குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 17, 2011

மெட்ரிக் பள்ளி பாடங்கள் - ஏமாற்றும் வித்தை

மெட்ரிக் பள்ளிகள் எல்கேஜியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலும் தாங்களே பாடத்திட்டத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பத்தாம் வகுப்பிற்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தினைத் தான் படிக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிற்கும், பனிரெண்டாம் வகுப்பிற்கும் இதே நிலைதான்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையான பெற்றோருக்கு இருப்பதில்லை. எல்கேஜியிலிருந்து என்ன தான் விதவிதமான பாடத்திட்டங்களைப் படித்தாலும் கடைசியில் படிக்கப் போவது அரசுப் பாடத்திட்டம் தான்.  

நான் கரூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராய் பணியாற்றிய போது, பிரின்ஸ்பல் பள்ளிக்கு வந்திருக்கும் வெவ்வேறான புத்தக கம்பெனிகளின் புத்தகங்களைக் கொடுத்து, நல்ல சிலபஸாய் இருக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் படி சொல்வார். கஷ்டப்பட்டு அனைத்துப் புத்தகங்களையும் படித்துப் பார்த்து, நல்ல பாடத்திட்டமாய் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால், மேனேஜ்மெண்ட் எந்தக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அப்பாடத்தினைத்தான் டிக் செய்யும்.

ஐந்து வருட கால ஆசிரியர் பணியின்போது நான் நேரில் கண்டது. பிரின்ஸ்பலிடம் ஆட்சேபனையைத் தெரிவித்தால், நீங்கள் பேசுவது மாதிரி நான் மேனேஜ்மெண்ட்டிடம் பேசினால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்பார். மேனேஜ்மெண்ட்டிடம் பேசியபோது, இந்த சிலபசே போதும் என்றுச் சொல்லி விடுவார்கள்.

ஐந்து பிரிவுகளாய் இருக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் என்ற அரசுப்பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளியில் பனிரெண்டு வகைகளாய் பிரிக்கப்பட்டு விடும். பிள்ளைகளுக்கு மிக அதிக பளுவான திட்டம். இப்பாடத்தினால் விசாலமான அறிவு கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது என்று நான் அடித்துச் சொல்லுவேன். மனப்பாடம் செய் என்பதைத் தவிர வேறொன்றினையும் மெட்ரிக் பள்ளிகள் கற்றுக் கொடுக்காது.

மெட்ரிக் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் அனைத்தும், மேனேஜ்மெண்ட்டின் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதினை நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறேன் என்று மன அழுத்தம் என்ற கிணற்றில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆசிரியராகப் பணியாற்றி அனுபவத்தில் மெட்ரிக் பள்ளிப் பாடங்கள் பெற்றோர்களை ஏமாற்றும் வித்தையாகத்தான் நான் பார்க்கிறேன். 

2 comments:

மதுரை சரவணன் said...

nalla pathivu aasiriyaree... thodaravum.. vaallthukkal

அமுதா கிருஷ்ணா said...

மிக சரியான கருத்து.எனக்கும் இந்த மெட்ரிக் முறை மிகவும் அலர்ஜியானது.மக்களின் பணத்தை மட்டும் குறியாக கொண்டு செயல்படுவது. வேஸ்ட் சிலபஸ்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.