குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வங்கிக் கடன். Show all posts
Showing posts with label வங்கிக் கடன். Show all posts

Friday, July 29, 2022

வங்கிக் கடன் பிரச்சினையிலிருந்து வெளியேற உதவுகிறோம்

முன்னுரை :

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெற்று நல்ல லாபம் பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன். 

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

தொடர்பு கொள்ள - 9600577755 - காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை

பொருளாதாரம் சார்ந்த பணிகள் என்னென்ன என்பதறிய கீழே இருக்கும் இணையதளத்தினைப் பார்க்கவும்.

www.vsjinfra.com

* * *

அன்பு நண்பர்களே,

இதுகாறும் சொத்துக்களுக்கான 120 வருட ஆவணங்கள் ஆய்வு செய்யும் லீகல் அட்வைஸராக வேலை செய்து கொண்டிருந்த போது, நான் சந்தித்த ஒரு பிரச்சினை என்னை அதிர்ச்சியுற வைத்தது. எனக்கு ஏற்கனவே பொருளாதாரத்திலும், பங்கு வர்த்தகத்திலும் அனுபவம் இருப்பதால் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர் கொண்டேன் எனப் பார்க்கலாம்.

நண்பரொருவர் காலையில் அழைத்து, “எனது நிறுவனம் ஏலம் போகப் போகிறது தங்கம் என்று புலம்பினார். இனி இப்படி இந்தச் சமூகத்தை எதிர் கொள்ளப்போகிறேன்? என் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? என் நிலமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, இனி என் உயிரை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?” எனப் பேசி அதிர வைத்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றேன்.

நண்பரின் நிறுவனம் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லாபமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு வாங்கிய கடனுக்கான வட்டியை கொரானா பிரச்சினையினால் கட்ட முடியாமல் போனது. தற்போது வரக்கூடிய லாபம் நிறுவனத்தின் இயக்கத்துக்கும், பொருட்கள் வாங்கவும், சம்பளம், மின்கட்டணம் செலுத்தவுமே சரியாக இருக்கிறபோது வட்டி எங்கே கட்டுவது?

வங்கி கடனுக்கான நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி வைக்க, அவர் யாரோ ஒரு வக்கீல் மூலம் கோர்ட்டில் தடை ஆணை பெற்று சமாளித்து வந்தார். இதற்கிடையில் வக்கீலுக்கு செலவு வேறு. வங்கி மேலாளர் சொத்து ரெக்கவரிக்கான வேலையினைச் செய்து விட்டார். ஓ.டி.எஸ்ஸுக்கு 10 சதவீதமே தள்ளுபடி செய்தாலும் உடனடியாக சொத்தினை விற்பனை செய்து கடனைக் கட்ட முடியாது. பெரிய அளவில் கடன் இருப்பதால் எவரிடமும் வாங்கவும் முடியாது.

வீடு, கார் எல்லாம் இ.எம்.ஐயில் போய் கொண்டிருக்கிறது. தப்பிக்கலாம் என்று சொத்துக்களை விற்கலாம் என்ற போது பாதி விலைக்குக் கேட்டிருக்கின்றார்கள்.

கடனுடன் கம்பெனியை விற்கலாம் என்று முடிவு செய்த பின்னார் கடன் தொகை அளவுக்கே வாங்க முடியும் என்று பலர் சொல்ல, வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார் நண்பர்.

அடுத்த வாரம் வங்கி நிறுவனத்தையும், சொத்தினையும் முடக்கி விட்டு, இருக்கும் நிலையில் ஏலம் விட ஏற்பாடுகளைச் செய்து வந்தது கண்டு என்ன செய்வது என்று தெரியாத எல்லோரும் கைவிட்ட நிலையில் எனக்கு போன் செய்திருக்கிறார்.

முதலில் பதட்டத்தைத் தணியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. என்ன செய்யலாம் என்று பார்த்து, அதன் படி முனையலாம் என்று ஆறுதல் படுத்தினேன்.

அவரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் பெற்று, ஆய்வு செய்து, எனக்கு தொடர்புடைய பொருளாதார நண்பர்களிடம் பேசினேன். இந்த நிறுவனத்தின் வங்கிக் கடனைத் தீர்க்க ஒரு செயல்திட்டத்தினை உருவாக்கினோம்.

வங்கியின் கடன் வசூலிப்பாணையை நிறுத்தி வைத்து, முன்பே வங்கியில் கடன் வாங்கி செலுத்தாத நிலையில் பாதிப்படைந்த சிபில் ஸ்கோர் பற்றி விவரித்தும், நிறுவனத்திற்கான செயல் திட்டத்தினை உருவாக்கி தனியாரிடம் கொடுத்து மீள் கடன் பெற அனுமதி பெற்றோம்.

அவ்வளவுதான்! நண்பர் மீண்டும் தனது நிறுவனத்தை வெற்றிகரமான பாதையில் நடத்தி வருகிறார்.

இப்போது அந்த நிறுவனத்தின் நிதிப் பொறுப்பினை கண்காணிப்பில் வைத்திருப்பதால், தொழிலில் இறக்கம் வரும் போது சரி செய்ய எனது நண்பர்களான பொருளாதார நிபுணர் குழு உதவி செய்திட ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறேன். மிகச் சிறந்த நிதி மேலாண்மை, ஆடிட்டிங்க், விற்பனைக்கான ஆலோசனைக் குழு என அவருக்கு உதவிட ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறோம். இனி அவர் தன் நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கியே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இதைப் போன்ற சர்வீஸ்களை இனி எல்லோருக்கும் கொடுக்கலாம் என்ற நினைப்பில் இந்தப் பதிவினை எழுதுகிறேன். என்னென்ன பணிகளைச் செய்கிறோம் என்று கீழே இருக்கும் இணைப்பில் உள்ள இணையதளத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

www.vsjinfra.com

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.


Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.