குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 28, 2023

நிலம் (112) - கோவை விளாங்குறிச்சியில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மற்றும் பிஜேபி பாலாஜி ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட 45.82 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

அனைவருக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. 

ஆனால் இன்று இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏனெனில் உங்கள் உழைப்பினை திருட ஒரு கூட்டம் தயார் நிலையில் எப்போதும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் இந்த பதிவினை எழுதியுள்ளேன். நிலம் பற்றி நூற்றிப் பதினோறு தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தாலே ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவினை முழுமையான தகவல்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தேவை எனில் அழைக்கவும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை தி இந்துவில் படித்தேன். இது நடக்கும் என முன்பே தெரியும்.

கோவை விளாங்குறிச்சியில் சீலிங்க் பூமி உள்ளது எனக்கு தெரியம். தவல்கள் என்னிடம் உள்ளது. இந்த பூமி அரசுக்குச் சொந்தமானது.

முறைகேடாக இந்த பூமியில் லேயவுட் போடப்பட்டு, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, பலரும் வாங்கி வீடுகள் கட்டினார்கள். பல நண்பர்களிடம் சொன்ன போது எவரும் கேட்பதாக இல்லை. பின்னர் எப்படி மனை அப்ரூவல்  கிடைக்கும் என்றெல்லாம் சட்டம் பேசினார்கள். 

தற்போது அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயராமன் அவர்களால் லேயவுட் போடப்பட்டு இந்த சீலிங்க் நிலங்கள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது கோவை மாவட்ட பிஜேபி கட்சி தலைவராக இருக்கும் பாலாஜி அவர்களுக்கு இடமுள்ளது என செய்திகள் சொல்கின்றன.

சுமார் 45.82 ஏக்கர் நிலங்கள், இதன் மதிப்பு ரூ.229 கோடி மதிப்புள்ள நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயம்புத்தூர் நிர்வாகம் மீட்டெடுத்து உள்ளது. 

இனி வழக்குகள், மேல்முறையீடுகள் என்றெல்லாம் நடந்தாலும், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உண்மை.

செய்தி கீழே. படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேல்முறையீட்டு வழக்கு எண் : WP.29221/2018

தீர்ப்பு வழங்கிய தேதி : 07.09.2023, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி

விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் : 444, 446, 447/1, 407/1, 407/2, 408,410, 369, 370 மற்றும் 375.

இதன் வார்டு எண் : 26, பிளாக் எண் 1, இதன் டவுன் சர்வே எண்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த வரைபடம் கீழே தருகிறேன். இதைப் போன்ற கிராம வரைபடங்கள், அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.ஆர் - கோவை மாவட்டம் முழுவதுமானதுக்கும், ஹவுசிங்க போர்டு நிலங்கள், சீலிங்க் பூமி விபரங்கள் அனைத்தும் உள்ளது. (லீகல் கட்டணம் தனி, இதர கட்டணங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் தரப்படும்)



விளாங்குறிச்சி கிராம வரைபடத்தில் ஒரு பகுதி.

2016ம் ஆண்டு டிடிசிபி கோவை - 375 சர்வே எண் உள்ள இடத்திற்கு மனை அனுமதி வழங்கி இருக்கிறது. 



மேற்கண்ட உத்தரவுகள் ரெரா இணையத்தளத்திலும் கிடைக்கின்றன. கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெராவில் அப்ரூவல் கொடுக்கப்பட்டு விட்டால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் எனப் பலரும் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். 



படித்து விட்டீர்களா? டிடிசிபி அனுமதி வழங்கும் போதே எனக்கும் நிலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பது  போலத்தான் அனுமதி தருவார்கள். அதே போல ரெரா விதிகளும் அதைத் தான் சொல்கின்றன. 

சரி, இனி தீர்ப்பினைப் படிக்கவும்.









இனி என்ன ஆகும்? மேல்முறையீடு செய்யப்படும். 

அரசுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றுச் சொல்வார்கள். ரூ229 கோடி மதிப்பு நிலங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் இடம் வாங்கியவர்களின் நிலையும், இந்தக் கட்டிடத்திற்கு கடன் அளித்த வங்கியின் பணமும் போயே போச்சு.

அதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகள் இனி வரவுள்ளன. 

ஆகவே நண்பர்களே, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெறுங்கள் இடம் வாங்குவதற்கு முன்பே. தொடர்புக்கு அழைக்கவும் : 960057755