குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கோவை எம் தங்கவேல். Show all posts
Showing posts with label கோவை எம் தங்கவேல். Show all posts

Saturday, November 23, 2019

நரலீலைகள் - எது நாவல்? (8)



முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒரு முகம் தெரியாத ஒருவர், ”நீ எழுதுவதெல்லாம் நாவலா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.  எது நாவல்? என்று கேள்வி கேட்டவருக்கு என்னிடமிருக்கும் ஒரு சில கேள்விகள் பதிலாய்.

’நீங்கள் வாழ்வது யாருடைய வாழ்க்கை? உங்கள் வாழ்க்கையா? இல்லை எவரின் வாழ்க்கை? நீங்கள் இந்த பூமியில் ஒரே ஒரு விஷயத்துக்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களின் வேதம் சொல்கிறது. அது என்ன? உங்களின் பிறப்பின் நோக்கம் தான் என்ன?’ இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நான் எழுதுவதும் நாவல் தான். கலைத்துப் போட்டு எழுத நானொன்றும் பின் நவீனத்துவப் படைப்பாளியும் இல்லை.  நாவலின் வடிவத்தை உடைக்க விரும்புகிறேன்.

என் மூளைக்குள் புகுந்திருக்கும் பல்வேறு குப்பை கூளங்களை நீக்கி, பரிசுத்தமாய், தேவகுமாரனாய், பரிசுத்த ஆவியாய், சுத்த ஆத்மாவாய், எல்லைகளற்ற பிரபஞ்சத்தை எனக்குள் உணர்வதற்காக, என்னைக் கட்டி ஆளும் அஸாஸில் எனும் மனதோடு போராடிக் கொண்டிருக்கும் பல துகள்களின் கூட்டிசைவுக் கரு நான்.

நாவல் என்றால் வடிவம் இருக்கும். வடிவம் என்றால் பொருள். பொருள் என்றால் உணர்வற்றது. உணர்வற்ற ஒரு பொருளை நான் உருவாக்க விரும்பவில்லை. எனது சொற்களுக்கு எங்காவது ஒரு காது கிடைக்கலாம். இல்லை கிடைக்காமலும் போகலாம். அது என் பிரச்சினை இல்லை. நான் விடுத்த சொற்களின் வீரம் பற்றியது அது. சொற்கள் மவுனத்தின் உடைப்பு என்பதையும், நான் சொல்ல விரும்புவது எனக்கே எனக்காக என்பதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். ஆகவே இந்த நாவல் உங்களுக்கானது அல்ல என்பதால் தயை கூர்ந்து நீங்கள் விலகி விடலாம். 

கேள்விகள் குறிகள் போல. அவை உம்மைத் தாக்கி அழித்து விடும். கேள்விகளின் பதில்கள் புரிதல் இல்லாத இடத்தில் சுயமோகம் கொள்ள வைக்கும். அகங்காரத்தின் தொனியில் மனித தன்மை இழக்க வைக்கும். ஆகவே விலகி விடுங்கள் என்னிடமிருந்து.

நீங்கள் ரசிக்க வேண்டுமென்பதற்காகவோ, உங்களிடமிருந்து எனக்கு பொருளோ, வேறு எதுவும் தேவை இல்லாத போது, நீங்கள் எனது நாவலைப் படிக்க வேண்டிய நிர்பந்தத்தை, நான் உங்களுக்கு தரவில்லை. 

நீங்கள் என்னை எளிதாகக் கடந்து போகலாம். உமது நாட்களை, இந்தப் பூமியில் பிரக்ஞையற்ற தன்மையாக நீங்கள் கழிப்பது போல. அதனால் எனக்கு துன்பம் இல்லை. இன்பமும் இல்லை. இன்பம் என்பது வேதனை மண்டியவை என நான் அறிந்து கொண்டிருக்கிறேன். 

எனது பெயர் தங்கவேல். தங்கவேல் இந்த உலகிற்கு தரப்போகும் இரண்டு சொற்கள் உண்டு. அந்தச் சொற்களால் தான் இவ்வுலகம் மேன்மை பெறும். உலகின் இயக்கம் அந்தச் சொற்களால் தான் உய்வு பெறும். உயர்வு பெறும். மனித உயிர்கள் மகிழ்ச்சியாய் வாழும். எனக்கு முன்னாள் வந்தவர்களும், வரப்போகின்றவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும் சொல்லிய, சொல்கிற, சொல்லக் கூடிய சொற்கள் தான் அவைகள். சொற்களில் என்ன இருக்கிறது மாற்றம் புரிதலுக்கு உட்படாத வரை? 

எவராலோ எழுதி வைக்கப்பட்ட குப்பைக் கூளங்களுக்கு அடிமையாக என்னால் வாழ இயலாது. எனது உலகம் வேறு. நான் பெற்றவை வேறு. பெற்றுக் கொண்டிருப்பவை வேறு. ஆகவே என்னைப் போன்ற தீவிரவாதியிடமிருந்து, அக்கிரமக்காரனிடமிருந்து, அயோக்கியனிடமிருந்து விலகி ஓடி விடுங்கள். 

ஏனென்றால் நெற்றியின் சுவடுகள் காய்த்து விடுவது தடுக்கப்பட்டு விடும் என நிமித்தம் கேட்கலாம். அந்த நிமித்தம் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானதாய் இருக்கலாம். அதனால் நடுக்கம் உண்டாகலாம். பயம் ஏற்படலாம். சில்லிடும் உணர்ச்சி ஊசி போல குத்தலாம். கோபம் வரலாம். உடம்பு அதிரலாம். 

உண்மை என்னவென்று தெரியாத. அறியாமை விலகாத வரை, சித்தப் பிரமை விலகாத வரை என் எழுத்துக்கள் கோபம் கொள்ள வைக்கும் தன்மை உடையவைதான். 

உங்களைப் பொறுத்த வரை கரைகள் உடையவை ஆறுகள். எல்லைகள் உடையவை நாடுகள். எனக்கு கரைகளும் இல்லை, எல்லைகளும் இல்லை. நான் உங்களுக்கு முட்டாளாய் தெரிவேன். அறிவிலியாய் தென்படுவேன். என்னால் இந்த உலகிற்கு எந்தப் பயனும் இல்லாதவனாய் புரியப்படுவேன். பூமியில் புற்களுக்கு என்ன வேலை?

இப்படிக்கு நரலீலைகளின் நாவல் ஆசிரியன் கோவை எம் தங்கவேல்.

* * *

டிவியில் தங்கவேல் பேசிக் கொண்டிருந்தான். 

மக்கள் சேவையே மகேசன் சேவை, எனக்குப் பசிக்குச் சோறு போடுங்கள். உங்களுக்காக, உங்களின் குழைந்தைகளுக்காக, உங்களின் குடும்பத்திற்காக, உங்களுடன் இணைந்து பணி புரிய காத்து இருக்கிறேன். என் வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவாயா? என்று கேட்காதீர்கள். 

நீங்கள் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை, உங்களிடமிருந்து பிடுங்கித் தின்பதை தடுத்துப் பாதுகாத்திட உங்களுக்காக உழைத்திடுவேன் எனச் சொல்கிறேன். உழைப்பின் ஊதியம் மொத்தமும் உங்களுக்கு கிடைத்தால் உங்களின் கனவுகள் நிறைவேறும்.

ஆனால் உங்களுக்கு ஊதியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை 95 சதவீதம் எவனோ ஒருவன் தின்று கொழுக்கிறான். கிடைக்கும் 5 சதவீதத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவர்கள், வரிகள் என்ற பெயரில் 2 சதவீதத்தைப் பிடுங்கி, தனக்கும், தன் குடும்பத்துக்கும், பிடுங்க உதவி பெறும் ஊழியக்காரர்களுக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள். 

மிச்சமிருக்கும் 3 சதவீதத்தையும் அவர்கள் மாற்று வழியில் பிடுங்கி உங்களை ஏழைகளாக, கனவுகளோடு போராட வைத்து, முடிவில் ஏக்கத்துடன் மரணிக்க வைக்கிறார்கள். உங்கள் கனவுகளை, உங்களின் வாரிசுகளின் மீது சுமத்தி விடுகின்றீர்கள்.

அவர்களின் ஊதியமும் பிடுங்கி தின்னப்படுகிறது. அவர்களின் கனவுகளை அவர்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்துப் போய் விடுகின்றார்கள். இது காலம் காலமாய் நடந்து வரும் அக்கிரம். இதை எவரும் உணர்ந்து கொள்வதாய் இல்லை. 1 சதவீதத்தில் இருக்கும் அவர்கள், உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கித் தின்று விடுகின்றார்கள். உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. உங்களிடமிருப்பவை எல்லாமும் அவர்களுடையவை. உங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கின்றார்கள். 

உண்மை என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உணர்ந்து கொள்ள முயலுங்கள்.

* * *

டிவியில் இருந்த கவனத்தைத் திருப்பி, எதிரே உட்கார்ந்திருக்கும் டி.ஜி.பி.ராஜ்குமார் மீது வெற்றுப் பார்வையை வீசினார் சி.எம்.

“யாருய்யா, இந்தத் தங்கவேல்? கேட்கும் எனக்கு நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகிய மாதிரி இருக்கு?”

“எனக்கும், அப்படித்தான் இருக்கிறது சார். உண்மை அதுதானே? அதைத்தான் அவர் சொல்கிறார். மக்கள் கூட்டம் கூடுகிறது அவரின் பேச்சைக் கேட்க. ஆரம்பத்தில் பத்து இருபது எனக் கூடினார்கள். இப்போது பத்தாயிரம், இருபதாயிரம் என கூடுகிறார்கள். அவர் பொத்தாம் பொதுவாகத்தான் பேசுகிறார். ஆனால் அவ்வளவும் உண்மை”

“நம் அரசு அவருக்கு இணக்கமாக இருக்கும்படி, அவரின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு போடுங்கள். முடிந்தால் அவரின் வீட்டுக்கு நான்கைந்து காவல்காரர்களைப் போடுங்கள். அரசு அவரைப் பாதுகாக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள் டி.ஜி.பி”

“நிச்சயம் சார், இவரின் பேச்சுக்களை மக்கள் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்த ஆட்சியில் நீங்கள் ஜெயிலில் கிடப்பீர்கள் சார்”

“ஆமாய்யா, அதான் எனக்கும் பயமாயிருக்கு”

* * *

”மாயாண்ணே...! மாயாண்ணே...!”

கூக்குரலிட்டான் சநி என்கிற சந்து.

நாவல் என்பது ஒரு பொருள். அது பிரக்ஞை அற்றது. மாயனை நாவல் ஆசிரியன் பொருள் எனச் சொல்லி விட்டான். மாயனுக்கு கோபம் கொப்பளித்து வருகிறது. சந்துவின் கூக்குரல் மாயனுக்கு கேட்கிறது. 

* * *

அம்மே நாராயணி !
தேவி நாராயணி ! !
லக்‌ஷுமி நாராயணி !!!

* * *

தொடரும்





Saturday, August 24, 2019

நிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது

”டாக்குமெண்ட்  தவறு என்றால்  சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள். 

“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை,  வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன். 

”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.

அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.

கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005  உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர்  மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள்.  தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது. 

இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள். 

வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல்,  பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.

பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை. 

சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.

டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.

கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார். 

கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். 

வாழ்க வளமுடன்....!

நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி


Tuesday, February 19, 2019

நரலீலைகள் - நான் யார்? - 1






நரலீலைகள் - நான் யார்? - 1



உங்களுக்கு வணக்கம். நான் நாவல் பேசுகிறேன். இதுவரையிலும் நீங்கள் நாவலின் கதாபாத்திரங்கள் பேசியதாகத் தான் படித்திருப்பீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டே இருப்பவை. ஆனால் நாவல் என்கிற நான் எப்போதும் மாறுவதில்லை.  நான் எப்போதும் இருந்து கொண்டிருப்பவன். நான் அழிவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை. ஆனால் நாவலின் கதாபாத்திரங்கள் அழிந்து போகின்றவை. அழிக்கப்படுகின்றவை. இந்த நாவலின் கதாபாத்திரங்களும் கூட அவ்வாறனவைதான். அதனாலென்ன? நாவல் ஆகிய நான் அழிவதில்லை. 

உங்களுக்கும் கூட குழப்பமாக இருக்கலாம். ஏனென்றால் இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் அடைமொழியாக இருக்கிறது. இவன் பொதுப்பெயரில் வந்து குழப்புகின்றானே என நீங்கள் சித்தம் கலையலாம். ஆகவே எனக்கொரு பெயர் வைத்து விடுகிறேன் முதலில். என்னை நீங்கள் மாயன் என்று அழைக்கலாம். அல்லது நினைவில் வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்களுடன் உரையாடுவது யார் தெரியுமா? நாவல் அல்ல மாயன்! மாயன் தான் நாவல். நாவல்தான் மாயன். புரிந்து விட்டதா?

நான் கடவுளும் அல்ல. கடவுள்களுக்கு கூட உருவங்கள் இருக்கின்றன. மொழிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அவ்வாறு அல்ல. எல்லா மொழிகளும், எல்லா கடவுள்களும் எனது கட்டுக்குள் அடைக்கப்பட்டவை.

முதலில் இந்த நாவலுக்குரிய படைப்பாளியாகிய ஆசிரியனைப் பற்றிப் பேச வேண்டும்.  இந்த நாவலுக்கு ’நரலீலைகள்’ என்று பெயர் வைத்திருக்கின்றான் இந்தப் பயல். 2009ம் வருடம் எழுதப் போவதாக இதே பிளாக்கில் அறிவிப்புக் கொடுத்தான். ஆஹா எனக்குள் புதிதாக கதாபாத்திரங்கள் உருவெடுத்து உலா வரப் போகின்றார்கள் என்ற எனது சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்  போட்டான் இந்தப் படைப்பாளி. கிட்டத்தட்ட பத்து வருடம் காத்திருந்தேன். இன்றைக்கு ஆரம்பித்து விடலாம் என்று அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் பாருங்கள் நான் உங்களுடன் உரையாட வந்து விட்டேன். அவன் வெளியில் நின்று கொண்டிருக்கின்றான்.

”அதெப்படி என் வாசகர்களுடன் நீ உரையாடலாம்?” என என்னை அவன் முறைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் புரியாது. ஒரு நாவல் தான் கதையைச் சொல்லும். அதைப் படைப்பவன் படைப்புக்குள் மறைந்து போகின்றான். எப்படி தன் குழந்தைக்குள் தகப்பன் மறைந்து விடுகின்றானோ அப்படி. 

இனி அவனுக்கு வழி விட்டு நாவலைத் தொடரச் செய்யலாம் என நினைக்கிறேன். அடிக்கடி உங்களுடன் உங்கள் மாயனாகிய நாவல் ஆகிய நான் உரையாட வருவேன் இந்த ஆசிரியன் அசந்து உறங்கும் வேளையில் நாம் நம் கச்சேரியை ஆரம்பிக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது நாவலாகிய மாயன்!



* * * * * *
19/02/2019


தொடரும்.....!

Friday, September 23, 2016

ஜலாலுத்தீன் ரூமி கவிதையை முன்வைத்து ஓஷோவுடன் உரையாடல்

காதலன் தன்னுடைய காதலியின்
வீட்டுக் கதவைத் தட்டுகிறான்
உள்ளிருந்து குரல் வருகிறது
“யாரது?”
காதலன் கூறுகிறான்

”நான் உன் காதலன்
என்னைத் தெரியவில்லையா?
என்னுடைய காலடி
ஓசையை மறந்து விட்டாயா?
என்னுடைய குரலும்
உன் நினைவை விட்டு
நீங்கி விட்டதா?”

உள்ளிருந்து குரல் வருகிறது

“கதவு உனக்காகத் திறக்கப்படுவதற்கு
இன்னும் நீ தகுதி பெறவில்லை
இன்னும் உனக்கு
அந்த அதிகாரம் வரவில்லை”

அந்தக் காதலன் திரும்பிச்
சென்று விட்டான்.
பல வருடங்கள் திரிந்தலைந்தான்.
காதலைத் தேடுவதில்
அவன் முழு மூச்சுடன்
ஈடுபட்டான்
காதலைத் தெரிந்து கொள்ள
முயன்று
கொஞ்சம் கொஞ்சமாக
அவன் காதலைத் தெரிந்து கொண்டான்.

அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
” நீயே தான்!”
உடனே கதவு திறக்கிறது.

ஜாலாலுத்தீன் ரூமியின் கவிதை இது. ஓஷோ இந்தக் கவிதை முடிவடையவில்லை என்கிறார். இன்னும் நான்கு வரிகள் சேர்ந்திருந்தால் நலமாயிருக்கும் என்கிறார். நீ என்றால் கதவு திறந்திருக்கக் கூடாது என்கிறார் ஓஷோ.

( ஜலாலுதீன் முகமது ரூமி - 1207 - 1273ல் வாழ்ந்த மிகச் சிறந்த கவிதையாளர்)

நீயும் நானும் எதிரெதிர் பதங்களே, ‘நீ’ என்பதன் முழு அர்த்தமும் ‘நான்’ என்பதிலேயே அடங்கியுள்ளது. எதுவரை ‘நான்’ உள்ளதோ அதுவரை ‘நீ’ யிலும் அர்த்தமுண்டு. ‘நான்’ என்பதே இல்லை என்றாகும் போது ‘நீ” என்பது யார்? என்கிறார் ஓஷோ. காதலனும் இருக்கக்கூடாது காதலியும் இருக்ககூடாது என்று முடித்து விடுகிறார் ஓஷோ. 


(ஓஷோ - தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மிகச் சரியான மனிதர்)

ஜலாலுத்தீன்  ரூமியை நீங்கள் சந்தித்தீர்களோ இல்லையோ ஓஷோ, இந்தக் கவிதைக்கு ஒரே ஒரு வார்த்தையில் முடிவுரை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல வந்தது இதுவாகக் கூட இருக்கலாம் அல்லவா ஓஷோ?

மீண்டும் அந்தக் கவிதை...............!


அவன் திரும்பி வந்தான்.
மீண்டும் அதே கதவைத் தட்டினான்.

உள்ளிருந்து அதே குரல் கேட்கிறது
“யாரது?”
அதற்கான பதில் தருகிறான்
”காதல்”
உடனே கதவு திறக்கிறது.

சரிதானே ஓஷோ?

நன்றி : ஓஷோவின் நாரதரின் பக்தி சூத்திரம் மற்றும் ரூமி

Tuesday, August 18, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன. 

விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர். 

ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர். 

நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான். 

அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?

கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.

தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது. 

அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.

அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன??? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.... !

Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Friday, July 11, 2014

எனது பிறந்த நாள் கொண்டாட்டம்

ஜூலை 1 அடியேனின் பிறந்த தினம். காலையில் பசங்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மனையாளுடன் வெள்ளிங்கிரி நோக்கிக் கிளம்பினேன். பூ மார்கெட் சென்று கொஞ்சம் மலர்களை வாங்கிக் கொண்டு, அப்படியே கோவைக் கொண்டாட்டம் அருகில் இருக்கும் காய் கறிக்கடையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக் கொண்டு குஷி மூடுடன் ஆக்டிவாவை விரட்டினேன். குளுகுளுன்னு காற்று வீச மனது மலர்ச்சியுடன் இருந்தது.

சிறுவாணிக்குச் செல்லும் சாலையில் இருந்து செம்மேடுக்குப் பிரியும் சாலைக்கு முன்னே, இடது பக்கமாய் ஒருவர் இள நீரை மரத்தில் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். அங்கு நிறுத்தி ஒரு இள நீரை வாங்கிப் பருகினேன். வெகு சுவையாக இருந்தது. அப்படியே இன்னொரு இள நீரை வாங்கி வைத்துக் கொண்டு கிளம்பினேன்.


ஸ்வாமியிடம் சென்று மலர்களை வைத்து  அலங்கரித்து அவரின் நெஞ்சின் மீது மலர்ந்திருக்கிறது ஒரு தாமரை மலர்,  அதை அவருக்குச் சூடி விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனையாள் வாசியோகப்பயிற்சியில் அமர்ந்திருந்தார்.

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அமைதியாக இருந்தது. ஒரு சத்தம் இல்லை.

எனது குரு ஜோதி ஸ்வாமி வர அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

இனி அடுத்த வருடம் வரைக்கும் அந்த அமைதி என்னுள் இருக்கும்.

எனது பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் இல்லாமல், புதுத்துணி இல்லாமல், மிட்டாய்கள் இல்லாமல், நுகர்வோர் கலாச்சார அடிமையாகாமல் அமைதியாய்க் கழிந்தது. 

பிறந்த நாள் அன்று அன்னையிடமும், குருவிடமும் ஆசி வாங்குவதை விட இந்தக் கொண்டாட்டங்களால் என்ன பயன்? என்று எனக்குத் தெரியவில்லை.

* * *



Friday, May 3, 2013

என்ன செய்வீர்கள்?

நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.

அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. 

“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.

“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.

”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.

அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.

கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது? 

ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.

எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.

பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ

காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ

மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி

- குதம்பைச் சித்தர்




Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, January 24, 2012

நடிகர் விஜய்யின் சரியான நகர்தல்


குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.

ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது.  இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.

இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.

இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன.  இதன் காரணமாக கூட நல்ல  நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.

இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.

விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, January 23, 2012

அழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)

பல வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டெக்ஸ்டைல் இறக்குமதியாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பையிங் ஏஜென்டாக இருந்தேன். ஜெர்மனியில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றின் சீருடை ஒன்றின் ஆர்டருக்காக கோவை வரும் சூழ் நிலை ஏற்பட்டது. நானும், வாசுதேவன் என்கிற நண்பரும் காரில் வந்து கொண்டிருந்த போது பல்லடம் தாண்டி ஒரு வளைவு வரும். வலது புறமாய் பெட்ரோல் பங்க் ஒன்று கூட இருக்கிறது. அது ஒரு எஸ் பெண்ட் போல இருக்கும். அந்த வளைவில் அடிக்கடி டிராஃபிக் ஆகி விடும். எங்களின் கார் (எனக்குப் பிடித்த ப்ரீமியர் 118 கார் ) முன்னே ஒரு பெண் எங்களைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தார்.

நண்பர் வாசுதேவன் கிரீச்சிட்டார். ”தங்கம், அங்கே பாருங்க அழகின் அற்புதத்தை!” என்றார் சத்தமாய். நிச்சயம் இது நாள் வரையிலும் நான் அப்படியான அழகுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. ஒரு கணம் என் மூச்சு நின்று பின் நிதானமானது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பிரம்மன் மறந்து போய் படைத்து விட்ட அற்புதத்தின் பேரழகி அப்பெண். நானும் என் நண்பரும் மூச்சடைத்து, பிரம்மையின் உச்சத்தில் மித மிஞ்சிய இன்பத்தில் ஆழ்ந்தோம். பார்ப்பதில் கூட இப்படி ஒரு இன்பம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டோம். இன்றைக்கு எங்கள் சார்பு நிறுவனமான ஃபெமோ மாடலிங் கம்பெனியில் எண்ணற்ற பெண்கள் விளம்பரங்களுக்காகவும், சினிமாவில் நடிப்பதற்காகவும் எங்களை அணுகுகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான பல மாடல்கள் எங்கள் நிறுவனத்தின் மாடல்கள். இருப்பினும் அவர்களில் எவரும் இதுகாறும் நான் அன்று கண்ட “அற்புத அழகியினை” ஒத்தார்கள் இல்லை.

ஒரு பெண் அழகு என்று எப்படி உணருவது என்று கேட்கத் தோன்றும். தோற்றத்தை வைத்து அதை உணரலாம். பிற விஷயங்கள் பற்றி எழுத கூச்சமாய் இருப்பதால் விட்டு விடுகிறேன். வில் இருக்கிறதே வில் அதை பார்த்திருப்பீர்கள். காமத்தின் கடவுள் மன்மதன் கையில் இருக்கும் மனிதர்களைக் கொல்லும் வில், அதை நேரில் நிறுத்திப் பார்த்திருந்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்திருக்க முடியும். இதற்கு மேல் விளக்கமாய் எப்படி எழுதுவது? இதோ ஒரு வில்லின் படம். மன்மதனின் கையில் வில் ஏன் என்ற கேள்விக்கு பதிலை நான் அந்த அழகின் அற்புதப்படைப்பினைக் கண்ட போது அறிந்து கொண்டேன்.



( எனக்குப் பிடித்த கடவுள் ராமரின் கையில் வில். இவர் கையில் வில் ஏன் என ஒரு கணம் எண்ணிபாருங்கள். கடவுள் படைப்பின் மகத்துவத்தினை உணரலாம், பிரமிக்கலாம், புரிந்து கொள்ளவே முடியாத கடவுள் படைப்புகளின் மகத்துவத்தை அறியலாம் )

ஜானி என்ற படத்தில் ஸ்ரீதேவி அப்படியான தோற்றத்தில் வருவார். அவருக்குப் பின்பு வந்த எந்த ஒரு கதாநாயகியும் அவ்வாறான தோற்றத்தில் இல்லை.

இளையராஜாவின் “தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?” என்ற பாடலை கேட்கின்ற போதெல்லாம் என் மனதின் நினைவுகளூடே அப்பெண்ணின் அழகிய முகம் இடறிக் கொண்டிருக்கும். இதோ அப்பாடலையும், இப்பாடல் சம்பந்தமான சுவாரசியமான ஒரு பதிவினையும் படித்துப் பாருங்கள்.




பாட்டைக் கேட்கின்ற போதே தாலாட்டும் இளையராஜாவின் இசையமுதம் உங்களைத் தழுவிக் கொள்ளும். மார்கழி மாத விடிகாலைக் குளிரில் கோலம் போடும் அம்மாவைப் பார்க்க முயலும் குழந்தையை, குளிருக்கு இதமாய் தழுவி தன் முந்தானையால் மூடிக் கொள்ளும் அம்மாவின் அணைப்புப் போல.

- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்



Sunday, January 22, 2012

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ்ணாவும்

கரூர் பசுபதிபாளையத்தைக் கடந்து செல்லும் அமராவதி ஆற்றின் கிழக்கிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் சென்றால்,  வழியெங்கும் சாயப்பட்டறைகளும், சிதைந்து போன மடங்களும், பாதசாரிகள் தங்கிச் செல்லும் கற்களால் ஆன சிதைந்த மண்டபங்களும் வரும். அதைத் தொடர்ந்து சென்றால் பச்சைப் பசேல் வயல் வெளிகளும், படர்ந்து விரிந்த ஆலமரமும், பிராமணாள் வீதி ஒன்றும் கண்களில் படும். தென்னஞ்சோலைகளும், மரங்களும் நிரம்பிய பாதையில் சென்றால் சிவப்பு சாயம் பூசிய கோயில் ஒன்று தென்படும். அது தான் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி அடைந்த திருக்கோயில்.  அங்கே ஒரு ஆஸ்ரம் கூட இருக்கிறது.

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றித் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் பிளாக்கைப் படித்துப் பார்த்துக் கொள்ளவும்.




(சன்னதிக்கும் செல்லும் கோவிலின் முன்புறத் தோற்றம் )


இரண்டு வருடங்களாக ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு நெரூர் சென்று விடுவேன். கோவில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் காவிரி ஆற்றில் இரண்டு மணி நேரக் குளியல். துணிகளைத் துவைத்துக் காய வைத்து பின்னர் சரியாக பனிரெண்டு மணிக்கு கோவிலுக்குள் செல்வேன்.  காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அய்யர் கண் தெரியாதவர். அருமையாக அர்ச்சனை செய்வார். பின்புறம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி ஆன இடத்திற்குச் சென்று அமைதியாக பத்து நிமிடம் தியானம். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி தென்படும் அவ்விடத்தில்.  நடை சாற்றிய பிறகு கோவிலின் வெளியே உள்ள நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பேன்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பி, இருப்பிடம் வந்து சேர்வேன். இந்தக் கோவிலுக்கு இளையராஜா போன்ற மிகப் பிரபலமான பலர் வந்து செல்வதாகச் சொல்வார்கள். வட நாட்டில் இருந்து பலர் வருவர்.

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மீது லோக்யாயுக்தா ஊழல் விசாரணை தொடர்கிறது என்ற செய்தியை படித்தேன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலுக்கு அமைச்சரின் பயணம் பற்றிப் படித்தேன்.  பிரம்மேந்திராள் சமாதி மீது எழும்பியிருந்த வில்வ மரம் பட்டே போய் விட்டது என்ற செய்தியையும் படித்தேன். மனதுக்குள் வெறுமை மண்டியது.

ஒரு முறை டிஸ்கவரி சானலில் அருமையான நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. பெரும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்கும் இடங்களில் வசிக்கும் காட்டுவாசிகள் கோடையில் தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடிக்க முடியாது.  தண்ணீர் இன்றி வாழ முடியாதே, ஆகவே எப்படியாயினும் தண்ணீர் இருக்குமிடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டுமல்லவா?  தண்ணீர் இருக்கும் இடங்களை குரங்குகள் தெரிந்து வைத்திருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். குரங்குகளை வைத்து அவ்விடங்களைக் கண்டுபிடிக்க இவர்கள் உத்தி ஒன்றினைக் கையாள்வார்கள். 

மரமொன்றில் துளையொன்றினைச் செய்வார்கள். அத்துளை வாயில் சிறிதாய் இருக்கும். ஆனால் உட்புறம் பெரிதாய் அகண்டு இருக்கும். சிலர் ஒன்று சேர்ந்து பல குரங்குகளை அம்மரத்தினடிக்கு விரட்டி வரும் போது, ஒருவர் நல்ல பெரிய பெரிய உப்புக் கட்டிகளை அம்மரத்தின் துளைக்குள் போடுவார். அதை அக்குரங்குகள் பார்க்கும் படிச் செய்வார்கள்.  அவ்வாறு செய்து விட்டு செடிகொடிகளுக்குள் மறைந்து கொள்வார்கள். ஏதோ வெள்ளையாக துளைக்குள் போட்டிருப்பதைக் கண்ட குரங்குகளில் ஏதோ ஒன்று துளைக்குள் கையை விட்டு உப்புக் கட்டிகளை எடுத்து விடும். உள்ளங்கைக்குள் உப்புக் கட்டி வந்தவுடன் கை விரிவடைந்து விடுமல்லவா? துளையில் கை மாட்டிக்கொள்ளும். குரங்கோ கட்டியை விடாது கையை வெளியில் எடுக்க முயற்சிக்கும். உப்புக்கும் ஆசை, கைக்கும் ஆசையாய் குரங்கு படாத பாடு படும். உடனே காட்டுவாசிகள் குரங்கிடம் சென்று அதைப் பிடித்து இடுப்பில் ஒரு கயிறும், காலில் ஒரு கயிறுமாய் கட்டி மரத்தோடு பிணைத்து உப்புக்கட்டிகளை வெளியில் போடுவார்கள். மரத்தின் துளையிலிருந்து குரங்கின் கையையும் விடுவிப்பார்கள். ஆசை ஆசையாய் உப்புக்கட்டியை விழுங்கும் குரங்கினை நக்கலுடன் பார்த்து விட்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்.

உப்பைத் தின்றால் தாகமெடுக்கும் அல்லவா? ஒரு நாள் முழுக்க தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் குரங்கு.  மரத்தோடு கட்டிக் கிடப்பதால் தவித்து உருண்டு புரண்டு கொண்டிருக்கும். மறு நாள் வந்து குரங்கினை அவிழ்த்து விட்டு அது செல்லும் பாதையில் அதனுடன் ஓடுவார்கள். தாகத்தால் தவித்த குரங்கு தண்ணீர் இருக்கும் இடம் தேடி கண்மண் தெரியாமல் படு வேகத்தில் செல்லும். காட்டுவாசிகள் குரங்கினை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

ஐந்தறிவு உள்ள குரங்கிற்குத் தெரியாது உப்பைத் தின்றால் தாகம் எடுக்கும் என்பது. ஆனால் மனிதனுக்குத் தெரியுமே. இருப்பினும் அவன் ஏன் பாவத்தினைத் தொடர்ந்து செய்கிறான்? விதி என்பதா? இல்லை ஆசை என்பதா? இரண்டும் வேறு வேறு அல்ல. விதியின் மறுபெயர் தான் பேராசை.

நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும் நாமே உருவாக்கி கொண்டவைகள். தெரிந்து செய்யும் தவற்றை இறைவன் என்றைக்குமே மன்னிக்க மாட்டான். தெரியாமல் செய்யும் தவறுகள் தவறுகளே அல்ல என்கின்ற புண்ணிய நூல்கள். இரும்புத்தாது ஏற்றுமதியில் நான் கண்ட அக்கிரமங்களுக்கு சாட்சியாய் விளங்கியவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம் அவர்களே அன்றி வேறு யார்?

ஏழேழு ஜென்மப் பிறப்பெடுத்தாலும் செய்த பாவம் தலைமுறைக்கும் வரும் என்கின்றார்கள் முன்னோர்கள். எந்தக்  கோவிலுக்குச் சென்றாலும், கோடி பேருக்கு அன்னதானம் செய்தாலும் பாவத்தின் சம்பளம் கிடைத்தே ஆகும். வேலையை செய்தால் கூலி கிடைக்கும் அல்லவா?

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, January 21, 2012

சாரு நிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாஷமும் தொடர்ச்சி 3

அண்ணாத்துரை அவர்கள் முதலமைச்சராய் இருந்த காலத்தில் அவருக்கு ஆஃபரேஷன் செய்ய வேண்டி நாள் குறித்தார்கள். அன்று காலையில் டாக்டர் அண்ணாவிடம் ஆஃபரேஷனுக்கு தயாராகும் படிச் சொல்ல, மறு நாள் ஆஃபரேஷனைத் தள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணா. காரணம் என்ன என்று டாக்டர் வினவியதற்கு, தான் ஒரு நூலைப் படித்துக் கொண்டிருப்பதாகவும், இன்று இரவுக்குள் நூலை படித்து முடித்து விடுவேன் என்றும், ஒரு வேளை ஆஃபரேஷன் முடிவு தவறாகி விட்டால் நூலைப் படிக்காமலே இறந்து போய் விடுவேன் அல்லவா என்றும் சொல்லியும், தன் உடல் நலத்திற்காக நடக்க வேண்டிய ஆஃபரேஷனை நூலைப் படிப்பதற்காக தள்ளி வைத்தார் என்றுச் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் நூலுக்குக் கொடுத்த மரியாதையை, மகத்துவத்தை தற்போது வெளியாகும் நூல்களுக்கு கொடுக்க முடியுமா என்பது தான் என் கேள்வி.

’பன்னியூர் படாடோபசர்மா’ நூலின் முன்னுரை, தெளிவுரை எல்லாம் இப்படிப்பட்ட நூலாசிரியரே இனிப் பிறக்கப் போவதில்லை என்று பறைசாற்றின. நூலின் சுருக்கத்தைத்தான் நீங்கள் தொடர்ச்சிப் பதிவில் படித்திருப்பீர்களே? இந்த நூலில் இருக்கும் முன்னுரையும், தெளிவுரையும் வாசகனை தவறான முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. நான் இந்த நூலுக்காக திரும்பவும் கிடைக்கவே கிடைக்காத எனது நேரத்தில் இரண்டு மணி நேரம் செலவழித்திருக்கிறேன். இரண்டு மணி நேரம் செலவழித்துப் படிக்க வேண்டிய நூலா இது என்று நீங்களே சொல்லுங்கள்? பாலியல் உணர்வினைத் தூண்டியதைத் தவிர பெரிதாக இந்த நூல் வேறோன்றினையும் தரவில்லை. எனக்குமட்டுமல்ல, படிக்கும் எவருக்கும் இதைத்தான் அந்த நூல் தரும் என்பதற்கு நான் முன்பு எழுதிய சுருக்கமே சாட்சி.

ஒரு வயதானவன் இளம் பெண்ணைப் புணருவதும், தாயைத் தனயன் பெண்டாள்வதும், கூட்டிக் கொடுப்பதை தொழிலாய் வைத்திருப்போரை பெரும் தனக்காரர்கள் அணுகுவதும் தான் இலக்கியமா? அதுதான் நாவலா? இதைத்தான் நாவலுகின் பிதாமகர் எழுதினாரா? இதைப் படித்துதான் தமிழர்கள் புத்தகங்களை விரும்பினார்களா? இக்கதைக்கும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் “சரோஜாதேவி, மருதம், பருவ விருந்து, விருந்து” போன்ற புத்தகங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சமூகப் பிராணியான எழுத்தாளனின் படைப்புகள் சமூகத்தின் பிரதிபலிப்பு என்கின்றார்கள் இலக்கியவாதிகள். மேற்படி நூல் என்ன விதமான இலக்கியம் என்றுச் சொல்வார்களா? இன்றைக்கு புத்தக வாசிப்பு பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகின்ற வேளையில், இப்படியான தரமுடைய நாவல்கள் சமூகத்தின் பிரதிபலிப்பையா செய்கின்றன? தனி மனிதனின் எண்ண ஓட்டத்தினை நிறைவேற்றுவதாய்த் தானே இவ்வகையான நாவல்கள் வெளிவருகின்றன. இது போன்ற நாவல்களைப் படிக்கும் வாசகனுக்கு என்ன பலன் கிடைக்கும்?

எழுத்தாளர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்க வேண்டுமா, வேண்டியதில்லையா என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஆனால் அவனுக்கு நிச்சயம் சமூகத்தின் மீதான அக்கறை இருந்தே ஆக வேண்டும். மனிதன் ஒவ்வொருவனும் பிறரால் ஏதோ ஒரு வகையில் வாழ்விக்கப்படுகின்றான். மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்தைத் தாண்டி அவனால் வாழவே முடியாது. ஆக, அவன் தான் வாழும் சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

அதை விடுத்து, கண்டதே  கோலம் எழுதுவதே சிறந்த எழுத்து என்றுச் சொல்லும் எழுத்தாளர்களிடமிருந்து “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

எனது சகோதரியின் தோழி தற்போது பிரபல்யமாக இருக்கும் ஒரு நாவலாசிரியரை (இவர்களுக்கு ஏன் ஆசிரியர் என்று பெயர் வந்தது?) சந்திக்கச் சென்றிருக்கிறார். சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர், பின்னர் அஜால் குஜால் பேச்சினை ஆரம்பித்து, முதுகில் தடவ ஆரம்பித்திருக்கிறார். அரண்டு போன தோழி அவர் முகத்தில் காரித் துப்பி விட்டு வெளியேறி இருக்கிறார். ஒரு புகழ் பெற்ற ஃபிக்சன் நாவல்( நாவலா அதுகள்?) எழுத்தாளரின் ஆரம்ப கட்ட நாவல் ஒன்றினைப் படிக்கும் சூழ் நிலை ஏற்பட்டது. அது சுஜாதா என்று நினைக்கிறேன். அக்மார்க் செக்ஸ் கதை. வாலிபன் ஒருவன் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு கிரைம் கதை அது.

இது மட்டுமல்ல இன்னும் பலப்பல பிரபலமான எழுத்தாளர்களின் மறுபக்கத்தை பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்து ஒரு தவம் என்பார்கள். தமிழகத்தில் எழுத்து ஒரு வியாபாரம் என்று ஆகி விட்டது. சிறுபத்திரிக்கை எழுத்தாளர்களின் பல படைப்புகளை படித்திருக்கிறேன். அதெல்லாம் பெரும்பான்மையான வாசக தளங்களில் வெளியாவது இல்லை. ஃபேண்டசி எழுத்தாளர்களின் ‘தண்ணீரில் எழுதப்படும்’ எழுத்துக்களைத் தான் வாசக தளங்களின் பெரும்பான்மையானவை வெளியிடுகின்றன.
 
சமூகத்தின் எண்ண ஓட்டத்தினைக் காசாக்கும் மாயக்கலையை இன்றைய பல பிரபல்ய எழுத்தாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றார்கள். வெளிச்சம் நோக்கி ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகளாய் வாசகர்கள் மாறி தங்களின் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்கி விடுகின்றார்கள்.

சமூகத்தின் பிரதிபலிப்பை எழுதாத எந்த ஒரு படைப்பும் நிலைத்து நிற்பதில்லை. சினிமா தாக்கத்தில் செய்யப்பட்டும் விசிலடிச்சான் குஞ்சுகளின் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை உண்மைச் சம்பவம் போல உருவகித்து எழுதப்படும் எழுத்துக்கள் தண்ணீர் மீது எழுதும் எழுத்துக்களே. நாம் சிறிய வயதில் செய்திருக்கும் சில செயல்களை இப்போது எண்ணிப் பார்த்தால், நமக்கே வெட்கமாய் இருக்கும். அதுமாதிரியான செயல்களை இலக்கியமாக்கினால் அது எழுதுபவரின் அசட்டுத்தனம்தானே ஒழிய, மேதாவித்தனம் அல்ல.

வாசகர்கள் அசட்டுத்தனமான, விட்டேற்றியான, பாலியல் ரீதியான, வக்கிரங்கள் நிரம்பிய எழுத்துக்களை முன் ஜாக்கிரதையாக விலக்கி, நல்ல சிந்தனையையும், தெளிவும், அனுபவமும் தரக்கூடிய நல்ல புத்தகங்களை படிக்க முயல வேண்டும். அதை விடுத்து கிடைத்ததை எல்லாம் படிக்க ஆரம்பித்தால் பலன் மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரம் போய் விடும். அப்படியான புத்தகங்கள் கிடைக்காதவர்கள் நமக்காகவே வாழும் நம் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்கலாம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, January 12, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் தொடர்ச்சி

என் மனையாளை கலவரப்படுத்திய அந்த நாவலின் கதைச் சுருக்கம் கீழே. நிச்சயம் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

திகம்பரபுரியில் ”பன்னீயூர் படாடோபசர்மா” என்கிற வயதான ஜமீந்தார் வாழ்ந்து வந்தார். அவர் எப்படிப்பட்டவர் என்றால் ஒரு முறை கால்நடையாகவே ஐரோப்பாவைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, எதிர்ப்பட்ட பர்வதம் ஒன்று, இவரைக் கண்டதும் மனித உருவம் கொண்டு இவர் தாழ் பணிந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று, பின்னர் மீண்டும் பர்வதமாய் ஆனதாம். அதுமட்டுமின்றி இவர் தூங்குகின்ற போது, இரண்டு கண்கள் மூடி இருந்தாலும் மூன்றாவது கண் விழித்துக் கொண்டு அவர் யாரை நினைக்கிறாரோ அவரைப்பற்றி இவருக்குப் படம் போலக் காட்டுமாம். அந்தளவுக்கு பன்னீயூராரின் பிரஸ்தாபம். இப்படிப்பட்ட இவருக்கு ஒரு கையாள் இருக்கிறான். அவன் பெயர் ”ஸமரச சஞ்சீவி”, இவன் எப்படிப் பட்டவன் என்றால் மேற்கண்ட பர்வத நிகழ்ச்சியைப் பற்றி இவனிடம் பன்னியூர் ஜமீந்தார் சொன்னவுடனே, அதற்கு இந்த நிகழ்வைப் பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாகவும், பெயர் மறந்து விட்டபடியால், பன்னீயூரார் சொன்னவுடன் தான் அந்த மகானுபாவர் எஜமான் தான் என்று அறிந்து கொண்டதாகவும் சொல்லும் அதிபயங்கர புரட்டன். இந்தப் பன்னியூர் ஜமீந்தாருக்கு ”கட்டிக்கரும்பாள்” என்கிற இளவயது மனைவி. பன்னியூராருக்கு கட்டிக்கரும்பாளை வயதானதால்( அந்தக் காலத்தில் வயாக்கிரா இல்லை அல்லவா? பாவம் பன்னியூரார்)  மேட்டர் செய்ய முடியாத காரணத்தால் விரகதாபத்தில் தவிக்கும் இவளுக்கு ஜமீந்தாரின் முதல் மனைவியின் புதல்வன் மாதிருகாம கோலாகலனுடன் இரகசிய சந்திப்பு ஏற்பட்டு விடுகிறது.  அதை அட்சர சுத்தமாய் பார்த்து விடுகிறார் ஜமீந்தார்.

இது இப்படி இருக்க,  நித்ய கல்யாண விலாஸ் என்கிற மாபெரும் பல்பொருள் அங்காடிக்கு கதை செல்கிறது. இந்த விலாஸின் ஓனர் நித்யகல்யாணி அம்மாள் ஒரு விதவை. இவளின் கடைக்கு அருகில் மார்க்க ஸகாயர் என்பவரின் கடையும் உண்டு. மேலுக்குப் பார்க்க இது பல்பொருள் அங்காடி. ஆனால் உண்மையில் ஷோக் சுந்தரி, ஜில் மோகனா, டால் ரம்பாம் மற்றும் எலக்ட்ரிக் லட்டு போன்றோரின் கலைச்சேவைதான் பிரதானம். ஊரின் பெரும்தனக்காரர்கள் மார்க்க ஸகாயர் கடைவழியாய் இருக்கும் ரகசிய பாதை வழியாக நித்ய கல்யாண விலாஸுக்கு வருவர். அங்கு மேற்படி ஷோக், ஜில், டால், எலக்ட்ரிகின் ஸ்பெஷல் அலுக்கல், குலுக்கல்களை அனுபவித்து நித்ய கல்யாணி அம்மாவிற்கு பொருள் அளித்துச் செல்வர்.

இது இப்படி இருக்க, அங்கே ஜமீந்தார் தன் பையனே தன் பெண்டாட்டியை மேட்டர் பண்ணுகிறானே என்ற கோபத்தில் ஏதும் செய்ய இயலாமல் அறைக்குள் சென்று கோபத்தில் தத்தளிக்க, தந்தை சித்தியை மேட்டர் செய்வதைப் பார்த்து விட்ட கோலாகலன், ஸமய சஞ்சீவியிடம் சென்று கொஞ்சம் காசைக் கொடுத்து அப்பாவை எப்படியாவது சரிக்கட்டுமாறு சொல்கிறார். சஞ்சீவியும் ஜமீந்தாரரிடம் சென்று, கட்டெறும்பு கடித்த போது, ஏதேச்சையாக அங்கு வந்த கோலாகலன் ஆபத்திற்கு பாபம் இல்லையென்று முதுகில் இருந்த எறும்பை எல்லாம் கையால் எடுத்தும், முகத்தில் கடித்த எறும்பை எல்லாம் வாயால் ஊதியும் விட்டுக் கொண்டிருந்த போதுதான், நீங்கள் பார்த்தாகவும், உங்கள் பையன் ஒரு பெண்ணை விரும்பிக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் போட்டு விட பையன் மேல் சந்தேகம் தீர, தன் உறவுக்காரப் பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் செய்து  வைக்க, கட்டிக்கரும்பாளையே கேட்டுக்கொள்கிறார். ஆக கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் எந்த வித தொந்தரவும் இன்றி இனி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஜமீந்தாரரின் உறவுப் பெண் குயில் மொழியாளை அழைத்து வந்து ஸமய சஞ்சீவி கோலகலன் தன் சித்தி கட்டிக்கரும்பாளை கட்டியணைத்து மேட்டர் செய்வதைக் காட்டுகிறான். அதைப் பார்த்து எரிச்சல் படும் குயில் மொழியாளுக்கு மேட்டரின் மீது ஆசை வந்து விடுகிறது.

இது இப்படி இருக்க, நித்ய கல்யாண விலாஸில் கிளியரன்ஸ் சேல் நடக்கிறது. ஊர்ப் பெரிய மனிதர்கள் அனைவருக்கும் விருந்தான மேற்படிப் பெண்களை யாரோ ஒருவருக்கு மொத்தமாய் வப்பாட்டியாயை வைத்துக் கொள்ள சிலருக்கு கடிதம் அனுப்பு வைக்கிறாள் நித்யகல்யாணி அம்மாள்.இதற்குள் சவுடாலப்பர் என்கிற ஒரு போலீஸ் அதிகாரி நித்யகல்யாணி விலாசுக்கு வந்து விசாரணை என்கிற பேரில் மேட்டருக்கும். மாதா மாதம் வசூலுக்கும் ஏற்பாடு செய்கிறான். இவன் பேரில் ஒரு புரட்டு இருக்கிறது.

எண்பது வயது கந்தர்ப்பபுரியார் வாயில் எச்சில் வழியும் உடலுக்காரர். அவருக்கு ஜில் மோகனாவை விற்கிறாள். பரசுமண் ஸதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் என்கிற பரிசுத்த பாப்பையா என்கிற ஃபாதருக்கு டால் ரம்பாவை விற்கிறாள். அதிமோக லீலாவதி என்கிற பெண், இரவில் கட்டுக்கலையான ஆண்களை தூக்கி வந்து கண்களைக் கட்டு ஜல்லாபம் செய்கிறாள். ஒத்துக் கொண்டவர்களுக்கு உயிர் மிச்சம். ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு உயிர் போகும். இப்படியான ஒரு பெண்மணிக்குப் பிறந்தவன் செல்லதுரை, சிறு வயதிலேயே அம்மாவின் அஜால்குஜால் வேலைகளைப் பார்த்து, பயலும் மேட்டர் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அவனுக்கு எலக்ட்ரிக் லட்டுவை விற்கிறாள் நித்யகல்யாணி. ஒருவழியாக கிளியரன்ஸ் சேல் முடிகிறது.

இதை அறிந்து கொண்ட சவுடாலப்பர் தனது நண்பர்களின் உதவியால் மேற்படி மூவரிடமிருந்து பெரும் பணம் பறிக்கின்றான். இதற்குள் ஸமய சஞ்சீவி விரகதாபத்தால் தவிக்கும் குயில் மொழியாளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறான். கனடா தேசத்துக் கவர்னர் பையன் ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாரை குயில் மொழியாளுக்கு அறிமுகப்படுத்தி, ரகசிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஏனென்றால் பன்னீயுரார் குயில் மொழியாள் அப்பாவிடம் பெரும் பணத்தை கடனாகப் பெற்று அதை குயில் மொழியாளுக்கு எழுதி வைத்து விடுகிறார். இந்தச் செய்தியை ஜமீந்தாரரிடம் நைச்சியமாய்ப் பேசி கறந்து விடும் சஞ்சீவி தன் பையனையே ரைட் ஆனரபிளாக மாற்றி குயில் மொழியாளுக்குத் திருமணம் செய்விக்க முயலும் போது, உண்மை ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியார் தடுத்து குயில் மொழியாளை திருமணம் செய்து கொள்கிறார். ஸமய சஞ்சீவியையும், அவன் மகனையும் போலீஸார் கைது செய்கின்றனர்.

கோலாகலனும், கட்டிக்கரும்பாளும் கட்டிப்புரண்டு கொண்டிருப்பதை கண்டு விடும் ஜமீந்தாரர் என்ன செய்வது என்று தெரியாமல் மயக்கத்தில் கிடக்க, மனச்சாட்சி உறுத்தும் கட்டிக்கரும்பாள், கோலாகலனை மறக்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தன் சொத்தைத் தான் இதுவரை பன்னீயூரார் அனுபவித்து வந்திருக்கிறார் என்று அறியும் குயில் மொழியாள் அவரை மன்னித்து அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு, சொத்துக்களை விற்று விட்டு, ரைட் ஆனரபிள் டம்பாச்சாரியாருடன் கனடாவிற்குச் செல்கிறாள்.

கதை இத்துடன் முடிந்து விட்டது. இது வெகு சுருக்கமாய் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் விலாவரியாக எழுதப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க.... என்ன ஆகும் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே?

தமிழக வாசகப் பரம்பரையை உருவாக்கிய இந்த நாவலின் ஆசிரியர் வடுவூர் கே துரைசாமி அய்யங்கார் என்பவர். நாவலின் தலைப்பு “பன்னீயூர் படாடோபசர்மா”.

கதை இத்துடன் முடிகிறது. நாளைக் கச்சேரி ஆரம்பம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Wednesday, January 11, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)




( சார் இங்கேயெல்லாம் பார்க்காதீங்க சார் )

போன் செய்து பிளாக் பற்றிப் பாராட்டிய திரு சக்கரபாணிக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் பத்தி ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. அப்பத்தி அவரின்  வாசகர் ஒருவரின் கடிதம். முதலில் அப்பத்தியைப் படித்து விடுங்கள். அப்போதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.


புத்தக திருவிழாவிற்கு சென்று 4000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதைப் பற்றி சிலாகித்து எழுதி இருந்தார் ராஜ ராஜேந்திரன். அப்பத்தியில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், மனிதருள் மாணிக்கம் பாஸ்கர் ராஜா என்ற விஷயம்தான்.  அப்பத்தியைப் படித்ததும், இப்பத்தி எழுதியே ஆக வேண்டுமென்ற திட்டம் மனதுக்குள் வந்து  விட்டது.

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் கதையைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.

காலையில் ஒன்பது மணிக்கு பவர் கட். என்னெவென்று பார்த்தால் ஷட்டவுனாம். வேறு வழி இன்றி அருகில் இருந்த அரசு நூலகத்திற்குள் நுழைந்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்து முன்னுரையைப் படிக்கலாமென்று பார்த்த போது, இலக்கிய சாதனையாளர்கள் என்று தலைப்பிட்டு நாவல் உலகின் பிதாமகன் இவர் என்று ஆரம்பித்திருந்தார்கள். தமிழில் வாசக பரம்பரையை உருவாக்க முனைந்தவர்கள் இவர்களில் ஒருவர் என்ற பதம் வேறு எழுதப்பட்டிருக்க, அடடே கடவுளாய் பார்த்து நம் கண்ணில் நல்ல ஒரு புத்தகத்தைக் காட்டி இருக்கின்றாரே என்று மகிழ்ந்தேன்.  அடுத்து தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி, சிவபாத சுந்தரம் என்கிற புத்தகத்திலிருந்து எடுத்து போட்டிருந்த பத்தியையும் படித்து, எனது முடிவை மனதுக்குள் சிலாகித்து, எனக்குள்ளே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். மிக நல்ல புத்தகம் தான் இது அதுவுமின்றி தமிழ் நாவல் உலகின் பிரமாதமான எழுத்தாளர் என்றும் முடிவு கட்டிக் கொண்டு, நிரம்பச் சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

தலைக்கு மூன்று தலைகாணியை வைத்துக் கொண்டு, பெட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். கடைசியில் என்ன ஆனது தெரியுமா? நாவலை முடித்ததும் மனையாள் அலற ஆரம்பித்தாள்.

”பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வரும் நேரத்தில் ஏன் இப்படி” என்று திட்ட ஆரம்பித்தாள். நாவல் படித்த வேகத்தில் அவள் திட்டியது நினைவில் ஏராமல், கஜினி முகம்மதுவின் படையெடுப்பு ஒன்றே நினைவில் நின்றாடியது. எனக்கு கஜினியை நிரம்பப் பிடிக்கும். கொண்ட கொள்கையில் விடாது நின்று ஜெயித்தவன் அல்லவா அவன். சிறு வயதில் பள்ளியில் படித்த பாடங்களை இது போன்ற தருணத்தில் கூட கடைபிடிக்கவில்லை என்றால் படித்ததற்கும், சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் கடைமைக்கும் அழகில்லை பாருங்கள்.

ஆனால், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றுச் சொல்வார்களே அதை நான் அன்று அனுபவித்தேன். என் விஷயத்தில் தொடர்ந்து கடவுள் கெடுதலையே செய்து வருகின்றார் என்பதையும் நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

என்னத்தைச் சொல்ல போங்கள் !

ஏதேதோ சொல்லி சரிக்கட்டுவதற்குள் பையனும் பொண்ணும் காலிங்பெல்லை அடிக்க அடச்சே இன்னும் எட்டு மணி நேரம் மின்சாரத்தடை வேறா என்று எண்ணிக் கொண்டு விதியை நொந்து கொண்டேன்.

அத்துடன் விட்டாரா கடவுள், அன்று மாலையில் மிகச் சரியாக உறவினர்கள் மூவர் வீட்டுக்கு வந்து விட என் நிலைமைய நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கடவுள் என் விஷயத்தில் ரொம்பவும் தான் இரக்கமற்று நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே? இப்படி என்னப் புலம்ப வைத்த நாவல் எது? அதன் ஆசிரியர் யார்? அதன் கதை என்ன என்று உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்குமே.

அது என்ன நாவல், ஏன் இப்படி எனக்கு ஆனது என்று அந்த நாவலின் கதையை சுருக்கமாய் எழுதுகிறேன். படித்த உடன் உங்களுக்கு எனது நிலைமை ஏற்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்க முடியும். அந்தக் கதை என்னவென்றால்....

திரு யுவகிருஷ்ணாவின் பத்தி ஒன்றரை நிமிடத்தில் படிப்பதாய் இருக்க வேண்டுமென்ற கருத்திற்காக மரியாதை கொடுத்து, நாவலின் கதையை நாளை எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

குறிப்பு : மேற்படி படம் நாவல் படித்த ஜோரில் போடப்பட்டது.

Saturday, January 7, 2012

மல்லிக்கட்டு ஐந்து ரூபாய்

தை மாதம் வந்து விட்டாலே மல்லித்தழை விலை குறைந்து விடும். மல்லித்தழைக்கு கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும். வளர்ந்து விடும். விளைச்சல் அதிகமாக வருவதால் விலை குறைந்து போய் விடும். கட்டு அஞ்சு ரூபாய்க்கு கீழே விற்றால், கொடுத்த கூலி இரு நூறு ரூபாய்க்கு கட்டுபடியாகாதே என்றார் ஒரு விவசாயி. உண்மைதான், விவசாயி உழுத கூலி கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது. முன்பு ஒரு தடவை கட்டு 25 ரூபாய்க்கு மல்லித்தழை விற்றது. இன்றைக்கு கருவேப்பிலை கிலோ 55 ரூபாய் என்றார்கள்.

மல்லித்தழை என்றவுடன் உங்களுக்கு நல்ல ஒரு சமையல் குறிப்பினை வழங்கிட வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது. மல்லித்துவையல் அல்லது சட்னி என்று இந்தக் குறிப்புக்குப் பெயர் வைத்துக் கொள்வோம்.

ஒரு கைப்பிடி அளவுக்கு சுத்தம் செய்த மல்லித்தழையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு கீற்று இளம் தேங்காய், சிறிய துண்டு இஞ்சி, கொட்டைப்பாக்கு அளவுக்கு புளி, இரண்டு பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்த் மிக்ஸியில் கொரகொரப்பாய் அரைத்துக் கொள்ளவும். மேற்கண்டவற்றை வதக்க தேவையில்லை. அரைத்த விழுதுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் அருமையான இயற்கையான “கொத்தமல்லிச் சட்னி” தயார். சூடாக இரண்டு இட்லியின் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதனுடன் இச்சட்னியைச் சேர்த்துச் சாப்பிட்டால் அமிர்தம்.

கொத்தமல்லித்தழையினை உணவில் சேர்த்து கொண்டால் என்னபலன் கிடைக்கும் தெரியுமா?

இதயம், மூளை, ஈரல் நன்கு பலப்படும். ரத்தம் சுத்தமாகும். கண்கள் நன்கு பளிச்சிடும். வாய் துர் நாற்றம் நீங்கும். ஆணுறுப்பில் புண்கள் அல்லது கொப்புளங்கள் வந்தால் இதன் நீரைப் பயன்படுத்தினால் புண்கள் ஆறும். அதுமட்டுமல்ல சொர சொரப்பான தோலில் கொத்தமல்லிச்சாறை தேய்த்துக் குளித்து வந்தால் தோல் பளபளப்பாகும். நன்கு பசியெடுக்கும். மேற்கண்ட் சட்னியைச் சாப்பிடுபவர்களுக்கு இத்தனை பலன்களைத் தரும் .

அவசியம் மேற்கண்ட சட்னியைச் செய்து தரச் சொல்லி வாரம் ஒரு முறை சாப்பிட்டு விடுங்கள். மூலிகைகள் எதுவும் அலோபதி மருந்து போல உடனடி பலன் தராது. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் பலன் தரும்.

திருமணமான ஆண்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் நீங்களே செய்ய முனையுங்கள்.

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

* * *

Friday, January 6, 2012

எச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து



எனக்குப் பிடித்த எழுத்தாளர், பேச்சாளர், பிடித்த அரசியல்வாதி திரு பழ.கருப்பையா அவர்கள். எதிலும் நேர்பார்வை, நேர்பேச்சு, பட்டென்று தெரிக்கும் வார்த்தைகள் என்று தூள் கிளப்பும் அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் தார்மீக கோபம். அவரின் கோபத்தை நான் பொங்கி வழியும் எரிமலையாய்ப் பார்ப்பேன். கண்ணதாசனைப் போன்ற குட்டை உருவம், எனக்குப் பிடித்த செட்டியார்த்தனமான பேச்சு, நடை என்று உள்ளத்தினைக் கொள்ளை கொண்டவர் திரு பழ.கருப்பையா.

ஒப்புக்கும் பெறாத விஜய் டிவியின் தொடர்களில் “என் பெயர் மீனாட்சி” என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் திரு.பழ கருப்பையா நடிக்கிறார் என்றவுடன், ஒரு நாள் கூட விடாமல் அத்தொடரைக் கவனித்தேன். அவர் வரும் சீனுக்காக காத்திருப்பேன். அந்தளவுக்கு அவரின் எழுத்தின் மீதும் எனக்கொரு ஈர்ப்பு.

அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.நேற்று முதல் நாள் தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றினை வாசித்த போது திடுக்கிட்டேன். அயோடின் உப்பால் தெற்கு தமிழர்கள் பெறும் நோய் பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே கீழே. நன்றி தினமணிக்கும், ஆசிரியர் திரு.பழ கருப்பையா அவர்களுக்கும்.

பெரிய பதிவாக இருக்கிறதே என்பதற்காக உடனே விண்டோவை மூடிவிடாமல் அமைதியாய்ப் படியுங்கள். உங்களின் நலத்திற்காக, ஏதாவது சிலர் தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்.

இனி, திரு பழ. கருப்பையாவின் ஆவர்த்தனம்....



வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


உப்பைப் பயன்படுத்தாத மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை.

உப்பைப்போல், அதையும்விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதும், இன்றியமையாததும் தண்ணீர்!

ஆகவே, மருந்துபோன்ற ஒன்று எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கு இருக்குமானால் ஒன்று அதைத் தண்ணீர் விநியோகத்தில் கலந்து செலுத்தவேண்டும் அல்லது உப்பில் கலந்து செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் குடிக்கின்ற தண்ணீர் முற்ற முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எல்லா மக்களும் பயன்படுத்துகிற உப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர முடியும்!

அயோடின்போன்ற இன்றியமையாப் பொருளை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க உப்பைக் கருவியாக்கி அதில் கலக்குமாறு சட்டம் செய்தனர் மத்திய அரசினர்.

இதைத் தென்னாட்டுக்கும் செய்தது அறிவுடைய செயல்தானா என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சிலருக்குக் கழுத்தில் கல்போன்ற கடினத்தன்மையுடன்கூடிய கட்டியோடு கழுத்து வீங்கித் தொங்கும்; கைகள் நடுங்கும்; கண்கள் துயில மறுக்கும். அதோடு மட்டுமல்ல; கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிடும்.

யார்யாருக்கும் பசிப்பது நியாயம். ஆனால், சாப்பிடச் சாப்பிடப் பசி அடங்காது என்பது கொடுமை அல்லவா? சாப்பிடுவதையே வேலையாகக் கொண்டவனும் எடை குறைந்து 70 கிலோ, 40 கிலோவாகிக் கரைந்து தென்னை விளக்குமாற்றுக் குச்சிபோல் ஆகிவிடுவான்!

சிலருக்குக் குரல் மாறிவிடும்! சிலருக்குக் குரலே போய்விடும்! கழுத்தினுள்ளே குரல்வளையில் உள்ள நாண்கள் விரிந்து ஒன்றோடொன்று ஒட்டுவதால் பேச்சு வருகிறது. தைராய்டு முற்றிப் புற்றாக மாறிய நோயாளிகளுக்குக் காற்றுதான் வரும்!

தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளவர்கள் இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த நோய் ஆண்களைவிடவும் பெண்களுக்கு மிகுதியாய் இருக்கிறது.

தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பி! இந்த நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புக் குறைபாடு ஹைப்போ தைராய்ட் என்னும் நிலை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இருக்குமானால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை அதன் தாக்கம் பெற்றுப் பிறந்து வளர்கையில் மந்தத்தன்மையுடன் வளரும்! மூளை வளர்ச்சி குன்றி இருக்கும்! நினைவுத்திறன் ஏறத்தாழ இருக்காது!

எந்தத் தாயும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் தேவைக்கேற்பத் தன் உணவை மாற்றிக் கொள்வாள்! வயிற்றுப் பிள்ளைக்குக் கேடுவரும் என்றால் அதற்குக் காரணமான எதையும் தவிர்த்துவிடுவாள்!

அவ்வளவு பொறுப்பான தன்னலமற்ற தாயும் தான் கருவுற்றிருக்கும்போது தனக்கிருக்கும் அயோடின் குறைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவள் காக்கத் தவறிய இடத்தில் பிள்ளையின் நலத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு மத்திய அரசு நுழைந்தது.

கருவுற்ற தாய்க்கு உள்ள அயோடின் குறைபாடு, அதனால் பிள்ளைக்குப் பாதிப்பு என்பது நடைமுறையில் மிகமிகக் குறைவானது. இதற்காக நாடு தழுவி அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டியதில்லை.

அயோடின் என்பது மிக இன்றியமையாததுதான்! இதன் குறைபாடு பத்தாயிரத்தில் ஒரு தாய்க்கு மட்டுமே இருப்பதாக சென்னை, அரசு தலைமை மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி அறுவைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் கூறுகிறார்.

எந்த ஒரு தாய்க்கு இந்த அயோடின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அவளுக்கு அந்த அயோடினை ஊட்டுவதை விடுத்து, ஒவ்வொரு பத்தாயிரத்திலும் மீதமுள்ள 9999 கருவுற்ற, கருவுறாத, விலக்கு நின்றுபோன தாய்மார்களுக்கும் சேர்த்து அயோடின் கலந்த உப்பைக் கட்டாயமாக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

தாய்மார்கள் மட்டுமில்லை; தந்தைமார்கள், தனயன்மார்கள், மகன்மார்கள் என்று ஒவ்வோர் இந்தியனுக்கும், அவன் பாலகனாயினும், சிறானாயினும், இளையோனாயினும், முதியோனாயினும் யாராயினும், ஒவ்வொருவருக்கும் உப்பு என்பது சாதா உப்பில்லை; அயோடின் கலந்த உப்பே என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தப் பணியினை மிதமிஞ்சிய உற்சாகத்தோடு செய்தவர் நம்முடைய திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐயா இராமதாஸின் மகன் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி! அவர் அப்போது மத்திய அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

முன்பெல்லாம் உப்பு என்றாலே சாதா உப்புதான்! அது பெருவெட்டாக இருக்கும்; உப்பு என்றால் அதில் உப்புக் கரிப்பு இருக்கும். அது கலப்படமற்றது.

அரிசியில் கல்லைக் கலப்பார்கள்; மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள்; பாலில் தண்ணீரைக் கலப்பார்கள்!

அதனால் நாம் ஒரு லிட்டரில் உள்ள அரை லிட்டர் தண்ணீருக்கும் பாலின் விலையே கொடுக்கிறோம். அரசியல்வாதியின் லஞ்சத்தால் எட்டு அங்குலத் தடிமன் இருக்க வேண்டிய சாலை நான்கு அங்குலமாக மெலிவுற்று விடுவதுபோல! எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி களவு!

இவையெல்லாம் கலப்படச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவையே!

ஆனால், உப்பைக் கலப்படச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தார்களே மத்திய அரசிலுள்ள அறிவாளிகள்! உப்பில் எதைக் கலப்படம் செய்யமுடியும்?

நம் தூத்துக்குடி உப்பளங்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் நிலைபெறுவதற்கே தவியாய்த் தவித்தன!

உப்பில் அயோடினைக் கலக்காவிட்டால், கலப்படச் சட்டத்தின்கீழ் தண்டனை என்றனர். கலந்தால் தண்டனை என்பதுபோய்க் கலக்காவிட்டால் தண்டனை என்னும் நிலை ஏற்பட்டது! இது காலவினோதம்தான்! இந்தச் சட்டத்துக்கு வேறு பெயர் சூட்டியிருக்கலாம்!

இப்போது முந்திய காலம்போல் அல்லாமல் சாதா உப்பாகிய பெருவெட்டு உப்பிலும் தண்டனை அச்சத்தால் அயோடின் கலக்கப்பட்டுவிடுவதால் நாடு முழுவதும் அயோடின் உப்பு மட்டுமே கிடைக்கிறது. சாதா உப்பு மருந்துக்கடையில் மாதிரிக்குக்கூடக் கிடைப்பதில்லை!

இது வடநாட்டுக்குத் தேவைதான்! மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ளோர், வடபகுதியினர் இவர்களுக்கெல்லாம் அயோடின் குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே, இவர்களுக்கு அயோடின் கலந்த உப்புத் தேவையாக இருக்கிறது.

ஆனால், கடற்கரையோர மாநிலங்களுக்கு மண்ணிலேயே அயோடின் இருக்கிறது. கடலுணவில், குறிப்பாக மீன் போன்றவற்றில் மிகுதியாகவே அயோடின் உள்ளது. தென்னிந்தியாவில் அயோடின் குறைபாடு உள்ளதாக மெய்ப்பிக்கப்படவில்லை.

இங்கும் சிறிய அளவிலான மலைப்பகுதியினர்க்கு அது தேவையாக இருக்கலாம். மத்திய அரசினர் ஒழுங்காகச் சோதனை செய்யவே இல்லை! இவர்கள் அதீதமான இந்திய ஒருமைப்பாட்டுக் காதலர்கள். வடக்கு நோயுற்றால் தெற்கும் சேர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்னும் கொள்கையாளர்கள்!

தார்ப் பாலைவனத்தின் தாக்கம் பெறும் தில்லியில் டிசம்பர் மாதக் குளிர் 3 டிகிரி செல்சியஸ்; உதடு வெடிக்கும்! ஆனால், எதிலும் நிதானமான தமிழ்நாட்டில் குளிர் என்பதே 27 டிகிரிதான்! வடநாட்டுக் கம்பளியை நாம் போர்த்திக்கொண்டால் வெந்துவிட மாட்டோமா? பவானிப் பருத்திப் போர்வை நமக்குப் போதாதா?

நல்லவேளை! ஒரே மாதிரியாகத்தான் போர்த்திக் கொள்ளவேண்டும் என்று இதற்கும் மத்திய அரசினர் சட்டம் செய்யாமல் விட்டார்களே!

பழையகாலச் சாதா உப்பு நமக்குக் கிடைக்காததால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?

நான்கு அயோடின் மூலக்கூறுகள் சேர்ந்ததுதான் ஒரு தைராக்சின். தைராக்சின் என்பது தைராய்டு சுரக்கும் இயக்குநீர். தைராக்சின் அளவோடு வெளிப்பட வேண்டும். அப்படி இருந்தால் அது நோயில்லை.

அது அளவுக்கு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் நோய்.

அது அளவில் குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்னும் நோய்.

அயோடின் கலந்த உப்பு மட்டுமே நம்முடைய சோற்றில், குழம்பில், ரசத்தில், மோரில், இட்லியில், தோசையில், நாம் உபரியாகத் தின்னும் முறுக்குவரையில் அனைத்திலும் மத்திய அரசின் சட்டத்தால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சேர்ந்துகொண்டு வருவதால், உயர் நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்தக் கட்டுரையை எழுதியவர், இந்தக் கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையினர், இந்த ஆராய்ச்சியைச் செய்த சென்னை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், செவிலியர்கள் மற்றும் தென்னிந்திய மக்களில் 35-ல் இருந்து 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான அயோடின் உப்பால் தைரோ டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் சிறிதளவாவது இருக்கும் என்கின்றனர்.

விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அது கூடுதலாக இல்லை என்பது ஆறுதலுக்கு உரியதா? இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைத் தென்னிந்தியர்கள் தின்றால் முழுவீச்சில் நோய் தாக்கலாம்!

நமக்கு அந்த நோயின் கூறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அயோடின் என்பது 70 வயது வரை வாழும் ஓர் நபருக்கு ஒரு தேக்கரண்டி அளவே தேவை. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர வேண்டும்!

அயோடினைத் தவிர்த்த சாதா உப்பு என்பதையே நமக்குக் கிடைக்காமல் மத்திய அரசு சட்டம் போட்டுச் செய்துவிட்டதால், அதிகப்படியான அயோடினால் தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியே சிதைவுற்று விடுகிறது.

ஆகவே, தைராய்டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் 10-லிருந்து 17 வயதுவரை உள்ள இளையோருக்கு 35 விழுக்காடு உறுதியாக இருக்கிறது. 50 விழுக்காடாக இருந்தாலும் வியப்பதற்கில்லை என்கிறார் டாக்டர் சந்திரசேகர். ரத்தத்தைப் பரிசோதித்து இதை அறியலாம் என்கிறார். இந்த நோய்க்கூறுகளால் இளைய தலைமுறையின் அறிவு மந்தப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

மூன்று பிள்ளைகளில் ஒன்று அழிவதற்கு மத்திய அரசின் சொரணை இல்லாத தடித்த தன்மைதானே காரணம்! அந்த ஒரு பிள்ளை நம்முடைய மகனாகவோ, மகளாகவோ இருந்தால்தான் நமக்கு உறைக்குமா?

ஜுவனைல் ஆட்டோ இம்யூன் தைராடிட்டிஸ் என்பது மத்திய அரசின் கொடையால் கிடைக்கும் அயோடின் கலந்த உப்பால் சிறு குழந்தைகளுக்கு வரும் நோய்!

அளவுக்கு மிஞ்சிய அயோடின், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியைச் சிதைத்துவிடுவதால், சிதைவுற்ற செல்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன உடனே நம் உடம்பிலுள்ள போலீஸ்காரனான இம்யூன் சிஸ்டம், ""எவனோ திருடன் வருகிறான்'' என்று தைராய்டு செல்லுக்கு எதிரான ஆன்ட்டி பாடீஸ்-ஐ உற்பத்தி செய்துவிடுகிறது

ஆன்ட்டி பாடீஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தைராய்டை அழித்துவிடும். முழுவதும் அழித்துவிட்டால் தைராய்டு இயக்குநீருக்கான மாத்திரையை நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

இந்த நோயின் எளியநிலையில் மாத்திரைகள்; உச்ச நிலையில் அறுவை மருத்துவம்; இந்த நோயின் இன்னொரு நிலை 10 விழுக்காடு புற்றுநோயில் போய் முடிகிறது.

தாமாக வருகிற கொடிய நோய் என்றால் அதை "முன்வினை' என்று ஏற்றுக்கொண்டு, வைத்தியம் செய்துகொள்வதோடு, இந்தப் பிறப்பில் புதிய பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம்!

மத்திய அரசின் யோசனையற்ற, ஆராய்ச்சியற்ற சட்டத்தால் கொடிய நோய் வரும் என்றால், நெஞ்சு கொதிக்கவில்லையா?

விஞ்ஞானத்தில் தவறுகள் நேரும்; திருத்தி முன்னேறுவதை விஞ்ஞானம் அனுமதிக்கிறது!

பத்தாண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டங்கள் தவறாகப் போய்விடுகிறபோது அவற்றைத் திருத்திக்கொள்வதுதான் அறிவுடைமை!

உப்பு குறித்த மத்திய அரசின் கலப்படச் சட்டத்தோடு சேர்த்து முதலில் உப்புக்கென்று உள்ள தனித் துறையையும் கலையுங்கள். இதற்கு ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி வேறு!

வடஇந்தியப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அயோடின் உப்பைக் கொடுங்கள்! தென்னிந்தியப் பகுதிகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தவிர, மற்றுமுள்ள பெருவாரியான மக்களுக்கு சாதா உப்பைக் கொடுங்கள்.

சாதா உப்பை எல்லாக் கடைகளிலும் விற்கச் செய்யுங்கள்; அயோடின் உப்பை மருந்துக் கடைகளில் விற்கச் செய்யுங்கள்! சும்மா இருக்கிறவனை நோயாளி ஆக்காதீர்கள்! இருக்கிற துயரம் போதாதா?

உங்களுடைய அயோடின் உப்புச் சட்டத்தால் உற்பத்தி செய்து கொழுப்பவை பெரு முதலீட்டு போன்ற உப்பு தயாரிப்பு நிறுவனங்கள்!

அவை உண்டாக்கும் நோயால் கொழுப்பவை மருந்து நிறுவனங்கள்!

வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


பழ. கருப்பையா

* * * * *
தினமணி இணைப்பு : http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=532416&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?