித்து முடித்ததும் வேலை வாய்ப்பும் பெறலாம்.

தமிழக மாணவர்களுக்கு மறை பொருளாய் இருந்த அற்புதமான இந்த தகவல்களை இனி ஒவ்வொன்றாய் எனது பிளாக்கில் வெளியிட உள்ளேன்.

ஏழை மாணவர்களும், படிப்பின் மீது உச்சம் தொட விரும்பும் மாணவர்களும், கல்விக் கட்டணம் கட்ட இயலாமல் இருக்கும் புத்திசாலி மாணவர்களும் இந்த தகவல்களைப் பயன்படுத்திப் படிக்கவும். 

வெற்றி நமதே அது தமிழர்களுக்கே நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

 * * *

சென்னை ஐஐடியில் இருக்கும் தனிப்பட்ட பிரிவில் வழங்கக் கூடிய எம்.ஏ படிப்பினை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வென்று அனுமதி பெற்றுப் படிக்கலாம். கீழே விபரங்கள் உண்டு. படித்துப் பார்க்கவும். நண்பருக்குள் பகிரவும்.

வாழ்க வளமுடன்

தூத்துக்குடி ஸ்டீபன்

கோவை தங்கவேல் 

வாட்சப்பில் அப்டேட்டுகள் பெற கீழே இருக்கும் வாட்சப் குருப்பில் இணையவும்

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K

* * * 



சென்னை - ஐஐடியில் DEPARTMENT OF HUMANITIES AND SOCIAL SCIENCES

Founded in 1959 the Department of Humanities and Social Sciences is one of the oldest in IIT Madras.

The Department’s essentially inter-disciplinary nature is its distinguishing factor. This allows students to develop an appreciation for a very diverse set of fields, including Development Studies, Economics, English Studies, Environmental Studies, History, International Relations, Philosophy, Political Science, and Sociology. The Department offers both Master’s and Doctoral programmes, as well as electives for B.Tech and M.Tech students.

Coupled with its multi-disciplinary background, the Department boasts of a highly diverse and experienced faculty. It has an excellent student-teacher ratio, providing opportunities for academically intense learning.

Equipped with state of the art facilities in a serene campus, the department offers an enriching academic environment.

 * * *

The Humanities and Social Sciences Entrance Examination or HSEE is a national level entrance test conducted every year by Indian Institute of Technology Madras for admission to the master programme offered by the Department of Humanities and Social Sciences (HSS) of the institute. 

* * *

The Department’s unique five year integrated programme, launched in 2006, leads to Master of Arts (M.A.) degree in two major streams – Development Studies and English Studies. With this programme, IITM is poised to cross a milestone in fulfilling its role in higher education in liberal arts and social sciences.

The M.A. programme reflects the multi-disciplinary nature of the fundamental concepts in humanities and social sciences. During the first two years, the students are introduced to a variety of common subjects related to all the two major disciplines. Such a curriculum aims to produce masters in Humanities and Social Sciences to cater to the growing demands of academia, government, public and private sector enterprises, NGOs, and other organisations. The programme also provides an opportunity for our students and faculty to be in close and constant touch with those of the Engineering, Sciences and Management departments.

 * * *
 
Admission Process
 

The students for the integrated Masters program at IIT-M are selected through the Humanities and Social Sciences Entrance Examination (HSEE) conducted by IIT Madras every year in the month of May. The exam is highly competitive and only about 2 percent of the candidates taking the exam are finally selected for the course. The present intake of the MA program is 45 students per year.

  ***
 

 



Saturday, March 20, 2021

நிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு

காலம் எல்லாவற்றுக்குமான பதிலாக இருக்கும். நற் செயல்களுக்கும், தீச் செயல்களுக்கும் காலம் சொல்லும் பதில்தான் உண்மை.

நாமெல்லாம் இல்லாத காலத்தில் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரலாறுதான் காலம் பற்றிப் பேசுகிறது. ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு காலம் என்பது கிடையாது. உண்மை பேசினால் பிடிப்பதில்லை. ஆகவே விட்டுவிடலாம்.

கடும் உழைப்பினால் பெறக்கூடிய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திட நிலம் மட்டுமே மிகச் சரியான ஒன்று. அதைத் தவிர தங்கம் மற்றும் வங்கியில் டெபாசிட்கள் என்று பிறவனவும் உண்டு. ஆனாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது நிலம் அல்லது பூமி மட்டுமே. அவ்வாறு பூமிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல்வேறு காரணிகளைக் கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய இழப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை. ஆம் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். அப்படி வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றித்தான் இப்பதிவு.

உங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. இதை பலருக்கும் தெரிய வைத்திடுங்கள். இப்பதிவினை ஷேர் செய்திடுங்கள். அது உங்களுக்கும் பயன் தரலாம்.

பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும், பின் புலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கடன் பெரும்பான்மையாக உதவுகிறது. புத்திசாலிகள் வங்கிகளைக் கொள்ளை அடிப்பார்கள். சாதாரணவர்கள் வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைவார்கள் இல்லையெனில் அழிக்கப்படுவார்கள். இது அவரவரின் வாழ்வியல் சூழலைப் பொறுத்தது.

இப்போது இரண்டு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம்.

ஒருவர் தான் கிரையம் பெற்ற சொத்தினை அரசு வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றார். நல்ல முறையில் தொழிலும் நடந்து கொண்டிருக்கிறது. கடனும் தொண்ணூறு சதவீதம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் பெற்ற வங்கியின் மேலாளார் மாறுகிறார்.

கார், பங்களா, ஆள், அம்பு என படாடோபமாக வாழ்ந்து கொண்டிருந்த கடன் வாங்கியவர் வீட்டுக்கு சிபிஐ வருகிறது. கைது செய்து ரிமாண்ட் செய்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

ஏன்?

அவர் கடன் பெற வங்கியில் அடமானம் வைத்த சொத்து போலியானது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அது வேறொருவரின் சொத்து என்பதைக் கண்டுபிடிக்கிறது. நான்காண்டு காலம் வங்கி ஒன்றும் செய்யவில்லை. வங்கி லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால் மோசடிச் சொத்துப் பத்திரம் என்று பின்னால் கண்டுபிடிக்கிறார்கள்.

விளைவு பொருளாதார மோசடிக் குற்றம் – அரசு வங்கியை ஏமாற்றியது தேசத்துரோகம் அல்லவா?

இதே போல மூன்றாம் நபர் சொத்துக் காப்புறுதிக் கடன் வாங்கியவர் ஒருவரும் பொருளாதார மோசடிக் குற்றப்புகாரில் சிக்கி, சிபியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

இருவரின் தொழிலும் முடங்கியது. சொத்துக்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு விட்டது.

இனி என்ன செய்ய முடியும்? குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அல்லவா?

ஏன் இந்த நிலை வந்தது?

கடன் வாங்கியவர்களை ஏமாற்றிச் சொத்து எழுதி வைத்தவர்கள் மீது வழக்கு இல்லை.

ஆவணங்களை சரிவர பரிசீலனை செய்யாது கடன் வழங்கிய மேலாளர், லீகல் வழங்கிய வக்கீல் மீது வழக்கு இல்லை.

ஆனால் ஏமாற்றப்பட்டவர் மீது வழக்கு.

ஏமாற்றியவர்களும், தன் வேலையைச் சரி வரச் செய்யாதவர்களின் மீதும் இங்கு வழக்கு ஏதும் இருக்காது.

இதுதான் இங்கு இருக்கும் சட்டம்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பார்த்தீர்களா?

கடன் வாங்கியவர் கிரையம் கொடுத்தவர் மீது மோசடி வழக்குத் தொடுக்கலாம். ஆனால் தலைமீது தொங்கும் இந்தக் கத்தியெனும் வழக்குக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கடன் வாங்கியவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விடும். அதுமட்டுமா, தீராத பழி வேறு.

ஆகவே நண்பர்களே, ஒரு சொத்தினை வாங்கும் முன்பு லீகல் ஒப்பீனியன் என்பதும், டைட்டில் டிரேஸ்ஸிங் என்பதும் வெகு முக்கியம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

குறிப்பு: சொத்துக்களின் லீகல் டிரேஸ்ஸிங் மற்றும் ஒப்பீனியன் ஆகியவைகளை எமது நிறுவனம் வழங்கும்.

 

Wednesday, March 10, 2021

தேர்தல் கமிஷனின் ஜனநாயக தேசதுரோக 2021 தேர்தல் - ஜிமோடி வெர்ஷன்

தேர்தல் வந்து விட்டது. தேர்தல் கமிஷன் நாடகம் நடத்துகிறது. எல்லோருக்கும் தெரியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என. பெரும்பாலானோர் பணம் வாங்குவதும் தெரியும் தேர்தல் கமிஷனுக்கு. ஆனாலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பணம் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டம் என்ன செய்து கிழித்தது?

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் கேலிக்குட்படுத்தப்படுவதை எல்லோரும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும் நம்மால்? வேடிக்கை...வேடிக்கை. வேடிக்கை பார்ப்பதை தவிர?

காவல்துறை காவல் காக்கிறது. பணம் யாரும் எடுத்துப் போக கூடாது என. ஆளும்கட்சி ஆட்களை காவல்துறை என்ன செய்து விட முடியும்?

தேர்தல் கமிஷனின் மற்றுமோர் தேசதுரோகம் (ஆம் தேச துரோகம் என்றுதான் சொல்கிறேன்) தமிழகத்தில் நடத்தப்படும் 2021 தேர்தல்.

எப்படி என்று பார்க்கலாமா?


மேலே இருக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்பினைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் தேதி 19.03.2021. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் நாள் 22.03.2021ம் தேதி. 

விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது 22ம் தேதிதான் தெரியும். அதாவது போட்டியிடுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்புதான் தெரிய வரும்.

இந்த பதினான்கு நாட்களுக்குள் சுயேச்சையாக ஒருத்தர் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எப்படி தொகுதி முழுக்கவும் பிரச்சாரம் செய்ய முடியும்?

பெரிய கட்சிகளுக்கு சின்னம் பேசும். கட்சி ஆட்கள் கார்களில் சுற்றி வந்து விடுவார்கள். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்கிறது. எளிதில் போஸ்டர் ஒட்டுவதிலிருந்து எல்லா பிரச்சாரத்தையும் செய்து விடுவார்கள். 

ஆனால் ஒரு சுயேச்சையினால் அது முடியுமா? பதினைந்து தெருக்கள் பிரச்சாரம் செய்யவே பத்து நாட்கள் ஆகி விடும். இதர பகுதிகளுக்கு எங்கனம் செல்ல இயலும்? இது கொடுமை அல்லவா? வாய்ப்பு கொடுக்காமல் ஏன் இத்தனை குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்? என்ன அவசரம் வந்து விட்டது? ஓட்டு எண்ணுவதற்கு ஏன் 30 நாட்கள்?

இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் ஜன நாயக தேசத்துரோகம். தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகமே அழிக்கப்பட வேண்டும் என்றான் ஒருவன். 

வெட்கமாயில்லையா தேர்தல் கமிஷனுக்கு?

தனியொருவன் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும், சிறிய கட்சிகளை அழித்திடவும் ஆளும் பாஜகவினரால் மிக மிகத் தந்திரமாக மோசடி செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. 

அதை தேர்தல் கமிஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஏற்றுக்கொண்டு சுதந்திரத்தும், இந்திய இறையாண்மைக்கும், ஜன நாயகத்திற்கும், இந்திய மக்களுக்கும் துரோகத்தினையும் அக்கிரமத்தினையும் செய்துள்ளது.

இதைப் பற்றி எவரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. வெட்கமில்லாதவர்கள், அறமற்றவர்கள், தீங்கிழைப்பவர்களால் இதைப் பற்றி யோசிக்க கூட முடியாது.

ஆனால் இவர்கள் தான் ஆன்மீகம் பேசுகிறார்கள். மதம் பேசுகிறார்கள். தர்மம் அறம் பற்றி மேடைகளில் கத்துகிறார்கள்.

இங்கு இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் அதர்மங்களை நாம் அறிவோம். ஆனாலும் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடுவோம். இவ்வுலகிற்கு தீங்கு செய்வதில் மனிதர்களுக்கு நிகர் எவருமுண்டா என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கே சென்றது நல் எண்ணங்கள்? எங்கே போனது அறம்? எங்கே போனது தர்மம்? ஏன் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? ஒளிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சுகமாகி விடுமா?

வாழும் நாட்களில் நாம் வாழும் பூமிக்கும், சமுதாயத்துக்கும் நன்மை செய்யக்கூடாதா? கொஞ்சம் கூட அறச்சிந்தனை அற்றவர்களாக மாறிப் போனீர்களே ஏன்? யோசித்துப் பாருங்கள்.

துன்பம், துயரம், கஷ்டம் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதர்மங்களை மனம் கூசாமல் செய்பவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு வரும் நல்லது கெட்டது எல்லாமே உன்னால் தான் என்பதை நீ அறியும் போது வாழ்வின் கடைசி நிலையில் இருப்பாய் என்பார்கள். 

இதோ தமிழ் நாட்டில் ஓட்டே போடாத ஒருவர் முதலமைச்சர் ஆனார். வேடிக்கை பார்த்தோம். ஐந்து லட்சம் கோடி கடன் வைத்தார் வேடிக்கை பார்த்தோம். மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாமல் ஆக்கினார். வேடிக்கை பார்த்தோம். மின்சாரத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் என்கிறது சிஏஜி. வேடிக்கை பார்த்தோம். சாலைகளில் ஊழல், பாலங்களில் ஊழல், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு மூன்று கோடி என ஊழல். முட்டையில் ஊழல், ரெவின்யூ துறையில் தொட்டதற்கெல்லாம் ஊழல். எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்க்கிறோம். இனியும் என்ன ஆகப்போகிறது? மீண்டும் வேடிக்கை பார்ப்போம்.

இந்த 2021 தேர்தல் தேசத்துரோக தேர்தல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் யாரோ ஒரு கட்சிக்கு அடிபணிந்து இந்திய மக்களுக்கு தேசத்துரோகம் செய்திருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு : கடந்த தேர்தலில் அடியேன் சுயேச்சை ஒருவருக்கு ஓட்டுப் போட்டேன். அந்த ஓட்டு பதிவாகவே இல்லை. விவிபாட் ஒப்புகை சீட்டு கூட பரிசீலிக்கப்படாது என்கிற போது ஓட்டுப் போடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஓட்டு மெஷின் நம்பிக்கையற்றவை.

மேலும் ஒரு உபகுறிப்பு: ஜோதிடம் என்பது மோசடி பொய் என்பதற்கான ஆதாரத்துடன் அடுத்த கட்டுரை வரும். அதிரப்போகின்றீர்கள்.

Monday, March 1, 2021

நிலம் (77) - சென்னை செங்கல்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட கிராமங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய தமிழ் திசை தினசரியில் வெளியான செய்தியைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு இது.

1990களில் கல்பாக்கம் அணுமின் நிலைய பயன்பாட்டுக்கு நிலமெடுப்பு நடத்தப்பட்டன. அவை எந்தெந்த கிராமங்களில் என்னென்ன சர்வே எண்களில் எடுக்கப்பட்டன என்ற விபரங்கள் என்னிடம் இருக்கிறது. 

அந்த சர்வே எண்களின் அருகிலோ அல்லது அந்த ரெவின்யூ கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சில தூரங்களில் உள்ள இடங்களை வாங்குவதற்கோ அல்லது கட்டிடம் கட்டுவதற்கோ கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்பட வேண்டும்.

சமீபத்தில் அனுமதி பெறாத மனைப்பிரிவு அனுமதிக்காக அரசு தனிப்பட்ட வகையில் அரசாணை வெளியிட்டு மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் அருகில் இருக்கும் பல ரெவின்யூ கிராமங்களில் உருவாக்கப்பட்ட அனுமதி பெறாத வீட்டுமனைகளை ஆன்லைனில் பணம் கட்டிய பிறகு, அனுமதிக்காக டிடிசிபி அலுவலகத்தை மக்கள் அணுகிய போது, டிடிசிபி அலுவலர் கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு தடையின்மைச் சான்றுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் அச்சான்றினைப் பெற முடியவில்லை. தடையின்மைச் சான்றிதழ் பெற பல்வேறு வரன்முறைகள் பின்பற்ற பட வேண்டும். ஆகையால் உடனடியாக வழங்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல அணுமின் உலையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு கதிர்வீச்சு அபாயம் உண்டானால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பெரும் சிரமம் உண்டாகும் என்பதால், கல்பாக்கம் அணுமின் உலை அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களில் பத்திரங்கள் பதிவு செய்வதை அரசு தடை செய்திருக்கிறது. ஆகவே இப்பகுதியில் நிலங்கள் வாங்க வேண்டாமென்று நம் பிளாக்கின் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன்.



அணுமின் நிலையம் அருகில் இருக்கும் கிராமங்களும் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட விபரமும் கீழே

மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம்

மேற்கண்ட கிராமங்களில் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு இன்னும் ஒரு சில கூடுதல் செய்திகள் இங்கே.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பில்டிங்க மதீப்பீட்டுத் தொகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. வீடுகள் வாங்கும்ப் போது அதற்கான முத்திரைத் தொகை செலுத்தப்பட வேண்டும். ஆகவே தனிப்பட்ட முறையில் வீடுகளோ அல்லது வணிகக்கட்டிடங்களோ வாங்கும் போது அதற்கான சரியான மதிப்பீட்டுத் தொகையினைக் கணக்கீடு செய்து அதற்கான முத்திரைத் தீர்வினைக் கட்டி விடுங்கள்.

கொரானா காலத்தில் தொழில் முடக்கம், சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் அவதியுற்று கடன் கட்ட வழியில்லாமல், செலவு மட்டும் அதிகரிக்கும் நிலையில் ஆளும் அதிமுக அரசும், பிஜேபி அரசும் வரிகளாக விதித்து மக்களின் இரத்தம் உறிஞ்சுகின்றன.

வாங்கும் திறன் குறைந்திருக்கும் போது, பொருட்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வெங்காயத்தின் விலையும், பருப்பின் விலையும் உயர்ந்தது இன்னும் குறையவே இல்லை. ஆனால் மக்களின் வருமானம் மட்டும் குறைந்து விட்டது.

இது என்ன மாதிரியான ஆட்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

வரி, வரி, வரி இதை மட்டும் தான் இன்றைக்கும் பிஜேபி அரசு செய்து வருகிறது. டோல்கேட்டில் ஒரு நாள் வசூல் 100 கோடிக்கும் மேல். பின் ஏன் சாலை வரி எனக் கேட்டால் பதில் சொல்வார் யாருமில்லை. 

தேர்தல் வந்து விட்டது. திமிர்தனம் கொண்ட மக்களை வரி போட்டு கொடும் ஆட்சி நடத்தும் அரசுகளுக்கு அதிர அதிர மக்கள் புரிய வைக்க வேண்டும். 

நாம் இங்கு அறம் மட்டுமே பேசுவோம். அரசியல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மையும், இனி வரப்போகின்றவர்களையும் வாழ வைப்பது அறம் எனும் தர்மம் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.