குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Sunday, May 28, 2023

கீழ்தரமான பத்திரிக்கை தினமணி - ஆதாரம் இதோ

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோஷியல் மீடியாக்களில் திமுக பற்றிய போலிச் செய்திகள், மீம்ஸ்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என பச்சைப் பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில ஈனத்தனமாக அரசியல் செய்யும், இன்ஸ்டண்ட் அரசியல்வியாதிகள் பொறுப்பிற்கு வந்தால், தனது புத்தி எதுவோ அதே போலத்தான் அவர்களும் நடந்து கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆனால் நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் உப்பைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியரும், அவர் குடும்பத்தாரும், கொஞ்சம் கூட வெட்கமின்றி செய்திகளை போலியாகப் புகுத்தி தற்போது வெளியிட்டு வருவதைப் பாருங்கள். ஏற்கனவே தினமணியின் கதி அதோகதியாகக் கிடக்கிறது.

சமீபத்தில் ஏர்போர்ட் சென்றிருந்த போது, அங்கு தினமலர் பத்திரிக்கை படிக்க கிடைக்கிறது. இதர பத்திரிக்கைகளைக் காணவில்லை. ஒவ்வொரு ஏர்போர்ட்டுக்கும் தமிழ் பத்திரிக்கைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற கணக்குத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதோ தினமணி செய்தியின் அயோக்கியத்தனத்தைப் பாரீர். 

மஞ்சள் வண்ணம் இட்டிருக்கும் பகுதியினையும், தலைப்பையும் படித்துப் பாருங்கள். தலைப்புக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது எனப்பாருங்கள். எவ்வளவு கீழ்தரமான செய்தியை வெளியிடுகிறது என்று பாருங்கள்.



திமுக மீது இவ்வளவு வன்மம் கொண்டு, தமிழர்கள் ஆட்சியில் இருக்கவே கூடாது என்பதறகாக தினமலரும், தினமணியும் இப்படியான கேவலமான செய்திகளை வெளியிடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தினமலரையும், தினமணி பத்திரிக்கையும் படிப்பதைத் தவிருங்கள். 

Monday, May 10, 2021

இந்து தமிழ் திசை ஜாதி மொழி பிரச்சினையை உருவாக்குகிறதா?

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இருந்த ஒரே காரணத்தால் தான் மதராசி என்ற பெயர் மாறி தமிழ்நாடு என்று பெயர் பெற்று  இன்று உலகிற்கே முன்னுதாரணமாய் இருக்கிறது தமிழகம்.

இன்றைய இந்து தமிழ் திசை, தனது தினசரியில் நம் முதல்வரின் பூர்வ குடிகள் ஆந்திராவில் இருந்ததாக செய்தி வெளியிட்டு தனது ஜாதிய, மொழி சார்ந்த கலவரம் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்து தனக்குத் தானே ஜெலுசில் குடித்துக் கொண்டிருக்கிறது.
 

அந்தளவுக்கு எரிச்சலில் இந்து தமிழ் திசை நாழிதழ் இருக்கிறது என்று தெரிய வரும் போது நமக்கும் மகிழ்ச்சி உண்டாகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது மைசூர் அரசில் இவரின் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டிருந்தால், ஜெ அவர்கள் ஆசிரியருக்கு ஆப்பு சொருகி இருப்பார்.

அதுமட்டுமல்ல, ஜூனியர் விகடனில் மாப்பிள்ளை தர்பார் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் குழுமம் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. விகடன் பத்திரிக்கை குழுமம் தன் எரிச்சலை இனி இப்படியான செய்திகளை வெளியிட்டு திமுக அரசின் மீதான தன் எரிச்சலை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஒரு குடும்பம் இருந்திருந்தால் அவர் எப்படிச் செத்தார் என்று உலகத்துக்கு தெரிந்திருக்கும். அவருக்கு குடும்பம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவரின் வாழ்வும், சாவும் பெரும் அவலத்துக்கு உள்ளாயின.

அதே போல கலைஞரும் இருந்திருந்தால் தங்கள் வழக்கப்படி ஆவன செய்து அதிகாரத்தில் இருந்திருப்பர். ஆனால் கலைஞரிடம் அது எடுபடவில்லை. அது முதல்வர் ஸ்டாலினிடமும் எடுபடாது. வயிற்றெரிச்சல் தாளாமல் விகடனும் ஜெலுசில் குடிக்க வேண்டியதுதான். வேறு வழி இப்போதைக்கு அவர்களிடம் இல்லை. 

இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் முரசொலி மாறனை என்னவெல்லாம் விமர்சித்து எழுதினார்கள் என்பது வரலாறு. இவர்களுக்கு தலைவர்கள் குடும்பத்தோடு இருந்தால் எப்போதும் போல தங்கள்  வழக்கத்தினை செயல்படுத்த இயலாதே என்ற எரிச்சலில் எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

அதிகாரத்தில் இருக்க வேண்டும், இல்லையெனில் அதிகாரத்தில் இருப்பவர்களோடு ஆலோசனையாளராக இருக்க வேண்டும். இல்லையெனில் காசு எங்கே இருக்கிறதோ அங்கே இருக்க வேண்டும். காலம் காலமாக தொன்று தொட்டு செய்து வரும் வழக்கம் இது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்து அடுத்த நாள், பத்து வருடத்திற்கு முன்பு நடந்த செய்திகளைக் கட்டம் கட்டி வெளியிட்ட தினமலர், தினமணி, இந்து தமிழ் திசை, இந்து பத்திரிக்கை மற்றும் தினதந்தி ஆகியவை விளம்பரமாக வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீதான வன்மத்தைக் காட்டின. 

இதே போல மேற்கண்ட பத்திரிக்கை ஆசிரியர்களின் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வரும் மனித குல விரோத நடவடிக்கைகளை தினமும் விளம்பரமாக வெளியிட்டால் ஒருவர் கூட நிம்மதியாக முடியுமா? தொழிலும் நடக்குமா? பெரியார் அதை திறம்படச் செய்ததால் பெரியார் பூமி என்றாலும் திராவிடன் என்றாலும் அவர்களுக்கு எரிகிறது.

தின்பது, குடிப்பது, சம்பாதிப்பது எல்லாம் தமிழர் பூமியில். ஆனால் செய்வது அனைத்தும் கம்யூனல் வயலன்ஸ் செய்திகள், மக்களை உள்ளப் பூர்வமாக காயப்படுத்தி, மதி மயங்கச் செய்யும் செய்திகள் என இவர்களின் ஆட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.

மேற்கண்ட ஐந்து பத்திரிக்கைகளின் மீதான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காது. ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான முதல்வர். அவர் ஜாதிய, மொழிக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 

சட்டசபை கூடும் போது இந்த பத்திரிக்கைகள் செய்த அதர்மத்தை சபாநாயகரிடம் தெரிவித்து, சட்டசபை மூலமாக இவர்களின் நடவடிக்கைக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.  

அதுமட்டுமல்ல தினமலர் பத்திரிக்கை தெருவில் கடை போட்டு விற்பனை செய்து வருபவர்களை காவல்துறை தடுக்க வேண்டுமென்று எழுதி இருந்தது. தெருவில் போட்டு விற்பனை செய்வது அவர்களின் பத்திரிக்கைகளும் தான் என்பதை மறந்து விட்டார்கள். விடிகாலையில் செய்தி பார்சல்களை தெருவில் போட்டு பிரித்து விற்பனைக்கு செல்கிறதே, தினமலர் முறையாக அரசுக்கு கட்டணம் செலுத்தியா தெருவில் பார்சல்களைப் பிரிக்கிறது? இவர்களுக்கு ஒரு நியதி, இன்னொருவருக்கு ஒரு நியதி. இவர்கள் செய்தால் அது சரி, பிறர் செய்தால் குற்றம். இந்தப் பத்திரிக்கைகள் எங்கணம் தனக்கேற்றவாறு செய்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

பல ஆண்டு காலமாக பத்திரிக்கைத் துறையிலும், எழுத்து துறையிலும் ஊறிப்போன இவர்கள், எப்படி மக்களை திசை திருப்பலாம், எப்படி பொய் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை இன்னும் அழிக்கலாம் என்று கரைத்துக் குடித்திருக்கிறார்கள். ஆகவே இவர்களிடமிருந்து நாம் பாதுகாப்பாய் இருப்பது அவசியம். இவர்கள் பாரசைட்டுகள், லீச்சஸ், கிருமிகள் போன்றவர்கள். இவர்களிடமிருந்து தமிழர்கள் விலகி இருக்க வேண்டும். இவர்களை நிராகரிக்க வேண்டும். அவர்கள் வெளியிடும் செய்தியின் பின்புலத்தினை ஆராய வேண்டும். அமைதியாக கடந்து விடக்கூடாது. அவர்களை மக்கள் மத்தியில் தோலுறிக்க வேண்டும். இனி பெரியாரின் படைப்புகளை படியுங்கள். வரலாற்றில் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை வன்மமும் தெரியும். தெருவில் நடந்து வந்தாலே ஓரமாய் ஒதுங்கிப் போகனும் என்ற நிலையில் இருந்த தமிழர்கள் இன்று தலை நிமிர நடக்க வைத்திருக்கும் கட்சியின் மீது, தலைவரின் மீது இவர்கள் இன்னும் அதிக வன்மத்தைக் காட்டுவார்கள். தகுந்த முறையில், ஜனநாயக வழியில் எதிர்ப்புகளைப் பதிய வைக்க வேண்டும். 

இங்கு எழுதி இருப்பது எவர் மீதான வன்மம் அல்ல. அவர்கள் என்ன செய்கின்றார்களோ அதற்கான எதிர்வினை.

Wednesday, July 22, 2020

ஏழைக் கல்வித்தந்தையர்களின் துயர் துடைத்த உயர் நீதிமன்றம்


2020 மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முடங்க ஆரம்பித்தது. இது நாள் வரை என்னவென்றே புரிந்து கொள்ள இயலா நோய்க் கிருமியின் தாக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை முடங்கியது. இந்தியாவின் பொருளாதாரமே சரிந்து போனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலகிலேயே பஞ்சைப் பராரிகளாக விளங்கும் சிலருக்கு தமிழகத்தில் இருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவர்களின் துயரைத் துடைத்து உதவி செய்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுசேவை செய்கிறோம் என, டிரஸ்ட் பதிவு செய்து, அதன் மூலம் பள்ளி நடத்த அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் மக்களுக்குச் சேவை செய்து, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாமெல்லாம் அறிவோம். இதை அரசுகளும் அறியும். நீதிமன்றமும், நீதி தேவதையும், நீதி தேவதையின் சார்பாக மைலார்டுகளும் (என் கடவுளே) அறிவார்கள். மைலார்டுகளுக்கு உண்மையின் வடிவாக உண்மையை மட்டும் எடுத்துச் சொல்லி, பணி செய்து வரும் வக்கீல் புண்ணிய ஆத்மாக்களும் அறிவார்கள்.

தினக்கூலி பெறும் கூலியை விட குறைவாக சம்பளம் பெறும், தனியார் கல்வித் தந்தைகள் கல்விச் சேவை செய்து ஏழைகளாக பி.எம்.டபிள்யூ, ஆடி கார்களில் மட்டுமே வருவதைக் கண்டு நாமெல்லாம் கண்ணீர் உகுத்து வருகிறோம். அவர்களுக்கு ஹெலிகாப்டர், விமானங்கள், கப்பல்கள் வாங்க வக்கில்லையே என பெற்றோர்களும், அரசுகளும், நீதிமன்றங்களும், கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், பத்திரிக்கைகளும், டிவிக்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றதையும், அவர்களின் வேதனைகளைக் கூட எழுத்தால் வடித்து விடக் கூடியதுமானதாகவும் இல்லை என்கிற வேதனை எனக்கும் கூட உண்டு.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிலையங்கள் பல கோடி மதிப்பு வாய்ந்த பாடப்புத்தகத்துக்கும், நோட்டுக்கும் மட்டும் மிகக் குறைந்த பட்சம் 7000 ரூபாய் வாங்குகிறார்கள். கேப்பிடேசன் கட்டணம், அட்மிஷன் கட்டணம், அதற்கு, இதற்கு கட்டணம் என பெற்றோர்களிடம் மிக மிகச் சொற்ப அளவிலான கட்டணத்தினைப் பெற்று, பள்ளி நடத்த வாங்கிய நிலத்தின் கடனையும், பள்ளிக்கட்ட கடனையும் கட்டி வருகின்றார்கள். கடன் பெற்றாவது கல்விச் சேவை செய்ய வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டா இவ்வுலகில்?

பொதுச் சேவை செய்தாலும், அதன் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்ற உயர் நோக்கத்திற்காக, அவரவர் குடும்ப டிரஸ்டுகளுக்கு கடனில்லா சொத்துக்கள் உருவாக்கி பெரும் துன்பப்படுகின்றார்கள். இன்னும் அனேக பிள்ளைகளுக்கு கல்விச் சேவை ஆற்ற, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் கல்வித்தந்தைகள், பெற்றோர்கள் கட்டும் அந்தச் சிறிய தொகையில் மிச்சம் பிடித்து, மேலும் மேலும் இடங்களையும், கட்டடங்களையும் கட்டி கடனாளி ஆகின்றதை நினைத்து வேதனை உண்டாகிறது.

கல்வித் தந்தைகள் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் நான்கைந்து லட்சங்கள் சம்பளமாகவும், குழந்தைகளின் பெற்றோர்களிடம் வசூலிக்கும் பணத்தில் செலவு போக, மீதம் வரும் தொகையை ஒவ்வொரு பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருவதையும் நாமெல்லாம் அறிவோம்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியாதபோது, வறுமையில் வாடி, கட்டணம் மூலம் வரும் லாபத்தில் பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும் ஒப்பற்ற கல்வித் தந்தையர்களின் துயர் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் கல்விக் கட்டணத்தைச் செலுத்துக என கடைசி தேதி அறிவிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாமெல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும்.

இந்திய மக்கள் பெரும்பான்மையாக ஏழ்மையில் இருந்தாலும், கல்விச் சேவைகளை வழங்கும் தனியார் கல்வித் தந்தைகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் உடனடியாக கட்டணத்தில் 40 சதவீதத்தை கட்டி விட வேண்டும்.

மூடிக் கிடக்கும் பள்ளிதானே, எப்போது திறக்கும், என்னென்ன பாடங்கள் இருக்கும் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அதுபற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாலச் சிறந்தது.

அரசு கட்டணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டாலும், நீதிமன்றம் சொல்லி விட்டால் மேல் அப்பீலே கூடாது என்ற நிலையில் அரசு ஏதும் ஏழைக் கல்வித்தந்தையர்களுக்கு உபத்திரவம் கொடுத்து விடக்கூடாது என பெற்றோர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். ஆகவே ஆளும் அரசு சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக்குக்குச் சென்ற போல அப்பீல் போய் விடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

வேலையில்லை, சம்பளம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, சம்பளம் வாங்கியவர்களில் பாதிசம்பளம் கூட கிடைப்பதில்லை, விலை வாசி உயர்ந்து விட்டது, இந்தியர்களின் வீட்டில் பணம் இல்லை, அரசிடமும் பணம் இல்லை என்ற போதிலும் நாமெல்லாம் அடிக்கடிச் சொல்லும் மாதா, பிதா, குரு எனும் வரிசையில் மூன்றாவதாக வரும் குருவான ஆசிரியர்கள் உலாவும் பள்ளிக்கூடங்களை நடத்தும் கல்வித் தந்தையர்களுக்கு, தம் உயிரையோ அல்லது பட்டினியாக கிடந்தோ  காசு சேர்த்து, கட்டணத்தைக் கட்டி விட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினை சிரமேற்கொண்டு கடைபிடித்து விட வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தனியார் கல்வி நிலையங்களில் படித்த மாணாக்கர்களின் சம்பளத்தில் சுமார் 70 சதவீதத்தை, செய்நன்றி மறக்க கூடாது என்பதற்காக கல்வித் தந்தையர்களின் அக்கவுண்டில் கட்டி விட வேண்டுமென அரசோ அல்லது நீதிமன்றமோ உத்தரவிட்டால், அது உலகத்திற்கே முன்னுதாரனமாக இருக்கும். செய்நன்றி மறவாமைக்கு திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் அல்லவா? 30 சதவீதம் போதாதா உயிர் வாழ மனிதர்களுக்கு?

பனிரெண்டாம் வகுப்பு ரிசல்டினை முன் அறிவிப்பு இன்றி அறிவித்த பள்ளி அமைச்சகத்தின் செயற்பாடும், அதைத் தொடர்ந்து, என்று திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் இருக்கும் கல்லூரிகளுக்கு அட்மிஷன் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்ட வேகமும் எதனாலும் ஒப்பிட்டு விடக்கூட முடியாத அப்பற்ற அரசின் சாதனை. 

இதையெல்லாம் தவறான கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்ட எதிர்கட்சி டிவிக்காரர்களுக்கு பதில் சொல்லாமல் சென்ற அமைச்சரின் செயலை நாமெல்லாம் இருகரம் கொண்டு கரவோசை செய்து பாராட்டி மகிழ வேண்டும். ஒரு சரியானச் செயலைச் செய்கிற போது, எதிர்கட்சிகள் அதையும் குற்றம் என சொல்லும் கீழ்த்தர அரசியலைச் செய்யக்கூடாது. அது அறமல்ல அல்லவா நண்பர்களே?

ஒரு சிலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு டிசி வாங்கி, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து விடக்கூடும் என்பதனால் அதற்கொரு தடையினை மாநில அரசு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

இன்னும் ஆறேழு மாதங்கள் தானே இருக்கின்றன, அதற்கு எதற்கு தனியார் பள்ளியில் நம் குழந்தை படிக்கணும் என்று எவரும் நினைத்து, கல்வித் தந்தையர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்பதை அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செல்போன் பார்த்தாலே கண் கெட்டுப் போகும், அதிக நேரம் கணிணி பார்க்காதீர்கள் என்று தினமலர் அடிக்கடி கட்டம் கட்டி செய்தி போடுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள். ஆனால் பாருங்கள், ஆன்லைனில் கல்வி கற்கும் போது செல்போனும், கணிணியும் மனித குலத்துக்கு உதவி செய்யும் பொருளாய் மாறிப் போன அதிசயத்தை. மத்திய அரசு ஆன்லைன் கல்வி கற்க, வழிமுறைகளை வெளியிட்டு மக்களை மகிழ்விக்கிறது.

இத்தனை ஆண்டுகாலம் பொய் பிரச்சாரம் செய்து வந்த தினமலர், மற்றும் கண் மருத்துவர்களைக் கைது செய்து, தண்டனை பெற்றுத் தர சமூக செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டுமென அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீதிமன்றம் இப்படியான பொய்ச் செய்தியை வெளியிட்ட தினமலரையும், மருத்துவர்களையும் கைது செய்ய, தானாக முன்வந்து வழக்கை  பதிவு செய்து விசாரித்து, தண்டனை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அடியேனும் கேட்டுக் கொள்கிறேன்.

செல்போன் பார்த்தாலும், கணிணியில் நீண்ட நேரம் படித்தாலும், பார்த்தாலும் கண்கள் என்றைக்கும் கெட்டுப் போகாது என்று இப்போதைக்கு நாமெல்லாம் அறிந்து கொண்டோம், கொரானா நமக்களித்த சிறப்புக் கொடையென இதைக் கருத வேண்டும். ஆகவே நாமெல்லாம் கொரானாவுக்கு நன்றி சொல்லி விடுவோம். செய்நன்றி மறக்க கூடாது அல்லவா?

இப்படியாக ஏழைகளான தனியார் கல்வித் தந்தைகளைக் காப்பாற்றிய அரசினையும், நீதிமன்றத்தினையும், நீதியையும் நாமெல்லாம் தெய்வமென வணங்கி மகிழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, December 16, 2017

மக்களை முட்டாளாக்கும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்

பல்வேறு செய்திகளையும், நாட்டு நடப்புகளையும் நம் வீட்டுக்கே கொண்டு வருபவை செய்திதாள்களும், டிவி மற்றும் இணையதளங்கள். ஆனால் இவைகளில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை என்ன? என்பது பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு மீடியாவும் தங்களுக்கு ஏற்றவாறு செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்று பேசுவோம். ஆனால் அதை மறந்து விட்டு, அந்தச் செய்திகள் உண்மை என நினைத்து விடுகிறோம். இந்த இடத்தில் தான் நாம் நம்பிக்கை என்று மன ஏற்பால் ஏமாற்றப்படுகிறோம்.

ஆடு தன் முன்னாள் செல்லும் ஆட்டின் வாலைப் பார்த்துக் கொண்டே செல்லும் என்பார்கள். அதே போல தினசரிகளில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டு இன்றைக்கும் டீக்கடைகளிலும், பலர் ஃபேஸ்புக்கிலும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டு, கமெண்ட், லைக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பு டீக்கடை, இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர். ஆனால் ஏமாறுவது நாம் என்று அறியாமலே ஏமாந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் என்றைக்கு கட்சி சார்பானதாக மாறியதோ அன்றைக்கே மீடியா தன் தர்மத்தை இழந்து விட்டது. பேனாவின் நிப் உடைந்து போய் அரசியல் சாக்கடையில் விழுந்து விட்டது. பத்திரிக்கைகளில் பேனா நிப்பினைப் போட்டு நான்காவது தூண் என்றெல்லாம் எழுதுவார்கள். அதை உண்மை என்று நம்பி பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தவர்கள் எதார்த்தம் என்னவென்று தெரிந்து கொண்டு, பிழைக்கும் வழிக்கு மாறி விட்டார்கள். பிழைக்கும் வழி - “உண்மையை சார்ந்திருப்பதுக்கு ஏற்ப பேசுவது இல்லை மறைப்பது” 

உங்களுக்கு சாட்சிகள் இல்லையென்றால் நம்பமாட்டீர்களென்பதால் சாட்சியுடன் வந்திருக்கிறேன். இனி பேப்பர் படித்து அந்தச் செய்தி உண்மை என்று நம்புவதை விட்டு விடுவீர்கள் என்று நினைக்கிறேன். 

தினமலரில் இன்றைக்கும் 16/12/2017 அன்று வந்த செய்தியின் படம் கீழே
.

செய்தியைப் படித்து விட்டீர்களா? இனி தினகரனில் வெளிவந்த செய்தி கீழே. உடனே அது பிஜேபி பத்திரிக்கை, இது திமுக பத்திரிக்கை என்று ஆரம்பித்து விடாதீர்கள். செய்தி ஒன்று. ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பதை மாத்திரம் புரிந்து கொள்ள முயலுங்கள். மீடியாக்காரர்களை நாம் என்னவென்று அழைக்கலாமென்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.



அதுமட்டுமின்றி தினத்தந்தியின் செய்தியின் இணைப்பு கீழே இருக்கிறது. அதையும் படித்து விடுங்கள்.

சொல்ல வந்தது அவ்வளவுதான். 

மார்கழி பிறந்து விட்டது. கோவையில் குளிர் அதிகம் வாட்டுகிறது. விடிகாலை கோலம், சாணி, கோவில் குளங்களுக்குச் சென்று வருவது எல்லாம் கிராமப் புறங்களில் நடக்கின்றனவா எனத் தெரியவில்லை. ஆன்மீகம் நல் வழிப்படுத்தும் பாதை. ஆனால் கடவுள் தான் இன்றைக்கும் இந்த பூமிபந்தின் மிக உயர்ந்த வியாபாரப் பொருளாக மாறிப் போனார் என்பது வருத்தம் அளிக்கிறது.