குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 28, 2008

பிளாஸ்டிக் பைகள்

போன் பேசிக்கொண்டிருந்த போது கூச்சலும் சத்தமும் கேட்க என்னவென்று பார்த்தால் மாணவர்களின் அணிவகுப்பு. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று கோஷம் இட்டனர் மாணவர்கள். விழிப்புணர்வு பிரச்சாரமெல்லாம் நன்றாகத்தான் செய்கிறார்கள்.

தவற்றுக்கு ஆரம்பம் எதுவோ அதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றுச் சொன்னால்,

தமிழ்நாடு அரசு குடிகார கடைகளையும் பார்களையும் நடத்துகிறது. குடித்து விட்டு வெளியில் வந்தால் காவல் துறையினை வைத்து கைதும் செய்கிறது. தமிழ் நாட்டின் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பிள்ளையை கிள்ளி விட்டு, அதன் கண்ணில் மிளகாய்ப் பொடியினையும் தூவி விடுவது போல அல்லவா இருக்கிறது.

பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனங்களை ஒழித்துக் கட்டினால் போதும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேவையே இல்லை. பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் கடைகளை நிரந்தரமாக மூடச் செய்துவிடுவோம் என்று அரசாணை வெளியிட்டால் போதும்(!!??)பிளாஸ்டிக் பைகள் காணாமலே போய்விடும். அதை விடுத்து என்னனென்னவோ கூத்துகள் எல்லாம் நடத்துகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் ஹோட்டல் ஹோட்டலாக பிளாஸ்டிக் பைகளுக்காக ரெய்டு நடத்தினார்கள். நான் பார்சல் சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு சென்றேன். இலையில் சாப்பாடு கட்டினார்கள். சாம்பார், ரசமெல்லாம் எதில் கட்டுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிளாஸ்டிக் பையில் கட்டி வந்து கொடுத்தார் சர்வர். ஏனய்யா இது மாத்திரம் பிளாஸ்டிக் இல்லையா என்று கேட்க இதுக்கு மாத்திரம் அனுமதி உண்டென்றார் அவர்.

பொது மக்களா பிளாஸ்டிக் பைகளை வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் கொடுக்கும் கடைகளை அல்லவா இவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். பிரபலமான ஷாப்பிங் மால்களில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டியது தானே. அங்கே சென்றால் கிழித்து விடுவார்கள்.

சரி... கார் கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் ஒட்டக்கூடாது என்றார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று ரோட்டில் பார்த்தால் அல்லவா தெரிகிறது பொது மக்கள் அரசாணைக்கு கொடுக்கும் மரியாதை என்னவென்பதை. சட்டத்தை பாதுக்காக்கும் காவலர்கள் சாலை தோறும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள் ?????

பிரச்சாரமாம், விழிப்புணர்வாம், சட்டமாம். விதியாம். புண்ணாக்கு....

என்னய்யா கூத்து இது.... இப்படியுமா மக்களை முட்டாளாக்குவார்கள். கேவலம்... கேவலம்.
இளிச்சவாயன் எவனாவது கிடைத்தால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதும், ஃபைன் போடுவதும் ... கேவலம் ... கேவலம்...

Wednesday, June 18, 2008

வாஞ்சி நாதன் !

எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்

நரம்புகள் முறுக்கேற
ரத்தம் கொதி கொதிக்க
உடம்பு எரிய எரிய
உணர்ச்சிகள் வெடித்து சிதறுகிறது
உன் தியாகத்தை நினைக்கையில்

மேகம் தனக்காக மழை பெய்வதில்லை.
காற்று தனக்காக வீசுவதில்லை
நீதான்... நீதான்... நீதான்
மேகம்...
நீதான் காற்று...
நீதான் இந்தியாவின் ரத்தம்
நீதான் இந்தியாவின் மூச்சு
நீதான் இறைவன்.....

மணியாச்சி ரயில் நிலையத்தில்
பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை
சுட்ட தமிழன் , இந்தியன்
வாஞ்சி நாதனுக்கு ஒரு சல்யூட்

கஞ்சி குடிக்க சிங்கி அடிக்கனும்

மிகச் சமீபத்தில் கண்டசீலா ரைஸ் ( அரிசியா ?) மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இரு நாட்டவர்களும் அதிகம் சாப்பிடுவதால் தான் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சொல்லி வைக்க, நமது அரசு வாயைத் திறந்து வார்த்தை சொல்லவில்லை. இருக்கட்டும் அமெரிக்காவுடனான உறவு மெயிண்டெய்ன் செய்யபடுகிறது என எண்ணிக் கொள்ளலாம்.

ரோம் நகரில் நடந்த சர்வதேச மா நாட்டில் உணவுப் பஞ்சத்துக்கு காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் உண்டு கொழுப்பது என்று விவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இது தான் காரணமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.

ஆயுத உற்பத்திக்கும், வாங்குவதற்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு அந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. விவசாயம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை எவரும் யோசிப்பதாகவே தெரியவில்லை. பெரும் தொழில்கள், பங்குச் சந்தை வளர்ச்சி என்று யோசிக்கும் வல்லுனர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.கை நிறைய காசு இருந்தாலும் சாப்பிட உணவுப் பொருள் வேண்டுமே என்று சிந்திக்கவே மறந்து விட்டார்கள். விளை நிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. பெரும் முதலீடுகளுக்கு அரசுகள் விலை நிலங்களை பலி இடுகின்றன. விளைவு விவசாய உற்பத்திக்கான நிலம் குறைக்கப்படுகிறது. உற்பத்தி குறைகிறது.பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியும் பெருக வேண்டும். ஆனால் அரசுகள் இதைப் பற்றி கிஞ்சித்துக் கவலைப் படுவதில்லை.வாகனத்துக்கு எரிபொருள் வேண்டி உணவுப் பொருட்கள் எரிபொருட்களாக மாற்றப்படுகின்றன. சாப்பிட வேண்டிய பொருட்கள் வேறு வழியில் பணமாக மாற்றம் செய்யப்படுவது மேலும் உணவுப் பற்றாக்குறையினை ஏற்படுத்தி விடுகின்றன. அமெரிக்காவிலும் , பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் பயோ டீசலுக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏழை நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

சமீபத்தில் பருத்தி நூல் விலையேற்றம் கண்டது. காரணம் அமெரிக்காவின் இறக்குமதி. அவர்கள் நாட்டில் பருத்தி உற்பத்தியினை குறைத்து விட்டார்கள். இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் ஜவுளித் தொழிலுக்கு நூல் தட்டுப்பாடு ஏற்படுவதால் விலையேற்றம் தானாகவே வந்து விடுகிறது.

இந்திய அரசு ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டது. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். ஆகவே முற்றிலுமாக உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு 200% ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். பருத்திக்கும் 500% ஏற்றுமதி வரி விதித்தால் ஏற்றுமதி குறையும். ஏற்றுமதி செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. நம் விலை இவ்வளவு என்று சொன்னால் வேண்டுபவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்.

உணவுப் பற்றாக்குறையினை சமாளிக்க உடனடியாக உணவுப் பொருள் மிக அதிகமான ஏற்றுமதிக்கான வரி விதிக்க வேண்டும். விவசாய நிலங்களை பண்படுத்தி விவசாய உற்பத்திக்கு ஊக்கமும், மானியங்களும் வழங்க வேண்டும். விவசாயிக்கு அதிகப்படியான சலுகைகளை தர வேண்டும். அவனுக்கு உயர்ந்த கவுரவம் வழங்கப்பட வேண்டும். ஆட்டம் ஆடி கூத்து கட்டும் நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை விட உலகத்துக்கு உணவு தரும் விவசாயி மேலானவன் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்..

இல்லையெனில் கஞ்சி குடிக்க சிங்கி அடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

Saturday, June 14, 2008

சாரு நிவேதிதாவிடம் மாட்டிக்கொண்டேன்....

நேற்று இரவு சாருவிடம் இருந்து தொலைபேசி வந்த போது சரியான ஜூரம். கட்டுரை அனுப்பி இருக்கிறேன். நேரம் இருக்கும் போது அப்டேட் செய்யுங்கள் என்று சொன்னார். சார் ஜூரமாக இருக்கிறது. காலையில் அப்டேட் செய்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு உறங்கினேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்து அம்முவுக்கு பால் காய்ச்சி கொடுத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். ( அம்மணி ஊருக்குப் போயிருக்கிறார்கள் ) ஏழு மணிக்கு ரித்திக், அம்முவுக்கு இட்லி ஊட்டி விட்டு மருந்துகள் கொடுத்து விட்டு இணையத்தை பார்த்தால் சாருவிடம் இருந்து வந்த கட்டுரையில் என்னைப் பற்றி இரண்டு வரிகள். படித்ததும் மண்டை காய்ந்து விட்டது. மேலதிக விபரத்துக்கு....

www.charuonline.com

ஆனாலும் சுவாரஸியமாகத்தான் இருக்கிறது.

Thursday, June 12, 2008

ஆசியன் நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணெய் வள நாடுகளும் அதன் வியாபார தொடர்பு நிறுவனங்களும் இணைந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கவும், வளர விடாமலும் செய்ய சிண்டிகேட் அமைத்து குருடு ஆயிலின் விலையினை அதிகப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

கேஸ்பிராமின் தலைவர் ஒருவர் தி ஹிண்டுவில் குருடு ஆயில் 250 அமெரிக்க டாலரை எட்டும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார். இந்த நிலை வந்தால் உலகில் என்ன நடக்கும் ? மக்கள் என்ன ஆவார்கள் ? ஆளும் அரசுகள் என்ன செய்யும்... ? விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதற்கு என்னதான் தீர்வு ?

எண்ணை வள நாடுகளில் உணவுப் பொருட்கள் விளைவிக்க இயலாது. ஆதலால் அந்த நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கான விலையினை 100 மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அரசாங்கமே உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்று மிக அதிக விலைக்கு விற்றால் தான் எண்ணை வள நாடுகளின் ஆட்டம் குறையும்.

அதுவுமின்றி, ஆசிய நாடுகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்க்கும் அவ்வாறே செய்தால் ஆடிப் போய் விடுவார்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள் : ஆசிய நாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட கரன்சி முறையினை ஏற்படுத்தினால் இப்படிப்பட்ட விளைவுகளை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஐரோப்பாவுக்கு என்று ஈரோ இருப்பது போல ஆசிய நாடுகளுக்கு என்று தனிப்பட்ட கரன்சி உருவாக்கினால் தான் ஆசிய நாடுகள் வளர முடியும்.

ஆசிய நாடுகளின் தலைவர்களும், நிதியமைச்சர்களும் ஆவன செய்வார்களா ?

கணவன் மனைவி உறவு

கணவனின் மனத்தை கொள்ளை அடிப்பது எப்படி?
















மனைவியின் மனத்தைக் கொள்ளை அடிப்பது எப்படி ?
















புதுச்சேரியிலிருக்கும் எனது உறவுக்காரப் பெண் அனுப்பிய போட்டோவைப் பார்த்ததும் எனக்கு தோன்றியது. வாழ்க்கை என்பது கொடுத்து பெறுவது. அது அன்பானாலும் சரி... வேறு எதுவானாலும் சரி.


ஆனால் இவ்வுலகம் இப்போது நடைபோடும் பாதை ஃபேண்டஸி வே.. எதார்த்தம் சிறிதும் வாழ்க்கையில் எதிர்படாமல் வாழ நினைக்கிறார்கள். எதார்த்தம் கண் முன்னே நிற்கும் போது ஏற்றுக்கொள்ள இயலாமல் செய்வதறியாமல் விழித்து நிற்கும் பைத்தியக்காரனை போல நிற்கிறார்கள் மனிதர்கள்.

Wednesday, June 11, 2008

பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம்

மத்திய அரசு சிலபஸ் சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்பில் நியூ லேர்னிங் டு கம்யூனிகேட் என்ற பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இருப்பதாக செய்தி படித்தேன். அதனால் உண்டான சர்ச்சைக்கு கேள்வி ஒன்றே ஒன்று தான். ஏன் ரஜினி பற்றி படிக்கக் கூடாது. ரஜினி ஒரு சாதனையாளர் தான். சினிமாவில் நடித்தவர்கள் தான் தமிழ் நாட்டினை ஆண்டிருக்கிறார்கள். ஆண்டும் வருகிறார்கள். அமெரிக்காவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இதிலென்ன தவறு இருக்கிறது. ரஜினி ஒரு சரித்திர நாயகன் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது ?

வேலூர் மாவட்ட டி.ஆர்.ஓ சுகந்தி

வேலூர் மாவட்டத்தின் எட்டு தாலுக்காக்களில் டி.ஆர்.ஓ சுகந்திக்கு எதிராக அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒட்டு மொத்தமாக சிக் லீவ் என்று போராட்டம் நடத்தினார்கள். காரணம் என்னவென்றால் டி.ஆர்.ஓ, சக ஊழியர்களை அசிங்கமாகப் பேசுவது, மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தான் இந்தப் போராட்டம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிலுப்பன் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இவரே , டி.ஆர்.ஓ மிகவும் நல்லவர், அரசின் சலுகைகளை உரியவர்களிடம் சேர்க்கும் நேர்மையாளர், சிபாரிசுகளுக்கு செவிசாய்க்காத துணிச்சல் காரர் என்று நற்சாட்சி பத்திரமும் வாசிக்கிறார்.

வேலூரில் உள்ள விவசாய சங்கங்கள் டி.ஆர்.ஓவுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மெமோ கொடுத்து விட்டார் என்ற வதந்திக்காக போராட முடிவெடுத்ததாம். இப்படி மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் டி.ஆர்.ஓவுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ( தகவல் உதவி )

Tuesday, June 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008

ரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

பள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.

ரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..

என் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா ? சொல்கிறேன் கேள்.

செருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.

ஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்கு?மக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.

குருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன ? போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.

அடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.

தா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.

இந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.

இதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....

இப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா...

Monday, June 9, 2008

மேகமும் மறைக்க முடியுமா சூரியனை ?

சாரு நிவேதிதா மூலம் அறிமுகமானவர் ராஜநாயஹம். அவரைப் பற்றி லியர் மன்னன் என்ற கட்டுரையினை www.charuonline.com ல் எழுதினார் சாரு. எனது MARK ADMAN என்ற அட்வர்டைசிங் கம்பெனியின் வேலைக்காக ராஜ நாயஹத்தை அனுகலாம் என்று கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் பேச்சு என்னை ஏதோ ஒரு வகையினில் ஈர்த்தது.

சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மனதினுள். நேற்று அதற்கான நேரம் கிடைக்க, எனது நண்பருடைய மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருப்பூருக்குப் பயணம் செய்தேன். கையில் ஹெச்பியின் டச் ஸ்கீரின் லேப்டாப். டாட்டா இண்டிகாமின் பிளக் அண்ட் சர்ப் இணைய கனெக்‌ஷன். பென் டிரைவுடன் அவரை சந்தித்தேன். ஆனால் என் செல்போன் நோக்கியா 1100. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருப்பூர் சென்று சேரும் வரையில் ஐந்து தடவை போன் செய்து விட்டார். அவரது பையன் கீர்த்தி எதிரில் வந்து வழிகாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜ நாயஹம் காரில் இருந்து முதன் முதலாய் பார்த்தேன். அசல் ஹீரோ தான். வயசு என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. அவரின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் – என்னை ஒரு நிமிடம் அவரின் மேல் பொறாமை கொள்ளச் செய்து விட்டது.

சரளமான பேச்சு. புதிய விஷயங்களை கண்டால் ஆச்சரியப்படுவது. குடும்ப விஷயம் மற்றும் இன்ன பிற பேசினோம். நான் எதற்கு அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை மறந்து விட்டேன். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாடு தயார் சாப்பிடலாம் என்றார்கள் ராஜ நாயஹத்தின் துணைவியார்.

அதற்கு முன்பு லேப்டாப்பை ஆன் செய்து அவரையும் என்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் ஒன்றினையும் எடுத்துக் கொண்டேன்.
(நானும் தமிழன் தான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருவது எனக்கு தெரிகிறது. என்ன செய்ய ? பழக்க தோஷம் விடுமாட்டேன் என்கிறது). லேப்டாப்பை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம் தான். சின்னக் குழந்தை போல ஆச்சரியம் அடைந்தார்

தமிழில் பிளாக் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். யாகூவில் மட்டும் பிளாக் இருப்பதாகவும் சொன்னார். நான் தமிழில் பிளாக் தயார் செய்து தருகிறேன் என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டார். இதென்ன பிரமாதம் என்று சொல்லியபடி சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கான பிளாக்கை உருவாக்கினேன். www.rprajanayahem.blogspot.com மனிதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு குதூகலம் முகத்தில். ஏதேதோ கேள்விகள் கேட்டார். சொன்னேன். பிறகு சாப்பாடு.

மட்டன் வறுவல் – எங்க வீட்டு அம்மனி செய்வதைப் போல வெகு டேஸ்ட். சாம்பார் ( அவரைக்காய் ), ரசம் என்ன ஒரு சுவை.. வாழை இலையில் சூடான சாதத்துடன் அப்படி ஒரு வித்தியாசமான கலவையுடன் நிறைவான சாப்பாடு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன் என்பதால் அளவோடு நிறுத்திக் கொண்டேன்.

நானோ பிசினஸ் பேசுபவன். என் நேரமும் அதே சிந்தனையாக இருப்பவன். அவரோ இலக்கியவாதி. அவரின் மூச்சே இலக்கியமாகத்தான் இருக்கும். மிக நன்றாக பாட்டுப் பாடுவார் என்று சொன்னார். தினமலரில் அவரின் பேட்டி பார்த்தேன். கி.ராஜநாரயணன், அசோகமித்திரன், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலராலும் பாராட்டப்பட்டவர். வெளி நாட்டு இலக்கியத்தில் அவரின் அறிவுத்திறன் உச்சம். நானோ அவரின் உலகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். இருப்பினும் எனக்கேற்றவாறு பேசினார் அவர்.

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்று அவரைச் சந்தித்த பின்புதான் அறிந்து கொண்டேன்.

அவரைக் காணமல் போக வைக்க பிரமப் பிரயத்தனங்கள் நடக்கின்றன என்று அவரின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டேன். இலக்கிய உலகில் மிக முக்கியமான் இடத்தில் இருக்கும் அவர் சரியான ஆதரவு இன்றி வாடுபவர். இன்றைய உலகில் இணையம் இன்றி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அதன் பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இலக்கியவாதி அவர்.

பூப்போல பாதுகாக்கணும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் எழுத்துக்களை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்று சேர்க்க வேண்டுமென்பது என் ஆவல். முயற்சிகள் ஆரம்பித்து விட்டன. விரைவில் புதுப் பொலிவுடன் RPராஜநாயஹத்தின் எழுத்துக்கள் இணைய உலகில் பைனரி எண்களாய் டிஜிட்டல் வடிவத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான தடம் மிக அழுத்தமாகப் பதிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

Thursday, June 5, 2008

ஏமாளி மக்களா நாம் ?

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு ஓட்டு பெறுவதற்காக விலையேற்றத்தை தள்ளி வைத்து விட்டு, கர்நாடகத்தில் தோற்றபின் அதிரடியாக விலையேற்றம் செய்கிறது. யாருக்கு இப்போ நஷ்டம்? ஒரு சாதாரண ஓரளவு படித்த குடும்பப் பெண் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவை சரி செய்வாள். அது கூட தெரியாமல் சரியான நேரத்தில் விலையேற்றாம் செய்ய மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. பலன்... கடுமையான விலையேற்றம். அடுத்த ஆட்சி பிஜேபி தான் என்று காங்கிரஸ்காரர்கள் கட்டியம் செய்து அதன் படி நடக்கின்றார்கள்.. வரட்டும் .. பிஜேபி.... அவர்களாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...