குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம். Show all posts
Showing posts with label நிலம். Show all posts

Friday, July 7, 2017

நிலம் (38) - அன் அப்ரூவ்டு மனைகளை அப்ரூவ்ட் செய்வது எப்படி

தவறுகளுக்குப் பிராயசித்தம் செய்தால் சரியாகி விடும் என்பது இந்து மத வழக்கம். அதை அரசும் செய்கிறது. சட்டத்தினை மீறினால் அரசுக்குப் பணம் கட்டு, சரி செய்து தரலாம் என்கிறது. பெரும்பான்மை மக்களின் நன்மையை உத்தேசித்து இந்த முடிவுக்கு வருவது நல்ல விஷயம் தான். கிராமப்புறங்களில் பஞ்சாயத்தில் ஒரு சில விஷயங்களில் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்படும். அபராதம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகி விடும். என்றாலும் அபராதம் செலுத்தியவர்களுக்கு அது அவமானமாகவே இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு என்ற ஒன்று இல்லாத போது விற்பனை களை கட்டியது. அதை பதிவுத்துறையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது. அரசுக்கு வருமானமும் கொட்டியது. பதிவுத்துறைக்கும் பல வருமானங்கள். பஞ்சாயத்துக்களுக்கு வருமானம் கொட்டியது. ஒரு தவறை அழகாக எந்த வித மனசாட்சியும் இல்லாமல் அனைவரும் சேர்ந்து செய்தார்கள். அது சரியல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. நீதிமன்றம் அதற்கும் ஒரு விதிவிலக்கினை கொடுத்து மனை வரன்முறைப் படுத்த உத்தரவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டது யார் தெரியுமா? பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் விலை குறைவு என்று நினைத்து வாங்கினார்கள் அல்லவா அவர்கள் தான் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விலை குறைவு என்று நினைத்தவர்களுக்கு இப்போது அந்த மனையை வரன்முறைப்படுத்த கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  மனை விற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மனை வாங்கியவர்கள் அப்போதே டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அப்ரூவல் மனைகளை வாங்கி இருந்தால் இந்தச் செலவு இல்லை அல்லவா? பதிவு துறையினருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. மனை விற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை. அரசுக்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை, பஞ்சாயத்தார்களுக்கும் எந்த வித பிரச்சினையும் இல்லை. 

மொத்தப் பிரச்சினையும் மனை வாங்கியவர்களின் தலையில் வந்து விடிந்திருக்கிறது.  படித்துப் படித்துச் சொன்னாலும் எவரும் கேட்கவில்லை. டிடிசிபி மனைகள் விலை அதிகம் என்றால் அந்தளவுக்கு செலவு செய்தால் தான் மனை அப்ரூவல் பெற முடியும் என்பதால் விலை அதிகம். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளுக்கு யாரிடமும் எவரிடமும் அப்ரூவலும் பெற வேண்டியதுமில்லை செலவும் இல்லை. அதனால் தான் விலை குறைத்து விற்கப்பட்டது. படித்தவர்களும் அன் அப்ரூவ்டு மனைகளைத்தான் வாங்கினார்கள். இப்போது அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி அவ்வாறு வாங்கிய அன் அப்ரூவ்டு மனைகளை எப்படி அப்ரூவ்டு செய்வது என்று பார்க்கலாம்.

பத்திரத்தின் நகல்
பட்டா காப்பி
அ பதிவேடு
வில்லங்கச் சான்றிதழ்
மனை வரைபடம் ( சர்வே நம்பர் காட்டப்பட்டிருக்க வேண்டும்)
நிலத்தின் புல வரைபடம்
கிராம புல வரைபடம்
மனைக்குச் செல்லும் பாதை வரைபடம் - சர்வேயரிடம் சான்றிதழ் பெற வேண்டும்
தாசில்தார் என்.ஓ.சி - (விவசாய பூமியாக இருந்தால்)

மேற்கண்ட ஆவணங்களை வைத்து இணையதளத்தில் அப்ளை செய்து கட்டணம் செலுத்தி மேற்கண்ட விண்ணப்பத்தை உள்ளூர் பஞ்சாயத்திலும், உள்ளூர் அல்லது நகர் புற திட்டக்குழுமத்திடமும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் ரெகுலரிஷேசன் மற்றும் அபராத கட்டணங்களை கேட்கும் போது கட்டினால் தனி வீட்டு மனையை சப்டிவிஷன் செய்து அப்ரூவல் வழங்குவார்கள்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் போனில் தொடர்பு கொண்டு நேரில் வந்தால் உதவி செய்யத் தயாராக உள்ளேன். 

Saturday, June 24, 2017

நிலம் (37) - அரசின் புதிய வழிகாட்டி மதிப்பு

நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகள் எனக்குள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி விடுகின்றன. பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் என்று ஒரு விஷயமே இல்லாத போது பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் மனைகள் என்று விற்பனை நடந்த போது எந்த அரசும், அரசு அமைப்பும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு பதிவாளரின் வேலை எந்த ஆவணமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்தல் என்பது சட்டம் என்றாலும் இப்போது பதிவாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றார்கள். ஆவணங்களைக் கேட்கின்றார்கள். அவர்கள் ஏதும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் கேட்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

நில வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு மனைகளை அப்ரூவல் செய்ய தனி அரசு அமைப்புகள் இருக்கின்றன. இருந்த போதிலும் பஞ்சாயத்து அப்ரூவ்ட் என்றுச் சொல்லி வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரசுக்கும் தெரியும், நீதிமன்றங்களுக்கும் தெரியும். எவரும் நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆனால் திடீரென்று பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள் சட்ட விரோதமானவை என்றுச் சொல்லி மனைப்பதிவினை தடுக்கிறது நீதிமன்றம். பதிவகங்களும் பத்திரங்களை பதிவு செய்ய மறுக்கின்றன. இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவைகள் சட்டத்திற்குப் புறம்பானவை தானே? அதை என்ன செய்வது? சட்டத்திற்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் மனைகளை அரசு ஒரு ஆணை பிறப்பித்து அப்ரூவ்ட் மனைகளாக மாற்றலாம் என்கிறது. அதற்கும் பல்வேறு கட்டணங்களை விதித்திருக்கிறது. இந்தக் கட்டணங்களைச் செலுத்துவதை விட அப்ரூவல் செய்திருக்கலாம் என்று இப்போது பலரும் நினைக்கின்றார்கள். அது தண்டனை என்றே கருத வேண்டி இருக்கிறது.

விகடனில் அரசின் அதிரடி அறிவிப்பான வழி காட்டி மதிப்புக் குறைப்பு பற்றிய வெளிவந்திருந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இனி அந்தப் பதிவினைப் படியுங்கள்:
=====================================

தமிழ்நாடு அரசு, வழிகாட்டி மதிப்பினை 33% குறைப்பதாக பிரம்மாண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால்  பொது மக்களுக்கு இமாலயப் பலன் கிடைக்கும் என்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவிப்பின் இறுதியில், இந்த மதிப்புக் குறைவினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஆவணங்களின் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாக உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக ரியல் எஸ்டேட்  துறைக்கு இது மற்றுமொரு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது.

அரசினால் உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும். ஏனென்றால், பொது மக்களுக்கு ஒரு சலுகை வழங்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அதை ஈடுகட்ட அதே துறையில் வரி விதிக்கமாட்டார்கள். வேறு ஆடம்பரப் பொருள்கள், மதுபானங்கள் போன்று சில இனங்கள் மீது கூடுதல் வரி விதித்து அந்த இழப்பை ஈடுகட்டுவார்கள். எனவே, பதிவுக் கட்டணத்தை உடனே குறைத்தாக வேண்டும்.

அடுத்து, கட்டடங்களுக்குப் பொதுப்பணித் துறை மதிப்பில் இருந்து 33% சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள வழிகாட்டி முறை 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது, முதல் மூன்றாண்டுகளுக்கு அல்லது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை, சில சமயத்தில் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். கடந்த 2010-ம் ஆண்டு  வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது  ஓரளவுக்கு நியாயமாக இருந்தது. ஆனால், 2012-ல்  திடீரென்று ஏராளமான இடங்களில் வழிகாட்டி மதிப்பு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த முறை 5 மடங்கு, 10 மடங்கு, 20 மடங்கு ஏன் அதற்கு மேலும் கூட மதிப்பு உயர்த்தப்பட்டது. இதனால் பதிவுத் துறையின் வருமானம் வீழ்ந்தது. நிர்ணயித்த இலக்கில் பாதிகூட தேறவில்லை. 

பல இடங்களில் விற்பனை விலையைவிட, வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டு மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து. நடுத்தர வர்க்கத்தினரின் இல்லக் கனவு தகர்க்கப்பட்டது.

இப்போது மனை வாங்கும் எல்லோருக்கும் சின்ன சாக்லேட் தந்துவிட்டு, வீட்டோடு சொத்து வாங்குபவர்களிடம் பிக் பாக்கெட் அடிக்கப்படு கிறது. பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையின்படி, கட்டடங்களின் மதிப்பு 33% குறைக்கப்படவில்லை. முன்புபோலவே உள்ளது. இந்த அறிவிப்பால், மனை வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்குக் கிடைக்கும் சலுகை ரூ.630 மட்டுமே. இது அகோரப் பசியால் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை.

8.6.17 நிலவரப்படி, முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 1% எனப் பத்திரப் பதிவுச் செலவு மொத்தம் 8 சதவிகிதமாக இருந்தது. இப்போது, முத்திரை கட்டணம் 7% பதிவுக் கட்டணம் 4 சதவிகிதமாக மொத்தம் 11 சதவிகிதமாக அது உயர்ந்துள்ளது.  

இன்றைக்கு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மனையில் கட்டப்பட்ட  ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டோடு சொத்து வாங்குவதாக வைத்துக்கொண்டால், 

சொத்து மதிப்பு -   ரூ.2,00,000

முந்தைய கணக்கீடு :

முத்திரைக் கட்டணம்  -  ரூ. 14,000
பதிவுக் கட்டணம் - ரூ.2,000
மொத்தப் பத்திரப் பதிவுச் செலவு - ரூ.16,000

புதிய கணக்கீடு: 

மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 33% குறைக்கப்பட்டதால், ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட  மனையின் தற்போதைய மதிப்பு ரூ.67,000. அதற்கு 11% பத்திரப் பதிவுச் செலவு ரூ.7,370. ரூ.1 லட்சம் வீட்டுக்கு மொத்தச் செலவு  ரூ.11,000. ஆக மொத்தம்  ரூ.18,370 பத்திரப் பதிவுக்குச் செலவிட வேண்டும். அதாவது, அரசுக்குக் கூடுதல் வருமானம் ரூ.2,370 இதுதான் சலுகை வழங்கும் லட்சணமா? பதிவுத் துறை பற்றிய அறிவிப்பு,  வலது கையால் தந்துவிட்டு இடது கையால் பிடுங்கிக் கொள்வதைப் போலத்தான் உள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கட்டடத்தோடு விற்கப்படும் சொத்துகள்தான் அதிகம். அதுவும் கட்டடங்கள் அனைத்தும் ரூ.1 லட்சம் என மதிப்பிட முடியாது. பல லட்சங்கள், கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கட்டடங்கள்கூட இருக்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பால், சொத்து வாங்குபவர்களின் செலவுதான் அதிகரிக்குமே தவிர குறையாது. 

மேலும், மனையின் மதிப்பு 33% குறைக்கப்படுவ தால், சொத்தின் மதிப்புக் குறையும். இதனால், கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கும். உதாரணமாக,   ஒரு மனையை ஒருவர் சில மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குக் குறைவாக அவர் அந்த மனையை விற்கமாட்டார்.  ஆனால், இப்போது பத்திரத்தில் காட்டப்போவது ரூ.67 லட்சம் மட்டுமே. ஆக, ரூ.1 கோடி கைமாறும் நிலையில் ரூ.33 லட்சம் கறுப்புப் பணமாக மாற வாய்ப்புள்ளது.  

ஆகமொத்தத்தில், இந்த அறிவிப்பினால்,  சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை. யாரை ஏமாற்ற இந்த 33% குறைப்பு அறிவிப்பு என்று தெரியவில்லை. எல்லாம் அந்த ‘சாமி’க்கே வெளிச்சம்!

Posted Date : 06:00 (18/06/2017)
குறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமிழக அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்!
- ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

நன்றி : நாணயம் விகடன்

Thursday, March 30, 2017

நிலம் (36) - பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது எப்படி

மரத்தை ரம்பம் போட்டு அறுத்தா வெட்டி போடலாம். இவரு மரத்தை எப்படி வெட்டுவது என்று சொல்லித்தரப் போகின்றாரா? என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மெனக்கெட்டு எழுதுகிறேன். யாரோ ஒருவருக்காவது உபயோகப்பட்டால் அதை விட சந்தோஷம் வேறில்லை. இந்தத் தலைப்பின் வீரியத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுத்தான் புரிய வரும்.

சென்னைப் பக்கம் ஒரு நகரத்தில் எனக்குத் தெரிந்த நல்ல வசதியானவர் புதியதாக காம்ப்ளக்ஸ் ஒன்றினை வாங்கினார். அதைச் சுத்தப்படுத்தி புதிய பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார். பெயிண்டர் பெயிண்ட் அடிக்கும் போது காம்பளக்சின் சுவற்றில் சாலையோரமிருந்த மரத்திலிருந்து இரு சிறிய கிளைகள் முட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. பெயிண்டர் அருவாளால் இரண்டடிக்கு வெட்டிப் போட்டு விட்டு பெயிண்ட் அடித்திருக்கிறார். வெட்டிப்போட்ட கிளையை எதிரில் இருந்த ஹோட்டல்காரர் எடுத்து எரித்து விட்டார். பெயிண்ட் அடித்து முடித்து விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் விஏஓவிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தாசில்தார் எப்படி முன் அனுமதி பெறாமல் கிளையை வெட்டினீர்கள் என்றும் எஃப்.ஐ.ஆர் போடப் போகின்றோம் என்றுச் சொல்ல இவர் ஒன்றும் புரியாமல், நானெங்கே வெட்டினேன் என்று குழம்பி விசாரித்திருக்கிறார். மேற்படி சம்பவம் தெரிய வர இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

சாலையோர மரம் நம் கட்டிடத்தின் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை பெயிண்ட் அடிக்க இரண்டடிக்கு வெட்டினால் அது பிரச்சினையாகி உள்ளதே என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். காம்ப்ளக்ஸின் எதிரில் இருந்த ஆட்டோகாரர்கள் அதை போட்டோ எடுத்து ஆர்.டி.ஓ வரை கம்ப்ளைண்ட் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தாசில்தான் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். இதற்கிடையில் அந்தப் பகுதி கவுன்சிலர் வேறு வீட்டுக்கு வந்து இவரை மிரட்டி இருக்கிறார். மரம் வெட்ட வேண்டுமெனில் என்னிடம் பர்மிஷன் கேட்டு அல்லவா வெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல இவர் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என எம்மை அணுகினார். அதைத் தொடர்ந்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சரி செய்து கொடுத்தோம்

இப்போது மரத்தினை வெட்டினால் என்ன ஆகும் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே?

நிலம் உங்களுடையதாகவே இருக்கலாம். அதில் உள்ள மரமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அதை வெட்ட வேண்டுமெனில் கட்டிங்க் ஆர்டர் பெற வேண்டும் என்பது விதி. யாரும் புகார் கொடுக்காதவரைக்கும் பிரச்சினையில்லை. புகார் கொடுத்தால் வம்புதான் வரும். பூமியில் வசிக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும், வரி கட்ட வேண்டும். பூமிக்கு கீழ் எது இருந்தாலும் அது அரசுக்கு மட்டுமே சொந்தம். புரிகிறதா உங்களுக்கு இப்போது? 

மனிதன் இந்தப் பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் உண்மை. பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைக்கும் பிச்சைப் பணத்தைச் சேர்த்து வைத்தான் என்றாலும் அதற்கும் வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் நிதர்சனம். இதுதான் உண்மை.

உலகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவன் மனிதனே. எவரும் புதிதாக வந்து இப்படியான கட்டமைப்பினை உருவாக்கவில்லை. எல்லா பிரச்சினைக்கும் மனிதனே காரணம். அவனே கேள்வி, அவனே பதில்.

Wednesday, February 22, 2017

நிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு

சமீபத்தில் எனது நண்பரின் மூலமாக ஒரு நபர் லீகல் ஒப்பீனியனுக்காக அணுகினார். எளியவர். இருக்க ஒரு வீடு வேண்டுமென்பதற்காகப் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்து வைத்து சமீபத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் கட்ட நிலம் வாங்கிட முனைந்திருக்கிறார்.

நில உரிமையாளருக்கு கடன் பிரச்சினை இருப்பதால் மார்கெட் விலையில் இருந்து சல்லிசாக கொடுக்க முன் வந்திருப்பதாக புரோக்கர் மூலம் தெரிய வந்து அந்த நிலத்தை வாங்கிட அட்வான்ஸ் போட்டு விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஆவணங்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தன. இருந்தாலும் மனதுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. என்னவென்று அறியமுடியவில்லை. ஒரு வேலை நிமித்தமாக ஏர்போர்ட் வரையிலும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஏர்போர்ட் பகுதி உப்பிலிபாளையம் கிராமத்தில் வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள். பளிச்சென்று எனக்குள் வெளிச்சமடிக்க வீடு வந்து சேர்ந்து அவசர அவசரமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட சர்வே எண்களைப் பார்த்தேன். அதே தான். அவரை வரச்சொல்லி நிலம் கையகப்படுத்தும் அரசாணையைக் கொடுத்து அட்வான்ஸை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். ஆள் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் கூடுதலாகவே கட்டணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்த ஆர்டர் இந்த வருட ஆரம்பித்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

சமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு உப்பிலிபாளையம் கிராமத்தில் கையகப்படுத்திய சர்வே எண்களின் விபரம் கீழே இருக்கிறது. பயனடைந்து கொள்ளுங்கள்.

கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு வட்டம், உப்பிலிபாளையம் கிராமத்தில் சர்வே எண்கள்: 

321/3, 
322/1பி, 3பி,
333/2பி பார்ட்,
334/2பி பார்ட்,
332/2 பார்ட்,
332/3 பார்ட்,
332/4ஏ பார்ட்,
335/1 பார்ட்,
337/4 பார்ட்

ஆகிய பழைய சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 22 செண்ட் அளவு கொண்ட நிலம். இதன் தற்போதைய டி.எஸ். நம்பர், உரிமையாளர்களின் பெயர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும். 

Thursday, December 22, 2016

நிலம் (34) - நத்தம் பூமி அரசுக்குச் சொந்தமா?

பின் மாலைபொழுதின் ஒரு நாளில் மதுரையிலிருந்து பிளாக்கின் வாசகர் அழைத்திருந்தார். அவரின் பாட்டியும், தொடர்ந்து அவர்கள் குடும்பமும் நத்தம் பூமியில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருவதாகவும், பட்டா கோரி விண்ணப்பித்த போது அரசு அலுவலர்கள் அவர்களை இது அரசு நிலம் என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் எங்களுக்கு அந்த நிலத்தில் பாத்தியதை உரிமை உள்ளதா? என்று கேட்டிருந்தார்.

அவர்கள் எத்தனை ஆண்டுகளாக குடியிருக்கின்றார்கள்? வரி விதித்து கட்டப்பட்டிருக்கிறதா? மின்சார இணைப்பு இருக்கிறதா என்ற பல கேள்விகளைக் கேட்டேன். எல்லாவற்றுக்கும் மிகச் சரியாக பதில் சொன்னார்.

அவரிடத்தில் சொன்னேன் ”அந்த இடம் உங்களுக்கே சொந்தம்” என. காரணம் கேட்டார். இதோ காரணம் உங்களுக்காக. 

பெரும்பான்மையானோர் நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளும் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

ஒரு கிராமத்தில் நத்தம் பூமி என்பது வீட்டு மனைகள் அல்லது வீடுகள் இருக்கும் பகுதியைக் குறிப்பது. நத்தம் புறம்போக்கு என்றாலும் நத்தம் என்றாலும் ஒன்று தான். நத்தம் என்ற வார்த்தை வந்து விட்டாலோ அது அரசின் நிலம் அல்ல. கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் இருக்கும் பகுதியைக் குறிக்கும் சொல் ஆகும். ஒரு சிலர் இது ஏழைகளுக்கான பூமி ஆகவே குடியிருப்போர் இடத்தைக் காலி செய்து கொடுக்கவும் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அது உண்மையல்ல.

ஊராட்சி  வரி மற்றும் குடியிருந்ததற்கான ஆவணங்கள் இருந்தால் அந்த நிலம் அங்கு வசிப்பவருக்கே சொந்தம். 

ஆகவே நண்பர்களே, நத்தம் நிலம் என்றால் அரசு நிலம் என்று கருத வேண்டாம்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவையென்றால் என்னை அணுகலாம். 

Friday, October 14, 2016

நிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது

1900 ஆண்டுகளுக்கு முன்னாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நிலச் சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு யாரோ ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தார். பிறர் எல்லாம் விவசாயக்கூலிகளாக மட்டுமே இருக்க முடிந்தது. 

நிலச்சுவான்தாரர்கள் வைத்ததே சட்டம். ஊரே அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தது. அவர்களை எதிர்த்தவர்கள் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இது பற்றிய பல்வேறு புனைவுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். காந்தியின் சீடராக இருந்தவர் ஆச்சாரியார் வினோபா பாவே. அவர்கள் காந்தீயமார்க்கத்தை முன்னிறுத்தி சமுதாயத்தில் நிலவும் ஏழை பணக்கார தாழ்வுகளை சரி செய்திட தன் இயல்புகொண்ட காந்திய இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு பூமி தான யக்ஞ இயக்கத்தை துவங்கினார்.

பெரிய நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை நன்கொடையாகப் பெற்று ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமென்ற நோக்கில் பூமி தான இயக்கத்தை ஆச்சாரியார் வினோபா பாவே அவர் 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் பல ஏக்கர் நிலங்களை பூமி தான இயக்கத்துக்கு நன்கொடையாக கொடுத்தனர். 

அவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அளந்து அறுதியிடப்பட்டு தாசில்தாரால் பூமி தான இயக்கத்தின் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக நன்கொடையாகப் பெறப்பட்டவை சுமார் 28126 ஏக்கர். தானம் கொடுக்கப்பட்டவை சுமார் 20,290 ஏக்கர். மீதமுள்ளவை சுமார் 7800 ஏக்கர் நிலங்கள் (ஆதாரம் அரசாணை எண்.144/2016). மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் பொசிசன் எடுக்க இயலாமல் இருக்கின்றன. 

இந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. பூமி தான இயக்கம் பெயரில் பட்டா வழங்கப்பட்ட பூமிகளை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது. தொடர்ந்து வாரிசுகள் மட்டுமே அனுபவித்து வரலாம். இந்த வகை நிலங்களை வேறு எவரும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழக மெங்கும் பூமி தான இயக்க பூமிகள் இருக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களினால் நில வருவாய் துறையினரால் சரி வர பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பூமிகளின் நிலங்களின் விவரங்களை கையாள முடியவில்லை என்பதால் இன்றைக்கு அரசு தனியாக கமிஷனரேட் லேண்ட் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பூமிதான இயக்க பூமியினைப் பராமரித்து வருகின்றது. ஆகவே பூமிகள் வாங்குவோர் பழைய ஆவணங்களை பெற்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மேலதிக விபரம் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்.




Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.

நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள்

அன் அப்ரூவ்ட் மனைகளைக் கிரையம் செய்ய கோர்ட் தடை உத்தரவைப் போட்டிருக்கிறது என்பதற்காக அன் அப்ரூவ்ட் சைட் விற்போரும், சைட்டுகள் வாங்கியவர்களும் கோபத்தில் இருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். 

எல்பிஏ, சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன? அன் அப்ரூவ்ட் என்றாலே இல்லீகல் என்று தானே அர்த்தம் வரும்? அந்த மனைகளை யார் வாங்கச் சொன்னது? அரசா அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்கச் சொன்னது? வீட்டு மனைகளை விற்பதற்கு தகுந்த அமைப்பில் விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற்று விற்கச் சொல்கிறது அரசு. ஆனால் ஒரு சிலரின் ஆசைக்காக அரசிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பூமியைச் சமப்படுத்தி சாலை போட்டு கல்லை நட்டு விட்டு மனை என்றுச் சொல்லி விற்க ஆரம்பித்தவுடன் சல்லிசாகக் கிடைக்கிறதே என்றுச் சொல்லித்தானே அனைவரும் வாங்கினார்கள். அன் அப்ரூவ்ட் மனைகளை விற்பதே தவறு. அதை விற்று விட்டு அரசுக்கும், கோர்ட் உத்தரவிற்கு எதிராகப் போராடுவது எந்த விதத்தில் சரி? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். மக்கள் திருந்தாத வரைக்கும் இதைப் போன்ற பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

என்னிடம் ஒரு பிரச்சினை வந்தது. பஞ்சாயத்து போர்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றுச் சொல்லி ஒருவர் வீட்டு மனை ஒன்றினை வாங்கி இருக்கிறார். சில வருடங்கள் சென்றவுடன் காசு சேர்த்துக் கொண்டு அந்த மனையில் வீடு கட்டுவதற்காக சென்று சுத்தப்படுத்தி பூஜை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வேப்பங்குச்சியில் பல் துலக்கியபடி ஒருவர் அங்கு வந்திருக்கின்றார். ”இங்கு என்ன செய்கின்றீர்கள்?” என்று வெகு சாதாரணமாக கேட்டிருக்கிறார். உடனே பூஜை போட்டுக் கொண்டிருந்தவர் ”இது என் வீட்டு மனை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ யார் அதைக் கேட்க” என்று ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டாராம்.

போர் போட்டிருக்கின்றார்கள். மின் இணைப்புப் பெற்றிருக்கின்றார். வீடு கட்ட ஆரம்பித்து முழுவதையும் கட்டி முடித்து கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஒருவர் வந்தார் அல்லவா அவர் அங்கு மீண்டும் வந்திருக்கிறார்.

வேப்பங்குச்சிக்காரர் மெதுவாக ஆவணங்களை எடுத்து அவரிடம் காட்டி வீடு கட்டியவரின் இடம் அதே பகுதியில் வேறு இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். ”இது என் இடம், மரியாதையாக வெளியே சென்று விடு இல்லையென்றால் நில அபகரிப்புப் புகாரில் உள்ளே தூக்கிப் போட்டு விடுவேன்” என்றுச் சொல்லி இருக்கிறார்.  இப்போது அந்த வீடு வேப்பங்குச்சிக்காரருக்குச் சொந்தம். ஆள் எப்படி என்று பார்த்தீர்களா?  பூஜை போட்டவுடன் தடுக்கச் சென்றவரிடம் எகத்தாளம் பேசினால் இப்படித்தான் ஆகும்.

இந்தத் தவறு எப்படி நடந்திருக்கிறது என்றால் அன் அப்ரூவ்ட் மனைகள் விற்பவர்கள் பிளானைப் போட்டு மார்கெட் செய்வார்கள். ஓரளவிற்கு மனைகள் விற்றவுடன் மீதமிருக்கும் மனைகளை விற்க முடியவில்லை என்றால் அதையெல்லாம் ஒன்றாக இணைத்து பூமியாகவோ அல்லது வேறு மனைகளாகவோ மாற்றி விடுவார்கள். ஒருவர் 10 செண்ட் மனை வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றவாறு கற்களைப் பிடுங்கி விட்டு புது மனைகளை உருவாக்கி விடுவார்கள். ஆனால் அரசு அனுமதி பெற்ற மனைகளை அப்படிச் செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பொது வழிச் சாலைகளைக் கூட தானம் எழுதிக் கொடுக்க மாட்டார்கள். மனைகளில் விடப்பட்டிருக்கும் பொது இடத்தினைக் கூட விட மாட்டார்கள். பொது இடத்தில் குழந்தைகள் விளையாட உபகரணங்களை அமைத்திருப்பார்கள். அதை அடுத்த மனை ஆரம்பிக்கும் போது பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் புதிய மனையில் பதித்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதுமட்டுமில்லை மின் கம்பங்களைக் கூட விடமாட்டார்கள். இப்படி ஒரு குரூப் இருக்கிறது. ஆனால் இந்த அன் அப்ரூவ்ட் மனைகளை விற்போரில் பலர் இந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்கள். சொல்லித்தான் விற்பார்கள். 

கோவையில் ஓர் இடத்தில் அன் அப்ரூவ்ட் மனைப் பிரிவில் ஒரு சில மனைகள் விற்றவுடன் மீதமுள்ள மனைகளை விற்க முடியவில்லை. சாலையையும் சேர்த்து வேறொருவருக்கு விற்று விட்டார்கள். மனைக்குப் பாதை கேட்டு இப்போது அரசு அலுவலங்களில் விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மனைகளை வாங்கியோரில் பலர். இதை எப்படிச் சரிசெய்வது? விதி! ஆகவே கவனம் கொள்ளுங்கள்.

அன் அப்ரூவ்ட் என்பது அப்ரூவ்ட் என்பதின் எதிர்ச்சொல் தானே?

சரி அந்தப் பிரச்சினைக்கு வருவோம். வீடு கட்டியவர் மனை உரிமையாளர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று காலில் விழுந்திருக்கிறார். வேறு வழி? ஒரு வழியாக இருவரும் பேசி முடிவெடுத்துக் கிரையம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றார்கள். அடுத்த நாள் அன் அப்ரூவ்ட் மனைகளையோ அல்லது அதில் கட்டப்பட்ட வீடுகளையோ கிரையம் செய்ய தடை விதித்து கோர்ட் உத்தரவு போட உள்ளதும் போச்சே என்று நொந்து கொண்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் என்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். போனில் விசாரித்து விட்டு என்னிடம் வந்தார். விஷயம் முழுவதையும் கேட்டுக் கொண்டேன். இந்தப் பிரச்சினைக்கு வழி என்ன? ஏதும் இருக்கிறதா? என்று அவரும் பலரிடம் கேட்டாராம். பதிவாளரிடமும் கேட்டிருக்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை, பணம் செலவானாலும் பரவாயில்லை எனக்கு பிரச்சினை முடிய வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது கோர்ட் உத்தரவிற்கு எதிராகவோ இல்லாமல் வெகு சரியான துல்லியமான சொல்யூசன் ஒன்றினை அவருக்குப் பரிந்துரைத்தேன். ”இது மட்டும் நீங்கள் சொல்லியபடி சரியானால் எங்கள் குடும்ப தெய்வமே நீங்கள் தான் சார்” என்றுச் சொல்லி கண்ணீரை உகுத்தார்.

இது அவர் என்னிடம் கொண்டு வந்த அடுத்தப் பிரச்சினை.

எழுந்து கொண்ட அவரை உட்கார வைத்தேன்.

”சார், உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மனம் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. அதற்காக யார் மூலமாகவோ என்னைப் பார்க்க வந்திருக்கின்றீர்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைத் தீர்வாகச் சொல்லி இருக்கிறேன். விஷயம் அவ்வளவுதான். உங்கள் பிரச்சினையின் தீர்வுக்கு நீங்களே காரணம். பிர்ச்சினை தீர்ந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதே. இதில் நானெங்கே வந்தேன்? கடவுள் எங்கே வந்தார்?”

”இப்படித்தான், ஏதாவது பிரச்சினைகளில் இருப்போர் சாமியார்களிடம் செல்வார்கள். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். சாமியார் புன்னகையுடன் ஏதோ அருள்வாக்குச் சொல்வது போல, ”எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே, உனக்காகப் பூஜிக்கிறேன்” என்பார். பிரச்சினையில் சிக்கி இருப்போரின் மனம் அதிலிருந்து விடுபட துடித்துக் கொண்டிருக்கும். அதுவே அதற்கான தீர்வினைச் சொல்லியும் தரும். அதற்குள் மனிதன் யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று அலைய ஆரம்பித்து விடுகின்றான். சாமியாரிடம் சென்றவுடன் பிரச்சினை தீர்ந்தது என்று அவரைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்து விடுகின்றார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு மனதுக்குள்ளே இருக்கிறது. யோசித்தால் கிடைத்து விடும். அப்படியும் தீரவில்லை என்றால் அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் மனமே அதற்குரிய ஆட்களை தன்னிடத்தில் இழுக்கும். எப்படியாவது தீர்வு கிடைத்து விடும். அதை விட்டு விட்டு சாமி கடவுள் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள், போய் வேலையைப் பாருங்கள்” என்றுச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

தெளிவடைந்ததைப் போலத் தெரிந்தது. நன்றாக இருந்தால் போதும். வேறென்ன வேண்டும்?


நிலம் (29) - கடைகள் வாங்கும் போது

இணையதளத்தினைப் படித்து வரும் வாசகர் ஒருவர் அவர் வாங்கப் போகும் சொத்தின் விபரத்தைக் குறித்து பல கேள்விகளைக் கேட்டார். பெரும்பான்மையானோருக்கு போனிலேயே எல்லாமும் தெரிந்து விட வேண்டும் என நினைப்பு இருக்கிறது. ஆனால் அது சொத்து விஷயத்தில் படு பயங்கர பாதகங்களைக் கொண்டு வந்து விடும் என்பது பிரச்சினையில் சிக்கினால் தான் புரியும். படித்தவர்கள் தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள்.

முடிந்த வரை விளக்கினேன். போனில் எவ்வளவு நேரம் தான் பேசமுடியும். விட்டால் நாள் முழுக்க பேசுவார் போல. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்ததால் பிறிதொரு நாள் கூப்பிடுங்கள் பேசலாம் என்றுச் சொல்லி முடித்து விட்டேன்.

அடுத்த இரண்டாவது நாள் மீண்டும் அழைத்து அதே ராமாயணத்தை ஆரம்பித்தார். அவர் சொத்து வாங்குகிறார். சொத்து பற்றிய ஓரலான விஷயங்களை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் பேசுவது?  சொத்து பற்றிய ஆவணங்களை நேரில் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். படித்து விட்டு அதன்பிறகு பேசலாம் என்றுச் சொன்னேன். உங்கள் கட்டணம் எவ்வளவு என்று ஆரம்பித்தார். சொன்னேன். அரண்டு போய் விட்டார்.”சார் என்னால் அவ்வளவு எல்லாம் முடியாது” என்று பேச ஆரம்பித்தார். என் வேலைக்கான சம்பளத்தை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்றும் வேறு இடத்தில் ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி மறுத்து விட்டேன்.

விஷயம் முடிந்தது என்று நினைத்திருந்தேன். அடுத்த பத்தாவது நாளில் மீண்டும் அழைக்க ஆரம்பித்தார். ”சார் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் தான் ஆவணங்களை தரவு செய்து தர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். 

முன்பு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ஆய்வு முடிந்தவுடன் கட்டணம் பெறுவேன். இப்போது பலரும் சொல்லி வைத்தாற்போல ஆய்வு முடிந்து ஓகே சொன்னவுடன் காணாமல் போய் விடுகின்றார்கள். இல்லையென்றால் பணம் கொடுப்பதற்கு பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஆவணங்களுடன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் ஆய்வுக்கான வேலையைத் தொடர்வது என்று முடிவு கட்டியதால் என்னால் அடுத்த பல வேலைகளைச் செய்ய முடிகிறது. எவ்வளவு நாள் தான் நானும் சும்மாவே வேலை செய்வது? 

அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆய்வு முடிந்ததும் கட்டணம் தருகிறேன் என்றும் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார். மறுத்து விட்டேன். 

இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் ஒரு நாள் நேரில் வந்து அனைத்து ஆவணங்களையும் என்னிடம் கொடுத்தார். கேட்ட கட்டணத்தையும் கொடுத்தார். ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அவரை என் முன்னால் அமர வைத்துக் கொண்டே பத்தாவது நிமிடத்தில் இந்த இடத்தினை வாங்க வேண்டாம் என்றுச் சொன்னேன். 

சார் என்றுச் சொல்லி பதட்டத்தில் எழுந்து விட்டார். மார்க்கெட் விலையை விட முக்கால் விலை என்று புரோக்கர் சொல்லியவுடன் ஆள் ஆசைப்பட்டு பெரும் தொகையினை அட்வான்சாகக் கொடுத்து பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினைப் போட்டு லீகல் பார்த்திருக்கிறார். அந்த சொத்தில் எந்த வித வில்லங்கமும் இல்லை  என அவர் வைத்திருந்த லீகல் ஒப்பீனியனும் சொன்னது. 

அவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. காரணத்தைக் கேட்டார். அவரின் முன்பு என்னிடம் இருந்த ஆவணத்தை எடுத்துப் போட்டேன். ”இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் கிடைக்கிறது? படுபயங்கர மோசடியில் அல்லவா மாட்டிக் கொண்டேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் இருக்கும் வியாபாரக் கடை அது. சல்லிசான விலையில் வருகிறது என்றவுடன் ஆள் ஆசைப்பட்டு விட்டார். கடையின் உரிமையாளர் எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமெரிக்கா சென்று அவர் மகனுடன் தங்கப்போவதாகவும், அதனால் மார்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பதாகவும் புரோக்கர் சொல்லி இருக்கிறார். 

அந்தக் கடை இருக்கும் இடத்தில் சாலையினை அகலப்படுத்துவதற்காக நோட்டிபிகேசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நோட்டிபிகேசனில் இந்தக் கடையின் முக்கால் பாகம் சென்று விடும். அதாவது சுவர் மட்டுமே மிஞ்சும். நோட்டிபிகேசன் அறிவித்த நாளுக்கு அடுத்த வாரத்தில் தான் நம்ம ஆள் அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். சொத்தின் உரிமையாளர் அமெரிக்காவும் போகவில்லை ஆஃப்ரிக்காவும் போகவில்லை. புரோக்கருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது. 

”கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிட முடியுமா சார்?” என்று கேட்டார். அதை எப்படிப் பெறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

புரோக்கரை அழைத்துக் கொண்டு சொத்தின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நான் அவரிடம் கொடுத்த நோட்டிபிகேசன் நகலையும், புகார் ஒன்றினையும் அவரிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றார். அடுத்த அரை மணி நேரத்தில் கொடுத்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டு அக்ரிமெண்ட் காப்பியை அவர் முன்னால் கிழித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றுச் சொன்னார். புரோக்கர் நடுங்கிப் போய் விட்டாராம்.

இந்த விஷயம் எப்படித் தெரியும்? என்று புரோக்கர் அவரிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றுச் சொன்னார். அவரின் நன்றியைத் தெரிவிப்பதற்கு மேலும் அதிக கட்டணம் தருவதாகச் சொன்னார். என் வேலைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டேன். போதும் என்றுச் சொல்லி மறுத்து விட்டேன்.

ஆகவே கடைகள் வாங்கும் போது சாலை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றும், ஏதேனும் நோட்டிபிகேசன் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். 

இப்படிப்பட்ட பிரச்சினையில் சிக்கி இருந்தால் தகுந்த ஆவணங்களை அனுப்பி வையுங்கள். மிகச் சரியான ஆலோசனையைத் தருகிறேன். என் முகவரி கேட்டால் கிடைக்கும். போனில் ஆலோசனை கேட்க வேண்டாம். அது துல்லியமாக இருக்க இயலாது.

Sunday, September 11, 2016

நிலம் (28) - அன் அப்ரூவ்ட் சைட் வீடுகள் கிரையம் செய்ய முடியாது

சென்னை யானை ராஜேந்திரன் என்பவர் கோர்ட்டில் பொது நல வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார். இதன் விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் மகாதேவன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது செப்டம்பர் 10ம் தேதி முக்கியமான இடைக்காலத் தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.

மனைப்பிரிவு செய்து அனுமதியளிக்கப்படாத மனைகளை, அம்மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திரப்பதிவுத் துறை இனிமேல் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அது.


(  நீதிபதி எஸ்.கே.கவுல் )

ஒரு பத்திரப்பதிவாளரின் கடமையாக சொல்லப்படுவது என்னவென்றால் தகுந்த மூலப்பத்திரங்களுடன் இருந்தால் ஆவணப்பதிவினை செய்து தர வேண்டும் என்பதுதான். அவர் அரசுக்கு வருமானம் வருவதைத்தான் உறுதி செய்வார். லீகல் பார்ப்பது, பத்திரங்கள் சரியாக எழுதப்பட்டிக்கிறதா என்று பார்ப்பது எல்லாம் அவரின் வேலை அல்ல என்பதை சொத்துக்கள் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்க.

சமீபத்தில் என்னிடம் ஒருவர் ரெஜிஸ்டரே பதிவு செய்து விட்டார் அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்று கேட்டார். விபரம் தெரியாத காரணத்தால் இப்படிப்பட்ட கேள்விகளைப் பலரும் கேட்கின்றார்கள். இது அவர்களின் அறியாமை.

இனிமேல் அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகள் விற்பனை செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் விற்பனை செய்ய முடியாது. பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக். பஞ்சாயத்து போர்டு 2000 சதுரடிக்குள் கட்டப்படும் வீட்டு பிளானை அப்ரூவல் செய்யலாம் என்று இருந்தது. அது தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவது. ஆனால் அது அப்ரூவ்ட் செய்யப்பட்ட வீட்டுமனை ஆகாது என்பதையும் நினைவில் கொள்க.

ஆகவே நண்பர்களே, அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை இனி நீங்கள் விரும்பினாலும் வாங்க முடியாது. கோர்ட் அதற்கு செக் வைத்து விட்டது. இது போன்ற வீட்டு மனைகளை விற்போர் இனி மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு முன்பு மாதத் தவணையில் பணம் கட்டி இருப்போர் உடனடியாக தாங்கள் கட்டிய பணத்தினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். 

பணம் கிடைக்காது என்றால் இதற்கு இன்னொரு வழியும் உண்டு. அது பற்றி பிறிதொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு சொல்ல வந்த விஷயம் அவ்வளவுதான்.

செய்தி  ஆதாரம்:

தி ஹிந்து பத்திரிக்கை

The Madras High Court on Friday issued an order banning registration of plots and houses in unapproved housing layouts as well as conversion of agricultural land for non-agricultural use in an unplanned manner in Tamil Nadu.
“We direct that no registering authority in the State shall register any sale deed in respect of any plot in unauthorised layout or any flat/ building constructed on such plots,” said the First Bench of Chief Justice S.K. Kaul and Justice R. Mahadevan.
The Bench said the order was necessary to save the ecology and prevent flooding while simultaneously giving time to the State government to come up with legislative changes.
It then directed the Inspector General of Registration to circulate the order to all registering authorities (Sub-Registrars) in the State.
The interim directions were passed on a public interest litigation petition filed by advocate ‘Elephant’ G. Rajendran seeking a direction to the government to forebear the local administration from giving approval or permission to convert agricultural lands into housing layouts and forebear the Registration Department from registering such property.
The Bench expressed its concern over the absence of any provision for regulating conversion of agricultural lands that were uncultivated for more than three years.

Friday, July 22, 2016

நிலம் (27) - சப்டிவிஷன்கள் செய்யப்படும் போது ஆவணங்கள் மாற்றப்படுகின்றன

அமெரிக்காவில் வசிக்கும் நண்பரொருவரின் நிலத்தின் பட்டாவையும், எஃப்.எம்.பி என்று அழைக்கப்படும் புல வரைபட நகலையும் பெற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்காக பலமுறை அலைந்து நேற்று மாலை பெற்றேன்.

நண்பர் கிரையம் பெற்றபோது பெற்றிருந்த புலவரைபடமும், பட்டாவும்  புதிய சப்டிவிஷன் செய்யும் போது மாற்றப்பட்டிருந்தன. அந்த சப்டிவிஷன்களுக்கான புதிய பட்டாவும் வழங்கப்பட்டிருந்தன. பட்டாவைப் பெற்றுப் பார்க்கும் போது பல்வேறு புதிய சர்வே எண்களுடன் புதிய நபர்களின் பெயரும் இருந்தன. அந்த பட்டாவில் நண்பரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது ஆனால் அளவீடு குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

இனி அந்தப்பட்டா எப்படி மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும். இப்போதெல்லாம் பத்திரம் பதிவு செய்யும் போது பட்டாவையும் கேட்கின்றார்கள். பத்திரத்தில் சொத்து இருக்கிறது என்றாலும் பட்டாவில் அளவு சரியில்லை என்றால் கிரையம் செய்யத் தயங்குவார்கள் தானே? வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது அல்லவா?

ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் நிலத்திற்கான பட்டாவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், புல வரைபட நகலை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் சொத்தினைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உங்களுக்கே. புதிய சப்டிவிஷன்கள் என்ற பெயரில் அளவீடுகள், பெயர்கள் எல்லாமும் மாற்றப்படுகின்றன. ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Thursday, July 21, 2016

நிலம் (26) - வெளி நாட்டில் வாழ்பவர்கள் பொது அதிகார முகவர் ஆவணம் எழுதுவது எப்படி?

சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொன்னார். வெளி நாட்டில் தொழில் செய்து கொண்டிருக்கும் இந்த நண்பரின் நண்பர் அவரின் நண்பருடன் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமென்று ஆவலினால் நண்பருடன் பேசி  ஒரு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அந்த நிறுவனம் வெளி நாட்டில் வசிப்பவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு முழுவதையும் இவரே போட்டிருக்கிறார். இந்தியாவில் இருந்தவர் வொர்க்கிங்க் பார்ட்னராக இருந்திருக்கிறார். ஆனால் ஆவணத்தில் இந்தியாவில் இருந்தவர் தான் மேனேஜிங் டைரக்டராக இருந்திருக்கிறார் என்பதை வெளி நாட்டில் வசித்தவர் கவனிக்கவில்லை.

தொழிலும் நன்றாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறது. மேலும் முதலீடு தேவைப்படுவதால் வெளி நாட்டில் வசித்தவர் அதிக கடின உழைப்பினைப் போட்டு பொருள் சேர்த்து இந்தியாவில் இருந்தவருக்கு அனுப்பி இருந்திருக்கிறார். தொழிலை நல்ல முறையில் வளர்த்து வந்திருக்கிறார் இந்தியாவில் இருந்தவர். எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த போது வெளிநாட்டு நண்பர் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறார். அவருக்கு மூன்று பெண்கள் திருமணமாகாமல் இருக்கின்றனர்.

வெளிநாட்டில் வாழ்ந்தவரின் மனைவி, தொழிலில் பார்ட்னராக இருந்தவரிடம் சென்று என்னை தொழிலில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னவுடன், இங்கே பாரும்மா இந்த தொழில் முழுவதும் என்னால் நடத்தப்படுவது, இதற்கு உன் புருஷன் ஒரு பங்குதாரர் ஆகவே அவரின் பங்கினை மட்டும் கொடுத்து விடுகிறேன் என்றுச் சொல்லி இருக்கிறார். திடுக்கிட்ட அந்த விதவைப் பெண் தெரிந்த வக்கீலைச் சென்று பார்க்க இவர் அவரை திட்டமிட்டு ஆரம்பத்திலேயே ஏமாற்றி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அவரின் முதலீட்டை வைத்து அவரை ஏமாற்றி அவர் பெயரில் தொழில் நடப்பதாகச் சொல்லி அந்தத் தொழிலுக்கு தான் தான் முதல்வர் என ஆவணங்கள் தயாரித்து முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார் அவர். இப்போது அக்கவுண்டில் வந்த பணத்தை மட்டும் அந்த விதவைப் பெண்ணிடம் கொடுத்து ஓரங்கட்டி விட்டார். 

சட்டத்திற்கு ஆவணங்களே முக்கியம். மனச்சாட்சி, உண்மை என்பதெல்லாம் தேவையே இல்லை. அந்த விதவைப் பெண்ணால் தனியாக வளர்ந்து நிற்கும் இவரை எதிர்க்க முடியுமா?  கோர்ட்டு மூலமாக தீர்ப்பு கிடைக்குமா? அந்த விதவைப் பெண்ணின் கணவரின் உழைப்பினை வேறொருவர் சுரண்டி விட்டார். அந்தக் குடும்பம் நிர்கதியாக நிற்கிறது.

இது போன்ற பல இன்னல்களை பல வெளி நாடு வாழ் மக்கள் அனுபவித்து வருகின்றதை பலரும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். தன் வாழ்க்கையை, தான் வாழ்ந்த பூமியை, தன் கலாச்சாரத்தை, தன் இன்பத்தை எல்லாம் இழந்து வெளிநாட்டில் உழைத்து பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை தன் குடும்பத்துக்கு கொடுத்து மகிழ வேண்டுமென்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் இளமையை இழந்து தன்னலமில்லாமல் தியாக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவர்களைக் கூட இந்த உலகம் ஏமாற்றி விட துடிக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்குப் பாரமாக இருக்கிறது.

உண்மையைச் சொல்லி தொழில் செய்தால் என்ன? குறைந்தா போய் விடும்? இன்னொருவரின் உழைப்பை அடாது பெற ஏன் முயல வேண்டும்? இதே காரியத்தினை வேறொருவர் இவருக்குச் செய்து விட மாட்டாரா? என்பதையெல்லாம் எவரும் நினைத்துப் பார்ப்பதில்லை.

சமீபத்தில் வெளி நாட்டில் வசிக்கும் ஒருவர் தன் முன்னோர் சொத்தில் தனக்கு உரிய பாகத்தை விற்பனை செய்ய விரும்பினார். அதற்காக அவர் இந்தியா வந்து செல்வது என்பதெல்லாம் முடியாது. அவரின் நண்பர் மூலமாக தன் தம்பிக்கு தன் பாகத்தினை விற்க பவர் கொடுப்பதாக முடிவு செய்து பவர் எழுதச் சொல்லி இருக்கிறார். ஆவண எழுத்தரும் ஒரு பவர் டாக்குமெண்ட்டினை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தன்னை முழுவதுமாக தன் தம்பியிடம் அடகு வைத்து விடும் அளவுக்கு அந்த ஆவணம் இருந்திருக்கிறது. அவரின் மனைவிக்கு அந்த ஆவணத்தின் மீது சந்தேகம் ஏற்பட நெட்டில் துழாவி என்னைப் பிடித்தனர்.

வெளி நாடுகளில் வசிப்போர் என்ன காரியத்துக்காக பொது அதிகார முகவர் பத்திரம் எழுத விரும்புகிறார்கள் என்று முதலில் அறிய வேண்டும். அந்தக் காரணத்துக்காக மட்டுமே அந்த ஆவணம் எழுதப்பட வேண்டும்.

தனக்காக நிலம் கிரையம் பெற தனி ஆவணம், தன் பாகத்தினை விற்க தனி ஆவணம், வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற தனி ஆவணம், அதற்கொரு கால நிர்ணயம், தனக்காக கடன் மட்டும் வாங்க தனி ஆவணம் என்று தனித்தனியாக பொது அதிகார முகவர் ஆவணத்தை ஏற்படுத்தல் மிக அவசியம். செலவு ஆகிறது என்று முற்றிலுமாக தன்னை பிறரிடம் அடகு வைத்து விடக்கூடாது.

அந்த நண்பருக்கு அவருக்குத் தேவைப்பட்ட ஆவணத்தை எழுதி அனுப்பி வைத்தேன். 

ஆகவே வெளிநாடுகளில் வசிப்போர் தன்னை பிரதிநிதிப்படுத்தும் பொது அதிகார முகவர் ஆவணங்கள் எழுதிக் கொடுக்கும் போது வெகு கவனத்துடன், ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இது பற்றி வேறேதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை மெயில் மூலம் அணுகவும். என்னால் இயன்ற உதவியைச் செய்து தருகிறேன்.

இந்தியாவில் தன் பெயரில் நிறுவனம் தொடங்க, நிலம் விற்க, நிலம் வாங்க, தன் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்ட, கடன் பெற என்ற அனைத்துக் காரியங்களுக்கும் தனித்தனி ஆவணங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.


Wednesday, July 20, 2016

நிலம் (25) - பட்டா மாறுதல் எளிதாகுமா இனி?

நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?

இந்தப் பிரச்சினைக்காக  சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.

மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

மீண்டும் மறுபடியும் விண்ணப்பம் கொடுக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தாலும் பத்திரப்பதிவின் போது கொடுக்கப்படும் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பத்தை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. 

பத்திரப்பதிவு முடிந்த உடன் எத்தனை நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இருந்தாலும் இதில் வேறொரு பிரச்சினை இருக்கிறது. மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பத்திரப்பதிவுகளுக்கு, எந்த வித விசாரணையும் இன்றி பட்டா மாறுதல் வழங்கப்பட்டு விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பதிவு செய்யப்பட்ட எத்தனையோ பத்திரங்கள் தகுந்த ஆவணங்கள் இன்றி பதிவாகின்றன. அதிலிருக்கும் பிரச்சினைகளை யார் கண்டுபிடிப்பது? பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் பட்டாவிலும் மாறுதல் நடந்து விட்டால் அதெல்லாம் ஆவணப்படுத்தவை ஆகிவிடுமே அதை எப்படித் தவிர்ப்பது?

இது போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. தீர்வு தான் கண்ணில் தெரிய மாட்டேன் என்கிறது.

சரி இதோ அந்தத் தீர்ப்பு உங்களுக்காக.

Madras High Court
Consumer Rights Protection ... vs Tamil Nadu Govt. on 6 February, 2015

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATED: 06.02.2015

Coram

THE HONOURABLE Mr.SANJAY KISHAN KAUL, The Chief Justice

and

THE HONOURABLE Dr.JUSTICE S.TAMILVANAN

Writ Petition (MD) No.8250 of 2008


through its Secretary O.Paramasivam,

and M.P.(MD)No.1 of 2018



Consumer Rights Protection Council,
Madurai Ditrict.    
No.6, Thamukkam Shopping Complex,
Tallakulam, Madurai-2,                                      ... Petitioner

  vs.

1.Tamil Nadu Govt., rep.by
2.Inspector General of Registration,
  The Secretary, Revenue Department,
  St.George Forts Building, Chennai.
  The Registration Department,
  120, Santhome High Road,
  Chennai-4.                                        ... Respondents

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying for issuance of a writ of mandamus, directing the respondent No.2 and and patta transfer at the time of registration fo sale deed to 1st respondent his subordinates to forward the application and the fee collected for survey Revenue Offices and respondent No.1 to transfer patta in the name of the Spl.Govt.Pleader. purchaser without obtaining another application and charges.

For Petitioner  : Mr.S.Thamizharasan
For Respondents  : Mr.B.Pugalendhi,


ORDER

(Order of the Court was made by The Hon'ble Chief Justice) The petitioner, claiming to be the Secretary of the Consumer Rights Protection Council, seeks to file the present writ petition, in public interest, on account of the grievance that any transaction for purchase of immovable property of any kind, which are registrable and whereafter patta is required to be issued, the 2nd respondent/Registration Office is collecting charges for patta transfer and even issuing receipts as also for sub- division. It is submitted that thus when the purchaser approaches the revenue authorities, a second set of charges are to be paid.

2.In the counter affidavit, it has been stated that patta transfer application in prescribed form/Registration-II Form No.52, tendered along with documents presented for registration, is forwarded by the Sub- Registrar to the Tahsildar in whose jurisdiction the property is situated and the job of collecting this fee now has been entrusted to the Registration Department as per G.O.Ms.No.916 CT & RE Department, dated 23.08.1984. It is thus submitted that there is no occasion to once again pay the fee to the Revenue Authorities.

3.The aforesaid stand of the respondents thus shows that the requirement is to pay only one set of fee but, the collecting agency for such fee is now the Registration Office. No second set of fee is required to be paid.

4.The petition is accordingly closed. No costs. Connected miscellaneous petition is also closed.


Index:yes/no     (S.K.K.,CJ)     (S.T.,J)
Internet:yes/no.        06.02.2015
gb

Monday, July 18, 2016

நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?

மிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து வருவதாலும், பெரும் நிறுவனத்தின் மேலாளராக இருந்த காரணத்தாலும் அவரால் வாங்கப்பட்ட பூமிகளை சரிவர மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை.

அவரிடமிருந்த ஆவணங்களை எனக்கு அனுப்பி வைத்தார். ராமநாதபுரத்தில் அரை ஏக்கர் நிலம், சேலத்தில் வீட்டு மனை, மதுரையில் வீடு, கோவையில் ஒரு சிறிய மனையிடம், ஒரு கெஸ்ட் ஹவுஸ் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றினையும் படித்துப் பார்த்தேன். மூன்று சொத்துக்கள் அவரின் தந்தையார் பெயரில் இருந்தன. ஒரு சொத்து அவரின் தாயாரின் பெயரில் இருந்தது. ஒரு சொத்து அவர் கிரையம் பெற்றது. அவரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்ல அவருக்கே தெரியாத சொத்துக்கள் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

மேற்கண்ட சொத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி அதை சுத்தப்படுத்தி வேலியிட வேண்டுமென்றுச் சொன்னேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

முதலில் அவர் கிரையம் பெற்ற சொத்தினை பட்டா மாறுதல் செய்வோமென்று ஆரம்பித்தேன். பட்டா விண்ணப்பத்தோடு கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தேன். இது கண்டிஷனல் பட்டா பூமி என்பதால் பட்டாவை மாறுதல் செய்ய முடியாது என்றுச் சொல்லி விட்டார். அதுவரையிலும் அது கண்டிஷனல் பட்டா பூமி என்று எனக்குத் தெரியவில்லை. பஞ்சமி பூமி இல்லை என்பது நன்கு தெரியும். 

அது என்ன கண்டிஷனல் பட்டா பூமி? அரசு தன் நிலத்தினைப் மக்களுக்கு இனாமாக வழங்கும்போது ஒரு சில கண்டிஷன்களுடன் அவர்களுக்கு பட்டாவை வழங்குகிறது. அதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் பட்டா வழங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பட்டா பெற்றவர் எந்த வித வில்லங்கத்துக்கும் அந்தப் பூமியினை உட்படுத்தக்கூடாது. அப்படி உட்படுத்தினால் அந்தப் பட்டா ரத்தாகி பூமி அரசு வசம் சென்று விடும். இது ஒரு கண்டிஷன். பத்து வருடத்திற்கு பின்பு விற்பனை செய்யலாம் என்றாலும் அந்தப் பூமியை அவர் யாருக்கு விற்கலாம் என்றொரு கண்டிஷனும் இருக்கும். அது என்ன என்று தெரிய வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பட்டா பூமியைக் கிரையம் பெற முடியும். அந்தக் கண்டிஷன்கள் வழங்கப்பட்ட அந்தப் பட்டாவில் இருக்கும். ஒரு சிலர் பல கிரையங்களை உருவாக்கி விடுவதால் இது போன்ற விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆகவே நண்பர்களே சொத்தின் மூல ஆவணங்களைஆராயும் போது பத்திரங்களை நன்கு ஆராய வேண்டும். அதன் பிறகு குறைந்தது மூன்று முறையாவது வில்லங்கச்சான்றிதழ்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும் ஆவணங்களை நகல் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். மேனுவலாக எடுக்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில் மனிதனின் தவறால் குறைபாடுகள் ஏற்பட்டு விடும். அதனால் பல அனர்த்தங்கள் வந்து விடும். 

ஆகவே கண்டிஷனல் பட்டா பூமியை அதன் கண்டிஷன் என்னவென்று தெரியாமல் வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.





Wednesday, July 13, 2016

நிலம் (23) - பெண்ணின் சொத்துக்கள் வாரிசுரிமை சில விளக்கங்கள்

அண்ணா பெண்களின் சொத்துக்களைப் பற்றியும் அதன் வாரிசுரிமைகளைப் பற்றியும் தங்களது பிளாக்கில் எழுத முடியுமா? - வனிதா, ஃப்ரான்ஸ்.

அன்பு வனிதாவிற்கு வணக்கங்கள். உங்கள் அம்மாவின் சொத்திலோ அல்லது பாட்டியின் சொத்திலோ ஏதாவது பிரச்சினைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரிந்தால் உங்களுக்கு உதவலாம். இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்வியானது பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இந்தப் பதிவினை எழுதுகிறேன். இந்தப் பதிவு பொதுவான நடைமுறையில் ஒரு சில வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை முன் வைத்து எழுதப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

அனைவருக்குமான பொதுக் குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு என்பதையும், சொத்தின் தன்மை, ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆவணங்கள், வாரிசுகள், மதம் போன்றவற்றினையும் பொறுத்துதான் சட்டப்பிரிவுகளின் வழியாக தீர்வைப் பெறலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

ஒரு இந்துப் பெண் தன் கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்துக்கள் பெற்று அனுபவித்து வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பெண் தன் அனுபோகத்தில் இருக்கும் சொத்தினைக் குறித்து எந்த வித உயிலும் எழுதவில்லை என்றால், இந்தப் பெண்ணுக்கு வாரிசுகள் இல்லை என்றால் மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் அந்தப் பெண்ணின் கணவர் வழி உறவினருக்குதான் சேரும். அந்தப் பெண்ணின் அக்காவிற்கோ அல்லது அம்மா, அப்பாவிற்கோ சேராது. 

ஒரு இந்துப் பெண்ணின் சுய சம்பாத்தியச் சொத்து, அந்தப் பெண் எந்த வித உயிலும் எழுதி வைக்காத போது அவளின் வாரிசுகளுக்குத்தான் சேரும்.

மேற்கண்ட இரண்டு விஷயங்களும் உதாரணம் தான். இது தவிர பல்வேறு சிக்கல்களுக்கு தகுந்த பல்வேறு தீர்ப்புரைகள் உள்ளன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, July 6, 2016

நிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு தினத்தந்தியில் ஒரு செய்தி. அன்னூரைச் சேர்ந்தவர்கள் தமிழக இந்து அறநிலையத்துறைக்கு  பாத்தியமான நிலத்தைப் பட்டா பெற்று அதனை தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு விற்பனை செய்து விட்டார்கள் என்றும், அதை அறிந்தவுடன் தூத்துக்குடிக்காரர் காவல்துறையில் புகார் கொடுத்து, ஏமாற்றியவர்களை கைது செய்திருக்கின்றார்கள் என்றும் அவர் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும் அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வினைப் பற்றி இங்கு பதிந்தால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலம் அது. கோவிலின் பெயரில் பட்டா இருந்தது. ஆனால் அந்த நிலம் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்களால் குறிப்பிட்ட கோவிலில் பணிபுரியும் பூசாரிக்கு இனாமாக வழங்கப்பட்டிருந்தது என்றும் ஆகவே அந்தப் பூசாரிதான் அந்த நிலத்துக்கு உரிமையாளர் என்றும், தமிழக அரசு அந்த நிலத்தின் ஒரு சிறு பகுதியை எடுத்துக் கொண்ட போது அந்தப் பூசாரிக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கியது என்றும் சொல்லிக் கொண்டு ஒரு ஆவணத்தை நண்பர் கொண்டு வந்து கொடுத்தார். அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்து பார்த்ததில் செட்டில்மெண்ட் தாசில்தாரால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும், கந்தாய ரசீது போன்றவற்றை பூசாரி தன் பெயரில் செலுத்தி வந்திருக்கிறார் என்பதையும், கோவிலின் பெயரில் உரிமையாளராக அந்தப் பூசாரி இருந்து வந்திருக்கிறார் என்பதையும் அறிய நேர்ந்தது. 

இருப்பினும் அதில் மற்றொரு மறைந்து போன தகவலையும் அறிய நேர்ந்தது. செட்டில்மெண்ட் தாசில்தாரால் கொடையாக அளிக்கப்பட்ட அந்த நிலம் அந்தப் பூசாரியின் தகப்பனாரால் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதையும் அறிய நேர்ந்தது. அனுபோகத்தில் இருந்து வந்த பூமியைத்தான், செட்டில்மெண்ட் தாசில்தார் கோவில் இனாமாக வழங்கி இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்த பூமியானது அவர்களின் அனுபோகத்தில் எத்தனை காலம் என்பதை அறிய முடியவில்லை. அதற்கான ஆவணங்களைத் தேடினால் கிடைத்து விடும் என்பதையும் அறிந்தேன். அவ்வாறு அந்த ஆவணங்கள் கிடைத்து விட்டால் செட்டில்மெண்ட் தாசில்தாரின் உத்தரவினை  ரத்து செய்தும், இந்து அற நிலையத்துறையின் கீழ் பதிவாகி இருப்பதையும் நீதிமன்றம் மூலம் நீக்கி விடலாம் என்று முடிவு செய்தேன். 

எல்லாம் செய்து கொடுக்கலாம், ஆனால் அவர்கள் என்னை செலவு செய்து மீட்டெடுத்துத்தாருங்கள் என்றார்கள். என் வேலை என்னவோ அதைத்தான் என்னால் செய்ய முடியும்? என்றும் எனக்குரிய கட்டணத்தை அளித்தால் மீட்டெடுக்க உதவுகிறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட பதினைந்து கோடி விலை இருக்கும். அந்தப் பூசாரியின் வாரிசுகள் ஏழ்மையில் உழல்கிறார்கள். இருப்பினும் நான் என்ன செய்ய முடியும்? 

கோர்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை எல்லாம் செய்து கொடுத்து அவர்களிடமிருந்து செலவு தொகையைத் திரும்பப் பெறுவது சாதாரண காரியமா? காரியம் ஆகும் வரை நன்றாக இருக்கும், காரியம் முடிந்த உடன் வேறு மாதிரியாகப் பேசும் உலகமல்லவா இது? அவர்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் ரிஸ்க் எடுக்க முடியுமா? விதியின் வலிமையினைப் பார்த்தீர்களா? கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது ஆனால் என்ன பயன்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கோவிலுக்குப் பாத்தியமான சொத்துக்களை வாங்கினால் அது எந்தக் காலத்திலும் செல்லத்தக்கதல்ல. எப்படி கோவில் நிலங்களை அடையாளம் காண்பது என்று நினைக்கின்றீர்கள்? அதற்கு கிரையம் பெற உள்ள ஆவணங்களைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடியும். இப்படி பல முறைகளில் ஒரு சொத்தின் தன்மையானது என்ன என்று கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து பல தடையின்மைகளை பற்றி அலசி ஆராய்ந்து பார்த்து நிலத்தின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடித்தல் அவசியம்.

அந்த தூத்துக்குடிகாரருக்கு கோவையில் இருக்கும் நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள அவ்வளவு எளிதில் முடியாது. ஒரே ஊர்க்காரராக இருந்தால் ஓரளவு நிலத்தினைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆகவே வெளியூரில் சொத்துக்கள் வாங்க நினைப்போர் லீகல் கருத்துரு பெறுவதற்காக ஒரு தொகையினை தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உழைப்பு வீணாகிப் போகும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன.


Thursday, June 30, 2016

நிலம்(21) - சொத்தின் தன்மையும் வாரிசுகளின் பாகமும்

சமீபத்தில் ஒரு ஜர்னலில் ஒரு வழக்கினைப் படித்தேன். வெகு சுவாரசியமான வழக்கு தான் அது. சொத்தில் பாகம் குறித்த ஒரு முக்கியமான அவசியமான அனைத்து வழக்குகளுக்கும் முன்னுதாரமான வழக்கு தான் இது.

இனி வழக்கு விபரத்தினைப் பார்ப்போம். அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்.

ஒரு கணவன் தன் மனைவியின் பெயரில் சொத்தினை வாங்குகிறார். அந்தச் சொத்து அவர்களது அனுபோகத்தில் இருந்து வருகிறது. திடீரென கணவன் இறந்து விடுகிறார். மனைவியானவள் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆனவுடன் தன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் சொத்தினை எழுதி வைக்கிறார். விஷயம் அவ்வளவுதான். இது ஒன்றும் தவறே இல்லை. அந்தப் பெண் தான் கிரையம் பெற்ற சொத்தினை யாருக்கு வேண்டுமானாலும் கிரையமோ தானமோ எழுதி வைக்க உரிமை கொண்டவர் ஆகிறார். அந்தப் பெண்ணின் இதர வாரிசுகளுக்குச் சொத்தில் உரிமை இல்லை. அவர்களால் அந்தச் சொத்தில் பாகம் கேட்க முடியாது.

இதுவரையிலும் நான் சொல்லி இருப்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தினை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். அது அவரின் உரிமை.

ஆனால் மேற்குறிப்பிட்ட சொத்தில் அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் பாகம் பெற்றனர். எப்படி? 

கணவன் தனது மூதாதையர் சொத்தினை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தன் மனைவியின் பெயரில் சொத்துக்களைக் கிரையம் பெற்றிருக்கிறார் என்பதனை அந்தப் பெண்ணின் இதர வாரிசுகள் கோர்ட்டில் தகுந்த ஆவணங்களுடன் நிரூபித்தார்கள். விஷயம் முடிந்தது.

இனி நீங்கள் சொத்து வாங்கும் போது கிரையம் பெற்ற சொத்துக்கள் வாங்க எப்படி பணம் வந்திருக்கும் என்றொரு கேள்வியை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது வெகுமுக்கியமான விஷயம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும்.

உங்களுக்காக ஒரு குறிப்பு :

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 என்பது இந்துக்களின் சொத்தில் பாகம் பிரிவதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இந்து வாரிசுரிமைச் சட்டம் முகம்மதியர், கிறிஸ்தவர், பார்சி அல்லாத இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் மற்றும் ஒரு நாத்திகவாதிக்கும் கூட பொருந்தும்.

Saturday, June 18, 2016

நிலம் (20) - கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா?

அன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா? அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும்? என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.

மதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.

கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.

பஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது  பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.

ஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது சாலச் சிறந்தது.

Friday, June 17, 2016

நிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு வெகு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. பலரும் இதைக் கவனிப்பதில்லை. ஏனென்றால் இதைப் பற்றிய புரிதலும் விஷயமும் யாருக்கும் தெரிவதில்லை. 

சமீபத்தில் என்னுடைய நண்பர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். விஷயம் என்னவென்று கேட்டேன். கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டேன். பின்னர் விஷயத்தைக் கேட்டேன்.

தன் வாழ் நாள் சம்பாத்தியத்தில் அவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தினை கிரையம் பெற்றிருப்பதாகவும், கிரையம் பெற்று சுவாதீனத்தில் இருந்து வந்த சொத்தின் மீது தற்போது வழக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார். 

“என்ன காரணம்?” என்றேன். 

”என்னவோ பஞ்சமி நிலங்கள் என்கிறார்கள்” என்றார். 

“நான் கிரையம் பெற்ற போது லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் தான் வாங்கினேன் என்றார்”. 

”வக்கீல் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் வேறு எந்த வகுப்பினரும் பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்” என்றார். ”என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரிடம் கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை முழுவதுமாகப் பெற்று விடலாம் எனவும், அதற்கு பல வழிகள் இருக்கின்றன எனவும் சொல்லி சமாதானப்படுத்தினேன். 

”பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன சார்? விளக்கம் தர முடியுமா?” என்றார்.

”கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்?  அது அவர் தவறல்ல, ஏதோ  மாட்டிக் கொண்டார் சரி செய்து கொடுத்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டேன்.

இனி பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1981 ஆம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்ட்ராக இருந்த டெரமென் ஹீர் என்பவர் தலித் தாழ்த்தப்பட்ட மக்களின் வெகு மோசமான வாழ்க்கைத் தரத்தினையும், நிலச் சுவான் தார்களால் அவர்கள் கொத்தடிமையாக வாழும் கொடுமையும், தலித் வகுப்பினரை முன்னேறச் செய்வதற்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். பெரும் நிலக்கிழார்களால் கொத்தடிமையாக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தினையும், சமூகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதற்காகவும் 1892ம் வருடம் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுமார் 12,00,000 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்காக டிப்பரஸ்டு கிளாஸ் லேண்ட் ஆக்ட் 1892 (Depressed Class Land Act 1892) பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலத்தினைத்தான் பஞ்சமி நிலங்கள் என்று  சொல்கிறோம்.

இந்த பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, லீசுக்கு விடவோ, மாற்றம் செய்யவோ கூடாது. பத்து ஆண்டுகள் கழித்து தலித் வகுப்பினருக்கு மட்டுமே மாற்றம் செய்து கொடுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று வகுப்பினருக்கு விற்கவோ, லீசுக்கோ, குத்தகைக்கோ முடியாது. அவ்வாறு செய்தால் அந்த ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி விடும் என்று சில கண்டிஷன்கள் அந்தச் சட்டத்தில் இருந்தன. அவ்வாறு திரும்பப் பெறப்படும் நிலத்திற்கு அரசு எந்த வித இழப்பீடும் கொடுக்காது என்பது மேலும் ஒரு முக்கியமான விஷயம்.

இந்த நிலத்தினை வேறு எவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆனால் என்ன நடக்கிறது? இது பற்றிய விபரங்கள் தெரியாதவர்களைப் பயன்படுத்திப் பத்திரங்களை உருவாக்கி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்தே இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. தெரியாத காரணத்தால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில விஷமிகள் போலிப் பத்திரங்களை உருவாக்கி விடுகின்றார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதவாறு பல்வேறு ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். விளைவு பிரச்சினை வந்து விடுகின்றது.

ஆகவே நண்பர்களே சொத்துக்கள் வாங்கும் முன்பு வெகு கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.