குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 17, 2022

ரிலையன்ஸ் பிக்பஜார் தில்லுமுல்லு அமேசான் அலறல் தொடர்ச்சி

 16.,03.2022ம் தேதி எழுதிய பதிவினைக் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/2022/03/blog-post_16.html

இன்றைய 17.03.2022 பிசினஸ் ஸ்டாண்டர் செய்திதாளில் வெளியான தலைப்புச் செய்தி கீழே இருக்கிறது. படத்தின் மீது சொடுக்கி படித்துக் கொள்ளவும். சட்டத்தின் ஓட்டைகளை எவ்வாறு தன் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்கிறது என்று பாருங்கள். ரிலையன்ஸ் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்ட செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

(17.03.2022 - பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி மேலே)

உச்ச நீதிமன்றம் ஃபியூச்சர் குரூப்பிடமும், அமேசானிடமும் என்ன சொல்லி இருக்கிறது என்று கட்டமிட்ட செய்தியில் படித்துக் கொள்ளுங்கள். வழக்குதாரர்களின் ஒப்பீனியன் கேட்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோருக்கும் தெரிந்த விஷயம், ‘ரிலையன்சும் ஃபியூச்சர் குரூப்பும்’ அமேசானை ஏமாற்றுகிறது என. ஆனால் பாருங்கள் எந்தப் பத்திரிக்கையும் அதைப் பற்றி எழுதவில்லை. நீதிமன்றத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால் என்ன நடக்கிறது எனப் பாருங்கள்.

சும்மா கதை விடாதீர் என்று நினைத்தவர்களுக்கு மேலே இருக்கும் படமே என் பதிவுக்கு ஆதாரம்.

அடுத்து சவுக்கு ஆன்லைன் இணையதளத்தில் வெளியான நியூஜெ நிறுவனம் பிஜேபிக்கும், ரிலையன்ஸ் மக்களை எப்படி முட்டாளாக்கி பிஜேபிக்கு நமோஸ்காரம் செய்து வருகிறது என்பதையும் படித்துக் கொள்ளுங்கள். மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகள் என கருதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தினை தர்மமும் அறமும் - பிஜேபியின் தலையெழுத்தினை அயோத்தி ராமரும் முடிவு செய்வார்கள் என நம்புகிறேன்.


மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகிறார்கள் சமீபகாலமாக. அதிலொன்று சித்ரா -சுப்ரமணியம் கள்ளக்காதல் - ஷேர்மார்கெட் விவகாரம். 

மைலாப்பூர் மாமி சித்ராவின் கள்ளக்காதல் மர்மச் சாமியார் சுப்ரமணியம் கதை சாட்சியங்கள் இல்லாத சுமார் ஐந்து லட்சம் கோடி மோசடி ஊழல். இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் எல்லாம் பெரிய ஊழலை மைலாப்பூர் நிகழ்த்தி இருப்பதை வரலாற்றில் பதிவு செய்வோம்.

மைலாப்பூர் மாமி சித்ராவின் ஐந்து லட்சம் கோடி ஊழல் மூடி மறைக்கப்பட்டும் விடும். அதை செவ்வனே செய்வார் பத்திரிக்கை குள்ளநரி.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.