குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 10, 2010

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

நிவேதிதா எல்கேஜி படிக்கிறார். நான்கு வருடங்களாக எங்கும் செல்லாமல் கூடவே இருந்த செல்லமகளை பள்ளியில் அட்மிஷன் செய்து விட்டு வந்தோம்.

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு அவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வேனில் பயணம். மாலை நான்குமணிக்குத்தான் வருவார். அவர் கூடவே ரித்திக் நந்தாவும் செல்கிறார். அட்மிஷன் போட்டு விட்டுவந்த பிறகு மனசுக்கு பாரமாக ஆகிவிட்டது. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.

நிவேதிதாவின் அம்மா என்னிடம் சரியான ரகளை செய்து கொண்டிருந்தார். பிள்ளையை கூடவேவைத்திருக்கப்போகின்றீர்களா என்று வம்பு செய்து கொண்டிருந்தார். எனது சோகத்தைப் பார்த்துசிரித்துக் கொண்டிருந்தார். பிள்ளை படிக்கப் போகிறாள் அதற்கு ஏன் இத்தனை அழிச்சாட்டியம்செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டார். ஆனால் அவர் என்ன சொன்னாலும் மனசுக்கு அதுதெரியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் சோகமாகவே கழிந்தது. திங்கள் அன்று ஆறு மணிக்கு நிவேதிதா எழுந்துகுளித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஜம்மென்று பள்ளிக்கு கிளம்பினார். வேனில் ஏற்றி விட்டு வந்தநிவேதிதாவின் அம்மா என்னிடத்தில் வந்து நின்றார். என்னவென்று அவர் முகத்தை நோக்க, கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது இதுதானோ?