குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 2, 2012

காதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1



( Art By Khalil Gibran )

ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னத கலாச்சாரமாய் மிளிர்ந்தது. இன்றைக்கு வெட்கம் என்றால் விலை என்ன என்று கேட்கும் பெண்களைப் பார்க்கிறோம். உடல் பிதுங்கி வெளித் தெரியும் உடைகள், சூழ் நிலைக்கு ஒவ்வாத உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றினால் நாங்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள் இன்றைய பெண்கள். தங்களின் பெண் குழந்தைகள் முலை தெரிய, குண்டிகள் பிதுங்கி வெளியில் தெரிய, பெண்ணுறுப்பு முட்டிக் கொண்டு தெரிய உடை அணிவதை பெற்றோர்கள் பெருமையாய் நினைக்கின்றார்கள். நேற்றையச் செய்திதாளில் வகுப்புத் தோழன் தன் தோழிக்கு லிக்கர் கொடுத்து மயக்கப்படுத்தி தானும் தன் நண்பர்களுமாய் சேர்ந்து காருக்குள் வைத்து உறவு கொண்டிருக்கின்றான் என்றும், அவனைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது என்றும் செய்தி வந்திருந்தது. ஏன் அப்பெண்ணுக்கு இந்த நிலை வந்தது? யோசிக்கணும்.

நாகரீக மோகத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழ்ச் சமூகம் பெண்கள் பலபேரோடு படுப்பதையும் இனி நாகரீகமாய் மாற்றி விடும். அல்லது மாதம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதும் நாகரீகம் என்றும் சொல்லக்கூடும். அது தான் சுதந்திரம் என்றும் பேசக்கூடும். கூடும் என்ன இப்போதே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுப்ரமண்யபுரம் என்ற படத்தில் கண்களால் பார்த்துக் கொண்டே நடைபயின்ற நடிகையைக் காட்டி இதைப் போன்றொதொரு பெண் எனக்கு திருமணம் செய்யக் கிடைப்பாளா என்று கேட்டவர்களும் உண்டு.

பண்டைய தமிழகத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் காதலைப் பற்றி பல நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில காட்சிகளை முதலில் காணலாம்.

இதோ ஒரு காதல் காட்சியை காதல் கொண்ட இளம் நங்கையாள் ஒருத்தி சொல்கிறாள். கேளுங்கள் !

“காயாம்பூ ஒத்த கருவிழி நங்காய், கேள் !”

“அழகிய மாலையணிந்து வில் ஏந்தியவனாய் ஏதோ வேட்டையைத் தொடர்ந்து வந்தவன் போல ஓர் இளைஞன் என் முன் வருவான். வந்து கனிவுடன் நீண்ட நேரம் என்னை நோக்குவான். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல் சென்று விடுவான். அவனைப் பற்றிய எண்ணம் என் உறக்கத்தையே கெடுத்தது. நான் உள்ளூரத் துயரடைந்தேன். அவன் தன் காதலைக் கண்ணினால் தெரிவித்தானே யன்றி, நாவால் உறைப்பதில்லை. நானும் பெண்ணாய் இருப்பதினால் நாணம் காரணமாக அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறமுடியவில்லை.”

“மறைவான என் காதலின் துன்பம் பொறுக்கமாட்டாமல் நான் செய்த ஒரு செயல் இப்போது நினைத்தால் கூட வெட்கப்படத் தக்கதாயிருக்கிறது. ஒரு நாள் நான் நம் பண்ணையருகில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். அவன் வழக்கம் போல என் முன்வந்து நின்றான். நான் அவனை அழைத்து, “ஐய என்னை ஊஞ்சலில் சிறிது ஆட்டி விடு” என்றேன். மகிழ்ச்சியுடன் “அப்படியே செய்கிறேன்” என்று கூறி அவன் ஊசலாட்டினான். அப்போது நான் ஊசலிலிருந்து நழுவி விழுபவள் போல நடித்து அவன் தோள்கள் மீது விழுந்தேன்.”

“அவன் என்னை உடனே தன் கைகளால் இறுகப் பிடித்தான். நானும் உணர்விழந்தவள் போல அவன் தோள் மீது கிடந்தேன். அவன் என்னை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். ஆனால் நான் கண் விழித்ததும் கனிவுடன் தடவிக் கொடுத்துப் போகும்படி விட்டு விட்டான். ஆனால் என்னை ஆர்வமாகத் தானும் காதலிப்பதை அவன் செயல் உறுதியாகக் காட்டி விட்டது”

அடுத்து இன்னும் ஒரு கொலைக்கார காதல் காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதை நாளை எழுதுகிறேன்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.