குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, June 12, 2008

ஆசியன் நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணெய் வள நாடுகளும் அதன் வியாபார தொடர்பு நிறுவனங்களும் இணைந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கவும், வளர விடாமலும் செய்ய சிண்டிகேட் அமைத்து குருடு ஆயிலின் விலையினை அதிகப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

கேஸ்பிராமின் தலைவர் ஒருவர் தி ஹிண்டுவில் குருடு ஆயில் 250 அமெரிக்க டாலரை எட்டும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார். இந்த நிலை வந்தால் உலகில் என்ன நடக்கும் ? மக்கள் என்ன ஆவார்கள் ? ஆளும் அரசுகள் என்ன செய்யும்... ? விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதற்கு என்னதான் தீர்வு ?

எண்ணை வள நாடுகளில் உணவுப் பொருட்கள் விளைவிக்க இயலாது. ஆதலால் அந்த நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கான விலையினை 100 மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அரசாங்கமே உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்று மிக அதிக விலைக்கு விற்றால் தான் எண்ணை வள நாடுகளின் ஆட்டம் குறையும்.

அதுவுமின்றி, ஆசிய நாடுகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்க்கும் அவ்வாறே செய்தால் ஆடிப் போய் விடுவார்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள் : ஆசிய நாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட கரன்சி முறையினை ஏற்படுத்தினால் இப்படிப்பட்ட விளைவுகளை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஐரோப்பாவுக்கு என்று ஈரோ இருப்பது போல ஆசிய நாடுகளுக்கு என்று தனிப்பட்ட கரன்சி உருவாக்கினால் தான் ஆசிய நாடுகள் வளர முடியும்.

ஆசிய நாடுகளின் தலைவர்களும், நிதியமைச்சர்களும் ஆவன செய்வார்களா ?