குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, September 23, 2016

ஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையாடல்

காதலன் தன்னுடைய காதலியின்
வீட்டுக் கதவைத் தட்டுகிறான்
உள்ளிருந்து குரல் வருகிறது
“யாரது?”
காதலன் கூறுகிறான்

”நான் உன் காதலன்
என்னைத் தெரியவில்லையா?
என்னுடைய காலடி
ஓசையை மறந்து விட்டாயா?
என்னுடைய குரலும்
உன் நினைவை விட்டு
நீங்கி விட்டதா?”

உள்ளிருந்து குரல் வருகிறது

“கதவு உனக்காகத் திறக்கப்படுவதற்கு
இன்னும் நீ தகுதி பெறவில்லை
இன்னும் உனக்கு
அந்த அதிகாரம் வரவில்லை”

அந்தக் காதலன் திரும்பிச்
சென்று விட்டான்.
பல வருடங்கள் திரிந்தலைந்தான்.
காதலைத் தேடுவதில்
அவன் முழு மூச்சுடன்
ஈடுபட்டான்
காதலைத் தெரிந்து கொள்ள
முயன்று
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் காதலைத் தெரிந்து கொண்டான்.

அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
” நீயே தான்!”
உடனே கதவு திறக்கிறது.

ஜாலாலுத்தீன் ரூமியின் கவிதை இது. ஓஷோ இந்தக் கவிதை முடிவடையவில்லை என்கிறார். இன்னும் நான்கு வரிகள் சேர்ந்திருந்தால் நலமாயிருக்கும் என்கிறார். நீ என்றால் கதவு திறந்திருக்கக் கூடாது என்கிறார் ஓஷோ.

( ஜலாலுதீன் முகமது ரூமி - 1207 - 1273ல் வாழ்ந்த மிகச் சிறந்த கவிதையாளர்)

நீயும் நானும் எதிரெதிர் பதங்களே, ‘நீ’ என்பதன் முழு அர்த்தமும் ‘நான்’ என்பதிலேயே அடங்கியுள்ளது. எதுவரை ‘நான்’ உள்ளதோ அதுவரை ‘நீ’ யிலும் அர்த்தமுண்டு. ‘நான்’ என்பதே இல்லை என்றாகும் போது ‘நீ” என்பது யார்? என்கிறார் ஓஷோ. காதலனும் இருக்கக்கூடாது காதலியும் இருக்ககூடாது என்று முடித்து விடுகிறார் ஓஷோ. 


(ஓஷோ - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மிகச் சரியான மனிதர்)

ஜலாலுத்தீன்  ரூமியை நீங்கள் சந்தித்தீர்களோ இல்லையோ ஓஷோ, இந்தக் கவிதைக்கு ஒரே ஒரு வார்த்தையில் முடிவுரை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வந்தது இதுவாகக் கூட இருக்கலாம் அல்லவா ஓஷோ?

மீண்டும் அந்தக் கவிதை...............!


அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
”காதல்”
உடனே கதவு திறக்கிறது.

சரிதானே ஓஷோ?

நன்றி : ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் மற்றும் ரூமி

Sunday, October 26, 2008

நேரமாகிக் கொண்டிருக்கிறது !!!!

எவ்வளவோ ஆசைகள்...
என்னென்னவோ விருப்பங்கள்...
இதனிலும்
படிக்க பல மணி நேரம்...
வேலைக்காக பல மணி நேரம்..
ஆன்மீகத்துக்காக பல மணி நேரம்..
மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக,
நண்பனுக்காக என்று பல மணி நேரம்...
இப்படி எத்தனையோ மணித்துளிகள்
பிறருக்காய்...
எனக்கான நேரம் வந்த போது,
என் வாசலில்
மரணம் வந்து நின்றது....

ஆகையால், எனக்கான நேரத்தில்
என்னை வாழவிடு விதியே....
நேரமாகிக் கொண்டிருக்கிறது.......

Wednesday, June 18, 2008

வாஞ்சி நாதன் !

எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்

நரம்புகள் முறுக்கேற
ரத்தம் கொதி கொதிக்க
உடம்பு எரிய எரிய
உணர்ச்சிகள் வெடித்து சிதறுகிறது
உன் தியாகத்தை நினைக்கையில்

மேகம் தனக்காக மழை பெய்வதில்லை.
காற்று தனக்காக வீசுவதில்லை
நீதான்... நீதான்... நீதான்
மேகம்...
நீதான் காற்று...
நீதான் இந்தியாவின் ரத்தம்
நீதான் இந்தியாவின் மூச்சு
நீதான் இறைவன்.....

மணியாச்சி ரயில் நிலையத்தில்
பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை
சுட்ட தமிழன் , இந்தியன்
வாஞ்சி நாதனுக்கு ஒரு சல்யூட்

Wednesday, April 30, 2008

தலைப்பில்லா கவிதையின் தலைப்பு

என் நண்பர் குருவிற்காக எழுதிய தலைப்பில்லாத கவிதையின் தலைப்பு : அன்பு

உலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல், எவரின் மீதும் காட்டக்கூடியது - அன்பு.
அன்பே கடவுள் என்பது அனைத்து மதத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மனிதனுக்கு ஞாபக மறதி அதிகமாதலால் சண்டையும், சச்சரவும், கொலையும், கொள்ளையும் நடத்தப்படுகிறது..

ஏன் இந்தக் கொலை, கொள்ளை என்பதற்கு மிகவும் ஆதாரபூர்வமான ஒரு சிறுகதை விரைவில் எழுதுவேன்.

Sunday, April 27, 2008

தலைப்பில்லாக் கவிதை - என் நண்பர் குருவின் நினைவாக

----------------------------------------------------------
குளிர் காலத்தில் போர்வைக்குள்
இதமாய் சுருண்டிருந்த போது
போர்வைக்குள் புகுந்த
கரு நாகமாய் நீ .... !

எண்ணங்களில்
தீப்பிடிக்க வைக்கிறாய்
நியூரான்களில் புகுந்து கொண்டு
அகல மறுக்கிறாய் நீ.... !

சிரிப்பை மறந்த எனக்கு
கண்களில் அருவி
கொட்ட வைத்து
இரவில் உறக்கமின்றி
புரள வைத்தவன் நீ ... !


அம்மாவா ? அப்பாவா ?
அண்ணனா ? தங்கையா ?
காதலியா ? காதலனா ?
யார் நீ.... !


யார் நீ ... !
முகம் தெரியாத
அரக்கனா நீ.... !

Tuesday, April 22, 2008

மொழி ஒரு பயங்கரவாதி

மாடு கத்துகிறது !
ஆடும் கத்துகிறது !
மனிதன் பேசுகிறான் !
மனிதனைக் கொன்றால
கொலை !
மிருங்கங்களைக் கொன்றால்
கொலையில்லை !
வேறுபாடு ! மொழி !