குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 8, 2022

நரலீலைகள் (13) - சொம்புத்தண்ணீரும் இணையதள சந்தாவும்


”அகலிகை கதை தெரியுமா சந்து உனக்கு?”

”நீ வேற மாயா, அதெல்லாம் யாருன்னே தெரியாது. பேரைப் பார்த்தா பொம்பளைன்னு தெரியுது? அதாரு?”

”பாற்கடலைக் கடையும் போது அமிர்தத்துடன் பிறந்தவள் அகலிகை. அகலிகைன்னா அழகு குறைவு இல்லாத உடலுடையவள் என்று அர்த்தம். இவளைப் பார்த்ததும் தேவர்கள் மோகித்து அவரவருக்கு பிரம்மனிடம் அகலிகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்க இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டு ஒரு போட்டி வச்சாரு பிரம்மன்”

”அட்ட...! என்னா போட்டி மாயா?”

அகலிகையை எப்படியாவது போட்டுத் தாக்கனும்னு இந்திரனுக்கு ஆசை. யார் இரண்டு தலையுடைய பசுவை வலம் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அகலிகை என்று சொல்லி விட்டார் பிரம்மன். தேவர்கள் எல்லோரும் யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். எங்கே போய் இரண்டு தலை உடைய பசுவைக் கண்டுபிடிக்கிறது, அதற்கப்புறம் அகலிகையை மேட்டரு பன்னுவது என்ற சூட்டில் தவித்துப் போய் மீண்டும் பிரம்மனிடம் சென்றார்கள். இரண்டு தலை உள்ள பசுவைப் பார்த்ததே இல்லை, அதனாலே வேற போட்டி வையுங்கன்னு சொல்ல, அவரும் யாரு உலகை முதலில் சுற்றி வருகின்றீர்களோ அவர்களுக்கு தான் அகலிகை என்றுச் சொல்லி விட்டார்.

ஆளாளுக்கு உலகை வலம் வர அவரவர் வாகனங்களில் கிளம்பி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு நாறிப் போன நாதாரி நாரதர் வேலை பார்த்துச்சே ’சோ’மாறி போல தேவலோகத்தில இருக்கிற நாரதர் அகலிகையை கவுதம முனிவருக்கு கட்டி வச்சுடனும்னு திட்டம் போட்டு ஒரு கருப்பிடித்து குட்டி போடும் நிலையில் இருக்கும் காராம் பசுவை கொண்டு போய் கவுதம முனிவரின் ஆசிரமத்தின் முன்னாலே கட்டி விட்டு முனிவரை அழைத்தார். வெளியே வந்த கவுதம முனிவரை குட்டி ஈன்ற போது கன்றின் முகம் தோன்ற, அந்த நிலையில் பசுமாடு இரண்டு தலையுடையதாக இருப்பதைக் காட்டி, பசுமாட்டைச் சுற்றி வரச் சொன்னார் நாரத முனிவர். அதன்படியே முனிவரும் செய்ய பிரம்மன் விதித்த போட்டியை நிறைவேற்றிய கவுதம முனிவருக்கு அகலிகையை கட்டி வைத்து விட்டார் பிரம்மன்.

உலகம் சுற்றி வந்து பார்த்த இந்திரனுக்கு தலையே சுற்றியது. உலகத்தை வலம் வருவதற்குள் கவுதம முனிவருக்கு பிள்ளையே பெற்றுக் கொடுத்து விட்டாள் அகலிகை. 

வெறுத்துப் போன இந்திரனுக்கு அகலிகையை எப்படியாவது டீல் போட்டு விடனும்னு துடியா துடித்தான். 

ஒரு நாள் பின் இரவில் சேவல் போல கூவினான். கவுதம முனிவர் காலைக்கடன் கழிக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது முனிவராக மாறி அகலிகையை மேட்டர் போட அணுக, அவளும் புருஷன் தானே என தழுவிக் கொள்ள கசமுசா நடந்து கொண்டிருந்தது. 

ஆற்றுக்குப் போன முனிவருக்கு விடிகாலை நேரமில்லையே என்ற சந்தேகத்தில் வீட்டுக்கு வர, அகலிகையை உடன் மேட்டர் முடித்த இந்திரனைக் கண்டு கொண்டார் முனிவர். உடனே சாபம் விட்டார். 

அகலிகையை கற்பு தவறிய நீ கல்லாய் போக என்றுச் சொல்லி விட, சாபத்தை ஏற்றுக் கொண்டாள். பின்னர் அகலிகை முனிவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்க, தசரத முனிவரின் மகனான இராமன் பாதம் பட்டால் உன் சாபம் தீரும் என்றுச் சொல்லி விட்டார். 

இந்திரனுக்கு வேறு சாபம். அது இங்கின வேண்டாம். 

அகலிகை இராமன் பிறந்து அதான்பா மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிற இடத்தில் அருள் பாலிக்க இருக்கும் இராமன் பிறந்து வளர்ந்து இளைஞனாகி நடந்து வரும் போது சாப நிவர்த்தியாகி அகலிகை மீண்டும் உருக்கொண்டு தெய்வலோகம் சென்றாள்.

”ஏன் மாயா? ஒரு சொம்புத் தண்ணீரில் முடிய வேண்டிய மேட்டருக்கு இத்தனை வருடம் காத்திருக்கணுமா அகலி? பாவம் மாயா அந்தப் பொம்பள”

“என்னடா சொல்றே?”

“அதான்பா, மேட்டரு முடிஞ்ச உடனே கழுவி விட்டா போச்சு, அம்புட்டுதானே” என்றான் சட்டென்று சந்து. ஏதோ சொல்ல வந்த மாயாவைப் பார்த்து, ”மாயா, நிறுத்து நிறுத்து” என்று கத்தினான் தங்கவேல்.

மாயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன தங்கவேல் இப்படிக் கத்துகிறானே என்று புரியாமல் மாயாவும், சந்துவும் திகைத்து நிற்க, கோபத்தில் பற்களை நற நறவெனக் கடித்தான் தங்கவேல்.

“என்ன ஆசிரியரே? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று நயமாகக் கேட்டான் சந்து.

“அக்ரகாரத்துல இருந்து தெவசத்துக்கு வந்த பான், கையிலை தர்ப்பையை மாட்டி விட்டு, கோத்திரம் என்னன்னு கேட்டான். எனக்குத் தெரியலன்னு சொன்னேண்டா. அதுக்கு அவன் நீங்க கவுதம கோத்திரம்னான். அடங்கொய்யால பயலே, இப்பத்தாண்டா தெரியுது? உங்க லொள்ளு” என்று அருகில் இருந்த மேசை மீது ஓங்கிக் குத்தினான்.

குத்துன குத்துல மேசையில் இருந்தவை ரெண்டு இஞ்சு மேலே போய் மீண்டும் மேசை மீது விழ, எழுந்த சத்தத்தில் மாயனுக்கும் சந்துவுக்கு வெலவெலத்துப் போனது.

இப்படி ஒரு குட்டிக் கதையை தங்கவேல் இடையில் சொருகி விட்டானே என்று மாயா திகைத்துப் போனான்.

சந்துவோ சத்தம் காட்டாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். தங்கவேலுக்கோ உள்ளுக்குள் உலைக்கலன் போல கொதிக்க ஆரம்பித்தது.

* * *

விலை போகா சரக்கை எப்படி விற்பது?

இணையதளம் தொடங்கணும் முதலில். 

சரக்கு வைரம் போல, வைடூரியம் போல, மாணிக்கம் போல. யாருக்கும் சரக்கின் அருமை தெரியவில்லை. இதைப் போன்றதொரு சரக்கை யாரும் இலவசமாகத் தரமாட்டார்கள். ஆனாலும் தருகிறோம். அதற்காக வேண்டியாவது பேரன்பு கொண்ட மக்கள் சந்தா கொடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

கவனிக்க உருக்கமான வேண்டுகோள் விடுத்தல் அவசியம். 

சந்தாக்கள் 1000,2000,5000,10000,25000 என இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டும் போதாது.

“யாரோ ஒருத்தன் பொண்டாட்டி, அவள் காலுக்கு கீழே பல குஞ்சு” என்ற புத்தகத்தை எவனாவது அல்லக்கையின் பேர் போட்டு எழுதி பதிப்பிக்க வேண்டும். 

விஜய் டிவி கோட்டு கோபிநாத்தை வைத்து டாக் ஷோவில் கருத்துச் சொல்ல அழைக்க வேண்டும். மேட்டர் ஓவர். விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் குஞ்சு புத்தகத்தை வாங்கிக் குவித்து விடுவார்கள். 

அடிப்பொடி அங்கன இந்த சரக்கு விபரத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியமான அவசியம்.

இம்புட்டுதான் தந்திரம். 

விற்பனை தந்திரத்தினை விரிவாக எடுத்துரைத்த மாயாவுக்கு நன்றியினைத் தெரிவித்து அமர்கிறேன் என்றான் சந்து மைக்கில்.

* * *

அசாசிலின் வேண்டுகோள்

தமிழ் உலக கலா ரசிகப் பெருமக்களே, ஊ சொல்றியா மாமா, ஊ...ப சொல்றியா மாமா என்ற பாடலை பெரும் புகழடைய வைத்தவர்களே, கலைக்கெனவே பிறப்பெடுத்து இதுவரையிலும் தெரியவே தெரியாத நடிப்பை, நடிகையின் கவட்டிக்குள் உற்றுப் பார்த்து தேடிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகளே, நாளை நடிகைக்கு நாட்டையே ஓட்டுப் போட்டுக் கொடுக்கவிருக்கும் மாபெரும் தியாகிகளே, தயவு செய்து சந்தாவைச் செலுத்தி விடுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

உலகில் எவனும் இதுவரை தயாரிக்காத பொருளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இணையதள உரிமையாளரை வாழ்வியுங்கள். நடிகைக்கே நாடு என்றால், இவருக்கு உலகத்தையே பரிசளிக்கலாம் அல்லவா?

இப்படிக்கு அஸாஸில்.

* * *

நம்பூதிரி பெட்ரூம் கதவைத் திறந்து பார்க்க அக்மார்க் வெள்ளைகாரன் போல படுத்திருந்தான் பாரிஸ்டர் மகன். தலைமுடி மட்டும் கருப்பு கலர். எல்லாம் பெருமாள் செயல். முடிமட்டும் கருப்பாக இல்லையென்றால் ஊரே சிரிக்குமே என்று மனதுக்குள் பெருமாளுக்கு தோத்திரத்தினைச் சொல்லிக் கொண்டே கைகூப்பினார்.

”என்னே பெருமாளின் கருணை?”

பெருமூச்சு விட்டுக் கொண்டு பாகீரதி ரூமுக்குள் நுழைந்தார். பாகீரதி பெட்ரூமில் ஒயிலாக படுத்திருந்தாள். அவளருகில் ஒரு சொம்பு இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டிருந்தது.

கொசுவத்தி சுருளைப் பின்னாலே சுத்தினால், அலுவலகத்திலிருந்து நம்பூதிரி சோகத்துடன் வந்திருந்ததைப் பார்த்த பாகீரதி என்னவென்று விசாரிக்க, அகலிகை மேட்டரை சொன்னார். பாகீரதிக்கு பட்டென்று பற்றிக் கொண்டது விஷயம். 

”கவலைப்படாதேங்கோ, ஒரு சொம்புத் தண்ணீ போதுண்ணா, சடுதியில் வந்துட்றேன்னா” என்று பாகீரதி சொம்புடன் சென்றாள்.

கொசுவத்தி சுருள் சுற்றுவதை நிறுத்தினால், அந்தச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தார் நம்பூதிரி.

* * *

குறிப்பு : நரலீலைகள் ஒரு கட்டுகதை (ஃபிக்‌ஷன்). யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஃபிக்‌ஷன் நாவல்கள் தான் பிரபலமாகுவதால் எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் தவறிருந்தால் மன்னித்தருள்க.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.