குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கண்ணப்ப நாயனார். Show all posts
Showing posts with label கண்ணப்ப நாயனார். Show all posts

Saturday, July 10, 2021

தமிழ்திசையின் மனம் குழப்பும் செய்தி - பொதுச் சொத்தினை மக்களுக்கு நிர்வகிக்க தெரியாதா?

இன்று காலை தினசரியில் கீழே இருக்கும் செய்தியைப் படித்தேன். செய்தியின் தலைப்பில் ஏதோ உள் குத்து இருக்கிறது என்று புரிந்தது. கட்டுரை எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். புரிந்து போனது.

இதை நன்கு படித்துப் பாருங்கள். இதன் தாக்கம் மனதுக்குள் விரியும்.

கோவில் அடிமை நிறுத்து என ஆரம்பித்து வைத்த டான்சர் ஜக்கிவாசுதேவ்  அவர்களைத் தொடர்ந்து மனவிரோத மதக்கட்சிகளும் இணை, துணை, குறுக்குசாலை, ஆன்லைன், டிவி பொய்யர்கள் போர்டு ஜோலிக்காரர்கள் எல்லாம் பொங்கு பொங்குவென பொங்கினார்கள்.

கோவில் அடிமை நிறுத்து என்று யாருக்குச் சொல்ல வேண்டும்? 

இன்றும் கோவில்களில் தீண்டாமையைக் கொண்டு வரும் ஆகம விதிகளை செயல்படுத்துவர்களிடம் சொல்ல வேண்டும். 

ஒரு கால் கட்டை விரலை குருதி வழிந்த சிவலிங்கத்தின் கண்களில் வைத்துக் கொண்டு தன் இன்னொரு கண்ணைப் பிடிங்கி எடுத்த கண்ணப்பருக்கு ஆகம விதிகளின் படி சிவபெருமான் காட்சி தர முடியாது என்று சொல்லவில்லை. 

இல்லாத ஒரு விதியை வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இறைவனுக்கு பூஜை செய்யும்படி எந்த இறைவனும் அவதாரம் எடுத்து வந்து கருத்துத் தெரிவிக்கவில்லை. 

இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். பக்திக்கும் கட்டுப்படுபவனல்ல.

இவர்கள் கோவிலை மக்களிடம் திருப்பிக் கொடு என்கிறார்கள். அப்படிச் சொன்னவர்களின் மூதாதையரோ அல்லது அப்பன், தாத்தாக்களோ கோவிலைக் கட்டிக் கொடுக்கவில்லை. 

கோவில்களில் இருக்கும் செங்கல்கள் ஒவ்வொன்றும் மக்களின் வரிப்பணம். மன்னர்கள் வரிப்பணத்தில் கோவில் கட்டினார்கள்.

அரசு நிர்வகிப்பது ஒன்றே சட்டப்பூர்வமானது. 

மசூதிகள், சர்ச்சுகளுக்கும் தமிழர்கள்  இனத்துக்கும் தொடர்பில்லை. அதை ஏன் தமிழ்நாடு அரசு நிர்வகிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

தமிழும், தமிழ் மதமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.  

மதத்தின் வழியாக பொய் புரட்டுகளையும் பேசிக் கொண்டு, செங்கல்களால் ஆட்சியைப் பிடித்தவர்களின் அல்லுசில்லுகளும், அயோக்கிய சிகாமணிகளும் கூப்பாடு போடுகின்றார்கள்.

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை வைத்திருக்கும்.

இங்கே தமிழகத்தில் பல சதிகாரர்களின் நயவஞ்சகத்தினால் மூளை குழம்பிப் போன மக்களிடம் ஒரே ஒரு செங்கலைக் காட்டி திமுகவை வெற்றி பெற வைக்க உதயநிதி உதவினார்.

செங்கல் என்பது சாதாரணமானது அல்ல.

கட்டுரையில் மேய்ச்சல் நிலம் என்ற வார்த்தையை நாராயணி பயன்படுத்துகிறார். நாராயணி அவர்களே, அது தமிழர்களின் வார்த்தை.

“சாதாரண மனிதர்களுக்கு  எதையும் சுயமாக நிர்வகிக்க தெரியாது என்ற கருத்தாங்கள் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன” என குறுந்தலைப்பு வைத்திருக்கிறது தமிழ் திசை. (கட்டுரையின் விஷம் இதுதான். மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குவது)

(நன்றி தமிழ் திசை)
 

சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது எங்கனம் சமத்துவ பரிபாலனம் நடக்கும்? ஜாதியின் வேர்கள் ஆழத்தில் கிடக்கின்றன. இவ்வகையான சூழலில் சமத்துவமான நிர்வாகம் நடக்காது. இன்றைக்கும் தேர்தல்களில் எதிரொலிக்கின்றன. தனித்தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. 

நாங்கள் மிகத் தெளிவாக எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். ஆங்கிலேயர்கள் அவற்றை எல்லாம் ஆவணப்படுத்தி வைத்து விட்டார்கள். இல்லையெனில் தமிழ் இசை கர்நாடக சங்கீதமென மாற்றமெடுத்து நிற்பது போல, இல்லாத மொழியில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். சதிராட்டம் பரத நாட்டியம் என்று மாற்றியது போல மாற்றி இருப்பார்கள்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளிநிலம், கிராமக்காடுகள், இட்டேரி போன்றவை தமிழர் வாழ்வியலில் ஒன்றியவை.

அரசின் எல்லாவற்றையும் நிர்வாகம் செய்ய வேண்டுமெனில், கோவில்களையும் அரசு தான் நிர்வகிக்க வேண்டும். அரசின் அலுவலர்களும், மக்கள் பிரதி நிதிகளும் நன்றாகத்தான் நிர்வகிக்கின்றார்கள் இதுகாறும். இனிமேலும் அவ்வாறே. வம்பு வழக்குகள் வந்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கும். ஏற்கனவே அதற்கான அமைப்புகள் இங்கே உள்ளன. 

ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான ஜாதிகள் உண்டு. பொருளில் ஏற்றத்தாழ்வு கொண்டோர் உண்டு. அன்றாட வேலைக்கு செல்வோரும், வீட்டில் உட்கார்ந்து வாழ்வு போக்கும் மனிதர்களும் உண்டு. இவர்கள் எல்லோரும் தான் கோவில்களுக்குச் செல்கிறார்கள். 

கோவில் நிர்வாகத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்றால் மீண்டும் அதே கதை. கோவில்களுக்குள் நின்று கொண்டு ஆகமத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கொடுத்தல் தான் நல்லது ஏனென்றால் இவர்களால் நிர்வகிக்க வாய்ப்பில்லை என்பதுதானே அது?

கோவில்கள் என்பது மக்கள் சொத்து. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் நிர்வகிப்பதில் தெய்வ குற்றம் ஏதும் இல்லை.

அங்கே அப்படி, இங்கே இப்படி என செய்திகளை வெளியிட்டு ஒருவிதமான எதிர்ப்பு மன நிலையை தமிழ் திசையும், கட்டுரையாளரும் உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ் திசை தமிழர்களின் மன நிலையை குழப்பும் விதமாக சமீபகாலமாக அதுவும் திமுக அரசு பதவி ஏற்கும் முன்பே செய்திகளை வெளியிட்டு வருகிறது. 

பல தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழர் விரோத போக்கினையும், மூளைச்சலவை செய்யும் செய்திகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன. மக்கள் இவற்றை விலக்கி விட வேண்டும்.

கட்டுரை எழுதிய ஆசிரியரின் உள் நோக்கம் அதுவும் அழுகிப் போன ஜாதிய உள் நோக்கம் தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைப்பது. இக்கட்டுரை அதைத்தான் சொல்லி இருக்கிறது. மீனவர்கள் போராட்டத்துடன் கோவில்களையும் இணைப்பது போல ஸ்லோ பாய்சனை எழுதி இருக்கிறார் அவர்.

கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரம் அதன் போராட்டங்கள் வேறு. கோவில்களின் நிர்வாகம் என்பது வேறு. ஒன்றுக்கும் ஒன்றுக்கும் தொடர்பில்லை. ஆனால் தொடர்பு படுத்தி இருக்கிறார் கட்டுரை எழுதியவர்.

கோவில்களில் இருக்கும் ஜாதி வெளியேற வேண்டும். அதை காலம் கொண்டு வரும். இனிமேலும் மக்களை இறைவன், ஆகமம், விதிகள் என்றுச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு சுகபோகத்தில் வாழ முடியாது. 

தமிழக கோவில்கள் தமிழர்களின் சொத்து. அதை அரசு மட்டுமே நிர்வகிக்கும். அது தனிப்பட்ட மக்களின் சுய நல ஜாதிய கீழ் நிலை மனம் கொண்டவர்களின் மக்களை நாளடைவில் விரட்டி அடிக்கும்.

தன் உடம்பில் ஜாதிய அடையாளங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மனித குலத்தின் விரோதிகள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

குழந்தைகள்ம் மதச் சின்னங்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன. வாழ்வியல் நெறிமுறைகளுக்கான பாதையை மதங்கள் உருவாக்கி நெறிப்படுத்துகின்றன. அது வழிகாட்டி மட்டுமே. மனம் குருகிய மனிதர்களின் இரக்கமற்ற ஜாதிய சிந்தனைகள் தான் ஏற்ற தாழ்வுகளுக்கு காரணமாயிருக்கின்றன.

தமிழ் திசை தன் நிலை மாற்றாவிடில் காலம் மாற்றி விடும். வாழ வைத்திருக்கும் தமிழர்களுக்கு கொஞ்சமாவது நன்றிக் கடன் படல் வேண்டும். இல்லையெனில் கோபுரங்களும் குலைந்து போன வரலாற்றில் பதிந்து போய் விடும்.

#tamilthisai #tamilmagazine