குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label டிடிசிபி அனுமத. Show all posts
Showing posts with label டிடிசிபி அனுமத. Show all posts

Friday, October 1, 2021

நிலம் (89) - 10 செண்ட் பூமியை மனைப்பிரிவாக பதிவு செய்ய முடியுமா?

பெட்ரோல், டீசல் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார பெட்ரோலியத்தின் விலை உலக மார்க்கெட்டில் உயர்ந்த பிறகு, 50 ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்ட போது தேசபக்தி, இந்திய மக்களின் பொருளாதார பாதிப்பு என்று போராட்டமெல்லாம் செய்த அன்றைய குஜராத் சி.எம். நரேந்திர மோடி அவர்கள், இப்போது பார் புகழும் பாரதத்தின் பிரதமராக இருக்கிறார். 

பெட்ரோலிய பொருட்களின் ஆதார விலை குறைவாக இருக்கும் போது கூட விலை உயர்த்திக் கொண்டே வருவதுதான் மிகச் சிறந்த ஆட்சி என புளகாங்கிதம் அடைவோம்.


மேலே இருக்கும் படத்தில் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய நாடாளுமன்றம் - அன்றும் இன்றும் கட்டுரை நேற்றைய தினமணியில் வெளியானது. அதில் மஞ்சள் வண்ணமிடப்பட்டிருக்கும் பகுதியில் மோடி அரசின் முதல் 5 ஆண்டுகளில் வெறும் 66 நாட்கள் தான் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதாவது முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டது என்றும் அதற்கு காரணம் இந்திரா காந்தி காலத்தில் அவ்வாறு நடந்ததுதான் காரணம் என எழுதி இருக்கிறார். இதற்கும் நம் இந்தியாவின் ஒப்பற்ற பிரதமர் காரணமே அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. இந்திரா காந்தியால் தான் பிஜேபி ஆட்சியில் 66 நாட்கள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அதாவது நாடாளுமன்றம் கூட்டப்படாதத்தற்கும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும் எப்போதே மறைந்து போன முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், நேருவும் தான் காரணம் என்பதினை இந்திய மக்கள் மறந்து விடக்கூடாது என்று வக்கீல் எழுதி இருக்கிறார். அதை ஜன நாயகத்தின் தூணான பத்திரிக்கையும் ஆமோதித்து வெளியிட்டிருப்பது கண்டு நாமெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் துன்பப்பட்டு துயரப்பட்டு படாத பாடுபட்டதற்கெல்லாம் இவர்களே காரணம் என்பதைத் தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சி அடைவோம்.

கொரானாவில் சம்பாதிக்க வழியில்லாமல் முடங்கிய மக்களிடம் வரி மேல் வரி விதித்து வசூல் செய்யும் பாஜக ஆட்சியே மிகச் சிறந்த ஆட்சி என கொண்டாடுவோம்.

எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வரமாட்டோம் என பி.எம் என்ற பெயரில் நன்கொடை வசூல் செய்து, அதற்கு 80ஜியில் வருமான வரி விலக்கு கொடுத்து விட்டு, அதைப் பற்றிய தகவல்களைத் தரவே முடியாது என்று நீதிமன்றத்திலேயே சொல்லும் தைரியமான பிஜேபியின் ஆட்சியை நாம் ஆதரிப்போம்.

ஒவ்வொரு சட்டமும் சாதாரண பொது மக்களுக்குத்தான், எங்களுக்கு அல்ல என்று புதிய அரசிலமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய பிஜேபியின் ஆட்சியின் திறமை பற்றி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். 

ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு ஊரையே அழிக்கலாம் அதே போல ஒரு கட்சி நன்றாக இருக்க நாட்டையே அழிக்கலாம் என்ற புதிய சிந்தனையை தேசபக்திக்கு உதாரணமாக காட்டிய பிஜேபி அரசின் ஆட்சியின் தேசபக்தியை மெச்சி மகிழ வேண்டும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. வரி வரி வரி -  வரியைச் செலுத்துவது ஒன்றே மக்களின் கடமை என்ற புதிய தேசபக்தியை மக்களுக்குப் புகட்டிய பெருமை பிஜேபியைச் சாரும்.

சம்பளத்தில் பாதி இல்லை, வரி உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு இதைப் பற்றி எல்லாம் மக்கள் கவலைப்படக்கூடாது. ஆனால் வரியை மட்டும் மிகச் சரியாக கட்டி விட வேண்டும் என்ற பிஜேபி ஆட்சியின் மந்திரத்தினை எவரும் மறந்து விடக்கூடாது.

ஆகவே எல்லோரும் பிஜேபியின் ஆட்சிக்கு ஒரு கைதட்டினைக் கொடுத்து விட்டு தொடருங்கள்.

முதலில் நாடு, பின்னர் தான் எதுவும் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

* * *

கிராமப்புறங்களில் 10 செண்டுக்கும் குறைவாக இருக்கும் பகுதியை வீட்டு மனைப்பிரிவாக பதிவு செய்யலாம் என்ற தமிழக அரசு 16.03.2020ம் தேதியில் பதிவுத் துறை தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறது.

அந்தக் கடிதத்தில் கீழ்கண்டவாறு உள்ள இடங்களைப் பதிவு செய்து கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
  • ஒரு தனி நபரின் 10 செண்ட் விவசாய நிலத்தினை மனைப்பிரிவாகப் பதிவு செய்யலாம்.
  • பத்து செண்ட் இடத்தினை இரண்டு பகுதிகளாக் பிரித்துப் பதிவு செய்து கொடுக்கலாம். இதற்கு லே அவுட் அனுமதி தேவையில்லை.
  • சென்னை மெட்ரோபொலிட்டனுக்கு உட்பட்ட பகுதியில் 8 மனைகளுக்கு மிகாமல் இருக்கும் பகுதியை மனைப்பிரிவாக பதிவு செய்யலாம்.
  • விவசாய நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பகுதியையும் வீட்டு மனையாக பதிவு செய்யலாம்.
  • கிராமப் புறங்களில் சாலை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ள நிலத்தில் புதிய சாலை வசதி ஏதும் ஏற்படுத்தாமல் வீட்டு மனைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22 ஏ (2) வில் - 21.10.2016க்கு முன்பு விடுதலை ஆவணம், கிரைய உடன்படிக்கை, பொது அதிகார ஆவணம் போன்றவை மூலம் பதிவான வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
  • அதிக பரப்பளவு கொண்டு விவசாய நிலத்தில்  ஐந்து செண்ட் பூமியை மட்டும் வீட்டு மனையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலே கண்ட வகையில் மனைப்பிரிவு அனுமதி இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு துறை பத்திரங்களைப் பதிவு செய்து கொடுக்க அரசு உத்தரவு இட்டிருக்கிறது.

வங்கியில் டிடிசிபி அனுமதி இருந்தால் தான் லோன் தருவோம் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் இந்த ஆணை நகலை வைத்து அதிகாரிகளுக்குப் புரிய வைத்து கடன் பெறலாம்.

இது பற்றிய மேலதிக தகவல் வேண்டுமெனில் கட்டணத்துடன் ஆலோசனை தரப்படும். கட்டாயமாக ஜி.எஸ்.டி உண்டு.

தொடர்புக்கு : 9600577755