குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 14, 2011

அவசியமான முதலீடு - வீடு





வரும் காலங்களில் இன்றைக்கு இருப்பதை விட விலைவாசி அதிகரிக்குமே ஒழிய குறைவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளமும் ஏறுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதே போல மற்ற பொருட்களின் விலையும் ஏறி விடுவதால் வாங்கும் சம்பளம் சாப்பாடு மற்றும் இன்னபிற அத்திவசியமான் தேவைகளுக்கே சரியாக இருப்பதால் சொத்து, சேமிப்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே சென்று விடுகிறது. 

உலகில் கோடீஸ்வரர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் கோடீஸ்வரர்களாய் நடிப்பவர்களே அதிகம். இருபத்தைந்தாயிரம் கொடுத்தால் புத்தம் புதிய கார் வீட்டு வாசலுக்கே வந்து விடுகிறது. மாதத்தவணை, மெயிண்டனன்ஸ், எரிபொருள் செலவென்று காருக்குச் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே அரை கிரவுண்ட் நிலம் வாங்கி விடலாம்.சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் தேவைக்கல்லாமல் செலவழிப்பவர்கள் எதிர்காலத்தில் பணக்கஷ்டத்தினை அனுபவித்தே ஆக வேண்டும். இன்றைய மனிதர்கள் தேவைக்கு ஏற்ப செலவழிக்காமல், ஈகோவிற்காக செலவழிக்கின்றார்கள். வாரம் ஒரு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் 500 ரூபாய் ஆகிறது என்றால் மாதம் 2000 ரூபாய் செலவாகும். அதைச் சேமித்தால் மூன்று வருடங்களில் உங்களிடம் அரை கிரவுண்ட் நிலம் இருக்கும்.

கோயமுத்தூர் தமிழ் நாட்டில் மக்கள் வாழ மிகச் சிறந்த ஒரு இடம். நல்ல காற்று, தண்ணீர் மற்றும் சீதோஷண நிலை என்று இயற்கையாகவே சிறந்த இடமாய் இருக்கின்றது. இந்த ஊரில் உங்களுக்கு ஒரு வீட்டு மனை இருந்தால் நல்லது தானே.

டிடிசிபி அப்ரூவல் ஆகி இருக்கிறதா, நல்ல சாலை வசதி இருக்கிறதா, தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதெல்லாம் வெகு முக்கியமான விஷயங்கள். மேற்படி விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, மிகச் சிறந்த, நல்ல மதிப்புடைய வீட்டு மனைகள் பலவற்றினை நாங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறோம்.

செண்ட் ஐம்பதாயிரத்திலிருந்து பத்து லட்சம் வரை இருக்கும் வீட்டு மனைகள் வேண்டுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். மாதத் தவனையில் மனை வாங்க இயலுமா என்றெல்லாம் யோசிப்பவர்கள் எங்களை மெயில் மூலம் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். சம்பாதிக்கும் போதே ஏதேனும் கொஞ்சமாய் சேமித்து ஒரு சொத்தினை வாங்கி, அதைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள விரும்புவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்களின் மாதாந்திர சேமிப்பு செலவெல்லாம் போக எவ்வளவு வரும் என்பதை திட்டமிட்டுக் கொண்டு, அந்தச் சேமிப்பினை வைத்து சொத்துகள் வாங்கலாமா என்பதை எங்களிடம் விசாரியுங்கள். நாங்கள் உங்களுக்கு ஏற்ற முதலீட்டினைச் சொல்கிறோம். அதன்படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.  

நான் வெளியூரில் இருக்கிறேன் சொத்து வாங்கிப் போட்டு விட்டு, பின்னர் அதை யார் பாதுகாப்பது என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், உட்கார்ந்த இடத்திலேயே சொத்தினை நிர்வகிக்கலாம்.அதுபற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும். வேண்டும் போது நீங்கள் உங்கள் சொத்தினை, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டரில் இருந்து சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென்று ஃபார்ச்சூன் பிரிக்ஸ் கொஞ்சமே கொஞ்சமான சர்வீஸ் சார்ஜ் பெற்றுக் கொள்ளும்.

மேலே இருக்கும் மேப்பினை ஒரு முறை கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எங்கு முதலீடு செய்யலாம் என்பதையும் முடிவு செய்து கொண்டு, எங்களை அணுகவும். முடிந்தவரை சம்பாதிக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து, ஏதாவது சொத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். உங்கள் முயற்சி வெற்றியடைய உங்களுடன் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் துணையாக வரும், துணையாக இருக்கும் எந்தக் காலத்திலும்.

எங்களது அரசு பதிவு பெற்ற ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் நிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- தங்கவேல் மாணிக்கம் - எக்சிகியூட்டிவ் டைரக்டர்
தொடர்பு எண் : + 91 96005 77755 
இமெயில் : thangavelmanickam@gmail.com

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.