குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நரலீலைகள் நாவல். Show all posts
Showing posts with label நரலீலைகள் நாவல். Show all posts

Sunday, April 9, 2023

நரலீலைகள் (15) - ராதே எங்கேயடி நீ!



ராதே....!

அலை மனத்தில் 

உன் பிம்பம்...!

ராவண தவத்தில்...!

வாக்கும் போனதடி...!

மனமும் செத்ததடி..!

செயலும் ஓய்ந்ததடி...!


ராதே...!

வாச மலர்கள் நகைக்கின்றன..!

வீசி வரும் தென்றல் அனலாய்...!

அருவிகளென புனலாடுகின்றன கண்கள்..!

வழிகிறது சொட்டுச் சொட்டாய் உயிரும் ...!


ராதே...!

காத்திருப்பதும் சுகமே..!

ஆனால்

காதல் காத்திருப்பதில்லை....!

ராதே....!


ராதே....!

மெல்லிய மாந்தளிர் சோலையிலே...!

உன்னை என் கைககள் சிறைப்பிடிக்க, 

உன் கூர்முலை என் மார்பைத் துளைக்க, 

கருமேகமென சூழ்ந்த குழலை கைகளால் இழுத்துப் பிடிக்க, 

நாணிச் சிவந்த உன் அதரங்கள் பற்களால் கடித்து, 

சட்டென்று துளிர்த்த ரத்தத் துளிகளை, 

உயிர் உறிஞ்சும் எமன் போல கன்னல் பிழிந்தாற் போல, 

அமுது அருந்த எப்போது என்னை அடையப் போகிறாய் ராதே..!


ராதே....!

வாடிய கொடி 

போல 

காற்றில் அசையும்

இடை கண்ட.! 

நிலம் கண்ட மீனாய்

துடிக்கத் துடிக்க....!

நொடி பூரணத்தை எப்போது

எனக்குத் தருவாய் ராதே....!


ஓடி வா....!  வீசு தென்றலென....!

உன்னைக் காணாமல்

உன்னுடன் முயங்காமல்...!

எப்படி நான்..

காணாக் கடவுளைக் காண?

சொட்டுச் சொட்டாய் உதிர்கிறேன்....!

அழைக்கிறது பிரபஞ்சம்...!

ஓடி வா ராதே....!

ஓடோடி வா.....!


கலவியற்ற காமத்திலே...!

அந்த ஒரு நொடியில்...!

உணர்வற்ற அற்புதத்தை

தரிசிக்க வேண்டுமடி....!

ஓடோடி வா....!


வெள்ளிங்கிரி மலை

அடிவாரத்திலே....!

சலனமற்ற ஓடையோரமாய்....!

சலனத்துடன் உனக்காய்

காத்திருக்கிறேன்....!


ஓடோடி வா.... ராதே....!




Wednesday, June 8, 2022

நரலீலைகள் (13) - சொம்புத்தண்ணீரும் இணையதள சந்தாவும்


”அகலிகை கதை தெரியுமா சந்து உனக்கு?”

”நீ வேற மாயா, அதெல்லாம் யாருன்னே தெரியாது. பேரைப் பார்த்தா பொம்பளைன்னு தெரியுது? அதாரு?”

”பாற்கடலைக் கடையும் போது அமிர்தத்துடன் பிறந்தவள் அகலிகை. அகலிகைன்னா அழகு குறைவு இல்லாத உடலுடையவள் என்று அர்த்தம். இவளைப் பார்த்ததும் தேவர்கள் மோகித்து அவரவருக்கு பிரம்மனிடம் அகலிகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்க இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டு ஒரு போட்டி வச்சாரு பிரம்மன்”

”அட்ட...! என்னா போட்டி மாயா?”

அகலிகையை எப்படியாவது போட்டுத் தாக்கனும்னு இந்திரனுக்கு ஆசை. யார் இரண்டு தலையுடைய பசுவை வலம் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அகலிகை என்று சொல்லி விட்டார் பிரம்மன். தேவர்கள் எல்லோரும் யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். எங்கே போய் இரண்டு தலை உடைய பசுவைக் கண்டுபிடிக்கிறது, அதற்கப்புறம் அகலிகையை மேட்டரு பன்னுவது என்ற சூட்டில் தவித்துப் போய் மீண்டும் பிரம்மனிடம் சென்றார்கள். இரண்டு தலை உள்ள பசுவைப் பார்த்ததே இல்லை, அதனாலே வேற போட்டி வையுங்கன்னு சொல்ல, அவரும் யாரு உலகை முதலில் சுற்றி வருகின்றீர்களோ அவர்களுக்கு தான் அகலிகை என்றுச் சொல்லி விட்டார்.

ஆளாளுக்கு உலகை வலம் வர அவரவர் வாகனங்களில் கிளம்பி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு நாறிப் போன நாதாரி நாரதர் வேலை பார்த்துச்சே ’சோ’மாறி போல தேவலோகத்தில இருக்கிற நாரதர் அகலிகையை கவுதம முனிவருக்கு கட்டி வச்சுடனும்னு திட்டம் போட்டு ஒரு கருப்பிடித்து குட்டி போடும் நிலையில் இருக்கும் காராம் பசுவை கொண்டு போய் கவுதம முனிவரின் ஆசிரமத்தின் முன்னாலே கட்டி விட்டு முனிவரை அழைத்தார். வெளியே வந்த கவுதம முனிவரை குட்டி ஈன்ற போது கன்றின் முகம் தோன்ற, அந்த நிலையில் பசுமாடு இரண்டு தலையுடையதாக இருப்பதைக் காட்டி, பசுமாட்டைச் சுற்றி வரச் சொன்னார் நாரத முனிவர். அதன்படியே முனிவரும் செய்ய பிரம்மன் விதித்த போட்டியை நிறைவேற்றிய கவுதம முனிவருக்கு அகலிகையை கட்டி வைத்து விட்டார் பிரம்மன்.

உலகம் சுற்றி வந்து பார்த்த இந்திரனுக்கு தலையே சுற்றியது. உலகத்தை வலம் வருவதற்குள் கவுதம முனிவருக்கு பிள்ளையே பெற்றுக் கொடுத்து விட்டாள் அகலிகை. 

வெறுத்துப் போன இந்திரனுக்கு அகலிகையை எப்படியாவது டீல் போட்டு விடனும்னு துடியா துடித்தான். 

ஒரு நாள் பின் இரவில் சேவல் போல கூவினான். கவுதம முனிவர் காலைக்கடன் கழிக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது முனிவராக மாறி அகலிகையை மேட்டர் போட அணுக, அவளும் புருஷன் தானே என தழுவிக் கொள்ள கசமுசா நடந்து கொண்டிருந்தது. 

ஆற்றுக்குப் போன முனிவருக்கு விடிகாலை நேரமில்லையே என்ற சந்தேகத்தில் வீட்டுக்கு வர, அகலிகையை உடன் மேட்டர் முடித்த இந்திரனைக் கண்டு கொண்டார் முனிவர். உடனே சாபம் விட்டார். 

அகலிகையை கற்பு தவறிய நீ கல்லாய் போக என்றுச் சொல்லி விட, சாபத்தை ஏற்றுக் கொண்டாள். பின்னர் அகலிகை முனிவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்க, தசரத முனிவரின் மகனான இராமன் பாதம் பட்டால் உன் சாபம் தீரும் என்றுச் சொல்லி விட்டார். 

இந்திரனுக்கு வேறு சாபம். அது இங்கின வேண்டாம். 

அகலிகை இராமன் பிறந்து அதான்பா மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிற இடத்தில் அருள் பாலிக்க இருக்கும் இராமன் பிறந்து வளர்ந்து இளைஞனாகி நடந்து வரும் போது சாப நிவர்த்தியாகி அகலிகை மீண்டும் உருக்கொண்டு தெய்வலோகம் சென்றாள்.

”ஏன் மாயா? ஒரு சொம்புத் தண்ணீரில் முடிய வேண்டிய மேட்டருக்கு இத்தனை வருடம் காத்திருக்கணுமா அகலி? பாவம் மாயா அந்தப் பொம்பள”

“என்னடா சொல்றே?”

“அதான்பா, மேட்டரு முடிஞ்ச உடனே கழுவி விட்டா போச்சு, அம்புட்டுதானே” என்றான் சட்டென்று சந்து. ஏதோ சொல்ல வந்த மாயாவைப் பார்த்து, ”மாயா, நிறுத்து நிறுத்து” என்று கத்தினான் தங்கவேல்.

மாயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன தங்கவேல் இப்படிக் கத்துகிறானே என்று புரியாமல் மாயாவும், சந்துவும் திகைத்து நிற்க, கோபத்தில் பற்களை நற நறவெனக் கடித்தான் தங்கவேல்.

“என்ன ஆசிரியரே? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று நயமாகக் கேட்டான் சந்து.

“அக்ரகாரத்துல இருந்து தெவசத்துக்கு வந்த பான், கையிலை தர்ப்பையை மாட்டி விட்டு, கோத்திரம் என்னன்னு கேட்டான். எனக்குத் தெரியலன்னு சொன்னேண்டா. அதுக்கு அவன் நீங்க கவுதம கோத்திரம்னான். அடங்கொய்யால பயலே, இப்பத்தாண்டா தெரியுது? உங்க லொள்ளு” என்று அருகில் இருந்த மேசை மீது ஓங்கிக் குத்தினான்.

குத்துன குத்துல மேசையில் இருந்தவை ரெண்டு இஞ்சு மேலே போய் மீண்டும் மேசை மீது விழ, எழுந்த சத்தத்தில் மாயனுக்கும் சந்துவுக்கு வெலவெலத்துப் போனது.

இப்படி ஒரு குட்டிக் கதையை தங்கவேல் இடையில் சொருகி விட்டானே என்று மாயா திகைத்துப் போனான்.

சந்துவோ சத்தம் காட்டாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். தங்கவேலுக்கோ உள்ளுக்குள் உலைக்கலன் போல கொதிக்க ஆரம்பித்தது.

* * *

விலை போகா சரக்கை எப்படி விற்பது?

இணையதளம் தொடங்கணும் முதலில். 

சரக்கு வைரம் போல, வைடூரியம் போல, மாணிக்கம் போல. யாருக்கும் சரக்கின் அருமை தெரியவில்லை. இதைப் போன்றதொரு சரக்கை யாரும் இலவசமாகத் தரமாட்டார்கள். ஆனாலும் தருகிறோம். அதற்காக வேண்டியாவது பேரன்பு கொண்ட மக்கள் சந்தா கொடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

கவனிக்க உருக்கமான வேண்டுகோள் விடுத்தல் அவசியம். 

சந்தாக்கள் 1000,2000,5000,10000,25000 என இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டும் போதாது.

“யாரோ ஒருத்தன் பொண்டாட்டி, அவள் காலுக்கு கீழே பல குஞ்சு” என்ற புத்தகத்தை எவனாவது அல்லக்கையின் பேர் போட்டு எழுதி பதிப்பிக்க வேண்டும். 

விஜய் டிவி கோட்டு கோபிநாத்தை வைத்து டாக் ஷோவில் கருத்துச் சொல்ல அழைக்க வேண்டும். மேட்டர் ஓவர். விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் குஞ்சு புத்தகத்தை வாங்கிக் குவித்து விடுவார்கள். 

அடிப்பொடி அங்கன இந்த சரக்கு விபரத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியமான அவசியம்.

இம்புட்டுதான் தந்திரம். 

விற்பனை தந்திரத்தினை விரிவாக எடுத்துரைத்த மாயாவுக்கு நன்றியினைத் தெரிவித்து அமர்கிறேன் என்றான் சந்து மைக்கில்.

* * *

அசாசிலின் வேண்டுகோள்

தமிழ் உலக கலா ரசிகப் பெருமக்களே, ஊ சொல்றியா மாமா, ஊ...ப சொல்றியா மாமா என்ற பாடலை பெரும் புகழடைய வைத்தவர்களே, கலைக்கெனவே பிறப்பெடுத்து இதுவரையிலும் தெரியவே தெரியாத நடிப்பை, நடிகையின் கவட்டிக்குள் உற்றுப் பார்த்து தேடிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகளே, நாளை நடிகைக்கு நாட்டையே ஓட்டுப் போட்டுக் கொடுக்கவிருக்கும் மாபெரும் தியாகிகளே, தயவு செய்து சந்தாவைச் செலுத்தி விடுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

உலகில் எவனும் இதுவரை தயாரிக்காத பொருளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இணையதள உரிமையாளரை வாழ்வியுங்கள். நடிகைக்கே நாடு என்றால், இவருக்கு உலகத்தையே பரிசளிக்கலாம் அல்லவா?

இப்படிக்கு அஸாஸில்.

* * *

நம்பூதிரி பெட்ரூம் கதவைத் திறந்து பார்க்க அக்மார்க் வெள்ளைகாரன் போல படுத்திருந்தான் பாரிஸ்டர் மகன். தலைமுடி மட்டும் கருப்பு கலர். எல்லாம் பெருமாள் செயல். முடிமட்டும் கருப்பாக இல்லையென்றால் ஊரே சிரிக்குமே என்று மனதுக்குள் பெருமாளுக்கு தோத்திரத்தினைச் சொல்லிக் கொண்டே கைகூப்பினார்.

”என்னே பெருமாளின் கருணை?”

பெருமூச்சு விட்டுக் கொண்டு பாகீரதி ரூமுக்குள் நுழைந்தார். பாகீரதி பெட்ரூமில் ஒயிலாக படுத்திருந்தாள். அவளருகில் ஒரு சொம்பு இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டிருந்தது.

கொசுவத்தி சுருளைப் பின்னாலே சுத்தினால், அலுவலகத்திலிருந்து நம்பூதிரி சோகத்துடன் வந்திருந்ததைப் பார்த்த பாகீரதி என்னவென்று விசாரிக்க, அகலிகை மேட்டரை சொன்னார். பாகீரதிக்கு பட்டென்று பற்றிக் கொண்டது விஷயம். 

”கவலைப்படாதேங்கோ, ஒரு சொம்புத் தண்ணீ போதுண்ணா, சடுதியில் வந்துட்றேன்னா” என்று பாகீரதி சொம்புடன் சென்றாள்.

கொசுவத்தி சுருள் சுற்றுவதை நிறுத்தினால், அந்தச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தார் நம்பூதிரி.

* * *

குறிப்பு : நரலீலைகள் ஒரு கட்டுகதை (ஃபிக்‌ஷன்). யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஃபிக்‌ஷன் நாவல்கள் தான் பிரபலமாகுவதால் எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் தவறிருந்தால் மன்னித்தருள்க.


Sunday, February 6, 2022

நரலீலைகள் - சொம்புத் தண்ணீர் (18+) (11)

ஊரே அடங்கி விட்டது. சில் வண்டுகளின் ரீங்காரமும் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் உல்லாசமாய் கிடக்கும் தவளைகளின் ‘கடங்குடான்’ சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. 

வாசலுக்கும் வீட்டுக்குள்ளுமாக அலைந்து கொண்டிருந்தாள் பாகீரதி மாமி. வேலைக்குப் போன ஆத்துக்காரர் இன்னும் வரவில்லையே என்ற பதட்டத்தில் குட்டி போட்ட பூனையாட்டம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள் மாமி.

நான்காவது குழந்தை. அச்சு அசல் ஆத்துக்கார நம்பூதிரியைப் போலவே உரித்துக் கொண்டு வந்திருந்தான். ஊரே கண்போட்டது. இன்னும் பாகீரதி ரதி போலவே இருந்தாள். அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. கட்டான உடலில் ஆங்காங்கே செதுக்கியது போல உடலமைப்பு அவளுக்கு. எல்லாம் குடுப்பினை என்று ஊரில் பிற உடம்பு வீங்கிப் போன மாமிக்கள் பேசிக் கொள்வார்கள்.

நம்பூதிரிக்கு சந்தோசம் பொங்கும். பாகீரதி அவருக்கு ஏற்ற ஆத்துக்காரி என்பதில் அவருக்குப் பெருமையும் கூட. 

பின்னே, எள் என்றால் எண்ணையாக அல்லவா நிற்கிறாள். அவளின் நெளிவு என்ன? சுழிவு என்ன? பந்துக்களை (பந்துக்கள் என்றால் உறவினர்கள் என்று அர்த்தம் வரும், புரிகிறதோண்ணா உங்களுக்கு) அவள் கையாளும் விதமென்ன? அவற்றையெல்லாம் சொல்லி முடிக்கத்தான் முடியுமா? அத்தனை நறுவிசு. அத்தனை சமத்து. 

பாகீரதியைப் பற்றி நம்பூதிரியின் அம்மா சொல்லிச் சொல்லி மாய்ந்து போவார். நான் பார்த்த சம்பந்தமாக்கும் என்று முடிவில் ஒரு சிரிப்பால் சொல்லி முடிப்பாள். 

பாகீரதியைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் நம்பூதிரி. பாகீரதியும் பார்க்க கொழுந்து வெற்றிலை மாதிரி இருப்பாள். காதோரம் வளைந்து கிடக்கும் முடிக்கற்றை புரள, பூனை முடியுடன் மஞ்சள் தேய்த்துக் குளித்து விட்டு வந்தாளென்றால் சாட்சாத் ரதி தோற்றுப் போவாள். மடிசாரில் ஒயிலாக நின்றுக் கொண்டு நம்பூதிரியைப் பார்த்தாளென்றால் உலைக் களமாகும் அவருக்கு.

(எதுவென்று கேட்டு விடாதீரும். சொல்லக் கூடாது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலையாக்கும்)

நம்பூதிரிக்கு நெய்யும் பாலுமாய் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போடுவாள். கையொழுக வழித்து வழித்து இலையை நக்கிக் கொண்டே பாகீரதியை பார்த்துச் சிரிப்பார். பாகீரதிக்கு வெட்கம் வந்து விடும். 

(ஏன் வெட்கம் வருகிறது என்று சொல்லக் கூடாது. அது சரியாவும் படாது. புரிகிறதோண்ணா உங்களுக்கு?)

பாகீரதியிடம் இருக்கும் ஒரே ஒரு சின்ன பிரச்சினை மாராப்பை சரி செய்யமாட்டாள். அதில் மட்டும் அவள் கொஞ்சம் அஜமஞ்சம். நம்பூதிரியும் அவ்வப்போதும் சரி, பள்ளியறையிலும் அவளிடம் சொல்வதுண்டு. 

அதற்குப் பாகீரதி, “போங்கண்ணா, நீங்க இங்கே இருக்கறச்சே எனக்கு எல்லாமும் மறந்து போய்டுதுண்ணா? நான் உங்களைப் பாக்கிறதா? இல்லே மாராப்பை இழுத்து விடுகிறதான்னு குழம்பிட்றேண்ணா” என்பாள்.

கேட்டவுடன் நம்பூதிரிக்கு உள்ளமெல்லாம் பூரித்துப் போய் விடும். இருந்தாலும் நம்பூதிரிக்கு உள்ளுக்குள்ளே ஒரு சின்ன நெருடல் அவ்வப்போது வரும்.

பாகீரதிக்கு அது கொஞ்சம் எடுப்பாயிருக்கும். எடுப்பாயிருக்குமென்றால் பெரிசு என்று நினைத்து விடாதீரும். கோவில் சிலைகளைப் பார்த்திருப்பீர்களே. 

வடிவாக கைக்கு கொஞ்சம் மீறியும் மீறாமலும் இருக்குமே அதைப் போல. ஈட்டி கூர்மையெல்லாம் தோத்துப்போகுங்கானும். அப்படி ஒரு கூர்மைங்கானும். இருக்கிக் காட்டிய மார்ப்புக் கச்சைக்குள் மாரப்பு விலகிய அந்த தருணத்தில் வெளிப்படும் அழகுக்கு ஈடு இணையை எங்கும் காணமுடியாது. 

நம்பூதிரிக்கு ஒரு சில நாட்களில் அவரைப் பார்க்க வரும் பந்துக்களும், அலுலலக ஆட்களும் அவ்வப்போது அந்தக் கோலத்தில் பாகீரதியைப் பார்ப்பதில் அவ்வளவு சிலாக்கியமாய் படவில்லை.

ஆனால் அது அவளின் சுபாவமாய் போய் விட்டதால் அவருக்கு அதில் நெருடல் இருந்தாலும் கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் பாருங்கள்.

கடவுள் இருக்கின்றானே அவன் செய்யும் லீலா வினோதங்களில் ஒரு சில சம்பவங்கள் மிகப் பெரும் காரியங்களுக்கு விதை போட்டு விடுவது போல அமைந்து விடும்.

வாசலில் யாரோ வருவது போல அரவம் கேட்க, பாகீரதி அரக்கப்பரக்க வெளியே வந்து பார்த்தாள். தெரு நாயொன்று வாசலோரம் சென்றதினை மாட விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாள்.

ஒதுங்கி இருந்து இன்றோடு பன்னெண்டு நாளாயிடுத்து. குளித்து முடித்து புஷ்பம் சூடி சூரிய பகவான் மறைவான நேரத்திலிருந்து காத்திருந்தாள். அவ்வப்போது நம்பூதிரி கையொழுக இலையை வழித்து வழித்து சாப்பிடுவது கண் முன்னே வந்து நின்று அவளுக்குள் மோகத்தை உண்டாக்கியது.

நாயைக் கண்டு விட்ட பின்னாலே சோகமுடன் வீட்டுக்குள் வந்தாள். உடல் சோர்வுற அங்கிருந்த நாழியிலே அமர்ந்தாள்.

பாகீரதியின் அசட்டையான மாரப்பு விலகிக் கிடக்கும் அந்த வேளையில் அவளைப் பார்க்கும் நம்பூதிரிக்கு மட்டும் அது வந்திருந்தால் பரவாயில்லை. 

மன்மதனும் பார்த்து விட்டான் அக்கோலத்தில் அவளை.

மன்மதன் பாயக்கூடாத இடத்தில் தன் காம அம்பினை வீசி விட்டான்.

பிரச்சினையில் சிக்கி விட்டனர் பாகீரதியும் அவள் ஆத்துக்காரர் நம்பூதிரியும்.

தொடரும்....

====== >>>>>> பாகீரதி <<<<<< =====

”மாயா, மாயா...!” என்று அலறினான் சந்து.

மாயனுக்கு சந்து அலறிய சத்தமெல்லாம் கேட்கவில்லை. 

மேலே இருப்பதைப் படித்து விட்டு தேன் குடித்த நரி போல அடுத்த பாகம் எப்போது வருமென்று துடிப்புடன் காத்திருந்தான்.

”தங்கவேலுக்கு என்னவாயிற்று? செக்ஸ் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே?” என்று புலம்ப ஆரம்பித்தான் சந்து.

பாகீரதிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதிலும், நம்பூதிரிக்கு எப்போதும் வழக்கம் போல வாழை இலையில் விருந்து படைத்து அதை நம்பூதிரி ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் படிக்க வேண்டுமென்று மாயன் கடவுள்களை வேண்டிக் கொண்டிருந்தான்.

* * *

படுதா நீக்கி மேடையின் நடுவில் வந்து நின்றார் ஐ. 

ராமானுஜ பாவத்தில் பட்டாடை உடுத்து, நெற்றில் திருமண் இட்டு தெய்வக் கோலத்தில் வந்து நின்றவரைப் பார்த்து சின்னக்குட்டி வகையறா ரசிகர்கள் அடித்த விசிலில் நாடகக் கொட்டகையில் தூசி பறந்தது. அவர் கையை உயர்த்தினார். கொட்டகையே நிசப்தமாகியது.

சமந்தனும், நரயானும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். ஐயின் விரிஞ்ச மார்பில் பட்டாடை அவ்வப்போது விலக, மேடையின் நடுவில் உட்கார்ந்திருந்த இட்லிக்கு இடுப்பின் நடுவில் வியர்த்தது. சும்மாவா பின்னே பதினெட்டு கோடி இல்லை இல்லை பதினெட்டுப் பட்டியிலும் இல்லாத அழகனன்றோ ஐ. வியர்வை பொங்கிப் பிரவாகம் எடுக்குமே எடுக்காதா பின்னே?

அனைவரையும் பார்த்தார். ரசிகர்கள் அவர் பேசுவதைக் கேட்க சப்த நாடிகளும் ஒடுங்கிப் போய் காதினை விரைப்பாய் வைத்துக் கொண்டிருந்தனர்.

”நாடு ஒரு புதிய சித்தாந்தத்தில் நுழைய இருக்கிறது. நாமெல்லாம் மறந்து போன அந்த நாட்களை  நம் நாடு மீண்டும் கொண்டு வரப்போகிறது. மிகப் பெரிய புரட்சியை, இதுவரை இல்லாத ஒரு திட்டத்தினை உங்களின் சேவகனான நான் கொண்டு வர உள்ளேன். இன்றிலிருந்து பெண்கள் ஆண்கள் சுதந்திரக்காற்றினைச் சுவாசிக்கலாம். சுதந்திரப் போரில் வாரிசுக்கட்சி வாங்கிக் கொடுத்தது சுதந்திரம் இல்லை. அது விடுதலை. அதனால் என்ன பிரயோஜனம். பெண்களும் ஆண்களும் இன்னும் விடுதலை பெறவில்லையே? அந்த வருத்தம் உங்களுக்கெல்லாம் 60 ஆண்டுகளாக உண்டு என்று எங்களுக்குத் தெரியும். அதை நான் நீக்கப் போகிறேன்.”

”நாளையிலிருந்து இந்த நாட்டில் கணவன் மனைவி என்ற உறவு தடை செய்யப்படுகிறது நம் நாட்டிலே”

விரிஞ்ச மார்பழக ஐ ஹீரோவின் இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் இட்லி குஷியுடன் இரண்டு கைகளிலும் இரத்தம் தெறிக்கும்படி கைகொட்டி கண்ணில் நீர் வழிய குதித்தது.

சமந்தனும்,  நரயாணும், குப்பைவாந்தியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

* * *
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. நாவல் கதாபாத்திரங்கள் கற்பனையானவை. அங்கணம் எவருக்கேனும் வருத்தமெற்பட்டால் நாவலில் வோட்டிங்க் மெசின் போல எடிட்டிங்க் செய்யப்படும்.

Thursday, January 23, 2020

நரலீலைகள் - அரசியல் என்றால் என்ன? (9)

பீமாவும் தங்கவேலும் சந்தித்தார்கள்.

”உன் பேச்சைக் கேட்டேன் தங்கம். மக்கள் சேவை என்றால் மகேசன் சேவை என்றுச் சொன்னாயே? மகேசன் வந்து உன்னிடம் சொன்னானா எனக்குச் சேவை செய் என்று”

“பீமா, மனிதனின் கடமை தான் என்ன? மக்களுக்குச் சேவை செய்வது தானே?”

“தங்கம், பூமியில் ஒரே ஒரு உண்மை மட்டுமே உண்டு. பசி. உன் பசியைத் தீர்த்துக் கொள்வதுதான் உனக்கு இயற்கை தந்திருக்கும் கடமை. பசி தீர்ப்பதற்காக பல வித உபாயங்களை உருவாக்கினார்கள். அந்த உபாயங்கள் மனிதர்களைத் தின்று கொண்டிருக்கிறது. உபாயங்களுக்குள் சிக்கிய மனிதர்கள் மீழ முடியாமல் மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கின்றார்கள்”

“என்ன சொல்கிறாய் பீமா? ஒன்றும் புரியவில்லையே?”

“உனக்கு புரிந்து விட்டால் இது போல பேசி இருப்பாயா? அரசியல் என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. அரசியல் பலி கேட்கும் போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை. வெற்றி என்பதெல்லாம் அரசியலில் இல்லவே இல்லை.

அரசியல்வாதிகளின் முதன்மை எண்ணம் தன் நலம் மட்டுமே. தன் நலம் விரும்பாத ஒருவன் அரசியலுக்கு வரமாட்டான். துணியை உதறி தோளில் போட்டு விட்டு மனிதர்கள் இல்லாத இடத்துக்குச் சென்று விடுவான்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறாய் நீ. யார் மக்கள்? அந்த மக்களின் தகுதி என்ன? அவர்களின் ஆசைகள் என்ன? அவர்களின் எண்ணங்கள் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா உனக்கு?

நீ அரசியலுக்கு வரலாம். வந்தால் நீயும் உன் வாரிசுகளும் பலி வாங்கப்படுவார்கள். அந்தக்கால மன்னர்களுக்கு இப்போது வாரிசுகள் இல்லை என்பதை நீ அறிவாய் தானே? அதே போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் நடக்கும்.

அரசியலில் தர்மம் இல்லவே இல்லை. அறமும் இல்லை. தெளிந்த நீரோடை போலத் தெரியும் அரசியல் ஆற்றின் அடியில் கொடூரங்கள் நிறைந்து கிடக்கும். ஆசைப்படுபவன் மட்டுமே அரசியலுக்கு வருவான். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டார்கள். வரலாற்றினைப் புரட்டிப் பார் தங்கம். அதன் பிறகு அரசியலுக்கு வர முயற்சி செய்.

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என பிதற்றி குழம்பி நிற்காமல் தெளிவாய் முடிவெடு. நீ சுகமாக இருக்க உழைக்க உன் எதிரில் இருக்கும் ஆயிரமாயிரம் வழிகளில் அரசியல் வழி ஒன்று. அரசியல் என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் கட்டளை. கட்டளை என்றால் அகங்காரம். அகங்காரம் என்றால் அழிவு. இதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அனுபவித்து பின்னாலே, சேரும் இடம் சேர்கின்றார்கள். உனக்கும் அதுதான் வேண்டுமா? என்பதை நீ யோசித்து முடிவு செய்.

மகேசன் என்றாயே...! கோவில்கள் எல்லாம் இப்போது கோவில்களாகவா இருக்கின்றனவா? அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம்?”

தங்கவேல் குழம்பி போய் பீமாவைப் பார்த்தான். பீமா சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.

* * *

”சந்து, கவனித்தாயா? அரசியலுக்கு ஒரு கேரக்டர் வரப்போகிறது என நினைத்தேன். அதையும் பீமா கேட்டைப் போட்டு பூட்டி விட்டான். இனி தங்கவேல் கதை என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லையே?”

“மாயாண்ணே, நம்ம கதாசிரியர் என்ன மவுனியா, ஜானகிராமனா? ரெகுலர் கதை விட. இந்த ஆள் வேற... பார்க்கலாம் அண்ணே... என்னதான் எழுதுகிறார் என்று”

“ஆமாடா சந்து. உனக்கும் இன்னும் எழுதவில்லை. பார்க்கலாம்....!”

* * *

உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது,
உண்மையான வேகம் 
எப்போதும் மெதுவானது,
மிகவும் உணர்ச்சியுள்ளது
மரத்துப் போனது,
பெரிய பேச்சாளன், ஊமை
ஏற்ற  இறக்கம், ஒரே அலையில் தான்,
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி,
மிகப் பெரியதென்பது
மிகச் சிறிதானது
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெறுபவன் 
- The Book of Mirdad





தொடரும்............................

Friday, October 18, 2019

நரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)

அன்பே ராதே...!

எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் எண்ணற்ற தூசிகளில் ஒரு தூசியான பூமியில் பூத்த கள்ளம் கபடமற்ற ஒரே ஒரு ஜீவன் நீதானடி..!

சத்தங்கள் அற்ற உலகில் வசிக்கும் என் மென்மையான இதயத்தை, உன் புன்னகையால் கீறிச் செல்லும் ஒலியைக் கொண்டவளே...!

உதட்டோரம் நெளியும் சுளிவுகளில் நடனமாடும் புன்னகையை நிரப்பி, பூமியில் நிற்கவே முடியாமல் நிலை தடுமாறும் வகையில் நின்று கொண்டு, உன் மோகனப் புன்னகையால் கோடானு கோடி ஈட்டிகளை, என்னை நோக்கி எரியும் அன்பானவளே...!

உன்னால் உன்மீது காதலால் தகித்துப் பொங்கும் எரிமலையில் உன் அமுத கண்களில் துளிர்க்கும் ஒரு துளி நீரை விட்டு காதலால் அணைத்து முகிழும் அற்புத அழகே...!

பிரவாகத்தில் அமைதியாய் பூக்கும் மலரைப் போல மென்மையானவளே, உன் காதுகளில் அணிந்திருக்கும் அழகான பொன் வேய்ந்த காதணிகள் ஆடும் நர்த்தனம் கண்டு, உள்ளம் சோர்ந்து போனதடி....!

ராதே... உன் பெயர் தானடி காதல்... நீதான் காதல்... காதலில் மூழ்கிப் போய் மூச்சடைத்து பிரஞ்கையற்றுப் போய்க் கொண்டிருக்கிறேனடி....!

என்னை உன் காதலால் நிரப்பி விட்டாயடி மோகனத்தில் மோனத்தைக் காட்டும் தேவியே...!

காதல்...! காதல்...!! காதல்...!!!

ராதே...! ராதே...!! ராதே...!!!



* * *

வில்லன் இப்படி காதலில் மூழ்கி விட்டால், இந்த நாவல் எப்படி நகரும்? வாசகர்களே, நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நாவல் ஆசிரியன் இந்த நாவலை எழுதிக் கொண்டே செல்வானென்று. ஆனால் அவனுக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் சச்சரவுகள் எழும்பி விட்டதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? கதாபாத்திரங்கள் ஆசிரியருடன் முரண்பாடு கொண்டால் என்ன ஆகும்? நாவல் வடிவு பெறாதே? கவலையாய் இருக்கிறேன் நாவலாகிய அடியேன்.

அஸாஸில் காதலில் மூழ்கிப் போனான். உலகம் இனி எப்படி இயங்கும்? என்னை இப்படி புலம்ப விட்டு விட்டானே ஆசிரியன். நாவல் இனி எப்படி உருவாகும் எனத் தெரியவில்லை. 

இந்தப் பாழாய்ப் போன காதல் அஸாஸிலுக்கு ஏன் வந்தது? ராதேயின் மீது காதல் கொண்டு, பித்துப் பிடித்தவன் போல அலைகிறான். ஏற்கனவே இந்த ராதே, இன்னும் கண்ணனை அடையாமல், ஏங்கி யமுனா நதிக்கரையோரம் அலைந்து கொண்டிருக்கிறாள். அவளை இவன் காதலிக்கிறானாம். என்ன கன்றாவியோ இது?

* * *