குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 1, 2021

இந்திய வளர்ச்சிப்பாதைக்கு காரணம் காங்கிரஸா? பிஜேபியா?

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும்? அது யாரால் துவக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி இப்போது எழக் காரணம் பிஜேபியின் பேச்சாளர்களும்,  எப்போதும் காங்கிரஸ் கட்சியினைக் குற்றம் சாட்டும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்கள் தான்.

நொடிக்கொரு தடவை முன்னாள் பிரதமர் நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றம் சாட்டிக் கொண்டிக்கிறது இன்றைய அரசு. அதான் நீங்கள் ஆட்சிக்கு வந்து ஆரேழு ஆண்டுகள் ஆகி விட்டனவே ஏன் இன்னும் இந்திய மக்களின் பொருளாதாரம் உயராமல் அதானி மட்டுமே இந்திய பணக்காரர்களில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கிறார் என்று காரணம் கேட்டால் பதிலேதும் வராது.

தினமும் அதானியின் வருமானம் 1000 கோடி என்றால் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். நானொன்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தியை திரித்தது போல திரிக்கவில்லை. இதோ இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் வந்த செய்தி கீழே.

ஒரு நாளைக்கு 120 ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. அதானி ஒரு நாளைக்கு 1000 கோடி சம்பாதிக்கிறாரா என்று நீங்கள் வயிற்றெரிச்சல் படுவது புரிகிறது. அதானி பிரதமர் மோடியின் நண்பர். நீங்கள் யாரோ???? நீங்கள் யாருக்கு நண்பரோ? அலசிப் பாருங்கள். 


சரி, இந்தியா உலக அளவில் இன்றைய கொரானா காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார அழிவுக்கும் தாங்கி நிற்க காரணம் யாராக இருக்க இயலும்? என்று பார்க்கலாமா?

நீ பிஜேபியை எதிர்ப்பவன், நீ பிஜேபிதான் என்றுச் சொல்வாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எனக்கும் பிஜேபிக்கும், பிரதமருக்கும் வாய்க்கால் தகராறு ஒன்றுமில்லை. கட்சியோ, கட்சித்தலைவர்களோ யாருக்கும் எதிரியுமில்லை. அவர்களின் ஆட்சி மட்டுமே விமர்சனம் செய்யப்படும். தமிழ் நாட்டில் பிஜேபியைத் தவிர வேறொருவரும் பிரதமரைக் கொண்டாட மாட்டார்கள். நான் அவரை எனது ஆதர்ச நாயகன் என்று பதிவிட்டிருக்கிறேன்.

பர்சனலாக நான் நரேந்திர தாஸ் மோடி அவர்களின் பரம் ரசிகன். ஏனென்றால் அவரின் விடாமுயற்சி. அவரின் உழைப்பு. அது வேற, இது வேற. கருத்துக்களோடு எதிர்வினை ஆற்றலாம். சக மனிதர்களுடன் பகைமை பாராட்டுவது மடத்தனம்.

அவர் என்/நம் பிரதமர். அவர் நம் நாட்டின் தலைமகன் என்பதினை எவரும் மறந்து விடக்கூடாது. ஆனால் எட்டப்பன் விஷயத்தில் மட்டும் மனசு நெருடும் எனக்கு.

இருக்கட்டும் அது ஒரு பக்கம்.

இனி ஆதாரத்தினைப் படியுங்கள். யாரால் இன்றைய இந்தியா எதிர்ந்து நின்று கொண்டிருக்கிறது எனப் புரியும்.

செய்தி கீழே..! நன்றி இந்தியா லீகல் செப்டம்பர் இதழ் 2021



ஒரு விதை எப்போது மரமாகி பலன் கொடுக்கும் என்பதை முன்பே கணித்து, நடுபவர் மட்டுமே பலனுக்கு உரியவர். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த திரு.மன்மோகன் சிங்க் அவர்களின் இந்த விதை நம் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை. 

அவர் ஊன்றிய விதை இன்றைக்கு இந்தியாவின் பொருளாதாரம் அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் அவசியம்.

நிலம் (89) - 10 செண்ட் பூமியை மனைப்பிரிவாக பதிவு செய்ய முடியுமா?

பெட்ரோல், டீசல் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார பெட்ரோலியத்தின் விலை உலக மார்க்கெட்டில் உயர்ந்த பிறகு, 50 ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்ட போது தேசபக்தி, இந்திய மக்களின் பொருளாதார பாதிப்பு என்று போராட்டமெல்லாம் செய்த அன்றைய குஜராத் சி.எம். நரேந்திர மோடி அவர்கள், இப்போது பார் புகழும் பாரதத்தின் பிரதமராக இருக்கிறார். 

பெட்ரோலிய பொருட்களின் ஆதார விலை குறைவாக இருக்கும் போது கூட விலை உயர்த்திக் கொண்டே வருவதுதான் மிகச் சிறந்த ஆட்சி என புளகாங்கிதம் அடைவோம்.


மேலே இருக்கும் படத்தில் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய நாடாளுமன்றம் - அன்றும் இன்றும் கட்டுரை நேற்றைய தினமணியில் வெளியானது. அதில் மஞ்சள் வண்ணமிடப்பட்டிருக்கும் பகுதியில் மோடி அரசின் முதல் 5 ஆண்டுகளில் வெறும் 66 நாட்கள் தான் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதாவது முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டது என்றும் அதற்கு காரணம் இந்திரா காந்தி காலத்தில் அவ்வாறு நடந்ததுதான் காரணம் என எழுதி இருக்கிறார். இதற்கும் நம் இந்தியாவின் ஒப்பற்ற பிரதமர் காரணமே அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. இந்திரா காந்தியால் தான் பிஜேபி ஆட்சியில் 66 நாட்கள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அதாவது நாடாளுமன்றம் கூட்டப்படாதத்தற்கும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும் எப்போதே மறைந்து போன முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், நேருவும் தான் காரணம் என்பதினை இந்திய மக்கள் மறந்து விடக்கூடாது என்று வக்கீல் எழுதி இருக்கிறார். அதை ஜன நாயகத்தின் தூணான பத்திரிக்கையும் ஆமோதித்து வெளியிட்டிருப்பது கண்டு நாமெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் துன்பப்பட்டு துயரப்பட்டு படாத பாடுபட்டதற்கெல்லாம் இவர்களே காரணம் என்பதைத் தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சி அடைவோம்.

கொரானாவில் சம்பாதிக்க வழியில்லாமல் முடங்கிய மக்களிடம் வரி மேல் வரி விதித்து வசூல் செய்யும் பாஜக ஆட்சியே மிகச் சிறந்த ஆட்சி என கொண்டாடுவோம்.

எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வரமாட்டோம் என பி.எம் என்ற பெயரில் நன்கொடை வசூல் செய்து, அதற்கு 80ஜியில் வருமான வரி விலக்கு கொடுத்து விட்டு, அதைப் பற்றிய தகவல்களைத் தரவே முடியாது என்று நீதிமன்றத்திலேயே சொல்லும் தைரியமான பிஜேபியின் ஆட்சியை நாம் ஆதரிப்போம்.

ஒவ்வொரு சட்டமும் சாதாரண பொது மக்களுக்குத்தான், எங்களுக்கு அல்ல என்று புதிய அரசிலமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய பிஜேபியின் ஆட்சியின் திறமை பற்றி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். 

ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு ஊரையே அழிக்கலாம் அதே போல ஒரு கட்சி நன்றாக இருக்க நாட்டையே அழிக்கலாம் என்ற புதிய சிந்தனையை தேசபக்திக்கு உதாரணமாக காட்டிய பிஜேபி அரசின் ஆட்சியின் தேசபக்தியை மெச்சி மகிழ வேண்டும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. வரி வரி வரி -  வரியைச் செலுத்துவது ஒன்றே மக்களின் கடமை என்ற புதிய தேசபக்தியை மக்களுக்குப் புகட்டிய பெருமை பிஜேபியைச் சாரும்.

சம்பளத்தில் பாதி இல்லை, வரி உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு இதைப் பற்றி எல்லாம் மக்கள் கவலைப்படக்கூடாது. ஆனால் வரியை மட்டும் மிகச் சரியாக கட்டி விட வேண்டும் என்ற பிஜேபி ஆட்சியின் மந்திரத்தினை எவரும் மறந்து விடக்கூடாது.

ஆகவே எல்லோரும் பிஜேபியின் ஆட்சிக்கு ஒரு கைதட்டினைக் கொடுத்து விட்டு தொடருங்கள்.

முதலில் நாடு, பின்னர் தான் எதுவும் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

* * *

கிராமப்புறங்களில் 10 செண்டுக்கும் குறைவாக இருக்கும் பகுதியை வீட்டு மனைப்பிரிவாக பதிவு செய்யலாம் என்ற தமிழக அரசு 16.03.2020ம் தேதியில் பதிவுத் துறை தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறது.

அந்தக் கடிதத்தில் கீழ்கண்டவாறு உள்ள இடங்களைப் பதிவு செய்து கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
  • ஒரு தனி நபரின் 10 செண்ட் விவசாய நிலத்தினை மனைப்பிரிவாகப் பதிவு செய்யலாம்.
  • பத்து செண்ட் இடத்தினை இரண்டு பகுதிகளாக் பிரித்துப் பதிவு செய்து கொடுக்கலாம். இதற்கு லே அவுட் அனுமதி தேவையில்லை.
  • சென்னை மெட்ரோபொலிட்டனுக்கு உட்பட்ட பகுதியில் 8 மனைகளுக்கு மிகாமல் இருக்கும் பகுதியை மனைப்பிரிவாக பதிவு செய்யலாம்.
  • விவசாய நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பகுதியையும் வீட்டு மனையாக பதிவு செய்யலாம்.
  • கிராமப் புறங்களில் சாலை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ள நிலத்தில் புதிய சாலை வசதி ஏதும் ஏற்படுத்தாமல் வீட்டு மனைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22 ஏ (2) வில் - 21.10.2016க்கு முன்பு விடுதலை ஆவணம், கிரைய உடன்படிக்கை, பொது அதிகார ஆவணம் போன்றவை மூலம் பதிவான வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
  • அதிக பரப்பளவு கொண்டு விவசாய நிலத்தில்  ஐந்து செண்ட் பூமியை மட்டும் வீட்டு மனையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலே கண்ட வகையில் மனைப்பிரிவு அனுமதி இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு துறை பத்திரங்களைப் பதிவு செய்து கொடுக்க அரசு உத்தரவு இட்டிருக்கிறது.

வங்கியில் டிடிசிபி அனுமதி இருந்தால் தான் லோன் தருவோம் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் இந்த ஆணை நகலை வைத்து அதிகாரிகளுக்குப் புரிய வைத்து கடன் பெறலாம்.

இது பற்றிய மேலதிக தகவல் வேண்டுமெனில் கட்டணத்துடன் ஆலோசனை தரப்படும். கட்டாயமாக ஜி.எஸ்.டி உண்டு.

தொடர்புக்கு : 9600577755

Wednesday, September 29, 2021

நிலம் (88) - கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ ஃபேஸ் 4 - டிடிசிபி அப்ரூவல் ரத்தாகுமா?

சில வருடங்களுக்கு முன்பு போனில் அழைத்தவர் கோவை வீரகேரளத்தில் இருக்கும் மகாராணி அவென்யூ 4வது பார்ட் டிடிசிபி அப்ரூவல் மனையிடத்தில் மனை வாங்க லீகல் தர முடியுமா? எனக் கேட்டார். கட்டணம் கேட்டார். சொன்னேன். சார், என்ன இது? இவ்வளவு கேட்கின்றீர்கள் என்றார். எனது கட்டணம் இது. முடிந்தால் கொடுத்து லீகல் ஒப்பீனியனும், டிராப்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் எனச் சொல்லி விட்டேன். அதன் பிறகு அவர் அழைக்கவில்லை. 

அவரின் பெயர் தெரியும். வில்லங்கச் சான்றிதழில் அவர் வாங்கிய இடத்தினைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் சரி என அத்துடன் மறந்து போனேன். ஒரு சிலருக்கு மன நோய் உண்டு. அதாவது சிக்கல்களை விரும்பும் மனம் அது. புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டுமென்பது அறியாமல் மயங்கும் மனசு. எங்கு எதைப் பேச வேண்டும்? எதில் ரிஸ்க் எடுக்க கூடாது என்ற தெளிவில்லை எனில் எப்போதும் தேவையற்ற சிக்கல்கள் வந்து விடும்.


இன்றைய ஹிந்து தினசரியில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 

முதலில் இணைப்பினைக் கிளிக் செய்து செய்தியைப் படித்து விடுங்கள். சென்னை உயர் நீதிமன்றம்  கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ 4 பார்டை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டிருக்கிறது. அந்த அவென்யூவில் என்ன நடந்திருக்கிறது என்றுப் பார்க்கலாம்.

இந்த இடத்தின் டிடிசிபி அப்ரூவலில் மொத்தம் 108 வீட்டு மனைகளுக்கும் இரண்டு ரிசர்வ் சைட்டுகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது டிடிசிபி அலுவலகம். அதன் பிறகு இந்த சைட்டின் புரமோட்டர் ராமசாமிகவுண்டர் ரிசர்வ் சைட்டுகள் இரண்டினையும் இணைத்து பிளாட்டாக கன்வெர்ட் செய்து, அதை வீரகேரளம் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் அதாவது (இ.ஓ)விடம் மனை அனுமதி பெற்று பழைய டிடிசிபி பிளானுடன் இதை இணைத்து விற்பனை செய்து விட்டார்.

இ.ஓவிற்கு வீட்டு மனைப்பிரிவு அனுமதி வழங்க அனுமதி கிடையாது. வீட்டு மனைப்பிரிவு அமையும் இடத்தினை ஆய்வு செய்து, மனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய மட்டுமே அவருக்கு சட்டத்தின் வழி உரிமை உள்ளது. இது விதிமீறல். சென்னை உயர் நீதிமன்றம் இவரின் இந்த விதிமீறலைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல வில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு இ.ஓ நான்கு இடங்களில் பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்கள், பல கடைகள், இடங்கள் என கட்டி வாடகைக்கு விட்டு பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது பேக்கரி பிராஞ்சைஸ் எடுத்து கோடியில் வருமானம் செய்து கொண்டிருக்கிறார். முறைகேடான ஊழல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் ஐ.டி பிரிவு இவ்வாறான ஊழல்வாதிகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.

சரி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வீரகேரளம் கோவை கார்ப்பொரேஷன் லிமிட்டில் 2011ம் வருடத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கார்ப்போரேஷன் லிமிட்டில் இருந்த வீட்டு மனைகளின் ரிசர்வ் சைட்டுகள் கணக்கெடுப்பு நடந்த போது மகாராணி அவென்யூவில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு ரிசர்வ் சைட்டுகளையும் வேலி போட முயன்ற போது அந்த ரிசர்வ் சைட்டுகளை விலைக்கு வாங்கியவர்கள் சென்னைக் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார்கள்.

எல்லா வக்கீல்களுக்கும் தெரியும் வீட்டு மனைப்பிரிவு அனுமதியை ஒரு எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்க முடியாது என. ஆனாலும் இந்த வழக்கில் வாதிகளுக்கு ஆதரவாக வக்கீல் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு, எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்கிய ஆணை சரியானதுதான் என்றுச் சொல்லி வாதாடி இருக்கிறார்.

இவரைப் போன்றவர்களிடம் தான் லீகல் ஒப்பீனியன் வாங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது அவர்கள் பிரச்சினை.

என்ன நடந்திருக்கிறது மகாராணி அவென்யூ 4வது பேசில்? என பார்க்கலாம். டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டு மனை வரைபடத்தின் படி மனைப்பிரிவு அமைந்துள்ளதா என, அந்த வீட்டு மனை இருக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. 

ஏனென்றால் அந்த பஞ்சாயத்துக்கு வீட்டு வரி வசூல் செய்யவும். வீடு கட்ட அனுமதி கொடுக்கவும் அந்த வரைபடம் தான் மூல ஆவணம். கிராம பஞ்சாயத்தின் வருமானத்திற்காக அரசு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து வைத்திருக்கிறது.

மகாராணி அவென்யூ டிடிசிபி பிளான் நம்பருடன் இன்னும் கொஞ்சம் நிலத்தினை வாங்கி, அதனுடன் ரிசர்வ் சைட்டுகளையும் இணைத்து பிளான் போட்டு இ.ஓவிடம் கையொப்பம் பெற்று ராமசாமிகவுண்டர் சைட்டுகளை விற்று விட்டார். 

இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

இதில் தவறு செய்தது வீட்டுமனைப்பிரிவு உரிமையாளர். அதற்கு உடந்தை வீரகேரளத்தின் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர். பாதிக்கப்பட்டது ஏழு சைட் வாங்கியவர்கள். இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இ.ஓ எவன் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும்.

அந்த இரண்டு சைட்டுகளையும் பஞ்சாயத்துக்கு நன்கொடை ஆவணம் கூட எழுதிக் கொடுக்காமல், கையூட்டுப் பெற்றுக் கொண்டு ஏழு பேரின் வருமானத்தில் ஓட்டை போட வைத்த இ.ஓவினை அரசு என்ன செய்து விடும் என்று நினைக்கின்றீர்கள்? 

அவன் மயிரில் ஒன்றினைக் கூட பிடுங்க முடியாது. ஊழல்வாதிகள் இதோ இன்றைக்கும் ஒய்யாரமாய் உலா வருகின்றார்களே யாரால் என்ன செய்ய முடிந்தது?

இன்றைய ஹிந்துவில் உத்திரப்பிரதேசத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் பதினோறு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவ்வாறு நடக்கிறது. சாமியாருக்கும் நாடாள ஆசையுண்டு. அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்லித் திரிகிறார்.

இந்த உலகத்தின் பெரும்பான்மை மனிதர்கள் அயோக்கியத்தனம் செய்பவனையும், துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறது. இந்த அரசின் சிஸ்டமே குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான். நல்லவர்களைப் பாதுகாப்பது என்பது கிஞ்சித்தும் கிடையாது. அவனவன் போராடிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் மனம் பணத்தினை நோக்கியும், அதிகாரத்தின் குருதிச் சுவையினையும் விரும்ப ஆரம்பித்து விட்டது. மக்கள் மனம் இவ்வாறு எனில் மக்களின் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாறித்தான் போவார்கள். அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை அல்லவா?

ஊழலில் குளித்து கும்மாளமிடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தால் ஒரு வேளை இம்மாதிரியான குற்றம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நடக்காது. ஏனெனில் அரசை நிர்வகிக்கும் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன.

அறியாத பலர் இவ்வகைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அல்லலுறுவதைக் காணும் போது மனசுதான் வலிக்கிறது.

உங்களுக்கான லீகல் அட்வைசிங்க் பெற என்னை அணுகலாம். கோவை மட்டுமல்ல தமிழ் நாடெங்கும் சர்வீஸ் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்...!

Tuesday, September 21, 2021

நீட் தேர்வு தினமலர் முனைவர் காயத் திரி

நீட் தேர்வு குறித்து முனைவர் காயத்திரி அவர்கள் கடந்த  20.09.2021ம் தேதியன்று தினமலரில் சிந்தனைக் களம் என்ற பகுதியில் கீழே படத்தில் இருக்கும் கட்டுரையினை எழுதி இருக்கிறார்.


நன்றி : தினமலர் - முழு கட்டுரையினை இணையத்தில் படித்துக் கொள்ளவும். இந்தக் கல்வியாளரின் நோக்கம் கட்டுரையினைப் படித்ததும் தெரிந்து விடும்.

இந்தியாவில் பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்சியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றன. வேறுபட்ட கல்வித் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்தியா முழுவதுமான ஒரே தேர்வு என்றால் எப்படி சரியாகும்? எல்லாக் கல்வித் திட்டத்தினையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கேள்வித்தாளுக்கு முழுமையான பதிலை மாணவனால் எங்கனம் எழுத முடியும்? 

ஆகவே நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்பது தெளிவு. இதைப் பற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் அவர் எழுதவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற ஒரே வழி நீட் கோச்சிங்க். லட்சக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி உடையவருக்கு நீட் தேர்வில் வெற்றி கிடைக்கும். இதற்கு நீட் கோச்சிங்க் சென்டர்கள் சொல்லும் வெற்றிக் கணக்கே சாட்சி. 

இல்லையென்று இந்தக் கல்வியாளரால் எழுத முடியுமா? முடியாது. அதை மறைத்து விடுவார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழி வழி மாநிலங்களின் கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கி ஒன்றிய அரசுப்பட்டியலில் சேர்த்தது பெரும் மோசடியான அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மொழி வழி மா நிலங்கள் தனக்கென தனிப்பட்ட  வரலாறு, கலாச்சாரம் கொண்டவை. இப்படி இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் என்றால் அது மோசடி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

பிஜேபி அரசின் காவி மயக் கல்விக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. ஆரம்பமே தகராறு. இவருக்கு இதுவெல்லாம் நினைவில் இல்லை போல.

அடுத்து, முன்னைவர் காயத்திரி தன் கட்டுரையில் சுட்டுவது திமுகவின் நீட் ரத்து பற்றி. திமுக அரசு நீட் தேர்வு பற்றி ஆராய, ஒரு குழுவை உருவாக்கிய உடனே பிஜேபி கோர்ட்டிற்குச் சென்று தடை கேட்டது. 

சேப்பாக்கம் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதாக முழங்கினாராம். ஏன் செய்யவில்லை என்கிறார்.  அதிமுக துரோகி எட்டப்பனும் தான் சொன்னான். தீர்மானம் இயற்றினான். அதைப் பற்றி ஏன் இவர் எழுதவில்லை. ஏனென்றால் அதிமுக அடிமையாக படுத்துக் கிடக்கிறது. அதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. திமுக நீட் தேர்வினை ரத்துச் செய்வதாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல தோற்றத்தினை உருவாக்கி இருக்கிறார் முன்னைவர்.

நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்து அறிய குழு போட்டவுடனே பிஜேபி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் புதைத்திட நீதிமன்றப்படியேறியதே, அந்த தடங்கல் பற்றி வாயைத் திறக்காத கல்வியாளர், கல்வி படிக்க விரும்பும் மாணவர் தரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

ஒரு மாணவன் கல்வி கற்பதன் காரணமாகத்தான் தரம் உயர்கிறானே ஒழிய, கல்வி கற்கவே தரம் வேண்டும் என்று சொல்லும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்திற்கு கோடாரியாய் இருக்கிறார்கள். ஏழை மாணவன் உயர் கல்வி உரிமையைப் பெறக்கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் என்பது  அவர்களின் இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் காலம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் கல்வியினை கற்கும். ஆரம்பத்தில் நன்றாகப் படிக்காத குழந்தைகள், பின் நாட்களில் நன்கு படிப்பார்கள். 

எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. நீ ஆரம்பத்தில் நன்றாகப் படிக்கவே இல்லை, ஆகவே உனக்கு படிப்பு தர முடியாது என்றுச் சொல்லும் இந்த வகைத் தேர்வுகள் மனித மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவை அல்லவா? 

இதை வழிமொழியும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் அல்லவா?

தன் கட்டுரையில் திமுகவினை சாடு சாடு என சாடி விட்டு, கல்வியில் அரசியல் என்கிறார். கல்வியில் அரசியலைக் கலப்பது பிஜேபி தான். வேறு எவரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

பொறியியல் கல்லூரிகளில் தரம் இல்லையாம்? தரமில்லாத எந்த ஒன்றும் காலப்போக்கில் இல்லாது போகும். அதைச் சரி செய்ய கடுமையான சட்டங்கள் தான் தேவை. மாணவனைக் கல்வி தான் தரப்படுத்தும். அதை எப்படி தரமாக வழங்குவது என அரசு கல்வி நிலையங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வைத்தல் வேண்டும். அதை விடுத்து படிக்கவே தேர்வு வைப்பேன் என்பது கொடும் செயல். கொடுமைச் சிந்தனை. கொலைகார எண்ணம். மக்களை மாக்களாக்க வைக்கும் பாதகச்செயல்.

திமுவைத் திட்டி, இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்து, பொறியியல் கல்வியை தரம் தாழ்ந்து விட்டது என்றுச் சொல்லி வரும் இவர், அடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றால் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் என்கிறார்.  

இது நாள் வரை, மெடிக்கல் படிக்க எந்த கோச்சிங்க் செல்லாமலும், கட்டணம் இல்லாமலும் சீட் பெற்று படித்த மாணவர்களுக்கு இது பெரும் சுமை.

நீட் கோச்சிங்க் சென்டர்களில் குவியும் கள்ளப்பணம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. அங்கு நடத்தப்படும் தீண்டாமைகளை இவர் எழுதவில்லை. சமீப நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது பற்றியோ, பீகார் மாநிலத்தில் தேர்வு என்கிற பெயரில் நடத்தப்படும் மோசடி பற்றியோ வாய் திறக்கவில்லை. திருட்டுத் தேர்வு, கேள்வித்தாள் மோசடி செய்து வெற்றி பெரும் மாணவர்களைப் பற்றி ஒரு வார்த்தை இக்கட்டுரையில் உள்ளதா என்றால் இல்லை. 

ஐஏஎஸ் தேர்வில் ஒரு பிசி மாணவனைப் பார்த்து, தேர்வாளர் ம்... நீங்களெல்லாம் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று அரசாள வந்து விட்டீர்கள் என்றுச் சொல்லி அவரை பெயில் ஆக்கிய சாட்சி என்னிடம் இருக்கிறது. தேர்வாளர் ஒரு பிராமின் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏன் அவன் நாடாளக் கூடாது என்று அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரிந்து கொண்டீர்களா? இதைத்தான் பிஜேபி அரசு செய்ய விரும்புகிறது.

உயர்கல்வி உயர் ஜாதியினருக்கு என்கிறது பிஜேபி அரசு.

கல்வியாளர் அடுத்து பரிந்துறை செய்கிறார் இப்படி

மருத்துவம் இல்லை என்றால் என்ன? வேறு படிப்புகள் இருக்கின்றனவே என்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னவென்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஏன் பெட்ரோமாக்சே தான் வேண்டுமா? வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்கிறார். 

அதாவது நாடாளும் கல்வி, மருத்துவம் போன்றவைகள் எங்களுக்கே உங்களுக்கு கீழ் நிலைப் படிப்பு இருக்கிறது அதைப் படியுங்களேன் என்கிறார்.

அப்துல்கலாம், ரஜினியை உதாரணம் காட்டுகின்றார். ஒரே ஒரு அப்துல் கலாமும், ரஜினியும் தான் இருக்க முடியும். அவர்களைப் போல இன்னொருவர் இருக்க முடியுமா? இவருக்குத் தெரியாதா? தெரியும். சொல்ல மாட்டார். அசைன்மெண்ட் அப்படி.

சினிமாவில் சாதித்தவனை விட அழிந்தவர்கள் தான் அதிகம். கோடியில் ஒருவன் வெற்றி பெறுகிறான் அதுவும் சிறிது காலம். அவரை உதாரணமாகக் காட்டும் இவரின் பாதகச்சிந்தனைக்கு மாற்றாக வேறு எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு கல்வியாளர் என்ற போர்வையில் கல்வியில் வெற்றி பெற்றவர்களை உதாரணம் காட்டாமல் சினிமாக்காரனை உதாரணம் காட்டி, நீங்களும் சினிமாவுக்குச் சென்று அழிந்து போ என்றுச் சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.

ஏன் இப்படி பொருமலுடன் இக்கட்டுரையினை எழுதி இருக்கிறார் இவர்?

ஏழை கீழ்சாதி மாணவர்கள் மருத்துவர் ஆகி விட்டால் கீழ் சாதிக்காரனிடம்  மருத்துவம் செய்ய சனாதன தர்மமும், ஆகம விதிகளும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்ல வருகின்றார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீட் தேர்வு வைத்து உங்களை நாங்கள் வடிகட்டி விடுவோம் என்றுச் சொல்லாமல்  சொல்கிறார்கள்.

கல்வி கற்க தடை போடும் எவரும் நிரந்தரமாக வாழ்ந்தது இல்லை. கல்வி கற்றுக் கொடுப்பவனை கடவுள் என்கிறது தமிழ் கலாச்சாரம். 

பிஜேபி தன் நிலைப்பாட்டை மாற்றி நாட்டை நிர்வாகம் செய்வதை கவனிக்க வேண்டும். அதை விடுத்து கல்வி கற்க தடை ஏற்படுத்தினால் காலம் அவர்களை மொத்தமாக அழித்து விடும். 

தன் வாழ்க்கையை நிரந்தரம் செய்ய முடியாத இவர்கள், மற்றவர்களுக்கு அழிவினை உண்டாக்கும் செயல்களைச் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்பவர்களுக்கு அறம் அதற்குரிய பலனை அளிக்கும் என்பது வரலாறு சொல்லும் செய்தி. நயவஞ்சக நரிகளையும், ஓநாய்களையும் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டும்.

கல்வியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பாதகச் சிந்தனைவாதிகளை உலகம் ஒதுக்கி தள்ளி விட வேண்டும். இவர்கள் மனித குலத்தின் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் உதிர்ந்து போய் விடும்.அவர்களை இனம் கண்டு கொண்டு, இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் உதறித் தள்ளிடல் காலத்தின் கட்டாயம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடல் வேண்டும். அது ஒன்றே தர்மம்.

அது ஒன்றே அறம்.

வாழ்க வளமுடன்...!


Thursday, August 26, 2021

நிலம் (87) - முறைகேடான பட்டா பத்திரப்பதிவினை நீக்குவது எப்படி?

அனைவருக்கும் இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பிளாக்கைப் படித்து வரும் ஒரு வாசகி போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார்.

அவரொரு ஆசிரியை. சிவகாசி மாவட்டத்தில் கீழ திருத்தங்கல் கிராமத்தில் ஆசிரியையின் அப்பாவிற்கு பாக சாசனத்தின் மூலமும், சுயார்ஜித கிரைய வகையிலும் கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலம் அனுபோகத்தில் இருந்து வந்திருக்கிறது. இவரின் அப்பா இந்தச் சொத்துக்களைக் குறித்து எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்யாமல் காலமாகி விடுகிறார். 

இந்த நிலையில் இவரின் சகோதரர் (இவர்கள் மொத்தம் ஐந்து பேர்) ஒருவர் தனது தாயின் பெயரில் பட்டாக்களை மாற்றி பாக சாசனத்தை வைத்துக் கொண்டு பெரும்பாலான இடங்களை விற்பனை செய்து விட்டார். அதுமட்டுமின்றி அம்மாவிடமிருந்து தனக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து பட்டாக்கள் மாற்றி அனுபவித்து வருகிறார்.

இதர நான்கு சகோதர சகோதரிகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பாகம் இருக்கும் சொத்தின் உரிமையை மாற்றம் செய்து, விற்பனை செய்தது மட்டுமல்லாமல், தன் பெயரில் தான செட்டில்மெண்ட்டும் பெற்று வைத்திருக்கும் தம்பியின் சட்டமீறல்களை எங்கனம் சரி செய்வது என்று கேட்டார்.

வழக்கறிஞரிடம் சென்றால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, ஸ்டாம்ப் கட்டணம் கட்டி, வழக்காடினால் எத்தனை வருடமோ? 

அது மட்டுமின்றி வயதான அம்மா, கூடப்பிறந்த தம்பி மீது நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்குமா? நீர் அடித்து நீர் விலகுவதில்லை. உறவுகளுக்குள் ஒன்றினைந்த மனம் இல்லையென்றால் அதை வைத்துக் கொண்டு சட்டமும், வக்கீலும் இன்ன பிற ஆட்களும் உறிஞ்சி விடுவார்கள். காலமும், பணமும் விரயமாகுமே தவிர பெரிதாக ஒன்றும் நடந்து விடாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஆசிரியரை நேரில் பார்க்க வரும்படி அழைத்தேன்.

ஏகப்பட்ட கேள்விகள். ஏகப்பட்ட விசாரணைகள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் அளித்தேன். பின்னர் ஆவணங்களைப் பெற்று ஆராய்ந்தேன்.

ஒரு சில மூல ஆவணங்களைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதில் கீழத்திருத்தங்கல் கிராமத்தின் பதிவு ஆவணங்கள் வேறொரு பதிவு அலுவலகத்தில் பதிவாகி இருந்ததைக் கண்டுபிடித்தேன். ஆவணங்கள் அப்டேட் எரர். 

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் இவ்வகையிலான கணிணி தவறுகள் பலபேரின் வாழ்க்கையை அமைதியற்றதாக்கி விடும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. இது ஒரு பிரச்சினை. இருக்கட்டும் ஓரமாக.

பத்திர நகல்கள், வாரிசு, இறப்புச் சான்றிதழ்கள், வில்லங்கச் சான்றிதழ்கள் ஆகியவைகளை வைத்துக் கொண்டு முறையான புகார் மனுவை தயாரித்தேன்.

முதலில் பட்டாவை ரத்துச் செய்ய வேண்டும். பின்னர் இந்த சர்வே எண்களில் இருக்கும் நிலங்களின் தொடர்ச்சியான பத்திரப்பதிவினை நிறுத்த வேண்டும். அடுத்து, இதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கணும். அடுத்து பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டபோது பரிசீலித்த ஆவணங்களின் நகல்களைக் கோருதல் என்று திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை தயாரித்து அனுப்பி வைத்தேன். தினசரியில் ஒரு பொது அறிவிப்பும் கொடுத்தேன். 

பதிவு தபாலில் அனுப்பி வைத்த விண்ணப்பங்களுக்கு பதில் வரவே இல்லை என ஆசிரியை போனில் அழைக்க ஆரம்பித்தார். கொரனா நேரம். முழு லாக்டவுனில் இருந்தது அரசு. பொறுமையாக இருங்கள் வந்து விடும் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆசிரியையைக்கு நம்பிக்கையே இல்லை. எதுவும் நடக்காது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் அவரின் தம்பி தன் அம்மாவை வைத்து இதர சகோதர சகோதரிகளிடம் பேச்சு வார்த்தை ஆரம்பித்து விட்டார். இருப்பினும் அவர் தான் செய்த தவற்றினை ஒப்புக் கொள்ளாமல், தன் அம்மா மூலம் கிரையம் பெற்றவர்களை தான் ஏமாற்றி இருக்கிறோம் என்ற ஒரு சிறு சங்கடமும் இல்லாமல் பேசி வருவதாக ஆசிரியை என்னிடம் போனில் சொன்னார்.

நான் பொறுமையாக இருங்கள். ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் உங்கள் மனு மீதான நடவடிக்கை எடுத்ததற்கான அறிவிப்பு வரும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு மனுவுக்குமான பதில் வர ஆரம்பித்து இருக்கிறது என்றுச் சொன்னார். தம்பியையும், தன் அம்மாவையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகச் சொன்னார். அவ்வளவுதான் தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. இது  குடும்பப் பிரச்சினை. ஆசிரியையின் தம்பி சட்ட விரோதமாக தன் தாயுடன் கூட்டுச் சேர்ந்து,  நான்கு பேரின் சொத்துரிமையை சட்ட விரோதமாக நீக்கி சொத்துக்களை விற்பனை செய்திருக்கிறார். 

இது பற்றிய எந்த ஒரு தகவலும் இன்றி இந்தச் சொத்துக்களைக் கிரையம் பெற்றவர்கள் வாங்கி இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆசிரியையின் அம்மா ஜெயிலுக்குப் போக வேண்டும். தம்பி தப்பித்துக் கொள்வார். 

அம்மா மீது நடவடிக்கை எடுக்க இதர மகன்களும் மகள்களும் விரும்பமாட்டார்கள். இனி அவர்களுக்குள் செட்டில்மெண்ட் ஆனாலும், முறைகேடான வகையில் கிரையம் வாங்கி ஏமாந்தவர்களின் கதி? அவர்கள் எப்படி இதைச் சரி செய்வார்கள்? தெரியவில்லை.

இதைத்தான் காலத்தின் கொடுமை என்பார்கள். ஒரு சொத்தினை வாங்கும் போது சரியான லீகல் அட்வசைரிடம் சென்று சொத்துரிமை ஆய்வு செய்யாமல் வாங்கினால் இப்படித்தான் நடக்கும்.

சொத்தில் ஒரு பிரச்சினை வந்து விட்டது என்றால் அதை எப்படி நீக்க வேண்டுமென்ற அனுபவ அறிவு இருக்கும் லீகல் அட்வசைரிடம் ஆலோசனை செய்தல் அவசியம். அது இல்லாமல் கோர்ட்டு வழக்கு என்றுச் சென்றால் எப்போது சரியாகும்?  நம் இந்திய கோர்ட்டுகளின் கதை தான் உங்களுக்குத் தெரியுமே? 

கீழே இருக்கும் ஆதாரங்களைப் பார்க்கவும். உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்தால் என்னை அணுகலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. 



 

மேற்கண்ட பொது அறிவிப்பினை தயார் செய்து கொடுத்தேன். மிகத் துல்லியமான புகார் விண்ணப்பத்தை சரியான ஆவணங்களுடன் சாட்சி இணைத்து ஒவ்வொரு துறையினருக்கும் அனுப்பி வைத்தேன். எந்த துறையினரும் புகார் மனுவைப் படித்தால் தெளிவான படம் போல முறைகேட்டினைக் கண்டுபிடிக்கும் வகையில் தயாரித்து இருந்தேன். இனி நான்கு பேரின் சொத்துரிமை சரி செய்யப்பட்டு விடும். 

ஆனால் இது பற்றி ஆராயாமல் கிரையம் பெற்றவர்களின் சொத்துரிமை ஆவணங்களின் கதி அதோகதியாகி விடும். யார் யார் என்னென்ன பிரச்சினைகளில் இருக்கின்றார்களோ தெரியவில்லை. அந்தச் சொத்துக்களில் பல வீட்டு மனைகளாக இருக்கின்றன. சுமார் 200 பத்திரங்களுக்கு மேல் உள்ளன. அந்த இரு நூறு பத்திரங்களின் கதி? அதன் லீகல்? எல்லாம் அவர்களாகச் சரி செய்து கொள்ள வேண்டும். என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.

வாழ்க வளமுடன்...!

Friday, August 6, 2021

ரெண்டு இட்லி

மனிதனின் முதல் உணவு தாய்ப்பால். அதன் காரணமாகத்தான் தாயின் மீதான அன்பு பிள்ளைகளுக்கு அதிகம். இறுதிவரை தாயை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உணவு உணர்வுகளோடு ஒன்றியவை.  மனிதன் உணவால் உருவானவன். உணவின் தன்மைக்கு ஏற்ப அவனின் வாழ்க்கை இருக்கும். நலமோ, நோயோ எல்லாவற்றுக்கும் காரணம் உணவு.

திருக்குறள் ஒன்று

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று

அதிக உணவும், குறைவான உணவும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் பாதிப்பினை உண்டாக்கி நோயாக மாறி விடும் என்கிறார் திருவள்ளுவர்.

உணவின்றி இவ்வுலகில் எவ்வுயிரும் இல்லை. ஆனால் மனிதனின் தற்போதைய நிலையோ பரிதாபம். என்றைக்கு உணவுப் பொருள் வணிகத்துறைக்குள் உட்புகுந்ததோ அன்றிலிருந்து நாம் எதைச் சாப்பிட வேண்டுமென்பதை செய்தி மீடியாக்களும், சினிமா டிவி பிரபலங்கள் என்றுச் சொல்லக்கூடிய ஃபிராடுகளும் முடிவு செய்கிறார்கள்.

சினிமாக்காரன் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. நம் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி, நம்மை அவனின் பணத்தாசைக்குப் பலியாக்கி விடுகின்றான்கள். 

வெளி நாட்டு சொகுசுக்காருக்கு வரி விலக்குக் கேட்ட ஒரு குள்ள நரி ஹீரோ, கூல்டிரிங்க்ஸ் குடிக்கச் சொன்னான். பின்னர் அவனே கூல் டிரிங்க்ஸ் கம்பெனிக்கு எதிராய் படமும் நடித்தான். படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆச்சு. கோடி ரூபாய்க்கு கார் வாங்கி குஷியாய்ச் செல்கிறான். கூல்டிரிங்க்ஸ் குடித்தவர்களோ உடலைக் கெடுத்துக் கொண்டார்கள்.

ஸ்டைல் என்ற பெயரில் பெரிய புற்று நோய்க் கூட்டத்தையே உண்டாக்கினான் ஒரு கிழட்டு நரி ஹீரோ. வயதானாலும் மகள் வயதே கொண்ட சின்னஞ்சிறுப் பெண்களுடன் ஹீரோ வேஷம் கட்டுவான். அப்பெண்களின் காலை விரித்து காட்டுவான். 

இவனையெல்லாம் தலைவன் என்று அழைக்கும் முட்டாள் பயல்கள் கூட்டம் உண்டு. அதைப் படம் பிடித்துப் போட்டுக் காட்டும் மீடியா விபச்சாரக் கூட்டமும் ஒன்று இங்கே, நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றுச் சொல்லித் திரிகிறது. நாங்களெல்லாம் யோக்கியன்கள் என்று தர்மம் பேசுவான்கள். கேட்பதற்குக் கேணப்பயல்கள் இங்கு அனேகம் என்கிற போது வாயிலேயே வடையும் சுட்டு, ஊட்டியும் விடுகிறான்கள். ஒருத்தன் இன்னும் வாயில் வடைச் சுட்டுக் கொண்டே இருக்கிறான் இங்கே.

சோப்பிலிருந்து, உண்ணும் உணவிலிருந்து, பாத்ரூம் ஆசிட் வரையிலும் சினிமாக்காரன்கள் கூவிக் கூவி டிவியில் விற்றுக் கொண்டிருக்கின்றான்கள். நாமும் அவன்கள் சொல்வதைக் கேட்டு நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உணவு உண்பதைக் கூட சினிமாக்காரன் சொல்லித்தான் கேட்கும் அவல நிலையில் மனிதனின் ஆறாம் அறிவு உயர்ந்துள்ளது. நாகரீகமாம்.

* * *

 


இனி இட்லிக்கு வந்து விடுவோம்.

திருப்பூரின் மிகப் பெரிய நிறுவன இயக்குனரின் சகோதரர். வால்மார்ட்டின் பிசினஸ் பார்ட்னர். உலகெல்லாம் சுற்றிய பிசினஸ்மேன். உலகிற்கே அச்சுறுத்தலாய் (பீகாஸஸ் உளவு சாப்ட்வேரைச் சொன்னேன்) இருக்கும் இஸ்ரேல் ஜூயிகளுடன் பிசினஸ் செய்கிறவர். அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எனது இனிய நண்பர்.

என் வீட்டுக்கு வரும் போது பசி நேரமானால் இருவரும் சாப்பிடுவதுண்டு. ஒரு நாள் டிபன் சாப்பிடும் போது இரண்டு இட்லி போதுமென்றார். வற்புறுத்தினாலும் கேட்கவில்லை, வேண்டாமென்று மறுத்து விட்டார்.

* * *

ஒரு கதை சொல்லப் போகின்றேன்.

அந்த அம்மாவுக்கு ஆறு குழந்தைகள். கணவர் குமாஸ்தா. குறைவான வருமானம். சொந்த வீடு. 

வீட்டின் பின்னால் முருங்கை மரம், வாழை மரங்கள், கீரைகள், தக்காளிச் செடிகள், காய்கறிச் செடிகள் வளர்ப்பார். ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை வைத்து குழம்பு அத்துடன் ரசமும். 

முருங்கைக் கீரை, பூ, காய் சீசனுக்கு ஏற்றவாறு கிடைப்பவைகள் தான் குழம்பாகவோ, கூட்டாகவோ, பொறியலாகவோ செய்வார். கடைப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

வாழை மரத்தில் கிடைக்கும் அத்தனையும் உணவாக சமைத்து விடுவார். 

அந்த வீட்டில் என்றைக்கும் ரசம் இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் மோரும் கூட.

ரசம் எப்போதுமே குறையாது. ரசம் குறையக் குறைய சுடு நீர் மற்றும் உப்புச் சேர்த்து விட்டால் மீண்டும் ரசம்.

மோர் சாட்டின் துணி போல அவ்வளவு வெண்மை. உணவில் தூய்மை. அம்மாவின் கைங்கரியத்தில். உபயம் தண்ணீர். கொசுறாக தோட்டத்தில் இருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி தாளிப்பு.

ஆறு குழந்தைகளுக்கு மூன்று நேரம் உணவு. பிற ஐந்து குழந்தைகளின் கனவைச் சிதைத்து முதல் குழந்தையின் கல்விப் படிப்புச் செலவு என கட்டுக் கோப்பாக  தன் குடும்பத்தை நடத்தினார் அந்த அம்மா.

முதல் பையனும் பெரியவனாகி படித்து வேலை கிடைத்து திருமணமும் ஆனது. கணக்குப் போடத் தெரிந்த அண்ணன், இதுகளுக்குச் சம்பாதித்துப் போட்டால் நடுத்தெருவென, வட்டிக் கணக்குப் பார்க்க தெரியாத அம்மாவுடன் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்றான்.

திடீரென அந்த அம்மாவுக்கு நோய் வந்து விட்டது. வைத்தியம் பார்த்தனர். கடைசிப் பையன் சிறு குழந்தை. அம்மாவின் அரவணைப்பும் அன்பும் கிடைக்கவில்லை. 

முதல் பண வசதி படைத்த அண்ணன் வீட்டுக்குச் சென்றான். அண்ணன் வீட்டின் சமையலறையின் அருகில் பத்து பேர் அமரும் உணவு மேஜை. 

காலையில் எட்டு மணிக்கு அண்ணன் அலுவலகம் செல்வார். இவனுக்கோ அரசுப் பள்ளிக்கூடம்.

இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

கடைசித் தம்பி தட்டில் இரண்டு இட்லி மட்டுமே. அதை அண்ணனும் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுவார். அவரின் வாய் உணவுக்கு மட்டுமே திறக்கும்.

எப்போதும் தோசையானாலும் இரண்டு. சப்பாத்தி என்றாலும் இரண்டு மட்டுமே.

அண்ணி தன் கடைசிக் கொழுந்தனிடம் எப்போதும் சொல்வது ”இது போதும்”

* * *

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவரின் அண்ணாவோ கொரானா காலத்தில் செத்துப்  போனார். சுடுகாட்டுக்கு  செல்ல பத்து பேர் கூட இல்லை. கொரானா கட்டுப்பாடு. விதி.

”அண்ணி படுக்கையில் கிடக்கிறார். எழுந்து நடக்க கூட முடியவில்லை. பாவமாக இருக்கிறது” என்றார் நண்பர்.

”பரிதாபப்படுகின்றீர்கள் நீங்கள், தர்மமும் அறமும் மிச்சம் மீதி வைக்காமல் திருப்பிக் கொடுக்கும் இயல்பு கொண்டவை” என்றேன் அவரிடம்.

 * * *

நேற்று ஹோட்டலில் காலை உணவுக்காக பேரரிடம் “இரண்டு இட்லி” என்றேன்.

”போதுமா சார்” என்றான்.

நண்பரின் முகம் தெரியா அண்ணி நினைவிலாடினார்.

* * *

Thursday, July 29, 2021

நிலம் (86) - காக்கா நிலங்களும் அனுமதி பெறாத மனைப்பிரிவும்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு வெகு முக்கியமான காக்கா நிலங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம். 

அதென்ன காக்கா நிலங்கள்?

HILLS AREA CONSERVATION AUTHORITY (HACA) என்று குறிப்பிடப்படும் பகுதிகளை காக்கா நிலங்கள் என்று சொல்வார்கள்.

சமீபத்தில் என்னிடம் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். அவர் கொடுத்த நில ஆவணங்களை ஆய்வு செய்த போது அது காக்கா நிலப்பகுதியில் இருந்ததைக் கண்டுபிடித்தேன். முறைப்படி அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தேன்.

என்றைக்குமே அனுமதி வழங்கவே வழங்கப்படாத காக்கா நிலத்தின் சைட் அது. அந்த நிலத்தினை வாங்கினால் அதன் சாதக பாதகங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர் அந்த நிலத்தினை வாங்கவில்லை. வேறு இடம் வாங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்கள் காக்கா நிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் அனுமதி பெறாத (மக்களின் பார்வையில் அது பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள்) மனையிடங்களை வரன்முறைப்படுத்தி, அனுமதி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர புதிய சட்டத்தை அதிமுக அரசு வெளியிட்டது. 

என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்து ரத்து செய்யலாம். ஏனென்றால் மாநில வரையறைக்குள் மட்டும் HACA சட்டம் இல்லை. ஒன்றிய அரசின் ஒப்புதலும் வேண்டும். அது நமக்குத் தேவையில்லை. அரசின் பிரச்சினை. (ஈஷாவுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். யானை வழித்தடங்களில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று இந்தச் சட்டம்  சொல்கிறது)

இந்தச் சட்டத்தின்படி அனுமதி வழங்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் அனுமதி பெறாத மனைகளை அனுமதி பெறவே இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திரு நெல்வேலி, விருது நகர், நீலகிரி, சேலம், வேலூர், விருது நகர் மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காக்களில் உள்ள கிராமங்கள் அனுமதி பெற இயலாதவை என்று சட்டம் சொல்கிறது.

உதாரணமாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டி, பூளுவம்பட்டி, ஆனமலை ஹில்ஸ், ஆனைகட்டி, தடாகம், ஓடந்துறை, கல்லார், ஜகனாரி, கலிக்கல், பில்லூர், நெல்லித்துறை, சுண்டப்பட்டி, கண்டியூர், நீலகிரி கிழக்கு, மேலூர், ஆனைகட்டி வடக்கு, மஞ்சம்பட்டி மற்றும் அமராவதி ஆகிய கிராமங்களில் இருக்கும் மனைப்பிரிவுகளை எப்போதும் வரைமுறைப்படுத்த இயலாது.

சமீபத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி தருவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அனுமதி பெறா மனைப்பிரிவு போலவே அதுவும் அரசின் அனுமதி இல்லாத ஆவணம் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த அனுமதி பைசாவுக்கும் பிரயோஜனப்படாது.

காக்கா பகுதியில் நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல அரசின் சட்டங்கள் இருக்கின்றன. 

காக்கா பகுதியில் தனிப்பட்ட முறையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, அதற்குள் வீடு கட்டுவதற்காக அனுமதி பெறுவது என்பது வேறு. ஆனால் மனை இடமாக பிரித்து விற்பனை செய்யும் போது அதற்கான அனுமதி பெறுவது என்பது வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக கருதி விடக்கூடாது.

காக்கா பகுதிகள் எவை, அவைகளில் நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? அவைகளை வாங்கலாமா இல்லையா? என்பது பற்றி தெரிந்து கொள்ள என்னைத் தொடர்பு கொள்ளவும். 

கட்டணம் உண்டு.

காக்கா பகுதி மனைகளை வாங்க நினைப்பவர்கள் லீகல் கன்சல்டேசனுக்கு என்னை அணுகலாம்.

குறிப்பு : சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெறா வீட்டு மனைப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வாறு ரத்துச் செய்யப்பட்ட பத்திரங்கள் கொண்ட நிலத்தினை வாங்கி ஏமாற வேண்டாம். கடனும் கொடுக்க வேண்டாம்.




Monday, July 26, 2021

விடிகாலை இரண்டு மணியில் மணி

விடிகாலை இரண்டு மணி. விழித்துக் கொண்டேன்.

சன்னலைத் திறந்தேன்.

அமைதி தவழும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகள் இருளாய் தெரிந்தது.

மீண்டும் படுக்கையில் படுத்தேன். 

அருகில் கோதை  சுருண்டு சிறுபிள்ளையாய் முடிகலைந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

ஏகாந்தம் மண்டிய விடிகாலை நிசப்சத்தில் நினைவுகள் பின்னோக்கின.

அவன் வீட்டுக்கு வந்த போது அழுக்காய், சகதியில் புரண்டு, நாற்றமடித்துக் கொண்டிருந்தான். ஷாம்பூ போட்டு இரண்டு முறை குளிக்க வைத்தாள். அமைதியாக உட்கார்ந்திருந்தான். சேட்டை எதுவும் செய்யவில்லை. வெள்ளையும் செவலையும் கலந்த நிறத்தில் ஒல்லியாய் வீட்டுக்குள் சுத்தி வந்து கொண்டிருந்தான்.

ரூடோஸ் அவனைப் பார்த்து கர்ண கடூரமாய் குலைத்துக் கொண்டிருந்தான். இவளுக்காக தான் அவனைக் கொண்டு வந்திருந்தேன். ஜோதி சாமிதான் அவனை வீட்டுக்கு அனுப்பி வைந்திருந்தார்.

மணி என்று பெயர் வைத்தேன்.

மறுநாள் ரேபிட்ஸ் தடுப்பூசி மற்றும் இன்னொரு ஊசி போட்டுக் கொண்டு வந்தோம். அவனுக்கு என தனியாக உணவு தட்டு, சங்கிலி, கழுத்துப் பட்டை, பிஸ்கெட், எலும்பு மற்றும் இன்ன பிறவனவெல்லாம் வாங்கி வந்து கொடுத்தேன்.

நன்றாகச் சாப்பிட்டு விட்டு, காற்றாடியின் கீழே சுகமாய் படுத்து உறங்குவான். புதிய ஆட்கள் வந்தால் ஒரு சத்தம். ஈரக்குலை நடுங்கும் கர்ண கடூரமானது அவனது குரல்.

அவனது தலை பெரியது. சிங்கம் போல இருப்பான். அசைந்து அசைந்து நடந்து செல்லுகையில் பெண் நடப்பது போலவே இருப்பான். 

ரூடோசும் அவனும் ஒன்றாகவே இருந்தனர். ரூடோசுக்கு அவளது முழு உரிமையில் பங்குக்கு மணி வந்து விட்டான் என சில நாட்கள் சோகமாக இருந்தாள். பின்னர் பழகிக் கொண்டாள்.

(மணி - லேப்ராடர் வகை)

     



இப்படியான சூழலில் மணிக்கு ஒரு பிரச்சினை வந்தது.

ரூடோஸ் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மைக்கு வருவாள். பெண்கள் போலவே அவளது பிறப்புருப்பில் இரத்தம் வடியும். நான்கைந்து நாட்களில் அவள் மேட்டிங்க்குக்கு தயாராக ஆவாள். அவள் மணியை முற்றிலும் நிராகரித்து விட்டாள். அவனும் அவளுடன் சேர்வதற்காக என்னென்னவோ சேட்டைகள் செய்து பார்த்தான். ஊஹூம். விளைவு குரைக்க ஆரம்பித்து விட்டான். 

மிருக மனம். இயற்கையின் அழைப்பு. மணி சோர்வடைந்து விட்டான். தினமும் அவளைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் இருவரும் வளர்கின்றனர். ரித்திக் இருவரையும்  நன்கு கவனித்துக் கொள்வான். நிவேதிதா மணியின் அருகில் செல்வதில்லை. பதின்ம வயதில் இருக்கும் இருவருக்கும்மிருகங்களின் இனச்சேர்க்கை சேட்டைகள் தேவையற்ற பதிவுகளை உருவாக்கி விடும் என மனதின் ஊடே சிந்தனைகள். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விதமான சம்பவங்கள் ஏதேனும் மனதுக்குள் பதிந்து உணர்வுகளை கிளர்ச்சி அடைய வைத்து விடும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமே என்ற பயம் வேறு.

மணியை வேறு இடத்தில் விட்டு விடலாமென முடிவெடுத்து விட்டேன். மனசு கேட்கமாட்டேன் என்கிறது. நான்கைந்து நாட்களுக்கு குரைத்துக் கொண்டிருப்பான். சரியாகி விடுவான் என்றாலும் மணியின் இயற்கை உணர்வுகள் பாதிக்கப்படும் போது அவன் தன் கோபத்தினை அவன் முன்னால் இருக்கும் பொருட்கள் மீது காட்டுகிறான். கடித்து துவம்சம் செய்கிறான்.

விளாங்குறிச்சியில் மேட்டிங்குக்கு அடிக்கடி நாய்கள் வரும். ஆனால் இங்கே அதற்கான வாய்ப்பில்லை. 

தாராபுரத்தில் இருக்கும் நண்பரின் தோட்டத்தில் ஜூலி இருந்தாள். அவள் திடீரென இறந்து போனாள். பெரிய தென்னைத்தோட்டம் வைத்திருக்கிறார். தோட்டத்துக்குள் வீடு.

அவரை அழைத்தேன்.  ஏனென்றால் நாய் வளர்த்தவர்களுக்குத் தான் நாய்கள் மீதான அன்பு இருக்கும்.

“கொண்டு வந்து விடுங்கள் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இவரின் நண்பரின் வீட்டில் சில்க்கி இருப்பதாகவும். அவளுக்கு மணி மேட்டிங்குக்கு சரியாக இருப்பான் எனவும் சொன்னார். 

அவனுக்கு இது எதுவும் தெரியாது. 

எனக்குதான் விடிகாலையில் விழிப்பு வந்து பதட்டத்தோடும், மன வருத்ததோடும் இருந்தேன். அவன் உணர்ந்து கொண்டானா எனத் தெரியவில்லை.

ஏழு மணிக்கு காரின் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அவனது தடுப்பூசி புத்தகம், அவனது உணவு தட்டு, சங்கிலிகளை எடுத்து காருக்குள் வைத்தான் ரித்திக். நிவேதிதா சோகமாக இருந்தாள். எனக்கோ மனமெல்லாம் டன் கணக்கில் கனத்தது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நினைவுகள் வந்து சென்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். அதுவும் மணலில் வடித்த கல் போல அடிக்கடி உதிர்ந்து கொண்டே இருந்தது.

காரில் சமத்தாக உட்கார்ந்து கொண்டான். அவன் காரின் பின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், நேரம் செல்லச் செல்ல படுத்து விட்டான். பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் சாலையில் இருக்கும் நாயக்கர் ஹோட்டலில் இரண்டு இட்லி சாப்பிட்டேன். கோதை பொங்கல். பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தோம். அமைதியாகச் சாப்பிட்டான். அழைத்தேன். திரும்பிக் கூட பார்க்கவில்லை.

தோட்டத்துக்குள் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினான். கோதையால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அங்கிருந்த ஒரு கருப்பு நாட்டு நாயிடம் சென்று முகர்ந்து பார்த்தான். ஒரு சில இடங்களில் ஒன்றுக்குச் சென்றான். நண்பர் அவனை கோதையிடமிருந்து வாங்கி, மரத்தில் கட்டினார்.

அவன் அவரைப் பார்த்து தன் அன்பினைத் தெரிவித்தான். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம். அவன் காரில் இருக்கும் என்னைப் பார்த்துக் குரைத்தான். ஒரே ஒரு தடவைதான் குரைத்தான்.

அவனுக்குத் தெரிந்து விட்டது. 

இனி நான் அவனின் எஜமானன் அல்லவென.

நெஞ்சுக்குள் கத்தியைச் சொருகியது போல வலித்தது.

விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

கோதை அறியாமல் துடைத்துக் கொண்டேன். நான் கலங்குவதை அவள் எப்போதும் பார்த்தது இல்லை. அது என் இயல்பும் இல்லை.

எங்கிருந்தோ வந்தான். இடையில் என்னோடு சில காலம் வாழ்ந்தான். இனி அவன் என்னோடு இல்லை. 150 கிலோ மீட்டர் தூரத்தில் வாழ்கிறான்.

இதோ இன்றைக்கு விடிகாலைப் பொழுதில் அவனின் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது மனசு.

அன்பு வலிகள் நிறைந்தது. வேதனைப்படுத்துகிறது.

அவனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கண்கள் கலங்கி மனதும் தளர்ச்சி அடைகிறது.

அவன் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழட்டும்.

Saturday, July 17, 2021

நிலம் (85) - ரத்து செய்யக்கூடிய பத்திரங்கள் எவை?

நல்ல குளிர். காலையில் சீரகத் தண்ணீர் ஒரு குவளை அருந்தினால் தான் மட்டுப்படுகிறது. சுற்றிலும் மலை. எங்கெங்கு நோக்கினும் பச்சை. இன்னும் சிறிது நேரத்தில் பட்சிகள் படபடப்பாய் குரல் எழுப்ப ஆரம்பித்து விடும். அமைதி தவழும் இயற்கைச் சூழல்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரவாகமெடுக்கும் சிறுவாணியின் சுவையான நீர், நல்ல காற்று, இயற்கை சூழல் வீட்டின் மேற்கே சலசலத்து ஓடும் சிற்றோடை -- பிள்ளைகள் படிப்புக்காக மாறிய இடம். நடக்கும் தூரத்தில் கல்விச் சாலை. 

ஹாஸ்டலில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விளாங்குறிச்சியில் பரபரவென ஓடும் வாழ்க்கைச் சூழல். இங்கோ அமைதி. பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

முதலில் ஒன்றியப் பிரச்சினையைப் பார்க்கலாம். 

இந்திய அரசமைப்பு மார்ச் மாதம் 31ம் தேதி 2008 - திருத்தி அமைக்கப்பட்டதன் தமிழ் வடிவத்தில் மாநிலங்கள் சேர்ந்த ஒன்றிய அரசு எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஒன்றியம் என தான் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதாரம் கீழே

இது இந்திய அரசுக்காக சட்ட (ஆட்சிமொழிப் பிரிவு) துறையினரால் மொழி பெயர்கப்பட்டு அது 2009 ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒன்றிய அரசு என்பதே சரி. பேச்சு மொழிக்காக மத்திய அரசு என்று அழைக்கலாம். அல்லது பிஜேபி அரசு என்று அழைக்கலாம். அல்லது மோடி அரசு என்றும் அழைக்கலாம். அது அழைப்பவரின் வசதி.

ஆனால் மிகச் சரியானது இந்திய ஒன்றிய அரசு என்பதே. அது மட்டுமின்றி ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடுத்து கொங்கு நாடு பிரச்சினை

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராய் பொறுப்பேற்ற போது கொங்கு நாடு என்று கையொப்பம் இட்டாராம். அப்படி எல்லாம் தன் விருப்பத்துக்கு எழுத அவருக்கு உரிமை இல்லை. அது தனி பிரச்சினை. 

ஒரு மாநிலத்தினை பிரிக்க குடியரசு தலைவரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தின் வழியாக அந்த மாநிலத்தின் சட்டசபைக்கு பரிந்துரை கோரி அனுப்ப வேண்டும். அம்மாநில சட்டசபை அதை அங்கீகரிக்க வேண்டும். 

இது கடைசி நடைமுறை. 

இதற்கு முன்பு மாநிலத்தினை பிரிப்பதற்கான தேவை இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். மக்கள் விரும்பி அதை போராட்டத்தின் வழியாக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்களைத் தனித்தனியாகப் பிரித்து விட்டால் எளிதில் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவது போல நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் சிற்றறிவு கொண்ட அதிகாரப் பசி கொண்டலையும் பாக்டீரியா தமிழர்களின் நயவஞ்சக எண்ணம் இது.

மொழி வழி  மாநிலங்களைப் பிரிப்பது என்பது இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும். இங்கு தமிழர்களாய் இருக்கும் நய வஞ்சக பதவி ஆசை பிடித்தலையும் நரிகளின் ஊளை இது.

ஆகவே கொங்கு நாடு என்பது கனவிலும் நடக்காத ஒன்று. தமிழர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் பேசும் மக்களை தனி மாநிலமாக பிரிப்பது என்பது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும் என்று ஒன்றிய பாரதீய ஜனதாவுக்குத் தெரியும். 



வெட்டிப் பேச்சு, ஒன்றுக்கும் உதவாத அரசியல் வார்த்தைகள் என பார தீய ஜனதா கட்சி கேவலமாக அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் இக்கட்சியையும், இக்கட்சியினை தமிழகத்தில் வேரூன்ற வைத்த லீச்சசுமான ஊழலுக்காகவே நான்கு  லட்சம் கோடியை கடனாக வைத்துச் சென்றிருக்கும் அதிமுகவின் துரோகிகளையும் அடையாளம் கண்டு கொண்டு அமைதியாக அதற்கான வேலையினைச் செய்ய வேண்டும்.

டிவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் மூலம் போலி அடையாளத்துடன் லட்சக்கணக்கான பதிவுகள் போடப்படுகின்றன. அதையும் தமிழர்கள் தான் செய்கிறார்கள். ஆகவே இவ்வகைப் போலிப் பதிவுகளையும் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

அடுத்து ரத்துச் செய்யக்கூடிய பத்திரங்கள் பற்றிப் பார்க்கலாம்.

சமீபத்தில் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். தான செட்டில்மெண்ட் ரத்துப் பத்திரம் ஒன்றின் மூலம் சொத்தின் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நிராகரித்து விட்டேன். சொத்தானது கிரையம் ஆகவில்லை. மூன்று கோடி ரூபாய் தப்பித்தது.

தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது. அவ்வாறு செய்து சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது செல்லாது என்பதை அறிந்து கொள்க.

பதிவுத்துறை என்பது ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் மற்றொரு பகுதி. ஆரம்பகாலத்தில் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தான் பதிவு செய்யப்பட்டன. இப்போதும் வங்கிக்கடனுக்காக மீட்கப்படும் சொத்துக்களின் பத்திரங்கள் நீதிமன்றங்கள் மூலமாக பதிவு செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆவணங்களை எளிதாகக் கையாள பதிவுத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சொத்துரிமைப் பதிவுகளை நீக்கவோ அல்லது ரத்துச் செய்யவோ நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதை அறிந்து கொள்க. யார் எதைச் சொன்னாலும் நம்பி விடக்கூடாது.

இந்த நடைமுறையில் ஒரு சில ஆவணங்களை ரத்துச் செய்வதற்கு பதிவுத்துறைக்கு அனுமதி உண்டு.

உயில் பத்திரம்

பொது அதிகார ஆவணம்

கிரைய ஒப்பந்த பத்திரம்

மேலே கண்ட மூன்று பத்திரங்களை மட்டும் துணைப்பதிவாளர் அலுவலகம் மூலம் ரத்துச் செய்யலாம்.

உயிலை எழுதியவர் அதை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்து மறு உயில் எழுதலாம் அல்லது எழுதாமலும் இருக்கலாம். உயில் ரத்து, புதிய உயில் ஆகியவைகளை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்.

பொது அதிகார ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்யலாம். இப்போது அதிகாரம் எழுதி வாங்கியவரும் பதிவு அலுவலகம் வர வேண்டும் என்கிறார்கள். இந்த ரத்துப் பத்திரம் பதிய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் பொது அதிகார ஆவண அதிகாரம் பெற்றவர் சொத்தின் உரிமையாளர் இல்லை என்பது. சொத்தின் விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளரின் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டு முகவரின் பெயருக்கு வழங்கக் கூடாது.

கிரைய ஒப்பந்த ஆவணத்தை - அதில் குறிப்பிட்டிருக்கும் சாராம்சங்களின் படி  துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரத்துச் செய்யலாம்.

சொத்துக்கள் வாங்கும் முன்பு இவைகளைக் கவனத்தில் கொள்க.

 ==================================

 #செட்டில்மெண்டுபத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம்
#இரத்துபத்திரம் #பாகபிரிவினை  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம்

Saturday, July 10, 2021

தமிழ்திசையின் மனம் குழப்பும் செய்தி - பொதுச் சொத்தினை மக்களுக்கு நிர்வகிக்க தெரியாதா?

இன்று காலை தினசரியில் கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். செய்தியின் தலைப்பில் ஏதோ உள் குத்து இருக்கிறது என்று புரிந்தது. கட்டுரை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். புரிந்து போனது.

இதை நன்கு படித்துப் பாருங்கள். இதன் தாக்கம் மனதுக்குள் விரியும்.

கோவில் அடிமை நிறுத்து என ஆரம்பித்து வைத்த டான்சர் ஜக்கிவாசுதேவ்  அவர்களைத் தொடர்ந்து மனவிரோத மதக்கட்சிகளும் இணை, துணை, குறுக்குசாலை, ஆன்லைன், டிவி பொய்யர்கள் போர்டு ஜோலிக்காரர்கள் எல்லாம் பொங்கு பொங்குவென பொங்கினார்கள்.

கோவில் அடிமை நிறுத்து என்று யாருக்குச் சொல்ல வேண்டும்? 

இன்றும் கோவில்களில் தீண்டாமையைக் கொண்டு வரும் ஆகம விதிகளை செயல்படுத்துவர்களிடம் சொல்ல வேண்டும். 

ஒரு கால் கட்டை விரலை குருதி வழிந்த சிவலிங்கத்தின் கண்களில் வைத்துக் கொண்டு தன் இன்னொரு கண்ணைப் பிடிங்கி எடுத்த கண்ணப்பருக்கு ஆகம விதிகளின் படி சிவபெருமான் காட்சி தர முடியாது என்று சொல்லவில்லை. 

இல்லாத ஒரு விதியை வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இறைவனுக்கு பூஜை செய்யும்படி எந்த இறைவனும் அவதாரம் எடுத்து வந்து கருத்துத் தெரிவிக்கவில்லை. 

இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். பக்திக்கும் கட்டுப்படுபவனல்ல.

இவர்கள் கோவிலை மக்களிடம் திருப்பிக் கொடு என்கிறார்கள். அப்படிச் சொன்னவர்களின் மூதாதையரோ அல்லது அப்பன், தாத்தாக்களோ கோவிலைக் கட்டிக் கொடுக்கவில்லை. 

கோவில்களில் இருக்கும் செங்கல்கள் ஒவ்வொன்றும் மக்களின் வரிப்பணம். மன்னர்கள் வரிப்பணத்தில் கோவில் கட்டினார்கள்.

அரசு நிர்வகிப்பது ஒன்றே சட்டப்பூர்வமானது. 

மசூதிகள், சர்ச்சுகளுக்கும் தமிழர்கள்  இனத்துக்கும் தொடர்பில்லை. அதை ஏன் தமிழ்நாடு அரசு நிர்வகிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

தமிழும், தமிழ் மதமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.  

மதத்தின் வழியாக பொய் புரட்டுகளையும் பேசிக் கொண்டு, செங்கல்களால் ஆட்சியைப் பிடித்தவர்களின் அல்லுசில்லுகளும், அயோக்கிய சிகாமணிகளும் கூப்பாடு போடுகின்றார்கள்.

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை வைத்திருக்கும்.

இங்கே தமிழகத்தில் பல சதிகாரர்களின் நயவஞ்சகத்தினால் மூளை குழம்பிப் போன மக்களிடம் ஒரே ஒரு செங்கலைக் காட்டி திமுகவை வெற்றி பெற வைக்க உதயநிதி உதவினார்.

செங்கல் என்பது சாதாரணமானது அல்ல.

கட்டுரையில் மேய்ச்சல் நிலம் என்ற வார்த்தையை நாராயணி பயன்படுத்துகிறார். நாராயணி அவர்களே, அது தமிழர்களின் வார்த்தை.

“சாதாரண மனிதர்களுக்கு  எதையும் சுயமாக நிர்வகிக்க தெரியாது என்ற கருத்தாங்கள் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன” என குறுந்தலைப்பு வைத்திருக்கிறது தமிழ் திசை. (கட்டுரையின் விஷம் இதுதான். மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குவது)

(நன்றி தமிழ் திசை)
 

சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது எங்கனம் சமத்துவ பரிபாலனம் நடக்கும்? ஜாதியின் வேர்கள் ஆழத்தில் கிடக்கின்றன. இவ்வகையான சூழலில் சமத்துவமான நிர்வாகம் நடக்காது. இன்றைக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கின்றன. தனித்தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 

நாங்கள் மிகத் தெளிவாக எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். ஆங்கிலேயர்கள் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி வைத்து விட்டார்கள். இல்லையெனில் தமிழ் இசை கர்நாடக சங்கீதமென மாற்றமெடுத்து நிற்பது போல, இல்லாத மொழியில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். சதிராட்டம் பரத நாட்டியம் என்று மாற்றியது போல மாற்றி இருப்பார்கள்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், கிராமக்காடுகள், இட்டேரி போன்றவை தமிழர் வாழ்வியலில் ஒன்றியவை.

அரசின் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய வேண்டுமெனில், கோவில்களையும் அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அரசின் அலுவலர்களும், மக்கள் பிரதி நிதிகளும் நன்றாகத்தான் நிர்வகிக்கின்றார்கள் இதுகாறும். இனிமேலும் அவ்வாறே. வம்பு வழக்குகள் வந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கும். ஏற்கனவே அதற்கான அமைப்புகள் இங்கே உள்ளன. 

ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள் உண்டு. பொருளில் ஏற்றத்தாழ்வு கொண்டோர் உண்டு. அன்றாட வேலைக்கு செல்வோரும், வீட்டில் உட்கார்ந்து வாழ்வு போக்கும் மனிதர்களும் உண்டு. இவர்கள் எல்லோரும் தான் கோவில்களுக்குச் செல்கிறார்கள். 

கோவில் நிர்வாகத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றால் மீண்டும் அதே கதை. கோவில்களுக்குள் நின்று கொண்டு ஆகமத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கொடுத்தல் தான் நல்லது ஏனென்றால் இவர்களால் நிர்வகிக்க வாய்ப்பில்லை என்பதுதானே அது?

கோவில்கள் என்பது மக்கள் சொத்து. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வகிப்பதில் தெய்வ குற்றம் ஏதும் இல்லை.

அங்கே அப்படி, இங்கே இப்படி என செய்திகளை வெளியிட்டு ஒருவிதமான எதிர்ப்பு மன நிலையை தமிழ் திசையும், கட்டுரையாளரும் உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ் திசை தமிழர்களின் மன நிலையை குழப்பும் விதமாக சமீபகாலமாக அதுவும் திமுக அரசு பதவி ஏற்கும் முன்பே செய்திகளை வெளியிட்டு வருகிறது. 

பல தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழர் விரோத போக்கினையும், மூளைச்சலவை செய்யும் செய்திகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. மக்கள் இவற்றை விலக்கி விட வேண்டும்.

கட்டுரை எழுதிய ஆசிரியரின் உள் நோக்கம் அதுவும் அழுகிப் போன ஜாதிய உள் நோக்கம் தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைப்பது. இக்கட்டுரை அதைத்தான் சொல்லி இருக்கிறது. மீனவர்கள் போராட்டத்துடன் கோவில்களையும் இணைப்பது போல ஸ்லோ பாய்சனை எழுதி இருக்கிறார் அவர்.

கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் அதன் போராட்டங்கள் வேறு. கோவில்களின் நிர்வாகம் என்பது வேறு. ஒன்றுக்கும் ஒன்றுக்கும் தொடர்பில்லை. ஆனால் தொடர்பு படுத்தி இருக்கிறார் கட்டுரை எழுதியவர்.

கோவில்களில் இருக்கும் ஜாதி வெளியேற வேண்டும். அதை காலம் கொண்டு வரும். இனிமேலும் மக்களை இறைவன், ஆகமம், விதிகள் என்றுச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு சுகபோகத்தில் வாழ முடியாது. 

தமிழக கோவில்கள் தமிழர்களின் சொத்து. அதை அரசு மட்டுமே நிர்வகிக்கும். அது தனிப்பட்ட மக்களின் சுய நல ஜாதிய கீழ் நிலை மனம் கொண்டவர்களின் மக்களை நாளடைவில் விரட்டி அடிக்கும்.

தன் உடம்பில் ஜாதிய அடையாளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மனித குலத்தின் விரோதிகள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

குழந்தைகள்ம் மதச் சின்னங்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன. வாழ்வியல் நெறிமுறைகளுக்கான பாதையை மதங்கள் உருவாக்கி நெறிப்படுத்துகின்றன. அது வழிகாட்டி மட்டுமே. மனம் குருகிய மனிதர்களின் இரக்கமற்ற ஜாதிய சிந்தனைகள் தான் ஏற்ற தாழ்வுகளுக்கு காரணமாயிருக்கின்றன.

தமிழ் திசை தன் நிலை மாற்றாவிடில் காலம் மாற்றி விடும். வாழ வைத்திருக்கும் தமிழர்களுக்கு கொஞ்சமாவது நன்றிக் கடன் படல் வேண்டும். இல்லையெனில் கோபுரங்களும் குலைந்து போன வரலாற்றில் பதிந்து போய் விடும்.

#tamilthisai #tamilmagazine