குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, August 27, 2012

லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் ( little mind big mind )


குரு வாழ்க ! குருவே துணை !!

ஒவ்வொரு பதிமூன்று செகண்ட்ஸ் வித்தியாசத்தில் மனிதனின் பிறப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. கால தேவனின் கணக்கு இது. ரெட்டையர்களின் ஜாதகத்தை பெரும்பாலானவர்கள் ஒரே ஜாதகம் என்றுதான் கணிப்பார்கள். ஆனால் அது சரியான கணிப்பாக இருக்க இயலாது. கட்டங்கள் மாறி விடும். இரண்டு நொடிகள் அல்லது இரண்டு நிமிடங்கள் வித்தியாசம் கூட கணிப்பின் கட்டங்களை மாற்றிப் போடும். ஜாதகக் கணிப்பின் உச்சகட்டம் - இன்று நடந்தது என்ன என்பதைச் சொல்வது பற்றி தான். பஸ்ஸில் வரும் போது என் நினைவில் நிழலாடிய, சிந்தித்ததை சரியாகச் சொன்னார் திரு கண்ணன் என்றார் எனது நண்பர்.  இவ்வுலக வாழ்க்கையில் மனிதர்களால் ஆறறிவு பெற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாத, புலனின்ப பிடிப்பு கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு முடிச்சுக்கள் இருக்கின்றன. இதோ அதில் ஒன்று.

ஆதிசங்கரர் தன் தாய்க்கு கோவையில் இருக்கும் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்து தன் தாய்க்கு முக்தி அளித்தார். இந்தியாவெங்கும் இந்து சமய  நெறியை ஒழுங்கு படுத்தி, அமைப்பியலாக்கிய மாபெரும் ஆன்மீக சக்தி உடையவர் ஏன் பேரூர் படித்துறைக்கு வந்தார்? வேறு எங்கும் கோவில்களே இல்லையா?ஏன் இங்கு வந்த அக்காரியத்தைச் செய்தார்? இதற்கு என்ன காரணம்? இன்னும் இன்னும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன நமக்குத் தெரியாமலே அல்ல புரியாமலே. 

கண்பார்வையின் தூரம் எவ்வளவு என்று கேட்டால் சிலர் நூறடி, சிலர் ஒரு மைல் என்றுச் சொல்வார்கள். இது அஞ்ஞானம். கோடானு கோடி ஒளிப்பயணத்தின் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தை நம் கண்கள் காண்கின்றன என்றுச் சொன்னால் அது மெய்ஞானம். உண்மையை அறிதல் என்பதுதான் மெய்ஞானம்.

அஞ்ஞானத்தினை குறுகிய அல்லது சிறிய அறிதல் என்றும், மெய்ஞானத்தை பரந்த, உண்மையை அறிதல் எனலாம். அதை லிட்டில் மைண்ட் பிக் மைண்ட் என்கிறார்கள் திபெத்தியன் புத்திஸ்ட்.

லிட்டில் மைண்ட், பிக் மைண்ட் என்பதன் விளக்கம் கீழே இருக்கிறது. யாரெல்லாம் லிட்டில் மைண்ட், யாரெல்லாம் பிக் மைண்ட் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இப்பாராவை படித்த பின்பு மெய்யறிவு என்கிற மெய்ஞானம் பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

Tibetan Buddhist teachers have a simple yet powerful teaching to open us to who we really are. It may be seen as the teaching of Little Mind-Big Mind; or in Tibetan, Sem Chungchung-Sem Chenpo . Little mind is everyday-mind for most of us - ranging from simple planning, coping, anxiety about minor or major things, escalating to self-preoccupation, self-contraction and narrowness.

Little-mind living results in spending a good portion of our time disconnected from who we really are, not acknowledging our inherent Buddha-nature. And at the end of a day of doing all that needs to be done, marked by moments of anxiety, impatience, anger and aggression, we feel exhausted or empty. As one teacher put it, "Our day job has changed from practising our enlightened qualities to covering them up."

Big mind, on the other hand, acknowledges and appreciates its own capacity for enlightenment. It is characterised by having confidence in our inherent joy, wisdom and compassion. Small mind deserves small attention; big mind deserves big attention. However, most of us end up doing just the reverse! If we do not trust in our own natural greatness, we can't easily recognise it in others.

Interestingly, psychologist Richard Alpert, better known as Ram Dass, laid out what he sees as the difference between the western psychological tradition and the Hindu/Buddhist model of mind.
If we experience our lives as if confined to a prison cell made up of the concepts of society, culture, family and personal experience that condition us, we may find it hard to see a way out. Perhaps some have orderly, comfortable cells, while some have messed up, cluttered cells. We name these states of relative order or disorder, being 'mentally well' or 'mentally ill'.

Most of western psychology, he says, acts like a kind of caretaker that comes in and tidies up the place, giving it better order and cleanliness; we remain, however, locked inside the cell. This, while it works in some sense, he considers the psychology of the ego, or what Buddhism calls the little-mind approach. Hindu or Buddhist psychology, through not only inter-ventions, but by including methods of mindfulness and meditation, shows the way to the door that leads us out of the cell - into the world of expansive potentiality, into what Buddhism calls Big Mind.

A story is told of one of Tibet's great female yogis, Machig Lobdron, who perplexingly used to cry one minute and laugh the next.

When someone asked her why she acted that way, she replied, "I laugh with delight because enlightenment always lies right below the surface of life, right in front of our nose. This is truly a joyous and wondrous discovery. I cry because beings are anxious, in pain, and depressed, when our enlightened qualities are so nearby, yet so covered up."

Living out of big mind does not require us not to give up everyday concerns - that would be too unrealistic - but to place them firmly in perspective. And this cannot happen without some slowing down and reflection. Then, we will need to make time and space for attention to big mind; and see how little mind will slip into second place - MARGUERITE THEOPHIL


- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்

நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் மர்கரெட் தியோபில்

Wednesday, August 22, 2012

ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார்


குரு வாழ்க !
குருவே துணை!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பன ந்தானா? பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றாம் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலோ - நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் - மகாகவி பாரதி

சித்தன் பாரதியின் பாடல்கள் புரியாத ஒன்றையும் புரிய வைத்திடும் செதுக்கல்கள். எதுவும் உண்மையில்லை, எல்லாமே சொற்பனம் என்கிறார். இப்பாடலை மூன்று நான்கு முறை தொடர்ந்து படியுங்கள். பாரதி ஒரு சித்தன் என்று உணர்வீர்கள்.

பெருவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தின் பேராற்றல் துண்டு துண்டாய் சிதறிய போது, ’எப்போதான் விடியுமோ, என்றைக்குத்தான் வருவானோ’வால் மனித வாழ்க்கைத் துவங்கிய அன்று முதல் இன்று வரை விரிவடைந்து கொண்டே செல்லும் வெடிப்பின் துகள்கள் ஒன்று சேரும் நாளுக்கு அடுத்து சிவத்தலம் தெரியும். வெடித்தவை பேராற்றல் ஈர்ப்பினால் மீண்டும் ஒன்று சேரும், பின்பு வெடிக்கும். 

மனித குல நன்மைக்கு,அண்டக்கல்லைத் தாண்டிச் சென்று திரும்பி வந்த மூவர் மட்டுமே இன்றைக்கும் மனித குலத்தின் அடையாள விருட்சமாய் திகழ்ந்து நிற்க, மனித கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த எல்லையின் எல்லைக்குள் தஞ்சமடைய.

பேராற்றலும், பெருமையும் உடைய நாட்டின் மகாராஜா அவர். அவரின் கொடையின் கீழ் சுகம், துக்கம், இன்பம், துன்பம் என்பனவற்றின் ஆட்சியின் கீழ் மனித குலம் வாழ்ந்து வந்தது. இந்த மகாராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகின் தத்துவமாய், அறிவின் சிகரமாய் திகழ்ந்த அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஒரு விபரம் கிடைத்தது.

21ம் வயதில் இக்குழந்தை சன்னியாசம் போய் விடும். ஆசையாய் பெற்ற மகவு இப்படிப்போக எந்த தகப்பனுக்குத்தான் மனது வரும். வேறொருவரிடம் கேட்டபோது அரண்மனைக்குள் வைத்தே வளர்த்து வாருங்கள், அந்த வயது வரும் வரைக்குள் என்று பாசிட்டிவ் அப்ரோச் கான்செப்ட் கிடைத்தது மன்னருக்கு. அதன் படி வாழ்க்கையின் அத்தனை சுகமும் அந்தக் குழந்தைக்கு அரண்மனைக்குள்ளே கிடைக்க ஆரம்பித்தன.

21 அகவையில் வீட்டின் வாயிலுக்கு வந்த மகாராஜாவின் மகன் கண்களில் பட்டது ஒரு சவ ஊர்வலம். ஒரு சவ ஊர்வலம் மன்னாதி மன்னனின் தவப்புதல்வனை சன்னியாசம் கொள்ள வைத்தது. (ஏன்?) எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பினார். அவர் புத்தர். எத்தனை எத்தனையோ புத்திசாலிகள், முனிவர்கள், அறிவாளிகள், உறவினர்கள் எல்லோரும் அவரை திரும்ப அழைக்கச் சென்றனர். சென்ற எவரும் வீடு திரும்பவில்லை. ஏன் ? மூவரில் சிவத்தலம் சென்று திரும்பிய சித்தார்த்தனின் அருட்வளைவில் சிக்கினர். ஆசையை துற என்றார் சித்தார்த்தன்.

மூவரில் ஒருவர் சித்தார்த்தன். மற்ற இருவர் யார்? 

ஓம் என்ற வார்த்தைக்குள் அகரம், உகரம், மகரம் மூன்றும் மறைந்து கிடக்க “ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார் ”.

குருவின் ஆசீர்வாதப்படி -

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Tuesday, August 21, 2012

தென்னாடுடைய தமிழனே

சமீபத்தில் தேனியில் எடுக்கப்பட்ட டிஎன்யே(DNA) டெஸ்ட்டில் உலகின் மூத்த டிஎன்யே இது என்று செய்தி வந்திருக்கிறது. தமிழன் தான் உலகின் மூத்த குடி என்று அர்த்தம் ஆகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாடு தான் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சீதோஷ்ண நிலை கொண்ட பூமி. வேறு இடங்களில் ஒன்று குளிர் அதிகமாய் இருக்கும். அல்லது வெப்பம் அதிகமாய் இருக்கும். மழை அதிகமாய் இருக்கும். ஆனால் நான்கு காலங்களும் மனிதர்கள் வசிக்கத் தகுந்த பூமியாக இருப்பது தமிழகம் தான். இப்படிப்பட்ட பூமியில் வசிப்போரின் சிந்தனைகள் தான் உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் நெறிமுறைகள்.

தமிழர்களின் அறிவுக்கும் திறமைக்கும் முன்னால் எந்த மனிதர்களும் ஈடு கொடுக்கவே முடியாது. வாழ்வியல் நெறி சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, கொடூரமானாலும் சரி, வீரமானாலும் சரி, தியாகமானாலும் சரி. எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு நிகர் தமிழர் தான். அப்பேர்பட்ட தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி நம் தமிழகம். தென்னாடு என்றழைக்கப்படும் ஆன்மீக பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள். எங்கு நோக்கினும் கோவில் விழாக்கள், பூஜைகள், புனஸ்காரங்கள் என்று ஆண்டு முழுமையும் கோவில் விழாக்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும். கோவில் விழாக்கள் இல்லையென்றாலும் குடும்பங்களில் சுபகாரியங்கள் நடந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் ஒன்று கூடிக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் தழைத்து, அறத்தில் திளைத்து வாழும் மனித கூட்டம் தான் தமிழர்கள் கூட்டம். தமிழர்கள் தியாக உணர்வும், நன்றியுணர்ச்சியும் உள்ளவர்கள்.

எத்தனை எத்தனை புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவைகள் எல்லாம் தமிழர்கள் வாழ்வியலில் புதை பொருளாய், மறை பொருளாய் மறைந்து கிடக்கும். எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. வானவியலில் இருந்து, மரணமில்லா பெருவாழ்வு வரை தமிழர்களிடம் அத்தனைக்கும் விடை கிடைக்கும். அதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மறைந்து, புதைந்து போய் கிடைக்கும் மெய்ஞான அறிவியலில் ஒரு சதவீதம் கூட மேல் நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவர் சுப்ரமண்யர் என்பார்கள். அப்பேர்ப்பட்ட சித்தர்கள் பூமியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதிருக்கும் எந்த சயின்ஸ் உபகரணங்கள் இன்றி உடம்பின் அத்தனை ரகசியங்களையும் சித்தர்கள் பாடி வைத்திருக்கின்றார்கள். இதெல்லாம் எப்படி அவர்களுக்குச் சாத்தியமாயிற்று என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளவே முடியாத மர்மம் தான் நம் முன்னே நிழலாடும். பிண்டோற்பத்தி பற்றிய ஒரு பாடல் கீழே,

கேளப்பாமனமான வாயுகூடி
கெடியானசித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப்பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம்பெறவே சொல்கின்றேன் நன்றாய்க்கேளு
தனியானநாதத்தில் பானன்தானே
தானென்றவிந்துவினிற் சமானன்கூடும்
தனியானசித்தத்தில் வியானன்சேரும்
 நானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்றபத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்துவந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாஅவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதன்கேளே

இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறது இப்பாடல். கருத்தரிக்கும் விதம் பற்றி விவரித்துச் செல்லும் பாடல்களை எங்கனம் உருவாக்கினார்கள்? ஆராய்ச்சிகள் செய்தார்களா? அதெல்லாம் அந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேள்விகளை முன்வைத்தால் மனதின் முன்பு மாபெரும் புதிர் முடிச்சொன்று வந்து நின்று நம்மை ஏளனம் செய்யும். உலகில் புரியாத எத்தனையோ மர்மங்கள் இருக்கின்றன. இதுவரையிலும் வெஸ்டர்ன் சயின்ஸால் மனித உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது என்று ஆதாரபூர்வமாய் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் சித்தர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

யோகிகள், சித்தர்கள் பரம்பரை நம் தமிழர்களின் வாழ்வியலில் தான் உண்டு. வேறு எங்கேனும் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது இப்பேர்பட்ட மனித குல வரலாறு. இப்படிப்பட்ட நம் தமிழர்களின் வரலாற்றில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்குத் தெரிந்த ஏதேனும் அனுபவப் பூர்வமாய் உணர்ந்த சில விஷயங்களை எழுத முயல்கிறேன். அதுவும் எனது ஆன்மீகக் குருவின் அளப்பறிய அன்பின் காரணமாக. அவரின் கட்டளைக்கு இணங்க அவரின் வழிகாட்டுதல்கள் படி எழுதுவேன்.

மனிதர்கள் தானாக பிறப்பதில்லை. தானாக வளர்வதில்லை. அவர்கள் பிறக்கவும், வளரவும் சக மனிதர்களின் உதவி தேவை. ஓவ்வொரு மனித உயிர்களின் கடமை பிற உயிர்களுக்கு உதவுவது மட்டுமே. அனுபவமும், அறிவும், உழைப்பும் பிறருக்காக வாழ வேண்டும். அந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை.

ராஜ ராஜசோழனும் வாழ்ந்தான், மன்னாதி மன்னர்களும் வாழ்ந்தார்கள் பெரும் பொருளாதாரத்துடன், அழிக்கவே முடியாது பலத்துடன். இன்றைக்கு அவர்கள் எங்கே? காலம் கொடுக்கும், எடுக்கும், கொடுக்கும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

Monday, August 13, 2012

6000 வருட பழமையான முட்டம் நாகேஸ்வரர் - முத்து வாளியம்மன்


எனது நெருங்கிய நண்பரொருவரின் உதவியால் ஆடிட்டர் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிசினஸ் விஷயமாய் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோசியம் பார்ப்பதாகச் சொன்னார். திருமணம் ஆன நாளில் இருந்து இது வரை நான் ஜோசியம் பார்க்க  சென்றதில்லை. என்  நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் எனது ஜாதகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது ஏதாவது பிரடிக்‌ஷன் சொல்லி வந்தார்கள். முதன் முதலாய் நானும் மனைவியும் ஆடிட்டரை ஜோசியம் சம்பந்தமாய் சந்தித்தோம்.

இன்று காலையில் மூன்று பேரிடம் பிசினஸ் பற்றிப் பேசி இருப்பீர்கள் சரியா? என்றார். மிகச் சரியாக ஆம் என்றேன். அதில் ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றார். அவரையும் கண்டு கொண்டேன் மிகச் சமீபத்தில். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் படமாய் கொட்டுகிறார் ஆடிட்டர். அசந்து போய் விட்டேன். என் வாழ்க்கையில் நடந்த இதுகாறும் எவரும் அறியாத சில சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்ட அசந்து தான் போய் விட்டேன். ஜாதகக் கணிப்பில் இப்படியும் சொல்ல முடியுமா என்ற பிரமிப்பு சூழ்ந்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டோம்.

மற்றொரு நாள், என்னை காளஹஸ்தி சென்று வரும்படிச் சொன்னார். அதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொன்ன போது, சரி பரவாயில்லை கோவை, ஆலந்துறையில் இருக்கும் முத்து வாளியம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்றார். பல கோவை நண்பர்களிடம் இக் கோவில் பற்றி விசாரித்தேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரிச் சொன்னார்கள். கோவில் இருக்குமிடமும் சரியாகத் தெரியவில்லை. காட்டுக்குள் இருக்கிறது என்றார் ஒருவர். கிராமத்திற்குள் இருக்கிறது என்றார் மற்றொருவர். இப்படியே சில பல விபரங்கள் கிடைத்தாலும் அது முழுமையானதாக இல்லை. சரி என்னவானாலும் பரவாயில்லை, ஆலந்துறை சென்று விசாரிப்போம் என்று கருதிக் கொண்டு கிளம்பினேன். 

வட்டத்தில் கால் வாசியை வெட்டினால் எப்படி இருக்கும் அப்படியான பூமிக்குள் நுழைந்தேன். மூன்று பக்கம் மலைகள் சூழ இருந்த ஆலந்துறையைக் கண்டுபிடித்து, அப்படியே செம்மேடு வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் “முத்து வாளியம்மனும், முட்டம் நாகேஸ்வரரும்” இவர்கள் குடிகொண்டிருக்கும் கோவிலையும் கண்டு கொண்டேன். சுற்றி வர மலை, பச்சைப் பசேல் செடிகள், மலையில் ஆங்காங்கே வெள்ளியை உருக்கி வார்த்தது போல நீர் வீழ்ச்சிகள், மேகங்கள் தழுவும் மலை முகடுகள், சில்லென்று காற்று, அவ்வப்போது தூறல்கள் என்று இயற்கை அன்னையின் அருள் தவழும் அற்புதமான இடம். மனச் சஞ்சலம் சுத்தமாய் அவ்விடத்தில் நம்மை விட்டு நீங்கி விடுகின்றது. சில்லென்று சூழ் நிலையில், மனம் ஒன்றிப் போய் இருவரையும் தரிசித்து விட்டு வந்தேன்.  

தடையால் நிற்கும் காரியங்கள், திருமணங்கள், முன்னோர்கள் செய்த பாவங்களால் அவஸ்தைப்படுவோர், துன்பத்தில் உழல்வோருக்கு அற்புத மனச் சாந்தியையும், ஆனந்தத்தையும் அருள்கிறார்கள் இருவரும். இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையம் இருக்கிறது. 

ஆறாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருவரும் இவ்விடத்தில் இருக்கின்றார்கள் என்றார் ஆடிட்டர். முத்துவாளியம்மனுடன் பிறந்தவர்கள் தான் மதுரை மீனாட்சியும், கன்னியாகுமரி அம்மனும். 

ராகு, கேது பரிகார ஸ்தலம். ராகு காலத்தில் சிவனுக்குப் பால் அபிஷேகம் செய்கின்றார்கள். கறந்த பசும் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். பல ஆதீனங்களும் மடத்தினரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை புதுப்பொலிவு பெறச் செய்திருக்கின்றார்கள்.

ராகு கேது பரிகாரம் தேடுபவர்கள் “முத்து வாளியம்மனிடமும், முட்டம் நாகேஸ்வரரிடமும்” செல்லலாம். நிச்சயம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். நிறைவேற்றியே தீருவார்கள்.

உங்களுக்கு அய்யன், அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் !

- கோவை எம் தங்கவேல்

Monday, August 6, 2012

ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம்




(சூரியனைச் சுற்றி ஏற்பட்ட அற்புத வளையம் )

என்றைக்கும் இளமை, மரணமில்லா வாழ்க்கைதான் அறிவியல் உலகின் முன்னால் இருக்கும் மிகப் பெரும் சவால். 

சிதம்பரம் நடராஜரின் சிலையின் உதவியால், சாதாரண மனிதரால் உணர்ந்த, பலரால் உணர முடியாத ஹிக்ஸ் போசான் அணுவைக் கண்டுபிடித்து விட்டாலும் மனிதன் என்றைக்கும் இளமையாய் வாழவும், மரணமே இல்லாத நிலையை அடையவும் இன்றைக்கும் எந்த அறிவியல் அறிஞராலும் எந்த வித கண்டு பிடிப்பையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சித்தர்களின் நூல்களில் மரணமே இல்லாத வாழ்க்கை வாழ குறிப்புகள் இருக்கின்றன என பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைக் கண்டுபிடிக்கக் கூட ஏதாவது ஒரு வெளி நாட்டுக்காரன் வர வேண்டும் போல. 

மருத்துவ உலகில் அபார வளர்ச்சி அடைந்தாலும் இயற்கை புதுப் புது நோய்களை உருவாக்கி மனித குலத்தை ஒட்டு மொத்தமாய் மேலுலகம் அனுப்பிக் கொண்டு வருகின்றது. இயற்கையை வெல்ல மனிதனால் என்றைக்குமே இயலாது என்பதுதான் இதுவரை மாற்ற முடியாத உண்மையாக இருந்து வருகிறது.

ஆனாலும் மனித குலம் என்றும் இளமையாய் வாழ பல்வேறு வழிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதில் ஒன்றுதான் டிராகுலா. இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் என்றும் சொல்லலாம்.

இளமையான உடல்களின் ரத்தத்தைக் குடித்தால் என்றும் இளமையோடு வாழலாம் என்று இரவில் இளமையானவர்களைத் தேடிப் பிடித்து கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன ரத்தக்காட்டேறிகள் ஹாலிவுட்டின் பல படங்களில். இக்கருத்தில் உண்மை இருக்கிறதா என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.

இளம் வயதுடையவர்களின் இரத்தத்தில் “டெல்டா” என்று புரோட்டின் அதிக அளவில் உருவாகி காயங்கள், இரத்த அணுக்களை புதுப்பித்து, சரி செய்து உடம்பை மேலாண்மை செய்து பொலிவுடன் திகழ உதவுகின்றன என்று கண்டுபிடித்தார்கள். இந்த “டெல்டா” முதியவர்களின் இரத்தத்தில் குறைந்த அளவு காணப்படுவதையும் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

முதிய வயதுடைய எலி ஒன்றையும், இளமையான எலி ஒன்றையும் பிடித்து இரத்தங்களை மாற்றி மாற்றிச் செலுத்தியதில் முதிய எலியின் செயல்பாடுகள் அதிகரித்து இருந்ததையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி சொல்லும் விஷயம் என்னவென்றால் இளமையான ரத்த அணுக்கள் முதியவர்களின் உடம்பில் மாற்றங்களைச் செய்கின்றன என்பதுதான். 

அதாவது ட்ராகுலாக்கள் உண்மையாக இருக்கலாம் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன.



உதவி : ஹிஸ்டரி டிவி சானல்

-




Wednesday, August 1, 2012

தமிழ் சினிமாவில் புத்திசாலிகளின் பிசினஸ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புரட்சிகள் நடக்கும். திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரின் வாரிசுகள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி சர்ச்சைகளையும், வெற்றிகளையும் குவித்தனர். கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் இறங்கி வெற்றிகளைக் குவித்தன(உண்மையா என்று தெரியவில்லை). ஆனால் பெரும்பாலான கார்ப்பொரேட் நிறுவனங்களின் சினிமாக்கள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. சன் க்ரூப்பின் முதல் படம் மட்டுமே பெருத்த லாபத்தைக் கொடுத்தது என்று சினிமா இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள்.

கார்பொரேட் நிறுவனங்களின் சட்டங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் அதுவும் தமிழ் சினிமா உலகத்தில் பெரிய வெற்றியைத் தந்திட முடியாது. ஹாலிவுட் சினிமாவின் உருவாக்கம் போல தமிழ் சினிமாவில் பெரும் நிறுவனங்கள் சாதிக்க வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

கிட்டத்தட்ட 31 சாட்டிலைட் சானல்கள், ஏழு பத்திரிக்கைகள், 48 எஃப் எம் சானல்கள், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் சன் குழுமத்தினால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இதை விட பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது ஏதும் இல்லை. சமீபத்தில் தான் சினிமாவின் பெரிய சாதனையாளர் ஒருவர் “கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நின்று விட்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசினார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்கள்தான் அதிகம் இழந்திருக்கின்றார்கள். ஆனால் டெக்னீசியன்களும், நடிகர்களும் பெரும்பான்மையானவர்கள் எவரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைத்தான் சந்தித்திருக்கின்றார்கள் என்றுச் சொல்வார்கள். ஆனால் சிலர் சினிமாவை தன் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமான பிசினஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சன் குழுமத்தின் மூலம் நில மோசடியில் கைதான சக்சேனா அவர்கள் தற்போது படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்திருக்கின்றார். அவரின் பேனரில் தினத்தந்தியில் “சாருலதா” படத்தின் பெயர் பளிச்சிடுகிறது. ஏற்கனவே இருக்கும் சினிமா அனுபவத்தில் வெகு எளிதாக இந்த பிசினஸ்ஸை அவரால் வெற்றிகரமாக நடத்தி விட முடியும். ஏரியாவிற்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைத்தால் போதுமே. அதைத்தான் இவரைப் போன்றவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் டிவி சார்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டு, நல்ல லாபத்தோடு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தின் பெரிய பஸ் கம்பெனி ஒன்று சினிமா வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களாம்.

புத்திசாலிகளின் பிசினஸ் இப்படித்தான் இருக்கும்.

கதை கேட்க வேண்டியதில்லை, இயக்குனருடன் சண்டை பிடிக்க வேண்டியதில்லை இப்படி பலப்பல தயாரிப்புப் பிரச்சினைகள் இல்லாமல் சினிமாவில் பிசினஸ் செய்து லாபம் ஈட்டுவது என்பது புத்திசாலிகளின் பிசினஸ்தானே.

- கோவை எம் தங்கவேல்