குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, November 14, 2021

2021ம் ஆண்டு - கார்த்திகை தீபபெருவிழா அழைப்பிதழ்

 பேரன்புமிக்க ஆன்மீக அன்பர்களுக்கு,

நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆசிரமத்தில் வரும் 19.11.2021ம் தேதியன்று கார்த்திகை தீப பெருவிழா நடக்க இருக்கிறது.

வருடம் தோறும் நடக்கும் நிகழ்வு. 

அழைப்பிதழ் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

இதனையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு வெள்ளிங்கிரி மலை அருளாளன் எல்லாம் வல்ல எம் பெருமானின் ஆசியினாலே, நம் குருவின் ஆசிரமத்தில் நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொண்டு திருவருளும், குருவருளும் பெற்று நோய் நொடி இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழையடி வாழையென வாழ வேண்டுமென்ற ஆவலினால் உங்கள் அனைவரையும் எம் குருவின் அனுமதியின் பேரிலே அன்புடன் அழைக்கிறேன்.

அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுங்கள். மாலையில் நடக்கும் தென் கைலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு தீப மேற்றும் வைபவத்திலே கலந்து கொண்டு பேரருளினாலே செல்வமும், புகழும், சீரும், சிறப்பும், நீண்ட நல் ஆயுளும் பெற்றிட வாருங்கள்.

காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் அன்னம் அளிக்கப்படும். குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அழைக்கிறேன்.

வழி : பூண்டு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு ஸ்டாப்பில் இடது புறம் செல்லும் சாலையில் வந்தால் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே இருக்கும் நம் குருவின் ஆசிரமம். 

வேறேதேனும் தகவல்கள் வேண்டினால் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்க.





0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.