குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts
Showing posts with label தங்கவேல் மாணிக்கம். Show all posts

Sunday, July 24, 2011

பிரபல டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு கன்சல்டேஷன்

தமிழகத்தின் பிரபல நகரங்களில் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உரிமையாளர்களில் ஒருவர் எனது நண்பர். திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து அழைப்பு. ”டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வேலையாக, உங்களது கன்சல்டேஷன் வேண்டி இருக்கிறது, வர இயலுமா ?” என்று கேட்டார். ஒத்துக் கொண்டேன்.

போர்டு மீட்டிங்கில் இரண்டு சேர்மன்களுடன் தனிமையில் உரையாடினேன். டிபார்ட்மென்ட் ஸ்டோரின் ஒரு நாள் கலெக்‌ஷன் 25 லிருந்து 35 லட்சம் வரை. அதுவே சனி, ஞாயிறு என்றால் அரைக்கோடிக்கும் மேல். சில சமயம் ஸ்டாக் செக்கிங் செல்லும்போது, ஸ்டாக் குறைவாக இருக்குமாம். ஆனால் ஆர்டர் போட்டது அதிகமாக இருக்கும் என்றும் விற்பனையானதும் குறைவாக இருக்கும் என்றும், அதன் பிறகு ரகசிய கேமராக்கள் வைத்து, கஸ்டமர் யாராவது திருடுகின்றார்களா என்றெல்லாம் பார்த்ததில் அப்படியான சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் தெரிய வந்திருப்பதாகவும் சொன்னார். கணிணியில் செயல்படும் சாஃப்ட்வேர் இவர்கள் கம்பெனிக்காக ஸ்பெஷலாக தயாரித்தது என்றும் சொன்னார். எங்கு திருட்டு நடக்கிறது என்பதே புரியவில்லை என்றும், வருமானம் கொஞ்சம் கொஞ்சமாய சரிகிறது என்றும் சொன்னார். 

பெரிய விஷயம். நிர்வாகத்தாலே கண்டுபிடிக்க முடியாததை நம்மிடம் தள்ளுகின்றார்களே, நம்மால் முடியுமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். முயற்சி செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து, ”முயற்சிக்கிறேன்” என்று உறுதி கொடுத்து விட்டேன். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டேன். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கக் கூடாது என்றும், நான் சொல்வதை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டேன். “அப்படியே ஆகட்டும் தங்கம்” என்று இருவரும் கோரசாகச் சொல்லி விட்டனர். அவரின் கவலை தீர்ந்தது. ஆனால் எனக்குள் அந்தக் கவலைப் பரவி விட்டது.

பிரபல ஹோட்டலில் எனக்கான தனி அறை, சேர்மனின் வீட்டிலிருந்து சாப்பாடு, மாலைகளில் வெளியே சென்று வர தனி கார் மற்றும் உதவியாளர் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் நாள் சேர்மனின் அறையிலிருந்து கொண்டு அவருடன் பேசிக் கொண்டே அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தேன். இரவு தனியாக நானும் சேர்மனும் ஸ்டோருக்குள் வந்து எங்கெங்கு என்ன வேலைகள் நடக்கின்றன என்று விசாரித்து அறிந்து கொண்டேன்.

மறுநாள் நான் சேர்மனின் நண்பர் என்றும், புதிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று வைப்பதற்காக, ஆலோசனை கேட்க வந்திருப்பதாகவும் செய்தி பரப்பப்பட்டது. அதன்பிறகு தான் ஆக்சன் பிளானே ஆரம்பமானது. 

பில்லிங் போடும் கவுண்டரில் அமர்ந்து சில பில்களைப் போட்டேன். அது உடனே அக்கவுண்டிங் செக்‌ஷனுக்கு வருகிறதா என்று செக் செய்த போது, வரவில்லை. ஏன் என்று கேட்டால், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை பில் டேட்டாவை அப்லோட் செய்தால் தான் அக்கவுண்ட் செக்‌ஷனுக்கு வரும் என்றுச் சொன்னார் சாஃப்ட்வேர் ஆள். ஓகே, பில்லிங்கில் ஏதும் டெலிட் ஆப்சன், அப்டேட் ஆப்சன் ஏதும் இருக்கிறதா என்று பார்த்த போது, அப்படியான ஆப்சனே இல்லாமல் இருந்தது. ஏதாவது தவறான எண்ட்ரி வர வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.பார்கோட் ரீடிங் மூலம் இன்புட் வாங்கப்பட்டது. சரி பில்லிங் செக்‌ஷனில் பிரச்சினை இல்லை. டேட்டா அப்லோடிங்கிலும் பிரச்சினை இல்லை என்று முடிவெடுத்தேன்.

அடுத்து, அக்கவுண்ட் செக்‌ஷனுக்குள் நுழைந்தேன். சில பொருட்களை மட்டும் லிஸ்ட் எடுத்து வரவு, விற்பனையை சரி பார்த்தேன். பெரும்பாலும் சரியாகவே இருந்தன. இப்படி ஒவ்வொரு பொருளையும் செக் செய்து கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆகி விடுமே என்று யோசித்துக் கொண்டே, ராண்டமைஸ்ஸாக செக்கிங் செய்யலாம் என்று முடிவெடுத்து, சில பொருட்களை லிஸ்ட் எடுத்தேன்.

ஒரே ஒரு பொருள் மட்டும் வரவு விற்பனையில் இடித்தது. அது 500 கிராம் ஹார்லிக்ஸ் பாட்டில். அது எந்த டீலரிடமிருந்து வாங்கப்படுகிறது என்ற விபரத்தை எடுத்து, அந்த டீலர் அனுப்பும் பொருட்களை லிஸ்ட் எடுத்து பார்த்த போது எனக்கு பிரச்சினை எங்கிருக்கிறது என்று புரிந்து விட்டது. எத்தனை ரூபாய் திருடப்பட்டது என்பதை எப்படித் திருடப்பட்டது என்பதைச் சொல்லி விட்டால் கண்டுபிடித்து விடலாம், மேலும் திருட்டையும் சரி செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு, அடுத்த பிளானை உருவாக்கினேன்.

மறு நாள் சேர்மனைச் சந்தித்த போது, ”தங்கம் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கே?” என்றுச் சொன்னார். அவர் தான் பிசினஸ் மேன். முகத்தைப் படிக்கத் தெரிந்தவர். அதனாலல்லவா கோடிகளுக்கு அதிபதியாய் இருக்கிறார்.

”இன்னும் இல்லை சார், எனக்கு குழப்பமாய் இருக்கிறது எங்கு தப்பு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்றே தெரியவில்லை. பாருக்குப் போகலாமா இன்று இரவு” என்று கேட்க,ஆள் அதிர்ந்து விட்டார். 

“தங்கம், நீங்கதான் ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணமாட்டீங்களே, பின்னே பாருக்குப் போகலாமான்னு கேட்கின்றீர்களே, என்ன ஆச்சு, ஏதும் பிரச்சினை இல்லையே? “ என்று அதிர்ந்து போய் கேட்க, 

”நத்திங் சார், சும்மா ரிலாக்சேஷனுக்காக” என்றுச் சொல்லி சமாளித்தேன்.

* * *

அடுத்த பகுதியில் நான் சென்ற வேலையினை எப்படி வெற்றிகரமாக முடித்தேன் என்று பார்க்கலாம்.


Friday, July 22, 2011

ஆடி வெள்ளிக்கிழமையும் மாட்டுச் சாணியும்

வேலையில் மும்முரமாக இருந்தேன். கவனம் முழுவதும் வேலையில் இருந்தது. ”என்னாங்க....!!!” என்று குரல். கேட்ட குரல்தான், மனைவியின் முகத்தினைப் பார்த்தேன். ”நாளைக்கு ஆடி வெள்ளிக் கிழமை, மாட்டுச் சாணம் தேடினேன் கிடைக்கவில்லை” என்று இழுத்தாள்.

நண்பர்களிடம் விசாரித்தேன். சில இடங்கள் சொல்ல அங்குச் சென்றால் டிமாண்ட்டாம். என்னடா இது புதுசா ஒரு பிரச்சினை, கோவையில் மாட்டுச் சாணிக்கு டிமாண்டா என்று குழம்பி, வண்டியில் மனைவியை ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு தெருவாய் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு (அதான் அந்த வீட்டில் மாடுகீடு இருக்கிறதா என்று பார்ப்பது) சென்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேர அலசலில் ஒரு வீட்டில் மாட்டின் வாலைப் பார்த்து விட்டேன்.

ஆஹா, மகா லட்சுமியைப் பார்த்து விட்டேன் என்று மனசு ஒரு துள்ளு துள்ளியது. வண்டியை நிறுத்தி மனைவி வீட்டிற்குள் சென்றாள். ஒரு பை நிறைய மாட்டுச் சாணம் வாங்கிக் கொண்டு வந்தாள். ”நல்ல பெண்மணி அல்லவா?” என்று சொல்லி முடிக்கவில்லை, “இது ஐந்து ரூபாய்ங்க” என்றாள். “ஓ.. இப்படி ஒரு பிசினஸ்ஸா??” என்று வியந்து கொண்டே ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கினேன்.



பதினைந்து வருடம் ஓடி ஓடிக் களைத்த எல் எம் எல் டிரண்டி “ஏன்பா, இது உனக்கே ஓவரா இல்லை? “ என்று கேட்பது போல இருந்தது. மாட்டுச் சாணியை காசு கொடுத்து வாங்கி வருகிறாளே என்ற கோபத்தினை பின் யாரிடம் தான் காட்டுவது சொல்லுங்கள் பார்ப்போம். “போடா, போடா, இவன் வேற முக்கிக்கிட்டு” என்ற எரிச்சலில் மேலும் ஆக்சிலேட்டரை முறுக்க ஜிவுக்கென்று கிளம்பியது.

”ஏங்க, ஏங்க, நிப்பாட்டுங்க” என்றாள் பின்பக்கமாய் உட்கார்ந்திருந்த மனையாள். இரண்டு அடி தாங்க தள்ளி நிப்பாட்டினேன். அதுக்கு ”நிப்பாட்டுங்கன்னு சொல்லுறேன், இவ்வளவு தூரம் வந்துட்டீங்களே” என்று சொன்னாள். ஏதாவது பேச முடியுமா சொல்லுங்கள் பார்ப்போம்.

பெட்டிக்கடை ஒன்றிற்குச் சென்றவள் கடைக்காரரிடம் ஏதோ பேசினாள். அவர் ஏதோ ஒரு பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளுடன் ஒரு ஒத்தை ரூபாய் காசையும் கொடுத்தாள். வீட்டுக்கு வரும் போது, ”என்ன அது?” என்று விசாரித்தேன். ”சாணிப்பவுடருங்க” என்றாள்.

”எதுக்கு?”

“ சாணியோட கலக்கிறதுக்கு”

“கலந்து....... ???”

“ அட சும்மா நொச்சு நொச்சுன்னு கேள்வி கேக்காதீங்க. வீட்டுக்கு வந்து பாருங்க...”

பேச்சு வருமான்னு நீங்களே சொல்லுங்கள். வீட்டுக்கு வந்தாள். பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்து சாணியைக் கொட்டி, தண்ணீர் விட்டுக் கலந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மு, 

“அய்யே, ஆய் ஆய் “ என்று சொல்லிக் குதித்தது.

“அடியே... பேசாம இருக்கிறாயா இல்லையா? ” என்று சொல்லி ஒரு முறை முறைத்தாள் அம்முவை.

அம்மு என் முகத்தைப் பார்க்க, நான் வழக்கம் போல சிக்னெல் கொடுக்க, முகத்தினை அஷ்ட கோணலாக்கி அம்மு சிரித்துக் கொண்டிருந்தது.

”அப்பனும் மவளும் அங்கே என்னடி குசுகுசுன்னு பேசுறீங்க?” என்று ஒரு கத்து. கப்சிப் என்று ஆகி விட்டோம் இருவரும்.

பாக்கெட்டில் இருந்த பவுடரை கிழித்துக் கொட்டி கலக்கினாள். மக்கில் எடுத்து, விளக்குமாற்றால் தரையில் கொட்டி வழித்தாள். 

பசு மாட்டுச்சாணம் வாசம் வர, ஈரமாய் தரையில் பரவியது.

பொழுது விடிந்தது.

வழக்கம் போல, பேப்பர் எடுக்க கதவினைத் திறந்தேன். பச்சைப் பசேல் என்று வாசல் மின்னியது. ஆடி வெள்ளிக் கிழமையை எங்கள் வீடு வரவேற்றது.

மனதுக்குள் புன் சிரிப்பொன்று பூத்தது.



Tuesday, July 19, 2011

வாழ்க வளமுடன் - பழனி

திருப்பத்தூரிலிருந்து கோவைக்கு வந்து, சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு பழனி அவர்களுக்கு இன்று பிறந்த நாள். மிஸ்டர் பழனி கடுமையான உழைப்பாளி. சின்னஞ்சிறு வயதில், இளமைப் பருவத்தில் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞன்.


புது உடை உடுத்தி, மகிழ்ச்சியுடன் சாக்லேட் கொண்டு வந்து கொடுத்து, “சார், இன்றைக்கு எனது பிறந்த நாள் சார் !” என்று சொன்னார். 

”அன்பு பழனி, நீங்கள் நல்ல நலமோடு, ஆரோக்கியத்தோடு, மகிழ்ச்சியாய் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் “


Monday, July 18, 2011

பிஎஸ்என்எல் எரிச்சலூட்டும் நிறுவனம்



பியெஸ்ஸென்னில் புது இண்டெர்னெட் கனெக்‌ஷன் எடுக்க பீளமேடு டெலிபோன் எக்சேஞ்சை அணுகினேன். யாரிடமோ ஒரு பெண்மணி பேசினார், முகவரி கேட்டார் சொன்னேன். அங்கே தற்போது கனெக்‌ஷன் கொடுக்க இயலாது என்றுச் சொல்லி, பேசாமல் டேட்டா கார்டுக்குப் போய் விடுங்கள் சார் என்றார். அதற்கு யாரைப் பார்க்கணும் என்றேன். சம்பந்தப்பட்டவர் வெளியில் சென்றிருக்கிறார், பிறிதொரு நாள் வாருங்களேன் என்றார்.

என்ன சொல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். இதே ஏர்டெல், ரிலையன்ஸ், டாடாவாக இருந்தால் ஒரு போன் போட்டால் போதும், வீடு தேடி வந்து அப்ளிகேஷன்ஸ், கட்டணம் வசூலித்துச் செல்வார்கள். ஆனால் பியெஸ்சென்னில் மட்டும் ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது?

இணையத்தில் பதிவு செய்த உடன் ஒரு யெஸ்ஸெம்மெஸ் வந்தது. அதில் ஒருவரின் மொபைல் எண் கொடுத்து, அவர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றார்கள். இதுவரையில் அவர் அழைக்கவே இல்லை. நானே முயன்று பார்த்தேன். யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து, பள்ளம் தோண்ட வேண்டும் சார், காண்ட்ராக்டர் இல்லை என்றார். அவர் எப்போதுதான் வருவார் என்றேன். தெரியாது சார். ஆனால் விரைவில் சொல்கிறேன் சார் என்றார். தொடர்ந்து நானே பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்யட்டுமா என்றேன். அதெல்லாம் முடியாது சார். காண்ட்ராக்டர்தான் பள்ளம் தோண்டி, வயர் போட வேண்டுமென்றுச் சொல்லி விட்டு போயே போய் விட்டார். வேறு வழி இன்றி தனியாரிடம் இணைய இணைப்புப் பெற வேண்டியதாகி விட்டது. இதே போன்று ஒவ்வொரு கஸ்டமரும் தனியாரிடம் சென்று கொண்டிருந்தால், பின் ஏன் பியெஸ்ஸென்னல் இருக்க வேண்டும்? தேவையற்ற செலவுகள் ஏன்? தொலைத்தொடர்புத் துறையை தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே?

எனது வீட்டின் பக்கத்து வீட்டில் பியெஸ்ஸென்னல் டெலிபோன் இருக்கிறது. ஆனால் என் வீட்டிற்கு கொடுக்க பள்ளம் தோண்ட வேண்டுமென்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எத்தனை நாள் ஆகும் போன்ற விபரங்களைக் கூட சொல்ல மறுக்கின்றார்கள்.

தனியார் நிறுவனங்கள் லாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பியெஸ்ஸென்னலோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

தனியாரிடம் ஒரு போன் அழைப்பில் புது கனெக்‌ஷன் கிடைக்கிறது என்கிறபோது, அரசாங்க நிறுவனத்தில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்ன காரணம்?  எங்குப் பிரச்சினை இருக்கிறது? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப சில முடிவுகளை எடுக்கவில்லை என்றால் பியெஸ்ஸென்னல் விரைவில் முழுகிப் போய்விடும் ஆபத்து நிகழத்தான் போகிறது.

மாண்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு கபில்சிபல், இது போன்ற மக்களுக்கு எரிச்சல் தரும் சேவைப் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பதிவு இமெயில் செய்யப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பதிவு மூலம் தெரிவிக்கிறேன்.


Sunday, July 17, 2011

செம்பருத்தியும் சில நினைவுகளும்


மக்களை ஏமாற்றும் டீலர்கள் பற்றிய பதிவிற்கு பல நண்பர்கள் யார் அந்த டீலர்கள் என்றுச் சொன்னால் பரவாயில்லை என்று கேட்டிருக்கின்றார்கள். சில பல பிரச்சினைகளால் பப்ளிக்காக பெயர்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏமாறக்கூடாது என்பதற்காகவும், இது போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அதே பதிவில் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, அதன்படி செயல்பட்டாலே தப்பித்துக் கொள்ளலாம்.

கம்பெனி தரும் கமிஷனை விட பல மடங்கு அதிகம் லாபம் வைத்து விற்பவர்களைத்தான் நான் எழுதி இருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தி.ஜானகி ராமனின் “செம்பருத்தி” நாவலைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மூன்று நாட்கள் விடாமல் படித்து முடித்தேன். நாவலின் வெற்றி என்பது நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பாதிப்பை படிப்பவரின் மனதுக்குள் உருவாக்கி விடுவதுதான். சமீபகால எழுத்தாளர்கள் பலரின் நாவல்களை நான் படித்திருக்கிறேன். இது போன்ற பாதிப்பை அந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தவில்லை. தி.ஜானகி ராமன் அவர்கள் எனக்குள் உருவாக்கிய ”கேரக்டர் பாதிப்பினை” இந்தக் கால எழுத்தாளர்களின் படைப்புகள் இதுகாறும் உருவாக்கிடவில்லை.

செம்பருத்தியில் வரும் சட்ட நாதனும், அவனின் மனைவியான புவனாவும் ஜானகி ராமனின் சொற்கள் வழியே மனதுக்குள் உருவமாய் உருவானார்கள். அவர்களின் எண்ண ஓட்டமும், கதை நகரும் தொனியும், என் புற உலகினை முற்றிலுமாய் மறக்கச் செய்து கதையுடனே என்னை இழுத்துக் கொண்டு சென்றது. வாசகனை நாவலுக்குள் இழுத்து, அவனுடனான புற உலக நினைவுகளை மறக்கச் செய்து, நாவலுக்குள் மூழ்க வைத்து விடும் கலை திரு ஜானகி ராமனின் எழுத்துக்கு இருக்கிறது. இவரைப் போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளை இதுகாறும் நான் படிக்கவில்லை. (பாஸ்கி ! உங்களுக்கு அப்படியான நாவலாசிரியர்கள் ஏதேனும் தெரிந்தால் தெரிவியுங்களேன் )

எனது இளம் பிராய காலத்தில், கல்லூரி நாட்களில் ”செம்பருத்தி” நாவலை  படித்த நினைவுகள் எழும்பின. அப்போது ”காதலித்த பெண் அண்ணனை திருமணம் செய்ததும், அண்ணன் இறந்ததும் காதலனைக் கட்டிப் பிடித்ததுமான” பாலியல் சம்பவங்களே எனக்குள் பதிந்திருந்தன. வயதுக் கோளாறு அல்லவா? அதையெல்லாம் இன்றைக்கு நினைத்த போது புன் சிரிப்பொன்றே பதிலாய் எனக்குள் பூத்தது.

”செம்பருத்தியில்” நுண்ணிய ஒரு பிரச்சினையை ஜானகி ராமன் எழுப்பி இருப்பார். அதைப் பற்றிப் பேசும் முன்பு கதையின் கரு என்னவென்று பார்க்கலாம். சட்ட நாதனுக்கு அண்ணன் இருவர். மூத்தவர் திருமணமானதும் வெளியூரில் செட்டிலாகி விடுவார். இளையவர் உறவுகள், குடும்பம் என்று வாழ்பவர். இளைய அண்ணனின் சம்பாத்தியத்தில் சட்ட நாதன் கல்வி பயின்று வரும் கால கட்டத்தில், ஆசிரியராய் இருந்தவரின் மகளின் மீது காதலை வளர்த்துக் கொள்வான்.ஆனால் அக்காதல் நிறைவேறாது. இளைய அண்ணனுக்கு மணம் பேசி முடித்து விடுவர். தான் காதலித்த பெண், அண்ணனின் மனைவியாகி விடுவதை மனதுக்குள் வைத்து மருகுவான் சட்ட நாதன். இளைய அண்ணன் திடீரென்று காலராவால் காலமாகி விட அண்ணி விதவையாவார். ஆனால் இளைய அண்ணனின் விருப்பப்படி புவனாவைத் திருமணம் செய்து கொள்வார் சட்ட நாதன். புவனாவிடம் தன் காதல் அனுபவத்தைச் சொல்லி தன்னை நியாயவான் என்று நிரூபிப்பார்.தன் மனைவியிடம் ஆண்கள் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பது தவறானதோ என்று சட்ட நாதன் பிற்காலத்தில் நினைக்கும் படி ஆகி விடும்.  கதை இத்தோடு முடியவில்லை. படு ரகளையான பல முடிச்சுகள், தத்துவ விசாரணைகள் இருக்கின்றன.  நுண்ணிய பிரச்சினை என்றுச் சொன்னேன் அல்லவா அது என்னவென்றால் மனத்தின் புரிதல்கள் காரணத்தை முன்னிட்டு வருவதில்லை என்பதும், அது சுற்று சூழல்களாலும் வரக்கூடியது என்பதும்தான்.

வாழ்க்கையின் சில புரிபடாத சூட்சுமங்களில் இவ்வகையான குடும்பத்தினரின் மனபுரிதல்கள் சில நேரங்களில் மட்டுமே இன்பத்தை வழங்கும். பெரும்பான்மையான சமயங்களில் பெரும் மனத்துன்பத்தை தந்து விடும். இதை உணர்ந்து, தனக்குள்ளான விசாரணை செய்து உணரும் பக்குவத்தினை ஆண்களும், பெண்களும் பெற வேண்டும். அவ்வகையான புரிதல்கள் இந்த நாவல் வாசிக்கும் போது எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கும் அவ்வகையினான புரிதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்குத்தான் இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

சில பேரின் வாழ்க்கை அவர்களின் கடைசிக் காலம் வரை துன்பமாகவே கழிந்து போய் விடும். அதையே அவர்கள் தங்களுக்கான இன்பமாய் கருதி விடும் இயல்பும் நாளடைவில் உண்டாகி விடும். இந்த நாவலில் குஞ்சம்மாளை ஜானகிராமன் அவ்வாறே உருவாக்கி விட்டார். ஏன் இந்தக் கதாபாத்திரம் துன்பத்தினை மட்டுமே ஏற்று வாழ்ந்தது என்பதை, நம் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்க்கும் போது, கடவுளின் மீதான நம்பிக்கை கூடுகிறது.

படைப்பாளிகள் என்போருக்கு கடின மனது இருக்குமோ என்பதை ஜானகி ராமனும் தன் எழுத்தின் வழியே சொல்கிறார் போலும். பிரம்மனின் படைப்பிலும் ஜானகி ராமனின் கதாபாத்திரங்களைப் போன்றோரை நாம் பார்த்து வருகிறோம் அல்லவா?

உங்களுக்கு நேரமிருந்தால் ”தி.ஜானகி ராமனின் செம்பருத்தியை” வாசித்துப் பாருங்கள். ஏதேனும் உங்களுக்குப் புரிய வரலாம். 

அன்பும் நட்பும் உங்களிடம் என்றைக்குமே நிரந்தர வாசமாகட்டும்.

-பிரியமுடன் 
கோவை எம் தங்கவேல்


Saturday, July 16, 2011

உதவி கோரிய கடித்ததை முன்வைத்து

நேற்று காலையில் மெயில்களைப் படித்து வருகையில் யாரோ ஒரு பெண் தன் குடும்பப் பிரச்சினை பற்றி எழுதி எனக்கு அப்பிரச்சினையில் இருந்து தீர்வு சொல்லுங்கள் என்று மொபைல் எண்ணையும் கொடுத்திருந்தார். ஏதோ பத்திரிக்கைக்குச் அனுப்ப வேண்டிய மெயிலை எனக்கு அனுப்பி விட்டாரே என்று நினைத்தேன்.

தனி மனித வாழ்வில் உறவுகளுக்கிடையான பிரச்சினை என்பது மிகவும் சென்சிடிவானது. அதில் பிறர் தலையிடுவது என்பது வேறுபல பிரச்சினைகளை தலையிடுபவருக்கு உருவாக்கி விடும் என்பது நான் பல அனுபவங்களின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். இப்படித்தான் ஒரு முறை எனது நெருங்கிய தோழி ஒருவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தேன். தோழி தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். தன் சம்பளத்தில் பெரும்பான்மையானதை தன் உறவினருக்குச் செலவு செய்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது. இப்படியான நிலையில் என் மூலம் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். பெண் பார்க்கும் படலம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டாரை அனுப்பி வைத்து விட்டு, தோழியின் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்த உறவினர் ” நீங்கள் அவளை வைத்திருக்கின்றீர்கள்” என்று பட்டென்றுச் சொன்னார். என்னுடன் வந்த என் மனைவிக்கும், எனக்கு திகீர் என்றது.

அவர்களுடன் என்ன பேச முடியும் என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். என் தோழியின் கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏதும் பேசாமல் திரும்பி வந்து விட்டேன். அதன் பிறகு தன் தோழியின் சம்பளப் பணம் கிடைக்காமல் போய் விடும் என்பதாலும், தோழிக்குப் பெரிய இடத்தில் திருமணமாகி விடுமே என்ற பொறாமையினாலும் அந்த உறவினர் அப்படி நடந்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன். தோழி தனியாய் வந்து, தற்போது திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார். சில நுண்ணிய பிரச்சினைகள் உறவுகளில் இருக்கும். ஆகவே வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்தச் சம்பவத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.

கணவன் மனைவி உறவானது பல்வேறு அகமுடிச்சுகளைக் கொண்டது. அம்முடிச்சுகளை போடுவது இருவர் தான், அவிழ்ப்பதும் இருவர் தான். இதில் பிறருக்கு என்ன வேலை இருக்கிறது? ஆகவே அந்தப் பெண் நிதானமாய் யோசித்து, தன் கணவன் எதனால் பிற பெண்ணை நோக்குகிறான் என்பதை ஆராய்ந்து, உணர்ந்து அதைச் சீர்படுத்த முயல வேண்டும். 

பொறுமையும், நிதானமும், ஆராய்ந்து தெளியும் பக்குவமும் இருந்தால் தான், இது போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். அந்தப் பெண்ணுக்கு கடவுள் மேற்படி சக்திகளை வழங்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நாளை “ செம்பருத்தி” வாழ்வியல் சூட்சுமத்தின் ஒரு ரகசியத்தைப் பற்றிப் பார்க்கலாம்.


Sunday, July 3, 2011

மக்களை ஏமாற்றும் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பாக வாங்கிய வீடியோகான் ஃப்ரிட்ஜ் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. கம்ப்ரஷர் மாற்றலாமா என்ற யோசனையை நிராகரித்து, புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தேன்.பத்து நாட்களுக்கும் மேலாய் இணையங்களை அலசி ஆராய்ந்து, ஏகப்பட்ட விசாரணைகள் செய்து ஒரு வழியாய் ஒரு கம்பெனியின் ஃப்ரிட்ஜை வாங்கலாம் என்று முடிவெடுத்து, கடைகளில் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தோம்.

கோவையில் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒவ்வொன்றிலும் விசாரணையை ஆரம்பித்தவுடன் மிகப் பெரும் அதிர்ச்சியை சந்தித்தேன். இணைய தளங்களில் ஒரு விலை, ஷோரூம்களில் ஒரு விலை என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 30 பர்சண்டேஜ் கமிஷன் வழங்குகிறார்கள். அதற்கு மேலும் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றால் வரக்கூடிய லாபம் தயாரிப்பாளர்களை விட, விற்பனையாளருக்கு கிடைக்கிறது என்பது தான் என் அனுபவத்தில் கண்ட ஸ்பெஷல் செய்தி.

அதுமட்டுமா, ஆளைப் பார்த்து பொருளுக்கு விலை சொல்லும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கடையிலும் கண்டேன்.அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், பகல் கொள்ளையை விட மோசமானதாய் மேற்படி கோயமுத்தூர் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். மக்களின் உழைப்பை உறிஞ்சும் இவ்வகை டீலர்களுக்கிடையில் ஏதோ சில பேராவது நாணயத்தோடு தொழில் செய்பவர்கள் இருப்பார்களே அவர்களைத் தேடலாம் என்று ஒரு நாள் மாலையில் கண்டு பிடித்தேன்.

கிட்டத்தட்ட நான் விசாரித்த ஃப்ரிட்ஜை பிரபல எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சொன்ன விலையிலிருந்து 5000 ரூபாய் குறைவாக, புத்தம் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கினேன் வெகு நேர்மையாக தொழில் செய்யும் அந்த டீலரிடமிருந்து. கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் அவரிடம் தான் ஃப்ரிட்ஜை வாங்கி இருந்தேன். அந்த ஃப்ரிட்ஜ் கடந்த பத்து வருடங்களாய் எந்த வித பிரச்சினையும் தராமல் வேலை செய்தது. டீலரிடம் மேற்படி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர் கம்பெனி கொடுத்த ரிசீப்டைக் காட்டிய போது மகிழ்ச்சியா மேலும் தள்ளுபடி கொடுத்தார்.

ஒரு ஃப்ரிட்ஜ்க்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு கோவையில் எத்தனை ஃப்ரிட்ஜுகள் விற்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை மக்களிடமிருந்து திருடுகிறார்கள் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கோவையிலே இவ்வளவு திருட்டு என்றால் பிற ஊர்களில் எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தலையே சுற்றும்.

இந்த வகைத் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நினைப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருள் வாங்கும் போது விலை குறைவான பொருட்களை வாங்க முயலுங்கள். நேற்றைக்கு எல்சிடி பிரபலமாய் பேசப்பட்டது. இன்றைக்கு எல்யிடி, த்ரீடி என்றுச் சொல்கிறார்கள். 60,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி டிவியை மாற்ற வேண்டுமென்று நண்பரின் வீட்டில் பிரச்சினையாகி விட்டது. எந்தப் பொருள் என்ன பயன் என்று முடிவு செய்தவுடன், வெப்சைட்டுகளில் தேடிப்பார்த்து அதன் விலையினை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு டீலரிடம் செல்லுங்கள். சில ஆயிரமாவது மிச்சமாகும்.


Monday, June 27, 2011

இப்படியும் சில மனிதர்கள்

இந்தப் பையன் மூன்று மாதக் குழந்தையாக இங்கு வந்தான். இன்றைக்கு ஆறு வயதாகி விட்டது என்றார் ஃபாதர். பையன் ”வணக்கம் சார்” என்றான். நேற்றைக்கு எனது நண்பரும், ஃபாதருமானவருடன், அவரின் குடும்பத்தார் நடத்தும் அனாதை விடுதிக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 70 குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு, கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் மலர்ச்சி, மகிழ்ச்சி தெரிந்தது. சந்தோஷமாய் விளையாடுகிறார்கள், படிக்கின்றார்கள். நல்ல போஷாக்குடன் இருக்கின்றார்கள். சுத்தமாய் இருக்கின்றார்கள். மிக ஆச்சரியம் தந்த விஷயம் இது. 

ஆரம்பகாலத்தில், கீரைக்கட்டினைத் திருடிக் கொண்டு வந்து, கடைந்து குழந்தைகளுக்கு கொடுப்போம் என்றார் ஃபாதர். குழந்தைகளின் பசி அழுகையைத் தாங்காமல், இரவில் தென்னைமரம் ஏறி தேங்காய்களைத் திருடி வந்து சாப்பிடக் கொடுப்பேன் என்றார் அவர்.

இப்போதெல்லாம் அனாதை இல்லங்கள் நடத்துவது என்பது எளிதானது அல்ல என்றார். பெண் குழந்தைகளைப் பராமரிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றுச் சொன்னார். தினசரி 1000 ரூபாய் வேண்டுமென்றார். எங்கிருந்தோவெல்லாம் குழந்தைகளுக்குச் சாப்பாடு வருகிறது. உடைகளும் வருகின்றன. யார் யாரோ தன் உழைப்பினைத் தந்து ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

கோடி கோடியாய் மனச்சாட்சியே இல்லாமல் கொள்ளை அடிப்பவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். பிறருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சிலரும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில், இறைவனின் திட்டம் என்னவாக இருக்க முடியும் என்றுப் புரிந்து கொள்ள முயலவில்லை.

இந்த விடுதிக்கு உதவி செய்ய விரும்புவோர் மெயில் அனுப்பவும். மேலதிக தகவல்களைத் தந்து உதவுகிறேன்.

Saturday, June 25, 2011

நோய் ஏன் வருகிறது ?

150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். காற்றைக் கிழித்துக் கொண்டு படு வேகமாய் பைக்கில் பறக்கலாம். ஆகாய விமானத்தில் சாகஜம் செய்யலாம். ஓடலாம், பாடலாம், ஆடலாம் எல்லாம் செய்யலாம். எதுவரையிலும் என்றால் உடல் நலம் கெடும் வரையில்.

பலரும் சொல்லக் கேட்டிருப்போம் ”நல்லாத்தான் இருந்தாரு, திடீரென்று படுத்துட்டாரு”. ஏன் திடீரென்று படுத்து விட்டார்? காரணம் ஏதும் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் இருக்கும். என்ன தான் மருத்துவம் செய்தாலும் சிலருக்கு உடம்பு நோய் தீரவே தீராது. அதற்கொரு காரணத்தை நம் முன்னோர் பாட்டொன்றில் சொல்லி இருக்கின்றார்கள்.

பஞ்சமாபா தகர்க்கும் பழிதனை நினைப்பவர்க்கும்
கெஞ்சியே மருந்துசெய்து கேடுகள் நினைப்வர்க்கும்
அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்கா ரருக்கும்
நஞ்சினும் கொடியவர்க்கும் நாடியபிணி தீராதே

இப்படி ஒரு பாடல் வைத்திய சார சங்கிரகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி ஆட்கள் எல்லாம் கெடுதல் செய்வதையே தொழிலாய் வைத்திருப்பதால், உடம்பைப் பேண மாட்டார்கள். உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும் போது நோய் வாய்ப்பட்டு விடுவார்கள். தீர்க்கவே முடியாத நோய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, செய்த வினையோடு எதிரே நின்று கொண்டிருக்கும்.

வினையைப் பற்றிக் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி ஏன் குறைகிறது? உடம்பிற்கு நோய் ஏன் ஏற்படுகிறது. இரண்டு வழிகளால் தான் நம் உடல் நோயால் பீடிக்கப்படுகிறது. ஒன்று காற்று மற்றொன்று உணவு. நம் உடலுக்குள் செல்பவை இவை மட்டும் தானே ?

செல்லும் காற்றையும், சாப்பிடும் உணவினையும் சரி செய்தால் நோய் விட்டுப் போய் விடும் அல்லவா? ஆனால் அதை இன்றைய காலத்தில் யார் செய்கின்றார்கள்? 

மணமணக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் மசாலா கிரேவி, செட்டி நாடு சிக்கன் வறுவல் என்று சாப்பிடுவோர் என்றாவது ஒரு நாள் மட்டும் தானே சாப்பிடுகிறோம், அதனால் ஒன்றும் தொந்தரவு வராது என்று தனக்குள்ளே நினைத்துக் கொள்வார்கள்.

உண்மை என்ன தெரியுமா? உடம்பிற்கு ஒவ்வாத உணவு உண்ணப்பட்ட பிறகு, அதன் விஷத்தன்மையை உடம்பிலிருந்து வெளியேற்ற உடம்பு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தும். கத்தி, ரத்தம் எல்லாம் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி தான் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தும். இப்படியே நாள் தோறும் போராடிக் கொண்டே வந்தால், உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நோய் வரக்காரணம் காற்றும், உணவும். இதைச் சரி செய்தால் நோய் ஏன் வருகிறது???

நம் உடம்பு ரசாயணத்தினால் ஆன ஒரு கூட்டுக் கலவை. இறைவனின் அற்புதப் படைப்பு. அதை ஒழுங்காகப் பேணி வந்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். கண்டதைத் தின்று திரிந்தால் வரும் விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.

ஒரு கணம் சிந்திப்பீர்.

Monday, June 20, 2011

வாழும் சங்ககால மன்னன் செங்கண்ணனின் தாய்

புறநானூறு பாடிய மன்னர்களில் ஒருவன் கணைக்கால் இரும்பொறை, கோச்செங்கண்ணான் என்ற மன்னனிடம் போரில் தோற்று சிறைப்பட்டிருந்தான். சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாடல் புற நானூற்றில் இருக்கும் 74 வது “குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்” என்ற பாடலை நாம் பிள்ளைப் பிராயத்தில் படித்திருப்போம். இரும்பொறை மன்னாக இருந்து போரில் தோற்றுச் சிறைப்பட்டவன். தண்ணீர் தாகமெடுத்த காரணத்தால், சிறைக்காவலனிடம் தண்ணீர் கேட்க, அவன் நேரத்தே கொண்டு வந்து கொடுக்காத காரணத்தால், தண்ணீரே குடிக்காமல் செத்த மானமுள்ள வீரன் இரும்பொறை. கதை இவரைப் பற்றியதல்ல. சோழ மன்னன் செங்கண்ணான் பற்றியது.

இவனுககு ஏன் செங்கண்ணன் என்ற பெயர் வந்தது தெரியுமா? செங்கண்ணனின் தாய் நிறைமாதக் கர்ப்பிணி. ஜோசியக்காரர் இன்னும் சிறிது நேரம் கழித்துப் பிறந்தால், பிறக்கும் குழந்தை தரணியாள்வான் என்றுச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரசவ வலி வந்து விட்டது. குழந்தை பிறந்து விடும் போல இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றாள் கோச்செங்கண்ணானின் தாய். 

பிரசவ வலி என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உலுக்கி எடுக்கும் கொடூரமானது. பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேற உடம்பே அதிர அதிர அமிலத்தில் ஊறிய உடம்பாய் வலியில் துடிதுடிக்கும் அந்த நேரத்தின் வலியை சுகப்பிரசவமடைந்த பெண்கள் உணருவார்கள். அப்படிப்பட்ட வலியில் துடித்த செங்கண்ணானின் தாய் தன்னை தலைகீழாக கட்டி தொங்க விடச் சொல்கிறாள். உயிரே போய் விடும் என்று கணவனும், பிறரும் துடிக்கின்றார்கள். என் உயிர் பெரிதல்ல. என் மகன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்கான என் உயிரையும் நான் இழப்பேன் என்கிறாள் அந்த தமிழச்சி.

தலைகீழாக கட்டித் தொங்கவிடப்படுகிறாள் அந்த தாய். நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் வந்ததும் கீழே இறக்கப்படுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழம் போல சிவந்திருக்கிறது. என்னை ஆளும் செங்கண்ணை உடைய எங்கோச் செங்கண்ணான் என்றுச் சொல்லி முடித்து தன் குழந்தை தரணி ஆள தன்னுயிரை விடுகிறாள் அவள். அவள் அப்படி சொன்னதாலே மன்னனின் பெயர் செங்கண்ணன் என்று ஆனது.

தாயின் தியாகத்தால் கண்களிரண்டும் செவந்து போன காரணத்தால் இம்மன்னன் செங்கண்ணான் என்று பெயர் பெற்றான். தமிழகத்தில் ஆயிரம் சிவன் கோவில்களைக் கட்டிய பெருமை உடையவன் இந்த மன்னன்.

தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் மகன் தரணியாள வேண்டுமென்று நினைக்கும் தாய் இருந்த புண்ணிய பூமி தமிழர்கள் பூமி.

தன் மகன் இறந்த பிறகும் அவன் எழுதி வந்த பிளாக்கை தொடர்ந்து எழுதி, அவன் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும், அன்பின் உருவமான தாய் ஒருவரின் பிளாக்கை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 


அன்பும், தியாகமும், பாசமும் நிரம்பிய இது போன்ற தாய்கள் இருப்பதால் தான், நம் பூமி இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது போலும். நான் தமிழனாய் பிறந்ததில் பெரும் பெருமையடைகிறேன்.

* * *


Saturday, June 18, 2011

டாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக் கதை

விடிகாலையில் உழவர் சந்தைக்கு காய் வாங்குவதற்காக மழையில் நனைந்து கொண்டே மனையாளுடன் சென்றேன். மழை அரும்புகள் சாரையாய் பூமியைத் தழுவிக் கொண்டிருந்தன. ”பூமி தன்னைத் தானே குளிர்விக்கிறது போலும் கோதை” என்றேன். வழக்கம் போல, ”ஓ அப்படியா?” என்று பதில் வந்தது.

செல்வ விநாயகர் கோவிலைத் தாண்டும் போது பார்வை அவரை நோக்கிச் செல்ல, அங்கு அவருக்கே ஏதும் இல்லாத நிலை போல. மார்கழி மாதம் வந்தால் பொங்கல், பிரசாதம் என்று களையாக இருப்பார் பிள்ளையார். நானும் வாரா வாரம் பிள்ளையாரை நேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இனிப்பு பொங்கல் சூடாய் கிடைக்கும். சில சமயம் சுண்டலும் தருவார்கள். எந்த பாரியாளின் கைப்பக்குவத்திற்கும் எட்டாத சுவையாக இருக்கும் பிரசாதம். 

இப்போதெல்லாம் பிள்ளையார் கோவிலில் அதிகம் கூட்டம் காணாது. இடது பக்கமாய் இருக்கும் கலைஞர் படிப்பகத்தின் திண்ணையில் ஒன்றிரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். மழையினால் இன்றைக்கு ஒருவரையும் காணோம்.

சந்தையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பெண் தலை மீது பிளாஸ்டிக் பை சிவப்பாய் மாட்டப்பட்டிருந்தது. எப்போது பார்த்தாலும் மலர்ந்த பூவை  நூலோடு கோர்த்துக் கொண்டே இருப்பார் அந்தப் பெண்.பைக்குளுக்கு டோக்கன் வாங்கும் பாட்டி எப்போதும் புன்னகையுடனே இருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றினை சிந்து விட்டு, வண்டியை கீரைக்கார கவுண்டர் இருக்குமிடம் விட்டேன்.

”மழை வந்து இன்னிக்கு வியாபாரத்தை கெடுத்துப் போச்சுங்க” என்றார்.

“மழை வந்தாலும் சங்கடம், வல்லேன்னாலும் சங்கடம் தான் போல” என்று சொல்லிவிட்டு, ”நவாப்பழத்தை பசங்ககிட்டே கொடுத்தேன்னா, அவங்க உருட்டி விளையாடுறாங்க” என்றேன்.

கேட்டு விட்டு சிரி சிரியென்று சிரித்தார். உழவர் சந்தை நவாப்பழம் ஒன்றும் அப்படிச் சுவையாக இருப்பதில்லை.கொஞ்சம் துவர்ப்பு தட்டுது. ஆசையாக் கேட்டேன்னு கவுண்டரு பறிச்சிக் கொடுத்தாரு. அதுல இரண்டைக் கொண்டு போயி பிள்ளையளுக்கு கொடுங்கோன்னு சொன்னாரு. அந்தப் பழத்தை வாங்கி பசங்க, கீழே பளிங்கு போல உருட்டி விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க. 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை. கூட்டமும் குறைவாத்தான் இருந்தது. எதிர்த்த கடைக்காரர் அழுகிப் போன பூசணிக்காய குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு. கருவேப்பிலை விக்கிற அம்மாவைக் காணல. 

”அண்ணன் மருமவன் ஆக்சிடெண்டில செத்துப் போனாரு இல்லைங்களா, அந்தப் புள்ள மருந்தைக் குடிச்சிட்டு, குழந்தைக்கும் கொடுத்துட்டு இப்போ குழைந்தையும் செத்துப் போச்சுங்க.அந்தப் புள்ளய மட்டும் காப்பாத்திட்டோம். என்ன ஏன் காப்பாத்துறீங்க. நான் செத்துத்தான் போவப்போறேன்னு சொல்லிகிட்டு இருக்குன்னாரு” கவுண்டரு.

போனவாரம் சந்தைக்கு போன போது, ”லாரி சந்துக்குள்ளே இருந்து வந்த குடிகாரன் ஒருத்தன் கவுண்டர் அண்ணன் மருமகன் மீது வண்டிய ஒரே தாட்டா தாட்டிட்டானாம்.ஆளு ஸ்பாட்லே அவுட்டுங்கன்னாரு கவுண்டரு. அடப்பாவமேன்னு கேட்டுக்கிட்டு வந்தேன். இந்தவாரம் இப்படி ஒரு செய்தி.

'ஆக மொத்தம் ஒரு குடும்பமே காலி. யாரோ ஒரு குடிகாரப் பய குடிச்சிட்டு வந்து எதுக்க வந்தவன் மேல மோதி கொன்னுட்டான். ஊரு முழுக்க எங்கன பாத்தாலும் டாஸ்மாக் கடை. குடிச்சவன் செத்தான்னா அதை அவன் விதின்னு சொல்லலாம். குடிக்காதவன் குடிச்சவன்னால சாகுறானே அதை என்னன்னு சொல்லுறது? யாரைக் குத்தம் சொல்லுறது. இன்னிக்கு ஒரு குடும்பமே காணமா போச்சே அதுக்கு யாரைக் குத்தம் சொல்லுறது? என்ன உலகம்டா இதுன்னு என்னென்னவோ மனசுக்கு வந்து போச்சு.'

'இந்தப் புள்ளைக்கி அறிவு எங்க போச்சு, புருஷன் செத்தா என்ன இப்போ? புள்ளை இருக்குல்லே, நாளொன்னைக்கு லட்சம் லட்சமா டைவோர்ஸ் வாங்குற இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையான்னு' மனசுக்குள்ளே தோணுச்சு. 

வண்டியில மனையாள கூட்டிக்கிட்டு வரும் போது, பிள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தார். வாசலில் யாருமில்லை. அய்யரு மட்டும் சோகமா உட்கார்ந்திருந்தார்.  ஏனோ முகம் தெரியாத அந்த ஆக்சிடெண்ட் ஆன மகராசன் மனசுக்குள் வந்து போனார்.

* * *

Friday, June 17, 2011

மெட்ரிக் பள்ளி பாடங்கள் - ஏமாற்றும் வித்தை

மெட்ரிக் பள்ளிகள் எல்கேஜியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலும் தாங்களே பாடத்திட்டத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பத்தாம் வகுப்பிற்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தினைத் தான் படிக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிற்கும், பனிரெண்டாம் வகுப்பிற்கும் இதே நிலைதான்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையான பெற்றோருக்கு இருப்பதில்லை. எல்கேஜியிலிருந்து என்ன தான் விதவிதமான பாடத்திட்டங்களைப் படித்தாலும் கடைசியில் படிக்கப் போவது அரசுப் பாடத்திட்டம் தான்.  

நான் கரூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராய் பணியாற்றிய போது, பிரின்ஸ்பல் பள்ளிக்கு வந்திருக்கும் வெவ்வேறான புத்தக கம்பெனிகளின் புத்தகங்களைக் கொடுத்து, நல்ல சிலபஸாய் இருக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் படி சொல்வார். கஷ்டப்பட்டு அனைத்துப் புத்தகங்களையும் படித்துப் பார்த்து, நல்ல பாடத்திட்டமாய் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால், மேனேஜ்மெண்ட் எந்தக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அப்பாடத்தினைத்தான் டிக் செய்யும்.

ஐந்து வருட கால ஆசிரியர் பணியின்போது நான் நேரில் கண்டது. பிரின்ஸ்பலிடம் ஆட்சேபனையைத் தெரிவித்தால், நீங்கள் பேசுவது மாதிரி நான் மேனேஜ்மெண்ட்டிடம் பேசினால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்பார். மேனேஜ்மெண்ட்டிடம் பேசியபோது, இந்த சிலபசே போதும் என்றுச் சொல்லி விடுவார்கள்.

ஐந்து பிரிவுகளாய் இருக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் என்ற அரசுப்பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளியில் பனிரெண்டு வகைகளாய் பிரிக்கப்பட்டு விடும். பிள்ளைகளுக்கு மிக அதிக பளுவான திட்டம். இப்பாடத்தினால் விசாலமான அறிவு கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது என்று நான் அடித்துச் சொல்லுவேன். மனப்பாடம் செய் என்பதைத் தவிர வேறொன்றினையும் மெட்ரிக் பள்ளிகள் கற்றுக் கொடுக்காது.

மெட்ரிக் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் அனைத்தும், மேனேஜ்மெண்ட்டின் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதினை நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறேன் என்று மன அழுத்தம் என்ற கிணற்றில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆசிரியராகப் பணியாற்றி அனுபவத்தில் மெட்ரிக் பள்ளிப் பாடங்கள் பெற்றோர்களை ஏமாற்றும் வித்தையாகத்தான் நான் பார்க்கிறேன். 

மெட்ரிக் பள்ளிக் கட்டணங்கள் - இணையத்தில் வெளியீடு

அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டிருக்கிறது என்பதையும், மக்களுக்கு நன்மை செய்ய முதலமைச்சர் விரும்புகிறார் என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பெற்றோரையும் நேரடியாகப் பாதிக்கும் இந்த தனியார் கல்வி கட்டணப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக்க வகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க ஏதுவன செய்ய வேண்டும். அம்மா நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பல டிவிக்களில் கல்விக் கட்டணத்தை முன் வைத்து, பல மாதிரியான பிரச்சினைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா என்றால் அதிரடி என்று பெயர். நிச்சயம் அம்மா அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று நம்பலாம்.

இதோ பள்ளிக் கல்விக் கட்டணங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்கள். பெற்றோர்கள் கல்விக் கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





Wednesday, June 15, 2011

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை



அந்தக் காலத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக சில பழக்க வழக்கங்களை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருவார்கள். உடனடி மருத்துவம் முதல் பல வகையான வழக்கங்கள் வாழையடி வாழையாக வரும். ஆனால் இன்றைய காலத்தில் அதெல்லாம் ஒழிந்து விட்டது. இன்றைக்கு வாழை இலையில் சாப்பாடு பரிமாறுதல் எப்படி என்பதையும், எப்படி உண்பது என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

வாழை இலையில் பரிமாறுதல் எப்படி என்பதினை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

இப்பதிவு எழுத உதவியது : தாவர போஷன சமையல் புத்தகம் - 1978 பதிக்கப்பட்டது.

Tuesday, June 14, 2011

மகனின் முதல் பாக்கெட் மணி

மகன் சீருடை அணியும் போது பாக்கெட்டில் காசு சத்தத்தைக் கேட்ட மனைவி அதை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தார். அழுது கதறி விட்டான். என் ஃப்ரண்ட் தான் எடுத்து வரச் சொன்னான் என்று அழுதான். அவ்வாறு கொண்டு வரவில்லை என்றால் டீச்சரிடம் சொல்லி விடுவதாய் மிரட்டினான் என்று சொல்ல எனக்கு கிர்ரென ஆகி விட்டது.  இந்த வயதில் வீட்டிலிருந்து காசு எடுத்து வா என்று யாரோ ஒரு பையன் மிரட்டுகின்றானே என்ற கோபம். மனைவியோ படு மோசமாக வெலவெலத்துப் போய் விட்டார். பையன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை எடுத்து வைத்திருக்கின்றானே என்று அப்செட் ஆகி வெடவெடத்து விட்டாள். இவ்வளவுக்கும் பையன் தான் வகுப்புத் தலைவன், பள்ளியிலேயே நல்ல மாணவன் என்று பெயரெடுத்தவன். எனக்கு எல்லையில்லா கோபம் வந்து விட்டது. காசை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் சாக்லெட், எண்ணெய்ப் பலகாரம், நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொடுப்பது இல்லை. பெரும்பாலும் மகனின் அப்பத்தா செய்து கொடுக்கும் முறுக்குகள், மடக்குப் பணியாரம் மற்றும் வீட்டிலேயே செய்யும் நொறுக்குத் தீனிகளையும், பிஸ்கட்டுகளையும் தான் பள்ளிக்குக் கொடுத்து அனுப்புவோம். பிள்ளைகள் இருவரும் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள். இது நாள் வரையிலும் இவ்வாறு தான் மனைவி குழந்தைகளை கவனித்து வந்தாள்.

என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பி, இருவரும் பள்ளிக்குச் சென்றோம். அங்கு பிரின்ஸிபல் மேடம் எங்களை அன்பாக வரவேற்று விசயத்தைக் கேட்டார்கள். நாங்கள் மேற்படிச் சம்பவத்தைச் சொன்னோம்.

மகனின் வகுப்புத் தோழன் நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்திருக்கிறான். மகனிடம் நாளைக்கு நீ வாங்கி கொடுக்கணும் இல்லையென்றால் மேம்மிடம் சொல்லி விடுவேன் என்றுச் சொல்லி இருக்கிறான். என் பையன் படு சென்ஸ்டிவ்வானவன். அவனை யாரும் குறையோ, குற்றமோ சொல்லக்கூடாது என்று நினைப்பவன். அனைவரும் அவனை நல்லவன் என்றுச் சொல்ல வேண்டுமென்று நினைப்பவன். அதன்படியே நடந்து கொள்ள முனைவான். யாரும் தவறு செய்தால் கோபம் வந்து விடும். எங்களிடம் சொன்னால் திட்டுவோம் என்று நினைத்துக் கொண்டு, முதன் முதலாய் பணத்தை எடுத்து வைத்திருக்கிறான். அசிஸ்டண்ட் பிரின்ஸ்பல் விசாரித்துக் கொண்டு வந்து எங்களிடம் சொன்னார்கள்.

அதன் பிறகு இரண்டாவது படிக்கும் குழந்தைகளின் வயதில் இருப்பவர்களுக்கு, பள்ளிக் கேண்டீன் மற்றும் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கிச் சாப்பிடவும், காசு கொடுத்து சில்லறை பெறவும் ஆசை இருக்குமாம்.இது இந்த வயதில் சகஜமான விஷயமாம்.  அதுவும் இரண்டு வருடத்திற்குதான் அவ்வாறு இருக்கும். அதன்பிறகு கேண்டீன் உணவு சரியில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் அவனுக்கு பாக்கெட் மணி கொடுத்து அனுப்புங்கள். அதுவும் தினமும் கொடுக்காமல் வாரத்திற்கொருமுறையோ அல்லது இரு முறையோ கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் காலையிலிருந்து பதட்டத்தில் இருந்த மனைவி சற்றே ஆசுவாசப்பட்டாள். எனக்கும் மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது. மகன் வரிசையில் முதல் ஆளாய் வந்து கொண்டிருந்தான். மனைவி டீச்சரிடம் செல்ல, மனைவியை கட்டிப் பிடித்த டீச்சர், ஹி ஈஸ் எ காட் கிஃப்ட் சைல்ட் ஃபார் யூ என்று சொல்லி இருக்கிறார்.

மகனை அழைத்த நான், காலையில் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தினைக் கொடுத்து, உன் நண்பனும் நீயும் கேண்டீனில் தேவையானவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி விட்டு, லேசான மனதோடு பள்ளியில் இருந்து திரும்பி வந்தோம்.

என் மகனின் முதல் பாக்கெட் மணி ரூபாய் 16.00


நான் ஒழுக்கத்தையும், நேர்மையையும், பிறரை புண்படுத்தா எண்ணமும் கொண்டவர்களாய் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளவன். அதன்படி குழந்தைகளை வளர்க்க முற்பட்டு வருகிறேன். மேற்படி சம்பவத்தை மகன் விவரித்துச் சொல்லத் தெரியாமல், அதன் காரணமாய் நானும் என் மனைவியும் பதட்டப்பட்டு விட்டோம். இச்சம்பவம் எனது வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். பள்ளியில் பதட்டப்பட்ட மிகச் சரியாக  எங்களை வழி நடத்தி, பிரச்சினை தீர வழி செய்தார்கள். இச்சமயத்தில் பள்ளியின் பிரின்ஸ்பலுக்கும், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசியமான முதலீடு - வீடு





வரும் காலங்களில் இன்றைக்கு இருப்பதை விட விலைவாசி அதிகரிக்குமே ஒழிய குறைவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளமும் ஏறுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதே போல மற்ற பொருட்களின் விலையும் ஏறி விடுவதால் வாங்கும் சம்பளம் சாப்பாடு மற்றும் இன்னபிற அத்திவசியமான் தேவைகளுக்கே சரியாக இருப்பதால் சொத்து, சேமிப்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே சென்று விடுகிறது. 

உலகில் கோடீஸ்வரர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் கோடீஸ்வரர்களாய் நடிப்பவர்களே அதிகம். இருபத்தைந்தாயிரம் கொடுத்தால் புத்தம் புதிய கார் வீட்டு வாசலுக்கே வந்து விடுகிறது. மாதத்தவணை, மெயிண்டனன்ஸ், எரிபொருள் செலவென்று காருக்குச் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே அரை கிரவுண்ட் நிலம் வாங்கி விடலாம்.சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் தேவைக்கல்லாமல் செலவழிப்பவர்கள் எதிர்காலத்தில் பணக்கஷ்டத்தினை அனுபவித்தே ஆக வேண்டும். இன்றைய மனிதர்கள் தேவைக்கு ஏற்ப செலவழிக்காமல், ஈகோவிற்காக செலவழிக்கின்றார்கள். வாரம் ஒரு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் 500 ரூபாய் ஆகிறது என்றால் மாதம் 2000 ரூபாய் செலவாகும். அதைச் சேமித்தால் மூன்று வருடங்களில் உங்களிடம் அரை கிரவுண்ட் நிலம் இருக்கும்.

கோயமுத்தூர் தமிழ் நாட்டில் மக்கள் வாழ மிகச் சிறந்த ஒரு இடம். நல்ல காற்று, தண்ணீர் மற்றும் சீதோஷண நிலை என்று இயற்கையாகவே சிறந்த இடமாய் இருக்கின்றது. இந்த ஊரில் உங்களுக்கு ஒரு வீட்டு மனை இருந்தால் நல்லது தானே.

டிடிசிபி அப்ரூவல் ஆகி இருக்கிறதா, நல்ல சாலை வசதி இருக்கிறதா, தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதெல்லாம் வெகு முக்கியமான விஷயங்கள். மேற்படி விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, மிகச் சிறந்த, நல்ல மதிப்புடைய வீட்டு மனைகள் பலவற்றினை நாங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறோம்.

செண்ட் ஐம்பதாயிரத்திலிருந்து பத்து லட்சம் வரை இருக்கும் வீட்டு மனைகள் வேண்டுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். மாதத் தவனையில் மனை வாங்க இயலுமா என்றெல்லாம் யோசிப்பவர்கள் எங்களை மெயில் மூலம் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். சம்பாதிக்கும் போதே ஏதேனும் கொஞ்சமாய் சேமித்து ஒரு சொத்தினை வாங்கி, அதைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள விரும்புவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்களின் மாதாந்திர சேமிப்பு செலவெல்லாம் போக எவ்வளவு வரும் என்பதை திட்டமிட்டுக் கொண்டு, அந்தச் சேமிப்பினை வைத்து சொத்துகள் வாங்கலாமா என்பதை எங்களிடம் விசாரியுங்கள். நாங்கள் உங்களுக்கு ஏற்ற முதலீட்டினைச் சொல்கிறோம். அதன்படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.  

நான் வெளியூரில் இருக்கிறேன் சொத்து வாங்கிப் போட்டு விட்டு, பின்னர் அதை யார் பாதுகாப்பது என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், உட்கார்ந்த இடத்திலேயே சொத்தினை நிர்வகிக்கலாம்.அதுபற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும். வேண்டும் போது நீங்கள் உங்கள் சொத்தினை, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டரில் இருந்து சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென்று ஃபார்ச்சூன் பிரிக்ஸ் கொஞ்சமே கொஞ்சமான சர்வீஸ் சார்ஜ் பெற்றுக் கொள்ளும்.

மேலே இருக்கும் மேப்பினை ஒரு முறை கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எங்கு முதலீடு செய்யலாம் என்பதையும் முடிவு செய்து கொண்டு, எங்களை அணுகவும். முடிந்தவரை சம்பாதிக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து, ஏதாவது சொத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். உங்கள் முயற்சி வெற்றியடைய உங்களுடன் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் துணையாக வரும், துணையாக இருக்கும் எந்தக் காலத்திலும்.

எங்களது அரசு பதிவு பெற்ற ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் நிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- தங்கவேல் மாணிக்கம் - எக்சிகியூட்டிவ் டைரக்டர்
தொடர்பு எண் : + 91 96005 77755 
இமெயில் : thangavelmanickam@gmail.com

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.


Sunday, June 12, 2011

கணிப்பொறியாளர்களுக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 3

இன்றைக்கு மூலம் மற்றும் வாய்ப்புண் இவற்றிற்கு என்ன மருந்தினையும் உணவினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

முதலில் வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம். உதடுகளைச் சுற்றி வருவது ஒரு வகை புண். அது வைரஸ்ஸினால் வரும். நோய்தொற்று உடையவர்களிடமிருந்தும், வைரஸ்ஸினாலும் வரும் அத்தொற்றினை நீக்க மருத்துவரைத் தொடர்பு கொள்க. இது உணவினால் உண்டாகும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண் பற்றியது.

வாயைத் திறக்க முடியாது, நாக்குகள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். மலம் கழிக்கும் போது எரியும், கடும் நாற்றமெடுக்கும்.மலம் சீதளமாய் வெளியாகும். அடிக்கடி வாயு பிரிந்து அது கொடுமையான நாற்றம் அடிக்கும். இது போன்று இருந்தால் அது உணவினால் உண்டானது என்பதைக் கவனத்தில் கொள்க. கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழம், சில பப்பாளிப் பழங்கள், பாமாயில் எண்ணெய், சில வகை மசாலாக்கள், கெமிக்கல்ஸ் பயன்படுத்திய உணவுகளினால் (பெரும்பாலான ஹோட்டல் உணவுகள்) வரக்கூடிய இந்தப் புண் பெரும் அவஸ்தைகளையும், இப்புண்ணினைக் கவனிக்கா விட்டால் பெரும் பின் விளைவுகளையும் உருவாக்கி விடும்.

இந்தப் புண் வந்தால் அதற்கு ஏகப்பட்ட ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் மருந்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், ஒட்டுப் போட்ட தார்ச்சாலை போல ஆகி விடும் உடம்பு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம், இன்னும் வயது இருக்கிறது என்று அலட்சியம் செய்தீர்கள் என்றால் உங்களால் அருமையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கூட உங்களைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள் இந்தக் காலத்தில். நோயில்லாமல் வாழக் கற்றுக் கொண்டு, பிறருக்கு தொல்லைகள் ஏதும் தரக்கூடாது என்பதை நோக்கமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்படி புண் வந்தால் மாசாக்காய் என்றுச் சொல்லக் கூடிய மாசிக்காயை வாங்கி வந்து உடைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விடுங்கள். ஒரு முழு மாசிக்காய் உங்களின் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் இவற்றை சரி செய்து விடும். இந்தக் காய் கடுமையான துவர்ப்புச் சுவை உடையது. மென்று தின்ன இயலாதவர்கள் காயை அம்மியில் வைத்து தேய்த்து பசை போல எடுத்து அப்படியே விழுங்கி விடுங்கள். தொடர்ந்து காரம், புளி இல்லாத உணவுகளாய் எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாய் கோக், பெப்சி, ஹோட்டல் உணவுகள் வேண்டவே வேண்டாம். இந்தக் காய் எங்கு கிடைக்கும் என்றால் நாட்டு மருந்துக் கடை அல்லது மளிகைக் கடைகளில் கிடைக்கும். நான் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் போது, லீவுக்கு வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் போது, அம்மா ஒரு மாசாக்காயை வாங்கி வந்து வாயில் வைத்து மிட்டாய் போல சப்பிக் கொண்டே செல் என்பார்கள். கையில் மேலும் இரண்டு உருண்டைகள் வேறினைத் தருவார்கள்.  இரண்டு மாதத்திற்கு சாப்பிட்டுக் கொள்வேன். வாய்ப்புண்ணோ அல்லது வயிற்றுப் புண்ணோ என்னை அண்டவே அண்டாது.  ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டி வந்தால் தயிர் சாதத்தோடு முடித்துக் கொள்வேன். முழுச்சாப்பாடு சாப்பிட்டேன் என்றால், வீட்டுக்கு வந்தவுடன் மாசாக்காயில் சிறு துண்டினை எடுத்து வாயில் போட்டுக் கொள்வேன். 

தமிழகம் உணவுப் பழக்கத்தை மாற்றியதால், அரையடிக்கு ஒரு ஹாஸ்பிட்டல் எதிர்காலத்தில் வந்து விடும். எதைச் சாப்பிடணும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற அனுப அறிவு இன்றி கண்டதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்ட தமிழக மக்கள் பெரும்பாலானோர் நோயின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களுக்கு இருக்கும் ஆரம்ப கட்ட நோய் எதிர்ப்புச் சக்தியினால் விஷ உணவுகள் சாப்பிடும் போது, உடனடி பக்க விளைவுகள் ஏதும் வராது. ஆனால் உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டு வரும்.

யாரெல்லாம் கூடிய சீக்கிரம் நோய் வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடலாம். அத்துடன் பெப்சி, கோக், சினாக்ஸ் வகைகளை வெளுத்து வாங்கலாம்.  பின்னர் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாய் அலையலாம். ஹோட்டலில் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது என்றால் கூடிய வரைக்கும் எண்ணெய், உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

வாய்ப்புண்ணுக்கு ஏற்ற கீரை : மணத்தக்காளிக் கீரை என்றுச் சொல்லும் சுக்கிட்டிக் கீரை. இதனை பொறியல் செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் தீரும்.

விரைவில் மூலம் பற்றியும் அதற்குச் சாப்பிட வேண்டிய உணவினையும் பார்க்கலாம்.

Thursday, June 9, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 2


உடம்பில் சேரும் கொழுப்பு ரத்தத்தில் சென்று சேர்கிறது. தண்ணீர் பைப்பிற்குள் உப்பு நீர் தொடர்ந்து சென்றால் பைப்பைச் சுற்றியும் உப்பு படிந்து பைப்பின் சுற்றளவைச் சுருக்கி விடும். அது போல கொழுப்பு நிறைந்த ரத்தம், நரம்புகளில் உட்புறச்சுவரில் படிந்து ரத்தக்குழாயின் விட்டத்தைப் படிப்படியாக குறைத்து விடும்.ரத்தம் செல்லும் பாதையின் அளவு குறுக்கப்படும்.அதுமட்டுமல்லாமல், ரத்தக்குழாய் விரிந்து கொடுக்கும் தன்மையானது. இந்தக் கொழுப்பு படிவதால் ரத்தக்குழாய் தடித்து விரைப்பாய் மாறி விடும். உங்கள் கையில் இருக்கும் ஏதாவதொரு நரம்பினை அழுத்தினால் துடிப்பினை நாம் அறியலாம். அந்தத் துடிப்பினை உணர விடமால் ரத்தக் குழாயினை கொழுப்பு அடைத்து விரைப்பாய் மாற்றி விடும். வேறு வழி இன்றி உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த இதயம் படுவேகமாக இயங்கும். இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயிலும் கொழுப்பு அடைத்துக் கொண்டால் ரத்தம் வெளியேற முடியாமல் இதயம் மூச்சு வாங்கும் போது நெஞ்சு வலி உண்டாகும். அது தான் ஹார்ட் அட்டாக்.

டாக்டர்கள் பாசையில் சொல்லாமல், அனைவ்ருக்கும் புரியும் படி எழுதி இருக்கிறேன்.இனி கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள் என் இனிய நண்பர்களே !

நாம் கொழுப்பினை மட்டும் தான் சாப்பிடுகிறோம். மட்டன், சிக்கன் மட்டுமல்ல வெள்ளை வெளேர் அரிசியிலும் கொழுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமையலிலும் நாம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு மூன்று ஸ்பூன் எண்ணெய் போதுமானது என்றாலும் அதற்கு மேல்தான் நாம் சாப்பிடுகிறோம். பால் சாப்பிடுகின்றோம் அல்லவா அதில் இருக்கும் கொழுப்பு மிக அதிகமானது. பால் ஜெரிக்க கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் பிடிக்கும்.பால் வயிற்றுக்குள் சென்று, திரிந்து பின் தயிராகி அதன் பிறகுதான் சீரணமாகிறது. டீயுடன் வடை சாப்பிடும் போது நம் உடம்பிற்கு தேவைக்கும் மேலான எண்ணெயினை நாம் சாப்பிடுகிறோம். 

அதுமட்டுமல்ல, உருளைக்கிழங்கு, அரிசி வகைகளை சேர்த்துச் சாப்பிடும் போது, மாவு வகைகளான இவைகளிலிருந்து கிடைக்கும் கொழுப்பும் சேர்ந்து விடுகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் சாப்பிடும் உணவுப் பொருள் “கொழுப்பு” மட்டுமே என்று உங்களுக்குப் புரிய வரும்.

இவ்வாறு சாப்பிடுவதால் தான் உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு மாரடைப்புகள் உண்டாகின்றன என்றுச் சொல்கின்றார்கள்.

கோக் குடிக்கின்றீர்கள் அல்லவா அதில் இருக்கும் சர்க்கரை இருக்கிறதே கொடுமை.இந்தச் சர்க்கரை முற்றிலும் கெமிக்கல்கலால் தயாரிக்கப்படுகிறது.  ஃபாண்டசிக்காக அனைவரும் குளிர்பானங்களை வெளுத்து வாங்குகிறோம். கோக் மற்றும் இதர குளிர் பானங்கள் அனைத்துமே உடலுக்கு மிக அதிக கொடுமை செய்யும் வைரஸ் கிருமிகள். ஆனால் படித்தவர்கள் மட்டுமின்றி படிக்காதவர்களும் கூட குளிர்பானங்களை குடித்துத் தள்ளுகின்றார்கள். அதுமட்டுமின்றி பீட்சா, பர்கர் போன்ற உப்பும், கொழுப்பும் நிறைந்த உணவினை விழுங்கி தன் வாழ் நாளில் ஒரு சில நாட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உட்கொள்ளும் போது, அந்த உணவிற்கு எதிராய் நம் உடம்பு பெரும் போராட்டத்தினை நிகழ்த்தி சரிசம நிலைக்கு வருமாம். இப்படியே எத்தனை நாளைக்குத்தான் உடம்பு போராடும். நம் உடம்பினை நாம் மிகப் பெரிய எதிரியாகக் கருதி தேவையற்ற உணவுகளை நாக்கிற்கு அடிமையாய் மாறி விழுங்கிக் கொண்டே இருக்கிறோம். மனிதன் தன் உடம்பினை மாபெரும் எதிரியாய் நினைத்து, உடம்பினைக் கொல்ல போராடிக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்த்தீர்களா? என்ன ஒரு கொடுமையான செயல் இது????

சரி, இனி ரத்தத்தில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன உணவினைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

கேரளா பக்கம் சமையலில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். இந்த விஷயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்பினை தவிர வேறொன்றும் இருக்காது என்பதையும் தெரிந்து வைத்திருப்பின்றீர்கள். கொழுப்பு நிறைந்த எண்ணெய் கிடைக்கும் இடத்தில், அந்தக் கொழுப்பினைக் குறைக்க இயற்கையே “கொடம்புளி” என்ற புளியை கேரளாக்காரர்களுக்கு வழங்கி இருக்கிறது. இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று. கேரள மக்கள் சமையலில் சேர்க்கும் கொடம்புளி இருக்கிறதே அது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பினை உறிஞ்சி எடுத்து கொழுப்பினைச் சேர விடாது. 

கொடம்புளியினை ரசமாகவோ அல்லது குழம்பிலோ சேர்த்து சாப்பிட்டு வர, உடம்பில் இருக்கும் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ரத்தத்திலிருந்து கொழுப்பு எரிக்கப்பட்டு நீங்கி விடும். இந்தக் கொடம்புளியின் ஆங்கிலப் பெயர் பிரிண்டல் பெரி. இந்தக் கொடம்புளியினைத் தான் வெளி நாட்டுக்காரர்கள் வாங்கி, உடல் குறையும் மாத்திரைகளில் பயன்படுத்துகிறார்கள். கூக்கிளில் தேடிப்பாருங்கள். கொடம்புளியினைப் பற்றிய அருமை பெருமைகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இரண்டே மாதங்களில் உடல் பருமன் குறையும் என்று விளம்பரப்படுத்துகின்றார்களே அந்த மாத்திரைகளில் இந்தக் கொடம்புளிதான் எக்ஸ்ட்ராக்ட் செய்து சேர்க்கப்பட்டிருக்கும்.

உடல் பருமனாய் இருப்பவர்கள். அதிக கொழுப்பு உணவினைச் சேர்த்துக் கொள்ளுபவர்கள் உணவினில் கொடம்புளியினை சேர்த்தால், ரத்தத்தில் கொழுப்புச் சேராது. இதய நோய் வராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.உடல் உழைப்பு அதிகமில்லாதவர்கள் அனைவரும் இந்தக் கொடம்புளியினைச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள். வாரம் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கொடம்புளி கோவை உக்கடம் புது மீன் மார்க்கெட்டில் இருக்கும் கருவாட்டுக் கடை ஒன்றில் கிடைக்கின்றது. இதன் விலை கிலோ 200 ரூபாய் என்றுச் சொன்னார் அந்தக் கடைக்காரர். அல்லது கொச்சின் பக்கமாய் ஏதும் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுங்கள். வாங்கி அனுப்பி வைப்பார்கள். கொடம்புளி ஆரஞ்சு சுளை போல இருக்கும். இந்த சுளையில் இரண்டு கீற்றுக்களை எடுத்து சுடு நீரில் போட்டு வைத்தால் கரையும். ஆனாலும் முழுமையாக கரைந்து விடாது. புளிப்பும், துவர்ப்பும் இருக்கும். ஆரம்பத்தில் தக்காளியை அதிகம் சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் பிறது அதன் சுவை நாக்கிற்கு பழகி விடும். உடம்பிற்கு துவர்ப்பு அதிகம் தேவை என்பதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வேறு எந்த வழியிலும் வாங்க முடியாதவர்கள், இந்தக் கொடம்புளி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளவும். கடையிலிருந்து வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கிறேன். தொடர்பு விபரங்கள் தளத்திலேயே இருக்கின்றன.

விரைவில் வாய்ப்புண் ஏற்பட்டால் மாத்திரைகள் ஏதுமின்று சரிசெய்வது எப்படி என்பதையும், மூலம் வராமல் தடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டுமென்பதையும் பார்க்கலாம்.


Wednesday, June 8, 2011

சாஃப்ட்வேர் துறையினருக்கான அவசிய உணவுக் குறிப்பு - பகுதி 1

கணிணியில் வேலை செய்வோருக்கு உடல் சூடு அதிகம் ஏற்பட்டு விடும். ஏசியில் இருந்தாலும் கூட. குளிர்பானங்கள், நிறைய தண்ணீர் குடித்தாலும் சிலருக்கு அதிக உடல் சூடு உண்டாகி விடும். 

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று நினைப்போருக்குத்தான் இந்தப் பதிவு.

வாரம் இரண்டு முறை நற்சீரகத்தைலத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடற் சூடு குறைய ஆரம்பிக்கும். எப்படி இந்த சீரக தைலத்தை தயாரிக்க வேண்டுமென்பதை சொல்கிறேன்.

200 மிலி நல்லெண்ணெயை எடுத்து அடுப்பில் வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் போது 50 கிராம் சீரகத்தை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து ஆர வைத்து, அதன் பிறகு வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். சீரகத்தைலம் தயார்.

வாரம் ஒரு முறை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மூல வியாதி வருவதை தடுக்கும் அற்புத உணவு.

உடல் உழைப்பு அதிகமில்லாத காரணத்தால் உடலில் கொழுப்பும் அதிகம் தேங்கி விடும். அவ்வாறு கொழுப்பு அதிகம் உடலில் தேங்க ஆரம்பித்தால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை தொடர்ந்து ஹார்ட் அட்டாக் வந்து விடும். உடற்சூடு அதிகமானால் வயிறு கெட்டு, கழுத்து வலி வர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையெல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

உடலில் சேரும் கொழுப்பு எப்படி இருதய நோயினை உண்டாக்கும் என்பதையும், கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்க ஏதாவது உணவு இருக்கிறதா என்பதையும் நாளைய பதிவில் பார்க்கலாம்.