குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 17, 2022

மனைவியுடன் உறவு குற்றச் செயல்

ஆண்கள் உலகம் சந்திந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுள் பெரிது பாலியல் குற்றங்கள். வேறு வேலையே இல்லாமல் கையில் குஞ்சாமணியைப் பிடித்துக் கொண்டு, கண்களில் தென்படும் பெண்களை எல்லாம் கற்பழிக்கத் திரிவது போலவே ஆண்களால் நடத்தப்படும் ஊடகங்கள் காம வெறிபிடித்தவர்கள் ஆண்கள் என்பது போல செய்திகள் வெளியிட்டு வருவது சாபக்கேடு. 

ஆண்களுக்கு ஆண்களே விரோதி.

சில ஆண்கள் பெண்ணீயம் பேசுவார்கள். பெண்ணீயம் பேசும் ஆண் கொக்கி. சிக்கும் சிலைகளைச் சிதைப்பது நோக்கம். 

விஷ்ணுபுரம் விருது புகழ் இலக்கியவாதிகளின் கொக்கி போல.

பெண்கள் அழகு சாதனப் பொருட்களின் 2021 ஆம் ஆண்டின் மொத்த மதிப்பு 288 அமெரிக்க பில்லியன் டாலர்கள். உடைகள் வேறு கணக்கு. மயக்கம் வரும்.

மில்லியன் டாலர் கணக்கில் சுனோ, பவுடர் இத்தியாதிகளை அப்பிக் கொண்டிருக்கும் பெண்கள், யாருக்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது இந்திய அரசியலமைப்புக்கே வெளிச்சம்.

ஆண்கள் மட்டுமே பெண்களின் மீதான கொடும் செயல்களைச் செய்வதாகச் சொல்கிறார்கள். 

பெண்கள் உத்தமர்களின் உருவமாய் திகழ்கிறார்களாம். நம்பிக் கொள்ள வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ஆண்கள் பாலியல் குற்றவாளிகளா? பெண்களா? என்று கேட்டால், அவர் தன் இனத்துக்குத்தான் ஆதரவாக இருப்பார். அவர் ஒரு ஜி.ஆர்.சு.

ஹெலிகாப்டர் வேண்டும், தனி வீடு வேண்டும், லட்சங்களில் சம்பளம் வேண்டும், மாமியார்-மாமனார் இருக்க கூடாது, அக்கா-தங்கை ஆகவே ஆகாது, இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு மணாளனைத் தேர்த்தெடுப்பார்கள் பெண்கள்.

கட்டிக்கிட்டு கூட்டிக்குப் போய் பெட்டில் படுக்க வைத்து, பூக்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி, காலையில் ஒருவாட்டி, மாலையில் ஒரு வாட்டி, நடு இரவில் ஒரு வாட்டி என சாமி கும்பிட்டு கண்ணில் இட்டு பயபக்தியுடன் கும்பிடணும் போல. அப்படி கும்பிடுபவன் தன் நல்ல கணவன்.

கல்யாணம் கட்டிக் கிட்டு என்னதான் சுகத்தை ஆண்கள் அடைகிறார்கள்? கடைசி வரை பழிதான் சுமக்கின்றார்கள். 

ஒவ்வொரு மனைவிக்கும் முதல் எதிரி அவரவர் கணவன் மட்டுமே. 

என்னதான் செய்வது ஆண்கள்? சொன்னால் பளிச்சென்று கேட்டு விடுவான்கள் என்பார் என் தோழி.

ஆண்கள் தங்களின் இனத்துக்கு செய்யும் உபகாரமாக ஒரு வேண்டுகோள்.

இனிமேல் பெண்களைக் கவனிக்காதீர்கள், பார்க்காதீர்கள், பாராட்டாதீர்கள். நடிகைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்காதீர்கள். 

ஒரு மாதம் விரதம் இருந்துதான் பாருங்களேன். அட்லீஸ்ட் ஒரு வாரமாவது இருங்களேன் பார்ப்போம்.

என்ன கெட்டுப் போகப் போவுது? 

ஆண்களுக்கு கற்பு இல்லையா? என்ன கற்பா? அப்படின்னா என்னாப்பான்னு பிஜேபி குஷ்பூ கேட்பார். 

பீதி உண்டாகிறது டிவிக்காரனுவ குரைக்க ஆரம்பிப்பானுங்களே என.

கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். 

செய்தி: தினமணி 17.09.2022 கோவைப் பதிப்பு

மனைவியைக் கட்டாயப்படுத்தினால் குற்றம், கணவனைக் கட்டாயப்படுத்தினால் குற்றமில்லையாம்.  இதையெல்லாம் யார் கேட்பது?

நம்ம பிரபல நீதிபதி மாரிதாஸ் சவுக்கு சங்கர் புகழ் - ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் வழக்குப் போட வேண்டும். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.