குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, November 26, 2009

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை முன்வைத்து !

ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் சமீபத்தில் படித்தேன். அந்த நாவலில் ஒரு கேரக்டர், அதன் பெயர் முத்தம்மை. அவலட்சனமானவள். முத்தமாளுக்கு வேலை பிச்சை எடுப்பது. அவளுக்கு பிள்ளை பிறக்க வைத்து, அந்தப் பிள்ளைகளை பெற்று பிச்சைக்கு விடுவதுடன், அந்தப் பிள்ளைகளை வேறு ஆட்களுக்கு விற்றும் விடுவார் பண்டாரம்.

முத்தம்மையோடு அகோரமானவர்களை இணைய விடுவது (அரேஞ்டு மேரேஜ்ஜுகள் நினைவுக்கு வருகிறது) அதன் காரணமாய் பிறக்கும் உருப்படிகளை வைத்துப் பிச்சை எடுப்பது போன்ற சம்பவங்களை நாவலில் எழுதி இருப்பார்.

நாவலின் கடைசியில் முத்தம்மையோடு இணைய விடுவது அவள் பெற்ற பிள்ளையை. படிக்கவே படுபயங்கரமாக இருக்கும் அந்த நாவல் எனக்குள் உருவாக்கிய கேள்விகள் பலப்பல.
அதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் இங்கே.

நாமும் இப்படித்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து முதலாளித்துவ பகாசுர கம்பெனிகளிடம் வேலை என்ற பெயரில் அடிமைகளாய் நம் பிள்ளைகளை விற்கின்றோமா?

நாம் தான் முத்தம்மாளா?


ஜெயமோகன், ஏழாம் உலகம்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.