குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 24, 2021

நிலம் (91) - பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவர் தேவையில்லை

சமீப காலமாக பவர் பத்திரங்கள் அதாவது பொது அதிகார ஆவணத்தின் பதிவுகள், ரத்துக்கள் போன்றவற்றில் பல்வேறு குழப்பமான செய்திகள் வலம் வந்தன. பல சார் பதிவாளர்கள் பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவரும் வர வேண்டுமென்று சொல்லி ரத்துப் பத்திரத்தினை பதிய மறுத்தார்கள்.

பொது அதிகாரம் எழுதி வாங்கினால், எழுதி வாங்கியவர் சொத்தின் உரிமையாளர் அல்ல. அதாவது முகவர் என்பவர் சொத்தின் உரிமையாளர் அல்ல.

எழுதிக் கொடுத்தவர் தான் சொத்தின் உரிமையாளர். பொது அதிகார முகவர் சொத்தினை விற்றால் அரசு வழிகாட்டி மதிப்பு தொகை சொத்தின் உரிமையாளருக்கு வங்கியில் வரவு வைத்தால் மட்டுமே அந்தச் சொத்தினை கிரையம் பெற்றவருக்குச் செல்லும்.

பொது அதிகார முகவர் என்பவர் எந்த வித பிரதி பிரயோஜனும் இன்றி ஒரு ஏஜெண்டாக சொத்தின் உரிமையாளருக்கு பணி செய்பவர் மட்டுமே என்பதை எக்காலத்திலும் மறந்து விடாதீர்கள்.

பொது அதிகார ஆவணத்தின் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடந்தால் சொத்துக்கான விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளர் பெற்றுக் கொண்டார் என்பதற்காக அத்தாட்சி மிகவும் அவசியம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

சார் பதிவாளர்கள், முகவர் இல்லாமல் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினைப் பதிவு செய்ய முடியாது என்று சொன்னதற்கான பதிவுத்துறை கீழே இருக்கும் சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. 

எனவே பொது அதிகாரத்தை ரத்துச் செய்ய சொத்தின் உரிமையாளர் நேரடியாக மேற் கொள்ளலாம். இவ்வாறு பொது அதிகாரம் ரத்துச் செய்யப்பட்டு உள்ளது என்பதை பொது அதிகார முகவருக்குப் பதிவுத் தபாலில் செய்தி அனுப்பி அதன் நகலை ரத்துப் பத்திரத்துடன் இணைத்து வைத்துக் கொள்க.

மேலும் பொது அதிகார முகவரால் ஏதேனும் பதிவு செய்யப்படாத ஆவணங்களோ இல்லை வேறேதேனும் ஆவணங்களோ ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது பற்றிய கவலை வேண்டாம். சமீப சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சொத்துரிமை மாற்றத்திற்கான எந்த வித பதிவு செய்யப்படாத ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ளகூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. 

வில்லங்கச் சான்றிதழில் பொது அதிகார முகவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பின் அதற்கு முழு பொறுப்பும் சொத்தின் உரிமையாளரையே சேரும். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது.

வெளி நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினை அந்த நாட்டின் தூதரக அதிகாரி முன்பு எழுதி சான்றொப்பம் பெற்று, தன் கையொப்பம் இட்டு, அதனை அந்த நாட்டில் இருக்கும் நோட்டரி பப்ளிக் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அதனை பதிவுத் தபாலில் பதிவுத்துறைக்கு அனுப்பி ரத்துப் பத்திரத்திரனைப் பதிவு செய்ய வேண்டும்.

இதோ பதிவுத்துறையின் சுற்றறிக்கை.


மிகத் துல்லியமான லீகல் ஒப்பீனியன், பத்திரங்கள் எழுத, சர்வேக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம். செய்வதைத் திருந்தச் செய்து விட்டால் பின்னர் வருத்தம் வராது என்பதை கவனத்தில் கொள்க.

தொடர்புக்கு : 96005 77755 ( இலவச ஆலோசனை நிச்சயம் தர இயலாது)

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.