குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, April 27, 2008

தலைப்பில்லாக் கவிதை - என் நண்பர் குருவின் நினைவாக

----------------------------------------------------------
குளிர் காலத்தில் போர்வைக்குள்
இதமாய் சுருண்டிருந்த போது
போர்வைக்குள் புகுந்த
கரு நாகமாய் நீ .... !

எண்ணங்களில்
தீப்பிடிக்க வைக்கிறாய்
நியூரான்களில் புகுந்து கொண்டு
அகல மறுக்கிறாய் நீ.... !

சிரிப்பை மறந்த எனக்கு
கண்களில் அருவி
கொட்ட வைத்து
இரவில் உறக்கமின்றி
புரள வைத்தவன் நீ ... !


அம்மாவா ? அப்பாவா ?
அண்ணனா ? தங்கையா ?
காதலியா ? காதலனா ?
யார் நீ.... !


யார் நீ ... !
முகம் தெரியாத
அரக்கனா நீ.... !

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.