குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 26, 2009

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே

என் மகள் நிவேதிதாவிற்காக இந்தப் பாடலும் படங்களும். பாடல் வரிகளும், படமும் கீழே. வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் சுட்டிச் செயல்கள் வெப்பப் பாலையில் தகிக்கும் வெயிலில் கிடைக்கும் நிழல் போன்ற சுகத்தை தர வல்லவை. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உண்மை. காதலுக்கும் மேலான ஒன்று என்றால் அது குழந்தைகள்.










பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துகள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி
அது தாய்மையைக் கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக்குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே



நன்றி : பாடலை எழுதியவர், இசையமைத்தவர், இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளர்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.