குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள். Show all posts
Showing posts with label நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள். Show all posts

Thursday, September 22, 2022

நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஓர் பார்வை

ஜூனியர் விகடனில் சவுக்கு சங்கர் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தி ஆகிய இருவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதினைந்து நாட்களுக்குள் விசாரணை செய்து, தண்டனை கொடுத்து, அப்பீலுக்கும் போகக்கூடாது என்று உத்தரவு இட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

தண்டனையை எதிர்த்து அப்பீல் போக விடாமல் செய்தது மாபெரும் சட்ட விதிமீறல் என்கிறது ஜூ.வி. 

இந்தச் சூழ்நிலையில்தான் சவுக்கு சங்கர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டிகளை வைத்துத்தான் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், புகழேந்தியும் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளனர். அப்படிப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரிவு 19-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய சங்கருக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்திவைக்கும் அதிகாரம் தண்டனையளித்த நீதிபதிகளுக்கு இருந்தபோதும் அவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. என்றைக்கு ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு இறுதியானது அல்லவோ... அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதோ... அப்போது தண்டனையை நிறுத்திவைப்பதுதான் முறை. இல்லையென்றால், வாரக் கடைசியில் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்து, ‘உன்னை இரண்டு நாள்களாவது சிறையில் வைப்பேன்’ என்று வீம்பு செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. (ஜூவி கட்டுரையில் ஒரு பகுதி)

எந்த ஒரு குற்றச் செயலுக்கும் தண்டனை விதிக்கப்பட்டால், உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அப்பீல் போக விடாமல் தண்டனை கொடுப்பது கொடுஞ்செயல்.

பேச்சுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு விதிவிலக்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறப்பட்டிருப்பதும், ஒரு கட்டுரையோ (அ) சொற்பொழிவோ நீதிமன்ற அவமதிப்பு வரையறைக்குள் வரும் என்பதும், அதனால் நீதிமன்ற மாண்பு குலைந்துவிட்டது என்று கூறி தனிப்பட்ட நீதிபதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முற்படுவதும் எப்படி நியாயமாகும்?

அதேபோல் ஒருவரை தண்டிப்பதற்கு முன்னால் முறையான நடைமுறைகளைக் கையாள மறுத்து, ராணுவ நீதிமன்றங்கள்போல் சட்ட நியாயங்களுக்கு விரோதமாகச் செயல்படுவதையும் அனுமதிக்க முடியாது.

மேலும் தண்டனை என்பது ஒருவரை அவரது குற்றத்தை உணரவைத்து, சீர்திருத்தி மறுபடியும் மைய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. அப்படியிருக்கும்போது தவறு செய்தவரையும் தண்டிக்காமல், மன்னிப்பதன் மூலம்தான் நீதிமன்றத்தின் மாட்சிமை பெருகுமேயொழிய பழிக்குப் பழி என்பது அதன் தீர்வாகாது. இதை நீதிபதிகள் உணர்வதோடு, ஒரு சிலர் தவறாகப் பேசிவருகிறார்கள் என்பதற்காக மாபெரும் அதிகார வரையறையை மேற்கொள்வது ஒரு கொசுவை நசுக்குவதற்கு உலக்கையைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மதுரை நீதிபதிகள் தாங்கள் அளித்த தண்டனையைச் சுயமாக திரும்பப் பெற்று, சவுக்கு சங்கரைச் சிறையிலிருந்து விடுவிப்பதுதான் உத்தமமான செயலாக இருக்கும்! (ஜூவியில் ஒரு பகுதி)

நன்றி:ஜூனியர் விகடன்

முழு கட்டுரை இணைப்பு கீழே உள்ள இணைப்பில் இருக்கிறது.

https://www.vikatan.com/news/general-news/journalist-savukku-sankar-arrest-issue

கட்டுரையின் இறுதிப் பகுதியில் இப்படி முடித்திருக்கிறது ஜூ.வி.

நீதிபதிகள் ஊழலே செய்யவில்லையா?  என்னிடம் இருக்கும் லிஸ்ட்டை கட்டுரையின் இறுதியில் தருகிறேன். அதற்கு முன்பு குற்றச் செயலில் ஒரு நீதிபதி ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை எப்படி எடுக்கலாம் எனப் படியுங்கள். அதிர்ச்சி தான் உண்டாகும். நாம் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் மக்களின் பணியாளர்கள் நீதிபதிகள் என்பதை படிப்பவர்கள் கவனத்தில் கொள்க. 

ஊழல் செய்யும் நீதிபதிகள் மீது சாமானியன் ஒருவனால் எளிதில் நடவடிக்கை எடுக்க இயலுமா? இதோ கீழே படியுங்கள். நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை.

  • Judiciary is an independent organ of the State under the Constitution of India. Government of India does not interfere in the functioning of the Judiciary.
  • The administrative/ disciplinary control over the members of subordinate judiciary in the States vests with the concerned High Court and the respective State Government. The State Government frames Rules and Regulation in consultation with the respective High Courts.
  • Central Government neither maintains records related to any court proceedings/ decisions / judgments nor does it have and can have a mechanism to monitor the action taken on them.
  • No administrative action can be taken on a grievance; subject matter of which is subjudice.

  • Government cannot ask a Court of Law to expedite proceedings of any particular case. Therefore, no action can be taken by the Government where the petitioner is aggrieved of the fact that there has been inordinate delay in disposal of the case.
  • A judicial order can be challenged only before appropriate Court of Law as per prescribed legal procedure. Therefore, it is a futile exercise to file a grievance against a judicial order/judgement.
  • A grievance regarding a complaint against a Judge can be taken up for inquiry by the concerned High Court or Supreme Court as per in-house procedure adopted by them. There is no role of Government in disposal of such grievances.
  • Detailed guidelines on grievances received in the Department of Justice are available on this Department’s website doj.gov.in. As per guidelines issued by the Supreme Court of India, grievances against Judicial Officers are required to be sent on sworn affidavit with verifiable facts to the Registrar General of the concerned High Court.
  • Petitions, applications and other documents to be filed before a Court of Law should not be forwarded alongwith grievances as these are to be presented in person or by a duly authorised agent or by an advocate on record duly appointed for the purpose.
  • As Judiciary is independent and Government does not interfere in the functioning of the Judiciary, no further follow-up or correspondence is made by the Government after forwarding of grievance to the concerned High Court or Supreme Court, as the case may be.
  • As the citizens can lodge their grievances online on pgportal no action is being taken on the grievances received through e-mail. pgportal.gov.in has been specifically created for lodging of grievances by the citizens.
  • Once final reply is given on a grievance, it should not be repeated again.
  • Thanks to www.doj.gov.in

மேலே இருப்பவைகளை இந்த இணையதளத்தில் படிக்கலாம். 


ஒரு சாமானிய இந்தியன் தனக்கு அநீதி வழங்கப்பட்டதாகக் கருதினால் எங்கனம் நடவடிக்கை எடுக்க இயலும்? நீதிபதிகள் மேல் புகார் தெரிவித்தால், அதை நீதிபதிகளே விசாரணை செய்வது சரியாகுமா? மனசாட்சி இருப்பவர்கள் யோசித்துப் பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தானே.  அரசு நீதிபதிகளைக் கேள்வி கேட்க முடியாது. மக்களுக்கும் இத்தனை கட்டுப்பாடுகள். வக்கீல்களின் நிலையோ வாய்ப்பூட்டு. கேள்விகளுக்கும், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் நீதிபதிகளுக்கு விதிவிலக்குக் கொடுத்திருக்கிறதா என்ன?

கீழே படியுங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டம் 1971 என்ன சொல்கிறது என. 


படித்துப் பாருங்கள். சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட தண்டனை எப்படிப்பட்டது என்று புரியும்.

28 ஆண்டுகாலம் நடந்த ஊழல் வாதி ஜெயலலிதாவுக்கு நீதிபதி குன்கா வழங்கிய தண்டனையை ரத்துச் செய்தாரா நீதிபதி குமாரசாமி, அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, நீதிபதி குன்கா வழங்கிய உத்தரவை உறுதி செய்ததே? 

நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு? என்றால் வழங்கிய நீதிபதிக்கு என்ன தண்டனை? ஏன் அவர் தவறான தீர்ப்பினை வழங்கினார்? சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு தப்பித்து விடுவதை பலரும் செய்து வருகின்றனர்.

எந்த நீதிபதி ஊழல் செய்தார்? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்பவர்கள், மெயில் டுடேவில் வெளியான கட்டுரையினைக் கீழே படிக்கவும்.

படித்து விட்டீர்களா? நீதிபதிகள் என்றாலும் அவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்களே. மக்கள் தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விமர்சிக்க வேண்டும். வரிப் பணத்தில் சம்பளம் பெறும் நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆராயப்பட வேண்டும். தீர்ப்புப் பழி வாங்குதலுக்காகவோ அல்லது இதர பலன்களுக்காக வழங்கப்பட்டிருந்தால், தண்டிக்கப்படல் அவசியம்.

இது ஒன்றும் ராஜா / மன்னர் காலம் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.