குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Sunday, May 28, 2023

கீழ்தரமான பத்திரிக்கை தினமணி - ஆதாரம் இதோ

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோஷியல் மீடியாக்களில் திமுக பற்றிய போலிச் செய்திகள், மீம்ஸ்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என பச்சைப் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில ஈனத்தனமாக அரசியல் செய்யும், இன்ஸ்டண்ட் அரசியல்வியாதிகள் பொறுப்பிற்கு வந்தால், தனது புத்தி எதுவோ அதே போலத்தான் அவர்களும் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் உப்பைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியரும், அவர் குடும்பத்தாரும், கொஞ்சம் கூட வெட்கமின்றி செய்திகளை போலியாகப் புகுத்தி தற்போது வெளியிட்டு வருவதைப் பாருங்கள். ஏற்கனவே தினமணியின் கதி அதோகதியாகக் கிடக்கிறது.

சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, அங்கு தினமலர் பத்திரிக்கை படிக்க கிடைக்கிறது. இதர பத்திரிக்கைகளைக் காணவில்லை. ஒவ்வொரு ஏர்போர்ட்டுக்கும் தமிழ் பத்திரிக்கைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதோ தினமணி செய்தியின் அயோக்கியத்தனத்தைப் பாரீர். 

மஞ்சள் வண்ணம் இட்டிருக்கும் பகுதியினையும், தலைப்பையும் படித்துப் பாருங்கள். தலைப்புக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனப்பாருங்கள். எவ்வளவு கீழ்தரமான செய்தியை வெளியிடுகிறது என்று பாருங்கள்.



திமுக மீது இவ்வளவு வன்மம் கொண்டு, தமிழர்கள் ஆட்சியில் இருக்கவே கூடாது என்பதறகாக தினமலரும், தினமணியும் இப்படியான கேவலமான செய்திகளை வெளியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தினமலரையும், தினமணி பத்திரிக்கையும் படிப்பதைத் தவிருங்கள். 

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


Wednesday, December 29, 2021

சிதம்பரநாதனின் பொய்யும் புரட்டும் - தினமணிக்கு கண்டனம்

இன்றைய (29.12.2021) தினமணியில் ’ ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆககூடாது’ என்ற தலைப்பில் பெ.சிதம்பரநாதன் என்பவர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தினமணியும் தனது உள் குத்து அரசியல் வேலையை அறமற்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது.

என்ன எழுதி இருக்கிறார் அக்கட்டுரையில் பார்க்கலாம்.

  1. ஆளும் பாஜகாவால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் சுமூகமாக சட்டமாக்கவில்லையாம்.
  2. பிஜேபி கட்சி ஏற்கனவே நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கூட முடியாமல் எதிர்கட்சிகள் பிரச்சினை செய்தததாம்.
  3. பெண்ணின் திருமண வயது 21 என்ற சட்டத்தினை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்.
  4. பிளாஸ்டிக் தடை செய்ய மசோதா கொண்டு வர வேண்டுமாம். அதை எம்.பிக்கள் நிராகரிக்க முடியாதாம்.
  5. தேனியில் அமையவுள்ள நியுட்ரினோ ஆய்வகத்தினை அமைத்திடும் போது மலையைக் குடையும் போது வைகை அணை தகர்ந்து விடும் என்று அரசியல்வாதிகள் பீதியைக் கிளப்பி விட்டார்களாம்.
  6. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது அத்துமீறிய 12 எம்பிக்களை கலந்து கொள்ள விடாமல் வெளியேற்றியது சரிதானாம். அதை பொது மீடியாக்களில் வெளியிட வேண்டுமாம். எதிர்கட்சி என்பதாலேயே எல்லா மசோதாக்களையும் எதிர்த்து எம்.பிக்கள் மகிழ்கின்றார்களாம்.
  7. புதிய கல்விக் கொள்கையில் மூன்று மொழி படிக்கலாமாம். பாலிடெக்னிக் கல்வியை தமிழிலேயே கற்பிக்கலாமாம். எதுவும் பிரச்சினை இல்லையாம். 
  8. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்பே முடிவடைந்து விட்டதால் வெட்கப்பட வேண்டுமாம்.
  9. நாடாளுமன்றம் நடக்க ஒரு மணி நேரத்திற்கு 1.5 கோடி செலவாகிறதாம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என்ன தோன்றுகிறது?

எதிர்கட்சிகளால் தான் பிரச்சினை, அவர்கள் தான் நாட்டை சீரழிக்கின்றார்கள் என்பது போல ஒரு தோற்றத்தினை உருவாக்குகிறது. எதிர்கட்சி எம்.பிக்களை ஒரு எழுத்தாளர் இப்படி நயவஞ்சகமான முறையில் உண்மைக்குப் புறம்பான வகையில் பொய்யையும், புரட்டையும் கூறி அவமானப்படுத்தி இருக்கிறார். 

67 சதவீதம் பிஜேபிக்கு ஓட்டுப் போடாத மக்களின் பிரதிநிதிகளை இவர் சுயநலவாதிகள் என்பது போல எழுதி மக்களையும் கிண்டல் செய்திருக்கிறார். மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார். தினமணியும் ஒத்து ஊதி கட்டுரையினை வெளியிட்டு இருக்கிறது. இதுதான் உள் அரசியல். மக்களை மூளைச்சலவை செய்யும் பொய்களை அவிழ்த்து விடும் அக்கிரமம்.

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் பிஜேபி அரசு உடனுக்குடன் சட்டமியற்றி வருகிறது என்பதை பலரும் பல பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறார்கள். மூன்று விவசாய சட்டங்களை பத்தே நாட்களுக்குள் எந்த வித விவாதமும் இன்றி நிறைவேற்றிய பிஜேபி அரசின் அக்கிரமத்தினால் 700 விவசாயிகள் இறந்தார்கள். 

இந்த வார கல்கியில் ‘ஏனிந்த அவசரம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் கார்டையும் இணைக்க வேண்டிய மசோதா அவசர அவசரமாக குரல் ஓட்டெடுப்பில் சட்டமாக்கி இருக்கிறது பிஜேபி. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இரண்டு அடையாள அட்டையை இணைக்கும் போது பெயர்கள் மேட்சிங்க் ஆகவில்லை என்பதால் 55 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.

வருமான வரி அட்டையில் எனது தகப்பனார் பெயர் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. ஆதாரில் மாணிக்கம் என்று இருக்கிறது. ரேஷன் கார்டில் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஜாதியை பெயருடன் இணைத்துதான் ஆவணங்கள் வழங்கப்பட்டன. எனது தகப்பனார் சொத்துக்களின் ஆவணங்களில் மாணிக்கதேவர் என்றுதான் இருக்கிறது. இப்படியான ஒரு பெயர் குழப்பச் சூழல் இருக்கும் போது இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்கும் இந்த சட்ட மசோதாவை எந்த வித விவாதமும் இன்றி பிஜேபி அரசு சட்டமாக்கி இருக்கிறது அக்கிரமமான செயல் அல்லவா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்பதற்கிணங்க மூன்று விவசாய சட்டங்களை சட்டமாக்கிய நிகழ்வு ஒன்றே போதும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த எழுத்தாளர் பொய்யையும் புரட்டையும் எழுதி விவசாய மக்களை அவமானப்படுத்தி இருப்பதை அறியலாம்.

நாடாளுமன்றத்திற்கும் ஆலயத்துக்கும் வேறுபாடு உண்டு. ஆலயம் என்பது வழிபாடு செய்யும் இடம். நாடாளுமன்றம் வழிபாட்டுக்கு உரியது அல்ல. 110 கோடி பல்வேறு கலச்சார மக்களின் சார்பாக, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாத மன்றம்.  நாட்டை ஆளும் சட்டங்களை உருவாக்கிடும் கோவிலுக்கும் மேலான ஒரு இடம் அது. கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். நாடாளுமன்றம் இந்தியாவின் உயிர். ஆலயத்துக்கும் நாடாளுமன்றத்துக்கு வேறுபாடு தெரியாத அறிவிலியா இந்த ஆசிரியர் என்று தோன்றுகிறது.

நிச்சயம் இவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதுவல்ல அவரின் பிரச்சினை. பொய்யைக் கட்டவிழ்த்து விடுவது. மக்களை நம்வ வைக்க ஆலயத்தினை கூட இழுத்துக் கொள்கிறார் இவர். 33 சதவீதம் ஓட்டுப் பெற்ற பிஜேபிக்கு ஒத்து ஊதுவது மட்டுமே இவரின் எண்ணம்.

தினமணியில் எழுதிய கட்டுரையின் ஆசிரியர் சிதம்பரநாதன்,  ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர். இவருக்கு வேலையே பொய்களையும் புரட்டுகளையும் எழுதி வருவதுதான்.  இவர் வயதுக்கு ஏற்ற நற்சிந்தனை, எது அறம் என்று தெளியும் பக்குவம் வந்திருக்க வேண்டும். ஆனால் இவரின் மனதுக்குள் வன்மம் மட்டுமே இருப்பதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டிருக்கிறது. 

தமிழர்களுக்கு எதிரான, அறத்துக்கு எதிரான இவ்வகை ஆட்கள் அடையாளம் காணப்பட்டு உதாசீனப்படுத்தல் அவசியம் என்பதால் இப்பதிவினை எழுதுகிறேன்.

சிதம்பர நாதனுக்கும், இக்கட்டுரையினை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் தினமணி ஆசிரியர் அறமற்ற செய்திகளை, கட்டுரைகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். கருத்துச் சொல்வது என்பது வேறு பொய்யை எழுதுவது வேறு என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு தினமணி ஆசிரியர் மாறிப்போனாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நன்றி : தினமணி ( கீழே கட்டுரை )


கல்கி தலையங்கத்தில் வெளியானது கீழே. ( நன்றி கல்கி )



Friday, June 4, 2021

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் நாம் சைவர்களா இந்துக்களா கட்டுரை ஆய்வு

மதம் கொண்ட யானையை விட மத வெறி பிடித்த மனிதன் கொடூரமானவன். மதவெறியினால் எதையும் சாதித்து விட இயலாது என்று காலம் காலமாக உலக வரலாற்றில் பல்வேறு செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அவரவர் சிந்தனை, பெற்ற கல்வி அறிவு, சூழல் அறிவு, சார்பு அறிவு, சுய அறிவு போன்றவற்றைக் கொண்டு பல்வேறு கருத்துகளைச் சொல்வார்கள். அக்கருத்துக்கள் முழுமையானவையா? சரியானவையா? என்று தெரிந்து கொள்ள இயலாத வகையில் இருப்பதால் உண்மை எதுவென அறிந்து கொள்ள இயலாது.

அவ்வகையில் ஒரு சில சமுதாயத்தில் முக பிரபல்யமும், கருத்து பிரபல்யமும் கொண்டவர்களால் சொல்லப்படும் கருத்துகள் உண்மை என்பது போல பதிந்து விடும். ஒரு சிலர் மனம் புண்பட்டு விடக்கூடாது என்று பட்டும் படாமலும்  சொல்லி இருப்பார்கள்.

அவ்வகையில் நாம் சைவர்களா இந்துக்களா என்ற கட்டுரையினை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  அவர்கள் 28.05.2021 மற்றும் 04.06.2021 ஆகிய தேதிகளில் தினமணி வெள்ளிமணியில் எழுதி இருக்கின்றார்கள். கட்டுரையினை வாசித்த போது எனக்குள் எழுந்த கேள்வியும் அதன் முடிவும் தான் இப்பதிவு.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் வேதமே நம் சமயத்தின் முதல் நூலாம் என்று சொல்லி இருக்கிறார். 

ஆனால் முதல் பகுதியில் சைவர்கள் தமது தோத்திர நூலாக திருமுறைகளையும், சாத்திர நூலாக சைவ சிந்தாந்த சாத்திரங்களையுமே காலாகாலமாக ஏற்றுப் பின்பற்றி வருகின்றனர். திருமுறைகளும், சிந்தாந்த சாத்திரங்களும் சிவனையே முழு முதற் தெய்வமாய் வலியுறுத்துகின்றன. ஆதலால் நாம் சைவ சமயிகளேயாம். இதில் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை.

இன்று திருமுறைகளை தோத்திரமாகவும், சைவ சித்தாந்தத்தை சாத்திரமாகவும் கொள்ளாது, பகவத் கீதை போன்ற நூல்களைத் தோத்திரமாகவும், வேதாந்த தத்துவத்தை தமது சாத்திரமாகவும் கொண்ட, பல சமைய அமைப்புகள் மெல்ல,மெல்ல நம் மண்ணில்  புகுந்து வேரோடத் தொடங்கியுள்ளன.

அத்தோத்திரமும் சாத்திரமும் கூட தவறானவை அன்றாம். ஆனாலும் சைவ சாத்திர தோத்திர நூல்களைப் பின்பற்றி, ஒருமித்து வாழ்ந்த மக்களிடையே வேறுபட்ட சமய அமைப்புகள் புகுந்ததால், நிச்சயம் அது பூசல்களுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வலிமையாய்ச் சைவ வாழ்வை ஏற்றுக் கொண்ட, நம் ஊர்கள் பல வேற்றுத் தத்துவக்காரர்களை உள் நுழைய விடாமலே வைத்திருந்தன.

இன்று நம் மண்ணின் பலவீனப்பட்ட சமய அறிவு நிலையால், மெல்ல மெல்ல எல்லாக் கொள்கையினரும், வேறு வேறு அமைப்புகளின் பெயர்களோடு உள் நுழைய தொடங்கி விட்டனர்.

அங்கணம் உட்புகுந்ததால், இத்தத்துவங்களுள் எது உயர்ந்தது என்பதான சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகி அவை வீணாக நம் முக்தி வழியை தடை செய்து நிற்கின்றன.

அதனால் நாம் முன்பு போலவே ‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு’ என்றாற்போல, சைவ சாத்திரத்தையும், தோத்திரத்தையும் மரபுவழி பின்பற்றி சைவர்களாய் வாழ்வதே உயர்ந்ததாம்.

இவ்வாறு எழுதிச் செல்லும் அவர், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். அதென்ன ஆறு சமயங்கள்.

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தின்படி தமிழர்கள் சைவர்கள் ஆவார்கள் என கருத வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தமிழ் நாட்டில் தான் சிவன் கோவில்கள் அதிகம். நூறு சிவன் கோவில்களை கட்டிய மன்னர் என்கோ செங்கண்ணான் என்று வரலாறு சொல்கிறது.

இவ்வாறு சொல்லும் அவரின் கட்டுரையில் ஓரிடத்தில் ஆறு சமயங்களுக்கும் வேதமே முதலாம் என்று இருக்கிறது. சைவர்களுக்கு திருமுறைகளே முதலாம். வேதம் என்பது சைவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று நன்கு கற்று அறிந்து தெளிந்தவர்களுக்குத் தெரியும். ஏன் அவர் இப்படியான குழப்பமான வார்த்தையினை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம். 

தெளிவற்று இருந்த ஒரு சில விஷயங்கள் இக்கட்டுரையின் வாயிலாக தெளிவாயின எனலாம். ஆதி சங்கரர் அவர்களால் எல்லா கடவுள் வழிபாட்டு சமயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன என்று தெரிய வருகிறது. அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் சூட்டிய பெயர் தான் இந்து என்றும் அவ்வகையில் தான் நீதிமன்றங்களில் பகவத்கீதை இந்து மத நூலாக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் தெளிவாகிறது. ஆனால் ஆறு சமய வழிபாடுகளைக் கொண்ட சமுதாயத்தில் ஒரே ஒரு சமயத்தின் நூலை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது சமய நல்லிணக்கத்தைக் காட்டுகிறது எனவும் புலனாகிறது.

நான் இந்தியன், தமிழன், சைவ சமயத்தைச் சார்ந்த இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதுதான் சரி என நினைக்கிறேன். 



தமிழர்கள் தம் அடையாளத்தை என்றைக்கும் இழந்து விடக்கூடாது என்று இந்த நேரத்தில் இக்கட்டுரையினைப் பதிப்பித்த தினமணிக்கு மிக்க நன்றிகள் பல.

நன்றி : இலங்கை ஜெயராஜ் மற்றும் தினமணி

Monday, May 10, 2021

இந்து தமிழ் திசை ஜாதி மொழி பிரச்சினையை உருவாக்குகிறதா?

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இருந்த ஒரே காரணத்தால் தான் மதராசி என்ற பெயர் மாறி தமிழ்நாடு என்று பெயர் பெற்று  இன்று உலகிற்கே முன்னுதாரணமாய் இருக்கிறது தமிழகம்.

இன்றைய இந்து தமிழ் திசை, தனது தினசரியில் நம் முதல்வரின் பூர்வ குடிகள் ஆந்திராவில் இருந்ததாக செய்தி வெளியிட்டு தனது ஜாதிய, மொழி சார்ந்த கலவரம் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்து தனக்குத் தானே ஜெலுசில் குடித்துக் கொண்டிருக்கிறது.
 

அந்தளவுக்கு எரிச்சலில் இந்து தமிழ் திசை நாழிதழ் இருக்கிறது என்று தெரிய வரும் போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது மைசூர் அரசில் இவரின் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருந்தால், ஜெ அவர்கள் ஆசிரியருக்கு ஆப்பு சொருகி இருப்பார்.

அதுமட்டுமல்ல, ஜூனியர் விகடனில் மாப்பிள்ளை தர்பார் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் குழுமம் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. விகடன் பத்திரிக்கை குழுமம் தன் எரிச்சலை இனி இப்படியான செய்திகளை வெளியிட்டு திமுக அரசின் மீதான தன் எரிச்சலை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஒரு குடும்பம் இருந்திருந்தால் அவர் எப்படிச் செத்தார் என்று உலகத்துக்கு தெரிந்திருக்கும். அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவரின் வாழ்வும், சாவும் பெரும் அவலத்துக்கு உள்ளாயின.

அதே போல கலைஞரும் இருந்திருந்தால் தங்கள் வழக்கப்படி ஆவன செய்து அதிகாரத்தில் இருந்திருப்பர். ஆனால் கலைஞரிடம் அது எடுபடவில்லை. அது முதல்வர் ஸ்டாலினிடமும் எடுபடாது. வயிற்றெரிச்சல் தாளாமல் விகடனும் ஜெலுசில் குடிக்க வேண்டியதுதான். வேறு வழி இப்போதைக்கு அவர்களிடம் இல்லை. 

இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் முரசொலி மாறனை என்னவெல்லாம் விமர்சித்து எழுதினார்கள் என்பது வரலாறு. இவர்களுக்கு தலைவர்கள் குடும்பத்தோடு இருந்தால் எப்போதும் போல தங்கள்  வழக்கத்தினை செயல்படுத்த இயலாதே என்ற எரிச்சலில் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அதிகாரத்தில் இருக்க வேண்டும், இல்லையெனில் அதிகாரத்தில் இருப்பவர்களோடு ஆலோசனையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் காசு எங்கே இருக்கிறதோ அங்கே இருக்க வேண்டும். காலம் காலமாக தொன்று தொட்டு செய்து வரும் வழக்கம் இது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து அடுத்த நாள், பத்து வருடத்திற்கு முன்பு நடந்த செய்திகளைக் கட்டம் கட்டி வெளியிட்ட தினமலர், தினமணி, இந்து தமிழ் திசை, இந்து பத்திரிக்கை மற்றும் தினதந்தி ஆகியவை விளம்பரமாக வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீதான வன்மத்தைக் காட்டின. 

இதே போல மேற்கண்ட பத்திரிக்கை ஆசிரியர்களின் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வரும் மனித குல விரோத நடவடிக்கைகளை தினமும் விளம்பரமாக வெளியிட்டால் ஒருவர் கூட நிம்மதியாக முடியுமா? தொழிலும் நடக்குமா? பெரியார் அதை திறம்படச் செய்ததால் பெரியார் பூமி என்றாலும் திராவிடன் என்றாலும் அவர்களுக்கு எரிகிறது.

தின்பது, குடிப்பது, சம்பாதிப்பது எல்லாம் தமிழர் பூமியில். ஆனால் செய்வது அனைத்தும் கம்யூனல் வயலன்ஸ் செய்திகள், மக்களை உள்ளப் பூர்வமாக காயப்படுத்தி, மதி மயங்கச் செய்யும் செய்திகள் என இவர்களின் ஆட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.

மேற்கண்ட ஐந்து பத்திரிக்கைகளின் மீதான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காது. ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான முதல்வர். அவர் ஜாதிய, மொழிக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 

சட்டசபை கூடும் போது இந்த பத்திரிக்கைகள் செய்த அதர்மத்தை சபாநாயகரிடம் தெரிவித்து, சட்டசபை மூலமாக இவர்களின் நடவடிக்கைக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  

அதுமட்டுமல்ல தினமலர் பத்திரிக்கை தெருவில் கடை போட்டு விற்பனை செய்து வருபவர்களை காவல்துறை தடுக்க வேண்டுமென்று எழுதி இருந்தது. தெருவில் போட்டு விற்பனை செய்வது அவர்களின் பத்திரிக்கைகளும் தான் என்பதை மறந்து விட்டார்கள். விடிகாலையில் செய்தி பார்சல்களை தெருவில் போட்டு பிரித்து விற்பனைக்கு செல்கிறதே, தினமலர் முறையாக அரசுக்கு கட்டணம் செலுத்தியா தெருவில் பார்சல்களைப் பிரிக்கிறது? இவர்களுக்கு ஒரு நியதி, இன்னொருவருக்கு ஒரு நியதி. இவர்கள் செய்தால் அது சரி, பிறர் செய்தால் குற்றம். இந்தப் பத்திரிக்கைகள் எங்கணம் தனக்கேற்றவாறு செய்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

பல ஆண்டு காலமாக பத்திரிக்கைத் துறையிலும், எழுத்து துறையிலும் ஊறிப்போன இவர்கள், எப்படி மக்களை திசை திருப்பலாம், எப்படி பொய் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை இன்னும் அழிக்கலாம் என்று கரைத்துக் குடித்திருக்கிறார்கள். ஆகவே இவர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாய் இருப்பது அவசியம். இவர்கள் பாரசைட்டுகள், லீச்சஸ், கிருமிகள் போன்றவர்கள். இவர்களிடமிருந்து தமிழர்கள் விலகி இருக்க வேண்டும். இவர்களை நிராகரிக்க வேண்டும். அவர்கள் வெளியிடும் செய்தியின் பின்புலத்தினை ஆராய வேண்டும். அமைதியாக கடந்து விடக்கூடாது. அவர்களை மக்கள் மத்தியில் தோலுறிக்க வேண்டும். இனி பெரியாரின் படைப்புகளை படியுங்கள். வரலாற்றில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை வன்மமும் தெரியும். தெருவில் நடந்து வந்தாலே ஓரமாய் ஒதுங்கிப் போகனும் என்ற நிலையில் இருந்த தமிழர்கள் இன்று தலை நிமிர நடக்க வைத்திருக்கும் கட்சியின் மீது, தலைவரின் மீது இவர்கள் இன்னும் அதிக வன்மத்தைக் காட்டுவார்கள். தகுந்த முறையில், ஜனநாயக வழியில் எதிர்ப்புகளைப் பதிய வைக்க வேண்டும். 

இங்கு எழுதி இருப்பது எவர் மீதான வன்மம் அல்ல. அவர்கள் என்ன செய்கின்றார்களோ அதற்கான எதிர்வினை.