குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கோயம்புத்தூர். Show all posts
Showing posts with label கோயம்புத்தூர். Show all posts

Thursday, September 28, 2023

நிலம் (112) - கோவை விளாங்குறிச்சியில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மற்றும் பிஜேபி பாலாஜி ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட 45.82 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

அனைவருக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. 

ஆனால் இன்று இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏனெனில் உங்கள் உழைப்பினை திருட ஒரு கூட்டம் தயார் நிலையில் எப்போதும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் இந்த பதிவினை எழுதியுள்ளேன். நிலம் பற்றி நூற்றிப் பதினோறு தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தாலே ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவினை முழுமையான தகவல்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தேவை எனில் அழைக்கவும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை தி இந்துவில் படித்தேன். இது நடக்கும் என முன்பே தெரியும்.

கோவை விளாங்குறிச்சியில் சீலிங்க் பூமி உள்ளது எனக்கு தெரியம். தவல்கள் என்னிடம் உள்ளது. இந்த பூமி அரசுக்குச் சொந்தமானது.

முறைகேடாக இந்த பூமியில் லேயவுட் போடப்பட்டு, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, பலரும் வாங்கி வீடுகள் கட்டினார்கள். பல நண்பர்களிடம் சொன்ன போது எவரும் கேட்பதாக இல்லை. பின்னர் எப்படி மனை அப்ரூவல்  கிடைக்கும் என்றெல்லாம் சட்டம் பேசினார்கள். 

தற்போது அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயராமன் அவர்களால் லேயவுட் போடப்பட்டு இந்த சீலிங்க் நிலங்கள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது கோவை மாவட்ட பிஜேபி கட்சி தலைவராக இருக்கும் பாலாஜி அவர்களுக்கு இடமுள்ளது என செய்திகள் சொல்கின்றன.

சுமார் 45.82 ஏக்கர் நிலங்கள், இதன் மதிப்பு ரூ.229 கோடி மதிப்புள்ள நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயம்புத்தூர் நிர்வாகம் மீட்டெடுத்து உள்ளது. 

இனி வழக்குகள், மேல்முறையீடுகள் என்றெல்லாம் நடந்தாலும், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உண்மை.

செய்தி கீழே. படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேல்முறையீட்டு வழக்கு எண் : WP.29221/2018

தீர்ப்பு வழங்கிய தேதி : 07.09.2023, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி

விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் : 444, 446, 447/1, 407/1, 407/2, 408,410, 369, 370 மற்றும் 375.

இதன் வார்டு எண் : 26, பிளாக் எண் 1, இதன் டவுன் சர்வே எண்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த வரைபடம் கீழே தருகிறேன். இதைப் போன்ற கிராம வரைபடங்கள், அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.ஆர் - கோவை மாவட்டம் முழுவதுமானதுக்கும், ஹவுசிங்க போர்டு நிலங்கள், சீலிங்க் பூமி விபரங்கள் அனைத்தும் உள்ளது. (லீகல் கட்டணம் தனி, இதர கட்டணங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் தரப்படும்)



விளாங்குறிச்சி கிராம வரைபடத்தில் ஒரு பகுதி.

2016ம் ஆண்டு டிடிசிபி கோவை - 375 சர்வே எண் உள்ள இடத்திற்கு மனை அனுமதி வழங்கி இருக்கிறது. 



மேற்கண்ட உத்தரவுகள் ரெரா இணையத்தளத்திலும் கிடைக்கின்றன. கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெராவில் அப்ரூவல் கொடுக்கப்பட்டு விட்டால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் எனப் பலரும் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். 



படித்து விட்டீர்களா? டிடிசிபி அனுமதி வழங்கும் போதே எனக்கும் நிலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பது  போலத்தான் அனுமதி தருவார்கள். அதே போல ரெரா விதிகளும் அதைத் தான் சொல்கின்றன. 

சரி, இனி தீர்ப்பினைப் படிக்கவும்.









இனி என்ன ஆகும்? மேல்முறையீடு செய்யப்படும். 

அரசுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றுச் சொல்வார்கள். ரூ229 கோடி மதிப்பு நிலங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் இடம் வாங்கியவர்களின் நிலையும், இந்தக் கட்டிடத்திற்கு கடன் அளித்த வங்கியின் பணமும் போயே போச்சு.

அதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகள் இனி வரவுள்ளன. 

ஆகவே நண்பர்களே, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெறுங்கள் இடம் வாங்குவதற்கு முன்பே. தொடர்புக்கு அழைக்கவும் : 960057755

Friday, November 1, 2019

தெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று

நேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.

“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”

“அட.... அப்படியா?” இது நானு.

”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”

“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.

ஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும்? குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

முளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.

எனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.

மூட்டைக்குள் யாராக இருக்கும்? குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ? இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ? அது ஆணா இல்லை பெண்ணா? இல்லை குழந்தையா?

நாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா? மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ? அருவாளால் வெட்டி இருப்பானா? இல்லை கத்தியாக இருக்குமா?  ஆசிட் ஊற்றி எரித்திருப்பார்களோ? சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா? புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா? 

இப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...!” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,

“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா? இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.

”அப்படியா? அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?”

“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.

பதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.

ஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.

இரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

இரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

பிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்னது கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.

தந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா?” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.

விடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன். 

மூட்டைக்குள் யாராக இருந்திருக்கும்?  என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.

”ஙொய்யால....!” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

செவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.