குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 28, 2008

பிளாஸ்டிக் பைகள்

போன் பேசிக்கொண்டிருந்த போது கூச்சலும் சத்தமும் கேட்க என்னவென்று பார்த்தால் மாணவர்களின் அணிவகுப்பு. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று கோஷம் இட்டனர் மாணவர்கள். விழிப்புணர்வு பிரச்சாரமெல்லாம் நன்றாகத்தான் செய்கிறார்கள்.

தவற்றுக்கு ஆரம்பம் எதுவோ அதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றுச் சொன்னால்,

தமிழ்நாடு அரசு குடிகார கடைகளையும் பார்களையும் நடத்துகிறது. குடித்து விட்டு வெளியில் வந்தால் காவல் துறையினை வைத்து கைதும் செய்கிறது. தமிழ் நாட்டின் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பிள்ளையை கிள்ளி விட்டு, அதன் கண்ணில் மிளகாய்ப் பொடியினையும் தூவி விடுவது போல அல்லவா இருக்கிறது.

பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனங்களை ஒழித்துக் கட்டினால் போதும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேவையே இல்லை. பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் கடைகளை நிரந்தரமாக மூடச் செய்துவிடுவோம் என்று அரசாணை வெளியிட்டால் போதும்(!!??)பிளாஸ்டிக் பைகள் காணாமலே போய்விடும். அதை விடுத்து என்னனென்னவோ கூத்துகள் எல்லாம் நடத்துகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் ஹோட்டல் ஹோட்டலாக பிளாஸ்டிக் பைகளுக்காக ரெய்டு நடத்தினார்கள். நான் பார்சல் சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு சென்றேன். இலையில் சாப்பாடு கட்டினார்கள். சாம்பார், ரசமெல்லாம் எதில் கட்டுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிளாஸ்டிக் பையில் கட்டி வந்து கொடுத்தார் சர்வர். ஏனய்யா இது மாத்திரம் பிளாஸ்டிக் இல்லையா என்று கேட்க இதுக்கு மாத்திரம் அனுமதி உண்டென்றார் அவர்.

பொது மக்களா பிளாஸ்டிக் பைகளை வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் கொடுக்கும் கடைகளை அல்லவா இவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். பிரபலமான ஷாப்பிங் மால்களில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டியது தானே. அங்கே சென்றால் கிழித்து விடுவார்கள்.

சரி... கார் கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் ஒட்டக்கூடாது என்றார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று ரோட்டில் பார்த்தால் அல்லவா தெரிகிறது பொது மக்கள் அரசாணைக்கு கொடுக்கும் மரியாதை என்னவென்பதை. சட்டத்தை பாதுக்காக்கும் காவலர்கள் சாலை தோறும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள் ?????

பிரச்சாரமாம், விழிப்புணர்வாம், சட்டமாம். விதியாம். புண்ணாக்கு....

என்னய்யா கூத்து இது.... இப்படியுமா மக்களை முட்டாளாக்குவார்கள். கேவலம்... கேவலம்.
இளிச்சவாயன் எவனாவது கிடைத்தால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதும், ஃபைன் போடுவதும் ... கேவலம் ... கேவலம்...