குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஈஷா. Show all posts
Showing posts with label ஈஷா. Show all posts

Tuesday, April 2, 2024

சற்குருவென அழைக்கவும் - ஜக்கி வாசுதேவ்

ஈஷா - சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பேட்டியின் போது, ”சர்ச்சுக்கு போனால் ஃபாதர், மசூதிக்குப் போனால் மவுலானா என்றும் அழைக்கிறீர்கள் அல்லவா அது போல என்ன சற்குரு என அழையுங்களேன்” என்று சொன்னார். அவர் வாதம் சரியானதுதான். பிற மதத்துக்காரர்களை அழைக்கும் போது, என்னையும் அழைத்தால் என்ன? 

ஒரு ஷார்ட்டில் விஜய்டிவி நீயா? நானா? கோபிநாத்திடம், கார்பொரேட் பணியிலிருந்து வெளியேறி சொந்த தொழில் செய்யும் ஒருவர், யாரோ ஒருவரின் கைவிரலின் பட்டமாக இருக்க விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்பி வேலையை விட்டேன் என்றார். அதற்கு கோபிநாத் சுதந்திரமான பட்டம் எங்காவது சென்று சிக்கிக் கொள்ளுமே என்றார். கோபிநாத்தின் வாதமும் சரியானதுதான். 

பட்டத்தை உதாரணமாகச் சொன்னால் பட்டத்தின் இயல்பை வாதமாக வைக்கும் கோபிநாத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? 

இருவரும் பேசியதற்கு காரணம் - அகங்காரம்.  அகங்காரம் அதிகமானால் தான் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்ற போலித் திமிரும் கூட வந்து விடும். 

இவர்களைப் போல எத்தனை எத்தனையோ ஆட்கள் பூமியில் வந்து பேசி, வாதமிட்டு சென்று விட்டார்கள். வாழும் காலத்தில் கூட தன் நிலை அறியாதவர்களாய் வாழ்ந்து சென்று விடுகிறார்கள். நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கும் ஆட்கள் இவர்கள்.

இருக்கட்டும். மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டவைகளுக்கு விளக்கம் கீழே வரும். 

அதற்கு முன்பு ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைப் பார்க்கலாம்.

கேஜிஎஃப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? 

கோலார் தங்க வயல். அந்தப் பக்கமாக, ஆண்டர்சன் பேட் என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்த கேசவனானந்தா சுவாமிகள் அங்கு சென்று சாந்தி ஆசிரமத்தினை துவக்கினார்.

ஆசிரமத்தின் வாயிலாக அன்னதானம் போன்ற பல தொண்டுகளைச் செய்து வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் பக்கமாக ஜீவசமாதி ஆகி விட்டார். இவரின் சீடர் பெயர் கோதண்டராம சிவயோகி.

கேசவனானந்தா சுவாமிகளின் மீது பெரும் பக்தி கொண்டவர். எங்கெங்கோ சென்று தன் குருநாதரின் சிலையொன்றினை வடித்து சாந்தி ஆசிரமத்திற்கு கொண்டு வந்து, பிரதிஸ்டை செய்யும்படி கேட்டிருக்கிறார்.

அப்போது இருந்த ஆசிரம நிர்வாகிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அச்சிலையை அங்கிருந்த ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியில் வைத்து விட்டு, இந்தச் சிலையை பிரதிஸ்டை செய்யவதற்கு, வரவேண்டிய ஆள் வருவான் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

நிற்க.

அமைதி குடிகொண்டிருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நம் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்கு வந்து விடுவோம்.

எனது குருநாதர் ஜோதி சுவாமி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கோலார் தங்க வயலில் இருந்து வந்த பக்தர்கள் மேற்கண்ட கோலார் தங்கவயல் கேசவானந்தா சுவாமிகள் சிலை பற்றிய சம்பவத்தை அவரிடம் விவரித்திருக்கின்றனர்.

காரணமின்றி காரியமில்லை அல்லவா?

”குருநாதரிடம் கேட்கிறேன், அவர் சொன்னால் நான் அங்கு வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, குருநாதரிடம் சென்று கேட்டிருக்கிறார். 

”நீதான் பிரதிஸ்டை செய்யனும், அதை எப்படி செய்யனும் எனச் சொல்கிறேன் அதன்படி செய்” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருநாதர்.

ஜோதி சுவாமி பக்தர்களுடன் கோலார் தங்கவயல் ஆண்டர்சன் பேட்டிலிருக்கும் சாந்தி ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

22.02.2016ம் ஆண்டு தண்ணீருக்குள் இருந்த சுவாமி கேசவனானந்தா சுவாமிகளின் திருமேனியை எடுத்து வைத்திருக்கிறார். நைவேத்தியம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நைவேத்தியமாக படைத்த பால் தம்ளரில் குறைந்து இருப்பதை பக்தர்களும், சுவாமியும் கண்டிருக்கின்றனர்.


(கோலார் தங்கவயலில் இருக்கும் சாந்தி ஆசிரமத்தில் உள்ள சுவாமி கேசவனானந்தாவின் திருமேனி. கல்வெட்டில் நம் குருநாதரின் பெயர் பொறித்திருப்பதைப் பார்க்கவும்)

”ஆண்டவனே, ஒரு சில கற்கள் பாலை உறிஞ்சும் பார்த்திருக்கிறேன். ஆனால் சுவாமியின் வாயின் அருகில் பால் நிறைந்த தம்ளரை கொண்டு சென்ற போது பால் தானாகவே குறைந்தது” என்றார் என்னிடம்.  சொல்லி விட்டு சிரித்தார். எதற்குதான் அவ்வப்போது சிரிக்கிறாரோ தெரியவில்லை.

மறு நாள் உலக வழக்கப்படி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்த நிகழ்வில் ஜோதி சுவாமிக்கு ஒருவர் மாலையிட்டிருக்கிறார். அவர் அந்த மாலையை எடுத்து போட்டவருக்கே திரும்ப போட்டு விட, இப்படியெல்லாம் செய்யக்கூடாது அது மரியாதை செய்தவரை அவமானம் செய்தது போலாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் மாலை, மரியாதை, சகல ஸ்ரீ, சற்குரு பட்டமெல்லாம் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதி சுவாமி அவர்களிடம், ”என் குரு என்னிடம் சொன்னது, நீ எப்போதும் சீடனாகத்தான் இருக்க வேண்டும், உன் முன்னால் இருப்பவர்கள் தான் உனக்கு குரு, ஆகவே குருவிற்குதான் மாலை சென்று சேர வேண்டும். சீடனுக்கு அல்ல என்பதால் மாலையை குருவிற்குதான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், கோபிநாத்  பற்றிய பத்திகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். கோபிநாத்துக்கு விஷயதானம் செய்கிறவர்கள் யார்?  என்று யோசித்துப் பாருங்கள். இத்துடன் இதை முடித்து விடலாம். 

கோசாலை..!

மாலைப்பொழுது. பொழுது மசங்கிய நேரம், சிட்டுக்குருவிகளின் சத்தம் இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருந்தது. மெல்லிய சூடில்லா காற்று வீசிக் கொண்டிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”இதெல்லாம், ராமகிருஷ்ணர் பரம்பரை ஆண்டவனே” என்றார்.

”புரியவில்லை சாமி” என்றேன்.

”காளி கோவிலில் அர்ச்சகரான பகவான் ராமகிருஷ்ணர், பூஜை சாமான்களை கங்கையில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற பக்தர்கள், சுவாமி இதை நீங்கள் தானா செய்ய வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பகவான், பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாதல்லவா, பின்னால் வரக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்” என்று சொன்னாராம்.

”ஓ...! புரிந்தது சாமி” என்றேன்.

அம்புட்டுதான்.

வாழ்க வளமுடன்...!


Sunday, March 27, 2022

காக்கை குருவி ஹிஜாப் முஸ்லிம்கள் இந்துக்கள் இந்தியா

கோவை பேரூரிலிருந்து சிறுவாணி வரை சாலையை இருபக்கமும் அகலப்படுத்திக் கொண்டிருகின்றார்கள். கனரக இயந்திரங்கள் சாலைகளின் இருமருங்கும் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து விட்டு ஜல்லி நிரப்பப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கூட்டம் கார்களிலும், பைக்குகளிலும் டான்ஸ் கிளப்பின் ஹெட் ஆஃபீசுக்கு வருகிறது. சாலையை அகலப்படுத்த வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கிறது. யானை வழித்தடத்தில் அனுமதி கிடைத்தது எப்படி என்பதெல்லாம் மர்மத்தின் கதை. இந்த அபார்ட்மெண்ட் பற்றிய தகவல்கள் ரெராவில் கிடைக்கவில்லை. அந்த அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஈஷா டான்ஸ் கிளப் ஓனரின் நட்புவட்ட மந்திரி பிரதானிகளின் அன்பினால் அபார்ட்மெண்ட்டுக்கு செல்லும் சாலைகளை செப்பனிட்டும், சாலையோரம் சிமெண்டால் தடுப்புகள் கட்டி அகலப்படுத்திக் கொடுத்தார்கள். கொடுப்பினை வேண்டும்.


(ஈஷா டான்ஸ் கிளப் கட்டிக் கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட் வட்டத்தில் இருப்பது)

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் காருண்யா போலீஸ் நிலையத்தின் கேட்டை கடந்த வாரம் யானை ஒன்று கோபத்தில் உடைத்து எறிந்து விட்டது. பார்க்க புகைப்படம். ஆதாரம் இருக்கிறது. சும்மாச்சுக்கும் எழுதவில்லை.


கடந்த வாரத்தில் யானையால் உடைக்கப்பட்ட காருண்யா நகர் காவல்துறை அலுவலகத்தின் பிரதான கேட்

இப்படியெல்லாம் தொண்டாமுத்தூர் ஈஷா டான்ஸ் கிளப்பால் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பது இயற்கையை அழித்தலில் தான் தொடங்குகிறது அல்லவா? அதை செவ்வனே செய்கிறார்கள் இந்தப் பகுதியில்.

கோடை காலத்தில் மலைகளில் தண்ணீர் இருக்காது. யானைகள் மலையிலிருந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் பல்லாண்டுகாலமாக இருக்கும் வழித்தடம் வழியாக கீழே வரும்.

அந்த வழித்தடத்தில் ஈஷா டான்ஸ் கிளப்பைக் கட்டி வைத்துக் கொண்டுள்ளது. சிவராத்ரி அன்றைக்கு மலைகளில் அமைதியாக இருக்கும் காக்கை குருவிகளில் இருந்து அனைத்து மிருகங்களையும் டான்ஸ் என்ற பெயரில் கடூர சத்தத்தினால் பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் புரிதலும் இன்றி அரிப்பு தாளாமல் கார்களில் குவியும் மனிதப் பிறவிகளை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஆன்மீகத்தின் முக்கியதன்மை அமைதியாக இருப்பது. ஆட்டம் பாட்டம் இல்லை. 

அது மட்டுமல்ல சாலையை அகலப்படுத்துகிறேன் பேர்வழி என ஆலந்துறை அரசுப் பள்ளியின் எதிரில் இருந்த பெரிய மரமொன்றை வெட்டி வீழ்த்தி விட்டார்கள். மிகப் பெரிய மரம் அது. அடுத்து காருண்யா நகரில் சிறுவாணி சூப்பர் மார்க்கெட் பகுதியில் இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள். 

காக்கைகளும், குருவிகளும் அடைந்திருந்த வாழ்விடமான அந்த மரங்களை மனிதப்பதர்களின் வசதிகளுக்காக வெட்டி விட்டார்கள். எத்தனை ஆண்டுகாலமாக அம்மரங்கள் அங்கிருந்தனவோ தெரியவில்லை. எத்தனையோ சின்னஞ் சிறு பறவைகளுக்கு அவைகள் புகலிடமாக இருந்தன. இனி அப்பறவைகள் வாழ்விடத்திற்கு  என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.

மரங்களை வெட்டா வண்ணம் சாலைகள் அமைத்தால் ஒன்றும் குறையப்போவதில்லை. நாம் பிறக்கும் முன்பே உருவான மரத்தை வெட்ட வேண்டுமா என்று காண்ட்ராக்டர் கூட நினைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கூட தடுக்கவில்லை. என்ன தான் ஜென்மமோ தெரியவில்லை.

ஏற்கனவே ஈஷா டான்ஸ் கிளப் நூறு ஏக்கரில் இருந்த மரங்களை வெட்டி, பெரும் பாறைகளை வைத்து கிளப்பை சுற்றிலும் மதில் கட்டி விட்டது. இந்த இடத்தில் யானை வழித்தடமில்லை என்று சான்றிதழ் கொடுத்த அரசு மகானுபாவர்கள் ஏன் பெரும் பாறைகளை வைத்து மதில் கட்டினீர்கள் என்று கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிளப்பின் கருணையில் வாழும் கிளப் டான்ஸ் சேவகர்கள் அவர்கள். சம்பளத்தை விட கிம்பளமும், அதிகாரமும் பெரிது அல்லவா? 

அறம், சட்டம், தர்மம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதுதான் பரிகாரம் இருக்கிறதே, நவீன குரு இருக்கின்றார்களே. அவர்கள் சிவபெருமானையே பூமிக்கு கொண்டு வந்து பதிய வைத்திருக்கிறார்கள். அவர் நம்மை கவனித்துக் கொள்ள மாட்டாரா? என்ற நிலையில் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

இப்படி மரங்களையும், வழித்தடங்களையும் அழித்து விட்டால் காக்கைகளும், குருவிகளும் வேறு எங்குதான் போகும்? யானைகளும், இதர விலங்குகளும் வேறு எங்குதான் செல்லும்?  அவைகள் எப்படித்தான் உயிர் வாழ்வது? எல்லாவற்றையும் ஆக்கிரமித்து அழித்து விட்டால், பறவைகள் குடியிருக்கும் பெரும் மரங்களை வெட்டி விட்டால் அவைகள் எப்படித்தான் வாழும்? ஏன் இவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கேட்பதற்கு நாதி எவர் இருக்கிறார் இங்கே? உழவு மாட்டைக் கூட வயதானால் அறுப்புக்கு அனுப்பும் மனிதர்கள் தானே இவர்கள்.

பிரிட்டிஷாரிடம் அடிமையாக கிடந்த ஜீனில் பிறந்தவர்களுக்கு கேள்வி கேட்க கூட தைரியமில்லை.

காக்கைகளும் குருவிகளும் விலங்குகளும் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? பசு மாட்டுக்கு மட்டும் தான் பேசுமா இந்த உலகம்? பசு மாடு பால் தரவில்லை என்றால் அதையும் அல்லவா அனாதை ஆக்கி இருக்கும் இந்த உலகம்? இத்தனை அக்கிரமங்களும் ஒரே ஒரு டான்ஸ் கிளப்புக்காக நடத்தப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இயற்கையை அழித்து அழித்து சுடுகாடாய் மாற்றித்தான் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டுமா? பிற உயிரை வதைத்துதான் ஆன்மீக வளர்ச்சி பெற வேண்டுமா? 

ஹிஜாப் போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது கர்நாடக ஆளும் பாஜக அரசு.

அடப் பதர்களே..!

இந்தியா என்ற நாடே இல்லாத நாளில் முஸ்லிம் மன்னர்கள் தான் இந்த நாட்டை ஆண்டார்கள். ஓளரங்க சீப் ஆங்கிலேயர்களைக் கட்டி வைத்து அடித்து துரத்தினார். பகதூர்ஷா காலத்தில் தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வாணிபம் செய்ய அனுமதி பெற்றார்கள். தென் பகுதியில் தமிழர்கள் ஆண்டார்கள். அன்றைக்கு பிரிட்டிஷ்காரனை எதிர்த்து நின்று போரிட்டுச் செத்துப் போனவர்கள் முஸ்லிம்கள். பல இனத்தவர்களும் போரிட்டு உயிரை விட்டார்கள். 

ஒருங்கிணைந்த அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வந்த உருவ வழிபாட்டினை கொண்டவர்களை பிரிட்டிஷ்காரன் தான் இந்து என்று அழைத்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட ஹிந்துஸ்தான் என்ற பகுதியை இந்தியா என்று கட்டமைத்தான். அதன் பின்னால் தான் இந்து மதம் உருவானது, இந்துக்கள் என்று உருவானது.

அதற்கு முன்னாலே இந்திய வடபகுதி முஸ்லிம் மன்னர்களால் ஆளப்பட்டது. இந்துக்கள் எவரும் இந்தியாவை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்தனர். அவரவர் பகுதிக்கு அவரவர் தலைமையில் ஆண்டு வந்தார்கள். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வெறுக்கும்படியும், அவர்களின் உடை கலாச்சாரத்தில் நுழைய பாஜகவிற்கு தகுதியே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மமதையில் ஆடும் பதர்களுக்கு, ஆன்மீக பூமியான இந்தியா அழிவைத்தான் பரிசளிக்கும்.

உலகிலேயே இந்தியா மக்கள் தான் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள். கொன்றவன் பிரிட்டிஷ்காரன். அவனைக் கேட்க இங்கு எவனுக்கும் தைரியமில்லை. ஹிஜாப் போட்டால் தடுக்கிறார்கள்.

அன்றைக்கு எங்கே போனார்கள் இன்று இந்து மதம் என்று பேசுபவர்கள்? மக்களை மதத்தின் பெயரால் பிரித்து தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் ஷூவை நக்கிக் குடித்த வந்தேறிகளின் சூழ்ச்சி இது.

இந்துக்களை விட தற்போதைய இந்தியாவின் வட பகுதி முழுமையும் நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள். நன்றி மறந்து விடக்கூடாது.

வந்தேறிகள் துபாஷி என்ற பெயரில் மொழி பெயர்ப்பாளராய் இருந்து கொண்டு காட்டிக் கொடுத்தவர்கள். இதர இன மக்களை பிரிட்டிஷ் அடிமைப்படுத்த துணை சென்றவர்கள். அவர்கள் பிரிட்டிஷாருடன் உட்கார்ந்து கொண்டு அனைவரையும் அழித்தவர்கள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த வந்தேறிகள்தான். கூடவே இருந்த இனத்துரோகிகள் அவர்கள். மன்னிக்கவே கூடாத சூழ்ச்சிக்காரர்கள்.

செட்டியாரும், முதலியாரும், பள்ளர்களும், பறையர்களும், முஸ்லிம்களும் நிறைந்த நாட்டில் பிரிட்டிஷ்காரனால் வலிந்து திணிக்கப்பட்டவர்கள் இன்றைய கிறிஸ்துவர்கள். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

இந்தியா ஆன்மீக பூமி. பல கோடிக்கணக்கான உயிர்களை பலியிட்டு உருவானது இந்தியா. மஹாத்மா காந்தியின் புதிய ஆயுதமான அஹிம்சையை பிரிட்டிஷ்காரனால் வெற்றி கொள்ள முடியவில்லை. அன்றைய காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் செய்து பனிரெண்டு வருடம் ஜெயிலில் கிடந்த நேருவைப் பற்றிப் பேச இங்கு எவருக்கும் தகுதி இல்லை.

எல்லோரும் எல்லாவற்றையும் பேசி விட முடியாது. 

கர்ப்பினி பெண் ஒருத்தியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து, அதன் தலையை வெட்டி வீழ்த்திய காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த மனிதர்களை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதை விட நல் வார்த்தை ஏதுமில்லை.

ஆன்மீக பூமியில் விரைவில் நல்லன நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பொய்க்கவில்லை. 

அசுரர்கள் அழிவது போல எல்லாமும் சுத்தப்படுத்தப்படும் காலமும் விரைவில் வரும். வந்தே தீரும். அறம் என்றும் உயிர்ப்போடு இருக்கும் பூமி நமது இந்தியா.

Wednesday, February 14, 2018

மஹாசிவராத்திரியும் கடவுளும்

கடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.

இணைப்பினைப் படித்துப் பாருங்கள்.


இந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து வரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர். 

நமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம்.  பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி? எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும். 

முட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான்.  எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன். 


(முத்துவாளியம்மனும், நாகேஸ்வரரும்)

செம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.

வரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை.  அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி?” என்று விசாரித்தேன்.

”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.

ஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம்.  பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது. 

கொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.

“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.

”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.

”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.

என் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு?????

இரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்....??? என்னத்தைச் சொல்ல....! நல்லா இருக்கட்டும் எல்லோரும்.....!

குறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.

Saturday, February 25, 2017

ஈஷாவினால் சாபம் பெற்றனரா அரசியல் தலைவர்கள்?

சிறிய வயதில் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாலையில் அம்மா என்னைக் கொண்டு போய் சிவன் கோவிலில் அமர வைத்து விட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள். மழையூர் சதாசிவம் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். கல்லூரி படிப்பு வரையிலும் இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்தது. இரவின் இடையில் சுக்கு மல்லி காஃபி கிடைக்கும். விடிகாலையில் சுண்டல்,பொங்கல் இப்படி ஏதாவதொன்று கிடைக்கும். அப்போதெல்லாம் ஏன் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறோம் என்று தெரியாது. அம்மா சொன்னாங்க, செஞ்சாச்சு.

கரூரில் இருக்கும் போது நெரூர் சதாசிவாநந்தா ஜீவசமாதியின் முன்னால் இருக்கும் சிவன் கோவிலுக்கு நானும் மகன் ரித்திக்கும் மஹாசிவராத்திரியன்று சென்று விடுவோம். இரவு முழுவதும் சிவன் கோவிலின் முன்புறம் இருக்கும் பகுதியில் உட்கார்ந்திருப்போம். ரித்திக் வயது மூன்று இருக்கும். தூங்கி விடுவான். மடியில் படுக்க வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

காலம் செல்லச் செல்ல மஹாசிவராத்திரியன்று கண் விழிப்பது குறைந்து விட்டது. தென் கயிலை செம்மேட்டில் காளஹஸ்திக்கு நிகரான ராகு கேது ஸ்தலமான முட்டம் முத்துவாளி அம்மன் கோவில் இருக்கிறது. பரிகார ஸ்தலம். முதன் முதலில் பாலைக் கொண்டு நாகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது ஊதா கலரில் பால் அவர் மீது வடிந்தது. அதன் பிறகு இரண்டு வருடம் வாரா வாரம் வெள்ளிக்கிழமை அன்று சென்று கொண்டிருந்தேன். சிறுவாணி சாலையிலிருந்து ஆலந்துறை பள்ளி அருகில் பிரியும் சாலை மிகவும் மோசமாக இருக்கும். ஒரு தடவை எரிச்சலில் முத்துவாளி அம்மனிடம் இனி ரோட்டைச் சரி செய்தால் தான் உன்னைப் பார்க்க வருவேன் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். ஒருவருடம் அந்தப்பக்கம் போகவே இல்லை. 

ஒரு நாள் மாலையில் கோவிலின் அர்ச்சகர் சிவகுரு நாதனிடமிருந்து போன் வந்தது. ”நாளை மஹா சிவராத்திரி வருகிறது. அபிஷேகத்திற்குக் கரும்புப் பால் இந்தப் பக்கம் கிடைக்கவில்லை. ஆகவே நீங்கள் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்றார். மனையாள் பரபரத்தார். எனக்கோ 80 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டுமே என்ற கடுப்பு. சாலை நன்றாக இருந்தாலும் பரவாயில்லை. வெகு மோசம் என்று கடுப்படித்துக் கொண்டிருந்தேன். வழியின்றி மறுநாள் நானும் மனையாளும் கரும்புச் சாருடன் கிளம்பினோம். ஆலந்துறை தாண்டி சாலையில் பயணித்த போது பள்ளமும் குழியுமான சாலை வரப்போகிறது என்ற கடுப்பில் சென்று கொண்டிருந்தேன். 

ஆனால் கோவில் வரை புத்தம் புதிய சாலை கருகருவென நாகப்பாம்பு போல பளபளத்துக் கொண்டிருந்தது. கோவிலின் அருகில் இருந்த பாலத்தை முதல் நாள் தான் திறந்து வைத்தார்களாம். அசந்து போனேன். அந்தப் பேரழகி மல்லிகைப் பூச்சூடி மோகனப் புன்னகையுடன் அழியாத பேரழகுடன் நகைத்துக் கொண்டிருந்தாள். நாகேஸ்வரர் பாம்பு படம் எடுக்க உலகை ஆளும் மன்னன் போல ஓங்கி உயர்ந்து பூக்களிடையே பூவாய் மலர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அன்றிலிருந்து அந்த அம்மாளுடன் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்வதில்லை. 

இந்த வருடம் கரும்புச் சாறு வாங்கிக் கொண்டு சென்றோம். வழியெங்கும் காவல்துறையினர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களும் சக மனிதர்கள் தானே. ஒரு நிமிடம் வெயிலில் நின்றால் கூட நமக்கு காய்ந்து விடும். அவர்களின் நிலைமை என்னவென்று சொல்ல. அவர்களின் அம்மாக்கள் அந்த நிலையில் அவர்களைப் பார்த்தால் பெத்த வயிறு எப்படி பதை பதைக்கும்? ஒருவர் வருகிறார் என்பதற்காக இத்தனை பேர் துயரப்பட வேண்டுமா? எத்தனை பேருக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றனவோ? என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றனவோ? எல்லாம் மறந்து வெயிலில் நின்று வாடிக் கொண்டிருந்தனர். மனதுக்குள் பாரமாக இருந்தது.

முட்டத்துப் பேரழகனையும் பேரழகியையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு குருநாதரைத் தரிசிக்கலாம் என்று கிளம்பினால் அக்கப்போர் ஆரம்பித்தது. இந்தப் பக்கம் போ அந்தப்பக்கம் போ என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். ஒரு வழியாக வனத்துறை செக் போஸ்ட் அருகில் சென்று அப்படியே இடது புறம் திரும்பி விடலாம் என்றால் கார் பார்க்கிங்கை அதற்கு முன்பே ஒதுக்கி கார்களை அந்தப்பக்கம் விட்டுக் கொண்டிருந்தார்கள். டி.எஸ்.பி ஒருவரிடம் செக் போஸ்ட் வரை அனுமதியுங்கள் என்றால் முடியாது சார், பிரைம் மினிஸ்டர் பாதுகாப்பு புரோட்டோகால் என்று மறுத்து விட்டார். நானெப்படி சார் நடந்து செல்வது என்று கேட்டால் நாங்கள் தூக்கிக் கொண்டு போய் விடுகிறோம் என்றுச் சொன்னார். போலீஸ் தூக்கிக் கொண்டு போனால் முரசொலி மாறன் கதையாக மாறி விடும் அபாயமும், அய்யோ கொல்றாங்களேன்னு கத்தினால் யாரும் படம் பிடிக்க வரமாட்டார்கள் என்கிற காரணத்தாலும் அவரின் ஐடியாவை நிராகரித்து காரை திருப்பி வந்த வழியே மீண்டும் வந்து காருண்யா வழியாக ஆஸ்ரமத்தின் பின்புற வழிப்பாதைக்குச் சென்றேன்.

ஜோதி ஸ்வாமி மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு வந்தார். அதில் ஏறி ஆற்று வழியாகச் சென்றால் ஆற்றில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. காய்ந்து போய் கிடந்தது. ஆசிரமத்தில் அனேகர் வந்திருந்தனர். வெள்ளிங்கிரி மலைக்கு சென்று வந்தவர்கள் ஆங்காங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆற்றில் குழி வெட்டி தண்ணீர் பிடித்து காக்காய் குளியல் போட்டுக் கொண்டிருந்தனர். குரு நாதரைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் டம் டம் என்று ஸ்பீக்கர்கள் அலற ஆரம்பித்தன. அங்கிருந்த குரங்குகள் படபடப்பில் எங்கோ சென்று மறைந்தன. அந்த இடமே அதிர ஆரம்பித்தது. வெள்ளிங்கிரி மலையின் அமைதி முற்றிலுமாக குலைய ஆரம்பித்தன. அதிரும் ஒலிகள், கார்களின் அசுர சத்தம். ஹெலிகாப்டர்களின் கொடூரச்சத்தம். மலையெங்கும் எதிரொலித்தன. மலையேறும் பக்தர்களை காவல்துறையினர் விடாது தடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு நிறுவனத்திற்காக ஆன்மீக வழிபாட்டினைத் தடுப்பது இந்தியாவில் மட்டுமே அதுவும் தமிழகத்தில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம்.

சமீபத்தில் ஈஷா மீது பத்திரிக்கைகளில் வெளிவந்த கோவை புரபசர் பெண்கள் பிரச்சினையிலிருந்து ஈஷாவுக்கு செல்பவர்கள் கூட்டம் குறைந்திருந்தது. அதை ஈடுகட்டும் விதமாக ஜக்கி அவர்களின் புத்திசாலித்தனத்தினால் உருவானதுதான் ஆதியோகி சிலை. வெறும் எட்டு மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டவை என்று விழாவில் பேசினார். ஜக்கியின் அரசியல் பார்வை புத்திசாலித்தனமானது. ஜக்கி ஒரு யோகா மாஸ்டராகி இன்று பிரதமரையே தன் இடத்திற்கே வரவழைக்கும் வல்லமை பெற்றவராக இருக்கிறார் என்றால் அவரிடம் செல்லும் சாதாரண மனிதனின் நிலையை என்னவென்று சொல்வது?  மாதம் ஒரு இலட்சத்து ஐம்பாதாயிரம் சம்பளம் பெறும் ஒரு ஐடிகாரர் மாதம் தோறும் தன் சம்பளத்தில் ஏழு சதவீதத்தை ஈஷாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். 

தெஹல்வாவில் வந்த ஜக்கியின் ஒரு ஹாபி (பொழுதுபோக்கு) கீழே:

He drives straight from Coimbatore to Bangalore, with people meeting him while he’s driving. This is his usual thing — he’ll take somebody in his car for a quick meeting. Ahead another car is waiting with somebody else, and he’ll drop off the first person and pick up the next.

Three hundred and fifty kilometres in four hours. Average speed: 87 km/h. He doesn’t stop, just gas station to gas station. Never takes a driver. Find somebody who can drive better than him and he’d let them drive! He can’t bear people who drive with fear and not with skill.

Everyone thinks it’s a Lexus... it’s a Toyota! A black Land Cruiser. Range: 650-700 km. He had it painted matt black when he bought it second-hand. The guy he got it from wanted to be seen in a Lexus and so imported its front guard. Now he’s been trying to get a Toyota one, but it’s difficult.

He could take the faster Salem road — it’s a four-lane highway now — but there’s a 25-30 km unfinished section and you can lose an hour there, easy. So he drives through the mountains instead, going through Dinbumghat and Chamrajnagar, and then a smaller route, villages and little-little towns and all those names he did a long time ago. Malavalli! My god, he was last here 32 years ago. He likes 
this drive.

Next to his seat there’s a bottle of mineral water, a hanky and a packet of paper napkins. There’s also his trusty menthol inhaler (his staff places it wherever he sits). There’s always this little nude white tube he’s frequently sniffing. They take off the packaging since he doesn’t want to be seen endorsing a brand. He loves the smell.


பிரைம் மினிஸ்டர் யோகா நோய்களிலிருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் என்று பேசினார். ஆச்சரியமாக இருந்தது. எந்த முனிவர் யோகா செய்து கொண்டிருந்தார்? எந்தக் குருகுலத்தில் யோகா சொல்லிக் கொடுக்கப்பட்டது? பதஞ்சலி யோகா என்பது உடலுக்கான உடற்பயிற்சியே தவிர ஆன்மீக விழிப்புணர்வுக்கான தகுதி அல்ல என்று விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். 

உலகிற்கே அதீத ஆன்மீகத்தைச் சுட்டிக்காட்டிய புத்தர் எந்த யோகா செண்டருக்குச் சென்றார்? மாபெரும் மறை பொருளை தன்னகத்தே கொண்டு உலகின் ஒப்பற்ற ஒரு வழிகாட்டியாகத் திகழும் திருக்குரானை ஓதிய முஹம்மது அவர்கள் எந்த யோகா செண்டருக்குச் சென்று பயிற்சி பெற்றார்? ஜென் தத்துவத்தில் மனித மனங்களை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி தன்னுணர்வு பெற வைத்தக் குருமார்கள் எந்தெந்த யோகா செண்டருக்குச் சென்று வந்தார்கள்? சித்தர்கள் என்றுச் சொல்கின்றோமே அவர்கள் எந்த யோகாவைச் செய்து வந்தார்கள்? யோகா என்பது உடற்பயிற்சிக்குத்தானே ஒழிய மனம் அமைதி பெற அல்ல என்பதினை நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிந்து கொள்ள முடியும்? 

விடாமல் பீட்சா பர்கர் தின்பவர்களுக்கு யோகா ஆரோக்கியத்தினைத் தந்திடுமா? அசைவ உணவையே விரும்பிச் சாப்பிடுவர்களுக்கு யோகா என்ன நலத்தைத் தரும்? சாப்பிடவே உணவில்லாத உகாண்டா ஏழைகளுக்கு யோகா பசியைத் தீர்க்குமா?  

பிரதமர் இவ்வாறு பேசியது எனக்கு ஆச்சரியத்தினைத் தந்தது. அரசியலும் ஆன்மீகமும் ஒன்று சேர்வது மக்களை முட்டாளாக்கத்தானே தவிர அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒவ்வொரு அக்கவுண்டிலும் கருப்பு பணத்தை மீட்டு வந்து கட்டுவேன் என்றுச் சொன்ன பிரதமர் நம் பணத்தை நம் அக்கவுண்டில் கட்ட வைத்த அரசியல் சாணக்கியத்தனம் மிகுந்தவர். அவர் இவ்வாறு பேசியதற்கும் ஏதாவது ஒரு சாணக்கியத்தனம் இருக்கலாம்.

ஆன்மீக வாதிகள் துயரப்படும் மனிதர்களுக்கு வழிகாட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வழிகாட்டி எப்போதும் தன்னை தலைவன் என்றுச் சொல்லிக் கொள்ளாது. வழிகாட்டி இதுதான் வழி என்று சுட்டிக் கொண்டிருக்கும்.

எதையும் நம்பித்தான் ஆவேன் என்பவர்களுக்கு இதைத்தான் நம்ப வேண்டும் என்றுச் சொல்கின்றவர்கள் தான் குருக்களாக இருப்பார்கள். தமிழர் இனத்தில் எத்தனையோ முனிவர்கள், ரிஷிக்கள், சித்தர்கள் தங்களை மறைத்துக் கொண்டு வழிகாட்டிகளாக மட்டுமே இருந்திருக்கின்றனர். புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் தங்களை மறைத்து மூர்த்திகளை முன்னிலைப்படுத்தும் அவர்கள் எங்கே?

இவ்விடத்தில் உங்களுக்கு ஒரு கதை. மஹாபாரதக் கதையின் முடிவில் கலியுகம் தொடங்குகிறது. பாண்டவர்களும், கிருஷ்ணனும் வந்த வேலை முடிந்ததும் உலகை விட்டு விட்டு கிளம்பினர். ஆட்சியில் பரிட்சித்து அமர்கின்றார். ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் செல்லும் பரிட்சித்து சமிகர் என்றொரு முனிவரின் குடிலுக்குள் நுழைகின்றார். அவர் தியானத்திலிருக்கிறார். அவர் பலமுறை முனிவரின் கவனத்தை திருப்ப முயன்றும் இயலவில்லை. ஆகவே கடுப்பில் குடிலின் அருகில் செத்துக் கிடத்த பாம்பினை எடுத்து தியானத்திலிருந்த முனிவரின் கழுத்தில் போட்டு விடுகிறார். அதை அப்போது அங்கு வந்த முனிவரின் மகன் சிரிங்கன் பார்த்து விட்டு கடும் கோபத்த்தில் இன்றிலிருந்து ஏழாவது நாள் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போவான் என்று சாபமிடுகின்றான். ஏழாவது நாளில் பரிட்சித்து பாம்பு கடித்து இறந்து போகின்றான். கதை முடிந்து விட்டது. 

இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். இது தானே உண்மை. இந்த நிமிடம் தானே உண்மை. நாளை என்பது வரப்போவது? அப்போது நாமிருப்போம் என்பதற்கு உத்தரவாதமில்லை. நேற்று என்பது நடந்து விட்டது. அதற்குள் நம்மால் நுழைந்து செயல்பட முடியாது. ஆகவே ... ! தொடருங்கள்...!!!

குருநாதர் இருக்கும் இடம் சப்த ரிஷிகள் வந்து தங்கி அங்கிருந்து ஆகாய மார்க்கமாக ஏழாவது மலையில் குடிகொண்டிருக்கும் வெள்ளிங்கிரி அப்பனைத் தரிசிக்கச் செல்லும் பகுதி. வெள்ளிங்கிரி மலை ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் தவம் செய்யும் இடம். மலைக்குச் சென்று வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். மலையிலிருந்து வரும் ஏழு வாத்திய இசைக்கோர்வைகள். ஓங்காரமிட்டு மலை தேடி வரும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் தென் கயிலையின் அமைதியை ஸ்பீக்கர் ஒலிக்க விட்டுக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆன்மீக விழிப்புணர்ச்சி பெற அமைதிதான் தேவை. அதற்காகத்தான் யோகிகள் அமைதி நாடி காடுகளுக்குள் சென்று விடுவார்கள். ஆனால் இங்கோ ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அமைதி இல்லா இடத்தில் அமைதி ஏற்படுமா? ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு தன்னை அறிதலும் நடக்குமா? நடக்கக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவா? 

தென்கயிலையில் தியானமேற்றிக் கொண்டிருக்கும் வாசியோகிகளின் அமைதியையும், ரிஷிகளின் தவத்தையும் கலைக்கும் எவரும் அவர்களின் சாபத்தினை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய விதி இருக்கிறது. தென் கயிலையின் அமைதியைக் கெடுக்கக் காரணமாக இருந்தவர்களின் குடும்பங்கள் சிதறியிருக்கின்றன. அரசியல் தலைவர்கள் முகவரி இல்லாமல் போய் இருக்கின்றார்கள். நான்கு நாட்களாக விடாது தென் கயிலையை அமைதி குலைத்திருக்கிறார்கள். முனிவர்களின், ரிஷிக்களின் சாபம் சும்மா விட்டு விடாது என்றே நினைக்கிறேன். முனி சாபம் பலித்தே ஆக வேண்டும். பரிட்சித்து மன்னன் கதை அதைத்தான் சொல்கிறது.

கேதார்நாத் உங்கள் அனைவருக்கும் நினைவிலிருக்கும் என நம்புகிறேன். அயோக்கியத்தனம் அதிகமானதால் அதுவே தன்னை ஒரு உலுப்பு உலுப்பிக் கொண்டு அழித்துச் சுத்தப்படுத்திக் கொண்டது. அதுபோல தென் கயிலையும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

அதற்குச் சாட்சியாக கீழே ஒருவர் எழுதி இருப்பதை இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

http://ramananvsv.blogspot.in/2013/06/blog-post_30.html

என் மீது எரிச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு பாட்டினை சமர்ப்பிக்கின்றேன். சிவராத்திரியன்று எப்படி கொண்டாட வேண்டுமென்பதற்கு பயிற்சி பெற கீழே இருக்கும் பாடலினைப் பாருங்கள். சீக்கிரம் முக்தி பெற்று விட எளிய பயிற்சி இது. இந்த முக்தியை விட வேறு முக்தியெல்லாம் நமக்கெதுக்கு???