குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 11, 2008

வேலூர் மாவட்ட டி.ஆர்.ஓ சுகந்தி

வேலூர் மாவட்டத்தின் எட்டு தாலுக்காக்களில் டி.ஆர்.ஓ சுகந்திக்கு எதிராக அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒட்டு மொத்தமாக சிக் லீவ் என்று போராட்டம் நடத்தினார்கள். காரணம் என்னவென்றால் டி.ஆர்.ஓ, சக ஊழியர்களை அசிங்கமாகப் பேசுவது, மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தான் இந்தப் போராட்டம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிலுப்பன் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இவரே , டி.ஆர்.ஓ மிகவும் நல்லவர், அரசின் சலுகைகளை உரியவர்களிடம் சேர்க்கும் நேர்மையாளர், சிபாரிசுகளுக்கு செவிசாய்க்காத துணிச்சல் காரர் என்று நற்சாட்சி பத்திரமும் வாசிக்கிறார்.

வேலூரில் உள்ள விவசாய சங்கங்கள் டி.ஆர்.ஓவுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மெமோ கொடுத்து விட்டார் என்ற வதந்திக்காக போராட முடிவெடுத்ததாம். இப்படி மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் டி.ஆர்.ஓவுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ( தகவல் உதவி )