குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label Madhuri dixit. Show all posts
Showing posts with label Madhuri dixit. Show all posts

Monday, February 28, 2022

மாதுரி தீட்சித்தின் தி ஃபேம் கேம் - கன்னி வலை

கல்லூரியில் படிக்கும் போது சக மாணவர்கள் மூலமாக தெரிய வந்த ”ச்சோலி கீ பீச்சே கியா கை” பாடல் மூலம் மாதுரி தீட்சித்தின் அழகும், வசீகர முகமும், உடலும், அவரின் நடனமும் என்னையும் அவரின் ரசிகனாக மாற்றியது.

மாணவர்கள் மத்தியில் மாதுரி தீட்சித் பிரபலம். வார்ட் ரோப்புகளில் அவரவருக்கு கிடைத்த மாதுரியின் படங்களை ஒட்டியிருந்தார்கள். 

ஒரே பாடல் உச்சத்துக்குச் சென்றார். அது மட்டுமல்ல அவரின் ’தக் தக் கரினே லக்கா’ என்ற பாடல் ரசிகர்களை கிளர்ச்சியடைய வைத்தது. 

இடுப்பின் வளைவுகளும், கச்சிதமான கடைந்தெடுத்த மார்புகள் கச்சைக்குள்ளிலிருந்து வெளியே வரவா என்று அவஸ்தைப்படுதலையும் கண்டு மோகத்தில் முக்குளித்து அவரின் கண்களும், முகமும் ஒருங்கே சிரிக்கும் சிரிப்பும், அவரின் சிணுங்கல்களும், காமத்தோடு அனில் கபூரை தழுவும் காட்சிகளும் காமக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டு எழும் காம நெருப்பில் வொயிட் பெட்ரோலை ஊற்றும்.

மாதுரியின் தொப்பூள் குழியைக் கண்டதும், அடச்சே பேசாமல் புதை பொருள் ஆராய்ச்சி படிக்காமல் போனோமே என்று தோன்றும். 

காதலுங்க. காதல்.

பிராமணியக்கவிஞன் பாரதி கூட பாடினானே

காதல் காதல் காதல் – காதல் போயின் சாதல் சாதல் சாதல் என. 

நம்புங்கள் இந்து நாடு, கற்பு வழி பெண்கள் நிரம்பிய புனித நாடு நம் இந்தியாவென்று.

இந்திய அரசு மாதுரிக்கு அவார்டு கொடுத்திருக்கிறது. மிகச் சிறந்த நடிகை என்று பல்வேறு அவார்டுகளை உலகம் அள்ளிக் கொட்டியது. மாதுரி தீட்சித் அள்ளித் தெரித்த நடிப்புக் கலைகளை உலகமே ரசித்தது. சுமார் முப்பது ஆண்டுகாலம் இந்திய சினிமாவில் பலரை ரசிகர்களாய் நட்டுக்க வைத்தார். சாதாரணமான வேலையா இது? 

சோனாகச்சி நினைவுக்கு வரவே கூடாது. அது வேறு, இது கலை. இன்னும் உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் - சரோஜாதேவி செக்ஸ் புத்தகங்கள் - அரசு தடை - இலக்கிய நாவல் - கலை - அவார்டு. புரிஞ்சுக்கோங்க.

காமவறட்சி கொண்ட தமிழகத்தில் வயதுப் பருவ மாணவர்களின் காம கிளர்ச்சிகள் இப்படியான பாடல்களினால் தூண்டப்படுகின்றன. மனம் உணர்ச்சிக்கு அடிமை ஆகி விடுகிறது. அறிவோ ’அங்கிட்டு போய்’ ஓரமாக உட்கார்ந்து விடுகிறது.

மனமெல்லாம் நெக்குருகிப் போய் நெளிவுகளும், சுளிவுகளும் மனதுக்குள் காய்ந்த சவுக்கு கட்டை எறிவது போல எரிய ஆரம்பிக்கும். என்னவென்று தெரியாத உணர முடியாத அதை, உடலும் மனசும் ஒன்றாக நேர்கோட்டில் அந்த அறியா சுகத்தின் மீதும் படிந்து விடுகிறது. தேடுதல் ஆரம்பிக்கிறது.

காமத்தின் வழியாக காதல் புனையப்படுகிறது. காதல் வாழ்க்கையின் உன்னதமான ஒன்று எனக் காவியங்கள் காட்சிகளை விரிக்கின்றன. 

காதல் கவிதைகளைத் தேடி மனம் ஓடும். கவிஞர்கள் கடவுள்களாய் தெரிவார்கள். சுரதா, வைரமுத்து வகையறாக்களின் கவிதைப் புத்தங்களின் பக்கங்கள் கிழியும்.

வாய் தானாகவே காதல் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பிக்கும்.

பவுடர் டப்பாக்கள் விரைவில் காலி ஆகும். கண்ணாடி முன் காதல் விரியும். காணும் பெண்களின் மீதோ ஆண்களின் மீதோ கவனம் திரும்பும். தேடித்தேடிக் காதல் படங்களாய் பார்க்க வைக்கும். காதலியைத் தேர்ந்தெடுக்க ஹீரோக்கள் பேசிய வசனங்கள் நினைவில் பதியும்.

காதலியைத் தேடி அலைய ஆரம்பிக்கும். படிப்பின் கவனம் சுக்கு நூறாய் சிதறும். மனம் சமாதானத்துக்கு தயாராகும். இப்படித்தான் ஆரம்பிக்கும் காதல்.

இதன் கிளைமேக்ஸ் என்னவாகும்?

இதற்கு இரண்டே இரண்டு முடிவுகள் தான்.

ஒன்று காதலிக்கிறேன் பேர்வழி என நாசமாய் போவது.

இன்னொன்று அது என்னவென்று கண்டு விட்ட பின்னாலே, ’அடச்சே இவ்ளோ தானா’ என தெரிந்ததும் விலகி விடுவது.

இந்த இரண்டாம் வாய்ப்பு 99 சதவீதத்தினருக்கு கிடைக்காது. 

ஆனால் எனக்கு இரண்டாம் வாய்ப்பு கிட்டியது. 

தஞ்சாவூரில் கிடைக்காத ஒன்றா? காதல் விளையாட்டினை ஆடி முடித்தேன். 

ஒழுக்கம் அது இதுவென்று ஆரம்பித்து விடாதீர்கள். 

இதுவெல்லாவற்றுக்கும் காரணம் மாதுரி தீட்சித் மட்டுமே. தூண்டி விட்டது அவர். செயலின் மூல காரணம் அவர். நானோ வேலைக்காரன்.

ஆனால் பாருங்கள், என் நண்பன் சிக்கிக் கொண்டான். நான் வெளியேறி விட்டேன். 

அவன் மொத்தமாக முடிந்து போனான்.

என்னைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்பது ஒரே ஒரு பெண்ணுடன் காதல் செய்து கலவி கொள்வது இல்லை. அதேதான் பெண்களுக்கும். ஒழுக்கம் என்பதின் விரிவாக்கம் பல காரணிகளைக் கொண்டது. அது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்களை எழுதும் போது படித்துக் கொள்ளுங்கள்.

ஒழுக்கம் என்பது என்னவென்றால் தான் கொண்ட கொள்கைக்கு விரோதம் இல்லாமல் இருப்பது.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில் நம் பாரதப் பிரதமர் எப்படி தான் கொண்ட பிராமணிய சேவை கொள்கையில் இருந்து வெளி வராமல், தேசப்பற்று பேசியே பிராமணர்களை நிதி நிர்வாகத்தில் உட்கார வைத்து சுமார் 3.50 லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் வெகு நாசூக்காக யாருக்குமே தெரியாமல் அள்ளிச் சென்ற சித்ரா ராமகிருஷ்ணன், அரவிந் சுப்ரமணியைக் கண்டும் காணாதது போல இருக்கின்றாரோ அதுதான் ஒழுக்கம்.

நாடே நாசமானாலும், தனக்குத் தெரிந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காப்பதை தான் ஒழுக்கம் என்று சொல்கிறேன். 

இந்தியா நாசமாகப் போனாலும் பிராமணர்கள் கொள்ளையும், கொலையும் (மஹாத்மாவைச் சொன்னேனுங்கோ) செய்தாலும் பிராமணியக் கொள்கையிலிருந்து வெளியே வராமல் இருப்பதுதான் ஒழுக்கம்.

நம்புங்கள் ஒரு பைசா கூட திரும்ப வராது.

இந்த ஊழலினால் பங்குச் சந்தையில் கொல்லப்பட்டவர்களின் டேட்டாவை ப.சிதம்பரம் பாஷையில் ‘நோ டேட்டா கவர்ன்மெண்ட்’ வைத்திருக்காது. 

அப்படியே வைத்திருந்தாலும் கொரானா மரணம் என்று கூட பதிவு செய்திருக்காது. 

மூன்றரைக் கோடியாம் கொராணாவில் பரலோக மன்னிக்கவும் சிவபெருமானைத் தரிசிக்கவும், சொர்க்கத்தில் வசிக்கும் காம கோடி காஞ்சி ஜெயேந்திரரைப் பார்க்கச் சென்றவர்கள். நெட்டில் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

மற்றுமொரு உதாரணம் எடப்பாடி எப்படி துரோகத்துக்கு எந்த வித கேடும் செய்யா வண்ணம் துரோகத்தின் அத்தனை விதிகளையும் கடைபிடித்து ஆட்சி செய்தாரோ அதைப் போல. துரோகம் செய்வதும் ஒரு செயல்தான். 

துரோகம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டால் கொலை செய்ய வேண்டும். மினிமம் 13 அப்பாவிகளைச் சுட்டுக்கொன்றால் தான் துரோக மகுடத்தில் அது வைரமாய் ஜொலிக்கும். எடப்பாடியின் துரோகச் செயலின் மகுடத்தில் ஜொலிக்கும் வைரம் 13 பேரின் கொலை.

செய்யும் செயலைச் சரி வரச் செய்வதுதான் ஒழுக்கம்.

அது காதலாய் இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி. அதனதன் விதிகளுக்குள் உட்பட்டு ஒழுக்கமாய் இருப்பது எப்படி என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

விடாது கருப்பு போல மாதுரி தீட்சித் எனது இந்த வயசிலும் என்னைக் கீறி விட வந்து விட்டார்.

மாதுரி தீட்சித்தைக் கல்யாணம் செய்தது ஒரு அமெரிக்க மருத்துவர். மருத்துவர்கள் உடல்கள் மீதான பற்றில்லாது இருப்பார்கள். மாதுரிக்கு ஒரு மருத்துவர் கணவனாய் அமைந்ததுதான் சரியானது. மாதுரியின் துல்லியமான திட்டமிடல்.

எனக்குப் பிடித்த ஓப்பன் (#Open) (அந்த ஓப்பன் இல்லீங்கோ) பத்திரிக்கையில் தில்லாலங்கடி சித்ரா ராமகிருஷ்ணனின் இந்தியாவை நாசம் செய்த இமயலச் சாமியாரின் பெயரில் செய்த லீலா வினோதங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முன்பாக ”The Return of the Queen” என்ற தலைப்பில் சுண்ணாம்பு அடித்த ஒரு வெள்ளைத் தோல்காரியைப் பார்த்தேன். அது யார்ரா என்று பார்த்தால், அட! நம்ம மாதுரி தீட்சித்.


நெட்பிளிக்ஸில் வெளியான The Fame Game – மாதுரியின் வெப் சீரிஸ் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்தேன். என்ன இருக்கப் போகிறது அக்கட்டுரையில்?

அவர் என்னென்ன படங்கள் நடித்தார், என்னென்ன பாடல்கள் பிரபலமானவை, அதனால் கிடைத்த புகழ், ரசிகர்கள் என்று ஒரு பிச்சைக்காரன் தட்டில் (பிச்சைக்காரர்கள் என்ற வகுப்பினை மோடி அரசாங்கம் புதிதாக விரைவில் பிரிக்கும்) கிடப்பதைப் போல கலவையாக ஒரு கட்டுரை. 

நெட்பிளிக்ஸில் சீரியலைப் பார்த்தேன்.

நொய்யாலே! 

அந்த மாதுரி தீட்சித்தா இது? 

பார்த்தவுடன் ஓட்டுக்குள் சுருங்கி விடும் நத்தை போல (உடனே ஆராய்ச்சிக்குப் போகக் கூடாது. சுருங்கிய மேட்டருக்கு செம டெம்ப்ட் மருந்துகள் - #சாருநிவேதிதாவின் புத்தகங்கள் அல்ல - அதை விட வீரியமானவைகள் இருக்கின்றன) மனசு சுருங்கிப் போனது.

கதை என்ன தெரியுமா?

கிளைமேக்ஸில் மகளை ஃபேம் அதான் ஹீரோயினாக ஆக்கணும் என்ற ஒரு நாட், அதற்கு தடையாக இருக்கும் சோம்பேறிக் கணவனைக் கூட ஜெயிலுக்கு அனுப்பும் ஒரு திகில் (அப்படித்தான் சொல்றாங்க) நிறைந்த கடத்தல் நாடக வெப் சீரிஸ் இது. 

கடத்தலுக்கு காரணமேஏஏஏஏஏ...... மாதுரி தீட்சித்தான்.  மாதுரியை யாரோ கடத்தி விட்டார்கள் என போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. 2016லிருந்து சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்ததே அதைப் போல.


படங்கள் உதவி : Open Magazine (Thanks to Open)

கதையில் ஒரு லூசு ஓல்ட் ஹீரோ. 

அனில் கபூரின் மீது மாதுரிக்குப் ’படா படா ஹை’ கோபம் போல. 

சும்மா இருந்த அந்த ஓல்ட் ஹீரோவைத் தூண்டி விட்டு, தற்கொலை செய்ய வைத்து, அனில் கபூரின் மீதான தன் வன்மத்தை வேறு நாசூக்காக காட்டி உள்ளார்.  தேவையே இல்லாத ஒரு கிளைக்கதை. செக்ஸ் காட்சியெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படியே இருந்தாலும் சவுக்கு சவுக்குன்னு வேகாத கறியை மெல்லுவது போல டென்சனாகும்)

மாதுரியின் நெட் பிளிக்ஸ் அவதாரம் ஏன்?

புகழ் என்பது போதை அல்ல அது ஒரு வலை. ரசிகன் மீது விரிக்கப்படும் மாய வலை. இன்றைக்கும் கட் அவுட்களில் பால் ஊற்றிக் கொண்டிருக்கும் மீன்களாய் ரசிகர்கள் மாறவே இல்லை. இவர்கள் மூலம் கிடைக்கும் பணம் பெரிது. அமெரிக்காவில் செட்டில் ஆன மாதுரிக்கு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் உறிஞ்சலை ஆரம்பிக்க வேண்டுமென்ற பிசினஸ் திட்டம். செயல்படுத்துகிறார்.

மாதுரி தீட்சித் தன் காம கிளர்ச்சியால் ரசிகர்களுக்கு உண்டாக்கிய கிளர்ச்சியை புகழாக மாற்றினார். அதை வலையாக விரித்தார். சிக்கியவர்கள் ரசிகர்கள்.

மாதுரி தீட்சித் கனவுக் கன்னி,  ரசிகர்களுக்கு விரிக்கப்பட்ட கன்னி வலை.

ரசிகர்களின் ஒவ்வொரு பைசாவும் வலைக்குள் சிக்க வைக்கப்படும். 

பிசினஸ், பணம் – மாதுரி தீட்சித். 

தி ஓப்பனில் ஏன் இப்படி ஒரு கட்டுரை?

ஜனநாயகத்தின் மூன்றாம் தூண் பத்திரிக்கைகள். நம்பிக் கொள்ளுங்கள். அது தான் நம் முன்பு இருக்கும் ஒரே சாய்ஸ். 

இந்தப் பதிவினைப் படித்ததும் பலருக்குள் பல்வேறு கேள்விகள் எழக்கூடும். யோசித்துப் பாருங்கள், வெளிச்சம் தெரியும்.

அடுத்த பதிவு என்ன தெரியுமா? 

பிளாக்கைப் பாருங்கள். சப்ஸ்கிரைப் செய்து வையுங்க.

* * *