குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label fortunebricks. Show all posts
Showing posts with label fortunebricks. Show all posts

Thursday, September 8, 2011

சமச்சீர் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது?

கடந்த இரண்டு வருடங்களாக ஐ டிஸ்கவரி என்ற எக்சீட் கல்வி புத்தகங்களை குழந்தைகள் இருவரும் படித்து வந்தனர். அந்தப் புத்தகங்களையும் தற்போது குழந்தைகள் படித்து வரும் சமச்சீர் புத்தகங்களையும் ஆராய்ந்த போது “சமச்சீர்” புத்தகங்களின் தரம் தமிழகச் சூழலுக்கு ஏற்ப நன்றாக இருந்தது. 

அழகிய படங்கள், கதைகள், விளக்கங்கள், செய்முறை பயிற்சிகள், வீட்டில் செய்யப் பயிற்சிகள், ஆங்காங்கே குறிப்புகள் என்று அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது சமச்சீர் கல்விப் புத்தகங்கள். ஒவ்வொரு வகுப்பு புத்தகத்தையும் இணையத்தில் இருந்து இறக்கிப் படித்துப் பார்த்தேன். அருமை.

ஆங்காங்கே சில தவறுகள் இருக்கின்றன என்றாலும் மொத்தமாய் பார்க்கையில் வெகு அருமையான வடிவில் தேவையானவற்றை மட்டும்   சேர்த்து தரமாய் வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமச்சீர்கல்வியை மெட்ரிக் பள்ளிகள் வேண்டாமென்றுச் சொல்வது நல்லதல்ல. டிரஸ்ட் ஆக்டை முன் வைத்து பள்ளி நடத்த அனுமதி வாங்கியவர்கள் செய்யும் வேலையும் அல்ல. வயதுக்கு ஏற்ப, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பாடங்களாக வைத்திருக்கிறார்கள்.

நான் ஆசிரியராக இருந்த போது, மெட்ரிக் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆசிரியர்கள் லீவு போட்டு விடுவார்கள். ஏனென்றால் ஆசிரியரின் சம்பளமே 800 ரூபாய் தான் இருக்கும். நம்புங்கள் இவ்வளவுதான் கொடுத்தார்கள். 3500 ரூபாய் சம்பளம் பிரின்ஸ்பல் வாங்குவார். எனக்கு 850 ரூபாய் சம்பளம். +1, +2 கணிப்பொறி வகுப்பினை எடுத்தேன். ஆசிரியர்கள் சிலர் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவார்கள். அப்படியான ஒரு காலத்தில் 6ம் வகுப்பிற்கு கெமிஸ்ட்ரி பாடம் எடுங்கள் என்றுச் சொல்லி விட்டார் பிரின்ஸ்பல்.

வேறு வழி இன்றி பாடமெடுத்தேன். கிட்டத்தட்ட 150 பக்கமுள்ள புத்தகம். ஒரே ஈக்குவேஷன்களும், செய்முறைகளுமாய் படிக்கவே தலை சுற்றியது. 6ம் வகுப்பு பையன் படிக்க 10 வகுப்பு பாடத்தினை வைத்திருந்தார்கள். எவனும் படிக்கவில்லை. ஏதாவது சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒருவழியாய் ஒப்பேத்திக் கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஒரு ஆசிரியர் புதிதாய் வேலைக்குச் சேர, அவர் தலையில் கட்டி விட்டார் பிரின்ஸ்பல். இது தான் மெட்ரிக் பள்ளிகள் சிலவற்றின் தரம்.

மேட்டூரில் அழகிய வீடு விற்பனைக்கு 

சேலம் மேட்டூர் அருகில் அழகிய வீடு விலைக்கு வந்திருக்கிறது. விபரங்களை கீழே பார்க்கவும்.

The area is 2400 sq.ft
ground floor:1000 sq.ft mosaic flooring,Teak door,2bkh
First floor:1100 sq.ft.Tile flooring, 2bhk.hall 17/17
master bedroom:17/10
second bedroom:10/10
dining:10/10
three bathrooms.

இந்த வீட்டின் விலை, மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும். 

Tuesday, August 23, 2011

சோத்பீ கர்லோஸ் - சில நினைவுகள்

சரியாக நினைவில் பதியாத ஏதோ ஒரு நாளில் “தி ஈரோப்பியன் ரிச்செஸ்ட் பீபிள்” என்ற புரோகிராமை டிராவல்ஸ் அண்ட் லிவிங்கில் பார்த்துக் கொண்டிருந்தேன். கர்லோஸ் சோத்பீ இண்டர்னேஷனலின் டைரக்டர் பேசிக் கொண்டிருந்தார்.

ரியல் எஸ்டேட் பிசினஸ், ஐரோப்பாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களில் அவரும் ஒருவர் என்று தலைப்பு. மொட்டைத்தலை, இடுங்கிய கண்கள், எப்போதும் குறுகுறுப்பாய் பார்க்கும் பார்வை, கீச்சுக் குரல், கசங்கிய உடைகள் என்று பார்ப்பதற்கு “கோமாளியாய்” இருந்தார்.ஆனால் அவரைச் சுற்றிலும் இருந்த ஆட்கள் “பர்ஃபெக்ட் எஃபெக்டில்” இருந்தனர்.

எதைப் பற்றியும் கவலையே படாத மனநிலை. ஜாலியாய் பிசினஸ் என்று கலக்கினார். ஒரு பிசினஸ் முடித்ததும் அவர் சொன்னது “மை எர்னிங் ஈஸ் ஃபிப்டி தவுசண்ட் டாலர்ஸ்”. அதாவது 23 லட்ச ரூபாய்.

தட்ஸ் ஆல். திரும்பத் திரும்ப அதே புரோகிராம் ரிலே ஆனது. பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு மெயிலையும் தட்டி விட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவரிடமிருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்தேன். படித்தேன். பிரமித்தேன். அவருடனான தொடர்பு சிலகாலம் இருந்தது.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் விதை மனதில் ஊன்றிய நாள் அது. எங்கள் நிறுவனம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். மிகச் சரியான வழிகாட்டுதல்களுடன் அகலக்கால் வைக்காமல் மெதுவாக நடை போட்டுக்கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ்.

வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரையில் மிகச் சிறப்பான சர்வீஸ் கொடுத்து வருகிறோம். சிலர் தகவல்களை வாங்கிக் கொண்டு கமிஷன் கொடுக்க ”மறந்து” விடுவார்கள். ஆனால் நாங்கள் உழைப்பினை நம்புகிறோம். உழைத்த காசு வீடு வந்து சேரும் என்ற நம்பிக்கை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. இன்று கிட்டத்தட்ட 3000 ரியல் எஸ்டேட் நண்பர்களின் உதவியுடன் வெற்றிப் படியில் ஏறிக் கொண்டிருக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்.

சொத்து என்பது ஒவ்வொருவருக்குமான கனவு. அது சமூகத்தின் அடையாளம். அங்கீகாரம். அதை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். வீடு, சொத்து என்பவை மனிதனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தர வல்லது. முகவரி இல்லாதவர்களுக்கு முகவரி பெற ஃபார்ச்சூன் உதவுகிறது. வாடிக்கையாளர்களின் குடும்பத்தில் ஒருவராய் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மாறிவிடுகிறது. அவர்கள் எந்தச் சொத்து வாங்கினாலும் எங்களிடம் கேட்காமல் வாங்குவதில்லை. எந்தச் சொத்தினை விற்றாலும் எங்களிடம் சொல்லாமல் விற்பதில்லை. அதுதான் எங்களின் பலம்.

இன்றைக்கு பில்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உங்களுக்கு இந்தக் கான்செப்ட் வந்தது என்று கேட்டார். கர்லோஸ் நினைவிலாடினார். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அதிர்ஷ்டத்தை சொத்து வடிவில் உங்கள் வீடு தேடிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்தோ, வீடோ வாங்க நீங்கள் அழைக்க வேண்டியது

96005 77755

* * *

Monday, August 22, 2011

பட்டா ஒரு முக்கிய ஆவணமா?


மிகப் பெரிய கோடீஸ்வரர் அவர். எல்லையில்லா பரம்பரையான சொத்துக்கள் குவிந்து கிடந்தன. யாருக்கும் எதற்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லாதவர். யாரோ ஒரு பேராசைப்பட்ட அரசு அலுவலர் ஒருவரால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் விற்பனை செய்ய இயலாமல் கிடந்தன அவர் எங்களிடம் வரும்வரை.

இந்தக் கோடீஸ்வரரின் சொத்துக்கு அருகில் அரசின் புறம்போக்கு நிலம் இருக்கிறது. சர்வேயர் வந்து நிலத்தை அளவு செய்து குறிப்பிடும் போது, கோடீஸ்வரரின் சொத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, ”எனக்கு கொஞ்சம் காசு கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். ”எதற்கு கொடுக்க வேண்டுமென்று ” கேட்டு முடியாதென்றுச் சொல்லி விட்டார் கோடீஸ்வரர். சர்வேயர் இவரின் நில சர்வே எண்களையும் சேர்த்து அரசுப் புறம்போக்கு நிலம் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்து விட, அரசும் இவரின் நிலத்துடன் சேர்ந்து அரசு நிலம் என்று அறிவிப்பு கொடுத்து விட்டது. 

இப்பிரச்ச்சினையில் தவறு செய்தவர் சர்வேயர். மேற்படி சொத்தை விற்க முயற்சிக்கும் போது, விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரிய வருகிறது. கோர்ட் படியேறி தீர்ப்பினை வாங்கி விடுகிறார் கோடீஸ்வரர். பட்டா கிடைக்க அப்ளை செய்கிறார். கிடைக்கவில்லை. பட்டா இல்லாமல் யார் தான் இவ்வளவு பெரிய சொத்தினை வாங்குவார்கள்? பிரச்சினை ஆரம்பிக்கிறது.சொத்தின் விலை அடிமாட்டு ரேஞ்சுக்குப் போகிறது. 

ஒரு சொத்து இவருக்குச் சொந்தமானது என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களில்(டாக்குமெண்ட்) பட்டா என்பது மிக முக்கியமானது என்றாலும், ஒரு சொத்தினை விற்பதற்கு அது தேவையானதா என்று கேட்டால் தேவை என்றுதான் சொல்லுவார்கள். அதுதான் நியாயமும் கூட.

கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்கு பட்டா என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்காது. பட்டா இல்லை என்பதற்காக குறைவான விலைக்கு கேட்பார்கள். சொத்தினை வாங்கிய பிறகு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தால் பட்டா வீடு தேடி வந்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அப்பிராணிகளுக்கு பட்டா இல்லையா, சொத்தே வேண்டாம் என்று தோன்றும். 

சொத்து வாங்கி விற்கும் போது பத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும். ஆனால் பட்டா மாறாது. அதற்காக பழைய பட்டாவை வைத்துக் கொண்டு யாரும் சொத்து எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடினால் “உள்ளே” போக வேண்டியதுதான். விவரம் தெரியாதவர்களிடம் வேண்டுமானால் சிலர் விளையாடலாம். விவரமானவர்களிடம் விளையாட ஆரம்பித்தால் வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் சொத்து விற்பனைக்கு பட்டா தேவையா இல்லையா என்பதை.

மேற்கண்ட சொத்தின் டாக்குமென்டுகளை எங்களிடம் ஒப்படைத்த பிறகு, ”முடிந்த விலைக்கு விற்றுத்தாருங்கள்,பட்டா பிரச்சினை இருக்கிறது” என்று சோகத்துடன் சொன்னார் அவர். 

அதற்கடுத்த நாட்களில் மேற்படி விஷயத்தைச் சொல்லியதும் அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பிரச்சினையை எப்படி சரி செய்வது என்றுச் சொன்னோம். எங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு, கம்பீரமாய்ச் சென்றார் எங்களின் வாடிக்கையாளர்.

இது போன்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? தயங்க வேண்டாம். அழையுங்கள் எங்களை.

மொபைல் எண் : 096005 77755 


* * *

Wednesday, August 3, 2011

பவர் செல்லுமா செல்லாதா?

சொத்து வாங்கும் போது பத்திரம் என்பதைத் தாண்டி பவர் பத்திரம் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

கே என்பவர் தனது 10 ஏக்கர் சொத்தினை ஜே என்பவருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த ஜே என்பவர் பத்து ஏக்கரில் ஒரு ஏக்கரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மீதமுள்ள 9 ஏக்கரில் அரசாங்கம் 5 ஏக்கரை சாலைக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு எடுத்துக்கொண்ட விபரங்களை பவர் வைத்திருக்கும் ஜே என்பவரிடம் தான் தெரிவிக்கிறது. அதற்குண்டான பலன்களையும் ஜே என்பவர் தான் பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையில் ‘ஜே' என்பவர் 4 ஏக்கரை விற்கும் பொருட்டு, வேறொருவரிடம் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அக்ரீமெண்ட் போட்டு விடுகிறார். இதற்கிடையில் பவர் எழுதிக் கொடுத்த ‘கே' என்பவர் இறந்து விடுகிறார்.

எங்களது கம்பெனி சென்னை ஏஜெண்ட் மேற்படி விபரத்தைச் சொல்லி, மேற்படி எழுதப்பட்ட பவர் இப்போதைக்குச் செல்லுமா இல்லை காலாவதியாகி விட்டதா என்று கேட்டார்.

எங்களிடம் வரும் முன்பே அவர் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் தான் பவர் செல்லுபடியாகும். அவர் இறந்து விட்ட படியால் பவர் செல்லாது என்றும், இனி அந்தச் சொத்து பவர் எழுதிக் கொடுத்தவரின் வாரிசுகளுக்குச் சென்று விடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். சொத்தினைக் கிரயம் வாங்க வேண்டுமென்றால் வாரிசுகளிடம் என் ஓ சி வாங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மேற்படிப் பிரச்சினைக்கு மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் சொல்யூசனா என்றால் கிடையவே கிடையாது. மிக முக்கியமான ஒரு பாயிண்டை விட்டு விட்டார்கள். அது என்ன?

இது போன்ற சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வு கொடுக்கிறது. இவ்வசதியைப் பெற எங்கள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் காப்பிகளுடன், கட்டணத்தையும் செலுத்தினால் லீகல் ஒப்பீனியன் கொடுக்கப்படும். சொத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் லீகல் ஒப்பினியன் பெற்றுத்தரும்.

சரி மேலே இருக்கும் பிரச்சினையில் மறந்து போன பாயிண்ட் என்னவென்றால், சொத்து விற்கும் பொருட்டு அக்ரீமெண்ட் போடும் போது, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த அக்ரீமெண்ட் செல்லுபடியாகும் என்பதுதான் அது. ஆக இந்தச் சொத்தினை வாங்க அக்ரீமெண்ட் போட்டவருக்கு மேற்படிச் சொத்தினை வாங்க முழு உரிமையும் உண்டு.

* * *

Monday, August 1, 2011

மிகக் குறைந்த விலையில் வீட்டு மனை

கோவை அவிநாசி சாலையில், ஏர்போர்ட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நல்ல சாலை வசதியுடன், லீ மெரிடியன் ஹோட்டலின் அருகில் இரண்டு வீட்டு மனைகள், டிடிசிபி அப்ரூவலுடன் விற்பனைக்கு எங்கள் நிறுவனத்திடம் வந்திருக்கிறது.

இரண்டு கிரவுண்டுகள் நிலம். சாலை வசதி. அவினாசி சாலை ஆறு வழிச்சாலையான பிறகு இந்த நிலத்தின் விலை மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலத்தின் அருகில் கல்லூரி இருப்பதால் பத்து அறைகள் கட்டி விட்டாலே நல்ல வாடகை வரும். டாக்குமெண்டுகள் அனைத்தும் கிளியர்.

இந்த நிலத்தினைப் பார்வையிட விரும்புவோர் தனிமெயிலில், தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

எங்களது இமெயில் முகவரி : info@fortunebricks.net / covaimthangavel@gmail.com

Sunday, July 31, 2011

சொத்துக்கள் வாங்க, விற்க, வாடகைக்கு 100% இலவசமான வெப்சைட்


சொத்துக்கள் வாங்க வேண்டுமா, விற்க வேண்டுமா, வாடகைக்கு கொடுக்க வேண்டுமா? வாடகைக்கு வேண்டுமா? அனைத்தும் இலவசமாய் கொடுக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ். ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்தால் உங்களுக்கான தனிப் பேனல் கிடைத்து விடும். அதன் பிறகு இலவசமாய் தேவைகளை பதிவிடலாம். வாங்குபவர்கள், விற்பவர்கள் அனைவரின் விபரமும் இலவசமாய் கிடைக்கும்.மேலதிக விபரத்திற்கு


*  *  *

Wednesday, July 20, 2011

விதவிதமான சாப்பாட்டு மேஜைகள் வரிசை

அன்பு நண்பர்களே,

இதோ உங்களுக்காக விதவிதமான சாப்பாட்டு மேஜைகளின் அணி வரிசை. இப்படியெல்லாம் மேஜைகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றும் வரிசைகள் இவை. 
















Tuesday, June 7, 2011

கோவையில் 160 ஏக்கர் விற்பனைக்கு தயார்

கோவையிலிருந்து அவினாசி செல்லும் சாலையில், 3 கிலோ மீட்டர் உள்பாதையோரம் சதுர வடிவில் இரண்டு பக்கமும் சாலை வசதியுடன் 160 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருக்கிறது. வில்லங்கம் ஏதுமில்லா சொத்து. கோவை பஸ் ஸ்டாண்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இந்த இடம் பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் எங்களை நேரில் அணுகவும்.

இண்டஸ்ட்ரியல் மற்றும் வீடுகட்ட அருமையான இடம். விலையும் மிகவும் குறைந்த விலைதான். மேலும் இடத்தினை பார்வையிடவும், முன் பதிவு செய்து கொள்ளவும்.

அழைக்க : 96005 77755 / 0422 4275976

Sunday, June 5, 2011

சொத்துக்கள் வாங்கினாலும் பிரச்சினைகள் வரும்


சமீபத்தில் 3/5/2011 தினமலரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  50 அடிக்கு மட்டுமே அனுமதி உடைய சாலையினை 60 அடி என்று தவறாகக் காட்டி, அதன்படி எட்டு மாடி அடுக்குக் குடியிருப்பினை பிரபல கட்டுமானக் கம்பனியொன்று கட்டவிருப்பதாகவும், அதற்கு உடந்தையாய் பலரும் இருக்கிறார்கள் என்றும் அந்த அறிவிப்பு சொன்னது.

டிடிசிபி அப்ரூவல் இருக்கிறது. விசாரித்தால் சரியாக இருக்கிறது. மற்ற விசயங்கள் அனைத்துமே மிகச் சரியாய் இருக்கிறது. ஆனால் 40 அடியை 60 அடி என்று காட்டி குடியிருப்பைக் கட்டி விற்ற பிறகு, இவ்விஷயம் வெளியில் தெரிந்து, அரசு நடவடிக்கை எடுத்தால் வீட்டினை வாங்கியவர்களின் கதி என்ன? இது போன்ற ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் சொத்து வாங்கும் போது வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. 

நன்கு படித்தவர்களால் கூட இவ்விஷயங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இருக்கின்ற அவசரகாலத்தில் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்க்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்று அனைவரும் சொல்லுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவதே பெரும் பிரச்சினையாய் இருக்கும் போல இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சொல்ல வேண்டியது கடமை சொல்லி விட்டோம். இதற்கு என்ன தான் வழி என்று கேட்டால் பிரச்சினையே இல்லாத சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதுதான் சரி. மேற்கண்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சொத்துக்களை, எந்த வித சிரமமும் இன்றி வாங்க விரும்புவோருக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நல்ல சேவையை அளிக்கிறது.

பிரச்சினையே இல்லாத சொத்துக்களைக் கண்டுபிடிப்பது எப்படி, யாரிடம் கேட்பது, சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து பிரச்சினைகள் ஏதுமில்லாத சொத்துதானா என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்ற பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வுகளைத் தருகிறது.

சொத்துக்களின் மீதான வில்லங்கங்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் அலசி ஆராய்ந்து தனது முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இவ்வசதி தேவைப்படுவோர் நிறுவனத்தின் இயக்குனரை அணுகலாம்.

மெயில் : info@fortunebricks.net or thangavelmanickam@gmail.com

தொலைபேசி எண் : + 91 96005 77755

Thursday, June 2, 2011

பாதுகாப்பான முதலீடு மூலம் பல மடங்கு வருமானம் பெற

இன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாயை ஏதாவதொரு தொழிலில் முதலீடு செய்து, அதிலிருந்து வருடத்திற்கு வருமானம் என்றால் செலவுகள் போக 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஏனென்றால் தொழில்கள் அவ்வாறு நடந்து வருகின்றன. பாதுகாப்பான முதலீட்டின் மூலம் நல்ல வருமானம் பெற பலர் ஆவல் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த வகையில், 100 மடங்கு பாதுகாப்பான வகையில் முதலீடு செய்யவும், அந்த முதலீடு இருமடங்காக மாறும்படியான, நம்பிக்கையான, முதலீட்டுப் பாதுகாப்பான சர்வீஸ் ஒன்றினை வழங்குகிறது.

எப்படி என்பதை எங்களது கம்பெனி வாடிக்கையாளரின் அனுபவம் மூலமாக, உங்களின் பார்வைக்கு..

எங்களது நிறுவனத்தை சொத்து வாங்கித் தரும்படி அணுகினார் ஒருவர். எதற்காக சொத்து வாங்குகின்றீர்கள் என்று விசாரித்தோம். இன்வெஸ்ட்மெண்ட் பர்போஸ் என்றார். அந்த சமயத்தில் எங்களிடம் 12 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்திருந்தது. அவரிடம் இந்தச் சொத்தினை வாங்கும் படியும், வாங்கிய பிறகு சைட் போட்டு விற்றுத்தருகிறோம் என்ற எங்களது கோரிக்கையை வைத்தோம். உடனே அதற்குண்டான பிராஜக்டைப் போட்டுத்தரும்படி கேட்டார். கையோடு போட்டுக் கொடுத்தோம்.

மேற்கண்ட நிலத்தை அவர் பெயருக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்து கொடுத்தோம். பின்பு அவரிடமிருந்து ஒரு எம்ஓவினைப் போட்டுக்கொண்டு, டிடிசிபி பிளான், அப்ரூவல் இவற்றினை அரசிடமிருந்து முறைப்படி வாங்கினோம். அப்ரூவல் வாங்கிய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திட்டக் கணக்கில், சைட்டுகளை விற்கத் தொடங்கினோம்.

எங்களிடம் ஏற்கனவே வாங்கியவர்களே அனைத்து சைட்டுகளையும் வாங்கிக் கொள்ள, குறிப்பிட்ட காலத்திற்குள், அதாவது நான்கைந்து மாதங்களுக்குள் அனைத்து மனைகளும் விற்றாகி விட அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஒவ்வொரு சைட் விற்பனையின் போதும் கையெழுத்துப் போட வந்த எங்களது வாடிக்கையாளர், தனக்கு கிடைத்த லாபத் தொகையில் எங்களுக்குண்டான பங்கினைக் கொடுத்து விட்டு, மீதித் தொகையுடன் மகிழ்ச்சியோடு சென்றார்.

கடைசி சைட் ரெஜிஸ்டரின் போது, உண்மையில் “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” எனக்கு அதிர்ஷடத்தை தந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்றார். அடுத்த சைட் போட பணத்தோடு காத்திருக்கிறார் எங்களின் வாடிக்கையாளர். ஃபார்ச்சூன் பிரிக்ஸ் அவருக்கான நிலத்தை தேர்வு செய்வதில் இறங்கி இருக்கிறது.

சொத்து மார்க்கெட் மதிப்பின் படி முதலீட்டாளரின் பெயரில் வாங்கப்படுகிறது. சைட் போட்டு விற்பனை செய்ய அவர் எந்த வித விளம்பரச் செலவும் செய்ய வேண்டியதில்லை. அவரின் வேலை சொத்தினை வாங்கி, அவர் பெயரிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது மட்டும்தான். மற்றபடி வேலைகளை “ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.

சைட் போட்டு, விற்பனை செய்வது வரை “ஃபார்ச்சூன் பிரிக்ஸே” கவனித்துக் கொள்ளும். இதை விட பாதுகாப்பான, நல்ல லாபம் தரும் முதலீடு என்பது இக்காலத்தில் சாத்தியமா என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

மேற்கண்ட சர்வீஸ் தேவைப்படுபவர்கள் எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். இதுவரை நாங்கள் செய்த அத்தனை மனை விபரங்களை உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

குறிப்பு : எங்களது ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம், அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பெற்ற பல வருட அனுபவங்கள், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவை வழங்க ஏதுவாக இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு, மிகச் சிறந்த லாபம் கிடைக்க எங்களை அணுகலாம்.

தொடர்பு எண் : 
கோவை எம் தங்கவேல், எக்சிகியூட்டிவ் டைரக்டர், ஃபார்ச்சூன் பிரிக்ஸ்
+ 91 96005 77755 (காலை 10 மணியிலிருந்து இரவு 6 மணி வரைத் தொடர்பு கொள்ளலாம்)

எங்களது இணையதளத்தினை பார்க்க கீழே இருக்கும் படத்தினைச் சொடுக்கவும்.

Tuesday, April 5, 2011

சொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1

அன்பு நண்பர்களே,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் பெயரில் ஏதேனும் ஒரு சொத்து இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு இடத்தில் கையளவு நிலம் வாங்கிப் போட்டால் அது தரும் பெருமித உணர்ச்சியே வேறு. நிலம் வாங்கியவர்களுக்கு அடையாளம் என்று ஒன்று கிடைத்து விடும். இன்றைய கால கட்டத்தில் சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்து வாங்கும் முன்பு அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வருவாய்த் துறை (Revenue Department) கீழ் இருக்கும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தான் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)

பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.

1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================

நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை ஒரு சொத்திற்கான பதிவேடுகள் என்னென்ன என்பதைப் பார்த்தோம். அடுத்து சொத்து வாங்கும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மாதம் மூன்று லட்சம் வருமானம் வரும் பண்ணை வீட்டுடன் கூடிய சொத்து ஒன்றினை விற்பனைக்காக, நிலத்தின் உரிமையாளர் ஃபார்ச்சூன் பிரிக்சிடம் கொடுத்திருக்கிறார். அச்சொத்து வேண்டுவோர் மேலும் விபரங்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸினை அணுகலாம்
தொடர்பு எண் : 0422 4275976

மேலும் விபரங்களுக்கு : http://www.fortunebricks.net

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 21, 2011

கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் கோவையில் வெகு விரைவில் மிகவும் குறைந்த விலையில் வீட்டு மனைகளை விற்பனை செய்யவிருக்கிறது. ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை அவ்வீட்டு மனைகளின் விலைகள் இருக்கும். எதிர்கால வாழ்க்கையினை செம்மையாக, நிம்மதியாக வாழ விரும்புவோர்கள் அனைவருக்கும் தனது சம்பாத்தியத்தினை ஏதாவதொரு நல்ல சொத்தில் முதலீடு செய்தல் நல்லது. அவ்வாறு நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்களின் மூச்சாக கருதி வருகிறது. விரைவில் வீட்டு மனைகளைப் பற்றிய விபரங்களை வெளியிடுகிறோம். மனைகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தமிழ் நாட்டிலே வளர்ந்து வரும் நகரமான கோவையில் தற்போது வாங்கிப் போடும் ஒவ்வொரு செண்ட் நிலமும் நாளை கோடிக்கணக்கில் வளரும் தன்மை கொண்டது என்பதை மறந்து விடாதீர்கள்.

- கோவை எம் தங்கவேல்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் 
http://www.fortunebricks.net

Thursday, January 20, 2011

வீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி

இறுதியாக, வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் வீடுகள் வழங்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.  இந்த திசைக்கு உரிய கடவுள் “வாயு பகவான்”. இவர் அதீத வலிமை கொண்டவர் என்பதால் இவ்வீட்டில் வசிப்பவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடியவர்களாகவும், கடவுளின் பால் மிக்க பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால் இந்த திசையில் வீசக்கூடிய காற்றில் கசப்பு சுவை இருப்பதால், மெலிந்த தேகம் கொண்டவர்கள் வசிக்க ஏதுவானதல்ல என்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அவனின் முகவரியாய் இருக்கிறது. அவனின் சம்பாத்தியங்கள், நிம்மதி, குடும்பத்தின் வளர்ச்சி, வாரிசுகளின் பெருக்கம் போன்றவற்றிற்கும் வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக மனிதனின் நல்லது கெட்டது அனைத்துக்கும் இவ்வீடுகளே பெரும் பங்காற்றி வருகின்றன.வீடு இல்லாதவரை பிச்சைக்காரன் என்று தான் அழைக்க முடியும். அவன் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், புத்திசாலியாய் இருந்தாலும் கூட அவனுக்கென்று ஒரு வீடு இல்லையென்றால் அவன் ஒரு நாடோடி வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு வீட்டினைக் கட்டிக் கொள்ளவோ அல்லது விலைக்கு வாங்கவோ முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு வீடு இல்லாத நபர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. ஒவ்வொருவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறந்த வீடுகளை, மிகக் குறைந்த வட்டியில் விற்பனை செய்கிறோம். விரைவில் வெறும் 25 லட்ச ரூபாய்க்கு, 24 நான்கு தனித் தனியான வீடுகளை 1000 சதுர அடி பரப்பளவில், இரண்டரை செண்ட் நிலத்தில், இரண்டு பெட்ரூம்கள் கொண்டதாக அமைக்க விருக்கிறோம். கோவையின் பிரதான இடமான ஒண்டிப்புதூரில் இந்த வீடுகள் அமையவிருக்கின்றன. இதற்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறோம். வாடகை செலுத்துவது போல, வங்கிக் கடனைச் செலுத்தினால் போதுமானது. வாடகை கொடுத்தால் போல வீடு உங்களுக்கு சொந்தமானதாகி விடும். 

வாசகர்கள் தொடர்ந்து எங்களது நிறுவன தளத்தினையும், எனது இந்த பிளாக்கினையும் படித்து வாருங்கள். அல்லது இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்து விடுங்கள். விபரங்களை விரைவில் அப்லோட் செய்கிறோம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்

Tuesday, January 18, 2011

வீடு பற்றிய தொடர் - 4

இன்றைக்கு தென்கிழக்குத் திசையில் அமைந்த வீடுகள் மற்றும் தென் மேற்குத் திசையில் அமைந்த வீடுகள் பற்றியும் பார்க்கலாம்.

தென்கிழக்குத் திசையில் வீடு அமைவது உசிதமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தென் கிழக்குத் திசையில் உஷ்ணம் அதிகமிருக்கும். இத்திசைக்கு உரியவர் அக்னி பகவான். அக்னியினால் வாழ்வும் உண்டு, வீழ்ச்சியும் உண்டு என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அக்னி உணவு சமைக்கவும் உதவும், அதே வீட்டை எரிக்கவும் செய்யும். இந்த வீடுகளில் வசிப்பவர்கள் மிகுந்த பிடிவாத குணமுடையவர்களாய் இருப்பார்கள். கடின உழைப்பு இருந்தாலும் ஏழ்மை இருக்கும். இந்த வீடு பலர் கை மாறும். வயிறு, சிறு நீரகம் சம்பந்தமான நோய்களுக்கு இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உட்படுவார்கள். ஆகவே தென் கிழக்குத் திசை வீடுகள் வசிக்க உகந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

அடுத்து,  தென் மேற்குத் திசையின் கடவுளாய் இருப்பவர் நிருதி என்பவர் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இவர் அரக்க குணம் கொண்டவராய் இருக்கிறார் என்றும், இவரின் குணமாக செருக்கு, தாழ்ந்த குணம், பிடிவாதம் மற்றும் அகம்பாவம் கொண்டவராய் இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மேற்பட்ட குணங்களும் இருக்குமென்றும், நோய்களுக்கு ஆட்படுவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தலைவர்களாய் மாற துடிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் மேற்கண்ட திசைகளில் இருக்கும் வீடுகள் மனிதர்கள் வசிக்க உகந்ததல்ல என்பது முன்னோர்களின் கருத்து.

- கோவை எம் தங்கவேல்

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

Thursday, January 13, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 2 (அனைவருக்குமான அத்தியாவச தொடர்)

இனி வீடுகளின் வாசல்கள் பற்றிய பலன்களைக் காணலாம். 

கிழக்கு தலைவாசல் :

கிழக்கு திசையிலிருந்து வரும் காற்று, மழை, வெப்பம் போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இத்திசைக்கு உரியவர் இந்திரன் என்றுச் சொல்லுவார்கள். இவர் தேவர்களுக்கு அரசர். இவர் அதிக செல்வமும், கல்வி, தொழில், அமைதி போன்றவற்றை அளிப்பவர் என்றுச் சொல்லுவார்கள். சுகபோகமான, சந்தோஷமான வாழ்க்கை வாழ நல்ல பலன்களைத் தர வல்லது இந்த கிழக்குத் திசையில் தலைவாசல் கொண்ட வீடுகள். அதிகமான சுப பலன்களைத் தரக்கூடிய வலிமை வாய்ந்த கிழக்குத் திசை வீடுகள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

மேற்கு தலைவாசல :

மழைக்கு அதிபதியான வருண பகவானின் திசை என்றும், மனித குலத்தை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் தேவையான மழை பொழிபவர் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.  மேற்குத் திசையில் தலைவாசல் வைத்திருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் விவசாயத்தில் செழிப்பார்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.  மேலும் நல்ல திடமான மனது, தன்மானம், ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வமுடையவர்களாய் இருப்பார்கள். அது மட்டுமின்றி மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று வெப்பமுடையதாய் இருக்கும். சூடு அதிகமானால், உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் உருவாகும். இவ்வகை வீடுகளில் வசிப்போய் சூடு சம்பந்தமான நோய்களுக்கு ஆட்படுவார்கள் என்றும் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

நாளை மற்ற வாசல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஊட்டியில் உள்ள சொத்துக்களை வாங்க விரும்புவோர் கவனத்திற்கு

ஊட்டியில் மிக நல்ல பங்களாக்களும், டீ எஸ்டேட்டுகளும்,நல்ல வருமானம் தரும் காட்டேஜ்ஜுகள், ஹோட்டல்களும் விற்பனைக்கு எங்களிடம் கிளையண்டுகள் கொடுத்திருக்கின்றார்கள். 

எந்த சொத்திலும் எந்த விதமான வில்லங்கங்களும் கிடையாது. மார்கெட்டு விலைக்கு ஏற்ப மிக நல்ல விலையுடன், உடனடிக் கிரயத்திற்கு தயாராய் இருக்கின்றன. இச்சொத்தை பார்வையிட விரும்புவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தர ஆர்வமாயிருக்கின்றோம்.

10 ஏக்கரிலிருந்து 3000 ஏக்கர் வரையிலான டீ எஸ்டேட்டுகள், மிக நல்ல வருமானம் தரக்கூடிய ஹோட்டல்கள், காட்டேஜ்ஜுகள் இருக்கின்றன. தனி பங்களாக்களும் எங்களிடம் இருக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்க.

மேற்படிச் சொத்துக்களை பார்வையிட விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன், தங்களுக்குத் தேவையான அல்லது விரும்பக்கூடிய சொத்துக்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். போன் மூலமும் தொடர்பு கொள்ளவும்.

இமெயில் : info@fortunebricks.net அல்லது info@fortuneenterprise.in அல்லது covaimthangavel@gmail.com

தொலைபேசி எண் : + 91 422 4275976 

மிக்க அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்சூன் பிரிக்ஸ் /  ஃபார்சூச் எண்டர்பிரசைசஸ் / ஃபெமொ மாடலிங் கம்பெனி

எங்களது நிறுவன இணையதளங்கள்
===================================



Wednesday, January 12, 2011

வீடு பற்றிய ஒரு தொடர் - 1

ஒவ்வொருவருக்கும் வீடு என்பதுதான் தாயின் கருவறைக்கு அடுத்த அறை. எத்தனையோ இன்னல்கள், துன்பங்களில் சிக்கி வீடு வருபவர்கள் நிம்மதியாய் தூங்கி துன்பங்களை மறந்து மறு நாள் காலை புத்துணர்ச்சியாய் எழுந்து கொள்ள, தாயின் மடிபோல் விளங்கும் இடம் தான் வீடு. வீட்டினை கோயில் என்று சொல்ல வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று வீடு. இந்த வீடு தான் மனிதனின் அனைத்துக்குமான இடம். ஒருவன் வாழ்வாங்கு வாழ இந்த வீடு தான் அடையாளம். இத்தகைய பெருமை வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கும் வீட்டினைப் பற்றி இனி நாம் கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கலாம். நாம் வசிக்கும் வீடு எப்படிப்பட்டது ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. 

முதலில் வீட்டு மனையின் வடிவம் எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வகமாக இருந்தால் அது வீடு கட்ட தகுந்த நிலம் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட மனையில் வீடு கட்டினால் செல்வம் பெருகும் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அடுத்து, அகலமான பக்கங்கள் சம அளவிலும், நீளப்பக்கங்கள் உள்ளடங்கி இருந்தாலும் அதுவும் சிறந்த மனைதான். அதுவுமன்று அகலமான பக்கங்கள் அகன்றிருந்தால் கூட பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கும் மனைகளைத் தவிர வேறு வடிவம் கொண்ட மனைகளில் வீடு கட்டுவது அவ்வளவு நல்ல பலனைத் தராது என்றுச் சொல்கின்றார்கள்.

இன்றைக்கு மனையின் வடிவம் எவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பார்த்தோம். நாளை வீட்டு வாசல்களைப் பற்றிப் பார்ப்போம்.

சரி, எங்களது ஃபார்சூன் பிரிக்ஸ் ( FORTUNE BRICKS) நிறுவனமும் மற்றொரு பில்டர் நிறுவனமும் இணைந்து கோவையில் இருக்கும் ஒண்டிப்புதூரில் 2.50 செண்ட்டில் மனையும், அதில் 1000 சதுர அடிக்கு இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன், போர்டிகோ வைத்து 24 நான்கு தனித்தனி வீடுகளைக் கட்ட இருக்கிறோம். இதன் விலையாக ரூபாய் 25 லட்ச ரூபாய் நிர்ணயித்து இருக்கிறோம். ஒண்டிப்புதூர் திருச்சி சாலையில் நெசவாளர் காலனி அருகில் தான் மேற்படி வீடுகள் அமைய இருக்கின்றன. விரைவில் வீட்டின் வரைபடம் மற்றும் இதர விபரங்களை வலையேற்றுவோம். வீடு வேண்டுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும். எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 0422 4275976

- கோவை எம் தங்கவேல்
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம்
www.fortunebricks.net