குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, April 26, 2008

எனக்குப் பிடித்த பாடல்கள் - 1

காந்தர்வ கன்னி ஒருத்தி இந்திரன் சபையிலே நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது அவளின் காதலன் அழைக்கின்றான். காதலன் நினைக்கும் போதெல்லாம் வருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தபடியால் காதலனின் அழைப்பை மறுக்கவும் முடியாமல் கடமையையும் மறுக்க இயலாமல் தனது தவிப்பை பாடலாக பாடுகின்றாள்.

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே.....

எழில்தரும் ஜோதி மறந்திடுவேனோ ?
இதமதில் நானே இருந்திடுவேனா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

காதலினாலே கானத்தினாலே
காதலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீயழைத்தாயே
சோதனையாகவே நீயழைத்தாயே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

அழைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே



படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்
தேமதுர குரலோசை : சுசீலா
பாடல் வரிகளில் காதலியின் தவிப்பை எழுதியவர் : ராமையா தாஸ்
காலத்தால் அழிக்கமுடியாத இசைவெள்ளத்தில் நீந்தவைத்தவர் : ஆதி நாரயண ராவ்

பாடல் என்றால் இது பாடல்.. புல்லாங்குழலில் ஒரு தொடக்கம் வரும் பாருங்கள். நம்மை வானில் மேயும் மேகங்களோடு பறக்கவைக்கும். பாடும் குரல், என்ன ஒரு இனிமை. தாலாட்டும், தாலாட்டும்..காதலிக்காதவருக்கும் காதலை வரவைக்கும். நமக்கும் இப்படி பட்ட ஒரு காதலி வேண்டுமென உள்ளத்தில் கையை விட்டு பிசையும். ஏங்கவைக்கும்.....

அந்த சுகானுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா ? உங்களது கணிப்பொறியில் மீடியா பிளேயர் அல்லது ரியல் பிளேயர் இருந்தால் சொடுக்குங்கள் கீழே. உள்ளத்தை உருக வைக்கும் ஒரு காதலி பாடுவாள்...