குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அரசியல் தொடர்பானவை. Show all posts
Showing posts with label அரசியல் தொடர்பானவை. Show all posts

Wednesday, March 11, 2009

என்ன தேசமோ ?

தேர்தல் வந்து விட்டது. தொகுதிப் பங்கீட்டில் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். இலங்கைத் தமிழர்களின் கல்லறையின் மீது ஆட்சி அமைக்கத் துடிக்கின்றார்கள் அரசியல்வாதிகள். நீயா நானா என்று போட்டி போடுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சின்னா பின்னப்படுகிறது இலங்கைத் தமிழச்சிகளின் கற்பு. பச்சிளம் குழந்தைகளையும் விடாமல் நெருப்பு மழை பொழிந்து கொன்று வருகிறது இலங்கை. வேடிக்கை பார்க்கிறது தமிழகம். தன் மான உணர்ச்சியுடையோர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சுக்குள் ரத்தம் வடிய வடிய வேதனையோடு நாட்களைக் கடத்துகின்றார்கள் உண்மைத் தமிழர்கள்.

இந்தப் பாடலைக் கேட்டு வையுங்கள். மனம் சற்று ஆறுதல் பெறும்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

Thursday, March 5, 2009

தேர்தல் வந்து விட்டது !



இனிமேல் செய்தி தாள்களில் தேர்தல் விதிமுறை மீறல் என்ற தலைப்பினை அடிக்கடிக் காணலாம். செய்தி தாள்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாகும். மீடியாக்கள் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எக்ஸ்குளூசிவ் பேட்டி என்று உடம்பு அதிரும் இசையில் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

கட்சியின் கொள்கைகள், கூட்டணி தர்மம் என்ற வார்த்தகளில் காணாமல் போய் விடும். நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள்.

விவாதங்கள் தூள் பறக்கும். இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் காணாமல் போய் விடும்.

நேற்று டைம்ஸ் நவ்வில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டி எடுத்தவர் மிஸ்டர் சிதம்பரமென்றே அழைத்தார். ஆச்சர்யம்.

பாகிஸ்தானுக்கு எதிராக புஜ பல பராக்கிரமத்தை காட்டக்கூடாது. தீவிரவாதம் ஒரு மைண்ட் கேம். அதை மூளையால் தான் வெல்ல வேண்டுமென்றுச் சொன்னார் சிதம்பரம்.

இந்தியாவின் ராஜ தந்திரம் சரிதான். ப.சிதம்பரத்தின் குரல் ஆளுமைத்தன்மை வாய்ந்தது. வெகு அலட்டலான குரலில் நறுக்கு தெறித்த வார்த்தகளில் அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. காந்தக் குரலோன்.

இந்தத் தேர்தலின் முடிவில் ஆட்சி அமைக்க, குதிரை பேரங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. பார்ப்போம்.