குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 22, 2009

நரலீலைகள்

சாதனையென்ற சத்தம்

சாதனை என்ற சொல்லை மனிதர்கள் அனைவரும் கேட்டிருப்பார்கள். சாதனையின் பால் ஈர்க்கப்பட்ட மனிதன் மதி மயங்கி, மனம் குறுகி, இயக்கம்மாறி, வழி தெரியாமல், இது தான் வழி, இது தான் சாதனை என்றோடிக் களைத்தபிறகு திரும்பிப் பார்த்தானென்றால் அவன் முன்னே வெட்டவெளியாய் கடந்துபோன காலம் நகைக்கும். விரக்தி நிலையில் மனம் வெதும்பி, ஆயாசமாய், அனைத்தும் முடிந்து போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்துகுழப்பமுறுவான்.

அந்தச் சொல்லின் சத்தம் மூளையின் ஏதோ ஒரு நரம்புக்குள் சிக்கி உடம்பெங்கும்அதிர்வுகளை கிளப்பிக் கொண்டேயிருக்கும். ஒலியின் வேகம் தாங்காமல் மனம்அதனோடு கூட ஓடி ஓடி சத்தமடங்கும் வேளையிலே அவனைச் சுற்றும் வெளிப்பேய்களிடமிருந்து தப்பிக்க இன்னும் வேகமாக ஓடுவான். ஓடுவான்... வாழ்க்கையின் எல்லைக்கே. ஆம் எல்லைக்கே ஓடி முடிப்பான் சாதனையின்ஓட்டத்தை.

என்ன தான் வாழ்க்கை, என்ன இருக்கிறது வாழ்வில் என்று புரியாமல், சாரம்புரியாமல், சூட்சுமம் தெரியாமல், எங்கெங்கோ ஓடி, ஓடிக் களைத்து, இளைப்பாறவும் முடியாமல் உயிரை விடுவான்.

அந்த மனித வாழ்க்கையின் ஓட்டங்களில் பங்குபெற்ற பீமாவின் ஓட்டத்தையும், அவனோடு கூட ஓடி வந்த சில ஓட்டக்காரர்களின் ஓட்டத்தையும் நரலீலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கம் போல உங்களின் அன்பான உள்ளத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்துஅருள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.

Wednesday, December 9, 2009

கொடூர மனம் படைத்த மருத்துவர்

ஏம்மா, உனக்கு அறிவு இருக்கா? படிச்ச ஆள் தானே நீ? உன் புருஷனுக்கு சொல்ல வேண்டாம்? உனக்கு என்ன அவ்வளவு அவசரம்? என்று கேட்க, எதிரே உட்கார்ந்திருந்த பெண் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

இப்போது பாரு, குத்துது குடையுதுன்னு வந்து நிற்கிறாய் என்று மேலும் அர்ச்சித்திருக்கிறார் அந்த மருத்துவர்.

ஊசியைப் போட்டுக் கொண்டு புருஷன் வீட்டுக்குப் போகாமல் எங்கோ சென்று விட்டாள் அந்தப் பெண்.

வீட்டில் தேடோ தேடென்று தேடியிருக்கின்றார்கள். நிறைமாதக் கர்ப்பிணி பெண் வேறு. காய்ச்சல் அடித்ததற்காக ஊசி போட்டுக்கொள்ள டாக்டரைப் பார்க்க வந்தவள் வீடு திரும்பவில்லை என்றதும் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்படி இருக்கும்? இரண்டு வயதுக் குழந்தை வேறு இருக்கிறது. அம்மாவைக் காணாமல் கதறி இருக்கிறது.

என்ன பிரச்சினை? ஏன் திடீரென்று காணவில்லை என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உறவினர்கள் வீடுகளிலெல்லாம் தேடியிருக்கின்றார்கள். கிடைக்க வில்லை. மறு நாள் காலையில் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இப்பெண்ணை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதாக சொல்ல, அடித்துப் பிடித்துக் கொண்டு அவளைப் பார்க்க பறந்தோடியது அக்குடும்பம்.

என்னவென்று விசாரித்ததில், டாக்டர் இந்தப் பெண்ணைக் கண்டமேனிக்கு திட்டியிருக்கிறார் என்பது தெரிய வந்தது. இரண்டு வருடம் முடிவதற்குள் அதற்குள் எதுக்கு அடுத்த குழந்தை உண்டானாய் என்றெல்லாம் பேசி இருக்கிறார். அதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயல, எதேச்சையாக அவளைப் பார்த்த உறவினர் பார்த்து தடுத்திருக்கிறார். இல்லையென்றால் குழந்தையோடு அப்பெண் செத்துப் போய் இருப்பாள். மருத்துவருக்கு வேலை நோய்க்கு மருந்து கொடுப்பது. பிணியாளரிடம் பரிவோடு பேசுவது. ஆனால் இந்த மருத்துவர் செய்த வேலை இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது? அயோக்கியத்தனம், அக்கிரமச் செயல். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அயோக்கியத்திருடன். ஏன் இவரைத் திருடன் என்று சொல்கிறேன்? காரணம் இருக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு வந்து பேஷண்டுகளைப் பார்ப்பதும், மாலை ஆறு மணிக்கு மேல் வந்து இரவு பத்து மணி வரை பிறருக்கு மருத்துவம் செய்து வருகிறார். மேலும் அரசு மருத்துவமனையிலிருந்து மருந்துகளைக் கொண்டு வந்து கொள்ளை விலைக்கு பிறருக்கு ஊசியும் போடுகிறார் என்றெல்லாம் இவரைப் பற்றிச் சொல்கின்றார்கள். அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியிலும் சம்பாதிக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஏழைகளுக்கு மருத்துவமும் பார்ப்பது இல்லைபோலும். இந்த மருத்துவர் திருடன் தானே? நீங்களே சொல்லுங்கள்.

பிறருக்கு துன்பமிழைப்பதும், பிறரின் மனத்தை காயப்படுத்துவதும் சில அரசாங்க மருத்துவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. சட்டம் தண்டிக்காது என்பது தெரிந்த ஒன்று. ஆனால் தெய்வம் தண்டிக்கும். தண்டித்தே ஆகும்.

தெய்வம் நின்று கொல்லாது. உடனே கொல்கிறது. இவருக்கு தெய்வத்தால் கொடுக்கப்படும் தண்டனை எனக்கு தெரிய வந்தால் எழுதுவேன்.

ஆடும் வரை ஆடட்டும். ஆண்டவன் அடக்கியே தீருவான்.

Sunday, December 6, 2009

Manashosting, Consumer Court, Karnataka Chief Minister

மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். ஏகப்பட்ட அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.

கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.

மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையத்தில் ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.

விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.

அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.

ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு என்ன சொல்லப் போகிறது சட்டம்? எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் தரப்போகும் விடை தான் என்ன? தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம். கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?

என்றைக்கு சட்டம் இதைப் போன்ற சட்டத்தின் கொடுமைகளை நீக்குகிறதோ அன்று தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டது. அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.

Wednesday, December 2, 2009

ஏனோ மனிதன் பிறந்து விட்டான்

பனித்திரை என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் சொல்வது அனேகம். சமூகம் இந்தளவுக்கு கேடு கெட்டதாய் ஆக ஏதோ சிலரின் தன்னலப் போக்குதான் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

Thursday, November 26, 2009

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை முன்வைத்து !

ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் சமீபத்தில் படித்தேன். அந்த நாவலில் ஒரு கேரக்டர், அதன் பெயர் முத்தம்மை. அவலட்சனமானவள். முத்தமாளுக்கு வேலை பிச்சை எடுப்பது. அவளுக்கு பிள்ளை பிறக்க வைத்து, அந்தப் பிள்ளைகளை பெற்று பிச்சைக்கு விடுவதுடன், அந்தப் பிள்ளைகளை வேறு ஆட்களுக்கு விற்றும் விடுவார் பண்டாரம்.

முத்தம்மையோடு அகோரமானவர்களை இணைய விடுவது (அரேஞ்டு மேரேஜ்ஜுகள் நினைவுக்கு வருகிறது) அதன் காரணமாய் பிறக்கும் உருப்படிகளை வைத்துப் பிச்சை எடுப்பது போன்ற சம்பவங்களை நாவலில் எழுதி இருப்பார்.

நாவலின் கடைசியில் முத்தம்மையோடு இணைய விடுவது அவள் பெற்ற பிள்ளையை. படிக்கவே படுபயங்கரமாக இருக்கும் அந்த நாவல் எனக்குள் உருவாக்கிய கேள்விகள் பலப்பல.
அதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே.

நாமும் இப்படித்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து முதலாளித்துவ பகாசுர கம்பெனிகளிடம் வேலை என்ற பெயரில் அடிமைகளாய் நம் பிள்ளைகளை விற்கின்றோமா?

நாம் தான் முத்தம்மாளா?


ஜெயமோகன், ஏழாம் உலகம்

காட்டுமிராண்டிகளின் கூட்டம்




ஜூவியில் வெளியான கட்டுரையைப் படித்ததும் ஆண்களின் உருவில் நடமாடும் அயோக்கியர்களை எண்ணி மனம் பேதலித்தே விட்டது.

அந்தக் கட்டுரை கீழே ( நன்றி ஜூவி)



வாய்பேச முடியாத வெகுளிப் பெண் ஒருவரை, எந்த அயோக்கியனோ தொடர்ந்து சீரழித்து கர்ப்பிணியாக்க... கேட்பாரின்றித் தொடர்ந்த இந்த கொடுமையின் விளைவால் இதுவரை நான்கு குழந்தை களைப் பெற்றெடுத்திருக்கிறாள், அந்த பரிதாபப் பெண்! எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல்!) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது! அந்த நாவல்போல, குழந்தைகள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு ஒரே ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி யில் இருந்து பட்டுக்கோட்டை பிரதான சாலையில் இருக்கிறது பாண்டிசத்திரம். அங்கிருந்து கிழக்கில் இரண்டு கிலோமீட்டர்

தூரம் சென்றால், செம்பியமங்கலம் கிராமம்... இங்குதான் தற்போது நான்காவது குழந்தை யைப் பெற்றிருக்கிறார் சித்ரா என்ற அந்த பேச இயலாத பெண். நாம் அங்கு சென்று விஷயத்தை விசாரித்ததுமே, விஜயா என்பவரின் வீட்டைக் காட்டினார்கள் கிராமத்தினர்.

அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டில் ஒரு ஓரமாக சாக்கு விரித்து அதில் சித்ராவை படுக்க வைத் திருந்தனர். கந்தல் துணியாக தாய் சித்ரா சுருண்டிருக்க, ரோஜா குவியலாக ஆண் குழந்தை ஒன்று தாயருகில் கண்மூடித் துயில் கொண்டிருந்தது!

அடைக்கலம் கொடுத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஊரு நெடும்பலம். அங்கே ஒத்த தெருன்னும் சொல்வாங்க. உண்மையான முகவரி தெரியாது. எங்க ஊரு வீடுகளுக்கு முன்னாடி வந்து நின்னு சோறு கேக்கும். இரக்கப்பட்டு சோறு தண்ணி குடுப்போம். அப்பப்ப இது கர்ப்பம் ஆயிடும். யாரு காரணம்னு கேட்டா, 'அண்ணன், மாமா'ன்னு பொதுவா ஏதேதோ சொல்லும்.

இதுக்கு முந்தி இப்படி இதுக்கு போன இடத்துல ரோடு, வாசல்னு மூணு குழந்தை பிறந்திருக்கு. அப்பல்லாம் பக்கத்துல இருக்கவங்க, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி கொஞ்ச நாள் அவங்க வீட்லலேயே வெச்சிருந்துட்டு, யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா தூக்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. இப்படித்தான் அந்த மூணு குழந்தைகளையும் தோப்புத்துறை, பஞ்சநதிக்குளம், தம்பிக்கோட்டைனு மூணு ஊர்ல இருந்து வந்த குழந்தை இல்லாதவங்க தூக்கிட்டுப் போயிட்டாங்க.

கடந்த பதினேழாம் தேதி ராத்திரி, வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்க வீட்டு முன்னாடி வந்துசோத்துக்கு நின்னுச்சு. நானும் சோறு குடுத்தேன். அத சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போன வுடனே அலறல் சத்தம். பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா... வெளியிலயே பிரசவம்! உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க..!'' என்றார்.

ராஜாத்தி என்பவர் நம்மிடம், ''தெனமும் சாப்பாடு கேட்டு எங்கூருக்கு வர்ற சித்ரா, இடையில சிலநாள் வரமாட்டா. அந்த மாதிரி சமயங்களில்தான் யாரோ பாவிங்க இவளை எங்கேயாச்சும் கொண்டுபோய் வச்சிருந்து தப்பா நடக்கறாங்க போலிருக்கு. கேக்கவும் பாக்கவும் ஆளு இல்ல. அவளுக்கு பேச வேற வராதுங் கறதை எல்லாம் பயன்படுத்திதான் அந்த மிருகங்கள் அவளை இந்த நெலைமைக்கு ஆளாக்கி இருக் கணும். நீங்களாவது இந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு, ஒண்ணா சேர்த்து வைங்க. அப்படி இல்லைன்னா இந்தப் பொண்ணையாச்சும் ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்க!'' என்றார்.

நாம் வந்திருக்கும் தகவல் அறிந்த செம்பியமங்கலம் கிராம மக்கள் அங்கு கூடியதோடு இதே கோரிக் கையைத்தான் நம்முன் வைத்தனர்.

இதற்கிடையில், அருகிலிருக்கும் எடையூரை சேர்ந்த மாதவன் - தவமணி தம்பதி, 'பிறந்திருக்கும் இந்தக் குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்...' என்று கேட்டு, அங்கு வந்து சேர்ந்தனர். நம்மிடம் அவர்கள், ''எங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சி. குழந்தை இல்ல. எங்ககிட்ட இந்தக் குழந்தையைக் குடுத்தா, எங்க புள்ளையாவே வளர்ப்போம்...'' என்றனர் ஊர்க்காரர்களிடம்.

நாம் சித்ராவிடம் அவருடைய குழந்தை யைக் காட்டி,''இதுக்கு அப்பா யாரு?'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா?'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடித்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்?) என்றார். குழந்தையை பக்குவமாகத் தூக்கக்கூட சித்ராவுக்குத் தெரியவில்லை. தவமணிதான் குழந்தையைத் தூக்கித் தாயிடம் கொடுத்துப் பால் கொடுக்க வைத்தார்.

நாம் அன்று மாலை 6 மணிக்கு அங்கிருந்தபடியே திருவாரூர் மாவட்ட கலெக்டர் எம்.சந்திரசேகரனை தொடர்புகொண்டு இந்த அநியாயத்தைத் தவிப்போடு சொன்னோம். பதறிப்போன அவர், ''முதலில் தாயையும் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுவோம். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நாளை காலை அதிகாரிகளை அங்கு வரச்சொல்கிறேன்!'' என்றார் நிஜமான அக்கறையோடு.

மறுநாள் காலை நாம் மறுபடி அங்கு சென்றோம். திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம், செம்பியமங்கலத்தில் காத்திருந்து, 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்ற, குழந்தையைத் தத்தெடுக்க வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதி, ''நாங்களும் வந்திருந்து பார்த்துக் கொள்கிறோம்...'' எனக் குழந்தையை கையிலேந்திக் கொண்டனர். இதற்குள் கலெக்டர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேசிவிட... நாமும் திருவாரூர் சென்றோம். கூடவே திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரமும் வந்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாயையும் சேயையும் பரிசோதித்துவிட்டு அங்கேயே ஒரு வார்டில் அனுமதித்தனர். நாம் மீண்டும் கலெக்டரிடம் தொடர்பு கொண்டோம். ''மருத்துவர்கள் சொல்லும்வரை சித்ரா அங்கேயே இருக்கட்டும். பிறகு அந்தப் பெண்ணை காட்டூர் அருகிலிருக்கும் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அங்கு அவரை சேர்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு, அந்தப் பெண்ணைக் கேட்டு, அந்த குழந்தைக்கு அப்பா யார் எனக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கிறேன்....'' என நம்மிடம் உறுதியளித்தார்.

கலெக்டர் சந்திரசேகரனுக்கும், தாசில்தார் சிதம்பரத்துக்கும், தத்து எடுக்கத் தயாராக வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதிக்கும், யாரோ ஒரு பெண்ணை அநாதை என நினைக்காமல் தன் வீட்டுப் பெண்போல் பராமரித்து வைத்திருந்த விஜயாவுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த செம்பியமங்கலம் கிராம மக்களுக்கும் நமது சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

'ஏழாம் உலகம் என்பது வேதாளங்களுக்குச் சொந்தம்' என்று தன் நாவலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். ஆதரவில்லாத ஒரு பெண்ணிடம் தன் காமவெறியைத் தீர்த்துக் கொள்ளும் அந்த கோழை வேதாளம் என்றைக்குச் சிக்கினாலும் சரி... சட்டம் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு திரும்பினோம்!


என்ன செய்தாலும் திருந்தாத ஜென்மம் மானிடர் ஜென்மம்.

Saturday, August 8, 2009

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளும் தீர்வும்

பன்றிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பொது மக்களிடமும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இப்பதிவு.

1) தொடர்ந்து மூக்கில் சளி வருதல்
2) விடாமல் தொடர்ந்து காய்ச்சல் இருத்தல்
3) தொண்டையில் வலி இருத்தல்
4) தொடர்ந்து வயிற்றுக் கழிச்சல்
5) கைகால்களில் வலி இருத்தல்

மேற்படி தொந்தரவுகள் காணப்பட்டால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லவும். மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் இருப்பதாகவும், ஸ்பெஷல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் என்னிடம் போனில் பேசிய அரசு மருத்துவர் சொன்னார்.

இந்தியாவெங்கும் இருக்கும் அரசு மருத்துவ மனைகளும், அதன் தொலைபேசி எண்களையும் கீழே தந்திருக்கிறேன்.

Saturday, August 1, 2009

பெண்கள் - உள்ளமும் அழகும்

டெலிமார்க்கெட்டிங் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்வது போன்ற விபரங்களுக்காக ஒரு மொபைல் கம்பெனியின் நோடல் ஆஃபீசருடன் பேச வேண்டிய சூழ் நிலை. அந்த நோடல் ஆஃபீசர் ஒரு பெண். முதலில் நானே பதிவு செய்த விபரம் தவறு என்பதால் கேன்ஷல் செய்து விட்டது நமது அரசாங்கம். பின்னர் மறுபடியும் நோடல் ஆஃபீசரே புதிதாய் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். கையெழுத்திட்ட விண்ணப்பத்துடன் டிடியை இணைத்து மனைவியிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நோடல் ஆஃபீசரிடமிருந்து போன். டிடி நம்பர் என்னவென்று டிடி எடுத்த வங்கியில் கேட்டுச் சொல்லவும் என்றார். விசாரித்து சொன்னேன். ஒரு வாரம் சென்ற பிறகு வங்கி குறிப்பிட்டது டிடி நம்பர் இல்லை என்றும் மற்றொரு நம்பர்தான் டிடி நம்பர் என்றும் சொல்கிறார்கள் என்பதால் புதிய பதிவினைச் செய்ய வேண்டுமென்றார். மீண்டும் பதிவு செய்து புது கணக்கைத் இமெயிலில் அனுப்பி வைத்தார். அதை பிரிண்ட் எடுத்து, இன்றைக்கு காலையில் நோடல் ஆஃபீசரிடம் கையெழுத்து இட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தை அளித்து விட்டு வந்த என் மனைவியிடம் ”சார், எங்களால் மிகுந்த சிரமப்படுகிறார்” என்று தன் வருத்தத்தை தெரிவித்தாராம் நோடல் ஆஃபீசர்.

வண்டியில் வரும் போது, என் மனைவி, ”ஏங்க அந்தப் பெண் ரொம்ப அழகாய் இருக்கிறார்.”

”சிவப்புக் கலரா?”

”ஆமாங்க, அவ்ளோ அழகு, பார்த்திருக்கலாம்” என்றார்.

”அழகு என்பது தோல் கலரில் இல்லை. உள்ளத்தில் இருக்கிறது. ஆள் அழகாய் இருந்தால் மனசு அழகாய் இருக்காது” என்று சொன்னேன்.

ஆள் அழகாய் இருந்தால் உள்ளம் கொடூரமாய் இருக்குமென்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் நானே அனுபவித்தும் இருக்கிறேன். என்னிடம் எத்தனையோ பெண்கள் பழகி இருக்கின்றார்கள். வாத்தியாராக வேலை செய்த காலத்தில் அழகான பெண் பிள்ளைகளின் செயல்களை நேரில் கண்டிருக்கிறேன். அழகாய் இருக்கிறோமென்ற எண்ணத்தின் காரணமாய் கொடூரமாய் நடந்து கொள்வர். இப்படி நான் சந்தித்த எத்தனையோ பெண்கள் அழகினால் கர்வம் கொண்ட சம்பவத்தினையும் அதன் பொருட்டு வாழ்க்கையில் வேதனைகளைச் சந்தித்த கதைகளையும் அறிவேன்.

வீடு வந்து சேர்ந்தோம். கொரியர் வந்திருந்தது. நோடல் ஆஃபீசரே புதிதாய் ரெஜிஸ்டர் செய்து ஈமெயிலில் நேற்று எனக்கு அனுப்பி வைத்த விண்ணப்பத்தை, பிரிண்ட் எடுத்து எனது கையொப்பத்தை பெற கொரியரில் அனுப்பி இருந்தார். என் பொருட்டு அவர் தன்னை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறார் என்பது புரிந்தது. நோடல் ஆஃபீசர் ஆள் மட்டும் அழகு இல்லை, உள்ளமும் அழகு என்று அந்த நொடியில் உணர்ந்தேன். எவர் ஒருவர் பிறருக்காக தன்னை சிரமத்திற்குட்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.

இப்போது நோடல் ஆஃபீசரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது.

Friday, July 24, 2009

தங்கத்தின் விலை குறையுமா ?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. என்ன காரணம் ?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பில் சரிவேற்பட்டிருப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆபரணத்தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் இன்று ரூபாய் 11400க்கு விற்கப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

தங்கம் வாங்க விரும்புவர்கள் அத்தியாவசியமான தேவை ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தை வாங்கும்படியும், உடனடித் தேவை இல்லாதவர்கள் சற்றே பொருத்து விலை குறையும் போதும் வாங்கலாம் என்று ஃபைனான்சியல் அட்வைஸ்ர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகளவில் குருடூ ஆயில் சற்றே விலை உயர்ந்து பீப்பாய்க்கு 65.25 டாலராக இருக்கிறது. மேலும் உயரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக மார்கெட் நிலவரங்கள் சொல்கின்றன.

இனி சில கம்பெனிகளின் நிகர வருமானம், நஷ்டம் இவற்றைப் பார்க்கலாம்.

மாருதி சுசுகியின் காலாண்டு நிகர வருமானம் 584 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிருவனத்தின் வளர்ச்சி விகிதம் 25% ஆகவும் உயர்வு பெற்றிருக்கிறது.

கேஈசி இண்டர்னேஷனல் கம்பெனி மின் உற்பத்திக்கான சுமார் 477 கோடி ரூபாய் பணி ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவின் காலாண்டு நிகர வருமானம் 442 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஏசிசியின் காலாண்டு நிகர வருமானம் 15% வளர்ச்சியுடன் 471 கோடி ரூபாயாகும்.

இண்டோ ஜிஸ்க் நிறுவனத்தின் 9 லட்சம் பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது. மொத்த பங்குகளில் இது 20 சதவீதம் ஆகும். முன்பே ஐசிஎல் நிறுவனம் 39.84 சதவீதம் பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருக்கிறது.

மங்களூரி ரிபைனரி காலாண்டு லாபம் 50 சதவீதம் சரிவு பெற்றிருக்கிறது.

Friday, July 17, 2009

அப்பாவுடன் அம்முவின் போராட்டம்.......


படித்துக் கொண்டிருப்பேன். கையில் உருளை சிப்ஸ் பாக்கெட்டை வைத்துக் கொண்டு என் தலையருகில் அமர்ந்து கொண்டு கையில் எடுத்த சிப்ஸை வாயில் வைத்து கடித்து விட்டு மீதியை ”அப்பா, ம்.. ”என்று சொல்லி என் வாயில் வைக்கும் அம்மு. நானும் சாப்பிடுவேன். அப்படியே ஒரு பாக்கெட்டையும் காலி பண்ணுவோம் அம்முவும் நானும். இது வழக்கமாக அம்முவுடன் நானும் சேர்ந்து கொண்டு செய்யும் வேலை.

இன்று, ஹோமியோபதி டாக்டரை பார்த்து விட்டு வரும் போது வாங்கி வந்த காராச்சேவைக் கொண்டு வந்து காட்டியது அம்மு. வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அப்புறம் சாப்பிடலாம் அம்மு என்று சொல்லி விட்டேன்.

மாலை நேரம். டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது காராசேவு நினைவுக்கு வர ”அம்மு, காராச்சேவை எடுத்துக்கிட்டு வாரியா, சாப்பிடலாம்”என்றேன். ”அப்பா, அப்போதே சாப்பிட்டு விட்டேனே” என்றது அம்மு. ”அப்படியாம்மா” என்று சொல்லிபடி டிவியில் மூழ்கி விட்டேன்.

ரித்திக் பள்ளியில் இருந்து வந்ததும் சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”ஏதுடா இது?” என்றேன்.

”கிச்சனில் இருந்ததுப்பா” என்று ரித்திக் சொல்ல எனக்கு கோபம் வந்து விட்டது. ”அம்மு இனிமேல் என்னிடம் பேசாதே” என்று சொல்லி கோபத்துடன் மனைவியிடம் ”உன் மகளை என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லு” என்று கோபமாக கத்தினேன்.

அவ்வளவுதான். உடனே அம்மு அருகில் வந்து மூக்கை முகத்தில் வைத்து தேய்த்தது. நான் தள்ளி விட்டேன். முத்தம் கொடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். மேலே ஏறி உட்கார முனைந்தது. ”என்னிடம் வராதே” என்று கோபத்தில் இறைந்தேன். பயந்து விட்டது. அம்முவின் அம்மாவிடம் ”ஏய் அம்முவிடம் சொல்லி என்கிட்டே வரக்கூடாது என்று சொல்” என்று கத்தினேன்.

கையில் சாப்பாட்டைத் தட்டைக் கொண்டு வந்து அருகில் அமர்ந்து ”அப்பா ஊட்டி விடு” என்றது. நான் வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது பார்த்து, நண்பரிடமிருந்து போன் வர, மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் பேசக்கூடாது என்றும், நான் மட்டும் தான் அப்பாவிடம் பேசுவேன் என்றும், நீ அப்பாவுடன் பேசாதே என்றும் சண்டை போட அம்மாவுக்கும் அம்முவுக்கும் தகராறு வந்து விட்டது. என்ன சொல்லியும் நான் கேட்கவில்லை என்றவுடன் ”அப்பா, கால் வலிக்குது, வலிக்குது” என்று அழ ஆரம்பித்தது. நானொன்றும் சொல்லவில்லை என்பதால் எழுந்து போய் அம்மாவிடம் மீண்டும் சண்டை போட , மனைவி என்னிடம் வந்து ”ஏங்க இப்படிச் செய்றீங்க?” என்று கேட்க, நான் காராச்சேவு பிரச்சினையைச் சொல்ல சிரி சிரியென்று சிரித்தாள். அம்மு மறந்து விட்டது என்றும் அதனால்தான் முடிந்து விட்டது என்று சொல்லி இருக்கிறது என்றும் சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

உடனே இருவரும் ராசியாகி விட்டோம். ஒரு வழியாக அம்முவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கையின் சுவாரசியமான தருணங்கள் இவைதான். மனித குலம் இப்படிப் பட்ட சந்தோஷங்களினால் தான் இன்றும் ஏதோ நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.

குழந்தைகள் வாழ்க்கையினை அர்த்தப் படுத்தும் அற்புதங்கள் என்பதை இந்த அற்புதமான தருணத்தில் மீண்டும் உணர்ந்தேன்.

Sunday, July 12, 2009

சபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



அன்பு சபா !
அழகிய, அறிவான, அன்பான உனது வாழ்வில் எல்லா வளமும், புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வீட்டுக்கு மூத்தவனான உன்னால் தான் உனது உறவுகளும், உற்றோர்களும், நண்பர்களும் சந்தோசம் பெற முடியும். உன்னால் சாதிக்க முடியாத என்று ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன். நீ வெற்றியாளனாய் உலக மாந்தர்களின் உள்ளங்களை வெற்றி கொள்வாய் என்பது என் நம்பிக்கை. உனக்காக உன் தாய் தன் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்த தாய்க்கு நீ செய்யும் ஒரு உபகாரம் உண்டென்றால் அது ”உலகே உன்னைக் கொண்டாட வேண்டும்” என்பது தான்.

எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன் :
ரித்திக் நந்தா, நிவேதிதா, பூங்கோதை, தங்கவேல்

Monday, June 22, 2009

அக்காவும் தங்கையும்

அக்காவுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். தங்கைக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் கழிந்த பிறகும் குழந்தைப் பாக்கியம் இல்லை. இப்படி இருக்க ஒரு நாள் அக்காவைப் பார்க்க சென்றாள். தங்கையை வரவேற்று இன் வார்த்தைகள் சொல்லி விருந்துச் சமையல் செய்து பரிமாறினாள் அக்கா. அப்போது தங்கையின் மனவோட்டத்தை ஒருவாறாக ஊகித்து விட்டாள். குழந்தைகளோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தங்கை. குழந்தைகள் சாப்பிடும் அளவை விட அதிகமாக உணவு பரிமாறினாள் அக்கா. குழந்தைகள் சாப்பிட்டு தட்டில் மிச்சம் வைத்து விட்டு எழுந்து விட்டனர். குழந்தைகள் மிச்சம் வைத்த உணவினை ஒவ்வொரு தட்டாக எடுத்து சாப்பிட்டு விட்டு, போதாமல் கொஞ்சம் சட்டியில் இருந்து உணவையும் எடுத்துப் போட்டு சாப்பிட்டாள் அக்கா. தங்கையைப் பார்த்து இன்னொரு குழந்தை இருந்தால் எனக்கு சாப்பாடு நிறைவாயிருந்திருக்கும் என்று சொன்னாள். தங்கை தான் என்ன நினைத்து வந்தாளோ அது நடக்காது என்று தனக்குள்ளே ஊகித்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இக்கதையில் தங்கையின் எண்ணம் அக்காவிடமிருந்து ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்பது. ஆனால் அக்காவுக்கோ அப்படி குழந்தையைக் கொடுக்க மனமில்லை. அதை தங்கையிடம் எவ்வளவு நாசூக்காக சொல்லி விட்டாள் என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

எனது அண்ணா அதாவது அப்பாவின் ஒன்று விட்ட தம்பிக்கு பிறந்தவர் கிராமியக் கதைகள் சொல்வதில் மன்னர். நேற்றைக்கு மீன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுச் சென்றார். கோயமுத்தூர் பக்கம் மீன் குழம்பில் தேங்காயை சேர்த்து சப்பென்று சமைத்து விடுவார்கள். அந்த டேஸ்ட் இவருக்குப் பிடிக்காது. பட்டுக்கோட்டைப் பக்கம் காரம், புளிப்பு என்று மீன் குழம்பு ரத்தக் கலரில் இருக்கும். மனைவிக்கு எங்கள் ஊர் சமையல் பக்குவம் அத்துப்படி. வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் பிறந்தாலும் எனது ஊர் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு விட்டாள். அண்ணா சாப்பிடும் முன்பு சொன்ன கதைதான் மேலே இருப்பது.

பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. வண்டி எப்படி அச்சாணி இன்றி இயங்க முடியாதோ அப்படித் தான் பெண் இன்றி எந்தக் குடும்பமும் இயங்க முடியாது. அந்தப் பெண்ணின் சகிப்புத் தன்மைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

Thursday, June 11, 2009

கெஸ்ட் ஹவுஸ்





இந்த முறை ஹோட்டலில் தங்காமல் ஏதாவதொரு பிரைவேட் ஹெஸ்ட் ஹவுஸில் தங்கலாமென்று நினைத்தேன். கடமைக்கு என்று சிரிக்கும் ரூம்பாய்களையும், சர்வர்களையும் சற்றே பார்க்காமல் தவிர்க்கலாம் என்று நினைத்தேன். ஃப்ரான்சில் வசிக்கும் எனது நண்பர் திரு ஆட்னன், ஒரு முறை கேரளா வந்து ஹெஸ்ட் ஹவுசில் தங்கியதாகவும், அதைப் பற்றிய அனுபவத்தை சிலாகித்தும் சொன்னது நினைவுக்கு வர அவருக்கு மெயில் அனுப்பி வைத்தேன். மறு நாள் விபரமாக அவரிடமிருந்து பதில் வந்தது. கொச்சியில் இருக்கும் ஹெஸ்ட் ஹவுஸைப் பற்றிய விபரக் குறிப்புகளை அனுப்பி இருந்தார். போட் ஹவுஸிலிருந்து நேராக அந்த ஹெஸ்ட் ஹவுசுக்குச் சென்றோம்.



மிஸ்டர் பேசில் எங்களை வரவேற்றார். பேக் வாட்டர் ஹோம் என்ற பெயரில் அருமையான பழங்காலத்து வீடு. கிட்டத்தட்ட 70 வருடங்கள் ஆகி விட்டது என்று சொன்னார். இரண்டு குளிர் சாதன வசதி கொண்ட அறைகள். பெரிய பாத்ரூம். பின்புறம் ஆற்றுத் தண்ணீர். சுற்றிலும் செடிகள், மரங்கள், மாமரம், கொய்யா என்று வித விதமான மரங்கள். வாசலின் இடது பக்கம் தோட்டம் என்று அமைதியான சூழலில் அழகான வீடு. வாசலின் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு நானும் அவரும் பழங்கதைகள் எல்லாம் கதைத்தோம். வெகு சுவாரசியமான மனிதர். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். என்ன சாப்பிடலாமென்று அட்வைஸ் வேறு. ஃபாரினர்ஸ் அவருடன் தங்கிய கதைகளையும், புகைப்படங்களையும் காட்டினார். சமீபத்திய மலையாள மேகசினில் வெளிவந்த அவரைப் பற்றிய கட்டுரையினையும் காட்டினார்.






இரவு மெனுவை விசாரித்துக் கொண்டு, டிரைவருடன் அவரும் கூடவே ஹோட்டலுக்குச் சென்று கூடவே, ஹாட்பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று டிஃபன் வாங்கி வந்து அவரே சூடாகப் பரிமாறினார். சாப்பிடும் போது ஷாம்பெயின் கொண்டு வந்து கொடுத்தார். மறுத்து விட்டோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தோட்டத்தில் பழுத்த மாம்பழம் பரிமாறினார். வெகு இனிப்பு. வீட்டுச் சாம்பாரும் வந்தது. அட்டகாசம். அவரின் மனைவி அன்போடு பழகினார்.




இரவில் நல்ல தூக்கம். விடிகாலையில் சுடச்சுட காஃபி வந்தது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டே குளிர்ச்சியான அந்த சூழ்நிலையில் காஃபியும் சுவையோடு இருக்க அந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்ன டிஃபன் வேண்டுமென்று கேட்டார். இடியாப்பம், சன்னா மசாலா என்று சொன்னேன். காலையில் எல்லாம் தயார். பூவரச இலையின் மீது வேக வைத்த இடியாப்பமும், சன்னா மசாலாவும் வெகு அருமை. குடும்பத்தோடு புகைப்படமெடுத்துக் கொண்டோம். மனைவியிடம் மாங்காய், ஜாதிக்காய் கொடுத்தார் திருமதி பேசில். கூடவே சன்னா மசாலா செய்முறை விளக்கத்தையும் கொடுத்தார். கேட்பதோடு சரி. செய்தெல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று அப்போதே முடிவு கட்டிக் கொண்டேன். நல்ல பிள்ளைகளாக தம்பி மனைவியும், என் அம்மணியும் இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். மன நிறைவோடு வீகா லேண்ட் கிளம்பினோம் மறுநாள்.



கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் நல்லா இருங்க என்று எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிலும் ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரவில் சில படகுகள்

கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எங்கோ ஓரிடத்தில் தண்ணீருக்குள் குடும்பத்துடன் தங்கும் போது. எங்கள் படகும் மற்றொரு படகும் அருகருகே நின்றிருந்தன. வலதுபக்கமாக நீண்ட நூறு அடி அகலமிருக்கும் நிலமும் அதன் மீது கட்டப்பட்ட வீடுகளும் தெரிந்தன. நாம் இங்கு தான் இரவில் தங்கப்போகின்றோமா என்று ராஜுவிடம் கேட்டேன். ராஜு படகில் எங்களுக்கு உதவியாய் வருகிறவர். ஆம் என்றார். இரவில் டின்னர். நாங்கள் வாங்கிக் கொடுத்த ப்ரானுடன், மீன் வறுவல், பருப்பு, ரசம், தயிர், பொறியல், ஊறுகாய் என்று மெனு. முதலில் ப்ரானை முடித்து விட்டு காய்கறிகளையும், கொஞ்சம் ரசத்தையும் சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டேன். பத்து மணி அளவில் தூங்கச் சென்றோம். ஏசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. சன்னலைச் சாத்தி விட்டு பெட்டில் படுத்து விட்டேன். குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென விழிப்பு வர, செல்போனில் மணி பார்த்தேன். பனிரெண்டு. தூக்கம் வராத காரணத்தால் சன்னலோரம் சென்று அமர்ந்தேன். ஆங்காங்கே வெளிச்சப்பொட்டுகளுடன் படகுகள் தண்ணீரில் சென்று கொண்டிருந்தன. மீன் பிடிக்க செல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் படகை சிறிய மிதவைப் படகு ஒன்று கடந்து செல்ல இருட்டில் கண்களைப் பழகிக் கொண்டு உற்றுப் பார்த்தேன்.

அதேதான். அடப்பாவிகளா ? இங்கேயுமா ???

பாவம் என்று எண்ணியபடி மீண்டும் உறங்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் விடிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடும் பழக்கத்தால் எழுந்து சன்னலோரம் அமர்ந்தேன். அப்போதும் சில படகுகள் சென்று கொண்டிருந்தன. அதில் அதேதான். அதாவது இரவு பதினோறு மணிக்கு வேலைக்கு வந்து விட்டு, விடிகாலையில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமேற்பட,படகில் எங்களுடன் வந்தவரிடம் விசாரித்தேன்.

”சார், இங்கெல்லாம் குடும்பத்தோடு வரலாமா? தனியாக அல்லவா வரவேண்டும் “ என்று சொன்னார்.

”தனியாக வந்தால் என்ன ஸ்பெஷல்” என்று கேட்டேன்.

”எல்லாம் கிடைக்கும் சார்” என்று எல்லாமில் மிக அழுத்தம் கொடுத்தார்.

ஆமாம், எல்லாமும் (ஹி..ஹீ...) கிடைக்கும் என்று நினைத்தபடி அசடாக சிரித்து வைத்து விட்டு அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்.

குறிப்பு : அதே தான் என்பது அதே தான். மேலும் சொல்ல விரும்பவில்லை. பெரும்பாலானா டூரிஸ்ட் ஸ்தலங்களில் நடக்கும் கூத்து தான் இது. ”ஜெய் ஹோ”... போங்கய்யா, நீங்களும் உங்க .....

Thursday, June 4, 2009

தண்ணீருக்குள் இரண்டு நாட்கள்

ஆலப்புழாவில் படகில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன். சுற்றிலும் தண்ணீர். சமையல், குளியல் எல்லாம் படகிலே. சுமார் அரை மணி நேரம் படகு ஓட்டினேன். மனதுக்கு வெகு உற்சாகம் தந்த நாட்கள் அவை. வைரஸ் காய்ச்சலில் உடலும் மனதும் சோர்ந்து கிடந்தது. திரும்பவும் ரீஜார்ஜ் ஆகிவிட்டது. சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். வெகு சுவாரசியமான சம்பவங்களை விரைவில் எழுதுகிறேன்.












(ரித்திக் நந்தா)

Thursday, May 21, 2009

சில போட்டோக்களினால் ...

இத்தனாம் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று தேர்தல் கமிஷன் தினசரிகளில் செய்தி வெளியிட்டிருந்தது. அதை முற்றிலுமாக நம்பி, மாநகராட்சிக்குச் சென்று அப்ளிகேஷன்ஸ் வாங்கி பூர்த்தி செய்து ஒப்படைத்தேன்.

தேர்தலும் முடிந்து விட்டது.

இது நாள் வரை விசாரணையும் வரவில்லை.அடையாள அட்டையும் வரவில்லை.
தேவையின்றி இரண்டு நாள் அலைச்சல்தான் மிச்சமானது. பொது மக்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து அலைச்சலும், வீண் விரயமும் செய்யும் தேர்தல் கமிஷன் மீது வழக்குத் தொடுத்து, நஷ்ட ஈடு பெற இயலுமா ? விபரம் தெரிந்தவர்கள் சொன்னால், பிறருக்கு உபயோகமாய் இருக்கும்.

வேகாத வெயிலில் சென்று திரும்பி வருகையில், பசி வயிற்றைக் கிள்ள சாலையோரத்தில் நின்றிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் மொபைல் உணவகத்தைக் பார்த்தேன்.



தக்காளி சாதம் ரூபாய் 10.
வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10
தயிர்சாதம் ரூபாய் 10
வடை, ஊறுகாய், குருமா, சாம்பார்

தக்காளி சாதம் சாப்பிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. வயிறும் நிரம்பி விட்டது. சுவையும் நன்றாகவும் இருந்தது. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகையால் அந்த சுய உதவிக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லும் பொருட்டு இப்படம்.





போளி :

இரண்டு மாதங்களுக்கு முன்பு டவுன் சென்று திரும்பும் போது நான் சாப்பிட்டு அறியாத இந்த வஸ்துவைப் பார்த்தேன். அருகில் சென்று விசாரித்தேன். போளி என்றார். சுவீட், காரம் என்று இருவகை போளிகள் இருந்தன. ஒன்று கொடுங்கள் என்றேன். ஏதோ ஒரு எண்ணெயைத் தடவி, மைதாவால் தயாரிக்கப்பட்ட மாவிற்குள் சுவீட் மிக்ஸை வைத்து தட்டி சூடாக எடுத்து தந்தார். முதன் முதலாக சாப்பிடும்போது நன்றாக இருந்தது. ஒன்றோடு முடித்துக் கொண்டேன். பத்து ரூபாய்க்கு மூன்றாம். அந்த போளி தான் செல்போனிற்க்குள் சிக்கிக் கொண்டது.


அம்முவின் அடாத தொல்லையால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட அழைத்துச் சென்ற போது வழியில் குறுக்கிட்டது ஊர்வலமொன்று. அதன் புகைப்படங்கள் தான் கீழே இருப்பவை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். யாரோ ஒரு பெண் வெகு சிரத்தையாக குடத்தில் தண்ணீர் மொண்டு மொண்டு தலையில் பால் குடம் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் ஊற்றிக் கொண்டிருந்தார். அழகான பெண்கள் எல்லாம் ஆண்களின் பின்னே வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லுபவர்கள் நேரமாகிவிடுமோ என்று பதைபதைப்புடன் ஊர்வலத்தின் வலதும் இடதுமாய் கடந்து சென்றார்கள். புலி வேஷம் போட்டிருந்தவர் கண்ணில் கூலிங்க் கிளாஸ் மாட்டிருந்தார். வெறியேற்றும் மேளதாள முழக்கங்கள். வெடிகள். ஆடிக்கொண்டிருந்தனர் பலர். அம்மு என்னிடம் சுட்டிக் காட்டியது ” அப்பா, அந்த சாமி ஆடுதுப்பா”










இதுவரை பார்த்தே இராத இரு சிறுவர்கள் அம்முவை பார்க்கில் இருக்கும் ஊஞ்சலில் தூக்கி வைத்து ஆட்டிக் கொண்டு விளையாடினார்கள். ரித்திக் அந்த இரு சிறுவர்களும் அம்முவுடன் விளையாடுவதைக் கண்டு எரிச்சலுற்று என் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அம்முவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது ஒரே சிரிப்பு. வண்டியில் வீட்டுக்குத் திரும்ப வரும்போது அம்மு என்னிடம் கேட்டது “ஏம்பா அவங்க அம்மா அவுங்க டிரஸ்ஸை தொவைக்க மாட்டாங்களா, அழுக்கா இருக்குல்ல” என்றாள். பெண்கள் சரியில்லை என்றால் சமூகம் கெட்டுப் போய் விடுமென்று ஆத்மானந்தா சாமி என்னிடம் அடிக்கடி சொல்வார்.




Tuesday, May 19, 2009

ஃபைல்களை மீட்கும் சாஃப்ட்வேர்

விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்கும் இந்த சாஃப்ட்வேர் பார்மெட் செய்த டிரைவ், ரீசைக்கிள் பின், வைரஸ் தாக்குதல், எதிர்பாராத கணிணி ஷட்டவுன் போன்ற நேரங்களில் இழந்த முக்கியமான ஃபைல்களை திரும்பவும் மீட்டுத் தரும். அழித்த ஃபைல்களையும் வரிசையிட்டுக் காட்டி விடும். தேவைப்படும் ஃபைல்களை மீண்டும் பெறலாம்.


get data back for ntfs and fat

Thursday, May 14, 2009

ஹோட்டலும் நானும் !

மனைவியும் குழந்தைகளும் ஊருக்குச் சென்றிருந்த காரணத்தால், முதல் மூன்று நாட்களுக்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. மூன்றாம் நாள் இரவு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. வயிற்று வலி உயிரை வதைத்தது. காரணம் தெரியாமல் வழக்கம் போல ஒரு நாள் உபவாசம் இருந்தேன். மறு நாள் காய்ச்சலும் நின்று விட்டது, வயிற்று வலியும் நின்று விட்டது. ஹோட்டல் சாப்பாட்டில் பிரச்சினை என்று கண்டுபிடித்தேன். உண்மை என்னவாகவிருக்குமென்று அறியும் ஆர்வத்தில் எனக்கு சாப்பாடு வந்த ஹோட்டலின் சர்வரைப் பிடித்து ரகசியமாய் விசாரிக்க சாப்பாட்டில் அவர்கள் செய்யும் கோல்மால் தெரிய வர அதிர்ந்து போய் விட்டேன். இவ்வளவுக்கும் சாப்பாட்டின் விலை 35 ரூபாய்.

இனிமேல் ஹோட்டலை நம்பினால் சுடுகாட்டிற்கு வழியைக் காண்பித்து விடுவார்கள் என்ற காரணத்தால் சமையலை ஆரம்பித்தேன். பத்து நாட்கள் கடந்தன. வேலையில் ஈடுபடும் போது சாப்பாட்டை மறந்து விடுவது வாடிக்கையாய் விட்ட காரணத்தால் ஒரு நாள் இரவு ஹோட்டலில் டிஃபன் சாப்பிடலாமென்று முடிவெடுத்து சிறிய தோசை ஒன்றும், மூன்று இட்லியும் வாங்கி வந்து இரவு சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன். விடிகாலை உடலில் ஏதோ பிரச்சினை என்பது போல தெரிய, எழுந்து உட்கார்ந்தேன். விடிகாலைக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருக்க, வயிற்றில் வலியும் வந்தது. புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை வைத்து நேற்று இரவு சாப்பிட்ட மூன்று இட்லி, தோசையை வாமிட் செய்த அடுத்த நொடி உடல் பழைய படியானது.

ரியாலிட்டி ஆஃப் பயோடெரரிசம் என்ற கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கும் பொருட்டு எனது ஹோட்டல் அனுபவங்களைப் எழுத வேண்டிய கட்டாயமேற்பட்டு விட்டது. கோவையின் மிகப் பிரபலமான கடையில் விற்கும் அமெரிக்கன் சுவீட் கார்னைச் சாப்பிட்டால் இரண்டு நாட்களுக்கு வாயில் உணர்ச்சியே வராது. என்ன காரணமென்று இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

மனிதர்கள் ஹோட்டல்காரர்களின் மீது நம்பிக்கை வைத்துத் தான் சாப்பிடச் செல்கிறார்கள். ஆனால் சில ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் மனிதர்களின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றன.

மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகிலோ, சாலை அருகிலோ மணமணக்கும் வடை, பஜ்ஜிகளை சுட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். எச்சில், கோழை துப்பி காய்ந்து போன சாலையில் வாகனங்கள் செல்லுவதால் ஏற்படும் தூசி மேற்படி பதார்த்தங்களின் மீது படிந்து விடுகின்றன. எமன் வடையோ அல்லது பஜ்ஜி வடிவிலோ வருவதைக் கூட அறியாமல் டீயுடன் எமனையும் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

ஜாக்கிரதை நண்பர்களே...

வெளியூர் சென்றால் பழங்களோ அல்லது நல்ல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிய பிஸ்கட்டுகளையோ உடன் எடுத்துச் செல்லுங்கள். காசு செலவானாலும் பரவாயில்லை என்று தரமான ஹோட்டலில் உணவருந்துங்கள். காசைக் கொடுத்து வினையை வாங்க வேண்டாம். என் அனுபவத்தில் சொல்கிறேன்....

Reality of bioterrorism: it’s not at all easy to do

Reality of bioterrorism: it’s not at all easy to do

Bruce Schneier

Most instances of food poisonings occur at the end of the food supply chain — at home.

Terrorists attacking our food supply is a nightmare scenario that has been given new life during the recent swine flu outbreak. Although it seems easy to do, understanding why it hasn’t happened is important. G.R. Dalziel, at the Nanyang Technological University in Singapore, has written a report chronicling every confirmed case of malicious food contamination in the world since 1950: 365 cases in all, plus 126 additional unconfirmed cases. What he found demonstrates the reality of terrorist food attacks. It turns out 72 per cent of the food poisonings occurred at the end of the food supply chain — by a friend, relative, neighbour, or co-worker. A characteristic example is Heather Mook of York, who in 2007 tried to kill her husband by putting rat poison in his spaghetti.

Most of these cases resulted in fewer than five casualties — Mook only injured her husband in this incident — although 16 per cent resulted in five or more. Of the 19 cases that claimed 10 or more lives, four involved serial killers operating over several years.

Another 23 per cent of cases occurred at the retail or food service level. A 1998 incident in Japan, where someone put arsenic in a curry sold at a summer festival, killing four and hospitalising 63, is a typical example. Only 11 per cent of these incidents resulted in 100 or more casualties, while 44 per cent resulted in none. There are very few incidents of people contaminating the actual food supply. People deliberately contaminated a water supply seven times, resulting in three deaths. There is only one example of someone deliberately contaminating a crop before harvest — in Australia in 2006 — and the crops were recalled. And in the three cases of someone deliberately contaminating food during packaging and distribution, including a 2005 case in the U.K. where glass and needles were baked into loaves of bread, no one died or was injured.

This isn’t the stuff of bioterrorism. The closest example occurred in 1984 in the U.S., where members of a religious group known as the Rajneeshees contaminated several restaurant salad bars with salmonella enterica typhimurium, sickening 751, hospitalising 45, but killing no one. In fact, no one knew this was malicious until a year later, when one of the perpetrators admitted it.

Almost all of the food contaminations used conventional poisons such as cyanide, drain cleaner, mercury, or weed killer. There were nine incidents of biological agents, including salmonella, ricin, and faecal matter, and eight cases of radiological matter. The 2006 London poisoning of the former KGB agent Alexander Litvinenko with polonium-210 in his tea is an example of the latter.

And that assassination illustrates the real risk of malicious food poisonings. What is discussed in terrorist training manuals, and what the CIA is worried about, is the use of contaminated food in targeted assassinations. The quantities involved for mass poisonings are too great, the nature of the food supply too vast and the details of any plot too complicated and unpredictable to be a real threat. That becomes crystal clear as you read the details of the different incidents: it’s hard to kill one person, and very hard to kill dozens. Hundreds, thousands: it’s just not going to happen any time soon. The fear of bioterror is much greater, and the panic from any bioterror scare will injure more people, than bioterrorism itself. Far more dangerous are accidental contaminations due to negligent industry practices, such as the 2006 spinach E coli and, more recently, peanut salmonella contaminations in the U.S., the 2008 milk contaminations in China, and the BSE-infected beef from earlier this decade. And the systems we have in place to deal with these accidental contaminations also work to mitigate any intentional ones.

In 2004, the then U.S. Secretary of Health and Human Services, Tommy Thompson, said on Fox News : “I cannot understand why terrorists have not attacked our food supply. Because it is so easy to do.” Guess what? It’s not at all easy to do.

— © Guardian Newspapers Limited, 2009

Thanks to Hinduonline.com

Thursday, April 30, 2009

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு

எனது நண்பர் செல்போனில் வந்தார்.பேசிக் கொண்டிருந்த போது உங்க பதிவு இளமை விகடன்.காமில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். நமக்கு ஒன்றும் புரியவில்லை.
தள முகவரியை பெற்று தளத்தினுள் சென்றேன். ஆச்சர்யம் தான்.

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு “ கையளவு இதயம்


நன்றி : இளமை விகடன்.காம்

Monday, April 27, 2009

குடி !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் என்றால், தஞ்சாவூர் சென்று படம், ஹோட்டல், தண்ணீர் என்று கொண்டாடுவார்கள். வழக்கம் போல புது துணி உடுத்தி கம கமவென மணக்கும்படி வாசனை திரவியங்கள் பூசி நண்பர்கள் புடை சூழ ஒரு சேஞ்சுக்காக தஞ்சாவூர் செல்லாமல் அம்மாப்பேட்டைக்கு சென்றார்கள். நான் அவர்களோடு செல்லவில்லை.

நன்கு குடித்து விட்டு, சாப்பிட்டு விட்டு போதையில் பஸ் ஏறி இருக்கிறார்கள். பஸ்ஸின் பின் புறப் படிக்கட்டில் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன். ஏதோ ஒரு வளைவில் பஸ் வேகமெடுக்க, தடுமாறி பஸ்ஸின் படி வழியாக கீழே விழுந்து விட்டான். நண்பர்கள் பதறியடித்துக் கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவனைத் தூக்கி வந்து சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
“எனக்கு ஒன்றுமில்லையடா” என்று சொல்லி சிரித்திருக்கிறான்.

சற்று நேரத்தில் அவனை அணைத்துப் பிடித்திருந்த மற்றொரு நண்பனின் தோளில் ஈரமாக உணர, என்னவென்று பார்த்திருக்கிறான். பின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்திருக்கிறது.

”ரத்தம்டா“ என்று மற்றொரு நண்பன் கூவ,

“ ஆ.. ரத்தமா” என்று பதறியபடி பின் தலையைத் தொட்டுப் பார்த்தபடி, ”அய்யோ” என்று அலறி இருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன்.

“டேய்... என்னை எப்படியாவது காப்பாற்றி விடுடா. வீட்டில என் அப்பாவும், அம்மாவும் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கடா, எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று சொல்லியபடியே இவனது கையை இறுக்க பிடித்தவாறு மயங்கி போனான்.பஸ்ஸை வேகமாகச் செலுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.

ரத்தத்தையும் நிறுத்த முடியவில்லையாம். ஆல்கஹால் அவனது ரத்தத்தில் கலந்து இருந்ததால் ரத்தம் ஏற்ற முடியவில்லையாம். மயக்கத்திலேயே பிறந்த நாள் அன்று தன் இன்னுயிரை இழந்தான் என் நண்பன்.

காரில் அவனை எடுத்துக் கொண்டு சென்று அவர்களது வீட்டை அடைந்த போது நடந்ததை எழுதினால் படிக்கும் நமக்கு உயிரே போகும் படியாக இருக்குமென்பதால் விட்டு விடுகிறேன்.

நண்பன் கேக் வாங்கி வருவான், சாக்லெட் கொண்டு வருவான் என்று நண்பர்களுக்காக காத்துக் கிடந்தபோது போன் வந்தது. நண்பன் இறந்ததைச் சொன்னார்கள். இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

தேவையா இந்தக் குடி !

குறிப்பு : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் மகன் (வெகு அழகானவர்) நான் படித்த கல்லூரியின் மாணவர். இன்று அவரின் நினைவாக பஸ் நிறுத்துமிடம் கட்டி இருக்கிறார்கள். காரணம் பைக் ஆக்சிடென்ட்.

Wednesday, April 22, 2009

சாதிக்க விரும்புகின்றீர்களா ?

கோபப்படாதவர்கள் புத்திசாலிகள் !

மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் ெபாருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான். உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோபமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவதே இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.

எதிராளியின் பிரதிபலிப்புத்தான் அந்தக் கோபத்தின் காலகட்டத்தை நீட்டிக்கச் செய்கிறது. ‘என்னடி! நெனச்சிக்கிட்டிருக்கே உன்மனசுல? பெரிய மகராணின்னு நினைப்பா?’ என்று ஒரு கணவர் ஆரம்பிக்கிறார் என்றால், பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்து அதை அடக்குகிற கதையாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. தயவு செஞ்சு கோபப்படாதீங்க’ என்று சூட்டைக் குறைக்கிற வார்த்தைகளைத் தெளித்தால், கணவன் அடங்கிய பாலாகிவிடுவான்.

எல்லா கணவன் மனைவிக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரே நேரத்தில் இருவரும் கோபப்படேவ கூடாது. அந்த நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘எவ்வளவு வேண்டுமானாலும் கத்து. நான் ஒன்றும் பேசப்போவதில்லை. நீ அடங்குவேல்ல! அப்ப வச்சுருக்கேன் உனக்கு’ என்று அந்த நிமிடம் ஒரு கணவன் அடங்குவானேயானால் அவன் புத்திசாலி.

இருவரும் ஒரே காலகட்டத்தில் கோபப்படும் போதுதான் வார்த்தைகள் தடிக்கன்றன. கைகள் நீளுகின்றன. ஏன் இன்னும்கூட விபரிதமாகெவல்லாம் ஏதேதோ நிகழ்ந்துவிடுகின்றன.

ஆத்திரக் கணத்தில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை. அவற்றை உண்மையான அகராதி கொண்டு மொழி பெயர்க்கக் கூடாது. அடங்கியபின் வரும் வார்த்தைகளே அர்த்தமுள்ளவை.


கோபம் எனும் மதுவைப் பெருமூளையில் ஏற்றிக்கொண்டவர்கள் பிதற்றத்தான் செய்வார்கள். ஒருவர் சூடேறுவதும் சூடு இறங்குவதும் ஒரு நிமிடத்தில்தான்.

‘கோபம் வரும்போது மனைத திசை திருப்பி ஒன்று, இரண்டு, மூன்று என்று முடிந்தவரை எண்ணுங்கள். உங்களுக்கே நம் கோபம் அடங்கிவிட்டது என்று தோன்றும்வைர எண்ணுங்கள்’ என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இப்படி எண்ணிப் பார்த்தால் 60க்கு மேல் உங்களால் எண்ண முடியாது. ஆமாம், உங்கள் கோப உணர்ச்சிெயல்லாம் ஒரு நிமிடம்தான்.

கோப உணர்ச்சியில் மனம் திளைளப்பதே இல்லை. அதிலிருந்து மனம் வெளிவரவே விரும்புகிறது. ஆனால் எதிராளியின் சில சொற்களும், செயல்களும் அந்தக் கோபத்தைப் புதுப்பிக்கின்றன. நம்மீது பாய்ந்து வருகிறவரின் கோபத்தைச் ‘சாரி’ என்கிற ஒரு வார்த்தை பாதியாக்குகிறது. பதிலாகச் சொல்லப்படும் எரிச்சலூட்டுகிற சில வார்த்தைகளோ அவரது கோபத்தைப் பன்மடங்காக்குகிறது.

கோப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்ைல. கோப உணர்ச்சியிலிருந்து வெளிளிக்கொணர்ந்த பிறகு எடுத்துச் சொன்னால்தான் தலைலக்குள் ஏறுகிறது.

உங்களுக்குக் கோபம் வந்தாலும் சரி, பிறர் கோபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் நிச்சயம் நினைத்ததைச் சாதிப்பீர்கள்.!.

நன்றி : லேனா தமிழ்வாணன்

Saturday, April 18, 2009

குயிக் சாம்பார் செய்வது எப்படி ?

அம்மணி குழந்தைகளுடன் கிராமத்துக்குச் சென்று விட்டதால் வீடு சுத்தம் செய்வது, சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம். அம்மு வேறு தினமும் போனில் அழைத்து அப்பா இன்னிக்கு மீன் சாப்பிட்டேன். இன்னிக்கு ரால் சாப்பிட்டேன், இன்னிக்கு கறி சாப்பிட்டேன் என்று சொல்லிச் சொல்லி சிரிக்கிறது. மீனு மேலே விழுந்துடுச்சுப்பா என்றும், அம்மாதான் மேலே போட்டார் என்றும் கம்ப்ளெயிண்ட் செய்கிறது. ரித்தி குளத்தைப் பார்த்து விட்டு அம்மணியிடம் எப்படிம்மா கடல் இங்கே வந்தது என்று கேட்டிருக்கிறான். ரித்தி இப்படி கேட்கிறான் என்று அம்மணி போனில் கதைக்கிறார். ஊரில் குழந்தைகள் சந்தோஷமாய் இருப்பது கண்டு மனது குளிர்ந்து விட்டது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குயிக் சாம்பார் : இன்றைக்குச் சாம்பார் வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டு முருங்கைக்காய், உருளைக்கிழங்கினை வெட்டி வைத்தேன். புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊறப்போட்டு விட்டு, நூறு கிராம் துவரம் பருப்பை கழுவி குக்கரில் சேர்த்து அத்துடன் ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு பெருங்காயக்கட்டி, பூண்டு பற்கள் நான்கு, ஒரு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஆறு விசில் வரும் வரை காத்திருந்தேன். பிறகு வெந்த பருப்புடன் இரண்டு டீஸ்புன் சாம்பார் தூள், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, புளித்தண்ணீர், பச்சை மிளகாய் இரண்டு, உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பிலேற்றி மூன்று விசில் வரும் வரை விட்டு கடுகு தாளித்து, கருவேப்பிலையுடன் சாம்பாரில் சேர்க்க, மண மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

கொசுறு : வாழைக்காயை நறுக்கி எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தொடர்ந்து வாழைக்காயையும் சேர்த்து வதக்கினேன். லேசாக அடி பிடிக்கும். கிளறி விட வேண்டும். வெந்தபிறகு மிளகாய்த் தூள் சேர்த்தால் வாழைக்காய் எண்ணெய் வதக்கல் தயார்.

சாதம், சாம்பார், வாழைக்காய் வதக்கல் செய்ய கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. பேச்சிலர்ஸ், மனைவியுடன் சண்டை போட்ட கணவர்கள், சமைக்க சோம்பல் படும் உள்ளங்களுக்கு உதவும் பொருட்டு மேற்படி அனுபவச் சமையல் குறிப்பைத் தருகிறேன்.

இப்படி உடனுக்குடன் செய்யும் குழம்பு வகைகள், பொறியல் வகைகள் பல இருக்கின்றன. வாசகர்கள் விரும்பினால் எழுதுவேன்.

தலைவன் என்கிறவன் யார் ?

தினசரி பேப்பரை பிரிண்ட் செய்து தலையில் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். ஊறுகாய் போட்டு கைகள் கடுக்க தெருத் தெருவாய் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். டேபிள் துடைத்தவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹோட்டலில் தங்க உனக்கு அனுமதி கிடையாது என்று கேவலப்படுத்தியதால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இந்தியாவின் முகவரியானது. இப்படி கேலிக்கும், அவமானத்திற்கு உட்பட்ட எத்தனையோ உள்ளங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளாய் வலம் வருகிறார்கள்.

அவ்வாறு முன்னேறியவர்களின் வாழ்வில் சோர்வும், அசதியும் ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் என்ன செய்திருப்பார்கள் ? இதோ கீழே சில வரிகள். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இச்சில வரிகள் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராய் செல்லாமல் வயற்காடுகளில் கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிந்தாமல் சிதறாமல் எவ்வாறு பாத்திக்குள் சென்று சேர்கிறதோ அதைப் போல இருக்க வேண்டும். எதை நோக்கிய பயணம் என்ற முடிவு முதலில் எடுக்கப்படல் வேண்டும். பயணத்தில் ஆங்காங்கே தடங்கல்கள் ஏற்படும் போது மனம் துவண்டு சோர்வடையக்கூடாது. புறப்பட்டாகி விட்டது. இனி நிற்க முடியாது. இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது. எந்த இடத்தைச் சென்று சேர வேண்டுமோ அந்த இடம் இதோ இன்னும் சில அடிகளில் தான் இருக்கிறது. துவண்ட கால்களை உதறி எழ வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து உடம்பை உதறி உத்வேகம் கொள்ள வேண்டும். ரத்தம் சூடாக உடலெங்கும் பாயும். நெஞ்சுக்குள் குறிக்கோள் தகிக்க தகிக்க, கண்களில் தீப்பொறி பறக்க பறக்க, விடாது முன்னேற வேண்டும்.

தங்கச் சுரங்கத்தை தேடி தோண்டியவர் சோர்வுற்று வெறுப்பாக சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த வேறொருவர் இரண்டு அடி தோண்டினார். கண்ணெதிரே தங்கப்பாளங்கள் பளபளத்தன என்ற உண்மைக் கதை சோர்வுக்கு துணையாக வரட்டும். இன்னும் இரண்டடி தோண்டியிருந்தால் தங்கப்புதையல் கிடைத்திருக்கும். சோர்வும், அசதியும் வெற்றியின் நேர் பகைவர்கள். அவர்களை விரட்டி அடி. தூர தூர... விரட்டி அடி.. வந்து விட்டது அதோ பார்... வெற்றி உன்னைத் தேடி வந்து விட்டது. அதற்கு நீ இன்னும் சில அடிகள் எடுத்து வைக்க வேண்டும். விடாதே... விடாதே... வெற்றி நிச்சயம்.

அடுத்ததாக தலைவன் என்பவனின் இயல்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.

தலைவன் என்பவன் யார் தெரியுமா ? “ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” . குறிக்கோளை அடைந்து விட்ட பிறகு அதை மேலாண்மை செய்யப்பழகிக் கொண்டவர் நாளை உலகை ஆளப்போகும் தலைவன். மேலாண்மை என்ற சொல்லில் அனேக அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அது என்ன ? விரைவில்....

Thursday, April 9, 2009

கையளவு இதயம் !

தங்கியிருந்த அறையிலிருந்து படிக்கும் அறைக்குச் செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழியில் சிறு கற்கள் பாவிய சாலை. காலையில் எழுந்து குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு தூய ஆடை உடுத்தி மண் தரையில் தவழ்ந்து செல்வேன். உச்சி வெயிலில் சாலையில் கொட்டிக் கிடக்கும் கற்கள் எல்லாம் நெருப்புக் கங்குகளைப் போல சுடும். மண் தரையோ அமிலத்தை உள் வாங்கியதாக கொதிக்கும். கிளாஸ் முடிந்ததும் தவழ்ந்து வருவேன். முட்டியில் கொப்பளித்து விடும். கைகள் சூட்டில் வெந்து சிவந்து கிடக்கும். கண்களில் கண்ணீர் ததும்பும். உள்ளுக்குள் வேறு படிக்க வேண்டுமென எரிந்து கொண்டிருக்கும் ஆசை தகிக்கும். நெஞ்சுக்குள் சூடு கிளம்பும். வியர்த்து விறுவிறுத்துப் போகும் உடம்பு சோர்வடையும். பல்லைக் கடித்துக் கொண்டு இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ வந்து விட்டது என்று துவண்டு விழும் கைகளும், முட்டியும் கடு கடுக்க தவழ்ந்து செல்வேன். சூட்டில் வெந்து போன முட்டிக்குள் சிறு மணல்கள் புகுந்து கொண்டு தவழ முடியாமல் விண் விண்ணென்று வலிக்கும். சுளீர் சுளீரென்று வலி உடலெங்கும் பரவும். வலி... வலி...

மழை ! சேறும் சகதியும் சேர்ந்து சாலையில் கிடக்கும். சுத்தமாக குளித்து விட்டு கிளாசுக்குச் செல்லும் வழியில் கைகால்கள் எல்லாம் சேறும் சகதியும் ஒட்டிக் கொண்டு வெயிட் ஏறி தவழ இயலாமல் பாரமாய் இருக்கும். சாப்பிடும் கைகள் சேற்றுக்குள் கிடந்து உழலும். சகதிக்குள் கிடக்கும் கப்பிக்கல் முட்டியில் குத்தும். வலி.. வலி... கண்கள் வலி தாங்காமல் தன்னாலே கண்ணீரைத் துப்பும். தவழ்ந்து செல்லும் போது ஏற்படும் வியர்வையில் கண்ணீரும் சேர்ந்து காணாமல் போய் எனது வைராக்கியத்திற்கு வலுச் சேர்க்கும்.

ஒரு முறை கல்லூரியில் நடந்த வன்முறையின் காரணமாக உடனடியாக விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம். கல்லூரியும், ஹாஸ்டலும் காலியானது. யாரையோ பிடித்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று சேர்ந்தேன். அப்போது நேரம் காலை பத்து மணி. எண்ணற்ற பஸ்கள் கடந்து சென்றன. ஒன்றிலும் ஏற முடியவில்லை. கூட்டம். கூட்டம். என்னைப் பார்த்ததும் பஸ் டிரைவர்கள் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றார்கள். சூடு கொப்பளிக்கும் சாலையில் சென்று அடுத்த பஸ்ஸிற்காக காத்திருப்பேன். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடும். மாலை ஆறு மணிக்குத்தான் ஒரு பஸ் நின்றது. ஏறினேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து ஊரு வர விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. ஏழு மணிக்கு ஊரின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த என் உறவுக்காரர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். உடம்பு சோர அசதியில் படுத்தேன். உணவு உண்டு இரு நாட்களாகி இருந்தன. இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை பஸ்ஸில் பிரேக் அறுந்து விட அனைவரும் வெளியே குதித்தோடி தப்பி விட்டனர். நான் எப்படி இறங்குவது? டிரைவரும், கண்டக்டரும் திட்டினார்கள். என்னால் இறங்க முடியாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. டிரைவரும் ஒரு வழியாக இறங்கிவிட பஸ் தானாக சென்று புளிய மரத்தின் மீது மோதி நின்றது. அந்தச் சூழ் நிலையிலும் பஸ் கம்பியினை இறுகப் பற்றிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறினால் உட்கார இடம் கிடைக்கவே கிடைக்காது. எனது இரு கைகளையும் எத்தனையோ செருப்புக் கால்கள் மிதித்திருக்கின்றன. சேறும் சகதியும், எச்சிலும், கோழையும் துப்பிக் கிடக்கும் பஸ் ஸ்டாண்டுகளில் தவழ்ந்து சென்று பஸ் ஏறுவேன். கொஞ்சம் கூட அசூசையோ வெறுப்போ கொண்டதில்லை. ஏன் எனக்கு மட்டுமிப்படி என்றும் எண்ணியதில்லை. எவரைப் பற்றியும் கவலையும் பட மாட்டேன். எனக்குத் தேவை கணிணி அறிவியலில் முதல் வகுப்பில் தேர வேண்டும். குறிக்கோளினை அடைய என்ன துன்பம் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவும், தைரியமும் நெஞ்சுக்குள் கனலாய் தகித்துக் கொண்டிருந்தது. முடிவில் அடைந்தே விட்டேன்.

கையளவு இதயம் ! அது தான் சாதனைக்கு கருவி !

Friday, April 3, 2009

என்னைக் காப்பாற்றுங்கள் : ஆசைத்தம்பியின் வேண்டுகோள் !




சலூனுக்குச் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணி இருக்கும். அழகான பையன் ஒருவனும், முடி திருத்துபவர் ஒருவரும் இருந்தனர். அப்போது தான் அந்தப் பையன் பையன் பார்சலைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். யார் என்று கேட்டேன். அவர் சொன்னது. இரண்டாவதாகப் பிறந்தவன். பெயர் ஆசைத்தம்பியாம். பத்தாவது வரை படித்திருக்கிறான். முதல் பையன் திருமணம் முடிந்த பிறகு அவனது திருமணத்திற்கு வாங்கி வைத்த கடனையும் தந்தையின் தலையில் சுமத்தி விட்டு மாமியார் வீட்டுடன் சேர்ந்து விட்டான்.

கடன் கட்டவும், சாப்பாட்டுக்கும் தினமும் திண்டாடி வருகிறேன். கடை வாடகை, இவனுக்கு செலவு என்பதால் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுகிறோம் என்று சொன்னார்.

ஆசைத்தம்பியை வேலைக்கு அனுப்பலாம் அல்லவா என்று கேட்டேன். அதற்கு அவர் இவன் காயம் பட்டால் ரத்தம் நிற்காமல் கொட்டும் நோயுடன் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறான். ஊசி போட 4000 ரூபாய் செலவாகிறது. அவ்வப்போது யாராவது உதவி செய்கிறார்கள் என்று சொல்லி வருந்தினார். என்ன நோய் என்று விசாரித்தேன். அதன் விபரம் கீழே..

MAJOR BLEED - USE FACTOR.
HEMOPHILIA A FACTOR DEFICIENCY 8% < 1%

இவனது பிளட் க்ரூப் : ஓ பாசிடிவ். அதாவது ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு. அதன் விளைவாக ஜாயிண்ட் எல்லாம் வீக்கமும் வலியும் ஏற்படுமாம்.

இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது ஆசைத்தம்பியின் நோய்க்கு நிரந்தர தீர்வை வழங்கும் மருத்துவ உதவியினையோ அல்லது அவனது நோய்க்கான மருந்துச் செலவையோ செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். என்னாலியன்ற உதவிகளை அந்தப் பையனுக்கு அவ்வப்போது செய்து வருகிறேன்.. இந்த நோய் நிரந்தரமாக அவனை விட்டு செல்ல ஏதாவது மருத்துவ சிகிச்சை இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்.

அவனது முகவரி :
ஆசைத்தம்பி. எஸ்
/பெ : சண்முகம். எஸ்
97/60, செல்வபுரம், பாப்பம்பட்டி பிரிவு, சிந்தாமணிப்புதூர் அஞ்சல்,
இருகூர் வழி, கோயம்புத்தூர் - 641103
தமிழ் நாடு, இந்தியா.
ஆசைத்தம்பியின் மொபைல் நம்பர் : +91 9788613690

HIS BANK DETAILS :
CORPORATION BANK, 1093, SINGANALLUR,
COIMBATORE
ACCOUNT NUMBER : SB01001449
(1093/SB/01/001449)
ACCOUNT NAME : S. AASAITHAMBI
RTGS IFSC CODE : CORP0001093

ஆசைத்தம்பியின் வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்களேன். ப்ளீஸ்.

Friday, March 27, 2009

அறிஞர் அண்ணாவின் பேச்சு - ஒலி வடிவில்

அண்ணாவும், அவரின் பேச்சும் என்னை வசீகரித்த ஒன்று. ஏன் என்று இந்த பேச்சினைக் கேட்டு விட்டு முடிவு செய்யுங்கள். மக்கள்..மக்கள்... மக்கள்... என்ன ஒரு தெளிவான பேச்சு. அழகான தமிழில் அவரின் கோர்வையான பேச்சு கேட்கக் கேட்க இன்பம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

Thursday, March 26, 2009

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே

என் மகள் நிவேதிதாவிற்காக இந்தப் பாடலும் படங்களும். பாடல் வரிகளும், படமும் கீழே. வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் சுட்டிச் செயல்கள் வெப்பப் பாலையில் தகிக்கும் வெயிலில் கிடைக்கும் நிழல் போன்ற சுகத்தை தர வல்லவை. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உண்மை. காதலுக்கும் மேலான ஒன்று என்றால் அது குழந்தைகள்.










பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துகள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி
அது தாய்மையைக் கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக்குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே



நன்றி : பாடலை எழுதியவர், இசையமைத்தவர், இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளர்

காயத்ரியின் மியூசிக் ஃபார் ரிலாக்‌சேஷன் - ஆன்லைனில்

காலை நேரங்களில் கேட்கக்கூடிய இசைத் தொகுப்பு. கேட்டு விட்டு பதிவிடுங்கள்.

காலை நேரத்து ரிலாக்சேசனுக்கு

நன்றி : ராகா

Monday, March 23, 2009

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி

ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?

மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?

”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.

மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.

ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.

மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.

ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.

விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...

Wednesday, March 18, 2009

எந்தக் காது கேக்காது !

மாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.

அம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.

சென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு சாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ?”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.

Wednesday, March 11, 2009

வாழ்க்கை என்பது.... !

இதுவரை எத்தனையோ பிளாக்குகள் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதையும் மீறி என் மனதுக்குள் புகுந்து கொண்ட பிளாக் இது. இந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதாமை என்னை நெருப்புக்குள் தள்ளுவது போல இருக்கிறது. எனது வேண்டுகோளை ஏற்பாரா ?

பிளாக்கின் முகவரி : இரு கண்கள் போதாது !
http://raasaiya.wordpress.com

அவரின் பிளாக்கில் இருந்து சில கவிதைகள் கீழே.. அனுமதித்தே ஆக வேண்டும் திரு ராசய்யா அவர்களே... தவறிருந்தால் மன்னித்து அருளவும். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் வெளிச்சம் காட்டுவதில் தவறேதும் இல்லையே ராசய்யா...
நன்றி : ராசய்யா.

என் அப்பாவிற்கு : எழுதியவர் திரு. ராசய்யா
--------------------------------------------------
கரிசலாய் இருக்கும் எனை
விதை நிலமென நினைத்து
விட்டுப்போன என் அப்பாவிற்கு,

ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து
ஆனந்தப்பட்டீர்கள்
ஒவ்வொரு காலையும்
என் காலனிகளை
பளபளப்பாக்கி
பரவசப்பட்டீர்கள்

பட்டம் வாங்கியபோது என்
பரம்பரையில் முதல்
பட்டதாரி என் மகனென
பார்த்தவரிடமெலாம்
சொல்லித்திரிந்தீர்கள்

வேலை தேடி
சென்னை சென்ற போது
சீமைக்கே அனுப்பியதாய்
சிலாகித்துக் கொண்டீர்கள்

வேலைக்கு சேர்ந்தும் என்
வீட்டுச் செலவிற்கு
பணம் அனுப்பினீர்கள்

இன்று,
நல்ல வேலை
நல்ல சம்பளம்
சொன்ன போதே
பிறவிப்பயனையடைந்தேன் என்றீர்கள்

நடக்கத்தானே கற்றுக்கொண்டேன்
வாழத் தெரிந்து கொண்டேன்
என நினைத்து விட்டுப்போனீர்களா?


மேலும் கவிதைகளையும் அவரது பிளாக்கினையும் படிக்க இவ்விடத்தில் சொடுக்கவும்

என்ன தேசமோ ?

தேர்தல் வந்து விட்டது. தொகுதிப் பங்கீட்டில் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். இலங்கைத் தமிழர்களின் கல்லறையின் மீது ஆட்சி அமைக்கத் துடிக்கின்றார்கள் அரசியல்வாதிகள். நீயா நானா என்று போட்டி போடுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சின்னா பின்னப்படுகிறது இலங்கைத் தமிழச்சிகளின் கற்பு. பச்சிளம் குழந்தைகளையும் விடாமல் நெருப்பு மழை பொழிந்து கொன்று வருகிறது இலங்கை. வேடிக்கை பார்க்கிறது தமிழகம். தன் மான உணர்ச்சியுடையோர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சுக்குள் ரத்தம் வடிய வடிய வேதனையோடு நாட்களைக் கடத்துகின்றார்கள் உண்மைத் தமிழர்கள்.

இந்தப் பாடலைக் கேட்டு வையுங்கள். மனம் சற்று ஆறுதல் பெறும்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

Sunday, March 8, 2009

கோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1

லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இவ்விடத்தில் சற்று நிற்க :

அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.

”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை




சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...

சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.

பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

Thursday, March 5, 2009

தேர்தல் வந்து விட்டது !



இனிமேல் செய்தி தாள்களில் தேர்தல் விதிமுறை மீறல் என்ற தலைப்பினை அடிக்கடிக் காணலாம். செய்தி தாள்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாகும். மீடியாக்கள் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எக்ஸ்குளூசிவ் பேட்டி என்று உடம்பு அதிரும் இசையில் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

கட்சியின் கொள்கைகள், கூட்டணி தர்மம் என்ற வார்த்தகளில் காணாமல் போய் விடும். நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள்.

விவாதங்கள் தூள் பறக்கும். இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் காணாமல் போய் விடும்.

நேற்று டைம்ஸ் நவ்வில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டி எடுத்தவர் மிஸ்டர் சிதம்பரமென்றே அழைத்தார். ஆச்சர்யம்.

பாகிஸ்தானுக்கு எதிராக புஜ பல பராக்கிரமத்தை காட்டக்கூடாது. தீவிரவாதம் ஒரு மைண்ட் கேம். அதை மூளையால் தான் வெல்ல வேண்டுமென்றுச் சொன்னார் சிதம்பரம்.

இந்தியாவின் ராஜ தந்திரம் சரிதான். ப.சிதம்பரத்தின் குரல் ஆளுமைத்தன்மை வாய்ந்தது. வெகு அலட்டலான குரலில் நறுக்கு தெறித்த வார்த்தகளில் அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. காந்தக் குரலோன்.

இந்தத் தேர்தலின் முடிவில் ஆட்சி அமைக்க, குதிரை பேரங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. பார்ப்போம்.

Wednesday, March 4, 2009

கவனமாய் இருங்கள்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2009

கருத்துச் சுதந்திரம் எங்கே




நீண்ட நாட்களாக பதிவு ஏதும் எழுத இயலவில்லை. காரணம் அதிகமான வேலைப்பளு. இனிமேல் ஏதாவது எழுதலாமென்றிருந்த வேலையில் இணைய தளத்தின் சுதந்திரத்துக்கும் வேட்டு வைத்து விட்டார்கள். அது என்னவென்று சொல்லவே பயமாக இருக்கிறது. ஜூனியர் விகடனில் நீதிமன்றம், பிளாக் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற போக்கு இந்திய ஜன நாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல். கேள்வியே கேட்க்கக்கூடாது என்கின்றன சட்டத்தைப் பாதுக்காக்கும் அமைப்புகள். பொதுமக்கள் நீதியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்து வருகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நீதி அமைப்புகளாலும், அரசியல்வாதிகளாலும், பெரும் பணக்காரர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் உண்மை.

சற்று ஆசுவாசப்படுத்த இந்தப் பாட்டை பாருங்கள். இது போன்ற சூழ் நிலைகளில் தான் இவ்வகைப் பாடல்களும், இசையும் மனிதனுக்கு ஆறுதல் தரும் போல. தவறுதான். வேறு வழி இல்லை.

நீங்களும் ஒரு பார்வை பார்த்து வையுங்கள். பெண்கள் அழகானவர்கள். அற்புதமானவர்கள்.