குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, February 29, 2024

மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறதா மோடி அரசு?

பாஜக ஆளும் மாநிலங்களில் B.A., B.Sc.,B.Com., ஆகிய படிப்புகளை நான்கு ஆண்டுகளாக மாற்றி விட்டார்கள். ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளை நான்கு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புகளாக மாற்றி விட்டார்கள். சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு பொதுத்தேர்வு. 

பி.காம் படிப்புக்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா மாநிலங்களின் மாணாக்கர்கள் மூன்று ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் பாஜக மாநிலங்களில் படித்த மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படித்திருப்பார்கள். வெளி நாடுகளில் மேற்படிப்புக்குச் செல்லும் மாணாக்கர்களுக்கு பெரிய பிரச்சினைக்கு வித்திடும். இந்த சிறு தெளிவு கூட இல்லாமல் இருக்கிறது மோடி அரசின் கல்வித்துறை.

இது மட்டுமல்ல மோடி அரசு பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்ட கல்வி நிலையங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. பெயர் மாற்றத்தால் என்ன நடந்து விடப்போகிறதோ தெரியவில்லை. 

தேசிய தேர்வு முகமை என்ற ஒன்றிய அரசு நிறுவனம்,  ஐ.ஐ.டி(#IIT) மற்றும் என்.ஐ.டி(NIT) சேர்க்கைக்காக வருடம் தோறும் நடத்தும் நுழைவுத் தேர்வில் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஒருவருக்கும் ரூ.500 கட்டணம் என வைத்துக் கொண்டால் ஒரு நுழைவுத் தேர்வுக்கு சுமார் 60 கோடி கட்டணத்தைக் கொள்ளை அடிக்கிறது தேசிய தேர்வு முகமை.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிறுவன கார்ப்பொரேட்டுகளுக்கு பயனளிக்கு விதமாக தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ.மெயின் தேர்வு ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் நடத்துகிறார்கள். 

ஏன் தெரியுமா? 

ஏப்ரல், மே மாதங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முடிந்த பிறகு ஜே.இ.இ மெயின் தேர்வு வைக்கலாம். ஆனால் நுழைவுத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படுகிறது.

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டிக்கான மாணவர் சேர்க்கை ஜூனில் தான் நடக்கிறது. 

அதற்குள் ஏன் அவசரப்படுத்துகிறது ஒன்றிய அரசு?

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு, நுழைவுத் தேர்வை நடத்தி, ரிசல்ட் வெளியாகும் போது, மதிப்பெண் குறைந்தால் மாணவர்களுக்கு பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது மோடி அரசு.

இதற்குப் பின்னால் பெரும் பிசினஸ் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், ஜனவரி,பிப்ரவரியில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து, மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்கச் செய்ய உதவும் மார்க்கெட்டிங் உத்திக்காகவே ஜனவரியில் நடத்துகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஜே.இ.இ.மெயின் தேர்வில் 2013 முதல் 2018 வரை கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் தலா 30 கேள்விகள் கேட்க்கப்பட்டது. இப்போது தலா 20 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் மற்றும் 10 நியூமெரிக்கல் கேள்விகள் எனவும், இதில் ஐந்து கேள்விகளுக்குப் பதில் எழுதினால் போதும் என்கிறார்கள். 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் இருக்கும் போது, இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மா நில மாணவர்கள் எப்படி சரியாக பதில் அளிக்க முடியும்? என்று யோசிக்க மாட்டார்களா? யோசிக்க மாட்டார்கள். 

தேசிய தேர்வு முகமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வெளியிடுவதை சதவீதத்திலிருந்து சதவிகித முறைக்கு மாற்றி மக்களை ஏமாற்றுகிறது.

The key difference between percentage and percentile is the percentage is a mathematical value presented out of 100 and percentile is the per cent of values below a specific value. The percentage is a means of comparing quantities. A percentile is used to display position or rank.

ஆனந்த விகடனில் வெளியான JEE தேர்வு என்ற பெயரில் நடக்கும் மோசடி பற்றி தா. நெடுஞ்செழியன் அவர்களின் கட்டுரையை வாசித்த போது அதிர்ச்சி உண்டானது. அக்கட்டுரை எப்படி மோடி அரசு இந்திய மாணவர்களைப் படிக்க விடாமல் நுழைவுத் தேர்வு நடத்தி விரட்டி அடிக்கிறது என்ற அப்பட்டமான உண்மையை உரைத்தது. இதோ அவரின் கட்டுரையில் ஒரு பாரா மக்களுக்காக...!


மோடி அரசு என்ன சாதிக்க துடிக்கிறது? ஏன் இப்படியான குழப்பமான நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க முயலுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் நயவஞ்சக திட்டம் தான் என்ன? 

எதுவும் புரியவில்லை.

ஒரே நாடு, ஒரே கல்வி எப்படி மொழி வழி மாநிலங்களில் சரியாகும்? 

மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பிடுங்கிக் கொண்டு, இத்தனை அக்கிரமங்களை ஏன் நிகழ்த்துகிறது. 

பெற்றோர்களுக்கு ஏன் இத்தனை மன உளைச்சலைத் தருகிறது மோடி அரசு? 

ஏன்?

இதோ கீழே கட்டுரையாளரின் பதில்....!

நன்றி : ஆனந்த விகடன், நன்றி கல்வியாளர் திரு. நெடுஞ்செழியன். இப்பதிவு ஆனந்த விகடனின் கட்டுரை எல்லோருக்கும் சென்று சேர வேண்டுமென்று சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.  முழுக்கட்டுரையை ஆனந்த விகடனில் படிக்கவும். 

வாழ்க வளமுடன்..!


கட்டுரை இணைப்பு :

https://www.vikatan.com/education/higher-education/karpathu-ulagalavu-educational-series-39-jee-exam-fraud?utm_source=magazine-page

Monday, June 14, 2021

வேலை வேண்டுமா? இந்திய அரசின் வேலைவாய்ப்பு இணையதளம்

அனைவருக்கும் இனிய வணக்கம். கோவிட் நோய் தொற்றின் காரணமாக வேலை இழந்தவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் இந்தியாவில் எங்கெங்கு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன, சம்பளம் எவ்வளவும், ஆன்லைனில் வேலைக்குத் தேர்வு செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வேலை பெறுவது ஆகியவற்றை இந்திய அரசின் வேலைவாய்ப்புத் துறை செய்து வருகிறது.

அரசு வேலை மட்டுமல்ல தனியார் துறையினரின் பங்களிப்பில் மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை வழங்கி வரும் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமென்று இப்பதிவினை எழுதுகிறேன்.

இந்தச் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். பதிவை பகிருங்கள். யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்தச் செய்தி. அவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை உருவாக்கலாம். அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை தெரிவித்து விட்டால், அவரவர் திறமைக்கு ஏற்ற வேலையினைப் பெற்று மகிழ்வார்கள்.

மத்திய அரசின் இணையதள முகவரி : https://www.ncs.gov.in

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்வது?

தேவையானவை : 

ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள் அட்டை,பாஸ்போர்ட், டிரைவிங்க் லைசென்ஸ் அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் இதில் ஏதாவது ஒன்று  இமெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பர்.

வேலை தேடுவோர் எப்படி பதிவு செய்யலாம் என்ற வீடியோ இருக்கிறது. அதை ஒரு முறை பாருங்கள். இமெயில் முகவரி மற்றும் மொபைல்  

கீழே காட்டப்பட்டிருக்கும் படிவத்தை வேலை தேடுவோருக்கானது.


 

பதிவு செய்த பிறகு இணையதளத்தின் உள்ளே சென்று மாநிலம் வாரியாக, செக்டார் வாரியாக வெளியாகி இருக்கும் வேலை வாய்ப்பில் பொருத்தமான வேலையைத் தேர்வு செய்து அப்ளை செய்யுங்கள். 

அதுமட்டுமின்றி வேலை வாய்ப்பு முகாம்கள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அதிலும் கலந்து கொள்ளலாம்.

தனியார் ஏஜென்சியிடம் பலரும் ஏமாந்து வருகின்றார்கள். அதெல்லாம் தேவையில்லை

ஒன்றிய அரசின் இந்த அருமையான சேவையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றிய அரசு வழங்கும் இலவச படிப்புகளை www.swayam.gov.in என்ற இணையதளத்துக்குள் சென்று பதிவு செய்து விருப்பமான படிப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி சான்றிதழ் பெருங்கள்.  



 

Monday, May 10, 2021

ஒன்றிய அரசின் இலவச ஆண்ட்ராய்ட் ஆப் உருவாக்கும் பயிற்சி மற்றும் பல இலவச பயிற்சிகள்

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இன்று உள்ளூர பதைபதைப்பில் இருக்கிறது. என்னால் உறுதியாக கூற முடியும் இதன் முழு காரணம் நமது ஆட்சித் திறனற்ற ஒன்றிய அரசும் அதன் தலைவர்களும் மட்டுமே.

மக்களை எப்போதும் பதைபதைப்பில் வைத்துக் கொள்வது ஒன்றிய அரசின் தலைமையில் இருக்கும் பிஜேபியின் அஜெண்டா. அதுமட்டுமல்ல இன்னும் பல வித கொள்கைகள் உண்டு. அவைகளை எல்லாம் நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

கொரானா பரவலை எளிதில் ஒரு சில கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டு கட்டுப்படுத்தி இருக்கலாம். மக்களின் மீது அபிமானம் உள்ள தலைவர்களுக்கு அது தெரியும். ஆனால் அதிகாரத்தின் மீது மட்டுமே வெறி கொண்டலையும் தலைவர்களுக்கு மக்களின் மீதான அபிமானம் பற்றியெல்லாம் கவலை இல்லை. உலகப் பத்திரிக்கைகள் காறி உமிழ்கின்றன. அதனாலென்ன துடைத்துக்  கொள்வார்கள். 

இந்திய மக்கள் ஆப்பசைத்த குரங்காய் மாறி விட்டார்கள். ஆனாலும் தமிழகத்தில்  பாதுகாப்பு இருக்கிறது. ஆக்கபூர்வமான, குடிமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அவர் தமிழையும், தமிழர்களையும் பாதுகாப்பார் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நிர்வாகி.

ஒன்றிய அரசின் கட்ட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்வயம் என்ற அமைப்பு இந்திய மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சியை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இப்பயிற்சிகளை கட்டணம் கட்டி படிக்க முனைந்தால் லட்சத்தில் செலவாகி விடும். ஆகவே கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கி என்னென்ன கோர்சுகள் இலவசமாய் படிக்க இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து படித்து முன்னேறவும்.

இணைப்பு : https://swayam.gov.in 


 

 

10.05.2021 இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தி கீழே