குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 7, 2011

Fortune Bricks Real Estate's Properties

40 Acres Land Photos 5169 Acres Organic Farm HouseMettupalayam Opp Blockthunder 23 Acres + 17 AcresFortunebricks110 Acre Ammapatti Coconut Farm Housethangaa-framed2

கோவையில் 160 ஏக்கர் விற்பனைக்கு தயார்

கோவையிலிருந்து அவினாசி செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் உள்பாதையோரம் சதுர வடிவில் இரண்டு பக்கமும் சாலை வசதியுடன் 160 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருக்கிறது. வில்லங்கம் ஏதுமில்லா சொத்து. கோவை பஸ் ஸ்டாண்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இந்த இடம் பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் எங்களை நேரில் அணுகவும்.

இண்டஸ்ட்ரியல் மற்றும் வீடுகட்ட அருமையான இடம். விலையும் மிகவும் குறைந்த விலைதான். மேலும் இடத்தினை பார்வையிடவும், முன் பதிவு செய்து கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 / 0422 4275976

Monday, June 6, 2011

தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பேற்றால்

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். எல்கேஜியிலிருந்து மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு மட்டுமல்லாது, லெக்சரர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறேன். மிகப் பெரும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், பேராசிரியர்கள், பெரும் கோடீஸ்வரர்களை அந்தக் கால கட்டத்தில் சந்தித்து இருக்கிறேன். எந்தளவுக்கு நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைச் சந்தித்தேனோ அதை விட பலமடங்கு பொறாமையும், பொய்யும், சூதும், வாதும் நிறைந்த மனிதர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன்.அவர்களால் படாதபாடும் பட்டிருக்கிறேன்.

நான் ஜாவா மற்றும் சி பிளஸ், விபி புரோகிராம்களில் நல்ல தேர்ச்சி அடைந்திருந்த போது, கரூர் கல்லூரியில் இருக்கும் கணிப்பொறி துறையில் சிஸ்டம் அட்மின்னாக நிர்வாகத்தின் சார்பில் சேவை செய்து வந்தேன்.இந்தக் கல்லூரியின் ஹெச் ஓடி அந்தக்கால ஃபோர்ட்டான், பாஸ்கல் லாங்குவேஜ்களைப் படித்து விட்டு, விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்த பிறது அதைப் பற்றிய அப்டேட்டட் செய்யாமல் இருந்தார். கல்லூரியின் கணிப்பொறி துறைப் படிப்பில் ஜாவா புரோகிராம் புதிதாக வந்த போது, ஜாவா இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருந்தது.

இன்ஸ்டால் செய்து அதைப் பற்றிய வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த ஹெச் ஓடியின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்குத் தெரியாது என்பதற்காக பிற லெக்சரரைப் படிக்க அனுமதிக்க மறுத்தார். அவரை மீறி பிற லெக்சர்களால் ஒன்றும் செயல்பட முடியவில்லை. 

அதற்கு என்னை பலிகடாவாக்க முயற்சித்து, நான் பெண்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கட்டுக்கதைகளை பரப்பினார். கணிணி அறையின் ஆரம்பக் கதவில் ஒரு கண்ணாடி சதுரம் இருக்கும். அதில் காகிதத்தை அவரே ஒட்டி விட்டு அதை ஒரு சாட்சியாக்கினார்.

நிர்வாகத்தின் தலைவரும் நானும் பல விஷயங்களை தினம் தோறும் பகிர்ந்து கொள்வோம். அவரிடம் எதேச்சையாக பேப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்த நாள் அந்த ஹெச் ஓடி என்னைப் பற்றிய கதையை அவிழ்க்க, இன்னொரு நொடி இங்கிருந்ந்தால் நடப்பதே வேறு என்றுச் சொல்லி சத்தமிட, அரண்டு ஓடி இருக்கிறார் அந்தப் பெண்மணி.

இதைப் போன்ற எண்ணற்ற கதைகளை அவர் பரப்பியதற்கு காரணம், அவரால் கணிப்பொறித் துறையின் மூலமாய் காசு பார்க்க முடியவில்லை என்பதுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் அசெம்பிளிங்கிலிருந்து, நெட்வொர்க் இன்ஸ்டாலேஷன் வரை அடியேனின் கண்ட்ரோலில் இருந்தது. அந்தக் காலத்தில் பிராண்டட் விண்டோஸ் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒன்றினை விலை கிட்டத்தட்ட 60,000 ரூபாய் இருந்தது. ஆனால் நான் அதே கான்ஃபிக்கில் நான் அசெம்பிள் செய்தது ரூபாய் 40,000 ஆயிரமாக இருந்தது.  பிரைவேட்டாக கொடுத்தால் மேல் வரும்படி கிடைத்திருக்கும். என்னால் அது வரவில்லை என்பதால் என் மீது வன்மம் கொண்டலைந்தார் அந்தப் பெண்மணி. 

தகுதியும், திறமையும் அற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் ஆணுக்குப் பெண்ணும் சளைத்தவரல்ல என்பதையும் அறிந்து கொண்டேன்.

எங்கு பணிபுரிந்தாலும் இவர்களைப் போன்றவர்களை நாம் சந்திக்கலாம். என்னைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். இவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடியாய் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். ஆணாக இருந்தால் “ தனியாக பட்டயக் கிளப்பி” விட வேண்டும். பெண்ணாக இருந்தால் கேரக்டர் அசாசினேஷன் செய்து விட வேண்டும். ஏனென்றால் தானும் வாழாமல், பிறரையும் வாழ விடாமல் இருப்போரை என்ன செய்தாலும் அது குற்றமே ஆகாது.

இப்படிச் சொல்லும் நான் அந்த ஹெச் ஓடியைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டேன். என் மீது படுபயங்கர கோபத்தில் திரிந்தார். அது அவரின் பிரச்சினை அல்லவா? அவரின் கோபம் என்னை ஒன்றும் செய்ய முடியாதவாறு பார்த்துக் கொண்டேன். 


Sunday, June 5, 2011

சொத்துக்கள் வாங்கினாலும் பிரச்சினைகள் வரும்


சமீபத்தில் 3/5/2011 தினமலரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  50 அடிக்கு மட்டுமே அனுமதி உடைய சாலையினை 60 அடி என்று தவறாகக் காட்டி, அதன்படி எட்டு மாடி அடுக்குக் குடியிருப்பினை பிரபல கட்டுமானக் கம்பனியொன்று கட்டவிருப்பதாகவும், அதற்கு உடந்தையாய் பலரும் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிவிப்பு சொன்னது.

டிடிசிபி அப்ரூவல் இருக்கிறது. விசாரித்தால் சரியாக இருக்கிறது. மற்ற விசயங்கள் அனைத்துமே மிகச் சரியாய் இருக்கிறது. ஆனால் 40 அடியை 60 அடி என்று காட்டி குடியிருப்பைக் கட்டி விற்ற பிறகு, இவ்விஷயம் வெளியில் தெரிந்து, அரசு நடவடிக்கை எடுத்தால் வீட்டினை வாங்கியவர்களின் கதி என்ன? இது போன்ற ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் சொத்து வாங்கும் போது வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. 

நன்கு படித்தவர்களால் கூட இவ்விஷயங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இருக்கின்ற அவசரகாலத்தில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்று அனைவரும் சொல்லுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவதே பெரும் பிரச்சினையாய் இருக்கும் போல இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சொல்ல வேண்டியது கடமை சொல்லி விட்டோம். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டால் பிரச்சினையே இல்லாத சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதுதான் சரி. மேற்கண்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சொத்துக்களை, எந்த வித சிரமமும் இன்றி வாங்க விரும்புவோருக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நல்ல சேவையை அளிக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்துக்களைக் கண்டுபிடிப்பது எப்படி, யாரிடம் கேட்பது, சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து பிரச்சினைகள் ஏதுமில்லாத சொத்துதானா என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வுகளைத் தருகிறது.

சொத்துக்களின் மீதான வில்லங்கங்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் அலசி ஆராய்ந்து தனது முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இவ்வசதி தேவைப்படுவோர் நிறுவனத்தின் இயக்குனரை அணுகலாம்.

மெயில் : info@fortunebricks.net or thangavelmanickam@gmail.com

தொலைபேசி எண் : + 91 96005 77755

Saturday, June 4, 2011

ஐடியில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய குறிப்பு

கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.

சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.

இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும். 

உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும். 

அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.

Thursday, June 2, 2011

பாதுகாப்பான முதலீடு மூலம் பல மடங்கு வருமானம் பெற

இன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாயை ஏதாவதொரு தொழிலில் முதலீடு செய்து, அதிலிருந்து வருடத்திற்கு வருமானம் என்றால் செலவுகள் போக 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனென்றால் தொழில்கள் அவ்வாறு நடந்து வருகின்றன. பாதுகாப்பான முதலீட்டின் மூலம் நல்ல வருமானம் பெற பலர் ஆவல் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த வகையில், 100 மடங்கு பாதுகாப்பான வகையில் முதலீடு செய்யவும், அந்த முதலீடு இருமடங்காக மாறும்படியான, நம்பிக்கையான, முதலீட்டுப் பாதுகாப்பான சர்வீஸ் ஒன்றினை வழங்குகிறது.

எப்படி என்பதை எங்களது கம்பெனி வாடிக்கையாளரின் அனுபவம் மூலமாக, உங்களின் பார்வைக்கு..

எங்களது நிறுவனத்தை சொத்து வாங்கித் தரும்படி அணுகினார் ஒருவர். எதற்காக சொத்து வாங்குகின்றீர்கள் என்று விசாரித்தோம். இன்வெஸ்ட்மெண்ட் பர்போஸ் என்றார். அந்த சமயத்தில் எங்களிடம் 12 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்திருந்தது. அவரிடம் இந்தச் சொத்தினை வாங்கும் படியும், வாங்கிய பிறகு சைட் போட்டு விற்றுத்தருகிறோம் என்ற எங்களது கோரிக்கையை வைத்தோம். உடனே அதற்குண்டான பிராஜக்டைப் போட்டுத்தரும்படி கேட்டார். கையோடு போட்டுக் கொடுத்தோம்.

மேற்கண்ட நிலத்தை அவர் பெயருக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்து கொடுத்தோம். பின்பு அவரிடமிருந்து ஒரு எம்ஓவினைப் போட்டுக்கொண்டு, டிடிசிபி பிளான், அப்ரூவல் இவற்றினை அரசிடமிருந்து முறைப்படி வாங்கினோம். அப்ரூவல் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திட்டக் கணக்கில், சைட்டுகளை விற்கத் தொடங்கினோம்.

எங்களிடம் ஏற்கனவே வாங்கியவர்களே அனைத்து சைட்டுகளையும் வாங்கிக் கொள்ள, குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது நான்கைந்து மாதங்களுக்குள் அனைத்து மனைகளும் விற்றாகி விட அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒவ்வொரு சைட் விற்பனையின் போதும் கையெழுத்துப் போட வந்த எங்களது வாடிக்கையாளர், தனக்கு கிடைத்த லாபத் தொகையில் எங்களுக்குண்டான பங்கினைக் கொடுத்து விட்டு, மீதித் தொகையுடன் மகிழ்ச்சியோடு சென்றார்.

கடைசி சைட் ரெஜிஸ்டரின் போது, உண்மையில் “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” எனக்கு அதிர்ஷடத்தை தந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்றார். அடுத்த சைட் போட பணத்தோடு காத்திருக்கிறார் எங்களின் வாடிக்கையாளர். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அவருக்கான நிலத்தை தேர்வு செய்வதில் இறங்கி இருக்கிறது.

சொத்து மார்க்கெட் மதிப்பின் படி முதலீட்டாளரின் பெயரில் வாங்கப்படுகிறது. சைட் போட்டு விற்பனை செய்ய அவர் எந்த வித விளம்பரச் செலவும் செய்ய வேண்டியதில்லை. அவரின் வேலை சொத்தினை வாங்கி, அவர் பெயரிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான். மற்றபடி வேலைகளை “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

சைட் போட்டு, விற்பனை செய்வது வரை “ஃபார்ச்சூன் பிரிக்ஸே” கவனித்துக் கொள்ளும். இதை விட பாதுகாப்பான, நல்ல லாபம் தரும் முதலீடு என்பது இக்காலத்தில் சாத்தியமா என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

மேற்கண்ட சர்வீஸ் தேவைப்படுபவர்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். இதுவரை நாங்கள் செய்த அத்தனை மனை விபரங்களை உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

குறிப்பு : எங்களது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம், அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பெற்ற பல வருட அனுபவங்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை வழங்க ஏதுவாக இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு, மிகச் சிறந்த லாபம் கிடைக்க எங்களை அணுகலாம்.

தொடர்பு எண் : 
கோவை எம் தங்கவேல், எக்சிகியூட்டிவ் டைரக்டர், ஃபார்ச்சூன் பிரிக்ஸ்
+ 91 96005 77755 (காலை 10 மணியிலிருந்து இரவு 6 மணி வரைத் தொடர்பு கொள்ளலாம்)

எங்களது இணையதளத்தினை பார்க்க கீழே இருக்கும் படத்தினைச் சொடுக்கவும்.

Thursday, April 21, 2011

இக்காலக் குழந்தைகள் எதை நோக்கிப் பயணிக்கின்றன?

எனது நண்பருடன் பொள்ளாச்சி செல்ல வேண்டிய வேலை இருந்ததால் காரில் கிளம்பி விட்டோம். வேலை முடிந்து வந்து கொண்டிருந்த போது, நண்பரின் பையனிடமிருந்து போன் வந்தது. சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார். பதினொன்றரை மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்றுச் சொன்னார்.  பையன் டான்ஸ் கிளாசுக்குப் போக வேண்டுமாம். அப்பா கொண்டு வந்து விட வேண்டும் என்பது டீல்.

அப்போது தான் நாங்கள் காரமடை தாண்டி வந்து கொண்டிருந்தோம். வெள்ளலூர் தாண்டி வருகையில் மேலும் ஒரு வேலை காரணமாய் அரை மணி நேரம் ஆகி விடும் என்றுச் சொல்ல, பையனிடம் பேசினார். தொடர்ந்து எங்கெங்கோ போன் பேசிக் கொண்டிருந்தார். எல்லாம் முடித்து விட்டு என் முகத்தினைப் பார்த்தார்.

”சொல்லுங்க” என்றேன்.

”என் பையன் கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்தமாட்டான் சார்” என்றார்.

“ அதான் தெரிஞ்ச கதையாச்சே சார். என்ன நடந்தது? ” என்று கேட்க கதை சொன்னார்.

பதினொன்றரைக்கே வருவேன் என்றுச் சொல்லி விட்டு ஏன் இப்போது மேலும் லேட்டாக வருகிறாய் என்றும், என் டயத்தை வேஸ்ட் செய்கிறாய் என்றும் சத்தம் போட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல், இவர் வருவதற்கு லேட்டாகுமென்பதால், பையனை டான்ஸ் கிளாஸ்ஸிற்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடாக தன் பக்கத்து வீட்டு நண்பர்களை அழைத்திருக்கிறார். அவரின் நண்பர்கள் எல்லோரும் இப்போது தான் பையன் அழைத்தார் என்றும், நாங்கள் தூரத்தில் இருப்பதால் உடனடியாக வர இயலாது என்றும் சொல்லி இருக்கின்றனர். நண்பரின் பையன் அப்பாவிடம் சொல்வதற்கு முன்பே, அவரின் நண்பர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார். இது தெரியாமல் இவர் அவரின் நண்பர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் முடியாது என்றுச் சொல்லியவுடன் அப்பாவுடன் சண்டை போடுகிறான். அதன் பிறகு அவனின் அம்மாவை கொண்டு வந்து விட ஏற்பாடு செய்திருக்கிறான்.

இந்தக் காலக் குழந்தைகள் தன் நலம் சார்ந்தே வாழ்கின்றன என்று சோகத்துடன் சொன்னார். பிறரின் பிரச்சினை என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மறுக்கின்றனர். விளைவு - வயதானவர்கள் விடுதிகள் புற்றீசலாய்க் கிளம்புகின்றன.

ஏன் இந்தச் சூழ் நிலை ஏற்பட்டது என்பதை பெற்றோர்கள் கவனித்து சரி செய்யா விட்டால், வயதான காலத்தில் எங்கோ கிடந்து உழல வேண்டியதுதான்.


Tuesday, April 5, 2011

சொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1

அன்பு நண்பர்களே,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)

பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================

நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை ஒரு சொத்திற்கான பதிவேடுகள் என்னென்ன என்பதைப் பார்த்தோம். அடுத்து சொத்து வாங்கும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாதம் மூன்று லட்சம் வருமானம் வரும் பண்ணை வீட்டுடன் கூடிய சொத்து ஒன்றினை விற்பனைக்காக, நிலத்தின் உரிமையாளர் ஃபார்ச்சூன் பிரிக்சிடம் கொடுத்திருக்கிறார். அச்சொத்து வேண்டுவோர் மேலும் விபரங்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸினை அணுகலாம்
தொடர்பு எண் : 0422 4275976

மேலும் விபரங்களுக்கு : http://www.fortunebricks.net

Monday, March 28, 2011

தேர்வு சில நினைவுகள்


(இது மனோரா என்றழைக்கப்படும் கடற்கரையோர அந்தக்கால கலங்கரை விளக்கம். வெகு அருமையான சுற்றுலாத் தளம்)

ஆவணம் கிராமத்திலிருந்து பேராவூரணிக்குத் தான் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதச் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். விடிகாலையில் எழுந்து குளித்து, கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு நானும் போஸும்(எங்களின் வயல் வேலை செய்து வந்தவர்) சைக்கிளில் கிளம்புவோம். குறுக்கு வழியாய் காவிரி ஆற்றின் கிளையாற்றினை ஒட்டிய சாலையில் ஆரஸ்பதி மரங்கள் வரிசையாய் நிற்கும் நிழலில் மெதுவாய் சைக்கிளை மிதிப்பார் போஸ்.

கோடை காலம் ஆதலால் ஆற்றில் தண்ணீர் வராது. கதிர் அறுப்பு முடிந்து போய் வயல் வெளிகளில் ஆங்காங்கே வைக்கோல் போருகள் குட்டி குட்டியாய் காட்சியளிக்கும். பொறுக்கு மண் அடிக்கும் வண்டிகள் வயல்களுக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அப்படியே மெதுவாய் ஆற்றோரமாய் வந்து கொண்டிருக்கும் போது ஆறு ஒரு இடத்தில் முடிந்து போய் இருக்கும். அது என்னவென்றால், ஆற்றுத் தண்ணீர் முழுமையும் ஒரு இடத்தில் குழாய் போன்றிருக்கும் பகுதிக்குள் கொட்டும், அத் தண்ணீர் பத்து மீட்டர் பூமிக்குள்ளே பதியப்பட்டிருக்கும் குழாய் வழியாகச் சென்று வெகு வேகமாய் மறு முனையில் கொப்பளித்துக் கிளம்பி வேகமாய்ச் செல்லும். தண்ணீரின் வேகம் குறையாமல் இருக்க அப்படி ஒரு சிஸ்டம் வைத்திருந்தார்கள். ஊரில் அதைக் கேணிப்பாலம் என்பார்கள்.

அதைத் தாண்டிச் செல்லுகையில் ஓரிடத்தில் போர் மூலம் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். வருடம் முழுவதும் அப்பகுதியில் விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பசுமை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியும். அப்படியே சிறிது தூரம் கடந்து சென்றால் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும் ஊர் வழியாய் பேராவூரணியில் இருக்கும் அரசு பள்ளிக்குச் சென்று சேர்வோம்.

நான் படித்த காலத்தில் அறிவியலில் 40 மதிப்பெண்ணுக்கு ஒற்றை வார்த்தையில் விடையளிக்கும் கேள்விகள் இருக்கும். நாற்பது வார்த்தைகள் எழுதி விட்டால் போதும் எளிதில் தேர்வாகி விடலாம். இத்தேர்வின் போது போலீஸ்காரர்கள் பள்ளியில் கேட்டருகில் அதிகம் தென்படுவார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரம் கழித்து ”எழுதிக்கோங்கோ எழுதிக்கோங்கோ”  என்று பெரும் சத்தம் கேட்கும். ஒருவன் சைக்கிளை வேகமாக ஓட்டுவான். ஒருவான் பின்னால் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையில் பதில் சொல்வான். இவர்களைப் பார்த்ததும் போலீஸ்காரர்கள் துரத்துவார்கள். ஆனால் விடாமல் 40 விடைகளையும் சொல்லிவிட்டுத்தான் ஓய்வார்கள். சுமாராக படிக்கும் சில மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் 40 கேள்விகளையும் எழுதி பேனா மூடிக்குள் வைத்து வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அதை எடுத்து பதில் எழுதி சத்தமாய்ச் சொல்வார்கள். அனைவரும் எழுதிக் கொள்வோம். நான் பதில்களைச் சரிபார்ப்பேன்.

வருடம் தோரும், இது ஒரு பெரும் சுவாரசியமான சம்பவமாய் நடக்கும். எத்தனையோ மாணவர்களில் அறிவியலில் தேர்ச்சி அடைய இந்த வழி காரணமாய் இருந்திருக்கிறது. அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதுக்குள் சிரிப்பொன்று பூக்கும்.

தேர்வெல்லாம் முடிந்த கடைசி நாட்களில் பேராவூரணி சக்கரம் தியேட்டரில் மேட்டினி சினிமாவொன்றினைப் பார்த்து விட்டு திரும்ப வருவோம். போரிலிருந்து ஊற்றிக் கொண்டிருக்கும் தண்ணீரில் கண்கள் கோவைப்பழமாய் சிவக்கச் சிவக்க ஒரு ஆட்டம் போட்டு விட்டு, வீடு வந்து சேர்வோம். 

அந்த நாட்கள் எல்லாம் நினைவுகளூடே இன்றைக்கும் பசுமையாய் நின்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் சுவாரசியமான சம்பவங்கள் சில சமயங்களில் சோர்வுற்ற மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

Sunday, March 27, 2011

மாதா பிதா குரு தெய்வம்


மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு எனக்கு நீண்ட நாள் கழித்து உதாரண விளக்கம் கிடைத்தது. எனது மகள் கோவையில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா பள்ளியில் எல்கேஜி படித்துக் கொண்டிருக்கிறார்.நேற்றைக்கு காலையில் நானும் மனைவியும் மகளின் பிரமோஷன் கார்டை வாங்குவதற்காக பள்ளிக்குச் சென்றிருந்தோம்.  நீண்ட நேரம் கழித்து திரும்பிய மனைவியிடம் “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன்.


”வீட்டில் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், பால் குடி மறந்து பள்ளிக்கு வந்து , என்னையேச் சுற்றி வந்தார்கள். அவர்களுக்கு ஏபிசிடி சொல்லிக் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.சில பிள்ளைகள் பேசவே மாட்டார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு, வகுப்பை விட்டுச் செல்லும் போது பேசுகிறார்களே என்று அழுகை அழுகையா வருகிறது. தூங்கும் நேரம் மட்டுமே அம்மாவிடம் இருந்தார்கள். பெரும்பாலான நேரத்தில் என்னுடனே கழித்த பிள்ளைகள் இப்போது வகுப்பை விட்டுச் செல்லுவதை நினைத்து என்னால் தூங்கவும் முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை . இனி யார் என்னைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். யாருடன் நான் விளையாடுவது? யாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது? ”என்று எனது மகளின் ஆசிரியை அழுதார் என்றுச் சொன்னார். அழுது அழுது ஆசிரியையின் முகம் வீங்கிப் போய் இருப்பதாக சொல்ல, என் மனது பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மனைவியோ கண்களில் கண்ணீரோடு என்னிடம் என் மகளின் ஆசிரியைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தார். எந்த ஒரு பிரச்சினைக்கும் கலங்காத என் கண்கள் நேற்றைக்கு கலங்கி நின்றன.

இதற்கு தீர்வு தான் என்ன? இது தீர்வு காண வேண்டிய ஒன்று அல்ல. அந்த ஆசிரியையின் அன்பினை காட்டுகிறது. இனி புதிதாய் வந்து சேரக்கூடிய மாணவர்களோடு பழக ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாய் புதிய மாணவர்கள் மீது பிரியம் கொள்வார். ஆனாலும் கடந்த ஒரு வருடமாய் பழகிய அந்த அன்பு உள்ளம், வரப்போகும் பிரிவினைக் கண்டு துடித்த, அந்த அன்பு உள்ளத்தின் பரிதவிப்பு கண்டு எங்கள் மனது பட்ட வேதனையை வார்த்தையால் எழுத முடியாது.

என் மகள் வகுப்பில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசில் பெற்றார். அதற்கு திருமதி நொய்லா அவர்களே காரணம். ஆசிரியை திருமதி நொய்லா அவர்களுக்கு பெற்றோர்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பது அரிதிலும் அரிது. இவரைப் போன்ற ஆசிரியைகளை நிர்வாகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஆவல்.


திருமதி நொய்லா அவர்கள் தான் உண்மையான குருவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. முன்னோர்கள் இவர்களைத் தான் ”குரு” என்றழைத்தார்கள். காசே பிரதானமாகக் கொண்ட இவ்வுலகில் அன்புள்ளத்தோடு வாழும் இவ்வகை மனிதர்களால் தான் உலகம் இன்னும் ஜீவித்து வருகிறது. 

திருமதி நொய்லா அவர்களின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடானது ஒன்றுமே இல்லை. கடவுள் இவருக்கும், இப்பள்ளிக்கும் ஆசீர்வாதங்களை வழங்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.




Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.




Wednesday, March 2, 2011

உணவே விஷமான சம்பவம்

மிகச் சமீபத்தில் மனைவி சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அன்றைய இரவு உணவுக்காக ஹோட்டல் செல்லும் வழியில், கேரளக்கார கடை ஒன்று கண்ணில் பட்டது. ஆப்பம், கொண்டக்கடலைக் குழம்பு என்று போர்டில் எழுதி இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொச்சின் செல்லும் வழியில், பாலக்காட்டில் ஆப்பமும், கொண்டக்கடலைக் குழம்பும் சாப்பிட்டது நினைவுக்கு வர, உடனடியாக டூவீலரை நிறுத்தி உள்ளே சென்றேன்.

சூடாக இரண்டு ஆப்பமும், குழம்பும் பரிமாற சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து விட்டேன். மறு நாள் காலையில் எச்சில் முழுங்க முடியவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. சரி மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். காரம், புளி சேர்க்காமல் சாப்பிட்டு வந்தேன். இரண்டு நாளாக தொண்டையில் கட்டிக் கொண்ட உணர்வு மட்டும் போகவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் சென்றேன். தொண்டையில் புண் என்று சொல்ல திக்கென்றாகி விட்டது.

இரு நூறு ரூபாய் செலவு, பதினைந்து நாட்கள் ஆயின தொண்டைப் புண் ஆறுவதற்கு.  முப்பது ரூபாய்க்கு ஆப்பம் சாப்பிட்ட கொடுமையால், உடம்பே ஏறுக்கு மாறாய் மாறி விட்டது. அதுமட்டுமா பதினைந்து நாட்கள் அவஸ்தை வேறு. இந்த ஹோட்டலின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இத்தனைக்கும் கோயமுத்தூர் ஹெல்த் டிபார்ட்மெண்டில் எனது நண்பர் வேலை செய்கிறார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு, தூக்கி விடுகிறேன் என்கிறார். அதன்பின் வரும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் விட்டு விட்டேன்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கதைகள் அனைத்தும் படு பயங்கரமாய் இருந்தன. மட்டன், சிக்கன் சாப்பிடாத காரணத்தால் மீன் உணவை மாதமொருமுறை பயன்படுத்தி வருகிறேன். அந்த மீனில் இருக்கும் படுபயங்கரம் என்ன தெரியுமா? மீன் பிடித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு தான் விற்பனைக்கே வரும் என்றும், அந்த மீனைச் சாப்பிடுவதால் ஏகப்பட்ட வியாதிகள் வரும் என்றும், பேசாமல் டேம் மீனுக்குச் சென்று விடுங்கள் என்றும் சொன்னார். டேம் மீன் மட்டும் சும்மாவா, மீனுக்கான உணவிற்காக குளத்தில் யூரியாவைக் கொட்டுகிறார்கள் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விற்பனைக்கு வரும் மீன்கள் பெரும்பாலும் கடைசித் தரமானது என்றும் சொன்னார். கேட்கவே படுபயங்கரமாய் இருந்தது. 

கடந்த வாரம் எனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு முற்றிலுமாய் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்கிறார்கள். நல்ல இள நீர் ஒன்றினை அருந்தி விட்டு, வரும் வழியில் காலிஃபிளவர் தோட்டத்தைப் பார்த்தேன். அய்யோ என்று கதறலாம் போலிருந்தது. மருந்தால் பயிராகும் ஒரு  உணவுப் பொருள் என்றால் அது காலிஃபிளவர்தான். பேஸ்டு போல மருந்து ஒட்டி இருந்தது. காலிஃபிளவரில் இருக்கும் செலோனியம் புற்று நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கின்றன என்று படித்த ஞாபகம் வந்தது.

நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை.

Thursday, February 3, 2011

ஃபெமோவின் தமிழ் கதாநாயகி




எங்களது இணை நிறுவனமான ஃபெமோ, கடந்த இரண்டாண்டுகளாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் ஃபெமோ முதன் முதலாய் கதாநாயகி ஒருவரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அதுபற்றிய விபரங்களை வெளியிடுவோம்.

பெரும்பாலும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றாலும் கடும் பிரயத்தனம் செய்து சான்ஸ் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவதொரு நடிகரின் வாரிசாக இருக்க வேண்டும். சினிமாக் கனவில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் சென்னைக்கு வருகின்றனர். எங்கு செல்வது? எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தடுமாறி நிற்கின்றனர். சிலர் வழி தவறிச் சென்றும் விடுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து சினிமாக் கனவுகளோடு சென்னைக்கு வருபவர்களின் கனவினை நிறைவேற்றவும், அவர்களுக்கு தகுந்த வழி காட்டவும் தான் ஃபெமோ ஆரம்பிக்கப்பட்டது. 

இதுவரையிலும் விளம்பரங்களில் மட்டுமே தனிக் கவனம் செலுத்தி வந்த நாங்கள், தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க, வாய்ப்புகளை பெற உதவி செய்கிறோம்.

எங்களது இணையதளத்தினை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபல விளம்பர இயக்குனர்கள் அடிக்கடி பார்வை இடுகின்றார்கள். அதன் காரணமாய் பல வாய்ப்புக்களைப் பலரும் பெற்றிருக்கின்றார்கள். எந்த வித ஆரம்பக் கட்டணமும் இன்றி வெகு எளிதில் சினிமா மற்றும் விளம்பர மீடியாக்களில் இருப்போர் கவனத்திற்கு நீங்கள் சென்று விடுவீர்கள். 

சினிமா, டிவி மற்றும் விளம்பரங்களில் நடிக்க விரும்புவோருக்கு நல்ல வரப்பிரசாதமாக எங்களது ஃபெமோ நிறுவனம் விளங்கி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு எங்களது இணைய தளம் http://www.femo.in சென்று பார்க்கவும். 

- ஃபெமோ

Sunday, January 30, 2011

யுத்தம் செய் திரைப்படமும் சாரு (நிவேதிதாவும்)



சென்னையில் இருந்து வந்த நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்குள் நுழைந்த போது நிவேதிதா அழுது கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது, ஏதோ ஒரு குறும்புக்காக அம்மா பேசி விட்டார் என்பதால் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் நிவேதிதா. வழக்கம் போல மனைவிக்கு சில அர்ச்சனைகளை டீசண்டாக தூவினேன். கூட நண்பரும் அல்லவா இருக்கிறார்? சிறிது நேரம் கழித்து நிவேதிதா சாக்லேட் பாரை எடுத்துக் கொண்டு வர நான் மனைவியைப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்று சமையல் அறைக்குள் சென்று விட்டார் மனைவி.

நண்பர் சென்றதும், சாக்லேட் ஏன் கொடுத்தாய் என்று கேட்க, “ நான் அழுகையை நிறுத்தனும் என்றால் சாக்லேட் சாப்பிட்டாத்தான் அதுவா நிற்கும்” என்று நிவேதிதா சொன்னதாகவும், பேசிக் கொண்டிருப்பதால் அவளால் கவனம் சிதறி விடும் என்பதாலும் சாக்லேட்டைக் கொடுத்ததாகவும் சொன்னார் மனைவி.

இன்று காலையில், யுத்தம் செய் திரைப்படப்பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னால் ஆடிக் கொண்டிருந்த நிவேதிதாவைத்தான் நீங்கள் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கின்றீர்கள்.

சாரு நிவேதிதா நடித்த காட்சியை மிஷ்கின் பாடலில் இருந்து நீக்கி விட்டார் என்று கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு வருத்தத்தில் இருக்கும் சாருவின் ரசிகப் பெருமக்களுக்கு இருக்கட்டுமே என்று இவ்வீடியோவை அளிக்கிறேன்.

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 21, 2011

கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் கோவையில் வெகு விரைவில் மிகவும் குறைந்த விலையில் வீட்டு மனைகளை விற்பனை செய்யவிருக்கிறது. ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை அவ்வீட்டு மனைகளின் விலைகள் இருக்கும். எதிர்கால வாழ்க்கையினை செம்மையாக, நிம்மதியாக வாழ விரும்புவோர்கள் அனைவருக்கும் தனது சம்பாத்தியத்தினை ஏதாவதொரு நல்ல சொத்தில் முதலீடு செய்தல் நல்லது. அவ்வாறு நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்களின் மூச்சாக கருதி வருகிறது. விரைவில் வீட்டு மனைகளைப் பற்றிய விபரங்களை வெளியிடுகிறோம். மனைகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தமிழ் நாட்டிலே வளர்ந்து வரும் நகரமான கோவையில் தற்போது வாங்கிப் போடும் ஒவ்வொரு செண்ட் நிலமும் நாளை கோடிக்கணக்கில் வளரும் தன்மை கொண்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

- கோவை எம் தங்கவேல்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் 
http://www.fortunebricks.net

Thursday, January 20, 2011

வீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி

இறுதியாக, வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் வீடுகள் வழங்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.  இந்த திசைக்கு உரிய கடவுள் “வாயு பகவான்”. இவர் அதீத வலிமை கொண்டவர் என்பதால் இவ்வீட்டில் வசிப்பவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடியவர்களாகவும், கடவுளின் பால் மிக்க பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால் இந்த திசையில் வீசக்கூடிய காற்றில் கசப்பு சுவை இருப்பதால், மெலிந்த தேகம் கொண்டவர்கள் வசிக்க ஏதுவானதல்ல என்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அவனின் முகவரியாய் இருக்கிறது. அவனின் சம்பாத்தியங்கள், நிம்மதி, குடும்பத்தின் வளர்ச்சி, வாரிசுகளின் பெருக்கம் போன்றவற்றிற்கும் வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக மனிதனின் நல்லது கெட்டது அனைத்துக்கும் இவ்வீடுகளே பெரும் பங்காற்றி வருகின்றன.வீடு இல்லாதவரை பிச்சைக்காரன் என்று தான் அழைக்க முடியும். அவன் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், புத்திசாலியாய் இருந்தாலும் கூட அவனுக்கென்று ஒரு வீடு இல்லையென்றால் அவன் ஒரு நாடோடி வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு வீட்டினைக் கட்டிக் கொள்ளவோ அல்லது விலைக்கு வாங்கவோ முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு வீடு இல்லாத நபர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. ஒவ்வொருவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறந்த வீடுகளை, மிகக் குறைந்த வட்டியில் விற்பனை செய்கிறோம். விரைவில் வெறும் 25 லட்ச ரூபாய்க்கு, 24 நான்கு தனித் தனியான வீடுகளை 1000 சதுர அடி பரப்பளவில், இரண்டரை செண்ட் நிலத்தில், இரண்டு பெட்ரூம்கள் கொண்டதாக அமைக்க விருக்கிறோம். கோவையின் பிரதான இடமான ஒண்டிப்புதூரில் இந்த வீடுகள் அமையவிருக்கின்றன. இதற்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறோம். வாடகை செலுத்துவது போல, வங்கிக் கடனைச் செலுத்தினால் போதுமானது. வாடகை கொடுத்தால் போல வீடு உங்களுக்கு சொந்தமானதாகி விடும். 

வாசகர்கள் தொடர்ந்து எங்களது நிறுவன தளத்தினையும், எனது இந்த பிளாக்கினையும் படித்து வாருங்கள். அல்லது இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்து விடுங்கள். விபரங்களை விரைவில் அப்லோட் செய்கிறோம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்

Tuesday, January 18, 2011

வீடு பற்றிய தொடர் - 4

இன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.

தென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

அடுத்து,  தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாதம் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

Thursday, January 13, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச தொடர்)

இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம். 

கிழக்கு தலைவாசல் :

கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கு தலைவாசல :

மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.  மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.  மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு

ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள். 

எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.

10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.

மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.

இமெயில் : info@fortunebricks.net அல்லது info@fortuneenterprise.in அல்லது covaimthangavel@gmail.com

தொலைபேசி எண் : + 91 422 4275976 

மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் /  ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி

எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================



Wednesday, January 12, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 1

ஒவ்வொருவருக்கும் வீடு என்பதுதான் தாயின் கருவறைக்கு அடுத்த அறை. எத்தனையோ இன்னல்கள், துன்பங்களில் சிக்கி வீடு வருபவர்கள் நிம்மதியாய் தூங்கி துன்பங்களை மறந்து மறு நாள் காலை புத்துணர்ச்சியாய் எழுந்து கொள்ள, தாயின் மடிபோல் விளங்கும் இடம் தான் வீடு. வீட்டினை கோயில் என்று சொல்ல வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று வீடு. இந்த வீடு தான் மனிதனின் அனைத்துக்குமான இடம். ஒருவன் வாழ்வாங்கு வாழ இந்த வீடு தான் அடையாளம். இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் வீட்டினைப் பற்றி இனி நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கலாம். நாம் வசிக்கும் வீடு எப்படிப்பட்டது ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. 

முதலில் வீட்டு மனையின் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருந்தால் அது வீடு கட்ட தகுந்த நிலம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனையில் வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அடுத்து, அகலமான பக்கங்கள் சம அளவிலும், நீளப்பக்கங்கள் உள்ளடங்கி இருந்தாலும் அதுவும் சிறந்த மனைதான். அதுவுமன்று அகலமான பக்கங்கள் அகன்றிருந்தால் கூட பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மனைகளைத் தவிர வேறு வடிவம் கொண்ட மனைகளில் வீடு கட்டுவது அவ்வளவு நல்ல பலனைத் தராது என்றுச் சொல்கின்றார்கள்.

இன்றைக்கு மனையின் வடிவம் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்த்தோம். நாளை வீட்டு வாசல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரி, எங்களது ஃபார்சூன் பிரிக்ஸ் ( FORTUNE BRICKS) நிறுவனமும் மற்றொரு பில்டர் நிறுவனமும் இணைந்து கோவையில் இருக்கும் ஒண்டிப்புதூரில் 2.50 செண்ட்டில் மனையும், அதில் 1000 சதுர அடிக்கு இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், போர்டிகோ வைத்து 24 நான்கு தனித்தனி வீடுகளைக் கட்ட இருக்கிறோம். இதன் விலையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். ஒண்டிப்புதூர் திருச்சி சாலையில் நெசவாளர் காலனி அருகில் தான் மேற்படி வீடுகள் அமைய இருக்கின்றன. விரைவில் வீட்டின் வரைபடம் மற்றும் இதர விபரங்களை வலையேற்றுவோம். வீடு வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0422 4275976

- கோவை எம் தங்கவேல்
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்
www.fortunebricks.net

Tuesday, January 11, 2011

கோவை ஹோப் காலேஜ் சாலையில்....

காலையில் கையின் மேற்புறம் காயமாகி விட்டது. அதன் மீது மருந்து தடவி இருந்தேன். ஒரே வலி. ரத்தமும், மருந்தும் காய்ந்து போய் இருந்தது.

எனது வண்டியில் இருக்கும் சைலென்சர் வெயிட் அதிகமாதலால் அடிக்கடி கழண்டு விடும். அதற்கொரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அல்லாடிய போது, எனது நண்பர் பிஎஸ் ஆரின் அறிவுறுத்தலின் படி, மாலையில் ஹோப் காலேஜ் மெக்கானிக்கிடம் சென்றேன்.

அவர் ஒவ்வொரு பாகமாய் கழட்டி எடுத்து, கிட்டத்தட்ட அரைமணி நேரமாய் உட்கார்ந்து ஏதேதோ கணக்குகளைப் போட்டு, ஒரு வழியாய் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி வந்து, சைலென்சரைப் பொறுத்தினார்.

நான் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் என் அருகில் வந்தார். என் முகத்தினைப் பார்த்தார். கையைப் பிடித்து ”காயமாயிடுச்சா?” என்றார். நான் ஆம் என்பது போல தலையை ஆட்டினேன். காயத்தைச் சுற்றி விரல்களால் தடவி விட்டார். “காயம் சீக்கிரம் ஆறிடும்” என்றார். ”எல்லாம் சரியாகி விடும்” என்றார் தொடர்ந்து. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”மட்டன், சிக்கன் சாப்பிடாதீர்கள்” என்றார்.

நான் இவை இரண்டுமே சாப்பிடுவதே இல்லை. சிரித்தார் சென்று விட்டார்.

”யார் அவர்?” என்று கேட்டார் மெக்கானிக். 

“தெரியவில்லை” என்றேன் குழப்பமாய்.

யார் அவர்? ஏன் என் அருகில் வந்தார். ஏன் அப்படி நடந்து கொண்டார்? ஒன்றுமே தெரியவில்லை.



Monday, January 10, 2011

கோவையில் சொத்து வாங்கப் போகின்றீர்களா?

எங்களது நிறுவனம் “ ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” ஒரு பதிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம். கடந்த இரண்டு வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகக் குறைந்த விலையில் மனைகளையும், வீடுகளையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கோவையில் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம்.

சொத்துக்களை விற்க விரும்புவரிடம் அவரின் எதிர்பார்ப்பு என்ன, மார்கெட் நிலவரம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசி முடிவெடுத்து, சொத்துக்களின் வில்லங்கள், கடன்கள் போன்றவைகளையெல்லாம் சேகரித்து, எங்களின் நிறுவன வக்கீல் மூலம் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அதன் பிறகே எங்களது வாடிக்கையாளர்களிடம் சொத்து விபரங்களைச் சமர்பிக்கின்றோம்.

சிலர் கூடுதல் விலை வைத்து, சொத்துக்களை வாங்குபவர்களிடம் விற்று விடுவார்கள். ஆனால் ஃபார்சூன் பிரிக்ஸ் இதில் மிகக் கவனமாய் இருக்கிறது. எங்களின் பலமே ‘நேர்மையான, நம்பிக்கையான' விற்பனை மட்டுமே. சொத்து வாங்குபவர்களுக்கு மார்க்கெட்டை நிலவரத்துக்கு ஏற்ற நல்ல விலையும், விற்பவருக்கு மார்கெட்டை ஒட்டிய விலையையும் பெற்றுத்தருகிறோம்.

எங்களிடம் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களின் தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து அதற்கேற்ப சில ஆலோசனைகளை வழங்கி, அதன்பிறகே வாடிக்கையாளர்களுக்கு சொத்துக்களை காட்ட முற்படுகிறோம். 

ஒவ்வொரு முறையும் வில்லங்கங்கள், மற்ற பிற வேலைகளுக்கு அலையாமல் அத்தனை வேலைகளையும் நாங்களே செய்து கொடுத்து விடுகிறோம். சொத்து விற்பவருக்கும், வாங்குபவருக்கும் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து நல்ல முறையில் விற்பனையில் உதவி வருவதால் பல இடங்களில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இவை அனைத்துக்கும் மிகக் குறைந்த கட்டணம் மற்றுமே பெற்றுக் கொள்கிறோம். 

சொத்துக்கள் விற்க விரும்புவோரும், வாங்க விரும்புவோரும் எங்களை தொடர்பு கொள்ளலாம். 

Phone : + 91 422 4275976

வெளி நாடுகளில் வசிப்பவர்களின் சொத்துக்களை நிர்வகித்து, வாடகை வசூல், வரி கட்டுதல் போன்றவற்றிலும் நாங்கள் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகிறோம். இது பற்றிய விபரங்களை அறிய எங்களின் இணைய தளத்தினை பார்க்கவும்

மேலும் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ விரும்புவர்கள் எங்களது நிறுவனம் நடத்தும் இலவச இணைய தளத்தில் உறுப்பினராகி பதிவு செய்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் உதவுகிறோம்.

எங்களது இணையதள முகவரி : http://www.fortunebricks.net

* * *




Friday, January 7, 2011

கோயமுத்தூரில் கீரைக்கட்டு பத்து ரூபாய்


நம்பவே முடியவில்லை. சரியாக 30 நாட்களுக்கு முன்பு வரை, கோவையிலிருக்கும் சிங்கா நல்லூர் உழவர் சந்தையில் ஒரு கட்டு கீரை ரூபாய் 4.00 என்று விற்பனை ஆனது. இன்று காலையில் ஒரு கட்டு ரூபாய் 10 என்று விற்றார்கள். யார் இந்த விற்பனையாளர்கள் என்று பார்த்தால், ஒருவர் கூட விவசாயிகள் கிடையாது. விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட 'உழவர் சந்தை' இன்றைக்கு வியாபாரிகள் சந்தையாக மாறிப் போய் விட்டது. நேரடியாக விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு மொத்தமாக கீரைக்கட்டுகளை வாங்கி அடுத்த அரைமணி நேரத்தில் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த வியாபாரிகள். இவர்களுக்கு அன்றாடம் கிடைக்கக் கூடிய லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள். இவ்வகை வியாபாரிகளை ‘கோயமுத்துர் சிங்கா நல்லூர் உழவர் சந்தை'யின் அதிகாரிகள் உள்ளே நடமாட விட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்று விடுகின்றார்கள். 

ஒரு முறை, நான் நேரில் கண்டது உண்மைச் சம்பவத்தை இவ்விடத்தில் சொல்ல விரும்புகிறேன்.ஒரு அதிகாரி, வெங்காய வியாபாரியிடம் ‘காளான்' இருக்கிறதா என்று கேட்டார். அனைத்துக் காளான்களும் விற்று விட்ட நிலையில், அந்த வியாபாரி அந்த அதிகாரியிடம் சொன்னது “சார் ஐந்து நிமிடத்தில் தருவித்து தருகிறேன்” என்றார். சொன்னபடியே இரண்டு பாக்கெட் காளானை இலவசமாய் வழங்கினார் அந்த வியாபாரி. அதிகாரியும் கெத்துக் குறையாமல் வாங்கிச் சென்றார். 

இதே போன்று, போர்டில் இருக்கும் விலை ஒன்றாகவும், விற்கும் விலை ஒன்றாகவும் சிலர் விற்பனையாளர்கள் விற்பதை கம்ப்ளெயிண்ட் செய்தால் அப்போதைக்கு காமாச் சோமாவென்று சொல்லி சரி செய்கிறார்கள். ஆனால் அதே வியாபாரி தொடர்ந்து கடை போட்டுக் கொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறினால் ஆளும் அரசுக்கு மக்களிடம் மிகப் பெரும் வெறுப்பு உண்டாகி விடும். அரசு கொண்டு வரும் திட்டங்களை சரியாக அமல்படுத்தாமல், அலட்சியப் போக்கில் செயல்பட்டு வரும் இவ்வகை அதிகாரிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களால் அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல், தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை நாம் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அரசு அலுவலர்கள் மட்டுமல்ல சமூகம் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கோவையில் 'அல்பேனியா' பள்ளியில் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெற்றோர்கள் கோபமடைந்து சாலை மறியல் செய்தார்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததாக ‘சன் செய்திகள்' வெளியானது. குற்றம் செய்தவனை விட, குற்றம் செய்யத்தூண்டியவர்கள் மீது நடவடிக்கை ஒன்றினையும் எடுக்காத காவல்துறையினரின் 'சட்டம் ஒழுங்கு' பற்றி என்ன சொல்லமுடியும்? பள்ளியின் நிர்வாகியை அல்லவா கைது செய்திருக்க வேண்டும் காவல்துறை. காவல்துறையினரின் சில செயல்பாடுகள் மக்கள் விரோதமாய் சென்று விடுகின்றன. மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை என்பதை காவல்துறையினர் உணர வேண்டும்.

கீரைக்கட்டு 10 ரூபாய் என்றால் வருங்காலத்தை நினைக்கையில் நிலைமை என்னாகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழக அரசு உழவர் சந்தைகளில் நடக்கும் 'கோல்மால்களை' சரி செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம்.

Wednesday, January 5, 2011

கிணறுகள்

வீட்டிற்குப் பின்புறம் வடமேற்கு மூலையில் கிணறு இருக்கும். பத்தடியில் நீர் நிறைந்திருக்கும். மழைக்காலங்களிலோ தண்ணீர் ததும்பி வழியும். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, வாளியை கிணற்றுக்குள் விட்டு, தண்ணீரை இறைத்து இறைத்து அருகில் இருக்கும் மண் பொக்கையில் நிரப்பி வைப்பேன்.


நான்கு படப்பைக் கற்கள் அருகருகே பாவி இருக்கும். அதன் மீது அமர்ந்து தான் குளிப்பேன். குளிக்கும் தண்ணீர் வாய்க்கால் மூலம் காசா லட்டு மாமரத்தின் அடியில் பாயும்.எனக்குப் பிடித்த சோப்பு மைசூர் ஜாஸ்மின். மல்லிகை மணம் வீசும். வெது வெதுப்பான கிணற்று நீரில் குளித்தால், உடம்பும், மனதும் எல்லையில்லா ஆனந்தத்தில் மிதக்கும். 


குளித்து முடித்து விட்டு, துவைத்து காய வைத்திருக்கும் உடைகளை அணிந்து கொண்டு வீட்டுக்கு வருவேன்.

எனது பால்ய காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் கிணற்று நீரைத்தான் நான் அதிகம் பயன்படுத்தி வந்தேன்.

ஒரு முறை கிணற்றுக்குள் பாம்பு விழுந்து விட்டது. அதை எடுக்க வீட்டு வேலைக்காரர் போஸால் முடியவில்லை. பாம்பு பிடிக்கும் மாரிமுத்துவை அழைத்து வந்தார் தாத்தா. தட்டுக்கூடையில் வைக்கோலைப் பரப்பி நான்கு புறமும் கயிற்றினைக் கட்டி, தாம்புக் கயிறு மூலம் கிணற்றுக்குள் விட பாம்பு வசதியாய் கூடையில் வந்து விட்டது. மேலே கொண்டு வந்து, அதற்கு மேலோக பிராப்தி கொடுத்தார்கள்.

அதன்பிறகு, கிணற்றடிக்குச் செல்லுகையில் பாம்பு நினைவு வந்து விடும். கொஞ்ச நாள் தான். பயம் தெளிந்து விடும்.

கிணற்றுக்கு வடக்கே நானும் எனது மச்சானும் இணைந்து தோட்டம் ஒன்றினை உருவாக்கினோம். தினந்தோறும் தோட்டச்செடிகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம். தக்காளிச் செடியில் தக்காளி காய்த்து பழுத்து வருகையில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம் கிளம்பும். அக்காவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் சமையலுக்குப் பயன்படுத்துவார். மீன் குழம்பில் மிதக்கும் அந்த தக்காளியை ஆவலோடு எடுத்து சாப்பிடுவேன். இம்மாதிரியான சந்தோஷங்களை அளித்த அந்தக்கால வாழ்க்கையை இன்று என குழந்தைகளுக்கு என்னால் அளிக்க முடியவில்லையே என்ற நீங்காத வருத்தம் என்னை விட்டு நீங்கவில்லை. கிராமங்களில் இன்றைக்கெல்லாம் கிணறுகள் மறைந்து போய், ஆழ்துளைக்கிணறுகள் வந்து விட்டன.  சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, எங்காவது கிணறுகள் தென்படுகின்றனவா என்று தேடிப்பார்த்தேன். பார்க்க முடியவில்லை. என் பிள்ளைகளுக்கு கிணறுகள் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூட முடியவில்லை. 

இன்றைய காலத்தில் பைப்பில் கொட்டும் நீரை, மக்கில் அள்ளி தலையில் கொட்டிக் கொண்டு வருகையில், கிணற்று நீரும் அதன் வெது வெதுப்பான தன்மையும் மனதோடு வந்து செல்வதை மறக்க முடியவில்லை. தாயின் கதகதப்பை அந்தக் கிணற்று நீர் தந்ததை எப்படித்தான் மறப்பது.

* * *